ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143287 topics in this forum
-
ரணில் – மஹிந்தவிற்கு இடையில் அவசர சந்திப்பு! பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிற்கும், ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவிற்கும் இடையில் தற்போது முக்கிய கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. நாடாளுமன்ற கட்டடத்தொகுதியில் குறித்த கலந்துரையாடல் இடம்பெற்று வருவதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. நாடாளுமன்றத்தில் கடந்த இரு தினங்களாக இடம்பெற்ற குழப்ப நிலை தொடர்பில் இதன்போது பேசப்பட்டு வருவதாக குறிப்பிடப்படுகின்றது. அத்துடன், நாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் குழப்பநிலை தொடர்பிலும், அதனை தீர்த்துக் கொள்வதற்குரிய நடவடிக்கைகளை முன்னெடுப்பது தொடர்பிலும் ஆராயப்பட்டு வருவதாக கூறப்படுகின்றது. இதன்போது ஏதேனும் முக்கிய இ…
-
- 0 replies
- 533 views
-
-
மூன்றாவது தடவையாக.. வாக்கெடுப்பில், மஹிந்த தோல்வி – ஹர்ஷ டி சில்வா. பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இன்றுடன் மூன்றாவது தடவையாக நம்பிக்கையில்லா பிரேரணை மீதான வாக்கெடுப்பில் தோல்வியடைந்துள்ளார் என ஹர்ஷ டீ சில்வா தெரிவித்துள்ளார். நாடாளுமன்றம் அமர்வு இன்று (வெள்ளிக்கிழமை) ஆரம்பமாவதற்கு முன்னதாக மஹிந்த ஆதரவு அணியினர் சபாநாயகர் ஆசனத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தியிருந்தனர். இதன் போது நேற்றைய அமர்வின் போது கத்தி முயற்சி செய்த பாலித தேவப்பெரும மற்றும் ரஞ்சன் ராமநாயக்கவை கைது செய்யுமாறு கோரிக்கை விடுத்திருந்தனர். இருப்பினும் ஐக்கிய தேசிய கட்சி, தமிழ் தேசிய கூட்டமைப்பினர், மக்கள் விடுதலை முன்னணியினர் தமது ஆசனத்தில் அமர்ந்திருந்தனர். தொடர்ந்தும் போராட்டத்தில் ஈடு…
-
- 1 reply
- 594 views
-
-
மஹிந்தவுக்கு எதிராக 2 வது வெற்றி Editorial / 2018 நவம்பர் 16 வெள்ளிக்கிழமை, மஹிந்த ராஜபக்ஷவுக்கு எதிராக, சபையில் முன்வைக்கப்பட்ட நம்பிக்கையில்லாப் பிரேரணையை, இரண்டாவது தடவையாக வெற்றிக்கொண்டுள்ளோம் என, நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்தார். நாடாளுமன்ற சபை நடவடிக்கைகளின் பின்னர், அங்கிருந்த வெ ளியேறிய அவர், ஊடகங்களக்கு கருத்து தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார். http://www.tamilmirror.lk/செய்திகள்/மஹிந்தவுக்கு-எதிராக-2-வது-வெற்றி/175-225368
-
- 0 replies
- 389 views
-
-
நாட்டில் ஸ்திரமான நிலையை ஏற்படுத்த முடியும் – சீனா நம்பிக்கை! இலங்கையில் தற்போது இருக்கும் அரசியல் நெருக்கடி நிலையை தீர்த்து ஸ்திரமான நிலையை ஏற்படுத்த முடியும் சீனா நம்பிக்கை வெளியிட்டுள்ளது. கடந்த நாட்களாக இலங்கையில் ஏற்பட்டிருக்கும் நெருக்கடி நிலைமை தொடர்பில் சீனாவின் வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் குவா சூனியிங் இன்று (வியாழக்கிழமை) கருத்து வெளியிட்டுள்ளார். அதில், “இலங்கையின் பாரம்பரிய அயல் நாடு என்ற அடிப்படையில் இலங்கையில் நிகழும் விடயங்களை சீனா உன்னிப்பாக அவதானித்து வருகின்றது. நாங்கள் இலங்கையால் ஸ்திரத்தன்மையை நிலை நாட்ட முடியும், தற்போதைய நெருக்கடிக்கு தீர்வை காணமுடியும் என நம்புகின்றோம்” என அவர் குறிப்பிட்டுள்ளார். http://athavan…
-
- 8 replies
- 1k views
-
-
ஐ.தே.க நாடாளுமன்ற உறுப்பினர் மீது மிளகாய்த்தூள் தாக்குதல்! ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரான காமினி ஜெயவிக்கிரம பெரேரா மீது மிளகாய்த்தூள் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அரச தரப்பினரால் இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக எமது நாடாளுமன்ற செய்தியாளர் தெரிவித்தார். அத்துடன், மக்கள் விடுதலை முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் மீதும் இவ்வாறு மிளகாய்த்தூள் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. http://athavannews.com/ஐ-தே-க-நாடாளுமன்ற-உறுப்பி-2/
-
- 0 replies
- 519 views
-
-
நாடாளுமன்றில் கடும் அமளிதுமளி – சபாநாயகர் ஆசனத்தை சூழ்ந்து குழப்பம் (3ஆம் இணைப்பு) நாடாளுமன்றில் ஆளும் மற்றும் எதிர்த்தரப்பு உறுப்பினர்களுக்கு இடையில் கடும் அமளி துமளி ஏற்பட்டுள்ளது. பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் விசேட உரை இடம்பெற்றுக்கொண்டிருந்த சந்தர்ப்பத்தில், கடந்த அரசாங்கத்தின் செயற்பாடுகளை கடுமையாக விமர்சித்தார். இதன்போது இரு தரப்பிற்கும் இடையில் கடும் வாதப் பிரதிவாதங்கள் இடம்பெற்று, இறுதியில் இரு தரப்பினரும் கைகலப்பில் ஈடுபட்டுள்ளதாக எமது நாடாளுமன்ற செய்தியாளர் தெரிவித்தார். நாடாளுமன்றம் கூடியது – மஹிந்த விசேட உரை (2ஆம் இணைப்பு) நாடாளுமன்றம் சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் இன்று மீண்டும் ஆரம்பமாகி நடைபெற்று வருகின்றது. இன்றைய அமர்வில் நாட்…
-
- 16 replies
- 1.8k views
-
-
நிறைவேற்று அதிகாரத்தை முடிவுக்கு கொண்டுவர போராடுவோம்: ரணில் நிறைவேற்று அதிகாரமுடைய ஜனாதிபதி ஆட்சி முறையை முடிவுக்கு கொண்டு வரும் வரை போராடுவதற்கு வருமாறு ஐக்கிய தேசிய கட்சியின் தலைவரும் முன்னாள் பிரதமருமான ரணில் விக்ரமசிங்க மக்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார். அரசாங்கத்துக்கு எதிராக ஐக்கிய தேசிய கட்சியினர் கொழும்பில் பாரிய ஆர்ப்பாட்ட பேரணியொன்றை நேற்று (வியாழக்கிழமை) மேற்கொண்டிருந்தனர். இதன்போது அதில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே ரணில் இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர் மேலும் கூறுயுள்ளதாவது, “தற்போது தேவையேற்படின் மீண்டும் நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லாப் பிரேரணையை முன்வைத்து ஐக்கிய தேசியக் கட்சியின் பலத்தை நிரூபித்துக் காண்பிக்க எம்மால் முடி…
-
- 1 reply
- 364 views
-
-
புதிய லிபரல் வாதத்தை நாட்டில் ஏற்படுத்த முனைகின்றனர் - திஸ்ஸ (எம்.மனோசித்ரா) ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி உறுப்பினரான ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை 2015 ஆம் ஆண்டு பொது வேட்பாளராக களமிறக்கி அந்த சதித்திட்டத்தின் மூலம் ஆட்சிக்கு வந்ததைப் போன்றே தற்போதும் ரணில் விக்ரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசிய கட்சியினர் சதித்திட்டத்தின் மூலம் ஆட்சியைக் கைபற்ற முயற்சிக்கின்றனர் என லங்கா சமசமாஜக் கட்சியின் தலைவர் திஸ்ஸ விதாரண தெரிவித்தார். நாட்டில் தற்போது நிலவும் அரசியல் நெருக்கடி நிலை குறித்து வினவிய போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இது தொடர்பில் அவர் தொடர்ந்தும் தெரிவிக்கையில், ஐக்கிய தேசிய கட்சியின் இந்த சதித்திட்டங்களுக்கு அமெரிக்க மற்றும் பிரித…
-
- 0 replies
- 236 views
-
-
வடக்கில் கண்ணிவெடிகளை அகற்ற யப்பான் 97 மில்லியன்களை வழங்கியுள்ளது வடக்கில் கண்ணிவெடி அகற்றும் பணிகளுக்கு யப்பான் அரசு தற்போது 97 மில்லியன் ரூபாக்களை வழங்கியுள்ளது என ஹலோ ட்ரஸ்ட் நிறுவனம் அறிவித்துள்ளது. கடந்த ஐந்தாம் திகதி கொழும்பில் யப்பானிய தூதுவருக்கும், ஹலோ ட்ரஸ்ட் கண்ணி வெடி அகற்றும் நிறுவனத்தின் அதிகாரிக்கும் இடையே இதற்கான ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது. ஹலோ ட்ரஸ்ட் நிறுவனம் வடக்கில் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களில் கண்ணி வெடி அகற்றும் பணிகளை மேற்கொண்டு வருகின்றது. 2020 கண்ணி வெடி அற்ற இலங்கை எனும் இலங்கை அரசின் இலக்கை நோக்கி பயணிப்பதற்கு யப்பானிய அரசின் இவ்வுதவி பெரும் பங்களிப்பை மேற்கொள்ளும் என்று தெரிவிக்கப்பட…
-
- 0 replies
- 257 views
-
-
சபாநாயகர் கட்சி தலைவர்களின் விசேட கூட்டத்திற்கு அழைப்பு November 16, 2018 1 Min Read பாராளுமன்றம் இன்று பிற்பகல் 1.30 மணிக்கு கூடவுள்ள நிலையில் சபாநாயகர் கருஜெயசூரிய 11.30 மணிக்கு கட்சி தலைவர்களின் விசேட கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளார். நேற்று பாராளுமன்றில் இடம்பெற்ற அமளியை தொடர்ந்து ஒத்திவைக்கப்பட்ட பாராளுமன்றம் இன்றும் மீண்டும் கூடவுள்ள நிலையிலேயே சபாநாயகர் இவ்வாறு கட்சிதலைவர்களின் விசேட கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளார். இன்றைய தினம் மகிந்த ராஜபக்ஸ அரசாங்கத்திற்கு எதிரான மற்றுமொரு நம்பிக்கiயில்லா தீர்மானம் கொண்டுவரப்பட்டு வாக்கெடுப்பிற்கு விடப்படவுள்ள நிலையிலேயே சபாநாயகர் கட்சி தலைவர்களின் விசேட கூட்டத்திற்கு அழைப்பு வி…
-
- 0 replies
- 271 views
-
-
ஜனநாயகத்துக்கு எதிராக செயற்பட்டால் ஜனாதிபதி மாளிகை முற்றுகையிடப்படும்: தம்பர அமில தேரர் ஜனநாயகத்துக்கு எதிரான செயற்பாடுகளை இனியும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னெடுப்பாராயின் ஜனாதிபதி மாளிகை முற்றுகையிடப்படுமென தம்பர அமில தேரர் தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று (வியாழக்கிழமை) நடைபெற்ற ஐக்கிய தேசிய கட்சியின் பாரிய போராட்டத்தை தொடர்ந்து நடைபெற்ற பொதுக் கூட்டத்திலேயே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். மேலும் கூறியுள்ளதாவது, “மக்கள் ஆணையை மதிக்காமல் நாட்டை கொலையாளிகளிடம் ஜனாதிபதி கையளித்துள்ளார். இவ்வாறு ஜனநாயகத்துக்கு முரணாக ஜனாதிபதி தொடர்ச்சியாக செயற்பட்டுவாராயின் மெதமுலன மன்னரின் நிலைமை தான் அவருக்கு ஏற்படும். இதேவேளை சில பிக்குகள் காவி உடையின் கெ…
-
- 1 reply
- 580 views
-
-
November 9, 2018 “நான் திரும்ப வந்திட்டேன்னு சொல்லு என ரஜனி பாணியில் கூறிய அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அதிகாரிகளே வேலைத் திட்டங்களை விரைவு படுத்துங்கள் எனவும், ஒருநாள் பதவியில் இருந்தாலும் மக்களுக்கு சேவை செய்வேன் எனவும் கூறியுள்ளார். அமைச்சரவை தேர்வு செய்யப்பட்டதன் பின்னர் இன்று யாழ்ப்பாணம் சென்ற அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா யாழ்.மாவட்ட செயலகத்தில் போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக இழப்பீடு வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவ்வாறு தெரிவித்தார். மேலும…
-
- 45 replies
- 5k views
- 1 follower
-
-
வடக்கு- கிழக்கை தனிநாடாக பிரகடனப்படுத்தியிருக்கலாம்: மனோ தற்போதைய அரசியல் சூழ்நிலை பெரும்பான்மை சமூகத்துடன் இணைந்து வாழ முடியாது என்ற நிலையை ஏற்படுத்தியுள்ளது என்றும் வடக்கு- கிழக்கை தனிநாடாக பிரகடனப்படுத்தியிருக்கலாம் எனவும முன்னாள் அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்திற்குள் நேற்று (வியாழக்கிழமை) நிலவிய குழப்பகரமான சூழல் தொடர்பாக கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். அங்கு தொடர்ந்து தெரிவித்த அவர், ”1987ஆம் ஆண்டில் வடக்கு- கிழக்கு தமிழ் மாநிலம் உருவாகுவதற்கான சூழல் நிலவியபோது அது தமிழீழ விடுதலைப் புலிகளினால் தடுக்கப்பட்டது. ஆனால், அவர்கள் அன்று அதனை தடுத்திருக்காவிடின் தமிழ் மாநிலம் உருவாகியிருக்கும். அவ்வாறு தமிழ் மா…
-
- 0 replies
- 393 views
-
-
நாடாளுமன்றத்திற்குள் ஆயுதம் கொண்டுசென்ற உறுப்பினர்களுக்கு சிக்கல்! நாடாளுமன்றத்திற்குள் சில அமைச்சர்கள் கூரிய ஆயுதங்களை கொண்டு சென்றமை தொடர்பில் பொலிஸார் தீவிர விசாரணையை ஆரம்பித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அரசியல் சர்ச்சைகளுக்கு மத்தியில் நாடாளுமன்றம் நேற்று (வியாழக்கிழமை) கூடியபோது, பெரும் குழப்பநிலை உருவாகி உறுப்பினர்களுக்கிடையில் மோதல் ஏற்பட்டது. குறித்த மோதல் தொடர்பாக நாடாளுமன்ற உறுப்பினர் இந்திக்க அநுருத்த நாடாளுமன்ற பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடொன்றை பதிவு செய்துள்ளார். அதில் தெரிவித்துள்ளதாவது, “நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க தம்மீது கூரிய ஆயுதத்தால் தாக்க முற்பட்டார் மேலும் நாடாளுமன்ற உறுப்பினர் பாலித்த தெவரப்பெரும கையில் கூரிய ஆயுதம…
-
- 0 replies
- 834 views
-
-
குழப்பங்களுக்கு மத்தியில் நாடாளுமன்றம் இன்று மீண்டும் கூடுகின்றது! இலங்கையின் அரசியல் குழப்பநிலைக்கு தீர்வை முன்வைக்கும் விடயம் தொடர்பில் ஆராய்வதற்கு நாடாளுமன்றம் இன்று (வெள்ளிக்கிழமை) மீண்டும் கூடுகின்றது. நேற்று நடைபெற்ற நாடாளுமன்ற அமர்வின் போது, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ உரை நிகழ்த்தியிருந்தார். இதன்போது அவரது உரையில் நம்பிக்கை இல்லை எனவும் அதற்கு எதிராக வாக்கெடுப்புக்கு விட வேண்டுமெனவும் நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஷமன் கிரியெல்ல தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து சபாநாயகர் கரு ஜயசூரிய தமது நிலைப்பாட்டை கூறியபோது, கட்சிகளுக்கிடையில் குழப்பநிலை உருவாகி உறுப்பினர்களுக்கு இடையில் மோதல் ஏற்பட்டது. ஆகையால் எதிர்வரும் 21ஆம் திகதி நாடாளுமன்றத்தை ஒத்திவைப்பதாக சபாநாய…
-
- 0 replies
- 240 views
-
-
மன்னார் மனித புதைகுழி அகழ்வு: 27ஆம் திகதி மீண்டும் ஆரம்பம் மன்னார் மனித புதைகுழி அகழ்வு பணிகள் மீண்டும் எதிர்வரும் 27ஆம் திகதி முதல் ஆரம்பிக்கப்படும் என, சட்ட வைத்திய அதிகாரி சமிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். மன்னார் மனித புதைகுழி அகழ்வு பணியானது கடந்த 12ஆம் திகதி முதல், எவ்வித முன் அறிவித்தல்களும் இன்றி இடைநிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. கடந்த வெள்ளிக்கிழமை 104வது தடவையாக ஆரம்பிக்கப்பட்ட அகழ்வு பணி, சனி மற்றும் ஞாயிறு விடுமுறைகளை தொடர்ந்து 12ஆம் திகதி மீண்டும் ஆரம்பித்திருக்க வேண்டிய போதிலும் திங்கட்கிழமை அகழ்வு பணிகள் இடம்பெறவில்லை. இந்நிலையில், இவ்விடயம் தொடர்பாக சட்ட தொடர்ந்து கருத்து தெரிவித்த சட்ட வைத்திய அதிகாரி, தனக்கும், மனித புதைகுழி அகழ்வுகளில் ஈடு…
-
- 0 replies
- 320 views
-
-
ரணிலை பிரதமராக்குவதற்கு தயார்!- ஜனாதிபதி மைத்திரி நாட்டின் பிரதமராக ரணில் விக்ரமசிங்கவை நியமிக்க வேண்டுமென்றால் 113 நாடாளுமன்ற உறுப்பினர்களின் சத்திய கடதாசிகளை சமர்ப்பிக்குமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கோரியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. குறித்த கோரிக்கையை நிறைவேற்ற முடியாதாயின், ஐக்கிய தேசிய கட்சி உறுப்பினர்கள் ஒருவரின் பெயரினை முன்மொழியுமாறு ஜனாதிபதி வலியுறுத்தியுள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஜனாதிபதி புதிய பிரதமராக மஹிந்த ராஜபக்ஷவை அறிவித்ததை தொடர்ந்து நாட்டின் அரசியலில் பெரும் குழப்பநிலை உருவாகியது. இதனால் முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுவையும் மஹிந்த ராஜபக்ஷவையும் நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்குமாறு வலியு…
-
- 0 replies
- 159 views
-
-
இரண்டு நாட்களில் நெருக்கடி நிலைக்குத் தீர்வு – ஜனாதிபதி நாட்டில் ஏற்பட்டுள்ள குழப்பநிலை இன்னும் இரண்டு நாட்களில் முடிவுக்குக் கொண்டுவரப்படுமென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்ததாக தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவர் மனோகணேசன் தெரிவித்தார். கட்சித் தலைவர்களுடன் இன்று (வியாழக்கிழமை) ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற சந்திப்பிலேயே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்ததாக மனோகணேசன் குறிப்பிட்டார். இதன்போது, ஜனாதிபதியுடன் இரண்டு விடயங்கள் பேசப்பட்டதாகவும், இரண்டாவது விடயம் தொடர்பில் தற்போது குறிப்பிட முடியாது என்று அவர் தெரிவித்தார். எனினும் முதலாவது விடயமாக, தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள குழப்ப சூழலை எதிர்வரும் இரண்டு நாட்களில் முடிவுக்குக் கொண்டுவரவுள்ளத…
-
- 7 replies
- 1.3k views
-
-
November 15, 2018 Add Comment Share This! Facebook Twitter Google Plus Pinterest LinkedIn ஹெரோயின் போதைப்பொருளை உடமையில் வைத்திருந்த பாடசாலை மாணவனுக்கு ஒரு மாத கால சிறைத் தண்டனை வழங்கி யாழ்ப்பாணம் நீதிமன்ற நீதிவான் சின்னத்துரை சதீஸ்தரன் தீர்ப்பளித்தார். ஒரு மாத கால சிறைத் தண்டனையை அனுபவிக்க …
-
- 2 replies
- 511 views
-
-
பாராளுமன்ற உறுப்பினர்களின் நடவடிக்கையால் இலங்கைக்கு அவமானம்- வர்த்தக சமூகம் இலங்கை பாராளுமன்றத்தில் இன்று சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் நடந்துகொண்ட விதம் வெட்கக்கேடானது நாட்டிற்கு அவமானத்தை ஏற்படுத்தும் விதத்தில் அது அமைந்திருந்தது என இலங்கையின் வர்த்தக சமூகத்தினர் தெரிவித்துள்ளனர். இலங்கை வர்த்தக சம்மேளனம் உட்பட பல வர்த்தக அமைப்புகள் கூட்டாக விடுத்துள்ள அறிக்கையில் இதனை தெரிவித்துள்ளன இலங்கையின் அரசியல் நிலை குறித்து ஆழ்ந்த கவலை கொண்டுள்ளதாக வர்த்தக சம்மேளனங்கள் தெரிவித்துள்ளன. ஜனாதிபதிக்கும் தெரிவுசெய்யப்பட்டுள்ள மக்கள் பிரதிநிதிகளிற்கும் தீர்மானங்களை எடுக்கும்போது உரிய நடைமுறையை பின்பற்றவேண்டிய சட்டத்தின் ஆட்சிக்கு மதிப்பளிக்கவேண்டிய கடமையுள்ளதா…
-
- 4 replies
- 505 views
-
-
கட்சி தலைவர்கள் கூட்டத்தில் ஜனாதிபதி கூறியது என்ன? – முழு அறிக்கை இதோ! நாடாளுமன்ற சம்பிரதாயங்களுக்கு மதிப்பளித்து பெரும்பான்மையை உரிய முறையில் நிரூபிக்குமாறு ஐக்கிய தேசிய முன்னணி தலைமையிலான கட்சிகளுக்கு ஜனாதிபதி அறிவித்துள்ளார். சபாநாயகர் கரு ஜயசூரிய , ஐக்கிய தேசிய முன்னணியின் பங்காளிக் கட்சிகள் மற்றும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பிரதிநிதிகள் இன்று (வியாழக்கிழமை) ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்தனர். ஜனாதிபதி செயலகத்தில் குறித்த சந்திப்பு சுமார் இரண்டு மணிநேரங்கள் இடம்பெற்றது. இதன் போது, நாடாளுமன்றத்தின் பெரும்பான்மை தம்மிடம் உள்ளதாகவும் அதனை ஏற்றுக்கொள்ளுமாறும் குறித்த கட்சிகளின் பிரதிநிதிகள் ஜனாதிபதியிடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர். தாம் அனை…
-
- 0 replies
- 503 views
-
-
இரு தரப்பினருக்கிடையிலான பேச்சுவார்த்தையே அரசியல் நெருக்கடிக்கு தீர்வு – ராஜித நாட்டில் ஏற்பட்டுள்ள நெடுக்கடி நிலைமை தொடர்பில் இரண்டு தரப்பினரும் இணைந்து பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்க வேண்டும் என ஐக்கிய தேசிய கட்சி தெரிவித்தது. நாடாளுமன்றக் கட்டடத் தொகுதியில் இன்று (வியாழக்கிழமை) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின் போதே ராஜித சேனாரத்ன இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், “அரசாங்கத்தை ஸ்தாபித்துள்ளதாகக் கூறிக்கொள்ளும் தரப்பினர், தமக்கு பெரும்பான்மையான பலம் இல்லாத காரணத்தினாலேயே சபையில் இவ்வாறான குழப்பத்தில் ஈடுபட்டனர். இன்று அந்தத் தரப்பினருக்கு வெறும் 85 பேரே வருகைத் தந்திருந்தனர். இவர்களின் செயற்பாட்டால் அரச கட்டமைப்பே …
-
- 0 replies
- 344 views
-
-
இலங்கையில் ஜனநாயகத்தில் இன்றே மிகவும் மோசமான நாள் – ஜேர்மனி இலங்கையில் ஜனநாயகத்தில் இன்றைய நாள் மிகவும் மோசமான நாள் என ஜேர்மனியின் தூதுவர் ஜோர்ன் ரோஹெடே கூறியுள்ளார். நாடளுமன்றத்தில் இன்று (வியாழக்கிழமை) இடம்பெற்ற பதற்றமான சூழ்நிலை அடுத்து அவர் தனது டுவிட்டரில் கருத்து தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு கூறியுள்ளார். அவர் அதில் குறிப்பிட்டுள்ளதாவது, “இலங்கையில் ஒரு நீண்ட பெருமை கொண்ட ஜனநாயக பாரம்பரியம் உள்ளது. ஆனால் இன்று சபாநாயகர் மீதான தாக்குதல் நடத்துவதும் வாக்குகளைத் தடுப்பதும் தான் ஜனநாயகமாக இருக்கின்றது” என பதிவிட்டுள்ளார். http://athavannews.com/இலங்கையில்-ஜனநாயகத்தில்/
-
- 0 replies
- 930 views
-
-
‘அரசமைப்புக்கு அமைய எந்தவொரு தேர்தலுக்கும் முகங்கொடுக்க தயார்’ எம்மை வண்ணத்துப்பூச்சி கூட்டமென்றனர். வண்ணத்துப்பூச்சி பூக்களில் தான் தேன் குடிக்கும், ஆனால் அட்டை மக்களின் இரத்தத்தை உறிஞ்சுகின்றது என முன்னாள் அமைச்சர் ஹரின் பெர்ணான்டோ தெரிவித்தார். அரசமைப்புக்கு அமைய எந்தவொரு தேர்தலுக்கும் முகங்கொடுக்க தயாரென, ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். ஜனாதிபதித் தேர்தலையும் பொதுத்தேர்தலையும் ஒரே நேரத்தில் நடத்துமாறு அரசாங்கத்துக்கு சவால் விடுப்பதாக, முன்னாள் அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார். …
-
- 1 reply
- 1k views
-
-
November 15, 2018 யாழ். அரியாலை பகுதியில் இடம்பெற்ற கார் புகையிரத விபத்தில் காரினை ஒட்டி சென்ற குடும்பஸ்தர் உயிரிழந்துள்ளார். கொழும்பில் இருந்து யாழ் நோக்கி சென்று கொண்டிருந்த குளிரூட்டப்பட்ட புகையிரதத்துடனே விபத்து ஏற்பட்டு உள்ளது. அரியாலை நெடுங்குளம் புகையிரத கடவையில் இன்று வியாழக்கிழமை மதியம் 12.30 மணியளவில் இடம்பெற்ற குறித்த விபத்தில் காரினை செலுத்தி சென்றவர் சம்பவ இடத்திலையே உயிரிழந்துள்ளார். தெல்லிப்பளை பகுதியை சேர்ந்தவர் அப்பகுதியில் உள்ள வாகன திருத்தகத்திற்கு (கராஜ்க்கு) காரினை கொண்டு சென்று திருத்தி விட்டு திரும்பும்…
-
- 0 replies
- 714 views
-