ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143296 topics in this forum
-
முல்லைத்தீவில் உள்ளூர் பொருளாதரத்தை ஊக்குவிக்கும் ஓர் முயற்சி முல்லைத்தீவு மாவட்டத்தில் சுதந்திரபுரம் பகுதியில் முல்லை பால் பதனிடும் தொழிற்சாலை ஆரம்பிக்கப்பட்டு பலருக்கு தொழில் வாய்ப்பை வழங்கியுள்ளது. முல்லைத்தீவில் உள்ள கிராமங்களிலிருந்து பால் கொள்முதல் செய்து குளிரூட்டுதல், பதப்படுத்துதல் மற்றும் தரம் வாரியாக வகைப்படுத்தி நுகர்வோருக்கு விநியோகிக்கப்படுகிறது. அதில் எஞ்சிய கொழுப்பு, நெய், வெண்ணை அல்லது பால் கட்டிகளாக கடைகளுக்கு விற்கப்படுகிறது. குறித்த தொழிற்சாலையின் உற்பத்திகளா அடைக்கப்பட்ட பால், தயிர் ,நெய் ,பால் ரொபி, என்பன தயாரித்து விநியோக நடவடிக்கைகள் இடம்பெறுகின்றன. முல்லை பால்…
-
- 2 replies
- 485 views
-
-
நினைவாற்றலை இழந்த மஹிந்த! on: ஓகஸ்ட் 21, 2018 முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச பழைய விடயங்களை அனைத்தையும் மறந்து விட்டார் என கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. ஊடகவியலாளர் கீத் நொயார் கடத்தப்பட்டு சித்திரவதைக்கு உட்படுத்தியமை தொடர்பில் மஹிந்த ராஜபக்சவிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. இதன்போது தனக்கு கிடைத்த தொலைபேசி அழைப்பு தொடர்பில் நினைவில்லை என குற்ற விசாரணை திணைக்களத்திடம் மஹிந்த கூறியுள்ளார். மஹிந்த கூறிய வாக்குமூலங்கள் நேற்றைய தினம் கல்கிஸ்ஸ நீதிமன்ற நீதிபதியிடம் ஒப்படைக்கப்பட்டது. முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச குற்ற விசாரணை திணைக்களம் கேட்ட கேள்விகளுக்கு நினைவில்லை என குறிப்பிட்டுள்ளார். சாட்சியாளர் இவ்வா…
-
- 2 replies
- 496 views
- 1 follower
-
-
யாழில் பொது இடங்களில் குப்பை கொட்டிய ஐவருக்கு தண்டம் யாழ்ப்பாணம் மாநகரில் பொது இடங்களில் குப்பை கொட்டிய குற்றச்சாட்டில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்ட 5 குடியிருப்பாளர்களுக்கு தலா 5 ஆயிரம் ரூபா தண்டம் விதித்து யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டது. யாழ்ப்பாணம் பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் யாழ்ப்பாண மாநகர வீதி ஓரங்களில் குப்பை கொட்டியதாக 5 குடியிருப்பாளர்களுக்கு எதிராக நீதிமன்றில் தனித்தனியே வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது. யாழ்ப்பாணம் நீதிமன்ற நீதிவான் சின்னதுரை சதீஸ்தரன் முன்னிலையில் இந்த வழக்குகள் இன்று விசாரணைக்கு வந்தன. குற்றஞ்சாட்டப்பட்டவர்களுக்கு குற்றப்பத்திரம் வாசித்துக் காண்பிக்கப்பட்டது. அவர்கள் 5 பேரு…
-
- 2 replies
- 1k views
-
-
வலி.தெற்குப் பிரதேச சபை பெண் உறுப்பினரின் வீடு புகுந்து கொள்ளை யாழ்.குப்பிளான் வடக்குப் பகுதியிலுள்ள வலி.தெற்குப் பிரதேச சபையின் ஐக்கியதேசியக் கட்சியின் பெண் உறுப்பினரொருவரின் வீட்டில் யாருமில்லாத வேளையில் உட்புகுந்த கொள்ளையர்கள் பணம் மற்றும் பெறுமதியான பொருட்களைக் கொள்ளையிட்டுச் சென்றுள்ளனர். பட்டப்பகல் வேளையில் வீட்டில் யாருமில்லாத வேளையில் வீட்டின் கூரை ஓட்டை உடைத்து உள்ளே இறங்கிய கொள்ளையர்கள் பணம் மற்றும் பெறுமதியான பொருட்களைக் கொள்ளையிட்டுச் சென்றுள்ளனர். இந்தத் துணிகரக் கொள்ளைச் சம்பவம் இன்று செவ்வாய்க்கிழமை யாழ்.குப்பிளான் வடக்குப் பகுதியிலுள்ள வலி.தெற்குப் பிரதேச சபையின் ஐக்கியதேசியக் கட்சியின் பெண் உறுப்பினரொருவரின் வீ…
-
- 0 replies
- 410 views
-
-
ஒட்டுசுட்டானில் புலிக்கொடி விவகாரம்: முன்னாள் போராளி கைது! ஒட்டுசுட்டான் பகுதியில் விடுதலைப் புலிகளின் சீருடை மற்றும் வெடி பொருட்களுடன் ஒருவர் கைது செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய, மற்றுமொரு புனர்வாழ்வளிக்கப்பட்ட முன்னாள் போராளி கைது செய்யப்பட்டுள்ளார். இவர் நேற்று (திங்கட்கிழமை) கிளிநொச்சி சாந்தபுரம் பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இவ்வாறு கைது செய்யப்பட்டவர் கிளிநொச்சி சாந்தபுரம் 8 ஆம் வீதியை சேர்ந்த 3 பிள்ளைகளின் தந்தையே என தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஜூன் மாதம் ஒட்டுசுட்டான் பகுதியில் சுற்றுக்காவல் நடவடிக்கையில் ஈடுபட்ட பொலிஸார் முச்சக்கரவண்டி ஒன்றை வழிமறித்து சோதனையிட முற்…
-
- 0 replies
- 1.1k views
-
-
மகிந்தவின் இளைய சகோதரர் திடீர் மரணம் சிறிலங்காவின் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சவின் இளைய சகோதரரான சந்திர ருடோர் ராஜபக்ச தங்காலையில் இன்று மரணமானார் என்று ராஜபக்ச குடும்ப வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. 70 வயதான சந்திர ராஜபக்ச, மகிந்த ராஜபக்சவுக்கு இளையவராவார். டி.ஏ.ராஜபக்சவின் நான்காவது புதல்வராவார். உடல்நலக் குறைவினால் பாதிக்கப்பட்டிருந்த சந்திர ராஜபக்ச இன்று மரணமானார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இவர் மகிந்த ராஜபக்ச ஆட்சிக்காலத்தில், அவர் நெடுஞ்சாலைகள் மற்றும் துறைமுகங்கள் அமைச்சராக இருந்த போது, தனிப்பட்ட செயலராக இருந்தவர். சிறிலங்கா அரசியலில் முக்கிய புள்ளிகளாக இருக்கும் சமல் ராஜபக்ச, பசில் ராஜபக்ச, கோத்தாபய ராஜபக்ச ஆகியோரின…
-
- 0 replies
- 427 views
-
-
மருத்துவரின் வீடு மீது தாக்குதல்- சந்தேகநபர் ஒருவர் கைது!! யாழ்ப்பாணம் கொக்குவில் செம்பியன் வீதியில் உள்ள மருத்துவரின் வீட்டின் மீது தக்குத்தல் மேற்கொண்டார் என்ற குற்றச்ச்சாட்டில் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் கடமையாற்றும் மருத்துவர் ஒருவரின் வீட்டின் மீது இனம்தெரியாத கும்பல் தாக்குதல் நடாத்தியது. இது தொடர்பில் விசாரணை மேற்கொண்ட பொலிஸார் நல்லூர் அரசடி பகுதியைச் சேர்ந்த 19 வயது இளைஞனைச் சந்தேகத்தில் கைது செய்துள்ளனர். https://newuthayan.com/story/10/மருத்துவரின்-வீடு-மீது-தாக்குதல்-சந்தேகநபர்-ஒருவர்-கைது.html
-
- 1 reply
- 830 views
-
-
விஜயகலா மகேஷ்வரனுக்கெதிராக நடவடிக்கை எடுக்க முடியும் : சட்டமா அதிபர் (எம்.எம்.மின்ஹாஜ்) முன்னாள் பிரதி அமைச்சரும் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான விஜயகலா மகேஸ்வரனின் சர்ச்சைக்குரிய கருத்து தொடர்பில் நிலையியற் கட்டளை பிரகாரம் நடவடிக்கை எடுக்க முடியும் என சட்டமா அதிபர் ஜயந்த ஜயசூரிய, சபாநாயகர் கரு ஜயசூரியவுக்கு அறிவித்துள்ளார். சட்டமா அதிபரின் குறித்த முடிவினை சபநாயகர் வியாழக்கிழமை கூடவுள்ள பாராளுமன்றத்தில் அறிவிக்கவுள்ளார். மேலும் சட்டமா அதிபர் அனுப்பியுள்ள அறிக்கையில், "விஜயகலா மகேஸ்வரன் எம்.பியின் கருத்து அரசியலமைப்புக்கு முரணானதா என்பது தொடர்பில் எந்தவொரு குறிப்பும் இடப்படவில்லை." ஆகவே இது தொடர்பிலும…
-
- 1 reply
- 878 views
-
-
போர் நினைவுச் சின்னங்களை அகற்றக் கோரும் விக்கியின் கடிதம் – மௌனம் காக்கும் மைத்திரி வடக்கில் அமைக்கப்பட்டுள்ள போர் நினைவுச் சின்னங்களை அகற்றுமாறு சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவிடம், வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் கோரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பாக வடக்கு மாகாண முதலமைச்சர், கடந்த 17ஆம் நாள், சிறிலங்கா அதிபருக்கு கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளார். வடக்கில் முக்கியமான இடங்களில் அமைக்கப்பட்டுள்ளபோர் நினைவுச் சின்னங்கள், சிங்கள மேலாதிக்கத்தைக் காட்டுகின்றன. நல்லிணக்கத்துக்கும், நிலையான அமைதிக்கும் இவை தடையாக இருக்கின்றன. இந்த நினைவுச் சின்னங்களை பார்க்கின்ற போது தமிழ் மக்கள் கோபமும் முன்பமும் அடைகிறார்கள். …
-
- 3 replies
- 464 views
-
-
ஒலுமடு வெடுக்குநாரி மலையில் வழிபாட்டு உரிமைகோரி நெடுங்கேணியில் மாபெரும் போராட்டம் வவுனியா மாவட்டம் நெடுங்கேணிப் பிரதேசத்தில் உள்ள ஒலுமடு கிராமத்தின் வெடுக்குநாரி மலை பகுதியில் பொதுமக்கள் வழிபாடுகளில் ஈடுபட தொல்பொருள் திணைக்களம் தடைவிதித்தமைக்கு எதிர்ப்பு தெரிவித்தும் அம் மலையினை தொல்பொருள் திணைக்களத்திலிருந்து மீட்டுத்தருமாறு கோரியும் இன்று வவுனியா வடக்கு நெடுங்கேணி பிரதேச செயலகத்திற்கு முன்பாக போராட்டம் இடம்பெற்றது.வவுனியா வடக்கு பிரதேசத்தின் ஒலுமடு கிராமத்தில் இருந்து மூன்று கிலோ மீற்றர் தொலைவில் தமிழரின் பூர்விக பிரதேசமான வெடுக்ககுநாரி மலைப்பகுதியில் ஆதி லிங்கேஸ்வரர் என்ற சிவனுடைய இலிங்கம் காணப்படுவதுடன் தமிழ் மக்களு…
-
- 0 replies
- 412 views
-
-
பல பாகங்களிலிருந்தும் திரண்ட மக்கள் உரிமைகளுக்காக கொழும்பில் ஆர்ப்பாட்டம் நாட்டின் பல பாகங்களிலுமிருந்து திரண்ட மக்கள் தமது உரிமைகள் பறிபோவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து கொழும்பு லிப்டன் சுற்றுவட்டத்தில் ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுத்தனர். குறித்த ஆர்ப்பாட்டத்தில் பல்வேறு வகையான முறைப்பாடுகளை முன்வைத்து ஆர்ப்பாட்டக்காரர்கள் கோஷங்களை எழுப்பி போராட்டத்தை மேற்கொண்டனர். இதன்போது குறிப்பாக பொதுமக்களின் காணி உரிமை, மீனவர்களின் பிச்சினைகள் மற்றும் பரிபோகும் மக்களின் நிலம் போன்ற உரிமைகள் பறிபோவதாக தெரிவித்து ஆர்ப்பாட்டத்தை மேற்கொண்டமை குறிப்பிடத்தக்கது. http://www.virakesari.lk/article/38893
-
- 0 replies
- 343 views
-
-
புனர் வாழ்வளிக்கப்பட்ட முன்னாள் போராளிகள் 30பேருக்கு பட்டதாரி நியமனம்… புனர்வாழ்வளிக்கப்பட்ட விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் போராளிகள் 30பேருக்கு பட்டதாரி நியமனம்வழங்கப்பட்டமை மிகுந்த மகிழ்சிஅளிப்பதாக வடமாகாண ஆளுநர்றெஜினோல்ட் குரே தெரிவித்துள்ளார். புனர்வாழ்வு பெற்ற போராளிகளுக்கானஅரச நியமனங்கள் அலரிமாளிகையில்நேற்று (20) கௌரவ பிரதமர் ரணில்விக்கிரமசிங்க அவர்களினால் வழங்கிவைக்கப்பட்டிருந்தது. இது தொடர்பில்தனது மகிழ்சியை தெரிவித்து அவர்அனுப்பியுள்ள செய்தியில் இவ்வாறுதெரிவித்துள்ளார். புலிகள் அமைப்பிலிருந்து இறுதி யுத்தத்தில்சரணடைந்த போராளிகள் புனர்வாழ்வின்பின்னர் தமது உறவினர்களுடன் …
-
- 0 replies
- 743 views
-
-
விஸ்வமடு புன்னைனிராவிப் பகுதியில் இனந்தெரியாத நபர்கள் இன்று பிற்பகல் வைத்த தீயினால் சுமார் முப்பதிற்கும் மேற்ப்பட்ட பனைமரங்கள் மற்றும் ஆறுக்கும் மேற்ப்பட்ட தென்னை மரங்கள் என்பன எரிந்து நாசமாகியுள்ளது எனினும் அப்பகுதி இளைஞர்கள் மக்கள் ஒன்று சேர்ந்து தீப்பரவலைக் கட்டுப் பாட்டுக்குள் கொண்டு வந்தமையினால் பயந்தரு மரங்கள் பல காப்பாற்றப் பட்டுள்ளது சம்பவ இடத்திற்கு வருகைதந்த தர்மபுரம் பொலிசார் தீவைத்தவர்கள் தொடர்பில் விசாரணைகளை முன்னேடுத்துள்ளனர் https://www.quicknewstamil.com/2018/08/21/விஸ்வமடு-பகுதியில்-தீ-பர/
-
- 1 reply
- 433 views
-
-
யுத்தத்தின் பின்னர் தமிழ் மக்கள் உளவியல் பிரச்சினையில் பாதிக்கப்பட்டுள்ளனர். விக்கி வடக்கு கிழக்கு பகுதிகளில் உள்ள தமிழ் மக்கள் நீண்ட கால யுத்தத்துக்கு பின்னர் எதோ ஒரு வகையில் உளநல பாதிப்புக்குள்ளாகி இருப்பதாக வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார். மன்னார் மாவட்டத்தில் குடும்ப நல பணியகத்தின் அனுசரனையுடன் ஐரோப்பிய ஒன்றியத்தில் நிதி உதவியுடன் மன நலம் தொடர்பான நடை பவனி இன்று காலை 8.30 மணியளில் மன்னார் மாவட்டச் செயலகத்திற்கு முன்பாக ஆரம்பிக்கப்பட்டது. இதன் போது குறித்த நிகழ்வை ஆரம்பித்து வைத்து உரையாற்றுகையிலேயே அவர் அவ்வாறு தெரிவித்தார். அவர் தொடர்ந்து உரையாற்றுகையில், இந்த மக்களை உளநல ர…
-
- 0 replies
- 296 views
-
-
வட மாகாண சபை அசமந்தப் போக்குடன் செயற்படுவதாக தவராசா சாடல்! வட மாகாண சபை தொடர்ந்தும் அசமந்த போக்குடன் செயற்பட்டு வருவதாக வட மாகாண சபையின் எதிர்க்கட்சித் தலைவர் சி.தவராசா குற்றம் சுமத்தியுள்ளார். ஊடகவியலாளர்களின் கேள்விக்கு பதில் அளிக்கும் வகையில் எதிர்க்கட்சித் தலைவர் தவராசாவால் வெளியிடப்பட்டுள்ள ஊடக அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. குறித்த விடயம் கணக்காய்வாளர் நாயகத்தின் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளதன் மூலம் நிரூபனமாவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். உத்தியோகபூர்வ தகவல்களின் அடிப்படையில், பாடசாலைகள் தவிர்ந்த வட மாகாண சபையின் அமைச்சுகள் மற்றும் திணைக்களங்களில் மொத்தமாக 7 ஆயிரத்து 510 வெற்றிடங்கள் உள்ளன …
-
- 1 reply
- 335 views
-
-
திருகோணமலைத் துறைமுகத்தில் ஜப்பானிய நாசகாரி ஜப்பானியக் கடற்படையின் “இகாசுச்சி” (Ikazuchi) என்ற நாசகாரிப் போர்க்கப்பல் நல்லெண்ணப் பயணமாக இன்று திருகோணமலைத் துறைமுகத்தை வந்தடைந்துள்ளது. ஜப்பானிய நாசகாரிக் கப்பலுக்கு சிறிலங்கா கடற்படையினர் பாரம்பரிய முறைப்படி வரவேற்பு அளித்தனர். இதையடுத்து, ஜப்பானிய நாசகாரிக் கப்பலின் கட்டளை அதிகாரியான கப்டன் யோகோ அசுமா, சிறிலங்கா கடற்படையின் கிழக்குப் பிராந்திய கட்டளை அதிகாரிகளைச் சந்தித்து இருதரப்பு உறவுகள், மற்றும் பயிற்சிகள் குறித்து கலந்துரையாடினார். மூன்று நாட்கள் திருகோணமலைத் துறைமுகத்தில் தரித்து நிற்கவுள்ள ஜப்பானிய நாசகாரியில் உள்ள மாலுமிகள், சிறிலங்கா கடற்படையினர் ஏற்பாடு செய்யும் நிகழ்வுகளிலும…
-
- 0 replies
- 319 views
-
-
வடமராட்சி கடலட்டைப் பிரச்சினை அமைச்சர்களுடன் இன்று பேச்சு அதன் பின்னரே மைத்திரிக்கு முன்பான போராட்டம் பற்றி முடிவு வெளி மாவட்டங்களில் இருந்து வந்து வடமராட்சிக் கடலில் கடலட்டை பிடிப்பவர்கள் தொடர்பான பிரச்சினையால் அங்கு ஏற்பட்டுள்ள முறுகல் நிலை பற்றி கடற்றொழில் நீரியல் வளத்துறை அமைச்சர் காமினி விஜித் விஜய முனி சொய்சா மற்றும் பிரதி அமைச்சர் எம்.எஸ்.அமீர் அலி ஆகியோர் மீனவர்களுடன் பேச்சு நடத்த இன்று யாழ்ப்பாணம் வருகின்றனர். அவர்களுடனான பேச்சின் பெறுபேறுகளைப் பொறுத்தே நாளை அரச தலைவரின் வருகையின்போது நடத்துவதற்குத் திட்டமிடப்பட்ட போராட்டம் குறித்த முடிவு இறுதி செய்யப…
-
- 0 replies
- 187 views
-
-
காணி மீட்புப் போராட்டத்தில் புறக்கணிக்கப்பட்ட முதியவர் – வற்றாப்பளை அம்மனிடம் முறையீடு!! கேப்பாபுலவு போராட்டத்தை தொடக்கி தொடச்சியாக நடத்தி வந்த ஆறுமுகம் வேலாயுதபிள்ளை வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலய முன்றலில் தனியாகப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். ஆலய வழிபாட்டுக்காக கதிர்காமம் யாத்திரை சென்ற வேளை போராட்டத்தின் கணக்கு அறிக்கைகள் மற்றும் காணி விபரங்கள் அடங்கிய ஆவணங்களை ஒப்படைத்த நபர், அதனை மீளத் தர மறுத்து விட்டு தன்னை ஒதுக்கி விட்டுள்ளதாக அவர் குற்றஞ்சாட்டியுள்ளார். இந்த நிலையில் வற்றாப்பளை கண்ணகை அம்மனிடம் தனது ஆதங்கத்தைத் தெரிவித்து ஆலய முன்றலில் போராட்டத்தை ஆரம்பித்துள்ளார். https://newuthayan.com/story/10/காணி-மீட்புப்-போராட்டத்தில்…
-
- 0 replies
- 201 views
-
-
வடகிழக்கு அபிவிருத்திச் செயலணியின் கூட்டத்துக்கு கூட்டமைப்புக்கும் அழைப்பு வடக்கு -– கிழக்கு மாகாணங்களுக்கான அரச தலைவர் அபிவிருத்திச் செயலணியின் கூட்டத்துக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் 16 நாடாளுமன்ற உறுப்பினர்களும் அழைப்பு அனுப்பப்பட்டுள்ளது. வடக்கு – கிழக்கு அபிவிருத்திச் செயலணிக்கான குழுவில் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களின் பெயர்களை உள்ளடக்கி அரசிதழ் அறிவிப்பு வெளியிடப்பட்டிருக்காதபோதும், அரச தலைவர் மைத்திரிபாலவின் பணிப்புக்கு அமைவாக கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதேவேளை, சிறப்புச் செயலணியில் வடக்கு மாகாண முதலமைச்சரின் பெயர் உள்ளடக்கப்…
-
- 0 replies
- 263 views
-
-
காணாமல் போனவர்களின் உறவினர்களால் வவுனியா மாவட்ட செயலகத்தில் குழப்பம் ஓமந்தை, பொதுமக்களிடம் மன்னிப்பு கோரிய அரச அதிபர் பணிமனை வவுனியாவில் காணாமல் போனோர் அலு வலகத்தின் அமர்வு இடம்பெறாமையினால் காணாமல் போனோரின் உறவினர்களால் மாவட்ட செயலகத்தில் குழப்பம் ஏற்பட்டது டன் சம்பவம் குறித்து மாவட்ட செயலகமும் மன்னிப்பு கோரியது. இச்சம்பவம் தொடர்பில் தெரியவருவதா வது, காணாமல்போனோர் அலுவலக பிரதிநிதிகளினால் வவுனியா மாவட்டத்தில் காணாமல்போனோரின் குடும்ப அங்கத்தவர்களுடனான கூட்டம் நேற்று நகர சபை கலாசார மண்டபத்தில் நடைபெறவுள்ளதாக மேலதிக அரசாங்க அதிபர் தி.திரேஸ்குமாரினால் காணாமல்போனோரின் குடும்ப உறுப்பினர்களுக்கு கடிதம் மூலம் அறிவித்தல் வ…
-
- 0 replies
- 235 views
-
-
பொலிஸாரின் அறிவிப்பு பொய்யானது- கொக்குவிலில் இனந்தெரியாத குழு அட்டகாசம்!! கொக்குவில் சம்பியன் லேனில் மருத்துவர் ஒருவரது வீட்டை, உந்துருளியில் முகங்களை மூடிக்கட்டிக் கொண்டு வந்த குழுவினர் தாக்கியுள்ளனர். வீட்டிலிருந்த பொருள்கள், கண்ணாடிகள் அந்தக் குழுவினரால் உடைக்கப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் நேற்றுமாலை இடம்பெற்றுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர். யாழ்ப்பாணத்தில் குறித்த சில பொலிஸ் பிரிவுகளில் இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளதாக வடக்கு மாகாண மூத்த பிரதிப் பொலிஸ்மா அதிபர் நேற்றுமுன்தினம் தெரிவித்திருந்தார். இந்த நிலையில் நேற்…
-
- 5 replies
- 1.1k views
-
-
வவுனியா வடக்கு பிரதேச செயலாளர் மீது 50 க்கும் மேற்பட்ட முறைப்பாடுகள் வவுனியா வடக்கு பிரதேச செயலாளருக்கு எதிரான சுமார் 55 குற்றச்சாட்டுக்கள் அடங்கிய ஆவணங்களை இன்று காலை கொழும்பில் அமைந்துள்ள இலஞ்ச ஊழல் ஆணைக்குழு, உள்நாட்டு அலுவல்கள் அமைச்சர், கணக்காய்வாளர் நாயகத்திடம் ஒப்படைத்தாக வட மாகாணசபை உறுப்பினர் ஜி.ரி.லிங்கநாதன் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், அரச காணிகளை கைமாற்றுதலில் இடம்பெற்ற முறைகேடுகள் , கிரவல் அனுமதியில் நிதி மோசடி , வீட்டுத்திட்ட தெரிவில் இடம்பெற்ற மோசடி , வவுனியா வடக்கில் அமைந்துள்ள இரு சழூர்த்தி வங்கியும் முழு மீளாய்வு செய்ய வேண்டும் எனேனில் அவற்றிலும் மோசடி இடம்பெற்றுள்ளது. இவ்வாறான 55 குற்றசாட்டுக்கள…
-
- 0 replies
- 342 views
-
-
”மீனவர்களின் கறுப்பு கொடி போராட்டம்” யாழ் வடமராட்சி கிழக்கு பகுதி மீனவர்கள் தென்னிலங்கை மீனவர்களின் அத்துமீறிய மீன்பிடியை கண்டித்து கறுப்பு கொடி போராட்டம் ஒன்றை மேற்கொள்ளவுள்ளனர். போராட்டமானது ஐனாதிபதி வருகையின் போது கறுப்பு கொடி போராட்டம் நடத்த வடமராட்சி கிழக்கு மக்கள் தீர்மானித்துள்ளனர். வடமராட்சி கிழக்கில் தென்னிலங்கை மீனவர்கள் தொடர்ச்சியாக சட்டத்தை மீறி கடலட்டை பிடித்து வருகின்றனர். இது தொடர்பாக கடற்றொழில் நீரியல்வள திணைக்களம் தொடர்ந்தும் அமைதியாக இருப்பதுடன் தென்னிலங்கை மீனவர்களுக்கு ஆதரவாக நடந்து வருகிறது. குறித்த அப் பகுதி மீனவர்களின் சந்திப்பை அடுத்து தென்னிலங்கை மீனவர்களின் அத்துமீறல்களை கண்டிக்கும் வகையில் போராட்டம் நடாத்…
-
- 2 replies
- 420 views
-
-
வெடுக்குநாறி மலையை காக்க -ஆர்ப்பாட்டம்!! வவுனியா, ஒலுமடுவில் உள்ள வெடுக்குநாறி மலையைத் தொல்லியல் திணைக்களம் உரிமை கோருவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து பிரதேச மக்களால் நாளைமறுதினம் செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வவுனியா வடக்கு வடக்குப் பிரதேச செயலம் முன்பாக இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்படவுள்ளது. இந்தப் போராட்டத்தில் அனைவரும் கலந்து கொள்ள வேண்டும் என்று வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் அழைப்பு விடுத்துள்ளார். வவுனியா, வெடுக்குநாறி மலையும், ஆதி லிங்கேஸ்வரரும் எமது அடையாளம். அவற்றை ஆக்கிரமிக்க எடுக்கும் முயற்சிகளைத் தடுத்…
-
- 1 reply
- 801 views
-
-
இடை நிறுத்தப்பட்டிருந்த மன்னார் மனித எலும்புகள் அகழ்வு பணிகள் மீண்டும் ஆரம்பம்(வீடியோ) குளோபல் தமிழ்ச் செய்தியாளர் மன்னார் ‘சதொச’ வளாகத்தில் முன்னெடுக்கப்பட்டு வந்த மனித எலும்புக்கூடுகள் அகழ்வு பணிகள் கடந்த 10 ஆம் திகதி வெள்ளிக்கிழமை மாலையுடன் இடை நிறுத்தப்பட்டிருந்த நிலையில் குறித்த பணிகள் இன்று திங்கட்கிழமை (20) காலை மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. கடந்த 10 ஆம் திகதி வெள்ளிக்கிழமை மாலையுடன் மனித எலும்புகள் அகழ்வு பணிகள் இடை நிறுத்தப்பட்டது. -இந்த நிலையில் மீண்டும் இன்று திங்கட்கிழமை காலை 7.30 மணியளவில் 53 ஆவது நாளாக அகழ்வு பணிகள் இடம் பெற்று வருகின்றது. தற்போது வரை 66 மனித எலும்புக்…
-
- 0 replies
- 181 views
-