Jump to content

தமிழர்களுக்கு மரண அச்சுறுத்தல் விடுத்த பிரிகேடியர் பிரித்தானியாவில் கைது?


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

kktg.jpg

தமிழர்களுக்கு மரண அச்சுறுத்தல் விடுத்த பிரிகேடியர் பிரித்தானியாவில் கைது?

பிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோ பிரித்தானியாவில் வைத்து கைது செய்யப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

பிரித்தானியாவில் தமிழர்களுக்கு மரண அச்சுறுத்தல் விடுத்தமை மற்றும் போர்குற்றச்சாட்டின் அடிப்படையில் அவர் கைது செய்யப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்தக் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் வினோத் பெரேரா மற்றும் பல்லியகுரு ஆகிய இருவர் வெஸ்ட்மினிஸ்டர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த வழக்கு நாளை(திங்கட்கிழமை) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது.

இதன்போது பிரியங்க பெர்னாண்டோ கைது செய்யப்படவுள்ளதாக உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தநிலையில் பிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோ நாளைய தினம் வழக்கில் ஆஜராகாமல் இருப்பதற்கு தீர்மானித்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.

பிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோ மேற்கொண்ட போர்க்குற்றச்சாட்டுகள் தொடர்பான காணொளிகளை சனல் 4 தொலைகாட்சி நீதிமன்றத்தில் சமர்ப்பித்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளமைக் குறிப்பிடத்தக்கது.

http://athavannews.com/தமிழர்களுக்கு-மரண-அச்சுற/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கடந்த வருடம், இலங்கையின் 70 ஆவது சுதந்திர தினத்தை லண்டனில் உள்ள இலங்கைத் தூதரக்ம் கொண்டாடியபோது, அதன்முன்னால் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பெரும்பான்மைத் தமிழர்களை நோக்கி கழுத்தை அறுக்கும் வகையில் சைகை செய்து வெருட்டியதற்காக, தனியார் முறைப்பாடு ஒன்றின்மூலமாக இவன்மேல் வழக்குப் பதிவுசெய்யப்பட்டிருக்கிறது.

மயூரன் சதானந்தன், பல்லிய குருகே வினோத் பிரியந்த பெரேரா மற்றும் கோகுலகிரிஷ்ணன் நாரயணசாமி ஆகிய மூவர் தாக்கல் செய்துள்ள இவ்வழக்கின் இவனை இன்று ஆஜராகும்படி கேட்கப்பட்டிருந்தது. இவ்வழக்கு விசாரணைக்கு சமூகமளிக்கும்படி இவனது சிறிலங்கா விலாசத்திற்கும், லண்டன் சிறிலங்கா உயர்ஸ்தானிகரத்திற்கும், இலங்கை வெளிநாட்டாலுவல்கள் அமைச்சிற்கும் இதுவரை விடுக்கப்பட்ட சம்மன்களுக்கு இவனோ அல்லது இவனைப் பிரதிநிதித்துவம் செய்யும் எவருமோ பதிலளிக்கவில்லை. ஆனால், முறைப்பாட்டளர்கள் சார்பில் வாதாடும் வழக்கரிஞர்கள், இவனது பிரசன்னம் இல்லாவிட்டாலும்கூட, வழக்கைத் தொடர்ந்தும் நடத்தும் வகையிலேயே இவ்வழக்குத் தொடரப்பட்டிருக்கிறது என்று கூறியிருக்கிறார்கள். பிறநாட்டில் வதியும் ஒரு ராணுவ அதிகாரிமீது தொடுக்கப்பட்ட ஒரு சில வழக்குகளில் இதுவும் ஒன்றாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த பெப்ரவரி மாதம் 4 ஆம் திகதி பூரண ராணுவச் சீருடையில் இருந்த இவன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மக்களை நோக்கி பலதடவைகள் தனது ஆட்காட்டு விரலினால் கழுத்தை அறுப்பதுபோன்று பாவனைசெய்ததுடன், தொடர்ச்சியாக ஆர்ப்பாட்டக்காரர்களை பயமுருத்தும் வகையில் அவர்களைப் பார்த்துக் கொண்டிருந்ததை வெளிப்படுத்தும் பல ஒளிப்படங்கள் வெளியானதை அடுத்து, இவனது ராஜதந்திர உரிமைகளை ரத்துச் செய்யும்படி பல இங்கிலாந்து சட்டவாளர்கள் குரல் எழுப்பியிருந்தமை குறிப்பிடத் தக்கது. 

தொடர்ச்சியான அழுத்தங்களை அடுத்து, சிறிலங்கா அரசு இவனை மீளவும் இலங்கைக்கு அழைத்திருந்தது. இவனது கழுத்தறுக்கும் சைகையினை அடுத்து, இவனுக்குச் சார்பாக, இவனை ஒரு போர் நாயகனாக போற்றிப் பல சிங்களவர்கள் சமூக வலைத்தளங்களில் பிரச்சாரம் செய்ததையடுத்து, இவனுக்கெதிராக எந்தவித ஒழுக்காற்று நடவடிக்கைகளையும் எடுப்பதில்லை என்று சிங்கள ராணுவம் அறிவித்திருந்தது.

பிரிகேடியர் தரத்திலிருந்த இவன், 2008 ஆம் ஆண்டில் மணலாற்றிலிருந்து முல்லைத்தீவு நோக்கி முன்னேறிய 59 ஆவது படைப்பிரிவிற்குத் தலைமை தாங்கியதோடு, இக்காலத்தில் முலைத்தீவிற்கு மிகவும் அண்மையாகப் போரிட்ட படைப்பிரிவின் கட்டளை அதிகாரியென்பதுடன், பல வைத்தியசாலைகள் மற்றும் யுத்த சூனிய வலயங்கள் மீது கடுமையான செல்வீச்சுத் தாக்குதல்களையும், பல்குழல் பீரங்கித் தாக்குதல்களையும் இவனது படைப்பிரிவு மேற்கொண்டிருந்தது. இப்படையணியின் தாக்குதல்களில் பல்லாயிரக்கணக்கான அப்பாவிப் பொதுமக்கள் கொல்லப்படுவதற்கும் காரணமாக இருந்தவன்.

இவனது ராணுவ நடவடிக்கைகள் மற்றும் புகைப்படங்கள் கீழே உள்ள இணைப்பில் உள்ளன. 


http://www.jdslanka.org/images/documents/brigadier_api_fernando_final_jds_itjpsl.pdf

Link to comment
Share on other sites

பிரிகேடியர் பிரியங்க பெர்ணான்டோ குற்றவாளி என லண்டன் நீதிமன்றம் தீர்ப்பு அளித்து இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இன்னும் உறுதியான செய்தி வெளியாகவில்லை

//Brigadier Priyanka Fernando of SL army found guilty of two of three offences under Public Order Act (sections 5 and 4a). That his actions were threatening, caused harassment, and that he intended them to be so. Magistrates court issues an arrest warrant for Fernando...//

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

செய்தியின் முக்கியத்துவம் கருதி, தனிச் செய்தியாக இணைத்துள்ளேன்

 

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இந்த விடயத்தை நான் பலமுறை அவதானித்துள்ளேன்.  வயிற்றில் சமிபாட்டுப்(?) பிரச்சனை இருப்பதால் அவை அவ்வாறு செய்கின்றன என நான் நம்புகிறேன். 
    • இலங்கையின் தற்போதைய தேசிய வலைப்பந்தாட்ட வீராங்கனையும் முன்னாள் தலைவருமான செமினி அல்விஸ் ( Semini Alwis ) தடைசெய்யப்பட்ட ஊக்கமருந்துகளை பயன்படுத்தியுள்ளதாக,  இலங்கை ஊக்கமருந்து எதிர்ப்பு முகவர் நிறுவனம் (SLADA) தெரிவித்துள்ளது. கடந்த மார்ச் மாதம் 21ஆம் திகதி நடத்தப்பட்ட சோதனைகளின்போது, சிறுநீர் மாதிரிகளில் தடைசெய்யப்பட்ட ஊக்கமருந்துகள் இருப்பதாக உலக ஊக்கமருந்து எதிர்ப்பு நிறுவனம் (WADA) அதிகாரபூர்வமாக செமினிக்கும்,  இலங்கை ஊக்கமருந்து எதிர்ப்பு முகவர் நிறுவனத்துக்கும் தெரிவித்துள்ளது.   வலைப்பந்தாட்ட போட்டி இந்நிலையில், இலங்கை ஊக்கமருந்து எதிர்ப்பு முகவர் நிறுவனம் மற்றும் உலக ஊக்கமருந்து எதிர்ப்பு நிறுவனம் ஆகிய அமைப்புகளால் நடத்தப்பட்ட ஊக்கமருந்து சோதனையில் இலங்கை வலைப்பந்து வீரர் ஒருவர் தோல்வியடைந்த முதல் சந்தர்ப்பம் இதுவாகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.   ஆனால், குறித்த வீராங்கனை தாம் குற்றமற்றவர் என்பதை நிரூபிக்க ‘பி’ மாதிரி சோதனையைத் தொடரலாம் எனவும் அதுவரை அவர் தேசிய பயிற்சி அமர்வுகளில் பங்கேற்பதில் இருந்து தற்காலிகமாக இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார் எனவும் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் ஷிரோமி பிலப்பிட்டிய தெரிவித்துள்ளார்.   செமினி 2015 மற்றும் 2019ஆம் ஆண்டுகளில் இரண்டு உலகக் கிண்ண வலைப்பந்தாட்ட போட்டிகளிலும், சில ஆசிய செம்பியன்சிப்களிலும் நாட்டைப் பிரதிநிதித்துவப்படுத்திய ஒரு மூத்த வீராங்கனை ஆவார். 2015ஆம் ஆண்டு அவுஸ்திரேலியாவில் நடைபெற்ற சிட்னி உலகக் கிண்ணப்போட்டியின்போது  இலங்கை அணியின் தலைவியாகவும் அவர் செயற்பட்டுள்ளார்.  இந்நிலையில், சவூதி அரேபியாவில் எதிர்வரும் செப்டம்பர் 26ஆம் திகதி முதல் ஒக்டோபர் 06ஆம் திகதி வரை நடைபெறவுள்ள 13ஆவது ஆசிய வலைப்பந்து செம்பியன்சிப் போட்டிக்கு தயாராகும்  இலங்கை வலைப்பந்து சம்மேளனக் குழுவில் செமினி அல்விஸ் உள்ளடக்கப்பட்டுள்ளார். https://tamilwin.com/article/sri-lankan-player-failed-doping-test-1715314992?itm_source=parsely-special
    • வெற்றிலை மென்றதற்கு வழக்கா? பழுதடைந்த மரக்கறிகளை விற்றதற்கு வழக்கா ? வெற்றிலை மெல்லுவது யாழ்பாணத்தானின் சுய விருப்பம் அல்லவா ?  ( காவிக் கறையும் வாய்ப்பு ற்றையும் கொண்டு  வரும் ) தற்போது அதிகமாக பாவிக்கிறார்கள்  .😢
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.