Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. பிரதமர் பதவிக்கு ரணில் – ஜனாதிபதி, கூட்டமைப்பிற்கு அறிவிப்பு. பிரதமர் பதவிக்கு ரணில் விக்ரமசிங்கவின் பெயரை, முன்மொழிவதாக, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும், எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தனுக்கும், ஐக்கிய தேசியக் கட்சி அறிவித்துள்ளது. ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளர் கபீர் காசிம் நேற்று (சனிக்கிழமை) இது தொடர்பாக அதிகாரபூர்வ கடிதங்களை, ஜனாதிபதிக்கும், ஜனாதிபதி எதிர்க்கட்சித் தலைவருக்கும் அனுப்பி வைத்துள்ளார். அக்கடிதத்தில் “பிரதமர் பதவிக்காக, ரணில் விக்ரமசிங்கவின் பெயரை ஐக்கிய தேசியக் கட்சி முன்மொழிவதாக, இந்தக் கடிதம் மூலம், உங்களுக்கு அறியத் தருகிறேன்” என்று அவர் குறிப்பிட்டுள்ளார். அத்துடன், எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தனுக்கு எழுதியுள்ள கட…

  2. மஹிந்த இன்று நாட்டு மக்களுக்கு விசேட அறிவிப்பு? – பதவியையும் துறக்கின்றார்! நாட்டில் அரசியல் நெருக்கடி உச்சம்தொட்டுள்ள நிலையில் பிரதமர் மஹிந்த ராஜபக்ச இன்று(ஞாயிற்றுக்கிழமை) விசேட அறிவிப்பொன்றை விடுக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆட்சியமைப்பதற்குரிய பெரும்பான்மை பலத்தை (113) ஐக்கிய தேசியக்கட்சி தலைமையிலான ஐக்கிய தேசிய முன்னணி உறுதிப்படுத்தியுள்ளதால் பிரதமர் பதவியை துறக்கும் முடிவையே மஹிந்த அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகின்றது. நவம்பர் 26 ஆம் திகதி முதல் டிசம்பர் முதலாம் திகதிவரை நடைபெற்ற அரசியல் நிகழ்வுகள் தொடர்பில் நாட்டு மக்களுக்கு தெளிவுபடுத்தவுள்ள மஹிந்த, பொதுத்தேர்தலை உடனடியாக நடத்துவதற்குரிய வலியுறுத்தலை விடுப்பார் என தகவல்கள் வெளியாகியுள்ளன. …

  3. மஹிந்தவிற்கு எதிராக 5ஆம் திகதி மீண்டும் ஒரு நம்பிக்கையில்லா பிரேரணை – ஜனாதிபதியிடம் கூறிய கூட்டமைப்பு (2ஆம் இணைப்பு) நாடாளுமன்றத்தில் மஹிந்தவுக்கு பெரும்பான்மை இல்லை என்ற எங்களின் வாதத்தை ஜனாதிபதி ஏற்றுக் கொண்டார் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவமோகன் தெரிவித்துள்ளார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கும், தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கும் இடையில் இன்று(வெள்ளிக்கிழமை) மாலை ஜனாதிபதி செயலகத்தில் விசேட சந்திப்பொன்று இடம்பெற்றிருந்தது. இந்தநிலையில் குறித்த சந்திப்பின் நிறைவில் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போதே சிவமோகன் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். இதன்போது கருத்து வெளியிட்டுள்ள அவர்,“ஐக்கிய தேசிய முன்னணி பெயரிடும் பிரதமர் ஒருவரை ந…

    • 6 replies
    • 751 views
  4. November 30, 2018 மட்டக்களப்பு – வவுணதீவில் இரண்டு காவற்துறையினர் கொல்லப்பட்டமையின் பின்னணியில் கருணா அம்மான் எனப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் செயற்பட்டிருக்கலாமென, பாராளுமன்ற உறுப்பினர்கள் நளின் பண்டார மற்றும் சுமந்திரன் ஆகியோர் பாராளுமன்றில் குற்றச்சாட்டொன்றை முன்வைத்து கேள்வியெழுப்பியுள்ளனர். இன்றைய பாராளுமன்ற அமர்வில் அமைச்சுக்களுக்கான நிதி ஒதுக்கீட்டை ரத்து செய்யக் கோரும் பிரேரணை மீதான விவாதத்தில் கலந்து கொண்டு கருத்து வெளியிட்ட நளின் பண்டார, மட்டக்களப்பு – வவுணதீவு பொலிஸ் வீதி சோதனைச் சாவடியில் கடமையில் இருந்த இரண்டு பொலிஸ் அதிகாரிகள் இனந்தெரியாதோரின் துப்பாக்கி சூட்டுக…

    • 5 replies
    • 754 views
  5. வெடுக்குநாறி மலையைப் பாதுகாக்க நடவடிக்கை ;டக்ளஸ் தொன்மைவாய்ந்த வெடுக்குநாறி மலை ஆதி கோணேஸ்வரர் ஆலயத்தைப் புனரமைப்பதுடன் அங்கே மகா சிவராத்திரியை அனுஷ்டிக்கவும் தேவையான நடவடிக்கைகளை எடுக்க இந்துமத அலுவல்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நடவடிக்கை எடுத்துவருவது தொடர்பாக வேந்தர் சி. பத்மநாதன் மற்றும் இந்துமத திணைக்களப் பணிப்பாளர் உமாமகேசுவரன் ஆகியோருடன் கலந்துரையாடினார். இன்று (01) அமைச்சில் நடைபெற்ற கலந்துரையாடல்களில், வெடுக்குநாறி மலை ஆதி கோணேஸ்வரர் ஆலயத்தின் தொன்மையை பாதுகாக்கவும் அங்கே அடியார்களுக்கு வசதியாகப் படிக்கட்டுக்கள் அமைத்தல், பாதையைச் சீரமைத்தல், குழாய்க் கிணறுகளை அமைத்தல் என்பவற்றைச் செய்து சிவராத்திரி பூஜைகள் சிறப்பாக நடைபெறுவதற்கான ஏற்பாடுகளைச் செய்…

  6. மஹிந்தவை நீக்கமாட்டார், ரணிலை ஒருபோதும் ஏற்றுக்கொள்ளமாட்டார் -அரசாங்க பேச்சாளர் (எம்.மனோசித்ரா) மஹிந்த ராஜபக்ஷவை பிரதமர் பதவியிலிருந்து நீக்கிவிட்டு மீண்டும் ரணில் விக்ரமசிங்கவை பிரதமராக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, ஒரு போதும் நியமிக்கமாட்டார். காரணம் ரணில் விக்ரமசிங்கவுடன் தொடர்ந்தும் பயணிக்க முடியாததன் காரணமாகவே ஜனாதிபதி தனக்குள்ள நிறைவேற்றதிகாரத்தை பயன்படுத்தி அவரை பிரதமர் பதவியிலிருந்து நீக்கினார் என அரசாங்க பேச்சாளர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் ஐக்கிய தேசிய முன்னணி மற்றும் தமிழ் தேசிய கூட்டமைப்பிற்குமிடையில் நேற்று இரவு இடம்பெற்ற பேச்சு வார்த்தையின் போது மீண்டும் நம்பிக்கையில்லா பிரேரணை சமர்பிக்கப்பட்டு நி…

  7. அடுத்த இரு ஆண்டுகளில் 3 தேர்தல்கள் – மஹிந்த தேசப்பிரிய அடுத்த இரண்டு ஆண்டுகளில் மூன்று தேர்தல்கள் நடைபெறும் என தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். இரத்தினபுரி பிரதேச செயலகத்தில் நேற்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற கலந்துரையாடலில் அவர் இதனை தெரிவித்துள்ளார். அந்தவகையில் மாகாண சபைத் தேர்தல், நாடாளுமன்றத் தேர்தல் மற்றும் ஜனாதிபதித் தேர்தல் 2020 ஆம் ஆண்டு ஒக்டோபர் 31 ஆம் திகதி நிறைவு செய்யப்பட்டு, 2020 நவம்பர் 13 ஆம் திகதி தேர்தல் ஆணையத்தின் பதவி காலம் முடிவடையும் என்று சுட்டிக்காட்டினார். மேலும் எல்லை நிர்ணய அறிக்கையின் தாமதமே மாகாண சபை தேர்தல்கள் பிற்போட காரணம் எனவும் அவர் தெரிவித்துள்ளார். அத்தோடு நாடாளுமன்றம் அல்லது நீதிமன்றம் தெதா…

  8. பொலிஸ் உத்தியோகத்தர்கள் கொலை விவகாரம் – கிளிநொச்சி பொலிஸில் ஒருவர் சரண்! மட்டக்களப்பு – வவுணதீவு பகுதியில் இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் தேடப்பட்டு வந்த ஒருவர் கிளிநொச்சி பொலிஸில் சரணடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த நபர் கிளிநொச்சி பகுதியை சேர்ந்தவர் என்றும் அவர் சற்று முன்னர் பொலிஸில் சரணடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மட்டக்களப்பு மாவட்டத்தின் வவுணதீவு பகுதியில் பொலிஸ் உத்தியோகத்தர்கள் இருவர் அடையாளம் தெரியாத ஆயுததாரிகளால் இன்று அதிகாலை சுட்டுக்கொல்லப்பட்டனர். வவுணதீவு வலையிறவு பாலத்திற்கு அருகில் உள்ள பொலிஸ் சாவடியில் நேற்று இரவு பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டிருந்த இரு பொலிஸ் உத்தியோகத்தர்களே இவ…

  9. திம்பு நோக்கி திரும்புவார்களா தமிழர்கள்? அனைத்துலக வல்லரசுகள் தமது அதிகார செயல் வல்லமையை இன்னுமொரு அரசின் மீது தாம் கொண்டுள்ள செல்வாக்கின் அடிப்படையில் உறுதிப்படுத்த முயல்கின்றன. வேறு ஒரு அரசு தனது இடத்தை இட்டு நிரப்பி விட முடியாதவகையில் எப்பொழுதும் இயங்கி கொண்டிருக்கும் நிலையே அனைத்துலக உறவாக பரிணமித்துள்ளது. அரசுகளே முதன்மையானவை என்ற நியதியை கொண்ட அனைத்துலக அரசியலில் செயல் வல்லமை என்பது அந்த அரசுகளின் பரப்பளவு, அதன் சனத்தொகை , பொருளாதாரம் ஆகியவற்றுடன் இராணுவம், மற்றும் தொழில்நுட்ப அபிவிருத்தி ஆகியன தெளிவாக காணக்கூடிய முக்கிய தனிச்சிறப்பு பண்புகளாக பார்க்கப்படுகிறது. அதேவேளை அந்த அரசுகளினது அனைத்துலக ஆளுமை, அவை தமது அனைத்துலக கட்…

  10. நாடாளுமன்ற கலைப்பு அரசிதழை மீளப்பெறுகிறார் சிறிலங்கா அதிபர்? நாடாளுமன்றத்தைக் கலைத்து கடந்த மாதம் ஆம் நாள் வெளியிட்ட, சர்ச்சைக்குரிய அரசிதழ் அறிவிப்பை ரத்துச் செய்வது குறித்து சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன தீவிரமாக ஆலோசித்து வருவதாக, அதிபருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. நாடாளுமன்றக் கலைப்புக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் தொடர்பாக அளிக்கப்படும் தீர்ப்பு தமக்குப் பாதகமாக அமையக் கூடும் என்ற அச்சத்திலேயே சிறிலங்கா அதிபர் இந்த முடிவு குறித்து ஆராய்வதாக கூறப்படுகிறது. எதிர்வரும் 7ஆம் நாள் நாடாளுமன்றக் கலைப்புக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீது, உச்சநீதிமன்றம் தீர்ப்பளிக்கவுள்ளது. …

    • 0 replies
    • 496 views
  11. காவல்துறை அதிகாரத்தை மத்திய அரசுடன் பேசி வடக்கு மாகாண சபை பெற்றிருக்கலாம் : டக்ளஸ் December 1, 2018 காவல்துறை அதிகாரம் உள்ளிட்டவற்றை மத்திய அரசாங்கத்துடன் பேசி பெற்றிருக்கமுடியும் என்று மீள்குடியேற்றம் புனர்வாழ்வு மற்றும் இந்தமத அலுவல்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். தகவல் திணைக்களத்தில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின்போது ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அத்துடன் தமது கட்சியின் நிலைப்பாட்டை பல வருடங்களிற்கு முன்னதாகவே தெரிவித்ததாக குறிப்பிட்டுள்ள அவர் மாகாண சபையை நிர்வகித்தவர்கள் தமது அரசியலை தக்க வைத்துக் கொள்வதற்காகவே காலத்தை கடத்தியதாகவும் மத்திய அரசாங்கத்துடன் இது தொடர்…

  12. சுட்டுக்கொலை செய்யப்பட்ட காவல்துறையினருக்கு பதவி உயர்வு : December 1, 2018 மட்டக்களப்பு, வவுணதீவு பகுதியில் சுட்டுக்கொலை செய்யப்பட்ட காவல்துறை உத்தியோகத்தர்களுக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. காவல்துறை சார்ஜன்ட் ஆக குறித்த இரண்டு காவல்துறையினருக்கும் பதவி உயர்வு வழங்க காவல்துறை மா அதிபர் உத்தரவிட்டுள்ளார். இதேவேளை, குறித்த சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்வதற்காக காவல்துறை மா அதிபர் பூஜித் ஜயசுந்தர, குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் சிரேஷ்ட பிரதிக் காவல்துறை மா அதிபர் மற்றும் காவல்துறை ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர ஆகியோர் நேற்று மட்டக்களப்புக்குச் சென்றிருந்தனர். அத்துடன் இந்த சம்பவம் தொடர்பில் விசாரணை நடத்த குற்றப் புலனாய்வுத் திணைக்க…

  13. விக்னேஸ்வரனும் கஜேந்திரகுமாரும் ஒன்றிணைவது காலத்தின் கட்டாயம்: அனைத்துலக ஈழத்தமிழர் மக்களவை ஈழத்தமிழ் மக்களின் நலனை முன்னிறுத்தியதான கொள்கை அடிப்படையில், முன்னாள் நீதியரசரும் வடக்கு மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சருமான க.வி.விக்னேஸ்வரனும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலமும் ஒன்றிணைவது காலத்தின் கட்டாயம் என்று அனைத்துலக ஈழத்தமிழர் மக்களவை வலியுறுத்தியுள்ளது. இது தொடர்பில் அனைத்துலக ஈழத்தமிழர் மக்களவை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, ஆயுத மௌனிப்பின் பின்னரான தாயக அரசியலானது ஈழத் தமிழ் மக்களின் நலனுக்கு நேர் விரோதமான பாதையில் பயணப்பட்டு ஈற்றில் சிங்கள பௌத்த பேரினவாத நச்சு வட்டத்திற்குள் …

  14. த.தே.கூட்டமைப்பை சாடுகிறார் தவராசா தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எடுத்திருக்கும் நிலைப்பாடு இராஜதந்திரமா, அல்லது ஓர் சரணாகதி அரசியலா என்ற கேள்வியினை எழுப்பி உள்ளது என வடக்கு மாகாண சபையின் முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் சி. தவராசா தெரிவித்துள்ளார். சமகால அரசியல் தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இதனைத் தெரிவித்துள்ளார். இவ் அறிக்கையில் அவர் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, தமிழ் மக்களின் நலன்களினை முன்னிலைப்படுத்தி தமிழ்தேசியக் கூட்டமைப்பு செயற்படுவதே இன்றைய காலத்தின் தேவையாக அமைகின்றது. தற்போது இலங்கையின் அரசைத் தீர்மானிக்கின்ற சக்தியாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு விளங்குகின்றது. 15 பாராளுமன்ற உறுப்பினர்களை தன்னகத்தே கொண்டுள்ள த…

  15. சிறிலங்கா வரும் இந்திய கடலோரக் காவல்படை கப்பல்கள் இந்திய கடலோரக் காவல்படையின் இரண்டு பாரிய ரோந்துக் கப்பல்கள் ஒரு வார காலப் பயணமாக நாளை, சிறிலங்காவுக்கு வரவுள்ளன. நாளை கொழும்பு துறைமுகத்துக்கு வரும் இந்திய கடலோரக் காவல்படைக் கப்பல்கள், வரும் 7ஆம் நாள் வரை இங்கு தரித்து நிற்கும். ‘சிஜிஎஸ் சமர்’ மற்றும் ‘சிஜிஎஸ் ஆர்யமான்’ ஆகிய ரோந்துக் கப்பல்களே கொழும்பு வரவுள்ளன. இந்தக் கப்பல்கள் காலி துறைமுகத்துக்கும் பயணம் மேற்கொள்ளும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மாலைதீவில் இந்திய, சிறிலங்கா மாலைதீவு கடலோரக் காவல் படைகள் கடந்த 25 ஆம் நாள் தொடக்கம், 29ஆம் நாள் வரை ‘டோஸ்ரி’ என்ற கூட்டுப்பயிற்சியை மேற்கொண்டிருந்தன. இதில் பங்கேற்ற …

  16. நாட்டின் நன்மை கருதியே கூட்டமைப்பு தீர்மானம் எடுத்தது – சுமந்திரன் நாட்டில் தற்போது காணப்படும் அரசியல் ஸ்திரமற்ற தன்மையைக் கருத்திற் கொண்டு ஐக்கிய தேசிய முன்னனி பரிந்துரைக்கும் ஒருவருக்கு ஆட்சியமைக்க கூட்டமைப்பு ஆதரவு தெரிவிப்பதாக கூறியது. மாறாக ஐக்கிய தேசிய முன்னிக்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு ஆதரவு தெரிவிக்கவில்லை என தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்தார். ஐக்கிய தேசிய முன்னணி ஆட்சியமைப்பதற்கு ஆதரவு தெரிவித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு நேற்று (வியாழக்கிழமை) கடிதமொன்றை அனுப்பிவைத்தது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் 14 நாடாளுமன்ற உறுப்பினர்களின் கையெழுத்தோடு எழுதப்பட்டுள்ள கடிதத்தி…

  17. November 30, 2018 “வவுனியாவில் விபசாரத்தால் எச்.ஐ.வி தொற்று ஏற்படுகின்றது” என வவுனியா மாவட்ட பாலியல் நோய்தடுப்பு வைத்திய பொறுப்பதிகாரி கே.சந்திரகுமார் தெரிவித்துள்ளார். இன்று (30.11.18) வவுனியா வைத்தியசாலையில் அமைந்துள்ள பாலியல் நோய் தடுப்பு பிரிவில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே கருத்து வெளியிட்டுள்ள அவர், “உலக எயிட்ஸ் தினம் டிசெம்பர் மாதம் முதலாம் திகதி உலகம் பூராகவும் நினைவுகூரப்படுகிறது. வவுனியாவில் பாலியல் நோய் தடுப்பு பிரிவு எயிட்ஸ் விழிப்புணர்வு செயற்றிட்டத்தை முன்னெடுத்து வருகிறது. 2003 ஆம் ஆண்டு தொடக்கம் இன்று வரை வவுனியா…

  18. November 30, 2018 நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸ உள்ளிட்ட ஐவருக்கு எதிராகவும் கவர்ஸ் கோப்பரேட் சேர்வீஸ் நிறுவனத்துக்கு எதிராகவும் சட்டமா அதிபரினால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் மேலதிக சாட்சி விசாரணை ஏப்ரல் மாதம் 3 ஆம் திகதி வரையிலும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கு, கொழும்பு மேல் நீதிமன்றத்தின் நீதிபதி பிரதீப் ஹெட்டியாராச்சி முன்னிலையில் இன்று (30.11.18) விசாரணைக்கு எடுத்துகொள்ளப்பட்ட போதே, நீதிபதி மேற்கண்டவாறு உத்தரவிட்டார். முறைப்பாட்டாளர் தரப்பில் சாட்சியாளர்கள், நீதிமன்றத்தில் இன்று ஆஜராகினர். அவர்களை அனைவரும் அடுத்த வழக்கு…

  19. ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ மற்றும் அமைச்சரவைக்கு எதிராக ஐக்கிய தேசிய கட்சியால் மேன் முறையீட்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனு டிசம்பர் 03ம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ மற்றும் தற்போதைய அமைச்சரவைக்கு பதவியில் இருப்பதற்கு சட்டரீதியாக அனுமதியில்லை என்றும், அவர்களின் நியமனங்களை செல்லுபடியற்றதாக உத்தரவிடக் கோரியும் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க உள்ளிட்ட 122 பாராளுமன்ற உறுப்பினர்கள் இணைந்து அந்த மனுவை தாக்கல் செய்தனர். குறித்த மனு மேன்முறையீட்டு நீதிம…

  20. November 29, 2018 Add Comment வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் 1300 ஏக்கர் தனியார் காணி இராணுவத்தினர் வசமுள்ளதாக இலங்கை இராணுவம் தெரிவித்துள்ளது. 2015 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்திலிருந்து இதுவரையான காலப்பகுதியில் மாத்திரம் 25,000 ஏக்கர் தனியார் காணி உரிமையாளர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளதாக இலங்கை இராணுவம் குறிப்பிட்டுள்ளது. தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தாத காணிகளே இவ்வாறு உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டதாக இலங்கை இராணுவம் தெரிவித்துள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் ஆலோசனையி…

    • 2 replies
    • 433 views
  21. அட்மிரல் ரவியை வெலிக்கடைச் சிறையில் பார்வையிட்டார் மகிந்த கார்வண்ணன்Nov 30, 2018 | 2:07 by in செய்திகள் கொழும்பில் 11 பேர் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட வழக்கில், கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள, பாதுகாப்பு அதிகாரிகளின் பிரதானி அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்னவை, சிறிலங்காவின் பிரதமர் மகிந்த ராஜபக்ச சந்தித்து நலன் விசாரித்துள்ளார். மகிந்த ராஜபக்ச நேற்று, அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்ன தடுத்து வைக்கப்பட்டுள்ள வெலிக்கடைச் சிறைச்சாலைக்கு அவரைப் பார்வையிட்டுள்ளார். இதனை மகிந்த ராஜபக்சவின் ஊடகச் செயலர் றொகான் வெலிவிட்ட உறுதிப்படுத்தியுள்ளார். வெலிக்கடைச் சிறையில், அட்மிரல் விஜேகுணரத்னவை பார்வையிடச் சென்ற மகிந்த ராஜபக்ச, தண்டனைக் கைதிகள…

  22. முல்லைத்தீவு மாவட்டத்தில் கடும் மழை : மக்கள் பாதிப்பு முல்லைத்தீவு மாவட்டத்தில் கடும் மழையால் அதிகளவான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். மழையால் பாதிக்கப்பட்டவர்களுக்கான உதவிகள் தற்போது வழங்கப்பட்டு வருவதாக என முல்லைத்தீவு மாவட்ட செயலர் ரூபவதி கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார். துணுக்காய் பிரதேசத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நேற்று உதவிகள் வழங்கப்பட்டன. அவர் மேலும் தெரிவிக்கையில், முல்லைத்தீவு மாவட்டத்தில் வெள்ளப்பெருக்கில் அதிகளவானவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அனர்த்தம் ஏற்படும் போது எங்களை நாங்களே பாதுகாத்துக்கொள்ளவேண்டிய செயற்பாடுகளில் மக்கள் ஈடுபடவேண்டும். தற்காலிக வீடுகளில் இருக்கின்ற மக்கள் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்க…

  23. இன்று புதிய பிரதமரொருவர் நியமிக்கப்படுவாரா? November 30, 2018 இன்றைய தினம், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால், புதிய பிரதமரொருவர் நியமிக்கப்படுவதற்கான சாத்தியம் நிலவுவதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இதற்காக, ஐக்கிய தேசிய முன்னணியைச் சேர்ந்த மூவரின் பெயர்கள் பரிந்துரைக்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. அந்த வகையில், திலக் மாரப்பன, ரஞ்சித் மத்தும பண்டார மற்றும் ராஜித்த சேனாரத்ன ஆகியோரின் பெயர்களே, புதிய பிரதமருக்காகப் பரிந்துரைக்கப்பட்டுள்ளன என்று தெரிவிக்கப்படுகின்றது. http://globaltamilnews.net/2018/105144/

  24. அமைச்சர்கள், அரசாங்க நிதியை செலவு செய்யும் அதிகாரத்தை தடுப்பதற்கான பிரேரணை சமர்ப்பிப்பு… November 30, 2018 அமைச்சரவை அமைச்சர்கள், பிரதி அமைச்சர்கள் மற்றும் இராஜாங்க அமைச்சர்கள் அரசாங்க நிதியை செலவு செய்யும் அதிகாரத்தை வழங்காதிருப்பதற்கான பிரேரணை ஐக்கிய தேசிய முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்கவினால் பாராளுமன்றத்திற்கு சமர்பிக்கப்பட்டது. இன்று காலை 10.30 மணியளவில் பாராளுமன்றம் சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் கூடிய போதே இந்தப் பிரேரணை சமர்பிக்கப்பட்டது. அதன் பின்னர் இந்தப் பிரேரணையை பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் மத்தும பண்டார ஆமோதித்து வழிமொழிந்தார். இந்தப் பிரேரணையானது, நாடாளுமன்ற உறுப்பினர்களான, ராஜித்த சேனாரத்ன, ரவி கருணாநாய…

  25. அரசியல் குழப்பநிலைகளுக்கு மத்தியில் கூட்டமைப்பு – ஜனாதிபதி இடையே முக்கிய சந்திப்பு தமிழ் தேசிய கூட்டமைப்பு, ஐக்கிய தேசிய முன்னணிக்கு ஆதரவை வெளிப்படுத்தியுள்ள நிலையில், கூட்டமைப்புடனான சந்திப்பிற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அழைப்பு விடுத்துள்ளார். அதன்படி, தமிழ் தேசிய கூட்டமைப்பினர் ஜனாதிபதியை இன்று (வெள்ளிக்கிழமை) மாலை 6.00 மணிக்கு ஜனாதிபதி செயலகத்தில் சந்திக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கூட்டமைப்புடனான சந்திப்பை தொடர்ந்து மாலை 7 மணிக்கு ஜனாதிபதி ஐக்கிய தேசிய முன்னணியினரையும் சந்திக்கவுள்ளார். சபாநயாகர் கரு ஜயசூரிய நேற்று ஜனாதிபதியை சந்தித்திருந்த நிலையில், இதன்போது ஐக்கிய தேசிய முன்னணி மற்றும் தமிழ் தேசிய கூட்டமைப்புடன் கலந்துரையாடி உரிய தீர்வு க…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.