Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. நாளை.. நீதிமன்றத்தில், முன்னிலையாகவுள்ள மஹிந்த அணியினர்! இடைக்காலத் தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட 49 முன்னாள் அமைச்சர்கள் நாளைய தினம்(புதன்கிழமை) மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் ஆஜராகவுள்ளனர். ரணிலுக்கு ஆதரவான நம்பிக்கை வாக்கெடுப்பு மற்றும் மஹிந்தவுக்கு எதிரான வழக்கு விசாரணை என்பன ஒரே தினத்தில் இடம்பெறவுள்ளமையால், நாளைய அரசியல் களநிலவரம், பரபரப்பான இருக்கும் என்றே எதிர்ப்பார்க்கப்படுகிறது. இலங்கையின் பிரதமராக மஹிந்த ராஜபக்ஷ நியமிக்கப்பட்ட ஒக்டோபர் 26 ஆம் திகதிமுதல், இலங்கை வரலாற்றில் என்றும் இல்லாத நெருக்கடி நிலைமை ஏற்பட்டுள்ளது. இதற்கெதிராக ஐக்கிய தேசிய முன்னணி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மற்றும் ஜே.வி.பி. உள்ளிட்ட தரப்பினரால…

  2. மன்னாரில் நீண்ட நாட்களாக பூட்டப்பட்ட நிலையில் காணப்படும் பாராளுமன்ற உறுப்பினரின் அலுவலகம் : December 11, 2018 குளோபல் தமிழ்ச் செய்தியாளர் மன்னாரில் அமைந்துள்ள தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரின் கிளை அலுவலகம் தொடர்ச்சியாக மூடப்பட்ட நிலையில் காணப்படுவதாகவும், இதனால் பல்வேறு தேவைகளுக்காக செல்லும் மக்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்லுவதாக பாதிக்கப்பட்ட மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர். தமிழ் தேசியக்கூட்டடைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சி.சிவமோகனின் மாவட்டக் காரியாலயம் ஒன்று மன்னார் உப்புக்குளம் புதுத்தெரு பகுதியில் கடந்த சில மாதங்களுக்கு முன் வைபவ ரீதியாக திறந்து வைக்கப்பட்டது. எனினும் குறித்த அல…

  3. வலி.வடக்கு மயிலிட்டி மீன்பிடித் துறைமுகத்தின் அபிவிருத்தி பணிகள் துரித கதியில் இடம்பெற்று வருகின்றது. துறைமுகத்தின் நுழைவாயிலை ஆழப்படுத்தல், அலைதடுப்பு நிலையம், குளிரூட்டல் அறைகள் உட்பட்ட அபிவிருத்திப் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. https://newuthayan.com/story/17/மயிலிட்டி-துறைமுக-அபிவிருத்தி-துரித-கதியில்.html

  4. யாழில் முச்சக்கர வண்டிகளிற்கும், வாடகை ரக்ஸிகளிற்கும் கட்டண மீற்றர் கட்டாயம்…. December 11, 2018 யாழ் மாவட்டத்தில் முச்சக்கர வண்டிகளிற்கும், வாடகை ரக்ஸிகளிற்கும் கட்டண மீற்றர் கட்டாயம் பொருத்த வேண்டுமென அறிவிக்கப்பட்டுள்ளது. ஜனவரி 1ம் திகதியிலிருந்து அறவிடப்பட வேண்டிய கட்டண விபரங்களை யாழ் மாவட்ட செயலகம் அறிவிக்கவுள்ளது. யாழ் மாவட்ட செயலகத்தில் நேற்று நடைபெற்ற கலந்துரையாடலில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. வடக்கு உள்ளூராட்சி மற்றும் போக்குவரத்து அமைச்சின் செயலாளர், வடக்கு போக்குவரத்து அதிகாரசபையின் தலைவர், மாநகரசபை ஆணையாளர், முதல்வர், நுகர்வோர் பாதுகாப்புசபை பொறுப்பதிகாரி, அளவீட்டு நியமங்கள் பணயக அலுவலர், பொலிசார் ஆகியோர் இந்த கலந்துரையாடலில் பங்கெட…

  5. உச்சநீதிமன்ற தீர்ப்பு வரலாற்றை உருவாக்கும் – பிரித்தானிய தூதுவர் நாடாளுமன்றக் கலைப்பு தொடர்பாக சிறிலங்கா உச்சநீதிமன்றம் இந்தவாரம் வெளியிடப்போகும் தீர்ப்பு, வரலாற்றை உருவாக்கும் என்று பிரித்தானியத் தூதுவர் ஜேம்ஸ் டௌரிஸ் தெரிவித்துள்ளார். அவர் தனது கீச்சகப் பக்கத்தில் இட்டுள்ள பதிவு ஒன்றில், “ஒரு முன்னாள் சட்ட மாணவன் என்ற வகையில் நான் , உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை அறிவதற்காக காத்திருக்கின்றேன். இந்தத் தீர்ப்பு வரலாற்றை உருவாக்கும் தீர்ப்பாக அமையும். சிறிலங்காவின் சட்டக்கல்லூரி மாணவர்கள் பல தலைமுறைக்கு இந்த தீர்ப்பு குறித்து கற்பார்கள்” என்றும் அதில் அவர் குறிப்பிட்டுள்ளார். http://www.puthinappalaka…

    • 2 replies
    • 464 views
  6. வவுணதீவு பொலீசார் படுகொலை: அதிரவைக்கும் விசாரணைத் தகவல்கள்! மட்டக்களப்பு வவுணதீவு பொலீசார் இருவர் சுட்டுக்கொல்லப்பட்டமை தொடர்பாக பல தகவல்கள் வெளியாகியபடி உள்ளது. குறிப்பாக பொலீசார் கொலை செய்யப்பட்ட விதம் தொடர்பாக சில திடுக்கிடும் தகவல்கள் பிரேதப் பரிசோதனை அறிக்கைகள் மூலம் வெளியாகியுள்ளமை தெரியவந்துள்ளது. அதாவது படுகொலை செய்யப்பட்ட தினேஸ் என்ற தமிழ் பொலீஸ் உத்தியோகத்தரை கொலையாளிகள் சுட்டுப்படுகொலை செய்ததன் பின்னரே கைகளை பின்னால் கட்டி குப்புரப் படுக்கப் போட்டு தலையில் சுட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அதாவது கொலையாளிகள் இறுதி யுத்தத்தில் சரணடைந்த விடுதலைப் புலிகளை இராணுவம் கைகளை பின்னால் கட்டி தலையில் சுட்டுக்கொன்றதைப் போன்றே குறித்த பொலீசார் படுகொலை…

    • 3 replies
    • 1.2k views
  7. உச்சநீதிமன்றம் மீதான அனைத்துலக ஆர்வம் – மகிந்த தரப்பு கொதிப்பு நாடாளுமன்றக் கலைப்புக்கு தொடர்பான உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு தொடர்பாக அனைத்துலக அமைப்புகள், இராஜதந்திரிகள் காட்டும் ஆர்வம், தொடர்பாக மகிந்த தரப்பு கடும் அதிருப்தியை வெளியிட்டுள்ளது. கொழும்பில் நேற்று நடத்திய செய்தியாளர் சந்திப்பில் கருத்து வெளியிட்ட, நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச, “திருகோணமலையில் உள்ள காணிகளை அமெரிக்காவுக்கு வழங்க ரணில் விக்கிரமசிங்க இணங்கியிருந்தார். அதனால் தான், சில அனைத்துலக நிறுவனங்கள், உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பின் மீது ஆர்வம் கொண்டுள்ளன” என்று கூறியிருந்தார். அதேவேளை, இதே செய்தியாளர் சந்திப்பில் கருத்து வெளியிட்ட நாடாளும…

  8. சட்டவிரோத மரக்கடத்தல் முறியடிப்பு ; மரங்களுடன் மூவர் கைது சட்டவிரோதமான முறையில் அரிமரங்களை கடத்திச்சென்ற மூன்று பேரை கைதுசெய்துள்ளதாக ஈச்சங்குளம் பொலிசார் தெரிவித்துள்ளனர். நொச்சிகுளம் காட்டுப்பகுதியில் சட்டவிரோதமான முறையில் மரங்கள் கடத்தப்படுவதாக கிடைத்த இரகசிய தகவலிற்கமைய அப்பகுதிக்கு சென்ற ஈச்சங்குளம் பொலிசார் , விஷேட அதிரடி படையினருடன் இணைந்து இவ் மரக்கடத்தல் நடவடிக்கையை முறியடித்துள்ளனர். மேற்படி சம்பவத்தில் வவுனியாவை சேர்ந்த மூன்று நபர்கள் கைது செய்யபட்டதுடன் மரக் கடத்தலுக்கு பயன்படுத்தி கப் ரக வாகனம் ஒன்றும் பொலிசாரால் கைப்பற்றப்பட்டது. கைது செய்யபட்டவர்கள் விசாரணைகளின் பின்னர் இன்றைய தினம் நீதி மன்றில் ஆஜர்படுத்தவுள்ளமை குறிப்பிடத்தக்…

  9. தீர்பினை வழங்க வேண்டுமென உயர் நீதிமன்றத்திற்கு UPFA காலக்கெடு… December 11, 2018 இலங்கையில் தொடர்ந்து அரசியல் நெருக்கடி நீடித்து வருகின்ற நிலையில் உயர் நீதிமன்றத்தின் தீர்பினை 14 ஆம் திகதிக்குள் வழங்குமாறு கோரிக்கை விடுப்பதற்கு ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி தீர்மானித்துள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனா தலைமையில் நேற்றையதினம் இடம்பெற்ற கட்சியின் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி, ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி ஆகியவற்றை உள்ளடக்கிய ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி உறுப்பினர்களின் கூட்டத்திலேயே ஜனாதிபதி இதனைத் தெரிவித்துள்ளார். சட்டமா அதிபர் மற்றும் பிரதம நீதியரசர் மூலம் இன்று செவ்வாய்க்கிழமை இந்தக் கோரிக்கை முன்வைக்கப்படவுள்ளதாகவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்…

  10. பாரதியாரின் பிறந்ததினம் – யாழில் வணக்கம் செலுத்தப்பட்டது மகாகவி பாரதியாரின் 137 ஆவது பிறந்த தினத்தினை முன்னிட்டு யாழ்.நல்லூர் அரசடி சந்தியில் உள்ள அவருடைய திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து வணக்கம் செலுத்தப்பட்டது. யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய துணைத்தூவராலயத்தின் ஏற்பாட்டில் இன்று (செவ்வாக்கிழமை) காலை 9 மணியளவில் இந்த நிகழ்வு இடம்பெற்றது. இந்நிகழ்வில், யாழ்.இந்திய துணைத்தூதுவர் எஸ்.பாலச்சந்திரன், யாழ்.மாநகர முதல்வர் இமானுவேல் ஆனோல்ட், யாழ்.அரசாங்க அதிபர் என்.வேதநாயகன், வடமாகாண சபை பேரவை தலைவர் சி.வி.கே.சிவஞானம், வடமாகாண ஆளுநரின் செயலாளர் இ.இலங்கோவன், வடமாகாண சபையின் முன்னாள் உறுப்பினர்கள் எம்.கே.சிவாஜிலிங்கம், அனந்தி சசிதரன், ஆர்.ஜெயசேகரம், யாழ்.பல்கலைக்கழக மு…

  11. தேர்தல் என்ற பேச்சுக்கே இடமில்லை என்கிறார் சஜித்! தற்போதைய நிலையில் தேர்தல் என்ற பேச்சுக்கே இடமில்லை என, ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சஜித் பிரேமதாஸ குறிப்பிட்டுள்ளார். அரசியல் வரலாற்றில் பல சந்தர்ப்பங்களில் பாடம் கற்ற தாம், கட்சியைப் பலப்படுத்தி உச்ச நிலையில் இருக்கும்போதே தேர்தலை நடத்தவுள்ளதாகவும் கூறியுள்ளார். அலரி மாளிகையில் நேற்று (திங்கட்கிழமை) மாலை இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த போதே, அவர் இவ்வாறு கூறினார். ”விரைவில் தேர்தல் நடைபெறும் என்று பரவலாக பேசப்படுகின்றன. குறித்த காலத்திற்கு முன்னர் எந்தவொரு தேர்தலும் நடைபெறாதென நான் கூறுகிறேன். இன்று முக்கியத்துவம் கொடுக்க வேண்டியது தேர்தலுக்கு அல்ல. செய்யாத…

  12. ரணிலை ஆதரித்தால் கூட்டமைப்பு எதிர்க்கட்சியிலிருந்து விலக வேண்டும்: டளஸ் ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவின் செயற்பாடுகளுக்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு தொடர்ச்சியாக தமது ஆதரவினை வழங்கி வருமாகவிருந்தால் எதிர்க்கட்சியிலிருந்து கூட்டமைப்பு விலக வேண்டுமென நாடாளுமன்ற உறுப்பினர் டளஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார். இலங்கை அரசியல் தொடர்பில் நேற்று (திங்கட்கிழமை) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் கூறியுள்ளதாவது, “நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிப்பதற்காக ஐக்கிய தேசிய கட்சியினர் அமைச்சர்களின் விலையினை 500 மில்லியனாக நிரூபித்ததன் காரணமாகவே நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்ஷ பெரும்பான்மையை நிரூபிக்க முடியா…

  13. யாழ்.சுன்னாகத்தில் பெற்றோல் குண்டு வீச்சு! சுன்னாகம் பிரதேசத்தில் இயங்கி வந்த உடற்பயிற்சி நிலையம் ஒன்றின் மீது பெற்றோல் குண்டு வீச்சுத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. சுன்னாகம் கே.கே.எஸ் வீதியில் உள்ள தனியார் காணி ஒன்றில் பொலிஸ் நிலையத்தை மாற்றுவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வந்த நிலையிலேயே இன்று (திங்கட்கிழமை) மாலை குறித்த தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளது. குறித்த வளாகத்துக்குள் புகுந்த 10 பேர் கொண்ட கும்பல், அங்கு இயங்கி வந்த உடற்பயிற்சி (ஜிம்) நிலையத்தை அடித்துச் சேதப்படுத்தியதுடன், பெற்றோல் குண்டுகளை வீசி, தீவைத்து எரித்து அடாவடியில் ஈடுபட்டுள்ளதாக அப்பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர். இச்சம்பவத்தினால் அங்கு தீப்பிடித்ததையடுத்து, யாழ்ப்பாணம் மாந…

  14. (ஆர்.யசி) மஹிந்தவின் அரசாங்கத்திற்கு பெரும்பான்மையை நிரூபிக்க அமைச்சர்களுக்கு கோடிக்கணக்கில் விலை பேசப்பட்டது, விலையை அதிகரித்தமையே மஹிந்தவினால் பெரும்பான்மையை நிரூபிக்க முடியாது போனது என்பதை கூறியதன் மூலம் தான் குற்றவாளி என்பதை ஜனாதிபதி ஒப்புக்கொண்டதுடன் மஹிந்தவையும் காட்டிக் கொடுத்துவிட்டார் என மக்கள் விடுதலை முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் விஜத ஹேரத் தெரிவித்தார். மக்கள் விடுதலை முன்னணியின் தலைமைக் காரியாலயத்தில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனை குறிப்பிட்டார். அங்கு அவர் மேலும் கூறுகையில், 19 ஆம் திரு…

  15. (நா.தனுஜா) சர்வதேச மனித உரிமைகள் தினத்தை முன்னிட்டு அரசியல் கைதிகள் விடுதலைக்கான தேசிய இயக்கம், இனவாத குடியேற்றங்களுக்கு எதிரான இயக்கம் மற்றும் சமவுரிமை இயக்கம் என்பன இணைந்து பொதுமக்களைத் திரட்டி அரசியல் கைதிகள் விடுதலை, காணி விடுவிப்பு, அரசியல் தீர்வு, தோட்டத்தொழிலாளர் சம்பள உயர்வு, இனங்களுக்கு இடையிலான சமத்துவம் உள்ளிட்ட பல்வேறு விடயங்களை வலியுறுத்தி இன்று திங்கட்கிழமை கோட்டை புகையிரத நிலையத்திற்கு முன்பாக பாரிய ஆர்ப்பாட்டத்தினை முன்னெடுத்திருந்தனர். மேற்படி ஆர்ப்பாட்டத்தில் பல்வேறு சிவில் சமூக அமைப்புக்களின் பிரதிநிதிகளுடன், ஏராளமான பொதுமக்கள் பங்கெடுத்திருந்தனர். மேலும் முல்லைத்தீவு மாவட்டத்தில் கே…

  16. குளோபல் தமிழ்ச் செய்தியாளர்… முல்லைத்தீவு மாவட்டத்தில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களது உறவுகள் தமது பிள்ளைகளை தேடி கடந்த வருடம் மார்ச் மாதம் எட்டாம் திகதி ஆரம்பித்த தொடர் கவனயீர்ப்பு போராட்டம் இன்று 643 ஆவது நாளாகவும் முல்லைத்தீவில் தொடர்கிறது சர்வதேச மனித உரிமைகள் நாளான இன்று 10.12.18 அன்று வடக்கில் உள்ள ஜந்து மாவட்டத்தினை சேர்ந்த வலிந்து காhணாமல் ஆக்கப்பட்டவர்கள் முல்லைத்தீவில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றினை முன்னெடுத்துள்ளார்கள். யாழ்ப்பாணம்,கிளிநொச்சி,மன்னார்,வவுனியா,முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள…

  17. குளோபல் தமிழ்ச் செய்தியாளர்… யாழ்.மாவட்டத்தில் வழங்கப்படவுள்ள வீட்டுத் திட்டத்தில் அரசியல் சிபாரிசுகளை கணக்கில் எடுக்காது பாதிக்கப்பட்ட குடும்பங்கள் என உறுதி செய்யப்பட்டவர்களுக்கே வீட்டு திட்டம் வழங்கப்படும் . என யாழ் மாவட்டச் செயலாளர் நா.வேதநாயகன் தெரிவித்தார். யாழ். மாவட்டத்தில் அரசியல் கட்சி அலுவலகங்களில் வீட்டுத் திட்டம் தொடர்பில் பதிவுகளை மேற்கொண்டு வருகின்றனர். என குற்றசாட்டுக்கள் எழுந்துள்ள நிலையில் அது தொடர்பில் மாவட்டச் செயலாளரிடம் கேட்டபோதே அவ்வாறு தெரிவித்தார். அது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில் , யாழில் வ…

  18. குளோபல் தமிழ்ச் செய்தியாளர்.. இரணைமடு குளத்தில் காணப்பட்ட இலங்கையின் முதலாவது பிரதமர் டி.எஸ. சேனநாயக்கவின் நினைவுகல்லை மீளவும் அதே பகுதியில் வைப்பதற்கு நீர்பாசண திணைக்களம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. இரணைமடு குளத்தின் அபிவிருத்தி பணிகள் இடம்பெற்றிருந்த வேளை அதன் நிறைவுக்காக குளத்தின் சுற்றுவட்டம் அழகுபடுத்தும் பணிகள் இடம்பெற்று வந்தன. இந்த நிலையில் குறித்த நினைவுகல் அமைந்திருந்த பகுதியும் பக்குவமாக அகற்றப்பட்டு அந்த பகுதியில் சுற்றுவட்டம் ஒன்றும் அமைக்கப்பட்டது. இந்த நிலையில் குறித்த சுற்றுவட்டம் அமைந்திருந்த பகுதியில் குறித்த நினைவு கல்லையும், புதிய நினைவு கல்லையும் அமைப்பதற்கான பணிகள…

  19. குளோபல் தமிழ் செய்தியாளர் நாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடியை எழு நாட்களுக்குள் தீர்வு காணப்படும் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்திருந்தார். கடந்த 4ஆம் திகதி சுகததாஸ உள்ளக விளையாட்டரங்கில் நடைபெற்ற ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியின் விஷேட மாநாடிலேயே ஜனாதிபதி இவ்வாறு கால அவகாசத்தைக் கோரியிருந்தார். ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்து, நாளை 11ஆம் திகதியுடன் ஏழு நாட்கள் நிறைவடைகின்றது. இலங்கையில் ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடி காரணமாக பிரதமர் பதவி வெற்றிடமாக காணப்படுவதுடன் நாட்டில் அமைச்சரவை ஒன்றும் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. இலங்கையின் வரலாற்றில்…

  20. தீர்ப்புக்காக காத்திருக்கும் அனைத்துலக நிதி நிறுவனங்கள் – சீனாவும் கைவிரிப்பு அரசியல் நெருக்கடிகளால், சிறிலங்காவுக்கு கடன் வழங்க இணங்கிய பல அனைத்துலக நிதி நிறுவனங்கள், தமது முடிவுகளை இடைநிறுத்தி வைத்துள்ளதாக தகவல்கள். வெளியாகியுள்ளன. தற்போதைய அரசியல் இழுபறிகளால், சட்டரீதியான அரசாங்கம் தொடர்பான கேள்விகள் எழுந்துள்ளன. இதனால் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு வெளியாகும் வரை, தமது கடன்கள் தொடர்பான முடிவுகளை எடுப்பதை அனைத்துலக நிதி நிறுவனங்கள், நிறுத்தி வைத்துள்ளன. சிறிலங்கா அரசாங்கம் வரும் ஜனவரி தொடக்கம் ஏப்ரல் மாதத்துக்கிடையில், 1.5 பில்லியன் டொலர் கடனை திருப்பிச் செலுத்த வேண்டிய நிலையில் உள்ளது. இதில் 1 பில்லியன் டொல…

  21. கொழும்பில் துப்பாக்கிச் சூடு: பெண் ஒருவர் உட்பட ஐவர் படுகாயம் கொழும்பு – மட்டக்குளி பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் பெண் ஒருவர் உட்பட ஐவர் காயமடைந்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் றுவான் குணசேகர தெரிவித்துள்ளார். இச்சம்பத்தில் படுகாயமடைந்த ஐவரும் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் மேலும் தெரிவித்துள்ளார். மோட்டார் சைக்கிளில் பயணித்த இரு ஆயுததாரிகளே முச்சக்கரவண்டி ஒன்றின் மீது குறித்த துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்டுவிட்டு தப்பி சென்றுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் தெரிவித்துள்ளார். இந்நிலையில், சம்பவம் தொடர்பில் முழுமையான விசாரணைகளை மேற்கொண்டுள்ளதாகவும், துப்பாக்கிப் பிரயோகத்தினை மேற்கொண்டவர்களை அடையாளம் …

  22. ஜனாதிபதியின் மனோநிலையினை பரிசோதனைக்கு உள்ளாக்க உத்தரவிடுமாறி கோரி மேல்முறையீட்டு நீதிமன்றில் புதிய மனு ஒன்று இன்று தாக்கல் செய்யப் பட்டுள்ளது. IGP, கோட்டை போலீஸ் OIC இருவரும், கொழும்பு மாவட்ட நீதிமன்றுக்கு சென்று, மனநல சட்ட இரண்டாம் பிரிவின் கீழ் இது தொடர்பில் உத்தரவினை பெற, உத்தரவு விடுமாறு இந்த மனு கோருகின்றது. இலங்கை அரசியல் அமைப்பின் பிரகாரம், பதவியில் உள்ள ஜனாதிபதி, தானாக ராஜினாமா செய்தாலோ, இறந்தாலோ, பாராளுமனறத்தினால் பதவி இறக்கப் பட்டாலோ அல்லது மனநிலை பாதிக்கப் பட்டாலோ, ஜனாதிபதி பதவி காலியாகும். இந்த வகையில், இந்த மனு அரசியல் அமைப்புக்கு அமைவானதும் சட்ட ரீதியானதுமாகவும் என்பது முக்கியமானது. தக்சிலா ஜெயவர்த்தனே என்ற பெண்ணே இந்த மனுவை தாக்கல…

  23. ஜனாதிபதி ஊடகப்பிரிவின் அழுத்தத்தினால், சிறிசேனவின் சர்ச்சைக்குரிய வீடியோ நீக்கம்? December 10, 2018 ஜனாதிபதி ஊடக பிரிவின் கடும் அழுத்தம் காரணமாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் சர்ச்சைக்குரிய கருத்துக்கள் உள்ளடங்கிய வீடியோவை கொழும்பு ஊடகமொன்று அகற்றியுள்ளதென கொழும்பு டெலிகிராவ் தெரிவித்துள்ளது. பாராளுமன்ற உறுப்பினர்களின் விலை அதிகமானதன் காரணமாகவே மகிந்த ராஜபக்ஸவினால் பெரும்பான்மையை காண்பிக்க முடியவில்லை எனவும் சில பாராளுமன்ற உறுப்பினர்கள் கட்சி தாவுவதற்கு 500 மில்லியன்வரை கோரினர் எனவும் ஜனாதிபதி குறிப்பிட்ட ஊடகத்திற்கு தெரிவித்திருந்தார். இவ்வாறான நிலைமைகள் குறித்து தனக்கு நன்கு தெரியும் எடினவும் இதன் காரணமாகவே மகிந்தவினால் பெரும்பான்மையை நிரு…

  24. முன்னணியின் கோரிக்கை பேரவையால் நிராகரிப்பு December 10, 2018 தமிழ் மக்கள் பேரவையில் இருந்து ஈ.பீ.ஆர்.எல்.எப். மற்றும் புளொட் அமைப்புக்களை வெளியேற்ற வேண்டுமென தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி விடுத்த கோரிக்கையை தமிழ் மக்கள் பேரவை நிராகரித்துள்ளது. குறித்த இரு கட்சிகளும் பேரவையில் தொடர்ந்தும் இருக்கலாமென தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தமிழ் மக்கள் பேரவையின் இணைத் தலைவர்களில் ஒருவரும் முன்னாள் முதலமைச்சருமான சீ.வீ.விக்கினேஸ்வரன் குறிப்பிட்டுள்ளார். நேற்று ஞாயிற்றுக்கிழமை யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள பேரவையின் தலைமை அலுவலகத்தில் இடம்பெற்ற தமிழ் மக்கள் பேரவையின் கூட்டத்தின் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த போதே சீ.வீ. விக்கினேஸ்வரன் இவ்விடயத்தினைக் கு…

  25. ரணில் – மகிந்த – இரண்டு மனுக்கள் ஜனவரியில் விசாரணை – தம்பர அமில தேரரின் மனு ஒத்திவைப்பு…. December 10, 2018 ரணில் விக்ரமசிங்கவை பிரதமர் பதவியில் இருந்து நீக்கி விட்டு மகிந்த ராஜபக்ஸவை பிரதமராக நியமிப்பதற்கு ஜனாதிபதி எடுத்த தீர்மானம் சட்ட விரோதமானது என தெரிவித்து தாக்கல் செய்யப்பட்ட இரு மனுக்கள் ஜனவரி மாதம் 7 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ள உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதேவேளை ரணில் விக்கிரமசிங்கவை பிரதமர் பதவியிலிருந்து நீக்கியமைக்கெதிராக தம்பர அமில ரேரர் தாக்கல் செய்திருந்த அடிப்படை உரிமை மனு மீதான விசாரணை, எதிர்வரும் ஜனவரி 7 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது http://globaltamilnews.net/2018/106206/

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.