ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143275 topics in this forum
-
பாலியல் வன்முறைகள், பாகுபாடுகள் குறித்த ஐ.நா நிபுணர் சிறிலங்கா வருகிறார் பாலியல் நோக்கு நிலை மற்றும் பால்நிலை அடையாளத்தின் அடிப்படையிலான வன்முறைகள் மற்றும் பாகுபாடுகளுக்கு எதிரான, ஐ.நாவின் நிபுணரான விக்டர் மட்ரிகன் பொர்லோஸ் சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளார். உண்மை கண்டறியும் பயணம் ஒன்றை சிறிலங்காவுக்கு மேற்கொள்ளுமாறு இவருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. சிறிலங்கா அரசாங்கத்திடம் இருந்து இவருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகவும், அவரது பயணத்துக்கான நாளை உறுதிப்படுத்தும் பணிகளுக்காக காத்திருப்பதாகவும், ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் பணியகத்தின், சிறப்பு நடைமுறைகள் பிரிவின் உதவி மனிதஉரிமைகள் அதிகாரி அலிஸ் ஒசென்பெய்ன் தெரிவித்துள்ளா…
-
- 0 replies
- 236 views
-
-
44 நாடுகள் பங்கேற்கும் கூட்டுப் பயிற்சியில் சிறிலங்கா போர்க்கப்பல் பாகிஸ்தானில் 44 நாடுகளின் கடற்படைகள் பங்கேற்கும் அமான்-2019 என்ற பெயரிலான பாரிய கூட்டுப் பயிற்சியில் சிறிலங்கா கடற்படையும் பங்கேற்கவுள்ளது. இந்தக் கூட்டுப் பயிற்சியில் பங்கேற்பதற்காக, சயுரால என்ற சிறிலங்கா கடற்படைக் கப்பல் கொழும்பு துறைமுகத்தில் இருந்து நேற்று பாகிஸ்தானுக்குப் புறப்பட்டுச் சென்றுள்ளது. 28 அதிகாரிகள், 142 மாலுமிகள் என மொத்தம், 170 சிறிலங்கா கடற்படையினருடன் சென்றுள்ள இந்தக் கப்பல், வரும் 6ஆம் நாள் பாகிஸ்தானின் கராச்சி துறைமுகத்தை சென்றடையும். கராச்சியில் அமான்-2019 கூட்டு கடற்பயிற்சி வரும் 8ஆம் நாள் தொடக்கம், 13ஆம் நாள் வவரை இடம்பெறவுள்ளது. …
-
- 0 replies
- 226 views
-
-
மாகாண சபைத் தேர்தலை நடத்தும் முறைமை தொடர்பில் விசேட கலந்துரையாடல் February 3, 2019 மாகாண சபைகளுக்கான தேர்தலை நடத்தும் முறைமை தொடர்பில் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கும் ஐக்கிய தேசிய கட்சி உறுப்பினர்களுக்குமிடையில் விசேட கலந்துரையாடலொன்று அடுத்த வாரம் இடம்பெறவுள்ளதாக அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் ஆலோசனைக்கமைய ஒன்பது மாகாண சபைகளுக்கான தேர்தல்களையும் யும் ஒரே தினத்தில் நடத்துவதாக இருந்தால் ஊவா மாகாண சபை அதன் ஆயுட்காலம் நிறைவடைவதற்கு முன்னரே கலைக்கப்பட வேண்டும். மேலும் தேர்தல்கள் பழைய முறைமையில் நடத்தப்பட வேண்டும் என ஜனாதிபதி ஆலோசனை தெரிவித்துள்ள நிலையில் அவ்வாறு மேற்கொள்வதாயின் பாராளுமன்றத்தில் அனைத்து உறுப…
-
- 0 replies
- 253 views
-
-
சிறிலங்காவுக்கு 150 கோடி ரூபா ஒதுக்கியது இந்தியா இந்திய வெளிவிவகார அமைச்சுக்கான நிதி ஒதுக்கீடு 1000 கோடி ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ள போதும், சிறிலங்காவுக்கான நிதி ஒதுக்கீடு அதிகரிக்கப்படவில்லை. இந்திய மத்திய அரசாங்கத்தின் 2019-20 ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்டம் நேற்று நாடாளுமன்றத்தில் நிதி அமைச்சர் பியூஸ் கோசலினால் சமர்ப்பிக்கப்பட்டது. இந்த வரவுசெலவுத் திட்டத்தில், இந்திய வெளிவிவகார அமைச்சுக்கான நிதி ஒதுக்கீடு 16,000 கோடி ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டு ஒதுக்கப்பட்ட தொகையை விட 1000 கோடி ரூபா அதிகமாகும். இதில், இந்திய வெளிவிவகார அமைச்சினால் வெளிநாடுகளில் மேற்கொள்ளப்படும் திட்டங்களுக்காக, 6,447 கோடி ரூபா ஒதுக்க…
-
- 2 replies
- 404 views
-
-
சீனாவிடம் இருந்து சிறிலங்காவுக்கு 1 பில்லியன் டொலர் கடன் சீனாவின் எக்சிம் வங்கியிடம் இருந்து விரைவில் 1 பில்லியன் டொலர் இலகு கடன் சிறிலங்காவுக்குக் கிடைக்கவுள்ளதாக, சிறிலங்காவுக்கான சீன தூதுவர் கருணாசேன கொடிதுவக்கு தெரிவித்துள்ளார். கொழும்பு- கண்டியை இணைக்கும் அதிவேக நெடுஞ்சாலைத் திட்டத்தின் முதல் கட்டப் பணிகளுக்கு இந்த நிதி செலவிடப்படவுள்ளது. நிதிப் பற்றாக்குறையினால் இந்த திட்டம் இரண்டு ஆண்டுகளாக இழுபறிக்குள்ளாகியிருக்கிறது. கொழும்பு – கண்டி அதிவேக நெடுஞ்சாலைத் திட்டத்தின் முதல் கட்டம் சீனாவின் இந்த நிதியுதவியைக் கொண்டு நிறைவேற்றப்படும். இரண்டாவது கட்டம், சிறிலங்கா நிறுவனங்களாலும், மூன்றாவது கட்டம் ஜப்பானிய கடன்களின் மூலமு…
-
- 2 replies
- 298 views
-
-
கிழக்கு மாகாணத்தின் ஐந்து துறைகளுக்கான நியமனங்களை வழங்கி வைத்தார் ஹிஸ்புல்லாஹ் கிழக்கு மாகாண ஐந்து துறைகளுக்கான தலைவர்களும் பணிப்பாளர்சபை உறுப்பினர்களும் ஆளுநர் ஹிஸ்புல்லாஹ்வினால் நியமிக்கப்பட்டுள்ளனர். கிழக்கு மாகாண ஆளுநரின் செயலாளர் ஜே.எஸ்.எம்.பி.அசங்க அபயவர்தன தலைமையில் நேற்று மாலை திருகோணமலையில் உள்ள ஆளுநர் அலுவலகத்திலேயே இவர்களுக்கான நியமனக் கடிதங்கள் வழங்கி வைக்கப்பட்டன. மாகாண பொதுச்சேவைகள் ஆணைக்குழுவின் தலைவராக பேராசிரியர் தங்கமுத்து ஜெயசிங்கம், கிழக்கு மாகாண போக்கு வரத்து அதிகார சபையினுடைய தலைவராக ஜீ.கரீதரன், கிழக்கு மாகாண முன்பள்ளி பணியகத்தின் தலைவராக எம்.எஸ்.உதுமான் லெவ்வை, கிழக்கு மாகாண வீடமைப்பு அதிகார சபையின் தலைவராக எம்.எஸ்.சுபை…
-
- 5 replies
- 1.2k views
-
-
அரசாங்கத்துக்கு 5 ஆம் திகதி வரை கால அவகாசம்- அமைச்சர்களான திகா, மனோ குழு தோட்ட தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் ஊக்குவிப்புக் கொடுப்பனவு தொடர்பில் தீர்க்கமான ஒரு தீர்மானத்துக்கு அரசாங்கம் வரா விட்டால் தமிழ் முற்போக்கு கூட்டணி அரசாங்கத்திற்கு வழங்கிவரும் ஆதரவை விலக்கிக் கொள்ள வேண்டிய ஒரு நிலை ஏற்படும் அமைச்சர் ப.திகாம்பரம் தெரிவித்தார் தொழிற்சங்கங்களுக்கும் முதலாளிமார் சம்மேளனத்துக்குமிடையே செய்துகொண்ட கூட்டு ஒப்பந்தத்தை ஏற்றுக் கொள்ள முடியாதென்றும் இவ் வொப்பந்தத்தின் மூலம் தொழிலாளர்களுக்கு பாரிய அநீதி இழைக்கப்பட்டுள்ளதாகவும் தமிழ் முற்போக்கு கூட்டணி சுட்டிக்காட்டியுள்ளது. ஊக்குவிப்புக் கொடுப்பனவான 140 ரூபாய் கட்டாயமாக வழங்கப்பட வேண்டும் என்றும் உறுதியா…
-
- 2 replies
- 430 views
-
-
ஶ்ரீலங்கா சுதந்திர தமிழர் ஒன்றியம் உருவாக்கப்பட்டுள்ளது. ஶ்ரீங்கா சுதந்திரக் கட்சியின் தலைமைக் காரியாலயத்தில், இன்று (2-2-2019 ) கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜெயசேகர தலைமையில் ஶ்ரீலங்கா சுதந்திர தமிழர் ஒன்றியத்திற்கான நிகழ்வின் போது அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது ஶ்ரீலங்கா சுதந்திர தமிழர் ஒன்றியத்தின் தலைவராக பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன், செயலாளராக கொழும்பு மாநகர சபை உறுப்பினர் உமாச்சந்திரா பிரகாஷ், பொருளாளராக ஜி. ஹரிகரன், உப தலைவராக பெ. பிரதீபன், உப செயலாளராக எஸ்.சத்தியசுதர்சன் ஆகியோர் தெரிவு செய்யப்பட்டுள்ளார்கள். அத்துடன் ஶ்ரீலங்கா சுதந்திர தமிழர் ஒன்றியத்தின் மாவட்ட பிர…
-
- 0 replies
- 354 views
-
-
February 2, 2019 மாலியின் இடம்பெற்ற குண்டுத்தாக்குதலில் கொல்லப்பட்ட ஐக்கிய நாடுகள் அமைதி காக்கும் படைப்பிரிவில் பணியாற்றிய இலங்கை இராணுவத்தினர் இருவரின் உடல்களை நாட்டிற்கு கொண்டு வருவதில் மேலும் தாமதம் ஏற்படலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன. உடல்களை நாட்டிற்கு கொண்டு வருவதற்கான விமான ஒழுங்கு நடவடிக்கைகளை மேற்கொள்வதில் ஏற்பட்டுள்ள சிக்கலே இதற்கான காரணமென இராணுவ ஊடகப்பேச்சாளர், பிரிகேடியர் சுமித் அத்தப்பத்து தெரிவித்துள்ளார். குறித்த இராணுவத்தினரின் உடல்கள் இன்று மாலை நாட்டிற்கு கொண்டுவரப்படும் என இதற்கு முன…
-
- 0 replies
- 234 views
-
-
February 2, 2019 Add Comment Share This! Facebook Twitter Google Plus Pinterest LinkedIn வவுனியாவின் புதூர் புகையிரத வீதிக்கு அருகில் துப்பாக்கி, ரவைகள் மற்றும் கைக்குண்டுகளுடன் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களுக்கு உதவி புரிந்ததாக தெரிவித்து மேலும் 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். …
-
- 0 replies
- 248 views
-
-
February 2, 2019 கிளிநொச்சி மாவட்டத்தின் வன்னேரிக்குளம் பிரதேசத்தில் யானைகளின் அட்டகாசங்களால் நெற்செய்கையில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தற்போது அறுவடைகள் இடம்பெற்றுக்கொண்டிருக்கின்ற நிலையில் இக் காலத்தில் வயல்களுக்குள் நுழையும் யானைகள் விளைந்த நெல்லை சேதப்படுத்துவதாகவும் விவசாயிகள் கூறுகின்றனர். வன்னேரிக்குளத்தின் மண்ணியாகுளம் பகுதியில் மானாவாரி செயற்செய்கையில் ஈடுபட்டுள்ள விவசாயிகளும் நீர்ப்பாசன திட்டத்தில் நெற்செய்கையில் ஈடுபட்டவர்களும் யானைகள் ஏற்படுத்தும் அழிவுகளால் பாதிப்புக்களை எதிர்கொண்டுள்ளனர். இந்த விடயம் தொடர்…
-
- 0 replies
- 496 views
-
-
February 2, 2019 கடந்த வாரம் வவுனியாவில் தமிழீழ விடுதலைப் புலிகளின் பெயரை பயன்படுத்தி வெளியிடப்பட்ட துண்டுப் பிரசுரம் ஒன்று மீட்கப்பட்டிருந்த நிலையில் இந்தச் செயற்பாடானது முன்னாள் போராளிகளுக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் நடவடிக்கை என்று ஜனநாயகக் கட்சியின் ஊடகப் பேச்சாளர் க. துளசி தெரிவித்துள்ளார். 2009இற்குப் பின்னர் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் மௌனிக்கப்பட்டு, அதன் செயற்பாடுகள் முடங்கியுள்ள நிலையில், இலங்கையிலும் சர்வதேச ரீதியாகவும் அநாவசியப் பிரச்சினைகளை ஏற்படுத்தவே இத்தகைய செயற்பாடுகள் மேற்கொள்ளப்படுவதாகவும் அவர் கூறியுள்ளார். …
-
- 0 replies
- 260 views
-
-
சுதந்திர தினத்தை முன்னிட்டு பிரித்தானிய மகாராணி வாழ்த்துச் செய்தி இலங்கையின் 71வது தேசிய சுதந்திர தினத்தை முன்னிட்டு பிரித்தானிய மகாராணி எலிசபெத் வாழ்த்து செய்தி ஒன்றை அனுப்பி வைத்துள்ளார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு இந்த வாழ்த்து செய்தி அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இலங்கையிலுள்ள பிரித்தானிய உயர்ஸ்தானிகராலயத்தினால் வெளியிடப்பட்ட அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் வருடத்தில் இலங்கை மற்றும் இலங்கை மக்களுக்கும் அதிஷ்டகரமானதும் மகிழ்ச்சிகரமானதுமாக அமைய வேண்டும் என தமது வாழ்த்து செய்தியில் பிரித்தானிய மகாராணி எலிசபெத் குறிப்பிட்டுள்ளார். 133 வருடங்களாக பிரித்தானியாவின் காலனித்துவ ஆட்சியின் கீழ் இருந்த இலங்கைக்கு 1948ஆம் …
-
- 2 replies
- 554 views
-
-
ஆற்றில் பாய்ந்து உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு நட்டயீடு! திருகோணமலை – கிண்ணியா மகாவலி கங்கையில் மணல் அகழ்வில் ஈடுபடுபவர்களை கடற்படையினர் சுற்றிவளைத்த போது ஆற்றில் பாய்ந்து நீரில் மூழ்கி உயிரிழந்த இருவரின் குடும்பத்தினருக்கும் நட்டயீடு வழங்கப்பட்டுள்ளது. கிழக்கு மாகாண ஆளுநர் ஹிஸ்புல்லாஹ்வினால், இருவரின் குடும்பங்களுக்கும் தலா 50 ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. அத்துடன், உயிரிழந்தவர்களின் குடும்ப உறுப்பினர்களையும் சந்தித்து அவர் ஆறுதல் தெரிவித்துள்ளார். இதன்போது மண் அகழ்வது, மரங்கள் வெட்டுதல் போன்றவை தமது வாழ்வாதார தொழில் எனவும் அதை சட்டரீதியாக செய்வதற்கு அனுமதியை பெற்று தருமாறு ஆளுநரிடம் அங்கிருந்த பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். இதற்கு பதிலள…
-
- 3 replies
- 850 views
-
-
வடக்கை ஆக்கிரமித்த கேரள கஞ்சா…. February 2, 2019 வடக்கில் இவ் ஆண்டின் முதல் மாதத்தில் மாத்திரம் சுமார் 400 கிலோவுக்கு மேற்பட்ட கேரள கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் அது தொடர்பாக 111 பேர் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் முற்படுத்தப்பட்டுள்ளதாகவும் வடக்கு சிரேஸ்ட பிரதி காவற்துறை மா அதிபர் ரொசான் பொர்னான்டோ தெரிவித்துள்ளார். இன்று காலை காங்கேசன்துறையில் இடம்பெற்ற விஷேட செய்தியாளர் சந்திப்பின் போதே அவர் இதனை தெரிவித்தார். மேலும் கடந்த ஆண்டில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கிலோ கேரள கஞ்சா கைப்பற்றப்பட்டதாகவும் அதனோடு தொடர்புபட்டவர்கள் என்ற சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டு நீதிமன்றங்களில் முற்படுத்தப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார். http://globaltamilnew…
-
- 0 replies
- 273 views
-
-
கிளிநொச்சியில், போதைப் பொருட்களுக்கு எதிராக கண்டன ஆர்ப்பாட்டம்… February 2, 2019 போதைப் பொருட்களுக்கு எதிராகவும், தேசிய போதைப் பொருள் ஒழிப்பு வாரத்தின் போது கஞ்சா விற்பனை தகவல் வழங்கிய மாணவன் தாக்கப்பட்டமைக்கு எதிர்ப்புத் தெரிவித்தும் இன்று 02-02-2019 கிளிநொச்சியில் கண்டன ஆர்ப்பாட்டம் ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது. இன்று காலை ஒன்பது மணிக்கு கிளிநொச்சி டிப்போச் சந்தியிலிருந்து ஆரம்பமான கண்டன ஆர்ப்பாட்டம் கிளிநொச்சி காவல் நிலையம் வரை சென்றடைந்து. அங்கு கிளிநொச்சி முல்லைத்தீவு மாவட்டங்களின் பிரதி காவற்துறை மா அதிபருக்கான மகஜரும் கையளிக்கப்பட்டது. போதையை ஒழிக்கும் பாதையை வளர்ப்போம், போதைப் பொருட்களிலிருந்து எம் மாணவர்களை பாதுகாப்…
-
- 0 replies
- 610 views
-
-
மகிந்தவும் கோத்தாபயவுமே பிரகீத்தைக் கடத்தினர் என்பதை எந்த இடத்திலும் கூறுவேன்! February 2, 2019 சந்தியா எக்னெலிகொட.. பிரகீத்தைக் கடத்தியவர்கள் மகிந்தவும், கோத்தாபயவுமே என்பதை எந்த இடத்திலும், எந்தத் தருணத்திலும் நான் உறுதியாக கூறுவேன் என அவரது மனைவி சந்தியா எக்னெலிகொட தெரிவித்தார். அத்துடன் ஐக்கிய தேசியக் கட்சி சார்பில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டதும் ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொடவின் கடத்தலுக்குக் காரணம் என்றும் அவர் கூறியுள்ளார். ஞானசாரரின் விடுதலை குறித்து தெளிவுபடுத்துமாறு வலியுறுத்தி சந்தியா நேற்று வெள்ளிக்கிழமை ஜனாதிபதிக்குக் கடிதமொன்றைக் கையளித்தார். அதனைத் தொடர்ந்து ஊடகவியலாளர்களுக்குக் கருத்து தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு …
-
- 0 replies
- 546 views
-
-
மன்னாரில் தனியார் கல்வி நிலையம் தீ வைப்பு February 2, 2019 குளோபல் தமிழ்ச் செய்தியாளர் மன்னார் பெற்றா பகுதியில் உள்ள தனியார் கல்வி நிலையம் ஒன்றின் வகுப்பறைக்கூடம் இன்று சனிக்கிழமை அதிகாலை இனம் தெரியாத நபர்களினால் தீவைக்கப்பட்டுள்ளது. குறித்த கல்வி நிலையத்தின் நிர்வாகம் இன்று காலை 8 மணியளவில் குறித்த கல்வி நிலையத்தை திறந்த போது தீப்பற்றி எரிவதை கண்ட நிலையில், உடனடியாக தீயை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துள்ளனர். இதனால் பாரிய சேதங்கள் ஏவையும் ஏற்படவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிகாலை குறித்த கல்வி நிலைய பகுதிக்கு சென்றுள்ள இனம் தெரியாத நபர்கள் மண்ணென்னை நிறப்பப்பட்ட போத்தல்களில் தீ வைத்த…
-
- 0 replies
- 402 views
-
-
சுதந்திர தினத்தை துக்க தினமாக கடைப்பிடிக்குமாறு கோரிக்கை January 31, 2019 குளோபல் தமிழ்ச் செய்தியாளர் இலங்கையின் சுதந்திர தினத்தை தமிழர் தாயகத்தில் கரிநாளாக பிரகடனப்படுத்தி துக்க தினமாக கடைப்பிடிக்குமாறு யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் கேட்டுள்ளது. பல்கலைக்கழகத்தில் இன்று நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பின் போதே இந்தக் கோரிக்கையை பல்கலைக்கழக மாணவர் ஒன்றியச் செயலாளர் விடுத்தார். அத்துடன், இலங்கையின் சுதந்திர தினம் தொடர்பான யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் நிலைப்பாட்டை விளக்கும் அறிக்கையொன்றையும் அவர்கள் வெளியிட்டனர். அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: இலங்கை காலணித்துவ ஆட்சியில் இருந்து சுதந்திரம் பெற்று…
-
- 4 replies
- 1.1k views
-
-
ஜனாதிபதியின் யாழ். விஜயம் ; விபரங்களைத் திரட்டும் பொலிஸார் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எதிர்வரும் 6 ஆம் திகதி யாழ்ப்பாணத்துக்கு விஜயம்செய்யவுள்ளதால் அவரது பாதுகாப்புக் காரணங்களுக்காக கொழும்பிலிருந்து கிடைத்த உத்தரவுக்கு அமைவாக யாழ்ப்பாணம், கோப்பாய் மற்றும் அச்சுவேலி பொலிஸ் பிரிவுகளில் பொலிஸ் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜனாதிபதி கொலைச் சதி வழக்கு விசாரணையில் உள்ள நிலையில் அவரது பாதுகாப்புக் காரணங்களுக்காக யாழ்ப்பாணத்தில் அவர் செல்லும் இடங்களை அண்டிய பிரதேசங்களில் குடியிருப்பாளர், நிறுவனங்களின் விவரங்களைச் சேகரிக்குமாறு ஜனாதிபதி செயலகத்தால் பொலிஸாருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எதிர்வரும் 6 ஆ…
-
- 2 replies
- 784 views
-
-
வேட்பாளரை நானே தீர்மானிப்பேன் – ஜனாதிபதி அதிரடி ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி – ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் தலைவராக நானே உள்ளேன். இந்தக் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளரை நானே தீர்மானிப்பேன் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். வெளிநாட்டு ஊடகம் ஒன்றுக்கு வழங்கியுள்ள விசேட செவ்வி ஒன்றிலேயே அவர் இந்த விடயத்தினை குறிப்பிட்டுள்ளார். இதன்போது கருத்து வெளியிட்டுள்ள அவர், “நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற்ற பின்னர் ஜனாதிபதித் தேர்தல் நடக்கும் அல்லது ஜனாதிபதித் தேர்தல் நடைபெற்ற பின்னர் நாடாளுமன்றத் தேர்தல் நடக்கும். இந்த இரண்டு தேர்தல்களுக்கும் முன்னர் மாகாண சபைத் தேர்தல் நடக்கும். இதில் மாற்றுக் கருத்துக்களுக்கு இடமில்லை. இந்த மூன்று தேர்தல்களும் …
-
- 1 reply
- 697 views
-
-
தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்பட வேண்டும்! தமிழ் மக்களின் உரிமையையும் வேண்டுகோளையும் அரசு மதித்து பல ஆண்டுகளாக அடிமைகளாக உரிமை இழந்து சிறைவாசம் அனுபவித்து வரும் தமிழ் அரசியல் கைதிகளை இலங்கையின் சுதந்திர தினத்திலாவது விடுதலை செய்யப்பட வேண்டும் என மன்னார் பிரஜைகள் குழு அரசிடம் வேண்டு கோள் விடுத்துள்ளது. இவ்விடயம் தொடர்பாக மன்னார் பிரஜைகள் குழு நேற்று விடுத்துள்ள ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது மேலும் தமிழ் அரசியல் கைதிகளை நிபந்தனையின்றி விடுதலை செய்து தமிழ…
-
- 0 replies
- 209 views
-
-
தூக்குத் தண்டனைக்கு 18 பேரின் பெயர்கள் அனுப்பி வைப்பு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள 48 பேரில் 30 பேர் மேன்முறையீடு செய்தவர்கள் எனவும், எஞ்சிய 18 பேருடைய பெயர் பட்டியல் இறுதி தீர்மானம் எடுப்பதற்கு சட்ட மா அதிபரிடம் அனுப்பி வைக்கப்பட்டிருப்பதாகவும் நீதி மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் தலதா அத்துக்கோரல அறிவித்துள்ளார். இவர்கள் 18 பேர் தொடர்பான விவரங்களும் நன்கு ஆராயப்பட்டு அவர்கள் தூக்கிலிடப்படுவதற்கு தகுதியுடையவர்கள்தானா என்பது நிரூபிக்கப்பட்டதன் பின்னரே அவர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்படுமென்றும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். வெலிமடயில் புதிதாக நிர்மாணிக்கப்படவுள்ள நீதிமன்றத்துக்கு அடிக்கல் நடும் நிகழ்வு அமைச்சர் தலதா அத்துக்கோ…
-
- 0 replies
- 271 views
-
-
வலுவடைகிறது சிறிலங்கா நாணயப் பெறுமதி இந்த ஆண்டில் அமெரிக்க டொலருக்கு எதிரான சிறிலங்கா நாணயத்தின் பெறுமதி அதிகரித்து வருவதாக, சிறிலங்கா மத்திய வங்கி தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டு டிசெம்பர் 31ஆம் நாள் அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனைப் பெறுமதி 184.69 ரூபாவாக இருந்தது. இது நேற்று 180.19 ரூபாவாக குறைந்துள்ளது. ஒரு மாத காலத்தில் அமெரிக்க டொலருக்கு எதிரான சிறிலங்கா ரூபாவின் பெறுமதி 4.50 ரூபாவினால் அதிகரித்துள்ளது. கடந்த சில மாதங்களாக பொருளாதார நெருக்கடி மற்றும் அரசியல் நெருக்கடிகளினால், சிறிலங்கா நாணயத்தின் மதிப்பு கடுமையாக வீழ்ச்சியைச் சந்தித்து வந்தது. எனினும், இந்த ஆண்டில், சிறிலங்கா ரூபாவின் மதிப்பு வலுவடைய ஆரம்பித்து…
-
- 0 replies
- 540 views
-
-
பிரிகேடியர் பிரியங்கவுக்கு எதிரான பிடியாணை – விசாரணையின்றி விலக்கியது லண்டன் நீதிமன்றம் சிறிலங்கா இராணுவத்தைச் சேர்ந்த பிரிகேடியர் பிரியங்க பெர்னான்டோவுக்கு எதிரான கைது உத்தரவை, பிரித்தானியாவின் வெஸ்ட்மினிஸ்டர் நீதிவான் நீதிமன்றம் விலக்கிக் கொண்டுள்ளது. போராட்டத்தில் ஈடுபட்ட புலம்பெயர் தமிழர்களை அச்சுறுத்தும் வகையில் நடந்து கொண்ட, சிறிலங்கா தூதரக பாதுகாப்பு ஆலோசகராக இருந்த பிரிகேடியர் பிரியங்க பெர்னான்டோவுக்கு எதிராக – புலம்பெயர் தமிழர்கள் வழக்குத் தாக்கல் செய்திருந்தனர். சேர்ந்த பிரிகேடியர் பிரியங்க பெர்னான்டோ பொது ஒழுங்குகளை சட்டத்தை மீறி குற்றமிழைத்துள்ளார் எனக் கண்டறிந்த, வெஸ்ட்மினிஸ்டர் நீதிமன்றம், அவரைக் கைது செய்ய பிடியாணை பிறப…
-
- 0 replies
- 168 views
-