ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143283 topics in this forum
-
December 9, 2018 ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஸ ஆகியோரை கொலை செய்ய சதி செய்யும் விதமாக தொலைபேசியில் பயங்கரவாத புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பிரதிப் காவற்துறைமா மா அதிபர் நாலக சில்வாவும், காவற்துறை உளவாளி நாமல் குமாரவும் கலந்துரையாடப்பட்டதாக கூறப்படும் விடயங்கள் நாமல் குமாரவின் தொலைபேசியில் இருந்து அழிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படும் நிலையில் அவ் ஒலிப்பதிவுகளை மீள பெற்றுக்கொள்வதற்காக குழு ஒன்று ஹொங்கொங் சென்றுள்ளது. இந்த குழுவில் குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் இருவர் உட்பட அரச இராசயன பகுப்பாய்வாளர் ஒருவரும் சென்றுள்…
-
- 0 replies
- 296 views
-
-
குளோபல் தமிழ்ச் செய்தியாளர் மன்னார் நானாட்டான் பிரதேசச் செயலாளர் பிரிவுக்குற்பட்ட சில கிராமங்களினுள் கழிவு நீருடன் கடல் நீரும் சேர்ந்து உட் செல்லுவதாக பாதிக்கப்பட்ட பிரதேச மக்கள் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதனிடம் முறையிட்டுள்ளனர். மக்களின் முறைப்பாட்டை தொடர்ந்து பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் இன்று ஞாயிற்றுக்கிழமை (9) காலை குறித்த பகுதிக்குச் சென்று கலந்துரையாடலில் ஈடுபட்டுள்ளார். இந்த கலந்துரையாடலின் போது அச்சங்குளம் பகுதியில் கழிவு நீருடன் கடல் நீரும் சேர்ந்து மக்கள் குடியிறுப்பு பகுதிக்குள் வருவதாக அப்பகுதி மக்கள் பாராளுமன்ற உறுப்பினரிடம் முறைப்பாடு செய்துள்ளனர். …
-
- 0 replies
- 111 views
-
-
ரணில் அரசால் இராணுவத்தினர் பாதிக்கப்பட்டதன் விளைவே வவுணதீவு சம்பவம் : December 9, 2018 புலம்பெயர் புலி ஆதரவாளர்களின் தேவையை நிறைவேற்றறுவதற்கு, புதிய அரசியலமைப்பை உருவாக்குவதற்காக, ரணில் தரப்பினர் மீண்டும் ஆட்சிக்கு வர முயல்வதாக முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். முப்பது வருடங்களாக நாட்டில் பாரிய யுத்தம் இடம்பெற்று நாடு பாரிய சவால்களுக்கு உள்ளாகிய போதும் அன்று நாட்டில் ஸ்திரமான அரசாங்கங்கள் இருந்ததாகவும் இதனாலேயே அபிவிருத்தியோடு, யுத்தத்தை முடிவுக்குக் கொண்டுவரவும் முடிந்தது எனவும் அவர் தெரிவித்துள்ளார். ரணில் விக்கிரமசிங்கவின் அரசாங்கம் கொண்டுவந்த 19 ஆவது திருத்தச்சட்டத்தின் ஊடாக நாடு பாதிக்கப்பட்டுள்ளதாகவும் நாட்…
-
- 0 replies
- 154 views
-
-
தி.பிரகாஸின் உறுப்புரிமை நீக்கம் December 9, 2018 குளோபல் தமிழ்ச் செய்தியாளர் வலி.தெற்கு பிரதேச சபைக்கு தெரிவான தி.பிரகாஸின் உறுப்புரிமை வறிதாக்கப்பட்டுள்ளதாக யாழ்.மாவட்ட தேர்தல் அலுவலகம் அறிவித்துள்ளது. இலங்கை தமிழரசு கட்சி சார்பில் கடந்த உள்ளூராட்சி மன்ற தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்று தி.பிரகாஸ் வலி.தெற்கு பிரதேச சபை உறுப்பினராக தெரிவானார். அதன் பின்னர் சபையில் தவிசாளர் தெரிவின் போது அவர் சார்பான தமிழரசு கட்சியின் முடிவுகளை மீறி செயற்பட்டார் என அவரை தமிழரசு கட்சியில் இருந்து நீக்கி , அவரது சபை உறுப்பினர் பதவியை வறிதாக்க வேண்டும் என தேர்தல் அலுவலகத்திற்கு தமிழரசு கட்சியின் செயலாளர் அறிவித்திருந்தார். அந்நிலையில் தன்னை உறுப்பினர் பதவ…
-
- 0 replies
- 126 views
-
-
வடக்கு கிழக்கு இணைப்பு சாத்தியமே: முன்னாள் முதல்வர் விக்னேஸ்வரன் உங்கள் கருத்து தவறானது. தமிழ் மக்கள் கூட்டணி என்பது தமிழ் மக்கள் பேரவையின் ஒரு அலகோ அல்லது பரிமானமோ அல்ல, நிறுவன மயப்படுத்தப்பட்ட செயற்பாடுகளை மேற்கொள்ளும் போது நிச்சயமாக மாற்றங்களை செய்யமுடியும், நாம் எல்லாவற்றையும் முயற்சித்து விட்டோம். இனி செய்வதற்கு ஒன்றும் இல்லை என்று கூறுவது தவறு, மக்களின் ஆலோசனைகளும் பங்குபற்றுதலுமே உண்மையான பலமாகும், உண்மைக்கு பலம் அதிகம். அதனால் தான் சிங்கள அரசியல்வாதிகள் தமது மக்களை இன்னமும் இருட்டில் வைத்திருக்கிறார்கள், அரசாங்கம் வடக்கு கிழக்கில் அபிவிருத்தி பற்றி கதைப்பது முதலை கண்ணீர் வடிக்கும் செயல் , நாம் அரசியல் ரீதியாக பலம் பெறும் போது இது மீண்டும் சாத்தியமாகும் என்…
-
- 0 replies
- 186 views
-
-
காணாமல் போனோர் அலுவலக செயற்பாடு குன்றிப்போனது! நாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடி நிலை காரணமாக காணாமல் போனவர்கள் தொடர்பான அலுவலகத்தின் செயற்பாடுகள் குன்றிப்போயுள்ளன. இதன் காரணமாக காணாமல் போனவர்களின் குடும்பங்களுடனான திட்டமிடப்பட்ட கூட்டங்கள் எதுவும் நடத்தப்படவில்லை இல்லை என காணாமல் போனவர்கள் தொடர்பான அலுவலகத்தின் உறுப்பினர் மிராக் ரஹீம் ஆங்கில பத்திரிக்கை ஒன்றுக்கு தெரிவித்துள்ளார். அத்தோடு காணாமல் போனோர் அலுவலகத்தின் தலைவர் ஜனாதிபதி சட்டத்தரணி சாலிய பீரிஸ், கடந்த 2018 ஆம் ஆண்டு மாசி மாதம் மற்றும் அதன் பின்னர் காணாமல் போனவர்களின் குடும்பங்களுடன், குறிப்பாக வடக்கு, கிழக்கில் மற்றும் கொழும்பில் சந்தித்தது கலந்துரையாடினர். இதன் பின்னர் கடந்த செப்டம்பர்…
-
- 1 reply
- 189 views
-
-
அம்பாரை கல்முனை - வரலாற்று பிரசித்தி பெற்ற தரவை பிள்ளையார் ஆலயத்திற்கு அருகாமையில் ஆலயத்தையும் அதனை அண்டிய இந்துகள் வாழும் கல்முனை நகரில் கழிவுகளால் வேறு இடங்களுக்கு இடம்பெயரும் அவல நிலையில் மக்கள் இருக்கின்றனர். ஆலயத்தை அண்டிய பகுதிகள் மாட்டு எலும்புகளையும், கழிவுகளையும் குப்பைகளையும் கொட்டும் இடமாக கரவாகு கண்ட விவசாய பாதையை அண்டிய தரவை பிள்ளையார் ஆலய தீர்த்த குளக்கரை காணப்படுகிறது. இது குறித்து பிரதேச மக்கள் கருத்து தெரிவிக்கையில்.. ஆலயத்திற்கு வரும்போது அசிங்கமான துர்நாற்றம் வீசுகின்றது மனதை ஒருநிலைபடுத்தி வளிபாடு செய்யமுடியவில்லை. தினமும் தூர்நாற்றத்தை போக்க சாம்பிராணி இட்டால்தான் ஆலயத்தினுள் இருக்கவேண்டியுள்ளதாக தெரிவித்தார். மாநகரசபை …
-
- 0 replies
- 173 views
-
-
பாராளுமன்ற நம்பிக்கைப் பெரும்பான்மை ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரான ரணில் விக்கிரமசிங்கவுக்கே உள்ளது என்ற பிரேரணையை புதன்கிழமை கொண்டு வருவதற்கு அக்கட்சி தீவிர முயற்சி எடுத்துள்ள நிலையில் அதற்கு ஆதரவு அளிப்பதா? இல்லையா? என்ற தீர்மானத்தைக் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாளை மறுதினம் எடுக்கவுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப்பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் எம்.பி. தெரிவித்துள்ளார். http://www.virakesari.lk/article/46025
-
- 0 replies
- 133 views
-
-
சிறிலங்கா நிலவரம்: அமெரிக்கா, இந்தியா உயர்மட்ட ஆலோசனை சிறிலங்காவின் தற்போதைய அரசியல் நிலவரங்கள் தொடர்பாக இந்தியாவும், அமெரிக்காவும் உயர்மட்டப் பேச்சுக்களை நடத்தியிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தியாவின் பாதுகாப்பு அமைச்சர் நிர்மலா சீத்தாராமன், அமெரிக்காவுக்கு அதிகாரபூர்வ பயணத்தை மேற்கொண்டிருந்தார். இதன்போது, அவர் இருதரப்பு பாதுகாப்பு ஒத்துழைப்பு தொடர்பாக அமெரிக்க பாதுகாப்பு அமைச்சர் ஜேம்ஸ் மாட்டிஸ் உள்ளிட்ட உயர்மட்ட தலைவர்கள் மற்றும் அதிகாரிகளைச் சந்தித்துப் பேச்சுக்களை நடத்தியிருந்தார். இந்தச் சந்திப்புகளின் போது, இந்தோ- பசுபிக் பிராந்தியத்தின் தற்போதைய நிலவரம் தொடர்பாக முக்கிய கவனம் செலுத்தி ஆராயப்பட்டது. …
-
- 1 reply
- 174 views
-
-
யாழ். மாநகர சபையில் காரசார விவாதம்: தோற்கடிக்கப்பட்டது பட்ஜெட் (Video) யாழ்.மாநகர சபையில் சமர்ப்பிக்கப்பட்ட 2019 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் பெரும்பாலான உறுப்பினர்களினால் தோற்கடிக்கப்பட்டுள்ளது. யாழ்.மாநகரசபையின் அமர்வு வெள்ளிக்கிழமை(07-12-2018) காலை-10 மணியளவில் ஆரம்பமாகி இடம்பெற்றது. இதன் போது யாழ். மாநகர சபையின் 2019 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டை முதல்வர் இம்மானுவேல் ஆர்னோல்ட் சபையில் சமர்ப்பித்தார். மக்களின் அபிவிருத்தித் திட்டங்கள் உள்வாங்கப்படாமல் ஆடம்பரமான பட்ஜெட்டாக காணப்படுவதால் குறித்த பட்ஜெட்டைத் தோற்கடிக்கப்பட்டுள்ளதாக தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் உறுப்பினர்கள் சபையில் தெரிவித்தனர். எனினும், குறித்த பட…
-
- 1 reply
- 182 views
-
-
அரசியல் சதிகாரர்களைத் தண்டிக்க புதிய சட்டம் தயாரிப்பு – JVP அரசியலமைப்பு சட்டத்தை மீறி நாட்டின் ஒழுங்கமைப்பைக் குழப்பிவிடும் வகையில் சதிகார நடவடிக்கையில் ஈடுபடுவோருக்கு தண்டனையைப் பெற்றுக் கொடுக்கும் வகையிலான ஆணைக்குழுவொன்றை அமைக்கும் பிரேரணையொன்றை பாராளுமன்றத்தில் முன்வைக்கவுள்ளதாக மக்கள் விடுதலை முன்னணி தயாராகி வருகின்றது. அரசியல் சதி நடவடிக்கையில் ஈடுபட்டோர் மற்றும் அதற்கு சம்பந்தமுடையோர் ஆகியோரை சட்டத்தின் முன் கொண்டு வந்து தண்டனை வழங்கும் விதமாக தனிப்பட்ட பாராளுமன்ற உறுப்பினரது பிரேரணையாக இந்த சட்ட மூலம் முன்வைக்கப்படவுள்ளதாக அக்கட்சியின் பிரச்சார செயலாளர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். கொள்கையளவிலாவது நாட்டின் நீதிக்கும் ஒழுங்கமைப்…
-
- 0 replies
- 95 views
-
-
மொட்டு – கை கூட்டணியில் இழுபறி சிறிலங்கா சுதந்திரக் கட்சியும், சிறிலங்கா பொதுஜன முன்னணியும் இணைந்து, எதிர்வரும் தேர்தல்களில் போட்டியிடுவது குறித்து பேச்சுக்களை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்து, சிறிலங்கா சுதந்திரக் கட்சியின், செயற்குழுக் கூட்டத்திலும் ஆராயப்பட்டுள்ளது. இந்தக் கூட்டத்துக்குப் பின்னர் கருத்து வெளியிட்ட சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய குழு உறுப்பினர்கள் பலர், பொதுஜன முன்னணியுடன் இணைந்து போட்டியிடுவதற்கு சாதகமான கருத்துக்களை வெளியிட்டுள்ளனர். எனினும், இது குறித்து இன்னமும் எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என்று, ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பொதுச்செயலர் மகிந்த அமரவீர தெரிவித்துள்ளார…
-
- 0 replies
- 221 views
-
-
அமைதிவேண்டி நடத்தப்படும் ஆர்ப்பாட்டத்தின் பின்னணி என்ன? மட்டக்களப்பு வவுணதீவு பகுதியில் இரண்டு பொலீசார் படுகொலைசெய்யப்பட்டதன் பின்னர் வடக்கில் யாழ்ப்பாணம்,கிளிநொச்சி,முல்லைத்தீவு,வவுனியா மாவட்டங்களில் ஒட்டப்பட்டுள்ள சுவரொட்டிகளும்,அமைதிவேண்டி நடத்தப்படும் ஆர்ப்பாட்டங்களின் பின்னணி என்ன என்ற கேள்வி தமிழ்மக்கள் மத்தியில் எழுந்துள்ளது. மாவட்டங்களில் சிவில்,சமூக அமைப்புக்கள் பல இருந்தும் மக்கள் என்ற போர்வையில் பலரை அழைத்து சமாதானம் வேண்டியும் பயங்கரவாத்திற்கு எதிரான கருத்துக்களை தெரிவித்தும் ஆர்ப்பாட்டங்கள் பேரணிகள் நடைபெற்றுள்ளன இதன் பின்னணி என்ன? என்ற கேள்வி மக்கள் மற்றும் சமூகஆர்வலர்கள் மத்தியில் எழுந்துள்ளது. போரால் பாதி…
-
- 1 reply
- 207 views
-
-
எம்.பிக்களுக்கு மகிந்த இலஞ்சம் கொடுக்க முனைந்தார் – மைத்திரி ஒப்புதல் தான் நியமித்த பிரதமர் மகிந்த ராஜபக்ச, நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை பலத்தை நிரூபிப்பதற்கு, நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு இலஞ்சம் வழங்க முற்பட்டார் என்பதை, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன ஒப்புக் கொண்டுள்ளார். கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். “மகிந்த ராஜபக்சவுக்கு ஆதரவு அளிப்பதற்கு சிலர், 500 மில்லியன் ரூபா கேட்டார்கள். நாடாளுமன்ற உறுப்பினர்களால் கோரப்பட்ட அதிகளவு விலையை செலுத்த முடியாததால் தான், மகிந்த ராஜபக்சவினால், பெரும்பான்மையை பெற முடியவில்லை. இல்லாவிட்டால், அவரால் பெரும்பான்மையைப் பெற்றிருக்க ம…
-
- 0 replies
- 214 views
-
-
ஐ.நாவில் அமெரிக்காவின் பிரேரணை – பதுங்கியது சிறிலங்கா பலஸ்தீனத்தின் ஹமாஸ் அமைப்புக்கு எதிராக, ஐ.நா பொதுச்சபையில் அமெரிக்கா கொண்டு வந்த தீர்மானத்துக்கு எதிராக வாக்களிக்காமல் நழுவியுள்ளது சிறிலங்கா. ஹமாஸ் அமைப்புக்கு கண்டனம் தெரிவிக்கும் தீர்மானம் ஒன்றை ஐ.நா பொதுச்சபையில் அமெரிக்கா கொண்டு வந்தது. இந்த தீர்மானம் போதிய ஆதரவு கிடைக்காததால் தோல்வியடைந்தது. பொதுச்சபையின், 86 நாடுகள் தீர்மானத்தை ஆதரித்தன. 57 நாடுகள் எதிர்த்து வாக்களித்தன. அதேவேளை, இந்தியா, சிறிலங்கா உள்ளிட்ட 33 நாடுகள் வாக்களிக்காமல் நடுநிலை வகித்தன. இந்த தீர்மானத்துக்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலம் இல்லாததால் தோல்வியடைந்தது. பலஸ்தீனத்தை நட்பு நாடு …
-
- 0 replies
- 175 views
-
-
மகிந்தவுக்கு முடி சூட்டுவதிலேயே ஆர்வம் – மாற்று வியூகம் வகுக்கும் மைத்திரி நாடாளுமன்றத்தைக் கலைக்கும் சிறிலங்கா அதிபரின் அரசிதழ் அறிவிப்புக்கு எதிரான அடிப்படை உரிமை மனுக்கள் மீதான தீர்ப்பு இந்த வாரம் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், மகிந்த ராஜபக்ச தலைமையில் மீண்டும் புதிய அரசாங்கத்தை அமைப்பதற்கான மாற்று ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு, நாடாளுமன்ற கலைப்புக்கு சாதகமாக வந்தால், அடுத்த பொதுத்தேர்தல் வரை மகிந்த ராஜபச்சவை பிரதமராக கொண்ட புதிய இடைக்கால அரசாங்கம் ஒன்றை சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன நியமிப்பார் என்று கூறப்படுகிறது. அதேவேளை, அரசிதழ் அறிவிப்புக்கு எதி…
-
- 0 replies
- 91 views
-
-
இரண்டு மாவீரர்களின் தந்தையின் இன்றைய நிலை!!
-
- 0 replies
- 116 views
-
-
December 7, 2018 புதிய சமஷ்டி முறை பிரிவினை அரசியலமைப்பு வருவதை தடுக்கவே, தான் ஆட்சியை கைப்பற்றியதாக மஹிந்த கூறுவது தந்திரமான போலித்தனமும், கேலித்தனமும் நிறைந்த கட்டுக்கதை என தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவரும் முன்னாள் அமைச்சருமான மனோ கணேசன் தெரிவித்துள்ளார். இவ்வாறு கூறுவதன் மூலம் மஹிந்த ராஜபக்சே, மாற்றி மாற்றிப் பேசி வடிவேலு போன்று செய்வதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். மகிந்த தெரிவித்த இரண்டு கருத்துக்கள் வடிவேலு நகைச்சுவை ஒன்றில் காலை ஒரு கருத்தையும் மாலை ஒரு கருத்தையும் கூறுவார். அவ்வாறு கூறிவிட்டு, அதுவேற வாய், இ…
-
- 1 reply
- 564 views
-
-
யாழில் நோயாளர்களிடம் பணம் பெற்று சத்திர சிகிச்சை – விசாரணைகள் ஆரம்பம் யாழ். போதனா வைத்தியசாலையில் நோயாளர்களிடம் பணம் பெற்று சத்திரசிகிச்சைகளை முன்னெடுத்த விவகாரம் தொடர்பில் உரிய விசாரணைகள் முன்னெடுக்கபட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் பணம் வழங்கி சிகிச்சை பெற்றுக்கொண்ட நோயாளர்களுடன் தொடர்பை ஏற்படுத்தி விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன. யாழ். போதனா வைத்தியசாலையில் தென்னிலங்கையைச் சேர்ந்த வைத்தியர் ஒருவர் அண்மைக்காலங்களில் சிறுநீரக நோயாளர்களுக்கு மேற்கொள்ளப்பட்ட சத்திரசிகிச்சைகளுக்கு பணம் பெற்றுள்ளார். குறித்த நபரினால் யாழ் போதனா வைத்தியசாலையில் பெற்றுக்கொள்ள முடியாத மருந்து ஒன்றைப் பெற்றுக்கொள்வதற்க…
-
- 10 replies
- 883 views
-
-
December 7, 2018 ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, ரணில் விக்ரமசிங்க, மஹிந்த ராஜபக்ஸ என அனைவரையும் இனவாதிகளே என்றும் இவர்களில் யார் ஆட்சிக்கு வந்தாலும் தமிழ் மக்களுக்கு நலன் கிட்டாது என்று ஜனநாயக மக்கள் காங்கிரசின் தலைவர் பிரபா கணேசன் தெரிவித்துள்ளார். ஜனநாயக மக்கள் காங்கிரசின் மன்னார் மாவட்டக் காரியாலயம் அங்குரார்ப்பண நிகழ்வில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். நல்லாட்சி என கூறிக்கொள்ளும் அரசு தமிழ் மக்களுக்கு எதனை செய்துள்ளது? என்றும் கேள்வி எழுப்பினார். சமஷ்டியை தருகின்றோம் என்றார்கள், வடக்கு கிழ…
-
- 1 reply
- 320 views
-
-
முஸ்லிம்களின் தாய்மொழியாக சிங்கள மொழியை ஏற்கவேண்டும் என பேருவளை நகர சபையில் தீர்மானம் நிறையேற்றப்பட்டுள்ளமை தொடர்பில் தனது நன்றியையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்வதாக அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார். பேருவளை நகர சபை தலைவர் மஸாஹிம் மொஹமட் அவர்களுக்கு தனது நன்றியை வெளியிட்டுள்ள வாசு தற்போது நாட்டின் இறையாண்மைக்கு ஆப்பு வைக்க சில சக்திகள் செயற்பட்டு வரும் நிலையில் அரசியலமைப்பிற்கு மதிப்பு வழங்கும் இது போன்ற செயற்பாடு நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் எனவும் முஸ்லிம்கள் சிங்கள மொழியை கற்பதில் ஆர்வம் காட்ட வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார். https://www.madawalaenews.com/2018/12/blog-post_4.html
-
- 27 replies
- 2.6k views
-
-
மஹிந்தவால் பெரும்பான்மையை பெறமுடியாததற்கான காரணத்தை வெளியிட்டார் மைத்திரி 500 மில்லியன் ரூபாய் வரை குதிரைப்பேரம் நடந்ததாலேயே மஹிந்த ராஜபக்ஷவால் நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்க முடியாமற்போனது என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு வழங்கியுள்ள செவ்வி ஒன்றிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது கருத்து வெளியிட்டுள்ள ஜனாதிபதி, ” நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான பேரம் பேசுதலில் ஏற்பட்ட விலை அதிகரிப்பாலேயே மஹிந்தவால் பெரும்பான்மையை பெறமுடியாமற்போனது. மனு கோரல் (டென்டர்) போன்று நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஏலமிடப்பட்டனர். சில உறுப்பினர்கள் 500 மில்லயன் ரூபாய் கோரியதாக எனக்கு தகவல் கிடைத்தது. மஹிந்தவுக்கு பெரும்பான்ம…
-
- 0 replies
- 119 views
-
-
1 Min Read December 8, 2018 கிழக்கு மாகாணத்தில் இராணுவத்தினர் கையகப்படுத்தியுள்ள காணிகளில் 10 ஏக்கர் காணி நாளை ஞாயிற்றுக்கிழமை விடுவிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதியின் அறிவித்தலுக்கு அமைய வடக்கு கிழக்கில் இராணுவத்தினர் வசமுள்ள காணிகள் படிப்படியா விடுவிக்கபடுவதாகவும் இதன் ஒரு கட்டமாக இந்த காணிகள் மக்களிடம் கையளிக்கப்படவுள்ளதாகவும் ஜனாதிபதி செயலகம் தெரிவித்துள்ளது இம் மாதம் 31 ஆம் திகதிக்குள் இராணுவத்தின் வசமுள்ள காணிகள் பலவற்றை விடுவிப்பதாக ஜனாதிபதி மைத்தி…
-
- 0 replies
- 108 views
-
-
குளோபல் தமிழ்ச் செய்தியாளர் வீடொன்றின் புகைக்கூடு வழியாக வீட்டுக்குள் உள்நுழைந்த திருடர்கள் வீட்டிலிருந்த தாய்,மகள் ஆகியோரது கழுத்தில் கத்தியை வைத்துக் கடுமையாக மிரட்டி வீட்டிலிருந்த 14 பவுண் தங்க நகைகள் மற்றும் 20 ஆயிரம் ரூபா பணம், துவிச்சக்கர வண்டி என்பவற்றைத் திருடிச் சென்றுள்ளனர். குறித்த சம்பவம் யாழ்.உடுப்பிட்டி கட்டைப் புளியடிப் பகுதியில் நேற்று(07) அதிகாலை இடம்பெற்றுள்ளது. வீட்டுக்குள் நுழைந்த நான்கு பேர் கொண்ட திருட்டுக் கும்பல் வீட்டில் தனித்திருந்த தாயையும்,மகளையும் கத்தி முனையில் கடுமையாக மிரட்டியுள்ளதுடன் சுமார் இரு மணித்தியாலங்களுக்கு மேலாக வீடு முழுவதும் சல்லடை போட்டும் …
-
- 0 replies
- 121 views
-
-
மகிந்த தலைமையில் புதிய கூட்டணி December 8, 2018 நாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் குழப்ப நிலையைத் தொடர்ந்து மகிந்த ராஜபக்ஸ தலைமையில் புதிய கூட்டணி ஒன்றை உருவாக்க ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் செயற்குழு கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. நேற்றையதினம் நடைபெற்ற கட்சியின் செயற்குழு கூட்டத்தில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அக்கட்சியின் பொதுச் செயலாளர் தெரிவித்துள்ளார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மற்றும் மகிந்த ராஜபக்ஸ தலைமையிலான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஆகியன இணைந்து இவ்வாறு புதிய கூட்டணி உருவாக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது மேலும் குறித்த புதிய கூட்டணி நடைபெறவுள்ள தேர்தலில…
-
- 1 reply
- 119 views
-