Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. January 22, 2019 காவற்துறை விசேட அதிரடிப் படையினர், காவற்துறை போதைப்பொருள் தடுப்பு பணியகத்தினருடன் இணைந்து மேற்கொண்ட சுற்றிவளைப்பின்போது, கொள்ளுப்பிட்டி பகுதியிலுள்ள சொகுசு குடியிருப்புத் தொகுதி ஒன்றிலுள்ள வீட்டிலிருந்து சுமார் 90 கிலோகிராம் ஹெரோயின் கைப்பற்றப்பட்டுள்ளது. இவ்வாறு கைப்பற்றப்பட்ட போதைப்பொருளின் பெறுமதி 1080 மில்லியன் ரூபா என மதிப்பீடு செய்யப்பட்டுள்ளதாக, காவற்துறைஊடகப் பேச்சாளர், காவற்துறை அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார். இதன்போது 5 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களில் 29 மற்றும் 43 வயதான அமெரிக்…

  2. January 22, 2019 வவுனியா மாவட்டத்தில் இதுவரை காலமும் இராணுவக் கட்டுப்பாட்டிலிருந்த அரச மற்றும் தனியார் காணிகளின் மேலுமொரு தொகுதி இராணுவத்தினால் மக்களிடம் மீண்டும் கையளிக்கப்பட்டுள்ளது. இந்த காணிகளை கையளிக்கும் உத்தியோகபூர்வ நிகழ்வு வடக்கு மாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் தலைமையில் இன்று (22) முற்பகல் வடக்கு ஆளுநர் செயலகத்தில் இடம்பெற்றது. வன்னி இராணுவ கட்டளை தலைமையகத்தினை பிரதிநிதித்துவம் செய்து 56ஆவது படைப்பிரிவின் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் பிரபாத் தெமட்டன்பிட்டிய அவர்கள் காணிவிடுவிப்பிற்கான பத்திரத்தை ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவனிட…

  3. மனித உரிமை விவகாரங்கள் – பிரித்தானிய அமைச்சருடன் மங்கள பேச்சு ஐ.நா மற்றும் கொமன்வெல்த்துக்கான, பிரித்தானியாவின் இராஜாங்க அமைச்சர் தாரிக் அகமட் பிரபுவை சிறிலங்கா நிதியமைச்சர் மங்கள சமரவீர சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார். லண்டன், வெஸ்ட்மினிஸ்டரில் உள்ள தாரிக் அகமட் பிரபுவின் செயலகத்தில் இந்தச் சந்திப்பு நேற்று இடம்பெற்றுள்ளது. மனித உரிமைகள் மற்றும் நல்லிணக்கம், உள்ளிட்ட ஏனைய விவகாரங்கள் தொடர்பாக இந்தச் சந்திப்பின் போது கலந்துரையாடப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. http://www.puthinappalakai.net/2019/01/22/news/35980

    • 0 replies
    • 208 views
  4. 11 சிறிலங்கா படையினருக்கு எதிராக இரண்டு வாரங்களுக்குள் குற்றப்பத்திரம் தாக்கல் மோசமான குற்றங்களுடன் தொடர்புடைய 11 சிறிலங்கா படையினருக்கு எதிராக, விரைவில் குற்றப்பத்திரம் தாக்கல் செய்யப்படவுள்ளதாக, சிறிலங்கா பாதுகாப்புச் செயலர் ஹேமசிறி பெர்னான்டோ தெரிவித்துள்ளார். கொழும்பு- நாலந்த கல்லூரியில் நேற்று நடந்த நிகழ்வு ஒன்றில் உரையாற்றிய போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். “கடந்தகாலத்தில், நாட்டை உறைய வைத்த கொடூரமான ஒரு படுகொலையுடன் தொடர்புடைய, 11 படையினர் மீதே இரண்டு வாரங்களுக்குள் குற்றப்பத்திரம் தாக்கல் செய்யப்படவுள்ளது. இந்த நடவடிக்கை எடுக்கப்பட்ட பின்னர், சிறிலங்கா அரசாங்கம் இராணுவத்தினருக்கு எதிராக எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று புலம்பெ…

    • 0 replies
    • 631 views
  5. 3 வருடத்தில் சேதமுற்ற வீதி ; மக்கள் விசனம் பல மில்லியன் ரூபா செலவில் காபெற் வீதியாக புனரமைப்புச் செய்யப்பட்டு மூன்று வருடங்கள் முடியும் முன்னரே சேதமுற்ற வீதி தொடர்பில் பொது மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர். கிளிநொச்சி கரைச்சி பிரதேசத்தின் ஸ்கந்தபுரம் முட்கொம்பன் பிரதான வீதி முதற்தடவையாக காப்பெற் வீதியாக புனரமைப்புச் செய்யப்பட்டது. மிக மோசமான நிலையில் காணப்பட்ட வீதி காபெற் வீதியாக புனரமைப்புச் செய்யப்பட்டதனால் பொது மக்கள் மிகுந்த மகிழ்ச்சியில் இருந்தனர். ஆனால் அப்பிரதேச மக்களின் மகிழ்ச்சி மூன்று வருடங்கள் கூட நிலைத்திருக்கவில்லை. காரணம் குறித்த வீதி பல இடங்களில் மிக மோசமாக சேதமுற்றுள்ளது. இன்னும் சில வாரங்கள் சேதமுற்ற பகுதிகள் முற்று முழுதாக…

  6. நாடுதழுவிய போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ள 1000 ரூபாய் இயக்கம் மலையக தோட்ட தொழிலாளர்களின் 1000 ரூபாய் சம்பள கோரிக்கையை முன்வைத்து 1000 ரூபாய் இயக்கத்தின் ஆதரவாக சுவரொட்டிகள் மஸ்கெலியா நகரின் முக்கிய பகுதிகளில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. இச்சுவரொட்டியில் தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்த அடிப்படை சம்பளத்தை 1000 ரூபா ஆக்கு எனவும் நாடுதழுவிய போராட்டம் ஜனவரி மாதம் 23ஆம் திகதியன்று இடம்பெறவுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. http://www.virakesari.lk/article/48452

  7. திருமலை ஊடகவியலாளர் படுகொலையின் நினைவேந்தலை முன்னிட்டு ஆர்ப்பாட்டம் திருமலையில் படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் சுகிர்தராஜனின் 13ஆவது ஆண்டு நினைவேந்தலை முன்னிட்டு ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்படவுள்ளது. இந்த போராட்டம் எதிர்வரும் 26ஆம் திகதி சனிக்கிழமை காலை 10.00 மணிக்கு யாழிலுள்ள படுகொலையான ஊடகவியலாளர்கள் நினைவு தூபி முன்றலில் யாழ்.ஊடக அமையத்தின் ஒருங்கிணைப்பில் இடம்பெறவுள்ளது. குறித்த போராட்டத்தை வடக்கு கிழக்கு ஊடக அமைப்புக்கள் மற்றும் தென்னிலங்கை சகோதர ஊடக அமைப்புக்கள் இணைந்து முன்னெடுக்கவுள்ளன. படுகொலை செய்யப்பட்ட மற்றும் காணாமலாக்கப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு நீதி கோரி இந்த போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளனர். ஊடகப்படுகொலைக்கான நீதி கோரும்…

  8. பொலிஸாரிடம் அறைவாங்கினேன் ; சிறையிலடைக்கப்பட்டேன் - கடந்த காலத்தை மீட்டிய ஜனாதிபதி (இரோஷா வேலு) ஒன்றரை வருடங்களுக்கு மேலாக சிறைவாசம் இருந்ததாகவும் இரண்டு முறை பொலிஸாரிடம் கன்னத்தில் அறைவாங்கியதாகவும் தனது இறந்தகால நினைவுகளை மீட்டிப்பார்த்தார் ஜனாதிபதி. நேற்று சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்ற தேசிய பொலிஸ் பயிற்சி நிறுவனத்தின் முதலாவது டிப்ளோமா பட்டமளிப்பு வைபவத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே மேற்கண்டவாறு கூறினார். இங்கு தொடர்ந்து தனக்கும் பொலிஸாருக்குமான அனுபவத்தை சுவாரஸ்யமாக தொடர்ந்தும் தெரிவிக்கையில், ஜனாதிபதியாக நான் இன்று பதவி வகித்தாலும் எனது பாடசாலை காலத்தில் இரண்டு முறை பொலிஸாரிடம் கன்னத்தில் அறைவாங்கியுள்ளேன். ஒரு முறை எம்.ஜி…

  9. வலி.வடக்கில் சிறுமி மீது துஷ்பிரயோகம் யாழ்ப்பாணம் வலி.வடக்கில் வீட்டிலிருந்த பதின்ம வயது சிறுமி மீது பாலியல் துஷ்பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த சம்பவம் நேற்று முன்தினம் (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்றுள்ளது. சம்பவ தினத்தன்று, வீட்டின் கூரையை பிரித்து உட்புகுந்த கொள்ளையர்கள் வீட்டிலிருந்த 27 ஆயிரம் ரூபாய் பணத்தினை கொள்ளையிட்டதுடன், வீட்டிலிருந்த பதின்ம வயது சிறுமி ஒருவரையும் பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்திவிட்டு தப்பிச்சென்றுள்ளனர். குறித்த சம்பவம் தொடர்பில் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டதையடுத்து, சிறுமியை மீட்ட பொலிஸார், யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். …

  10. விசேட மேல் நீதிமன்றில் மீண்டும் கோட்டா முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ விசேட மேல் நீதிமன்றில் சற்றுமுன் முன்னிலையாகியுள்ளார். டீ.ஏ.ராஜபக்ஷ நினைவு அருங்காட்சியகம் அமைப்பதற்கு அரச நிதி பயன்படுத்தப்பட்டதாக கோட்டா மீது குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன. இது தொடர்பாக இன்று முதல் தினமும் விசாரணை நடத்துவதற்கு விசேட மேல் நீதிமன்றம் தீர்மானித்துள்ளது. அதனடிப்படையில் கோட்டா இன்று (செவ்வாய்க்கிழமை) விசேட மேல் நீதிமன்றில் முன்னிலையாகியுள்ளார். கடந்த அரசாங்கத்தின் ஆட்சிக்காலத்தில் வீரகெட்டிய பகுதியில் நிர்மாணிக்கப்பட்ட டீ.ஏ.ராஜபக்ஷ அருங்காட்சியகத்திற்கு, 33 மில்லியன் ரூபாய் அரச நிதி பயன்படுத்தப்பட்டதாக கோட்டா உள்ளிட்ட ஏழு பேர் மீது குற்றச்சாட்டுக்கள…

  11. வவுனியா யாத்திரிகை விடுதியினை பௌத்த தேரர்கள் பெற்றுக்கொள்ள ஏற்பாடு வவுனியா, இலுப்பையடி பகுதியிலுள்ள யாத்திரிகை விடுதியினை பௌத்த தேரர்கள் பெற்றுக்கொள்வது தொடர்பில் கலந்துரையாடலொன்று இடம்பெற்றுள்ளது. தமிழர் விடுதலைக்கூட்டணியின் ஆளுமைக்குட்பட்ட வவுனியா நகரசபை தலைவர் தலைமையில், 9 பௌத்த தேரர்கள் மற்றும் 4 பொது மக்கள் நேற்று (திங்கட்கிழமை) இக்கலந்துரையாடலில் ஈடுபட்டுள்ளனர். இதன்போது யாத்திரிகை விடுதியை பெற்றுக்கொள்வது தொடர்பிலான ஆவணங்களை உரிமை கோரியவர் வைத்திருந்த போதிலும் காணியை உறுதிப்படுத்தும் ஆவணங்கள் எவையும் அவரிடம் இருக்கவில்லை. ஆகையால் ஆவணங்களை கொண்டுவரும் பட்சத்தில், இவ்விடயம் தொடர்பில் தீர்மானிப்பதாக பௌத்த தேரர்களிடம் நகரசபையினால் தெரிவிக்கப்பட்டுள்ள…

  12. சந்திரிகா காலாவதியான உணவுப் பொருளுக்கு ஒப்பானவர் என்கிறார் கம்மன்பில! முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க, காலாவதியான உணவு பொருளுக்கு ஒப்பானவரென பிவித்துரு ஹெல உறுமய கட்சியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று (திங்கட்கிழமை) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். அவர் தொடர்ந்து கூறுகையில், “சுவையான உணவுப் பொருளொன்று காலாவதியான பின்னர் சிறிது காலத்திற்கு காட்சிப்பொருளாக சந்தையில் வைத்திருப்பார்கள். ஆனால் அதற்கு பெறுமதியிருக்காது. அத்தகையதொரு நிலைமையிலேயே ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியில் சந்திரிகாவும் தற்போது காணப்படுகின்றார். மேல…

  13. வெஸ்ஸ்ட்மின்ஸ்றர் நீதிமன்றம் தீரப்பு!!! லண்டனில் புலம்பெயர் தமிழர்கள் நடாத்திய ஆர்ப்பாட்டம் ஒன்றின்போது தமிழர்களின் கழுத்தை அறுப்பேன் என்று சைகை செய்த பிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோ குற்றவாளி என்று லண்டன் நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது. கடந்த ஆண்டு பெப்ரவரி 4ஆம் திகதி இலங்கை சுதந்திரதினத்தின்போது லண்டனில் உள்ள இலங்கைத் தூதரகம் முன்பாக புலம்பெயர்ந்த ஈழத் தமிழ் மக்கள் ஆர்ப்பாட்டம் ஒன்றை நடாத்தியிருந்தனர். இதன்போது ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மக்களை பார்த்து கழுத்தை அறுப்பேன் என பிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோ சைகை காட்டினார். இது தொடர்பில் லண்டன் நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. வழக்கு இன்று (21.01.19) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது…

  14. தமிழர்களுக்கு மரண அச்சுறுத்தல் விடுத்த பிரிகேடியர் பிரித்தானியாவில் கைது? பிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோ பிரித்தானியாவில் வைத்து கைது செய்யப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பிரித்தானியாவில் தமிழர்களுக்கு மரண அச்சுறுத்தல் விடுத்தமை மற்றும் போர்குற்றச்சாட்டின் அடிப்படையில் அவர் கைது செய்யப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தக் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் வினோத் பெரேரா மற்றும் பல்லியகுரு ஆகிய இருவர் வெஸ்ட்மினிஸ்டர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த வழக்கு நாளை(திங்கட்கிழமை) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது. இதன்போது பிரியங்க பெர்னாண்டோ கைது செய்யப்படவுள்ளதாக உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தநிலையில் பிரிகேடியர் பிரியங்க பெர்னாண்…

  15. தமிழர்களின் கலாசாரத்தை திட்டமிட்டு சிதைக்கின்றனர் – சாந்தி சாடல் யுத்தத்திற்கு பின்னர் தமிழர்களின் கலாசாரம், இனம் மற்றும் பாரம்பரியம் என்பன திட்டமிட்டு அழிக்கப்பட்டு வருவதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சாந்தி ஸ்ரீஸ்கந்தராஜா குற்றம் சுமத்தியுள்ளார். முல்லைத்தீவில் பாடசாலையொன்றில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். இதன்போது மேலும் தெரிவித்த அவர், “முல்லைத்தீவில் பிரபலமான பிள்ளையார் கோயிலொன்று காணப்படுகின்றது. அதற்கு அண்மையில் தற்பொழுது புத்தர் சிலை அமைக்கப்பட்டுள்ளது. தைப்பொங்கல் தினத்தன்று கோயிலில் பூஜைகள் நடைபெற்றபோது பௌத்த மதகுரு ஒருவர் அதை தடுக்க முற்பட்டார். தமிழர்…

  16. எஸ்.நிதர்ஷன் யாழ்ப்பாணத்தில் இராணுவம் கையகப்படுத்தியுள்ள காணிகளை இன்று (21) விடுவிப்பதாக ஜனாதிபதி அறிவித்த போதும் இராணுவம் மக்களை காணிகளுக்குள் செல்ல அனுமதிக்கவில்லை. இதனால் தமது காணிகளை மீட்க வந்த காணி உரிமையாளர்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். வடக்கில் 1000 ஏக்கருக்கு மேற்பட்ட காணிகளை இன்று (21) மீள மக்களிடம் கையளிப்பதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முல்லைதீவில் வைத்து தெரிவித்திருந்தார். இதன்படி யாழ்.வலி வடக்கில் 45 ஏக்கர் காணி விடுவிப்பதாக தெரிவிக்கப்பட்டது. குறிப்பாக தையிட்டி தெற்கில் 30 ஏக்கர் காணிகள…

  17. கிழக்குப் பல்கலைக்கழகத்தின் புதிய துணைவேந்தராக எவ்.சீ. ராகல் January 18, 2019 கிழக்குப் பல்லைக்கழகத்தின் துணைவேந்தராக அப் பல்கலைக்கழகத்தின் பௌதீகவியற் துறைப் பேராசிரியர் எவ்.சீ. ராகல் நியமிக்கப்பட்டுள்ளார். தற்போதைய துணைவேந்தர் ரி. ஜெயசிங்கத்தின் பதவிக் காலம் எதிர்வரும் 21ஆம் திகதி நிறைவடையவுள்ள நிலையிலேயே புதிய துணைவேந்தர் நியமனம் இடம்பெற்றுள்ளது. பல்கலைக்கழக பேரவை உறுப்பினர்களிடையே நடாத்தப்பட்ட வாக்கெடுப்பில், பேராசிரியர் எவ்.சீ.. ராகவல் முதல் நிலையிலும், கலாநிதி எம். சந்திரகாந்தா இரண்டாம் நிலையிலும், திருமலை வளாக முதல்வர் ரி. கனகசிங்கம் மூன்றாம் நிலையிலும் தெரிவு செய்யப்பட்டிருந்தனர். பல்கலைக்கழக சட்டத்திற்கு அமைவாக பேரவையின் பரிந்துரைகளை, …

    • 5 replies
    • 1.7k views
  18. இராணுவத்தினர் மீது பாரிய குற்றச்சாட்டுக்கள் இருந்தால் தண்டனை உறுதி: பாதுகாப்புச் செயலாளர் பாரிய குற்றச்சாட்டுக்களில் ஈடுபட்ட இராணுவத்தினர் தொடர்பிலான தகவல்கள் இருந்தால், அதனை வழங்குமாறு பாதுகாப்புச் செயலாளர் ஹேமசிறி பெர்ணான்டோ புலம்பெயர் அமைப்புக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார். கொழும்பில் இன்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவித்தபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் குறிப்பிடுகையில், “இந்த நாட்டில் நிறைய பேர் இராணுவம் என்பதை தவறான அர்த்தத்துடன் பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். இராணுவ வீரர் ஒருவர், இராணுவத்திலிருந்து விலகி ஒருவரை கொலை செய்தால் அவரை நாம் இராணுவ வீரர் என்று கூறமுடியாது. அவர் ஒரு…

  19. எமக்கு அடையாளமான எமது மொழியை நாம் பாதுகாக்க வேண்டும்: துரைராசசிங்கம் எமது அடையாளமான தமிழ்மொழியை நாங்கள் பாதுகாக்க வேண்டும் என இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் கி. துரைராசசிங்கம் தெரிவித்தார். மட்டக்களப்பு தமிழ்ச் சங்கத்தின் ஏற்பாட்டில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற தைப்பொங்கல் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இது தொடர்பாக அவர் மேலும் குறிப்பிடுகையில், ‘சுதந்திரம் அடைந்த இந்த நாட்டிலே மொழிக்காகப் போராடியவர்கள் நாங்கள். எமது மொழி எனும் அடையாளம் இல்லையென்றால் நாங்கள் தமிழராக இருக்க முடியாது. வெறுமனே கலாசாரமாக தைப்பொங்கலைப் பின்பற்ற முடியாது. சிலாபம், முன்னேச்சரம், தொண்டீஸ்வரம், கதிர்காமம் போன்ற பகு…

  20. January 21, 2019 முல்லைத்தீவு, நெடுங்கேணி – தட்டாமலை வீதியில் இராணுவ டிபெண்டர் ஒன்று பனை மரத்துடன் மோதி விபத்துக்குள்ளானதில் மேஜர் ஒருவரும், கோப்ரல் ஒருவரும் உயிரிழந்துள்ளனர். அத்துடன், 4 இராணுவ அதிகாரிகள் படுகாயமடைந்துள்ளனர். முல்லைத்தீவுக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று விஜயம் மேற்கொண்டிருந்தார். அவரது பாதுகாப்புக்காகச் சென்ற இராணுவ கொமாண்டோ படையணி வாகனங்கள் பாதுகாப்புப் பணியை நிறைவு செய்துவிட்டு இன்று மதியம் வவுனியா நோக்கிப் பயணித்தபோதே அதில் ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது. நெடுங்கேணி – தட்டாமலை வீத…

  21. இலங்கை தொடர்பில் புதிய பிரேரணை கொண்டுவர பிரதான நாடுகளுடன் பேச்சு- தமிழ் தேசிய கூட்டமைப்பு (ஆர்.யசி) ஜெனிவாவில் இம்முறை நடைபெறவுள்ள ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் கூட்டத்தொடரின் போதும் இலங்கை தொடர்பில் பிரேரணை ஒன்றினை பிரதான நாடுகள் கொண்டுவர வேண்டும் என்ற நோக்கத்திற்காக அங்கம் வகிக்கும் பிரதான நாடுகளுடன் பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்து வருவதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஊடகப்பேச்சாளர் எம்.எ.சுமந்திரன் தெரிவித்தார். இலங்கையின் பொறுப்புக்கூறல் விடயத்தில் சர்வதேச மேற்பார்வை நீடிக்கப்பட வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டார். ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் 40 ஆவது கூட்டத்தொடர் ஆரம்பிக்கப்படவுள்ள நிலையில் இலங்கை குறித்த விவகாரங்கள் தொடர்பில் தமிழ் …

  22. தேசியத் தேர்தல்களில் பொதுஜன பெரமுனவுக்கே வெற்றி கிட்டும் - பிரிட்டிஷ் அமைப்பு உறுதியாகக் கூறுகிறது பிரிட்டனின் பல்தேசிய ஊடகக் கம்பனியான ' த எக்கனோமிஸ்ற் குரூப்'பின் ஒரு அங்கமாக இயங்கும் ' எக்கனோமிஸ்ற் இன்ரெலிஜென்ஸ் யூனிற்' உலக விவகாரங்களையும் சர்வதேச வர்த்தக நிலைவரங்களையும் கிரமமாக ஆய்வுசெய்து எதிர்காலத்தில் நிகழக்கூடியவற்றை முன்கணிப்புச்செய்யும் சேவைகளையும் ஆலோசனைசேவைகளையும் வழங்கிவரும் ஒரு பிரபலமான அமைப்பாகும். அது இலங்கையின் தற்போதைய அரசாங்கம் வருட இறுதியில் வீழ்ச்சிகண்டுவிடும் என்றும் அடுத்த ஜனாதிபதி தேர்தலிலும் பாராளுமன்றத் தேர்தலிலும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவே வெற்றிபெறும் என்றும் கூறியிருக்கிறது. 2015 ஜனவரி ஜனாதிபதி தேர்தலில் மகிந்த ராஜபக்ச வெ…

  23. இணுவிலைப் பிரிக்க வேண்டாம் -மீண்டும் மக்கள் மனு!! பதிவேற்றிய காலம்: Jan 21, 2019 யாழ்ப்பாணம் இணுவில் மஞ்சத்தடிப் பகுதியை வேறு நிர்வாகக் கட்டமைப்புக்குள் கொண்டு செல்ல வேண்டாம் என வலியுறுத்தி, யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் இன்று மனுக் கையளிக்கப்பட்ட்து. “இணுவில் கிராமம் பல சித்தர்கள் வாழ்ந்த பிரதேசமாகும். இந்த கிராமத்தைப் பல துண்டுகளாக பிரித்து இணுவில் என்கின்ற அடையாளத்தையும், வரலாற்றையும் மாற்றுவதற்கு சில சக்திகள் முனைகின்றனர். எனவே இணுவில் மஞ்சத்தடி பிரதேசமானது நல்லூர் பிரதேச செயலக ஆளுகைக்குள் இருந்து வருகின்றது. இந்நிலையில் நல்லூர் பிரதேச செயலகத்தின் ஆளுகையை விட்டு பறிகொடுக்க எப்போதும் அனுமதிக்க மாடடோம் எமது கிராம அலுவலர் பிரிவின் பெயரான கோண்டாவில…

  24. மன்னார் மாவட்டத்தில் படையினர் வசமிருந்த ஐந்நூறு ஏக்கர் காணிகள் விடுவிக்கப்பட்டுள்ளன என்று மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் கேதீஸ்வரன் தெரிவித்தார். மன்னார் மாந்தை பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட வெள்ளாங்குளத்தில் படையினர் வசமிருந்த வெள்ளங்குளம் பண்ணை சுமார் அறுநூறு ஏக்கர் பரப்பளவைக் கொண்டது. இதில் ஐந்நுறு ஏக்கர் காணிகள் இன்று விடுவிக்கப்பட்டுள்ளன என்றும் அவர் தெரிவித்தார். https://newuthayan.com/story/17/மன்னாரில்-500-ஏக்கர்-காணிகள்-விடுவிப்பு.html

  25. இராவணேசுவரம் ஆலயத்தில் -செந்தமிழில் திருக்குடமுழுக்கு!! யாழ்ப்பாணம் பொன்னாலைச் சந்தியில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள வீட்டுத் திட்டத்துக்கு முன்னால் இரவோடு இரவாக திடீரெனத் தோன்றிய லிங்கத்துக்கு, இராவணேசுவரம் என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. இராவணேசுவரம் ஆலயம் சைவமகாசபையின் ஏற்பாட்டில் அமைக்கப்பட்டு இன்று காலை செந்தமிழில் திருக்குடமுழுக்கு இடம்பெற்றது. ஈழத்தை ஆட்சிசெய்த தமிழ் மன்னனான சிவபக்தன் இராவணேசுரன்…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.