Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. தமிழ்த் தேசியக் கூட்டடைப்புக்கு எல்லை வகுக்க வேண்டும் - எம்.கே.சிவாஜிலிங்கம் (எம்.நியூட்டன்) தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அரசாங்கத்திற்கு துணைபோவதற்கு காலஎல்லை வகுக்கவேண்டுமென வடக்கு மாகாண சபையின் உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்தார். அண்மையில் வடக்கு மாகாண சபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் அடிப்படையில் தமது நிகழ்ச்சி நிரலாகக் கொண்டு ஐக்கிய நாடுகள் ஆணையாளர் மற்றும் ஐ.நா.மனித உரிமைப்பேரவை மற்றும் உறுப்பு நாடுகளுடன் கலந்துரையாடி தீர்வை எட்டவேண்டும். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அரசாங்கத்திற்கு துணைபோவதற்கு கால எல்லை வகுக்கவேண்டும். ஐ.நா சபையின் மற்றும் ஐ.நா.விற்கான அதிகாரிகள் இங்கு வந்து செல்கின்றபோதும் இலங்கை அரசாங்க…

  2. தமிழ் மக்களுக்கெதிராக இலங்கை இராணுவம் நடவடிக்கை எடுக்கவில்லை : இந்தியாவில் மஹிந்த “விடுதலைப் புலிகளுக்கெதிராக கடந்த 2009ஆம் ஆண்டு நடைபெற்ற யுத்தத்தை இன ரீதியிலான யுத்தமாக கருதக்கூடாது. மேலும் அவ் யுத்தத்தில் தமிழர்களை குறி வைத்து இராணுவ நடவடிக்கை எடுக்கப்படவில்லை” என மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். பா.ஜ.கவின் மூத்த தலைவர் சுப்பிரமணிய சுவாமியின் “விராட் ஹிந்துஸ்தான்” சங்கம் சார்பில் டெல்லியில் “இந்தியா - இலங்கை உறவுகள்: அதை முன்னோக்கி எடுத்துச்செல்வதற்கான பாதை” என்ற தலைப்பில் நேற்று நடைபெற்ற கருத்தரங்கில் கலந்து கொண்டே மஹிந்த ராஜபக்ஷ மேற்கண்டவாறு குறிப்பிட்டார். கருத்தரங்கில் மேலும் மஹிந்த, “விடுதலைப் புலிகளுக்கெத…

  3. மோடியை சந்தித்த, மஹிந்த, நாமல் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ ஆகியோர் சந்தித்து கலந்துரையாடியுள்ளனர். இச் சந்திப்பு இன்று புதுடில்லியில் இடம்பெற்றுள்ளது. http://www.virakesari.lk/article/40295

  4. சுவிஸிலிருந்து தாயகம் திரும்பியவர் மீது பொலிஸார் தாக்குதல்! சுவிஸ் நாட்டிலிருந்து தாயகம் திரும்பிய ஒருவர், சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்துத் தாக்கப்பட்டுள்ளார். உடுவில் பகுதியைச் சேர்ந்த 61 வயதான ஒருவர் தனது பரம்பரை சொத்தை மீட்பதற்கு நாட்டிற்கு திரும்பியுள்ள நிலையில், இவ்வாறு தாக்கப்பட்டுள்ளார் உடுவில் மகளிர் கல்லூரிக்கு அண்மையிலுள்ள பல கோடி ரூபாய் பெறுமதியான வீடு மற்றும் சொத்துக்குச் சொந்தக்காரரான மொறிஸ் அருணாசலம் பிரகாஷ் என்பவர், தனது பரம்பரை சொத்தை மீட்க தாயகம் திரும்பியுள்ளார். அது தொடர்பான ஆவணங்களை உடுவில் பிரதேச சபையில் சமர்ப்பித்து அவற்றுக்கான உரிமத்தையும் கோரியுள்ளார். அவரது கோரிக்கையை ஏற்பது தொடர்பில் உ…

  5. எப்போதும் உங்களுடனேயே இருப்போம் சம்பந்தனுக்கு உறுதியளித்த மோடி The Prime Minister, Shri Narendra Modi with a delegation led by the Speaker of the Sri Lankan Parliament, Mr. Karu Jayasurya, in New Delhi on September 10, 2018. இலங்கை எமது அயல்நாடு. அங்கு மீண்டும் போர் ஏற்படுவதற்கு இடமளிக்கமாட்டோம். எம்மை நம்புங்கள். நாம் எப்போதும் உங்களுடனேயே இருப்போம். இலங்கை அரசு காலதாமதமின்றி அரசியல் தீர்வைக் காணவேண்டும். இதில் இந்திய அரசு உறுதியாக உள்ளது. இவ்வாறு இந்தியத் தலைமை அமைச்சர் நரேந்திரமோடி தனக்கு உறுதியளித்ததாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்த…

  6. முல்லைத்தீவில் கொடூர வாள்வெட்டு மற்றும் துப்பாக்கி சூடு! நால்வர் மருத்துவமனையில்! முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு கைவேலி மருதமடு குளம் பகுதியில் நேற்று (11) இரவு 11.00 மணியளவில் ஆறுபேர் கொண்ட கும்பல் வாள்களுடன் வீடுபுகுந்து வீட்டில் இருந்து தாய், தந்தை பிள்ளை ஆகியோர் மீது வாள்வெட்டு தாக்குதல் நடத்தியுள்ளது. இதன்போது நாட்டு துப்பாகிசூட்டுக்கு இலக்கான வாள்வொட்டு கும்பலை சேர்ந்த ஒருவர் படுகாயம் அடைந்த நிலையில் ஆபத்தான நிலையில் அனுராதபுரம் மருத்துவ மனை கொண்டுசெல்லப்பட்டுள்ளார். இச்சம்பவம் பற்றி மேலும் தெரியவருகையில்:- கைவேலி மருதமடு குளம் பகுதியில் வீடு ஒன்றிற்குள் புகுந்த ஆறு பேர் கொண்ட வாள்வெட்டு கும்பல்…

  7. வடமாகாணசபையின் இன்றைய நிலை என்ன ??? தமிழ்தேசிய கூட்டமைப்பின் தலமை, தமிழ்தேசிய கூட்டமைப்பின் அங்கத்துவ கட்சிகளின் தலமைகள் யதார்த்தத்தை சரியாக உணர்ந்து கொண்டு செயற்பட்டிருந்தால் வடமாகாணசபை யில் இன்று இத்தனை குழப்பங்கள் உருவாகியிருக்க வாய்ப்பே இல்லை என வடமாகாணசபை அவை தலைவரும், தமிழரசு கட்சியின் முக்கியஸ்த்தருமான சீ.வி.கே.சிவஞானம் கூறியுள்ளார். வடமாகாணசபையின் அண்மைக்கால நிலமைகள் குறித்து இன்று ஊடகங்களுக்கு கருத்து கூறும்போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார். இதன்போது மேலும் அவர் கூறுகையில், மாகாண அமைச்சர்சபை இழுபறிகள் குறித்து தீர்வினை காண்பதற்காக முன்னர் ஒருதடவை முயற்சிகளை மேற்கொண்டிருந்தேன். ஆயினும் அது சாத்தி…

  8. புலம்பெயர்ந்தோர் பாதிக்கப்பட்டவர்களை கண்டுகொள்வதில்லை: சிவாஜிலிங்கம் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவிக்கரம் நீட்டுவதற்கு புலம்பெயர் உறவுகள் தவறுவதாக வடமாகாண சபை உறுப்பினர் சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார். சமகால விடயங்கள் தொடர்பில் ஆராயும் எமது ஆதவனின் ‘நிலைவரம்’ நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். அங்கு தொடர்ந்து தெரிவித்த அவர், ”எமது தமிழ் உறவுகளுக்காக ஜெனீவாவில் குரல் கொடுக்க செல்லும் எம்மை புலம்பெயர் அமைப்புகள் கண்டுக் கொள்வதில்லை. தமிழர்களுக்கு ஆதரவாக குரல் கொடுப்பதற்கு செல்லும் எமக்கும் எவ்வித அனுசரணையும் கிடைப்பதில்லை. கடன்பட்டே நாம் அங்கு செல்ல வேண்டியுள்ளது. அதுமாத…

  9. மன்மோகன் சிங், ராகுல் காந்தியை சந்தித்தார் மஹிந்த இந்தியாவுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மன்மோகன் சிங் மற்றும் ராகுல் காந்தி ஆகியோரை இன்று சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார். இந்த சந்திப்பில் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ மற்றும் ஜீ.எல்.பீரிஸ் ஆகியோரும் கலந்துகொண்டனர். பாரதிய ஜனதாக் கட்சியின் மூத்த தலைவர்களுள் ஒருவரான சுப்பிரமணியன் சுவாமியின் அழைப்பினை ஏற்று டில்லி சென்றுள்ள முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நேற்றைய தினம் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து கலந்துரையாடியிருந்தமை குறிப்பிடத்தக்கது. http://www.virakesari.lk/article/40334

  10. குடியிருப்புக்குள் புகுந்து இடையூறு விளைவித்த இரு இராணுவ வீரர்கள் மக்களால் மடக்கிப்பிடிப்பு பூநகரி கரியாலை நாகபடுவன் கணேஸ் மக்கள்குடியிருப்புக்குள் புகுந்து தொந்தரவு செய்த இராணுத்தினரை மக்கள் மடக்கிப்பிடித்ததுள்ளனர். இன்று அதிகாலை வீடு புகுந்த இராணுவத்தினரை கண்டு அச்சத்தில் சத்தமிட்ட வீட்டு உரிமையளரகளின் அலறல் சத்தத்தை கேட்ட அயல் வீட்டார்கள் குறித்த இரு இராணுவத்தினரை பிடித்து பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர். இராணுவத்தினர் தொடர்ந்தும் இவ்வாறான செயல்களில் ஈடுபட்டுவந்துள்ள நிலையில், சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தெரியப்படுத்தும் போது, ஆதாரத்துடன் தெரிவிக்குமாறு கூறப்பட்ட நிலையில் இன்று பொதுமக்கள் ஆதாரத்துடன் இரு இராணுவ வீரர்களை…

  11. இலங்கையில் நல்லிணக்க முயற்சிகள் பாதிக்கப்படும் அபாயம்- இலங்கை தொடர்பான ஐநா குழு கருத்து இலங்கையில் நல்லிணக்க முயற்சிகளிற்கு ஆபத்து ஏற்பட்டுள்ளதாக இலங்கை குறித்த ஐநாவின் முக்கிய குழு தெரிவித்துள்ளது. இலங்கையில் பலர் எதிர்பார்த்ததை விட முன்னேற்றத்தின் வேகம் மிகவும் மெதுவானதாகவே காணப்படுகின்றது என ஜேர்மனி மசடோனியா மொன்டினீக்ரோ பிரிட்டன் ஆகிய நாடுகள் தெரிவித்துள்ளன. முக்கியநடவடிக்கைகளை எடுப்பதில் போதிய முன்னேற்றம் காணப்படாததால் நல்லிணக்க முயற்சிகள் பாதிக்கப்படுவதற்கான அபாயம் காணப்படுகின்றது என நான்கு நாடுகளும் தெரிவித்துள்ளன. ஐக்கிய நாடுகள் அமைப்புடன் இலங்கை அரசாங்கம் தொடர்ச்சியாக ஈடுபாட்டை வெளிப்படுத்துவதையும் காணாமல்போனோர் க…

  12. நந்திக்கடலில் மீன்கள் கொத்துக் கொத்தாய் உயிரிழப்பு முல்லைத்தீவு நந்திக்கடலில் ஆயிரக் கணக்கான மீன்கள் கொத்துக் கொத்தாக உயிரிழந்து கரையொதுங்கிக் கிடப்பதையே படத்தில் காண்கிறீர்கள். வரட்சி, அதிக வெப்பம், நீரில் உப்பு செறிவின் அதிகரிப்பு காரணமாகவே மீன்கள் உயிரிழப்பதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். http://www.thinakaran.lk/2018/09/13/உள்நாடு/26913/நந்திக்கடலில்-மீன்கள்-கொத்துக்-கொத்தாய்-உயிரிழப்பு

  13. தமிழ்தேசிய கூட்டமைப்பு உத்தரவாதம் குறித்து விளக்கம் அளிக்க வேண்டும்….. குளோபல் தமிழ்ச் செய்தியாளர்… ஐ.நா மனித உரிமைகள் ஆணையகத்தின் தீர்மானத்தை இலங்கை அரசாங்கம் நடைமுறைப்படுத்தும் என தமிழ்தேசிய கூட்டமைப்பு உத்தரவாதம் வழங்கியிருக்கும் நிலையில் அரசாங்கத்தின் செயற்பாடுகள் மாறுபட்டதாக இருக்கின்றது. இந்நிலையில் தாம் வழங்கிய உத்தரவாதம் குறித்து தமிழ்தேசிய கூட்டமைப்பில் உள்ள சகல நாடாளுமன்ற உறுப்பினர்களும் தமிழ் மக்களுக்கு தங்களுடைய நிலைப்பாடுகளை தெளிவு படுத்தவேண்டியது கட்டயாம். என ஈ.பி.ஆர்.எல்.எவ் கட்சியின் தலைவரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான சுரேஸ் பிறேமச்சந்திரன் தெரிவித்துள்ளார். சமகால அரசியல் நிலமைகள் கு…

  14. மன்னார் முருங்கன் ஆதார வைத்தியசாலைக்கு மேலதிகமாக வைத்தியர்களை நியமிக்க கோரிக்கை முருங்கன் ஆதார வைத்தியசாலையில் தற்போது இரண்டு வைத்தியர்கள் மாத்திரமே கடமையாற்றி வருகின்ற நிலையில் குறித்த வைத்தியசாலைக்கு நோயாளர்கள் வருகை அதிகமாக காணப்படுவதோடு, வைத்தியர்கள் ஒய்வில்லாமல் பணிபுரிகின்றனர். இவர்கள் விடுமுறைகளில் சென்றால் அனைவரும் திரும்பி போகும் நிலை ஏற்பட்டுள்ளதாக முருங்கன் வைத்தியசாலை அபிவிருத்திக் குழுவினர் வடமாகாண சுகாதார அமைச்சர் ஜீ.குணசீலனின் கவனத்திற்கு கொண்டு வந்துள்ளனர். முருங்கன் ஆதார வைத்தியசாலைக்கு அமைச்சர் திடீர் விஜயம் ஒன்றை மேற்கொண்டு நேற்று சென்றிருந்தார். இதன் போது முருங்கன் ஆதார வைத்தியசாலைன் அபிவிருத்தி குழு உறுப…

  15. இறுதி யுத்தத்தில் உயிரிழந்தவர்களின் தொகையை அறிவித்தார் மஹிந்த இலங்கையில் இடம்பெற்ற இறுதி யுத்தத்தின்போது விடுதலை புலிகள் உள்ளிட்ட 8 ஆயிரத்துக்கும் குறைவானவர்களே உயிரிழந்துள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். பாரதிய ஜனதாக் கட்சியின் மூத்த தலைவர்களுள் ஒருவரான சுப்பிரமணியம் சுவாமியின் அழைப்பினை ஏற்று டெல்லி சென்றுள்ள முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நேற்றைய தினம் டெல்லியில் கருத்து தெரிவிக்கும்போதே இதனை தெரிவித்துள்ளார். மேலும் இறுதி யுத்தத்தின் போது மனித உரிமை மீறல்கள் இடம்பெற்றதாக சர்வதேச ரீதியில் இடம்பெற்ற குற்றச்சாட்டுக்கள் உண்மைக்குப் புறம்பானவை. அத்துடன் நாங்கள் ஒருபோதும் இனவாத யுத்தத்த…

  16. கீத் நொயர் கடத்தல் குறித்து எதுவும் தெரியாது – விசாரணையில் கோத்தா தெரிவிப்பு ஊடகவியலாளர் கீத் நொயார் கடத்தப்பட்டமை தொடர்பாக தனக்கு எதுவும் தெரியாது என்று, சிறிலங்காவின் முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார். 2008 மே 22ஆம் நாள் ஊடகவியலாளர் கீத் நொயார் கடத்தப்பட்டு தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக, சிறிலங்காவின் முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்சவிடம் விசாரணை நடத்தப்பட்டது. நேற்றுக்காலை 10 மணியளவில் குற்றப் புலனாய்வுப் பிரிவுக்குச் சென்ற அவரிடம் மூன்றரை மணிநேரம் விசாரணை நடத்தப்பட்டு வாக்குமூலம் பெறப்பட்டது. இந்த விசாரணைகளின் போதே, கீத் நொயார் கடத்தலுடன் தமக்கு எந்தத் தொடர்பும் இல்லை என்றும், அந்தச் சம்பவம் தொட…

  17. சீனாவின் கடன்பொறியில் சிறிலங்கா சிக்கவில்லை – என்கிறார் ரணில் சீனாவின் கடன் பொறிக்குள் சிறிலங்கா விழுந்து விட்டது என்று கூறப்படும் குற்றச்சாட்டுகளை சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நிராகரித்துள்ளார். வியட்னாமின் தலைநகர் ஹனோயில் நடைபெறும், உலகப் பொருளாதார மன்ற மாநாட்டில் பங்கேற்கச் சென்றுள்ள ரணில் விக்கிரமசிங்க, சிஎன்பிசி தொலைக்காட்சிக்கு அளித்துள்ள செவ்வி ஒன்றிலேயே இவ்வாறு கூறியுள்ளார். “சிறிலங்கா தனது கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த துறைமுகங்களின் கட்டுப்பாட்டை சீனாவிடம் இழந்து விட்டது என்று கூறப்படுகிறது. ஆனால், சீனாவின் உயர் வட்டி வீதக் கடன்களால் நாடு கடன்பொறியில் சிக்கியது என்று நான் நம்பவில்லை. நாங்கள் சீனாவுடன் தொடர்புகளை…

  18. நாய் கூடத் தின்ன முடியாத முந்திரிப் பருப்பை சிறிலங்கா அதிபருக்கு கொடுத்த சிறிலங்கன் எயர்லைன்ஸ் நாய் கூடச் சாப்பிட முடியாத முந்திரிப் பருப்புகளை சிறிலங்கன் எயர்லைன்ஸ் விமானத்தில் தனக்கு பரிமாறப்பட்டதாக, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன விசனம் வெளியிட்டுள்ளார். அம்பாந்தோட்டையில் நேற்று விவசாயிகள் மத்தியில் உரையாற்றிய போதே அவர் இவ்வாறு கூறினார். ”அண்மையில் காத்மண்டுவில் இருந்து புதுடெல்லி வழியாக கொழும்புக்கு சிறிலங்கன் விமான சேவையில் பயணித்தேன். அப்போது, விமானத்தில் தரப்பட்ட தரம் குறைந்த முந்திரிப் பருப்பை என்னால் சாப்பிட முடியவில்லை. மனிதர்களால் சாப்பிட முடியாத- நாய் கூடத் தின்னாத, இந்தப் பருப்புகளை கொள்வனவு செய்வதற்கு யார் அதிக…

  19. கடைசியாக ஜெயராஜுக்கும் புலிகளே தேவைப்படுகிறார்கள் தனது கடையைத் தொடர்ந்தும் கொண்டு நடத்துவதற்கு ! இன்று இலங்கையை மையமாகக் கொண்டியங்கும் ஆங்கில இணைய செய்திச் சேவையான டெயிலி மிரரினைப் பார்க்கும் சந்தர்ப்பம் கிடைத்தது. நாளாந்தச் செய்திகளோடு, செய்தியாளர் கருத்துக்கள் என்கிற பகுதியொன்றும் இருக்கிறது. அதில், கனடாவிலிருந்து எழுதிவரும் எஸ். பி. எஸ். ஜெயராஜ் அவர்களுக்கென்று ஒரு பக்கம் ஒதுக்கப்பட்டு, அவரும் அதில் தொடர்ச்சியாக அவ்வப்போது இடம்பெறும் முக்கிய அரசியல், பாதுகாப்பு நிகழ்வுகள் பற்றி எழுதிவருகிறார். அவ்வாறான ஒரு கட்டுரையில், அண்மையில் ஒட்டுசுட்டான் - புதுக்குடியிருப்பு வீதியில் முச்சக்கரவண்டியில் பயணித்தவர்களை பொலிசார் விசாரித்தபோது பிடிபட்ட ஆயுதங்கள், புலிகளின் சீ…

  20. யாழில் பதற்றம்; வெடித்தது வன்முறை: பொலிஸாரின் கட்டுப்பாட்டில் 75 பேர்! யாழ்ப்பாணம், வடமராட்சி பகுதியில் இரு குழுக்களுக்கு இடையில் ஏற்பட்ட மோதல் வன்முறையாக மாறியுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. பருத்தித்துறை சக்கோட்டைப் பகுதியில் இரு குழுக்களுக்கு இடையில் மோதல் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக அந்தப் பகுதியில் பதற்றமான நிலை ஏற்பட்டுள்ளது. வன்முறையில் ஈடுபட்ட சுமார் 75 க்கும் மேற்பட்டவர்களை பொலிஸார் தமது கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர். எனினும் மோதல் சம்பவத்துக்கான காரணம் இதுவரை வெளியாகவில்லை. https://www.ibctamil.com/srilanka/80/105893?ref=imp-news

  21. படையினர் வசமிருந்த காணி- விடுவிப்பு!! யாழ்ப்பாணம் – அச்சுவேலி பகுதியில் 23 வருடங்களாக பாதுகாப்புப் படையினர் வசமிருந்த பொதுமக்களின் காணி இன்று விடுவிக்கப்பட்டுள்ளது. 6 குடும்பங்களுக்கு சொந்தமான 2 ஏக்கர் காணி உரிமையாளர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது. 1995ஆம் ஆண்டு வலிகாமம் பகுதியில் இருந்து இந்த மக்கள் இடம்பெயர்ந்துள்ளனர். இதனையடுத்து, குறித்த காணி இராணுவத்தினரால் கையகப்படுத்தப்பட்டிருந்தது. தமது காணிகளை விடுவிக்குமாறு கோரி கடந்த 2014 ஆம் ஆண்டு காணி உரிமையாளர்கள், அச்சுவேலி இராணுவ முகாமிற்கு முன்பாக ஆர்ப்பாட்டம் மேற்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. https://newuthayan.com/story/16/படையினர்-வச…

  22. நிதி திரும்­பிச் செல்­வ­தற்கு நாம் எது­வும் செய்ய முடி­யாது – அவைத் தலை­வர் சி.வி.கே.!! சங்­கி­லி­யன் தோப்பு, மந்­தி­ரி­மனை, ஐமுனா ஏரிக்­கு­ளம் போன்­றவை உலக வங்­கி­யின் தந்­தி­ரோ­பாய அபி­வி­ருத்­தித் திட்­டத்­தில் புரா­தனச் சின்­னங்­க­ளைப் பாது­காக்­கும் திட்­டத்­தில் உள்­வாங்­கப்­பட்­டது. இவற்­றைச் சுவீ­க­ரிப்­ப­தற்­கான நட­வ­டிக்­கை­யில் பல இடர்­பா­டு­கள் இருப்­ப­தால் இந்­தத் திட்­டத்­துக்கு ஒதுக்­கப்­பட்ட நிதி திரும்­பிச் செல்­லும் நிலமை ஏற்­பட்­டுள்­ளது. வடக்கு மாகாண சபை­யின் அமர்வு நேற்று இடம்­பெற்­றது. ஆளும் கட்சி உறுப்­பி­னர் இ.ஜெய­சே­க­ரன், வடக்கு மாகாண முத­ல­மைச்­சர் சி.வி.விக்­னேஸ் வ­ர­னி…

  23. நீதியரசர் இன்னொரு முறை நீதிமன்றுக்குச் செல்ல வேண்டாம்!! வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் இன்னொரு முறை நீதிமன்றுக்குச் செல்வதை நான் விரும்பவில்லை. எனவே வடக்கு மாகாண அமைச்சரவைப் பிரச்சினைக்கு சுமுகமாக தீர்வைக் காண வேண்டும். இவ்வாறு இன்றைய அமர்வில் வடக்கு மாகாண அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம் கோரிக்கை முன்வைத்தார். https://newuthayan.com/story/11/நீதியரசர்-இன்னொரு-முறை-நீதிமன்றுக்குச்-செல்ல-வேண்டாம்.html

  24. முப்படைகளின் பிரதானி நாடு திரும்பியவுடன் வாக்குமூலம் பெறப்படும்… 2008 ஆம் ஆண்டு கொழும்பில் 11 இளைஞர்கள் கடத்தப்பட்டு காணாமற் போன சம்பவம் தொடர்பில் முன்னாள் லெப்டினென் கமாண்டர் சந்தன பிரசாத் ஹெட்டியாராச்சி, எதிர்வரும்26ம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்ற நீதிபதி லங்கா ஜயரத்ன உத்தரவிட்டுள்ளார். சந்தேகநபர் நீதிமன்றத்தில் ஆஜராகமல் இருப்பதற்கு முன்னாள் கடற்படைத் தளபதியாக இருந்த தற்போதைய முப்படைகளின் பிரதானி அட்மிரல் ரவீந்திர விஜேகுணர்தன உதவி ஒத்தாசை புரிந்துள்ளமைக்கு நேரடி சாட்சிகள் கிடைத்திருப்பதாக குற்றப் புலனாய்வு திணைக்களத்தினர் நீதிமன்றில் தெரிவித்தனர். …

  25. பொதுச் சந்தையை 45 நிமிடங்கள் கட்டுக்குள் வைத்திருந்த ரவுடிக்கும்பல் ; கிளிநொச்சியில் பதற்றம் கிளிநொச்சி பொதுச் சந்தையினை ரவுடிக்கும்பல் ஒன்று. இன்று மாலை ஆறு மணி முதல் ஆறு 45 மணி வரை தங்களது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்தது சினிமா பாணியில் நடந்துகொண்ட குறித்த ரவுடிக்கும்பல் சந்தைக்கு வந்தவர் போனவர் பெண்கள் என அனைவரையும் சரமாரியாக தாக்கியுள்ளனர். சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவது மகேந்திரா ரக வாகனம் ஒன்றில் வந்திறங்கிய இருபது பேர் கொண்ட இளைஞர் குழு ஒன்று “எங்கேயடா குமார்” என்று கேட்டப்படி கையில் கத்தி, இரும்புகள், இரும்பினால் தாக்குதல்களை மேற்கொள்ளவென செய்யப்பட்ட கூரிய ஆயுதங்கள் என்பவற்றுடன் அங்கும் இங்கும் ஓ…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.