Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. எங்களை நாங்களே ஆள்வதற்காக மக்கள் ஆணை தந்துள்ளார்கள்! - எம்.கே.சிவாஜிலிங்கம் adminMay 7, 2025 ஜே.வி.பியினுடைய பசப்பு வார்த்தைகளை நம்பி ஜனாதிபதித் தேர்தலிலும் நாடாளுமன்றத் தேர்தலிலும் அவர்களுக்கு வாக்களித்தமை தவறு என்பதை மக்கள் உணர்ந்து இருக்கிறார்கள். இந்த வெற்றி எங்களை நாங்களே ஆள்வதற்காக மக்கள் எமக்கு தந்த ஆணையாக பார்க்கின்றேன் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழ்த் தேசிய பேரவையின் வல்வெட்டித்துறை நகரசபை முதன்மை வேட்பாளருமான எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்தார். வல்வெட்டித்துறை நகரசபையின் 9 வட்டாரங்களில் 7 வட்டாரங்களில் சைக்கிள் சின்னத்தில் போட்டியிட்ட தமிழ்த் தேசிய பேரவை வெற்றிபெற்றது. இது தொடர்பில் வினாவிய போதே மேற்கொண்டவாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில் – இந்த…

  2. பகிடி வதையால் சப்ரகமுவ பல்கலைக்கழக மாணவன் தற்கொலை! பகிடி வதையால் அவமானம் தாங்க முடியாது மனமுடைந்த பல்கலைக்கழக மாணவர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. தற்கொலை செய்து கொண்ட மாணவர் சப்ரகமுவ பல்கலைக்கழக தொழில்நுட்ப பொறியியல் பீடத்தில் இரண்டாம் ஆண்டு படிக்கும் 23 வயதுடைய சரித் தில்ஷான் என அடையாளம் காணப்பட்டுள்ளார். கடந்த 27 ஆம் திகதி பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற புத்தாண்டு கொண்டாட்டத்திற்குப் பின்னர், அவர் 28 ஆம் திகதி கம்பளை, இஹலகமவில் உள்ள தனது வீட்டிற்குத் திரும்பியுள்ளார். பின்னர், ஏப்ரல் 29 ஆம் திகதி மாலை தனது வீட்டின் பின்புறம் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளமை தெரியவந்துள்ளது. பல்கலைக்கழக புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது அவருக்கு ஏற்பட்ட தாங்க…

  3. தேசிய தலைவரின் பெயரை பயன்படுத்தி பிரசார பாடல்: தேசிய மக்கள் சக்திக்கு வலுக்கும் எதிர்ப்பு May 3, 2025 தமிழீழ தேசியத் தலைவர் வேலுபிள்ளை பிரபாகரனின் பெயரை பயன்படுத்தி தேசிய மக்கள் சக்தி முன்னெடுத்துள்ள பிரசார நடவடிக்கை சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. தலைவர் வேலுபிள்ளை பிரபாகரனும் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவும் ஒரே மாதிரியானவர்கள் என்று வரிகள் எழுதப்பட்ட பாடல் ஒன்றை தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினர்கள் சமூக ஊடகங்களில் பகிர்ந்துள்ளனர். அத்துடன் தமிழீழ விடுதலை புலிகள் அமைப்பின் தலைவர் வேலுபிள்ளை பிரபாகரனின் தாய் மற்றும் தந்தையின் பெயரில் துறைமுகங்கள் அமைக்கப்படும் என்றும் அந்த பாடலில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தநிலையில் இவ்வாறான பிரசார நடவடிக்கைக்கு எதிர்ப்பை வெளியிட்டுள்ள மு…

  4. ஜனாதிபதியின் வியட்நாம் பயணத்தின் போது பல ஒப்பந்தங்கள் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மேற்கொள்ளவுள்ள வியட்நாம் பயணம் குறித்து வெளிவிவகார அமைச்சகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. மே மாதம் 4 ஆம் திகதி முதல் 6 ஆம் திகதி வரை ஜனாதிபதி வியட்நாமுக்கு உத்தியோகப்பூர்வு பயணம் மேற்கொள்வார் என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த விஜயத்தின் போது, ஜனாதிபதி அநுரகுமார, வியட்நாம் ஜனாதிபதி மற்றும் பிரதமருடன் உத்தியோகபூர்வ பேச்சுவார்த்தைகளை நடத்தவுள்ளதாகவும், கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் உட்பட பல மூத்த பிரமுகர்களைச் சந்திக்கவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளதுஃ அத்துடன், ஹோ சி மின் நகரில் நடைபெறும் ஐக்கிய நாடுகளின் வெசாக் தின கொண்டாட்டத்தில் பிரதம விருந்தினராக ஜனாதிபதி கலந்து கொண்டு, …

  5. உள்ளூராட்சி மன்றங்களுக்கான வாக்கெடுப்பு ஆரம்பம்! இலங்கையின் உள்ளூராட்சி மன்றங்களுக்கான 8,287 உறுப்பினர்களை தெரிவு செய்வதற்கான வாக்கெடுப்பு ஆரம்பமாகி நடை பெற்றுவருகின்றது அதன்படி இன்று (செவ்வாய்கிழமை) காலை 7.00மணிக்கு ஆரம்பமான வாக்களிப்பு நடவடிக்கைகள் மாலை 4.00 மணி வரை இடம்பெறவுள்ளது இதன்படி வாக்காளர்கள் அனைவரும் உரிய ஆவணங்களுடன் வாக்களிப்பு மத்திய நிலையங்களுக்கு சென்று, உரிய நேரத்தில் தமது வாக்குகளைப் பதிவு செய்யுமாறு தேர்தல்கள் ஆணையாளர் கோரிக்கை விடுத்துள்ளார். உள்ளூராட்சி மன்றத் தேர்தல் இன்று நாடு முழுவதும் 13,759 வாக்களிப்பு மத்திய நிலையங்களில் ஆரம்பமாகியுள்ளது. வாக்குப்பதிவு மாலை 4:00 மணி வரை நடைபெறவுள்ள நிலையில், வாக்குப்பதிவு முடிவடைந்த பின்னர், 5,783 மத்திய நிலையங்…

  6. 06 MAY, 2025 | 01:19 PM 2025 உள்ளுராட்சி சபைகளிற்கான தேர்தல் தமிழ்தேசியத்தின் எதிர்காலத்தை தீர்மானிக்கின்ற தேர்தல் என தனது வாக்கை செலுத்திய பின்னர் தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது, 2025 உள்ளுராட்சி சபைகளிற்கான தேர்தல் வட கிழக்கிலே வாழ்கின்ற தமிழ் மக்களிற்கு ஒரு முக்கியமான தேர்தல். எங்களின் அனைத்து தேர்தல் பிரச்சாரங்களிலும் நாங்கள் வலியுறுத்தி வருகின்ற விடயம், தமிழ் தேசியத்தின் எதிர்காலம் தொடர்பாக தீர்மானிக்கின்ற ஒரு தேர்தல். அந்த வகையிலே எங்கள் மக்கள் கடந்த ஒன்றரை மாதமாக நடத்தி வருகின்ற பிரச்சார முயற்சிகள் ஊடாக இந்த தேர்தலின் முக்கியத்துவத்தை விளங்கிக்கொண்டு, அனைவரும் கட்டாய…

  7. அதிகாரத்தின் ஆரம்ப புள்ளியாகிய உள்ளூராட்சி சபைத் தேர்தலில் தமிழ் மக்கள் தங்களை ஒரு தேசமாகவும், தேசிய இனமாகவும் நிரூபிக்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டிருக்கின்றோம் என யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பில் மாணவர் ஒன்றியத்தால் இன்றையதினம் வெளியிடப்பட் ஊடக அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, உலகெங்கிலும் அறியப்பட்ட இந்நூற்றாண்டில் நடாத்தப்பட்ட மிகப்பெரிய இனப்படுகொலையை நினைவு கூறும் மே மாதத்தில் உள்ளூராட்சி சபைத் தேர்தல் தொடர்பான தமிழ்ச் சமூகத்திற்கான தெளிவூட்டல். தொடர்ச்சியாக ஜனாதிபதித் தேர்தல், பாராளுமன்றத் தேர்தலைத் தொடர்ந்து தமிழ் மக்களிடையே அரசாங்கத்தின் மீது நம்பிக்கை குறைவடைந்து இருக்கும் இந்நிலையில் உள்ளூராட்சி சபை தேர்தலை எதிர்க…

  8. இங்கிலாந்தின் விசா கட்டுப்பாடுகளில் இலங்கையும் உள்ளடக்கம்! பாகிஸ்தானியர்கள், நைஜீரியர்கள் மற்றும் இலங்கையர்கள் உள்ளிட்ட நாட்டினரிடமிருந்து வேலை மற்றும் படிப்பு விசா விண்ணப்பங்களை கட்டுப்படுத்தும் நடவடிக்கையை பிரித்தானிய உள்துறை அலுவலகம் எடுத்துள்ளது. பிரித்தானிய அரசாங்கம் இடம்பெயர்வு புள்ளிவிவரங்களைக் குறைக்க முயற்சிப்பதால், குடியேற்ற திருத்தத்தின் ஒரு பகுதியாக இந்தத் திட்டங்கள் விரைவில் அறிவிக்கப்படும் என்று நம்பகத் தகுந்த வட்டாரங்களை மேற்கொள்ளிட்டு டைம்ஸ் செய்தித்தாள் தெரிவித்துள்ளது. தொழிலாளர் கட்சி தனது தேர்தல் அறிக்கையில் புகலிடக் கோரிக்கையாளர்களின் எண்ணிக்கையைக் குறைப்பதாக உறுதியளித்தது. கடந்த மாதம் வெளியிடப்பட்ட புள்ளிவிவரங்கள், பிரித்தானியாவுக்குள் முக்கிய விசா …

  9. யாழ்ப்பாணம் நீதிமன்றத்தில் சமீபத்தில் ஒரு விசித்திரமான விவாகரத்து மனு தாக்கல் செய்யப்பட்டது. அதாவது மனைவி சமைக்கும் பிரியாணி சுவையில்லாமல் இருப்பதால் டென்மார்க்கைச் சேர்ந்த 41 வயதான கணவன் யாழ்ப்பாணம் நீதிமன்றத்தில் விவாகரத்து மனு தாக்கல் செய்துள்ளார். அடிக்கடி வாக்குவாதங்கள் யாழ்ப்பாணம் உடுவில் பகுதியைச் சேர்ந்த 27 வயதுடைய மனைவி மீதே இவ்வாறு விவாகரத்து மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. திருமணத்திற்குப் பிறகு, மனைவி சமைக்கும் பிரியாணி சுவையாக இல்லாததால், கணவருக்கும் மனைவிக்கும் இடையில் அடிக்கடி வாக்குவாதங்கள் ஏற்பட்டுள்ளதாக விவாகரத்து மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதோடு பிரியாணி மீது தனக்கு தனித்துவமான ஆர்வம் உள்ளதாகவும், சமாதானமான வாழ்க்கையை தான் விரும்புவதால் தேவையற்ற மோத…

  10. முல்லைத்தீவில் சர்சைக்குரியவகையில் துண்டுப்பிரசுரங்களைவழங்கிய நபர் தொடர்பில் பரபரப்பு! முல்லைத்தீவு மாவட்டத்தின் கரைத்துறை பற்ற பிரதேச சபை தேர்தலுக்காக வீட்டு சின்னத்தில் தமிழரசு கட்சியில் போட்டியிடும் வேட்பாளர் ஒருவர் சர்ச்சைக்குரிய வகையில் துண்டுப்பிரசுரங்களை வழங்கிய சம்பவம் தொடர்பில் பொலிசார் வேட்பாளரை தேடும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளார். முள்ளியவளை கிழக்கு பிரதேசத்தில் வேட்பாளர் பல வீடுகளுக்கு சென்று தமிழீல விடுதலை புலிகளின் தலைவர் வே.பிரபாகரனின் படம் பொறிக்கப்பட்ட வீட்டு சின்னத்துக்கு புள்ளடி இடுமாறு துண்டு பிரசுரங்களை வழங்கி வந்துள்ளார். இந்த சம்பவம் கிராமத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குறித்த சம்பவத்தை அடுத்து அப் பகுதியில் பொலிசார் தேடுதல் நடவடிக்கையை ம…

    • 1 reply
    • 366 views
  11. பருத்தித்துறை கடற்கரை பகுதியில் கரையொதுங்கிய பெண்ணின் சடலம்! யாழ்ப்பாணம் – பருத்தித்துறை கடற்கரை பகுதியில் பெண்ணொருவரின் சடலம் நேற்றைய தினம் (04) கரையொதுங்கியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த சடலம் தும்பளை பகுதியை சேர்ந்த 36 வயதுடைய பெண்ணுடையது என அடையாளம் காணப்பட்டுள்ளது. சடலம் பொலிஸாரினால் மீட்கப்பட்டு உடற்கூற்று பரிசோதனைக்காக வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் பருத்தித்துறை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். ஒரு பிள்ளையின் தாயான குறித்த பெண்ணின் கணவர் வெளிநாட்டில் வசித்து வரும் நிலையில் , பிள்ளையுடன் அவர் தும்பளை பகுதியில் வசித்து வந்துள்ளார் என ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது. https://athavannews.com/2025/1430574

  12. வவுனியாவில் கொள்ளையிடப்பட்ட 80 இலட்சம் பெறுமதியான நகை மீட்பு! வவுனியாவில் 80 இலட்சம் பெறுமதியான 35 பவுன் தங்க நகைகளினை மீட்டுள்ளதாக வவுனியா நெளுங்குளம் பொலிஸார் தெரிவித்தனர். கடந்த இரு தினங்களுக்கு முன்பாக வவுனியா கணேசபுரம் பகுதியில் உள்ள வீட்டில் இருந்து 35 பவுன் தங்க நகைகள் கொள்ளையிடப்பட்டதாக முறைப்பாடு கிடைத்ததாக பொலிஸார் தெரிவித்தனர். மேலும் இக்கொள்ளை சம்பவம் தொடர்பாக வவுனியா நெளுக்குளம் பொலிஸ் பொறுப்பதிகாரி டி.எம்.ஏ.சமரகோன் தலைமையில் குழு ஒன்று நியமிக்கப்பட்டு விசேட நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது. இந் நிலையில் நேற்று மாலை கொக்குவெளி பகுதியில் வைத்து 29 வயது இளைஞன் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளதுடன், அவரிடம் இருந்து 35 பவுன் தங்க நகைகளும் மீட்கப்பட்டுள்ளன. இது தொடர்பா…

  13. காங்கேசன்துறை கடற்கரைப் பூங்காவை புனரமைக்க நடவடிக்கை adminMay 4, 2025 சுற்றுலாத்துறை அபிவிருத்தித் திட்டங்களில் உள்ளடங்கப்பட்டுள்ள காங்கேசன்துறை கடற்கரைப் பூங்காவிற்கு யாழ்ப்பாண மாவட்ட செயலர் மருதலிங்கம் பிரதீபன் நேற்றைய தினம் சனிக்கிழமை களவிஜயம் செய்தார். வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சினால் யாழ்ப்பாண மாவட்டத்திற்கு 131.20 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதற்கு அமைய, அத் திட்டங்களில் உள்ளடங்கியுள்ள காங்கேசன்துறை கடற்கரையில் அமைந்துள்ள சிறுவர் பூங்காவின் பகுதி கடுமையான கடல் அரிப்பால் பாதிக்கப்பட்டு சிறுவர் பூங்காவிற்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாலும் அவ் விடத்திற்கு அதிக சுற்றுலாப் பயணிகள் வருகைதருவதனாலும் அதனை விரைவாக புன…

  14. Published By: DIGITAL DESK 3 04 MAY, 2025 | 05:40 PM ஜப்பானிய பாதுகாப்பு அமைச்சர் ஜெனரல் நகதானி, பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரியவை அலரிமாளிகையில் ஞாயிற்றுக்கிழமை (05) சந்தித்தார். இந்த சந்திப்பில் நீண்டகால இருதரப்பு நட்புறவு மீண்டும் உறுதிப்படுத்தப்பட்டது, மேலும் ஜப்பானுக்கும் இலங்கைக்கும் இடையிலான பாதுகாப்பு மற்றும் பிராந்திய பாதுகாப்புத் துறைகளில் ஒத்துழைப்பை வலுப்படுத்துவதில் கவனம் செலுத்தப்பட்டது. இந்தோ-பசிபிக் பிராந்தியம் முழுவதும் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையை உறுதி செய்வதற்கான முயற்சிகளுக்கு ஜப்பானின் ஆதரவை ஜப்பானிய பாதுகாப்பு அமைச்சர் உறுதிப்படுத்தினார். கடல்சார் பாதுகாப்பு மற்றும் பிராந்திய உறவுகளில் இலங்கையின் மூலோபாய முக்கியத்துவத்தையும் அமைச்சர் வலியுறுத்தினார…

  15. உள்ளூராட்சிமன்ற தேர்தல் தொடர்பான பிரச்சாரங்கள் அனைத்தும் இன்றுடன் நிறைவு! உள்ளூராட்சிமன்ற தேர்தலை முன்னிட்டு மேற்கொள்ளப்படுகின்ற அனைத்து பிரச்சார நடவடிக்கைகளும் இன்று நள்ளிரவு 12.00 மணியுடன் நிறைவடையவேண்டும் என தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. வாக்கெடுப்பிற்கு நாற்பத்தெட்டு(48) மணி நேரத்திற்கு முன்னர் உள்ளூராட்சிமன்ற தேர்தலில் போட்டியிடுகின்ற கட்சிகள்/குழுக்கள் மற்றும் வேட்பாளர்களின் தேர்தல் தொடர்பான அனைத்து பிரச்சார நடவடிக்கைகளும் நிறுத்தப்பட வேண்டும் எனவும் இன்று நடைபெற்ற இறுதி அரசியல் பிரச்சாரக் கூட்டங்களின் காணொளி காட்சிகள் மற்றும் விபரங்களை நாளை தொலைக்காட்சி மற்றும் வானொலி அலைவரிசையில் ஒரு பிரதான செய்தி அறிக்கையில் மாத்திரம் பிரச்சாரம் செய்ய முடியும் எனவும் அறிக்…

  16. 03 MAY, 2025 | 07:27 PM (லியோ நிரோஷ தர்ஷன்) வெளிநாடுகளுக்கு சென்ற எந்தவொரு சந்தர்ப்பத்திலும் நாட்டிற்கு எதிராக பேசியதோ செயல்பட்டதோ கிடையாது. இதனை மக்கள் அறிவர். சர்வதேச ஒப்பந்தங்களுடன் அரசாங்கம் அரசியல் விளையாட நினைத்தால் பாரதூரமான நிலைமையே ஏற்படும். மின் கட்டண அதிகரிப்பு நாணய நிதிய நிபந்தனைகளில் முக்கியமான தொன்றாகியுள்ளது என முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். கொழும்பு - 7 இல் அமைந்துள்ள புதிய ஜனநாயக முன்னணியின் அரசியல் அலுவலகத்தில் இடம்பெற்ற சந்திப்பின் போதே ரணில் விக்கிரமசிங்க மேற்கண்டவாறு கூறினார். அவர் தொடர்ந்தும் கூறுகையில், நான்காவது தவணை கொடுப்பணவை விடுவிக்க போவதில்லை என்று சர்வதேச நாணய நிதியம் அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பினால் அரசாங்கம் பெரும் ந…

  17. 03 MAY, 2025 | 07:20 PM இந்நாட்டின் முன்னாள் போராளிகள் கனவு கண்டிருப்பார்கள். அது புலிகளாக இருக்கலாம், ஈ.பி.டி.பி.யாக இருக்கலாம், ஈ.பி.ஆர்.எல்.எப். ஆக இருக்கலாம். தமிழ் மக்கள் நிம்மதியாக, தன்மானத்துடன் வாழ வேண்டும் என்பது அவர்களின் கனவு. அந்த கனவை தற்போதைய தமிழ் அரசியல்வாதிகளால் நிறைவேற்ற முடியுமா? போராளிகளின் அர்ப்பணிப்புக்கு அவர்களால் அருகில்கூட வரமுடியாது. அவர்கள் கனவு கண்டிருந்தாலும் கூட அந்த கனவை நனவாக்குவதற்குரிய வேலையை நாம் செய்கின்றோம். இயக்கங்கள் மீது உண்மையான பற்றுள்ளவர்கள் தேசிய மக்கள் சக்தியையே ஆரத்தழுவிக்கொள்ள வேண்டும் என கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்தார். சனிக்கிழமை (03) யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற விசேட …

  18. 03 MAY, 2025 | 07:25 PM (லியோ நிரோஷ தர்ஷன்) ஜம்மு - காஷ்மீரில் சுற்றுலாப் பயணிகள் மீது மேற்கொள்ளப்பட்ட பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து இந்தியாவுக்கும் பாக்கிஸ்தானுக்கும் இடையில் போர் மேகம் சூழ்ந்துள்ளது. இந்த பதற்றங்களின் எதிரொலியாக இலங்கையிலும் இருநாடுகளுக்கும் இடையில் இராஜதந்திர கருத்து மோதல்கள் மோலோங்கியுள்ளன. இலங்கையை பொறுத்த வரையில் இரு நாடுகளுடனுமே சிறந்த உறவுகளை கொண்டுள்ளது. ஆனால் இரு நாடுகளுக்கு இடையிலான பதற்றங்களும் ஏற்பட கூடிய ஆயுத ரீதியிலான மோதல்களும், இலங்கைக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் என்பது புவிசார் அரசியல் ஆய்வாளர்களின் எச்சரிக்கைகளாக உள்ளது. மறுபுறம் இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் மேற்கொள்ளப்பட்டுள்ள பாதுகாப்பு ஒப்பந்தம் குறித்தும் பல்வேறு சர்ச்சைகள…

  19. 02 MAY, 2025 | 05:10 PM தமிழ் அரசுக் கட்சி தவறான கொள்கையைக் கைவிட்டு அந்தக் கட்சியை நிறுவிய தந்தை செல்வநாயகத்தின் கொள்கையின்படி நேர்மையாக பயணிக்க முன்வந்தால் நாம் நிச்சயமாக அவர்களுடன் பேச்சு நடத்தி பொது இணக்கப்பாட்டுக்கு வந்து இணைந்து பயணிப்போம் என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார். அல்வாய் மாலுசந்தி மைக்கேல் விளையாட்டுக்கழக மைதானத்தில் தமிழ்த் தேசிய பேரவை வியாழக்கிழமை (01) இரவு நடத்திய மே தினக் கூட்டத்தில் உரையாற்றியபோதே இதனை தெரிவித்தார். இக் கூட்டத்தில் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தொடர்ந்து உரையாற்றுகையில், இந்த உள்ளூராட்சி சபைகள் தேர்தலில் தமிழ் மக்கள் மிகத் தெளிவாக - ஆணித்தரமாக தங்கள் வ…

  20. 03 MAY, 2025 | 07:32 PM “உழலை ஒழிக்கிறோம்” என நண்பர் அனுர கூறுவதை, நான் வரவேற்கிறேன். இது எனது கொள்கையும் ஆகும். ஆனால், இதை மட்டும் சொல்லி, நாள்தோறும் புது, புது பொய்களையும் சொல்லி, இனியும் நாட்டை நடத்த முடியாது. நாட்டின் முதல் முக்கியத்துவம் பொருளாதாரத்துக்கு வழங்கப்பட்டே ஆகவேண்டும். இல்லா விட்டால் வர்த்தகம், தொழிற்துறை கடுமையாக பாதிக்கப்படும் என தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன் தெரிவித்தார். மட்டக்குளியில் வெள்ளிக்கிழமை (02) நிகழ்ந்த தேர்தல் பிரசார கூட்டத்தில் உரையாற்றிய மனோ கணேசன் மேலும் கூறியதாவது, வேலையில்லா திண்டாட்டம் தலை விரித்து ஆடும். பண புழக்கம் கணிசமாக குறையும். இந்திய பொருளாரத்துடன் நெருக்கமான உறவுகளை ஏற்படுத்தி, விசேட வர்த்தக சலுகைகளை கோரி பெற…

  21. 03 MAY, 2025 | 07:31 PM தமிழ் மக்கள் தமிழ்த் தேசியக் கட்சிகளுக்கு வாக்களியுங்கள். அவர்களுக்குள் இருப்பது குடும்பச் சண்டை விரைவில் தீர்ந்துவிடும். அந்தச் சண்டைக்குள் எதிரிகளுக்கும் துரோகிகளுக்கும் வாய்ப்பளித்தால் வடக்கு கிழக்கில் நாம் தனித்துவத்தையும் சுயமரியாதையும் இழந்தவர்களாகி விடுவோம் என தமிழ்த் தேசிய வாழ்வுரிமை இயக்கத்தின் தலைவர் வி.எஸ்.சிவகரன் தெரிவித்துள்ளார். இவ்விடயம் தொடர்பாக அவர் சனிக்கிழமை (03) விடுத்துள்ள ஊடக அறிக்கையில் மேலும் குறிப்பிடுகையில், தமிழர்கள் தமிழர்களாகவே தன்மானத்தோடு தலை நிமிர்ந்து தனித்துவமாக தமிழர் தாயகத்தில் வாழ்வதற்கு தமிழ் தேசியக் கட்சிகளை ஆதரியுங்கள். அதுவே எமக்கான வரலாற்றுக் கடமையும் பொறுப்பும் தார்மீக உரிமையும் ஆகும். கடந்த 70 ஆண்டுகள…

  22. Published By: DIGITAL DESK 2 03 MAY, 2025 | 05:04 PM சர்வதேச ஊடக சுதந்திர தினத்தினை முன்னிட்டு , படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு நீதி கோரி யாழ்ப்பாணத்தில் ஊடகவியாலாளர்கள் போராட்டத்தினை முன்னெடுத்தனர். யாழ் ஊடக அமையத்தின் ஏற்பாட்டில் ஊடக அமையத்திற்கு முன்பாக இன்று சனிக்கிழமை மாலை 03.00 மணியளவில் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. அதன்போது படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு நீதி கோரியும், தாக்குதலுக்கு இலக்கான ஊடகவியலாளர்கள் மற்றும் ஊடக நிறுவனங்களுக்கு நீதி கோரியும் ஊடகவியலாளர்கள் கோசங்களை எழுப்பினர். https://www.virakesari.lk/article/213594

  23. 03 MAY, 2025 | 03:30 PM எதிர்வரும் 06 ஆம் திகதி நடைபெறவுள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தலின் போது அரசியல்வாதிகள், பாராளுமன்ற உறுப்பினர்கள், கட்சித் தலைவர்கள், முன்னாள் ஜனாதிபதிகள் மற்றும் வேட்பாளர்கள் வாக்கெடுப்பு நிலையத்தில் வாக்களிக்கும் காணொளிகள் மற்றும் புகைப்படங்களை பிற்பகல் 04.00 மணிக்கு பின்னர் ஊடகங்களில் வெளியிடுமாறு தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. அரசியல்வாதிகள், முன்னாள் ஜனாதிபதிகள் மற்றும் வேட்பாளர்கள் வாக்களிக்கும் காணொளிகள் மற்றும் புகைப்படங்கள் கிடைத்தால் அதனை பிற்பகல் 04.00 மணிக்கு முன்னர் ஊடகங்களில் வெளியிடுவதை தவிர்க்குமாறு தேர்தல் ஆணைக்குழு கேட்டுக்கொண்டுள்ளது. சுதந்திரமான தேர்தல் இடம்பெறுவதற்கு ஒத்துழைப்பு வழங்குமாறு தேர்தல் ஆணைக்குழு கேட்டுக்கொண்டுள்ளத…

  24. 500 தமிழ் பொலிஸார் சேவையில் இணைக்க நடவடிக்கை May 3, 2025 11:36 am 2025ஆம் ஆண்டு இறுதிக்குள் 500 தமிழ் பொலிஸாரை சேவையில் இணைத்துக்கொள்ளும் ஆலோசனைகள் பொலிஸ் திணைக்களத்துக்கு வழங்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். பொலிஸ் துறையில் 10ஆயிரத்துக்கும் அதிகமான வெற்றிடங்கள் நிலவுகின்றன. இதுகுறித்து பொலிஸ் திணைக்களத்துடன், நடத்தப்பட்ட கலந்துரையாடலின் பிரகாரம் 10ஆயிரம் பொலிஸாரை சேவையில் இணைத்துக்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. முதல்கட்டமாக இவ்வாண்டு 2ஆயிரம் பொலிஸார் சேவையில் இணைத்துக்கொள்ளப்பட உள்ளனர். இதில் 500 தமிழ் பொலிஸாரை இணைத்துக்கொள்வதற்கான ஆலோசனைகளையும் வழங்கியுள்ளோம் என்றும் ஜனாதிபதி கூறியுள்ளார். https://oruvan.com/action-to-induct-500-tamil…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.