Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. அரசியல் மேடையில் ஏறுகிறார் கோத்தா சிறிலங்காவின் முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச எதிர்வரும் மார்ச் 8ஆம் நாள் அரசியல் அரங்கில் அறிமுகமாகவுள்ளார் என்று சிறிலங்கா பொதுஜன முன்னணி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. சிறிலங்கா சுதந்திரக் கட்சியுடன் இணைந்து, சிறிலங்கா பொதுஜன முன்னணி எதிர்வரும் 8ஆம் நாள், கண்டி பொதுச் சந்தைப் பகுதியில் பாரிய பேரணி ஒன்றை நடத்தவுள்ளது. வரும் தேர்தல்களை இலக்கு வைத்தே இந்தப் பேரணி நடத்தப்படவுள்ளது. இந்தக் கூட்டத்தில் எதிர்க்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்ச, பொதுஜன முன்னணியின் நிறுவுநரான பசில் ராஜபக்ச ஆகியோரும் கலந்து கொள்ளவுள்ளனர். இந்தக் கூட்டத்திலேயே பசில் ராஜபக்சவும் மேடையேறவுள்ளார். இத…

    • 0 replies
    • 305 views
  2. வவுனியா புதூர் பகுதியில் ஆயுத பையை கைவிட்டு சென்ற விடயம் தொடர்பாக பொலிஸார் மற்றும் கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினரினரால் இதுவரை 23 பேர் சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்டு விசாரணைக்குட்படுத்தப்பட்டு வருகின்றனர். கடந்த ஜனவரி மாதம் 2 ஆம் திகதி இடம்பெற்ற இச்சம்பவத்துடன் பலர் கைது செய்யப்பட்டு வந்த நிலையில் கடந்த புதன்கிழமை அதிகாலை மன்னாரில் வைத்து மட்டக்களப்பை சேர்ந்த வேந்தன் என்பவர் கைது செய்யப்பட்டிருந்தார். குறித்த சம்பவத்தின் முக்கிய சூத்திரதாரியாக அடையாளம் காணப்பட்ட அவரிடம் தொடர்ந்தும் தீவிர விசாரணையை முடுக்கிவிட்டுள்ள கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினர் நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை மேலும் இ…

  3. March 4, 2019 Add Comment Share This! Facebook Twitter Google Plus Pinterest LinkedIn யாழ்ப்பாண மாவட்டத்தின் வலிகாமம் வடக்கில் இரானுவத்தின் உயர் பாதுகாப்பு வலயத்திலிருந்த காணிகளில் பொது மக்களுக்குச் சொந்தமான 20 ஏக்கர் காணிகள் இன்று திங்கட்கிழமை விடுவிக்கப்பட்டுள்ளன. படையினர் வசமிரந்த காணிகளை…

  4. March 4, 2019 சர்வதேச காவற்துறையால், தங்களுக்கு எதிராக விதிக்கப்பட்ட, சர்வதேச சிவப்பு அறிவித்தலை நீக்குமாறு கோரி, மத்திய வங்கி முன்னாள் ஆளுநர் அர்ஜுன மகேந்திரன், ரஷ்யாவுக்கான முன்னாள் இலங்கை தூதுவர் உதயங்க வீரதுங்க ஆகியோர் சர்வதேச காவற்துறையிடம் முன்வைத்த மேன் முறையீடு நிராகரிக்கப்பட்டுள்ளது. கடந்த வாரம் இன்டர்போல் எனும் சர்வதேச காவற்துறையின் மேன்முறையீட்டுச் சபை இந்த மேன் முறையீடுகளை நிராகரித்துள்ளதாக இலங்கை காவற்துறைத் தலைமையக தகவல்கள் தெரிவித்தன. இது தொடர்பில் குற்றப் புலனய்வுப் பிரிவு பணிப்பாளரின் கீழ் இயங்கும் சர்வதேச கா…

  5. திருக்கேதீஸ்வர சம்பவம் – சர்வமத பேரவையில் இருந்து மன்னார் மாவட்ட இந்துக் குருமார்கள் வெளியேற்றம் March 4, 2019 குளோபல் தமிழ்ச் செய்தியாளர் மன்னார் திருக்கேதீஸ்வர ஆலயத்தின் வருடாந்த சிவராத்திரி திருவிழாவை முன்னிட்டு திருக்கேதீஸ்வரம் ஆலயத்திற்குள் செல்லும் வரவேற்பு வளைவு அமைக்கும் பணி இடம் பெற்ற போது இரு மதத்தினருக்கிடையில் இடம் பெற்ற முரண்பாடுகளைத்தொடாந்து அங்கு பதற்ற நிலை ஏற்பட்டது. குறித்த சம்பவம் தொடர்பில் மன்னார் நீதிமன்றத்தில் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை மன்னார் காவல்துறையினர்; வழக்குத்தாக்கல் செய்யவுள்ளனர். பல வருடங்களுக்கு முன் அமைக்கப்பட்டிருந்த குறித்த வளைவு துருப்பிடித்திருந்த நிலையில் அதனை மாற்றி புதிய வளைவு அமைக்கும் பணியில் சில …

  6. காணாமல் போனோருக்கான பணியத்தின் பிராந்திய கிளை மாத்தறையில் திறப்பு காணாமல் போனோருக்கான பணயத்தின் முதலாவது பிராந்திய கிளைச் செயலகம், மாத்தறையில் நேற்றுமுன்தினம் திறந்து வைக்கப்பட்டுள்ளது. சிறிலங்கா அரசாங்கம் ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் அளித்த வாக்குறுதிக்கு அமைய, நிலைமாறு கால நீதிப்பொறிமுறைகளை உருவாக்கும் செயல்திட்டத்தின் கீழ் கடந்த ஆண்டு, காணாமல் போனோருக்கான செயலகத்தை உருவாக்கியது. இந்தச் செயலகம், வடக்கு, கிழக்கின் எட்டு மாவட்டங்களிலும், தென்பகுதியிலுமாக, மொத்தம் 12 கிளை செயலகங்களை அமைக்கவுள்ளதாக அதன் தலைவர் சாலிய பீரிஸ் கூறியிருந்தார். இந்த நிலையில் முதலாவது கிளைச் செயலகம் நேற்று முன்தினம் மாத்தறையில் திறந்து வைக்கப்பட்டத…

  7. வரவு செலவுத்திட்ட முன்மொழிவுகள் நாளை பாராளுமன்றில் சமர்ப்பிப்பு March 4, 2019 2019 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்ட முன்மொழிவுகள் நாளை (05) பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது. இந்த யோசனைகள் அடங்கிய பிரேரணையை அமைச்சர் மங்கள சமரவீர நாளை பிற்பகல் இரண்டு மணிக்கு பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கவுள்ளார். இந்த வரவு செலவுத்திட்டத்தில் வறுமை நிலையில் உள்ள மக்களை மேம்படுத்துவது தொடர்பான பல திட்டங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள நிதி அமைச்சர் இம்முறை வரவு செலவுத்திட்டம் பொதுமக்களின் ஆலோசனைகளை பெற்று தயாரிக்கப்பட்டதாக தெரிவித்துள்ளார். வரவு செலவுத்திட்டம் தொடர்பான விவாதம் எதிர்வரும் புதன்கிழமை ஆரம்பமாகி எதிர்வரும் 12ம் திகதி வரை இடம்பெறும். அதேவேளை, வ…

  8. மன்னாரில் விபத்து -இளைஞன் பலி -3 பேர் படுகாயம் : March 4, 2019 குளோபல் தமிழ்ச் செய்தியாளர் மன்னாரில் இருந்து யாழ்ப்பாணத்துக்கு மோட்டார் சைக்கிளில் பயணித்த இளைஞர் குழு ஒன்று எதிரில் வந்த உழவு இயந்திரம் ஒன்றுடன் மோதி ஏற்பட்ட விபத்தில் இளைஞர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். குறித்த சம்பவம் நேற்று ஞாயிற்றுக்கிழமை (3) மதியம் இடம் பெற்றுள்ளது. மன்னாரில் இருந்து நேற்று ஞாயிற்றுக்கிழமை மதியம் மூன்று மோட்டார் சைக்கிள்களில் 6 பேர்கள் கொண்ட இளைஞர் குழு யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த வேளையில் பூநகரி பகுதியில் உள்ள வளைவு ஒன்றில் எதிரே வந்த உழவு இயந்திரத்தில் மோதி விபத்திற்குள்ளாகியுள்ளனர். குறித்த சம்பவத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த மன்னார் அ…

  9. திருக்கேதீஸ்வரம் கோயில் சம்பவம் தமிழினத்தை கேவலப்படுத்தியுள்ளது – மனோ கண்டனம் சிவராத்திரியை முன்னிட்டு திருக்கேதீஸ்வரம் ஆலய வீதியில் அமைக்கப்பட்ட பெயர் வளைவு மத வன்முறையாளர்களால் உடைத்து நொறுக்கப்பட்டதும், அவ்வேளையில் அங்கு எழுப்பப்பட்ட கோசங்களும் ஒட்டுமொத்த தமிழினத்தையுமே கேவலப்படுத்தியுள்ளதாக இந்து சமய விவகார அமைச்சர் மனோ கணேசன் குற்றம் சுமத்தியுள்ளார். இந்த விடயம் தொடர்பாக அவர் இன்று (திங்கட்கிழமை) வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார். குறித்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, “தமிழர் ஒற்றுமையைக் கேள்விக்கும், ஏனைய இனத்தோர் மத்தியில் கேலிக்கும் உள்ளாக்கியுள்ள இந்நிகழ்வு நெருக்கடியையும் ஏற்படுத்தியுள்ளது. அமைதிக்கு வ…

  10. யாழில் சட்டவிரோதமாக கம்பங்கள் நாட்டும் நடவடிக்கை – ஊடகவியலாளர்களுக்கும் அச்சுறுத்தல் யாழ். மாநகர சபையின் அனுமதி பெறாமல் மாநகர சபை எல்லைக்குள் பல கம்பங்கள் நாட்டப்பட்டுள்ளதாக மாநகர சபையினால் யாழ். பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. அத்தோடு இந்த விடயம் தொடர்பாக செய்தி சேகரிக்கச் சென்ற ஊடகவியளார்களையும் குறித்த பணியில் ஈடுபட்டிருந்தவர்கள் அச்சுறுத்தியதாக தெரிவிக்கப்படுகின்றது. மாநகர எல்லைக்குள் நேற்று முன்தினமும், நேற்றும் கம்பங்கள் நாட்டப்பட்டுள்ளன. இதனைத் தொடர்ந்து சபையின் அனுமதி பெறப்படாமல் சபை எல்லைக்குள் கம்பங்கள் நாட்டப்பட்டுள்ளதாக யாழ் பொலிஸ் நிலையத்தில் நேற்று (சனிக்கிழமை) மாநகர சபையினால் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டது. அதன…

  11. மகிந்த அணியில் இருந்து வெளியேறுவோம் – விமல் வீரவன்ச எச்சரிக்கை நிறைவேற்று அதிகார அதிபர் ஆட்சி முறையை ஒழிக்கும் ஐதேக- ஜேவிபி திட்டத்துக்கு ஆதரவு அளிப்பதில் இருந்து விலகிக் கொள்ளாவிட்டால், மகிந்த ராஜபக்ச அணியில் இருந்து வெளியேறப் போவதாக விமல் வீரவன்ச எச்சரித்துள்ளார். மகிந்த ராஜபக்ச தலைமையிலான கூட்டு எதிரணியிலும், மற்றும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியிலும் விமல் வீரவன்ச தலைமையிலான தேசிய சுதந்திர முன்னணி பங்காளிக் கட்சியாக இருந்து வருகிறது. அடுத்த அதிபர் தேர்தலில் கோத்தாபய ராஜபக்ச, கூட்டு எதிரணியின் வேட்பாளராக நிறுத்தப்பட வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வரும், விமல் வீரவன்ச, நிறைவேற்று அதிகார அதிபர் ஆட்சி முறை ஒழிக்கப்படுவதற்கும் …

    • 0 replies
    • 264 views
  12. சிறப்பு அதிரடிப்படைக்கு அதிநவீன ஆயுதங்கள் கொள்வனவு சிறிலங்கா சிறப்பு அதிரடிப்படைக்கு, அதி நவீன ஆயுதங்கள் புதிதாக கொள்வனவு செய்து வழங்கப்படவுள்ளதாக, சிறப்பு அதிரடிப்படையின் கட்டளை அதிகாரி எம்.ஆர். லதீப் தெரிவித்துள்ளார். ”பாதாள உலக குழுக்களின் தலைவர்கள் மற்றும் போதைப்பொருள் குற்றவாளிகளுக்கு எதிரான நடவடிக்கைகளில், ஈடுபடும் போது, சிறப்பு அதிரடிப்படையினர் தம்மைப் பாதுகாத்துக் கொள்ளும் வகையில், சிறப்பு ஆயுதங்கள் வழங்கப்படவுள்ளன. சிறப்பு அதிரடிப்படையினருக்குத் தேவையான, பெருமளவு ஆயுதங்களைக் கொள்வனவு செய்யும் நடவடிக்கையில் பாதுகாப்பு அமைச்சு ஈடுபட்டுள்ளது. வெளிநாட்டில் இருந்து இந்த ஆயுதங்கள் கொள்வனவு செய்யப்படவுள்ளன. இத…

    • 0 replies
    • 224 views
  13. குற்றச்சாட்டு சுமத்தப்படும் அதிகாரிகளை இடைநிறுத்த வேண்டும் – சாலிய பீரிஸ் காணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரத்தில், தமது செயலகத்தினால் சமர்ப்பிக்கப்பட்ட இடைக்கால அறிக்கையின் பரிந்துரைகளை, சிறிலங்கா அரசாங்கம் நடைமுறைப்படுத்த வேண்டும் என்று, காணாமல் போனோருக்கான பணியகத்தின் தலைவர் கலாநிதி சாலிய பீரிஸ் தெரிவித்துள்ளார். “காணாமல் ஆக்கப்பட்டவர்களின் விடயத்தில் இடைக்கால நிவாரண நடவடிக்கைகள் தொடர்பாக, பணியகத்தின் இடைக்கால அறிக்கையில் பரிந்துரை செய்யப்பட்டிருந்தது. இந்த இடைக்கால நிவாரணத்தை வழங்கும் பரிந்துரைகளை அரசாங்கம் நடைமுறைப்படுத்த வேண்டும். அத்துடன், நீதியுடன் தொடர்புடைய பரிந்துரைகளையும் குறிப்பாக, கடத்தல்கள், மற்றும் தொடர்புடைய கு…

    • 0 replies
    • 538 views
  14. அட்மிரல் கரன்னகொட உள்ளிட்ட கடற்படையினருக்கு எதிராக ட்ரயல் அட் பார் தீர்ப்பாயம் கொழும்பில் 11 இளைஞர்கள் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட சம்பவங்கள் தொடர்பாக, சிறிலங்காவின் முன்னாள் கடற்படைத் தளபதி அட்மிரல் வசந்த கரன்னகொட மற்றும் ஏனைய கடற்படை அதிகாரிகளுக்கு எதிராக, மேல்நீதிமன்ற ட்ரயல் அட் பார் தீர்ப்பாயம் ஒன்றை அமைக்க சட்டமா அதிபர் திணைக்களம் தீர்மானித்துள்ளது. இந்த வழக்கு ஏற்படுத்தியுள்ள சர்ச்சைகளை கருத்தில் கொண்டு, குற்றவியல் சட்டத்தின், 450 ஆவது பிரிவின் கீழ், மேல்நீதிமன்ற ட்ரயல் அட் பார் தீர்ப்பாயம் ஒன்றை அமைக்க முடியும் என்று சட்டமா அதிபர் திணைக்களம் கருதுகிறது. சட்ட மா அதிபர் திணைக்களம் விரைவில் தமது முடிவை, தலைமை நீதியரசருக்கு அற…

    • 0 replies
    • 468 views
  15. இலங்கைக்கான கால அவகாசத்தை தடுக்கும் நோக்கில் விக்கி ஜெனிவாவிற்கு விஜயம்? ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு மேலதிக கால அவகாசம் வழங்குவதை தடுக்கும் நோக்கில், வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் ஜெனிவாவுக்கு விஜயம் செய்யவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த விடயம் தொடர்பாக ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு மேலதிக கால அவகாசம் வழங்குவதை தடுப்பதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்கவே, விக்னேஸ்வரன் ஜெனிவாவுக்குப் பயணமாகவுள்ளதாக அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது. வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தற்போது இந்தியாவிற்கு தனிப்பட்ட பயணத்தை மேற்கொண்டுள்ளார். மகா சிவராத்திரிக்க…

    • 2 replies
    • 470 views
  16. குளோபல் தமிழ்ச் செய்தியாளர் யாழ்ப்பாணம் தீவகப் பகுதியில் கற்றாழைகளை களவாக பிடுங்கி சென்ற தென்னிலங்கையை சேர்ந்த இரு வியாபாரிகள் இளைஞர்களால் மடக்கிப் பிடிக்கப்பட்டு காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் மண்டைதீவு சந்தியில் இன்று மதியம் இடம்பெற்றது. யாழ்ப்பாணம் புங்குடுதீவு பகுதியில் உள்ள கற்றாழை தோட்டங்களுக்குள் புகுந்த தென்னிலங்கை வியாபாரிகள் அங்கிருந்த பயிர்களை களவாக பிடுங்கி வாகனத்தில் ஏற்றியுள்ளனர். இதனை அவதானித்த அப்பகுதி இளைஞர்கள் குறித்த வாகனத்தை மறிக்க முற்படட போது தப்பித்துள்ளதனால் உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் வழங்கப்பட்டு மண்ட…

    • 3 replies
    • 748 views
  17. சர்வமத பேரவையிலிருந்து இந்து குருமார்கள் வெளியேறுவதாக அறிவிப்பு! மன்னார் மாவட்ட சர்வமத பேரவையிலிருந்து மன்னார் மாவட்ட இந்து குருமார்கள் வெளியேறுவதாக அறிவித்துள்ளனர். மன்னார் மாவட்ட இந்து குருமார் பேரவையின் தலைவர் சிவஸ்ரீ மஹா தர்மகுமார குருக்கள் இதனை அறிவித்துள்ளார். திருக்கேதீஸ்வரம் ஆலயத்திற்குள் செல்லும் வீதியில் அமைக்கப்பட்டுள்ள வரவேற்பு வளைவின் புனரமைப்பு வேலைகளுக்குச் சிலர் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இடையூறு விளைவித்ததால் அப்பகுதியில் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்த விடயம் தொடர்பாக மன்னார் மாவட்ட இந்துக் குருமார் பேரவை ஊடக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. குறித்த அறிக்கையிலேயே இந்த விடயம் தொ…

  18. கொழும்பு – மட்டக்களப்பிற்கு புதிய விமான சேவை மட்டக்களப்பு வவுனதீவு விமான நிலையத்தில் செரண்டிப் ஏயார்வைஸ் நிறுவனம் தனது இரண்டாவது உள்நாட்டு பயணிகள் விமான சேவையை ஆரம்பித்துள்ளது. இவ்விமான சேவை கொழும்பு – மட்டக்களப்பு ஆகிய இடங்களுக்கு சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளது. இதன் அங்குரார்ப்பண நிகழ்வு நேற்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்றது. இதன்போது கிழக்கு மாகாண ஆளுநர் கலாநிதி எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா இந்த விமான சேவையை அங்குரார்ப்பணம் செய்து வைத்தார். இந்நிகழ்வில் இராஜாங்க அமைச்சர் அமீர் அலி, மட்டக்களப்பு அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர்கள், செரன்டிப் ஏயார்வைஸ் நிறுவன தலைவர் உட்பட பலரும் கலந்துகொண்டனர். இந்த விமான சேவை திங்கள், புதன், வெள்ளி ஆகிய தினங்களில் சேவைய…

  19. யாழ்ப்பாண மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜை கொலை செய்ய முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச, கருணா தரப்பினருக்கு 5 கோடி ரூபாயை வழங்கியதாக புலனாய்வு தகவல் பிரிவின் முன்னாள் பொலிஸ் உத்தியோகஸ்தர் லியனாராச்சிகே அபயரத்ன , கொழும்பு மேல் நீதவான் திலின கமகே முன்னிலையில் வழங்கிய சாட்சியின் போது தெரிவித்துள்ளார். இந்த கொலையானது கடந்த அரசாங்கத்தின் சூழ்ச்சியால் நடைபெற்றது எனவும். அதற்கான பணத்தை பாதுகாப்பு அமைச்சின் வசந்த என்பவர் ஊடாக கருணா தரப்புக்கு வழங்கப்பட்டது. அத்துடன் இந்த கொலையானது பிரதிப் பொலிஸ் மா அதிபர் கீர்த்தி கஜநாயக்க, அரச புலனாய்வு சேவையின் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் டூல் மற்றும் கருணா தரப்பு தெரிந்தே மேற்கொண்டது எனவும் அப…

  20. பிரிகேடியர் பிரியங்கவுக்கு இராஜதந்திர விலக்குரிமை இல்லை – வெஸ்ட் மினிஸ்டர் நீதிமன்றம் புலம்பெயர் தமிழர்களை நோக்கி, பிரிகேடியர் பிரியங்க பெர்னான்டோ, கழுத்தை அறுத்து விடுவது போன்று சைகை காண்பித்த, செயலுக்கு இராஜதந்திர விலக்குரிமை இல்லை என்று பிரித்தானியாவின் வெஸ்ட்மினிஸ்டர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. நேற்று முன்தினம் இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே, நீதிவான் இதனைத் தெரிவித்துள்ளார். பிரிகேடியர் பிரியங்க பெர்னான்டோவின் பணியை உள்ளடக்கியே இராஜதந்திர விலக்குரிமை உள்ளது. ஆனால், கழுத்தை அறுப்பது போன்று எச்சரிப்பது, அவரது பணியுடன் தொடர்புடைய விடயம் அல்ல. எனவே, அவரது இந்தச் செயல் இராஜதந்திர விலக்குரிமைக்கு உட்பட்ட…

  21. March 3, 2019 மகிந்த ராஜபக்சவின் ஆட்சிக் காலத்தில் தாம் வெள்ளைவான் கடத்தல் சம்பவங்களுடன் ஈடுபடவில்லை என்று முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார். கண்டியில் நேற்று சனிக்கிழமை நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். எனினும் யுத்தத்தில் வெற்றி கொள்ளும் விதமாகவும் அதனை முடிவுக்கு கொண்டுவரும் விதமாகவும் தாம் நுண்ணறிவான செயற்பாடுகளில் ஈடுபட்டிருந்ததாகவும் தெரிவித்த அவர் மக்களை பாதிக்கும் எந்தவொரு செயற்பாடுகளையும் மேற்கொள்ளவில்லை எனத் தெர…

  22. ஐ.நா. தீர்மானம் குறித்து கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழு ஆராய்வு புதிய அரசியலமைப்பு மற்றும், ஐ.நா தீர்மானம் குறித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழு ஒன்றுக்கூடி ஆராயவுள்ளது. அதன்படி எதிர்வரும் 5ஆம் திகதி இந்த குழு கொழும்பில் கூடவுள்ளதாக தகவல்கள் குறிப்பிடுகின்றன. எதிர்வரும் 5ஆம் பிற்பகல் ஒரு மணிக்கு நாடாளுமன்றம் கூடுகின்றது. எனவே, அதற்கு முன்னர் காலையில் அல்லது மாலையில் நாடாளுமன்றக் குழுக்கூட்டம் நடைபெறும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். புதிய அரசமைப்பில் முக்கிய விடயங்களான தேர்தல் முறை மாற்றம், நிறைவேற்று அதிகாரம் என்பன தொடர்பாக கட்சிகள் இடையே பொது இணக்கப…

    • 2 replies
    • 1.4k views
  23. FacebookTwitterGoogle+Email ViberWhatsApp நெல் சந்தைப்படுத்தும் சபையால் ஒட்டுசுட்டான் நெற்கொள்வனவு மையத்தில் நெற்கொள்வனவு இடம்பெற்று வருகிறது. https://newuthayan.com/story/15/ஒட்டுசுட்டானில்-நெல்-கொ.html

  24. FacebookTwitterGoogle+Email ViberWhatsApp தேசிய வீடமைப்பு அதிகாரசபையின் மாதிரி வீட்டுதிட்டத்தின் கீழ் வவுனியா மாவட்டத்தில் 150 மாதிரிக்கிராமங்கள் அமைக்கபடும் என்று வீடமைப்பு அதிகாரசபையின் வவுனியா முகாமையாளர் வி.எம்.வி.குருஸ் தெரிவித்தார். வவுனியா முருகனூர் ஆனந்தபுரம் கிராமத்தில் வீட்டுதிட்டத்திற்கான அடிக்கல் இன்று நடப்பட்டது. அதில் அவர் தெரிவித்ததாவது, கட்டுமானப் பொருட்களின் விலை அதிகரிப்பு காரணமாக வீட்டுதிட்டத்தி…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.