ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143501 topics in this forum
-
Published By: VISHNU 22 MAY, 2025 | 02:01 AM (நா.தனுஜா) பிரதமருக்கும், வட-கிழக்கு மாகாணங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் எதிர்க்கட்சிப் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையில் வெள்ளிக்கிழமை (23) நடைபெறவுள்ள சந்திப்பில் கலந்துகொண்டு, வடக்கிலுள்ள காணிகள் தொடர்பில் வெளியிட்ட வர்த்தமானி அறிவித்தலை வாபஸ் பெறுமாறு உறுதியாக வலியுறுத்தவிருப்பதாக தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார். அரசாங்கத்தினால் காணி நிர்ணயக் கட்டளைச் சட்டத்தின் 4 ஆம் பிரிவின்கீழ் 28.03.2025 திகதியிடப்பட்டு, 2430 இலக்கமிடப்பட்டு பிரசுரிக்கப்பட்டிருக்கும் வர்த்தமானி அறிவித்தலில் வடக்கு மாகாணத்தில் மொத்தமாக 5,940 ஏக்கர் காணிகளை 3 மாதகாலத்துக்குள் எவரும…
-
- 3 replies
- 206 views
- 1 follower
-
-
Published By: VISHNU 22 MAY, 2025 | 01:58 AM கனடாவின் பிரம்டன் நகரில் இனப்படுகொலை நினைவுத்தூபி அமைக்கப்பட்டமை காலப்பெறுமதி மிக்க செயல் என்றும், அதற்கு ஈழத்தமிழர்கள் சார்பில் கனேடிய அரசுக்கு நன்றி கூறுவதாகவும் கனேடிய உயர்ஸ்தானிகர் எரிக் வோல்ஷிடம் தெரித்துள்ள இலங்கைத் தமிழரசுக்கட்சியின் பாராளுமன்றக்குழுத்தலைவர் சிவஞானம் சிறிதரன், இதுகுறித்து கனேடியப்பிரதமர் மார்க் கார்னி மற்றும் பிரம்டன் நகர மேயர் பற்ரிக் பிரவுன் ஆகியோருக்கு எழுதிய கடிதத்தையும் உயர்ஸ்தானிகரிடம் கையளித்துள்ளார். இலங்கைக்கான கனேடிய உயர்ஸ்தானிகர் எரிக் வோல்ஷை புதன்கிழமை (21) கொழும்பிலுள்ள கனேடிய உயர்ஸ்தானிகரகத்தில் சந்தித்த சிறிதரன், இச்சந்திப்பின்போதே மேற்குறிப்பிட்டவாறு தமிழ்மக்கள் சார்பில் தனது நன்றியை வெள…
-
- 0 replies
- 119 views
- 1 follower
-
-
யாழ்ப்பாணம், தெல்லிப்பழை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட இளவாலை சந்திக்கு அருகாமையில் நேற்று புதன்கிழமை யுவதி ஒருவர் கடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், யாழ்ப்பாணம் – பண்டத்தரிப்பு பகுதியைச் சேர்ந்த 22 வயது யுவதியும், பூநகரி கௌதாரிமுனை பகுதியைச் சேர்ந்த 22 வயது இளைஞனும் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்னர் திருமணம் செய்துள்ளனர். பெண் வீட்டாருக்கு பயந்து இருவரும் தலைமறைவாக இருந்துள்ளனர். பின்னர் கடந்த சில தினங்களுக்கு முன்னர் இளவாலை பொலிஸ் நிலையத்திற்கு சென்றனர். இதன்போது அங்கு வந்த பெண் வீட்டார் குறித்த யுவதியை பிரிப்பதற்கு முயற்சி செய்தபோதும், இருவருக்கும் 18 வயது நிறைவடைந்தாலும், இருவரும் பிரிவதற்கு விருப்பம் தெரிவிக்காத நிலையில் அவர்…
-
-
- 5 replies
- 330 views
-
-
சயனைட் குப்பிகளை அணிந்து மண்ணுக்காக இந்த நாட்டிலே ஒரு இனம் போராடியது - ரிஷாட் ஆவேசப் பேச்சு மன்னார் புத்தளம் பாதை மூடப்பட்டதை ஏற்க முடியாது.சபாநாயகர் பொம்மை போல இருக்கின்றார். 25 வருடங்களில் இப்படி ஒரு சபாநாயகரை கண்டதில்லை.
-
-
- 3 replies
- 423 views
- 1 follower
-
-
Published By: VISHNU 21 MAY, 2025 | 09:50 PM வவுனியா பூவரசங்குளம் பொலிஸ்நிலைய பொறுப்பதிகாரி ஐந்து இலட்சம் ரூபாய் இலஞ்சம் பெறமுற்ப்பட்ட போது இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவால் புதன்கிழமை (21) கைதுசெய்யப்பட்டுள்ளார். குறித்த கைது நடவடிக்கை புதன்கிழமை (21) மாலை இடம்பெற்றுள்ளது…. சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில், பூவரசங்குளம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி இலஞ்சம் கோருவதாக இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவிற்கு முறைப்பாடு வழங்கப்பட்டிருந்தது. இதனையடுத்து இன்றையதினம் பூவரசங்குளம் பொலிஸ்நிலையத்திற்கு வருகைதந்த இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் அதிகாரிகள் குறித்த பொலிஸ் நிலையத்தின் பொறுப்பதிகாரி ஜந்து இலட்சம் ரூபாய் இலஞ்சம் பெறமுற்ப்பட்ட போது கைதுசெய்துள்ளனர். காணி விடயம் ஒன்று தொடர்பாக குறித்த இலஞ்சம் ப…
-
- 6 replies
- 313 views
- 1 follower
-
-
21 MAY, 2025 | 04:50 PM அனுமதிக்கு மேலாக 300 படகுகளும் இலஞ்சம் வாங்கியே வடமராட்சி கிழக்கு கடலில் கடலட்டை பிடிப்பதற்காக தரித்து விடப்பட்டுள்ளன என வர்ணகுலசிங்கம் தெரிவித்தார். யாழ். வடமராட்சி ஊடக இல்லத்தில் இன்று (21) வட மாகாண கடற்றொழில் இணையத்தின் பிரதிநிதி நாகராசா வர்ணகுலசிங்கம் ஊடக சந்திப்பொன்றை ஏற்பாடு செய்திருந்தார். அவர் கருத்துத் தெரிவிக்கும்போது, யாழ். மாவட்டத்தில் குறிப்பாக வடமராட்சி பகுதிகளில் கடலட்டை பிடிக்க அனுமதி வழங்கக் கூடாது என நாம் குரல் குடுத்து வரும் நிலையில் 310 படகுகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கடலட்டை பிடிப்பதற்காக 310 படகுகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ள நிலையில் 600 வரையான படகுகள் கடலட்டை பிடியில் ஈடுபட்டுள்ளன. ஊழலற்ற கட்சி, அரசு என கூறிக்கொண்ட…
-
- 0 replies
- 158 views
- 1 follower
-
-
21 MAY, 2025 | 04:49 PM மருத்துவ சுகாதார பணியாளர்கள் வெளிநாடுகளிற்கு புலம்பெயர்வது குறித்து ஜெனீவாவில் இடம்பெற்ற உலக சுகாதார மாநாட்டில் சுட்டிக்காட்டியுள்ள சுகாதார அமைச்சர் நளிந்தஜெயதிஸ்ஸ இதன் காரணமாக இலங்கையின் சுகாதார துறைக்கும் பொருளாதாரத்திற்கும் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். 2022 முதல் 2025 முதல் ஆயிரக்கணக்கான சுகாதார பணியாளர்கள் நாட்டிலிருந்து வெளியேறியுள்ளனர் என அவர் தெரிவித்துள்ளார். 726 மருத்துவர்கள், 116 மருத்துவ அதிகாரிகள், 2800 மருத்துவ தாதிகள் நாட்டிலிருந்து வெளியேறியுள்ளனர் என சர்வதேச மாநாட்டில் தெரிவித்துள்ள அமைச்சர், எங்கள் சுகாதார பணியாளர்களை உருவாக்குவதற்கு பெருமளவு பணத்தை செலவிட்ட பின்னர் நாங்கள் தற்போது குறிப்பிடத்தக்க நிதி இழப்பை எ…
-
- 0 replies
- 144 views
- 1 follower
-
-
ரணில் அலுவலகத்தில் இரகசிய கலந்துரையாடல்! http://seithy.com/siteadmin/upload/ranil-wickremesinghe-201124-seithy.jpg உள்ளுராட்சி மன்றங்களில் ஆட்சி அமைத்தல் உள்ளிட்ட எதிர்கால அரசியல் நகர்வுகள் குறித்து கொழும்பு - பிளவர் வீதியில் அமைந்துள்ள முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் அரசியல் அலுவலகத்தில் விசேட கலந்துரையாடலொன்று இடம்பெற்றுள்ளது. முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் இதில் பங்கேற்றுள்ளார். முன்னாள் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் முக்கிய அரசியல் பிரமுகர்களும் இதில் கலந்துகொண்டுள்ளனர். இந்த கலந்துரையாடல் தொடர்பில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பிரேம்நாத் சி தொலவத்த தெரிவிக்கையில், அரசாங்கத்தின் தோல்வி உறுதியாகிவிட்டது. ஒருபுறம் பாதாள உலகக் குழுக…
-
- 0 replies
- 220 views
-
-
பிரம்டன் நினைவகம் குறித்து கனடாவுடன் இராஜதந்திர பேச்சு! http://seithy.com/siteadmin/upload/aruna-Jayasekara-01025-seithy.jpg கனடா, பிரம்டன் நகரில் நிர்மாணிக்கப்பட்டுள்ள தமிழின அழிப்பு நினைவகம் தொடர்பில் கனடாவின் மத்திய அரசுடன் இராஜதந்திர மட்டத்தில் பேச்சுவார்த்தையில் ஈடுபடத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இவ்வாறான நிலை இனிவரும் காலங்களில் ஏற்படாமல் இருப்பதை தடுக்கும் பாரிய பொறுப்பு அரசாங்கத்துக்கு உண்டு’’ என பாதுகாப்பு பிரதி அமைச்சர் அருண ஜயசேகர தெரிவித்தார். பாராளுமன்றத்தில் நேற்று விசேட கூற்றை முன்வைத்து உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார். இது தொடர்பில் அவர் தொடர்ந்து உரையாற்றுகையில், ‘‘2025.05.10 ஆம் திகதியன்று கடனாவில் பிரம்டன் நகரில் நிர்மாணிக்கப்பட்டுள்ள தமிழின…
-
- 1 reply
- 340 views
-
-
21 MAY, 2025 | 01:39 PM இலங்கை மின்சார சபையின் மறுசீரமைப்பில் முன்னேற்றத்தைக் குறிக்கும் வகையில், முன்மொழியப்பட்ட மின்சார திருத்த சட்டமூலம் உத்தியோகபூர்வமாக வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளது. புதிய சட்டமூலத்துக்கு அமைய முன்னர் இருந்த, இலங்கை மின்சார சபையை 12 தனித்தனி நிறுவனங்களாகப் பிரிப்பதை நோக்கமாகக் கொண்ட விதிகள் நீக்கப்பட்டுள்ளன. அதற்கு பதிலாக, திருத்தப்பட்ட சட்டமூலம் இலங்கை மின்சார சபையை நான்கு நிறுவனங்களாக மறுசீரமைக்க முன்மொழிகிறது. இவை அனைத்தும் முழுமையாக அரசுக்குச் சொந்தமானதாக அமையும். வலுசக்தி துறையில் செயற்றிறன் மற்றும் சேவை வழங்கலை மேம்படுத்துவதற்கான சீர்திருத்தங்களின் விரைவு மற்றும் முக்கியத்துவத்தை வலியுறுத்தி, சட்டமூலம் விரைவில் பாராளுமன்றத்தில் அனுமதிக்கா…
-
- 0 replies
- 141 views
- 1 follower
-
-
Published By: DIGITAL DESK 3 21 MAY, 2025 | 12:08 PM யாழ்ப்பாணம் மாவட்டச் செயலகத்தில் ஆரம்பிக்கப்படவுள்ள கடவுச்சீட்டு அலுவலக புனரமைப்பு வேலைகள் தொடர்பான முன்னேற்ற கலந்துரையாடல் மாவட்ட செயலர் மருதலிங்கம் பிரதீபன் தலைமையில் செவ்வாய்க்கிழமை (21) மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது. யாழ்ப்பாண மாவட்டச் செயலகத்தில் விரைவில் ஆரம்பிக்கப்படவுள்ள கடவுச்சீட்டு அலுவலகத்தின் புனரமைப்பு வேலைகளை விரைவாக நிறைவேற்றி முடிக்க வேண்டிய தேவைப்பாடுகளை மாவட்ட செயலர் வலியுறுத்தினார். மேலும், ஒப்பந்தகாரர்களினால் மேற்கொள்ளப்பட்டுவரும் வேலைகளின் முன்னேற்றத்தினை ஒவ்வொன்றாக ஆராய்ந்து உரிய அறிவுறுத்தல்கள் சம்பந்தப்பட்டவர்களுக்கு வழங்கினார். இக் கூட்டத்தினைத் தொடர்ந்து, கடவுச்சீட்டு அலுவலகம் அமையவுள்ள இ…
-
- 0 replies
- 138 views
- 1 follower
-
-
Published By: DIGITAL DESK 3 21 MAY, 2025 | 11:49 AM முல்லைத்தீவு, கொக்குதொடுவாய் கடற்கரை பகுதியில் சட்டவிரோத முறையில் சுருக்குவலை தொழிலில் ஈடுபட்டிருந்த ஐந்து மீன்பிடி படகு, இரண்டு சுருக்குவலைகளுடன் ஆறுபேர் கைது செய்யப்பட்ட சம்பவம் ஒன்று இன்று புதன்கிழமை (21) இடம்பெற்றுள்ளது. முல்லைத்தீவு, கொக்குதொடுவாய் கடற்கரை பகுதியில் சட்டவிரோத மீன்பிடித் தொழில் இடம்பெறுவதாக கடற்தொழில் திணைக்களத்தினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலையடுத்து குறித்த இடத்திற்கு சென்ற கடற்தொழில் திணைக்களத்தினர் , கடற்படையினர் சட்டவிரோத தொழிலில் ஈடுபட்டிருந்த ஐந்து மீன்பிடி படகுகளையும், இரண்டு தடை செய்யப்பட்ட சுருக்கு வலைகளுடன் ஆறு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த சட்டவிரோத மீன்பிடிக்கு …
-
- 0 replies
- 139 views
- 1 follower
-
-
தமிழ்க் கட்சிகள் இனவாதம் பேசிவருகின்றன: அமைச்சர் சந்திரசேகர் சாடல் May 21, 2025 தமிழ் மக்களின் இருப்புக்கு அச்சுறுத்தல் எனக் கூறும் தமிழ்க் கட்சிகள் அதனை பாதுகாப்பதற்குரிய திட்டங்களை முன்வைக்காமல், காவாளித்தனமான அரசியலை முன்னெடுத்து, இனவாதம் பேசிவருகின்றன என்று கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு, ” கொடிய யுத்தம் முடிவடைந்து 16 வருடங்களாகின்றன. எனினும், தமிழ் மக்களின் பிரச்சினைகள் எவ்வித மாற்றமும் கடந்த காலங்களில் தொடர்ந்தன. கடந்த செப்டம்பர் மாதத்துக்கு பிறகு இந்நிலைமை படிப்படியாக…
-
- 0 replies
- 230 views
-
-
முன்னாள் சுகாதார அமைச்சரின் மகன் இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவில் ஆஜர்! முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவின் மகன் ரமித் ரம்புக்வெல்ல, வாக்குமூலம் வழங்குவதற்காக இன்று (21) இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவில் ஆஜராகியுள்ளார். ஊழல் குற்றத்தைச் செய்ததாக இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவிற்கு கிடைத்துள்ள மூன்று முறைப்பாடுகள் தொடர்பாக கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்ட முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவை எதிர்வரும் 3 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்க கொழும்பு பிரதான நீதவான் தனுஜா லக்மாலி நேற்று (20) உத்தரவிட்டார். அத்துடன் முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவின் மகன் ரமித் ரம்புக்வெல்லவை சம்பந்தப்பட்ட வழக்குகளில் சந்தேக நபராகப் பெயரிடவும் நீதவ…
-
- 2 replies
- 181 views
-
-
அசைவ உணவகத்தை உடனடியாக மூடுங்கள்! நல்லூரில் நேற்றுப் போராட்டம் யாழ்ப்பாணம் - நல்லூரில், யாழ்ப்பாணம் மாநகரசபைக்கு அமைக்கப்பட்டுள்ள அசைவ உணவகத்தை மூடுமாறு வலியுறுத்தி நேற்று ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது. இது தொடர்பில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்ததாவது:- யாழ்ப்பாணம் நல்லூர் என்பது இந்துக்களின் புனித பூமியாகும். ஆனால், ஒட்டுமொத்த இந்துக்களின் மனங்களை நோகடிக்கும்படியாக, இங்கு அசைவ உணவகமொன்றைத் திறந்துள்ளனர். மிக இரகசியமான வகையில் இந்தப் ணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. மொருத்தமில்லாத இடத்தில், பொருத்தலாத சூழலில் இந்த அசைவ உணகம் அமைக்கப்பட்டுள்ளது. இதனடியாக அகற்றவேண்டும் என்று வலியுறுத்தி நாங்கள் போராட்டத்தில் ஈடுட்டுள்ளோம். எமது கோரிக்கைகள் அடங்கிய மனுவொன்று யாழ்ப்பாணம் ஆ…
-
-
- 218 replies
- 10.8k views
- 2 followers
-
-
யுத்த வெற்றியை கொண்டாடும் Anura - தமிழர்களின் இன அழிப்பிற்கு துணை போகிறாரா?
-
- 0 replies
- 190 views
-
-
சிறீதரனை சபையில் உரையாற்றவிடாமல் குழப்பம்! அர்ச்சுனாவும் குறுக்கீடு
-
- 3 replies
- 359 views
-
-
20 MAY, 2025 | 05:33 PM பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான தமிழ் தேசிய பேரவையினர் ஐரோப்பிய ஒன்றிய உயர்ஸ்தானிகர், அமெரிக்க மற்றும் சுவிஸ் நாடுகளின் தூதுவர்களுடன் செவ்வாய்க்கிழமை (20) சந்திப்புக்களை முன்னெடுத்துள்ளனர். இதன்போது பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், தமிழ் தேசிய மக்கள் முன்னணி பொதுச் செயலாளர் செல்வராசா கஜேந்திரன், தமிழ் தேசிய பசுமை இயக்கத்தின் தலைவர் பொ. ஐங்கரநேசன், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஈ. சரவணபவான், சிரேஸ்ட சட்டத்தரணி நடராஜர் காண்டீபன் ஆகியோர் ஐரோப்பிய ஒன்றிய உயர்ஸ்தானிகர் மற்றும் அமெரிக்க தூதரையும் சந்தித்தனர். இதனை தொடர்ந்து பிற்பகலில் சுவிற்சர்லாந்து தூதரகத்தில் அந்நாட்டு தூதுவரை சந்தித்து தமிழ் மக்களுக்கு ச…
-
-
- 2 replies
- 262 views
- 1 follower
-
-
Published By: DIGITAL DESK 3 20 MAY, 2025 | 04:55 PM கொழும்பு, ஹேவ்லாக் டவுன் பகுதியில் அமைந்துள்ள ஆடம்பர தொடர்மாடி குடியிருப்புக்குள் பெண்ணொருவர் ரி - 56 ரக துப்பாக்கியை கொண்டு சென்ற சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, குறித்த ஆடம்பர தொடர்மாடி குடியிருப்பிலுள்ள தனது வீட்டுக்கு பெண்ணொருவர் ரி-56 ரக தங்க முலாம் பூசப்பட்ட துப்பாக்கியை கொண்டு சென்றுள்ளார். இவர் துப்பாக்கியை வாகனத்தில் இருந்து எடுப்பதை அவதானித்த அங்கிருந்த பாதுகாப்பு அதிகாரி ஒருவர் பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளார். சம்பவ இடத்திற்கு சென்ற வெள்ளவத்தை பொலிஸார் குறித்த வீட்டை பரிசோதனை செய்து பெண்ணை கைது செய்துள்ளனர். இதன்போது, பை ஒன்றில் இருந்த ரி-56 துப்பாக்கியையும் கைப்பற…
-
-
- 11 replies
- 523 views
- 1 follower
-
-
20 MAY, 2025 | 05:41 PM யாழ்ப்பாணத்தை ஆட்சி செய்த 2ஆம் சங்கிலியன் மன்னனின் 406ஆவது நினைவு தினம் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை (20) யாழ்ப்பாணத்தில் அனுஷ்டிக்கப்பட்டது. யாழ்ப்பாணம் முத்திரைச் சந்தியில் அமைந்துள்ள சங்கிலியன் சிலைக்கு மலர் மாலை அணிவிக்கப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டது. அதனை தொடர்ந்து, 2ஆம் சங்கிலிய மன்னனின் வரலாற்றுக் குறிப்புகள் அடங்கிய நூலொன்றும் வெளியிட்டு வைக்கப்பட்டது. சிவசேனையின் ஏற்பாட்டில் யாழ்ப்பாண பல்கலைக்கழக ஓய்வு நிலை பேராசிரியர் க.தேவராஜா தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் மருதனார் மடம் ஆஞ்சநேயர் கோவில் ஆதீன கர்த்தா சிவஶ்ரீ சுந்தரேஸ்வரக் குருக்கள், இந்திய துணைத் தூதரக அதிகாரி நாகராஜன், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம், யாழ். மாநகர…
-
- 1 reply
- 255 views
- 1 follower
-
-
Published By: VISHNU 20 MAY, 2025 | 07:50 PM ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவினால் வடக்கு மாகாண பிரதமச் செயலாளராக தனுஜா முருகேசன் நியமிக்கப்பட்டுள்ளார். அதற்கமைவான நியமனக் கடிதம் ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்கவினால் இன்று (20) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் அவருக்கு வழங்கப்பட்டது. https://www.virakesari.lk/article/215275
-
- 1 reply
- 304 views
- 1 follower
-
-
தேசபந்துவைக் கொலை செய்ய சதித்திட்டம்! அமைச்சர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு. பதவி இடைநீக்கம் செய்யப்பட்ட பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னக்கோனை கொலை செய்வதற்கான சதித்திட்டம் குறித்த விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜயபால தெரிவித்துள்ளார். அத்துடன் தென்னக்கோனை கொலை செய்வதற்கான பொறுப்பு சிறைத்தண்டனை அனுபவிக்கும் சமன் குமார என்பவரிடம் வழங்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். இன்று (20) இடம்பெற்ற நாடாளுமன்ற அமர்வின் போதே பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜயபால மேற்கண்டவாறு கூறியுள்ளார். இதேவேளை எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவை சினைப்பர் தாக்குதல் மூலம் கொலை செய்யதிட்டமிட்டுள்ளனர் என்ற தகவல் பொய்யானது என உறுதி செய்யப்பட…
-
- 0 replies
- 167 views
-
-
20 MAY, 2025 | 04:44 PM ரணவிரு சேவை அதிகாரசபையின் வேண்டுகோளின் பேரில், யுத்தத்தினால் காயமடைந்த வீரர்களின் சிகிச்சை மற்றும் புனர்வாழ்வுக்காக இயங்கிவரும் பராமரிப்பு நிலையங்களுக்குத் தேவையான 05 வாகனங்களை கையளிக்கும் நிகழ்வு செவ்வாய்க்கிழமை (20) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்திற்குரிய வாகன தளத்தில் நடைபெற்றது. ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் அறிவுறுத்தலின் பேரில் இந்த வாகனங்கள் வழங்கப்பட்டதோடு அது தொடர்பான ஆவணங்களை ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க, ரணவிரு சேவை அதிகாரசபையிடம் கையளித்தார். இலங்கை இராணுவத் தலைமையகத்தின் ரணவிரு சேவை அதிகாரசபையின் சார்பாக மேஜர் எரங்க ரத்நாயக்க இது தொடர்பான ஆவணங்களைப் பெற்றுக்கொண்டார். இந்த வாகனங்கள் அனுராதபுரம், கம்புறுபிட்ட…
-
- 0 replies
- 160 views
- 1 follower
-
-
Published By: DIGITAL DESK 3 20 MAY, 2025 | 05:00 PM அமெரிக்கத் தூதரக அதிகாரிகளின் சமூக ஊடகக் கணக்குகளைப் போன்று ஆள்மாறாட்டம் செய்யும் போலியான சமூக ஊடகக் கணக்குகள் சமீபத்தில் அதிகரித்து வருவதை இலங்கையிலுள்ள அமெரிக்கத் தூதரகம் அவதானித்துள்ளது. ஆள்மாறாட்டம் செய்பவர்களின் சமூக ஊடகக் கணக்குகளுடன் தொடர்பாடல்களை/ ஊடாட்டங்களை மேற்கொள்வதை அல்லது அவற்றினூடாக வழங்கப்படும் தகவல்களை நம்புவதைத் தவிர்த்து, அமெரிக்கத் தூதரகத்தையோ அல்லது அதன் அதிகாரிகளையோ பிரதிநிதித்துவப்படுத்துவதாகக் கூறும் எந்தவொரு கணக்கினதும் நம்பகத்தன்மையினை ஆராய்ந்து உறுதிப்படுத்திக்கொள்ளுமாறு சமூக ஊடகங்களைப் பயன்படுத்துபவர்களை நாங்கள் ஊக்குவிக்கிறோம். எமது தூதரகத்தின் மிகவும் துல்லியமான மற்றும் மிகவும் புதுப்பிக…
-
- 0 replies
- 114 views
- 1 follower
-
-
Published By: DIGITAL DESK 2 20 MAY, 2025 | 04:06 PM “சிறுவர் இல்லங்களை நோக்கி அதிகளவான சிறுவர்கள் கொண்டுவரப்படுகின்றனர். இது எமக்கும், சிறுவர்களை பராமரிக்கும் நிறுவனங்களுக்கும் சவாலாக மாறியுள்ளது என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்தார். யாழ்ப்பாணம் - அரியாலையில் அமைந்துள்ள எஸ்.ஓ.எஸ். தொழிற்பயிற்சி நிலையத்தில் கற்கைநெறிகளை நிறைவு செய்த மாணவர்களுக்கான என்.வி.க்யூ. தரச் சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்வு செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதன் போது கருத்து தெரிவிக்கையிலேயே ஆளுனர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இந்த நிகழ்வில் சான்றிதழ்களை வழங்கிய பின்னர் ஆளுநர் மேலும் உரையாற்றியதாவது, சிறுவர் இல்லங்களை நோக்கி அதிகளவான சிறுவர்கள் கொண்டுவரப்படுகின்றனர். காலத்தின் சூழலாக அது மாறியி…
-
- 0 replies
- 162 views
- 1 follower
-