ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143302 topics in this forum
-
வடக்கில் அமைதியான சூழலை ஏற்படுத்த அரசாங்கம் தவறுகிறது:பாதுகாப்பு மோசமாகியுள்ளது என்கிறார் அமைச்சர் கலாநிதி சரத் அமுனுகம (ஆர்.யசி) விஜயகலா மகேஸ்வரன் எம்.பி.யின் கருத்து தவறானதென்பது எமக்கும் தெரியும், ஆனால் அவரது கருத்தை வைத்துக்கொண்டு அரசியல் செய்யாது வடக்கின் இன்றைய நிலைமையையும் அனைவரும் சிந்திக்க வேண்டும் என அமைச்சர் கலாநிதி சரத் அமுனுகம தெரிவித்தார். வடக்கில் தமிழ் மக்களுக்கான அமை தியான சூழலை உருவாக்கிக் கொடுக்க அரசாங்கம் தவறி வருகின்றது எனவும் அவர் சுட்டிக்காட்டினார். பாராளுமன்ற உறுப்பினர் விஜயகலா மகேஸ்வரன் முன்வைத்த கருத்துக்கள் குறித்து பல்வேறு அர…
-
- 1 reply
- 292 views
-
-
தந்திரமாகத் தப்பிக்கும்- போதைப் பொருள் வியாபாரிகள்-கைது செய்யத் திண்டாடும் யாழ்ப்பாணப் பொலிஸார்-!! போதைப் பொருள் வியாபாரிகளை நாம் கைது செய்ய முற்படும்போது அவர்கள் தந்திரமாகத் தப்பித்துவிடுகிறார்கள். அவர்கள் எங்களை விடப் புத்திசாலிகளாக இருக்கின்றனர். இவ்வாறு யாழ்ப்பாண மாவட்ட பொலிஸ் அத்தி யட்சகரின் பிரதிநிதியாகக் கலந்துகொண்ட பொலிஸ் பரிசோதகர் கமஹே தெரிவித்தார். வடக்கு -கிழக்கு சமூக நல்லிணக்க அமைப்பின் ‘போதை ஒழிப்போம் வன்முறை தவிர்ப்போம்’ எனும் கலந்துரையாடல் யாழ்ப…
-
- 0 replies
- 436 views
-
-
சங்கனை – சுழிபுரத்தில், பதின்ம வயதுச் சிறுமிகள், வன்புணர்வுக்கு உள்ளாக்கப்பட்டனர்.. சங்கானை பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட சங்கனை மற்றும் சுழிபுரம் ஆகிய இடங்களில் பதின்ம வயதுச் சிறுமிகள் இருவர் பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர் என, பிரதேச சிறுவர் பாதுகாப்பு அலுவலகருக்கு முறைப்பாடுகள் வழங்கப்பட்டுள்ளன. சிறுமி ஒருவருக்கு கருக்கலைப்புச் செய்யப்பட்டுள்ளதாகவும் முறைப்பாட்டில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.வன்புணர்வுக்குட்படுத்தினர் என 21 வயது இளைஞர்கள் இருவருக்கு எதிராகவே இந்த முறைப்பாடுகள் வழங்கப்பட்டுள்ளன. “சுழிபுரம் மத்தி, பல்லசுட்டி என்ற இடத்தில் 15 வயதுச் சிறுமியை 21 வயதான இளைஞன் தனது வர்த்தக…
-
- 11 replies
- 1.3k views
-
-
விஜயகலாவின் விடயத்தை இத்தோடு நிறுத்திக் கொள்ளுங்கள் - ஹக்கீம் நாட்டில் தீர்க்கப்படாத விடயங்கள் பல உள்ளன, அதை விடுத்து முன்னாள் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரனின் நீண்ட உரையின் சிறு பகுதியை தூக்கிப்பிடித்துக்கொண்டு ஆடுவது வேடிக்கையாகவுள்ளது என நகர திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவித்தார். அவர் இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில், முன்னாள் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் எதிர்பாராத விதமாக ஒருவார்த்தை பிழையாக கூறியமையினால் அவரை தூக்கிலிட்டு கொல்லவா? இவர்கள் சொல்கிறார்கள். தனது கருத்தை சொல்வதற்கு இருக்கின்ற தனிமனித சிறப்புரிமைக்கு சில கட்டுப்பாடுகள் அவசியம்தான். ஆனால் இப்போது வடக்கில் இருக்க…
-
- 1 reply
- 701 views
-
-
விஜயகலா மகேஸ்வரனுக்கு எதிராக யாழில் சுவரொட்டிகள்… குளோபல் தமிழ்ச் செய்தியாளர்.. வித்தியா கொலைக் குற்றவாளியைக் காப்பாற்றிய குற்றவாளி. அமைச்சர் பதவியை 50 கோடிக்கு விற்றவர். இவருக்கு MP பதவி எதற்கு? என்ற வாசகங்களை உள்ளடக்கி முன்னாள் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரனுக்கு எதிராக யாழ் நகரில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன. இந்த சுவரொட்டியை வெளியிட்டவர்கள் நாளைய தலைமுறை என தெரிவிக்கப்பட்டுள்ளது. http://globaltamilnews.net/2018/86960/
-
- 0 replies
- 409 views
-
-
124 கோடி ரூபா பெறுமதியான ஹெரோயின் மீட்பு : இருவர் கைது; இவ்வருடத்தில் கைப்பற்றப்பட்ட மிக அதிகளவான போதைப்பொருள் (எம்.ஆர்.எம்.வஸீம், இரோஷா வேலு) மரண தண்டனை விதிக்கப்பட்டு சிறையிலிருக்கும் கைதியின் கடத்தல் முயற்சி முறியடிப்பு களுபோவில மற்றும் பத்தரமுல்ல பகுதியில் 1248 மில்லியன் ரூபா பெறுமதியான ஹெரோயினுடன் இருவர் பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவினரால் நேற்று முன்தினம் இரவு கைது செய்யப்பட்டுள்ளனர். இவ்வாறு கைப்பற்றப்பட்ட103 கிலோ 948 கிராம் ஹெரோயின் போதைப்பொருளானது இந்த வருடத்தில் கைப்பற்றப்பட்ட மிகப்பாரிய போதைப்பொருள் தொகையாகும் என பொலிஸ் ஊடகப்பேச்சாளரும் பொலிஸ் அத்தியட்ச…
-
- 0 replies
- 424 views
-
-
சிங்கப்பூரில் பிரதமர் ரணிலை பின்தொடர்ந்தால் : அர்ஜுன மகேந்திரனை கண்டுபிடிக்கலாம் (ஆர்.யசி) அர்ஜுன மகேந்திரனை கைது செய்ய வேண்டும் என்றால் அல்லது அவர் இருக்குமிடத்தை கண்டறிய வேண்டும் என்றால் சிங்கப்பூர் சென்றுள்ள பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை பின் தொடரவேண்டும். அவ்வாறு பின் தொடர்ந்தால் இலகுவாக கண்டறிய முடியும் என மக்கள் விடுதலை முன்னணி தெரிவித்தது. தேசிய கணக்காய்வு சட்டமூலத்தை பலவீனப்படுத்தி குற்றவாளிகளை காப்பாற்றுவே பிரதமர் முயற்சிக்கின்றார் எனவும் அக்கட்சி குற்றம் சுமத்தியது. மக்கள் விடுதலை முன்னணி நேற்று அதன் தலைமையகத்தில் நடத்திய செய்தியாளர் சந்திப்பி…
-
- 0 replies
- 261 views
-
-
கட்சியின் தேசிய மாநாட்டில்- அதிர்ச்சியளிக்கும் முடிவுகள் -ரெலோ அமைப்பின் தலைவர் செல்வம் எம்.பி. அறிவிப்பு!! அடுத்த மாதம் நடைபெறவுள்ள கட்சியின் தேசிய மாநாட்டில் முக்கியமான அரசியல் முடிவுகளை அறிவிக்கவுள்ளோம். அந்த முடிவு அனைவருக்கும் அதிர்ச்சியளிக்கக் கூடியதாக இருக்கும். இவ்வாறு நாடாளுமன்ற உறுப்பினரும், ரெலோ அமைப்பின் தலைவருமான செல்வம்அடைக்கலநாதன் தெரிவித்தார். வவுனியாவில் பத்திரிகையாளர்களைச் சந்தித்தபோதே அவர் மேற்கண்டவாறு கூறினார். …
-
- 0 replies
- 217 views
-
-
பிரதமரின் சிங்கப்பூர் விஜயம்: அர்ஜுன மகேந்திரன் நாடு திரும்ப வழிவகுக்குமா? மத்திய வங்கியின் முன்னாள் ஆளுனர் அர்ஜுன மகேந்திரனை நாட்டுக்கு அழைக்க நடவடிக்கை எடுக்குமாறு சிங்கப்பூருக்கு உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கு அரசியல் தரப்பினர் வலியுறுத்தியுள்ளனர். மத்திய வங்கியின் பிணைமுறி மோசடி வழக்கில் பிரதான குற்றவாளியாக குற்றம் சாட்டப்பட்டுள்ள அர்ஜுன் மகேந்திரன் நாட்டிலிருந்து தப்பிச்சென்று சிங்கப்பூரில் வசித்து வருகின்ற நிலையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. சிங்கப்பூரில் இன்று (திங்கட்கிழமை) நடைபெறவுள்ள உலகநாடுகளின் உச்சிமாடொன்றில் கலந்துக் கொள்வதற்காக பிரதமர் நேற்று சிங்கப்பூருக்கு விஜயம் செய்தா…
-
- 0 replies
- 144 views
-
-
விஜயகலாவும் விடுதலை புலிகளும் குற்றச்செயல்கள் அதிகரிப்பதனால் வேதனைக்குள்ளாகியிருக்கும் யாழ்ப்பாண மக்கள் ' விடுதலை புலிகள் இருந்திருந்தால் இப்படியெல்லாம் நடந்திருக்குமா? ' என்று பொதுவில் கதைப்பது எல்லோருக்கும் தெரியும். விஜயகலாவும் அந்த உணர்வின் அடிப்படையில்தான் வீரசிங்கம் மண்டபத்தில் அன்றைய தினம் பேச முனைந்தார்.ஆனால், 'விடுதலை புலிகளை மீண்டும் கொண்டுவருவதே எங்கள் நோக்கம் ' என்று அவர் கூறியது தான் ' சட்டப்படி ' பிரச்சினையாகி விட்டதுபோலும். விடுதலை புலிகளின் இலட்சியங்களுக்கு ஆதரவாகப் பேசுவதற்கும் அந்த இயக்கத்தை மீளக்கொண்டுவரப்போவதாகப் பேசுவதற்கும் இடையில் இருக்கின்ற சர்ச்சைக்குரிய அம்சத்தை அந்தப் பெண்மணி புரிந்துகொள்ளவில்லை என்றே தெரிகிறது.விடு…
-
- 5 replies
- 919 views
- 1 follower
-
-
இஞ்சை இனி இருக்க ஏலாது…..!! கடந்த 11.1.2018 அன்று யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் யாழ்.மாவட்டப் பொலிஸ் அத்தியட்சகர் விஜித குணரட்ண தலைமையில் ஒரு கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்துக்கு அழைக்கப்பட்டவர்கள் யாரென்று தேடிப்பார்த்தால், யாழ்.குடாநாட்டில் குற்றச் செயல்களாகக் காணப்படுகின்ற வாள்வெட்டு, போதைப் பொருள் கடத்தல், பாலியல் வன்புணர்வு, குழுவாகச் சென்று தாக்குதல்கள் நடத்துவதுபோன்ற காரணங்களுக்காகக் கைது செய்யப்பட்ட யாழ்ப்பாணத்து இளைஞர்களின் அம்மாக்களும், அப்பாக்களும்தான். …
-
- 0 replies
- 383 views
-
-
15 தங்க விருதுகள் பெற்ற வடமாகாணம் வடமாகாண சபையின் அனைத்து நிறுவனங்களும் தங்கள் வினைத்திறனான செயற்பாட்டின் மூலம் எமது மாகாணத்தின் அபிவிருத்திக்கும், வினைத்திறனான நிர்வாகத்திற்கும் பங்காற்ற வேண்டும் என வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் தெரிவித்துள்ளார். அவர் இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில், வினைத்திறனான செயற்பாட்டின் மூலம் செயலாற்றியமைக்காக 15 தங்க விருதுகளை வடமாகாண சபை பெற்றுள்ளது. வடமாகாணத்தைச் சேர்ந்த 15 நிறுவனங்களுக்கு இந்த விருதுகள் வழங்கப்பட்டுள்ளன. அரசாங்கக் கணக்குகள் குழுவால் இலங்கைத் தீவு முழுவதும் அடங்கலாக ஒன்பது மாகாண சபைகளிலுமுள்ள மாகா…
-
- 0 replies
- 402 views
-
-
நியூயோர்க் ரைம்ஸ் செய்தி குறித்த மூலத்தை வழங்குமாறு ஐக்கிய தேசியக் கட்சி கோரிக்கை விசாரணை நடத்தவுள்ளதாகத் தெரிவிப்பு- சீனச்சார்பு நிலையில் ரணில்? இலங்கையில் 2015இல் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தல் செலவுக்காக மஹிந்த ராஜபக்க்ஷவிற்கு சீனா 7.6 மில்லியன் ரூபாய்கள் கொடுத்ததாக அமெரிக்கப் பத்திரிகையான நியூயோர்க் ரைம்ஸ் கடந்த 25 ஆம் திகதி செய்தி வெளியிட்டிருந்தது. அந்தச் செய்தி இலங்கைப் பத்திரிகைகளில் வெளியாகி பின்னரே மஹிந்த ராஜபக்க்ஷவும் மறுத்திருந்தார். சீன அரசாங்கமும் அதிகாரபூர்மாக அந்தச் செய்தியை நிராகரித்தது. இந்த நிலையில் இலங்கைப் பிரதமர் ரணில் தலைமையிலான ஐக்கிய தேசிய கட்சி, நியூயோர்க் ரைம்ஸ…
-
- 2 replies
- 593 views
-
-
வவுனியாவில் போதையில் ஏற்பட்ட வாள்வெட்டு மற்றும் மோதல்களில் 7 பேர் காயம்: 10 பேர் கைது வவுனியாவில் போதையில் ஏற்பட்ட பல்வேறு வாள்வெட்டு மற்றும் மோதல் சம்பவங்களில் 7 பேர் காயமடைந்து வவுனியா வைத்தியாசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். நேற்றையதினம் இடம்பெற்ற இச்சம்பவங்கள் தொடர்பாக தெரிய வருவதாவது, வவுனியா, தாண்டிக்குளம் பகுதியில் மாலை 7 மணியளவில் மது போதையில் மோட்டார் சைக்கிளில் சென்ற இளைஞர்கள் அப்பகுதியில் நின்றிருந்த இளைஞர்கள் மீது வாள் வீசி தாக்குதல் நடாத்தியதில் ஒருவர் படுகாயமடைந்தடி நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் தொடர்பாக பூந்தோட்டம், பெரியார்குளம் மற்றும் தோணிக…
-
- 0 replies
- 207 views
-
-
கோத்தாவுக்கு ஆப்பு வைக்கும் குமார வெல்கம நாட்டின் தலைவராக தெரிவு செய்யப்படுவர் குறைந்தபட்சம் ஒரு பிரதேச சபைத் தலைவராகவேனும் இருந்திருக்க வேண்டும் என்று கூட்டு எதிரணியின் முக்கிய உறுப்பினர்களில் ஒருவரான குமார வெல்கம தெரிவித்துள்ளார். ”என் அனுபவங்களைக் கொண்டு, இந்த நாட்டிலுள்ள மக்களுக்கும் அரசியல்வாதிகளுக்கும் நான் ஒரு செய்தியை வழங்க விரும்புகிறேன். நாட்டின் தலைவர் பதவிக்கான எமது எதிர்கால வேட்பாளர் இதற்கு முன்னர் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்திருக்க வேண்டும். அவ்வாறு இருந்தால் மட்டுமே, மக்களின் துன்பங்களை புரிந்து கொள்ள முடியும். அவ்வாறான ஒருவருக்குத் தான், நாட்டைப் பற்றிய போதிய அறிவு இருக்கும். மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினை…
-
- 0 replies
- 431 views
-
-
மத்தல விமான நிலைய விவகாரம் – மௌனம் காக்கும் இந்தியா மத்தல அனைத்துலக விமான நிலையத்தின் 70 வீத பங்குகளை இந்தியா பெற்றுக் கொள்ளவுள்ளதாக சிறிலங்கா அரசாங்கத் தரப்பில் செய்திகள் வெளியிடப்பட்டுள்ள போதிலும், இந்திய அரசாங்கம் இதுபற்றி கருத்து வெளியிடுவதை தவிர்த்து வருகிறது. கடந்த வாரம் இந்திய அதிகாரிகள் குழுவொன்று கொழும்பு வந்து இரண்டு நாட்கள் பேச்சுக்களை நடத்தியிருந்தது. இதன்போது மத்தல விமான நிலையத்தின் 70 வீத பங்குகளை, இந்தியாவும், 30 வீத பங்குகளை சிறிலங்காவும் பகிர்ந்து கொள்ள இணக்கம் காணப்பட்டுள்ளது. 40 ஆண்டுகளுக்கு குத்தகை அடிப்படையில் இந்த உரிமை உடன்பாடு செய்து கொள்ளப்படவுள்ளதாக, சிறிலங்காவின் அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா தெரிவித்திருந்தா…
-
- 0 replies
- 228 views
-
-
மைத்திரிக்கும் சீனாவிடம் இருந்து தேர்தல் நிதி? – விசாரணையின் தகவல் 2015 அதிபர் தேர்தல் பரப்புரைக்காக இரண்டு பிரதான வேட்பாளர்களும் சீன நிறுவனத்திடம் இருந்து, நிதியைப் பெற்றுக் கொண்டனர் என்று சிறிலங்கா காவல்துறையின் விசாரணைகளின் போது தெரியவந்திருப்பதாக, கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. சிறிலங்கா காவல்துறையின் உயர்மட்ட அதிகாரிகளை மேற்கோள்காட்டி இந்தச் செய்தி வெளியிடப்பட்டுள்ளது. 2015 அதிபர் தேர்தலின் போது, சீன மேர்ச்சன்ட் பொறியியல் நிறுவனம், அரசியல் கட்சிகளுக்கு நிதி வழங்கியது என்ற குற்றச்சாட்டு தொடர்பாக, 2016ஆம் ஆண்டு சிறிலங்கா காவல்துறையின் நிதிக்குற்ற விசாரணைப் பிரிவு விசாரணைகளை ஆரம்பித்தது. விசாரணைகளில…
-
- 0 replies
- 214 views
-
-
மாவையின் ஊரில் விடுவிக்கப்பட்ட காணிக்கு பதிலாகவே கோட்டையில் இராணுவ முகாம்: ரணில்- தமிழரசுக்கட்சி இணக்கப்பாடு வெளியானது! July 8, 2018 யாழ்ப்பாணம் கோட்டைக்குள் இராணுவ முகாம் அமைக்கப்படுவதற்கு தமிழரசுக்கட்சி சம்மதம் வழங்கியது. அந்த சம்மதத்தின் பின்னரே, இராணுவம் அங்கு முகாம் அமைக்கும் பணியை ஆரம்பித்துள்ளது என்ற தகவல் வெளியாகியுள்ளது. அண்மையில் பிரதமருடனான சந்திப்பின்போதே, தமிழரசுக்கட்சி இந்த சம்மதத்தை வழங்கியது. பலாலி விமானநிலையம் தொடர்பாக வடக்கு முதலமைச்சர் ஒரு கூட்டத்தை கூட்டியிருந்தார். இதற்கு ஏட்டிக்குப்போட்டியாக கடந்த யூன் 27ம் திகதி தமிழரசுக்கட்சியின் பிரமுகர்கள் கொழும்பிற்கு சென்று, பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை சந்தித்து பேசினர். தமிழரசுக்கட்சியின் நா…
-
- 0 replies
- 495 views
-
-
யாழ்ப்பாணக் கோட்டைக்குள்- படையினரை அனுமதியாதீர்!! யாழ்ப்பாணம் கோட்டைக்குள் இராணுவத்தினருக்குக் காணி ஒதுக்கப்படுவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து இன்று ஆர்ப்பாட்டம் நடத்துவதற்கான முன்னாயத்தங்கள் நடக்கின்றன. இதுவரையில் கோட்டைக்குள் உள்ள காணிகளில் எவையும் இராணுவத்தினர் அங்கு முகாம் அமைப்பதற்காக ஒதுக்கப்படவில்லை என்று அரச நிர்வாக அதிகாரிகள் தெரிவித்தாலும், அத்தகைய ஒரு கோரிக்கை தரைப்படையினரால் முன்வைக்கப்பட்ட நிலையில் அதற்கு எதிர்ப்புத் தெரிவிப்பது நியாயமானதே! கோட்டைக்குள் படையினருக்கு நிலம் வழங்குவதற்குக் காட்டப்படும் எதிர்ப்பை வழக்…
-
- 0 replies
- 835 views
-
-
இணைய வழி மோசடிகள் யாழ்ப்பாணத்தில் அதிகரிப்பு… குளோபல் தமிழ்ச் செய்தியாளர்.. “இணைய வழி மோசடிகள் யாழ்ப்பாணத்தில் அதிகரித்துள்ளன. கடந்த மாதத்தில் இரண்டு சம்பவங்கள் தொடர்பில் முறைப்பாடுகள் கிடைத்தன” என்று யாழ். நீதிமன்றுக்கு காவற்துறையினர் அறிவித்துள்ளனர். கடனட்டை ஊடாக இணைய வழியில் மோசடி செய்தார் என்ற குற்றச்சாட்டில் ஒருவரை கைது செய்து யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் முற்படுத்திய போதே காவற்துறையினர் இந்த விடயத்தை நீதிமன்றில் தெரிவித்தனர். யாழ்ப்பாணத்திலுள்ள ஒருவர் வெளிநாடு ஒன்றுக்குச் செல்வதற்கான நுழைவிசாவுக்கு (விசா) இணையம் மூலம் (ஒன்லைன் அப்லிக்கேசன்) விண்ணப்பிக்க கொழும்பிலுள்ள உறவினரின் உதவியை …
-
- 1 reply
- 614 views
-
-
இராணுவக் கட்டுப்பாட்டிலிருந்து விடுவிக்கப்பட்ட – காங்கேசன்துறை எரிபொருள் நிரப்பு நிலையம்- விரைவில் மக்கள் பயன்பாட்டுக்கு!! வலிகாமம் வடக்கில் தெல்லிப்பழை பிரதேச செயலகத்துக்குட்பட்ட இராணுவக் கட்டுப்பாட்டிலிருந்து விடுவிக்கப்பட்ட தெல்லிப்பழை பலநோக்கு கூட்டுறவு சங்க எரிபொருள் நிரப்பு நிலையம் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தினால் மீள் சீரமைப்புச் செய்யப்படுகிறது. இன்னும் 4 மாதங்களில் அது மீளச் செயற்படும் எனத் தெரிவிக்கப்படுகிறது. டீசல், பெற்றோல், மண்ணெண்ணை ஆகியவற்றுக்கான எரிபொருள் தாங்…
-
- 0 replies
- 333 views
-
-
சீன நிறுவனங்களின் மோசடிகள் மூடிமறைக்கப்பட்டன- புதிய குற்றச்சாட்டு நியுயோர்க் டைம்ஸ் வெளியிட்டுள்ள குற்றச்சாட்டுகள் குறித்து பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நீதி விசாரணைக்கு பகிரங்க அழைப்பு விடுத்துள்ள அதேவேளை மகிந்த ராஜபக்ச காலத்தில் இடம்பெற்ற சீனாவுடன் தொடர்புடைய பல மோசடிகள் குறித்த விசாரணைகள் வேண்டுமென்றே முடக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சீனா நிறுவனங்கள் தொடர்பிலான மூன்று பாரிய மோசடிகள் குறித்த விசாரணைகள் வேண்டுமென்றே முடக்கப்பட்டுள்ளன அல்லது கைவிடப்பட்டுள்ளன என விசாரணைகளுடன் தொடர்புடைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 2015 ம் ஆண்டிலேயே முன்னாள் ஜனாதிபதியின் தேர்தல் பிரச்சாரத்திற்கு நிதி வழங்கப்பட்டமை குறித்த விசாரணைகள் ஆரம்பமா…
-
- 0 replies
- 380 views
-
-
தமிழ் நாட்டில் மேலும் 1 இலட்சம் இலங்கை தமிழ் அகதிகள்! ஒரு இலட்சம் இலங்கை தமிழ் அகதிகள் தமிழ்நாட்டின் நலன்புரி முகாம்களில் தங்கியிருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது. 1983 ஆம் ஆண்டு இடம்பெற்ற கலவரம் மற்றும் அதன் பின்னர் ஏற்பட்ட போர் சூழல் காரணமாக வடக்கு கிழக்கில் இருந்து சென்றவர்களே இவ்வாறு நலன்புரி முகாம்களில் தங்கியிருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது. அந்தவகையில் இந்த ஆண்டிலும் கடந்த மே மாதம் வரையிலான ஐந்து மாத காலப்பகுதியின் அடிப்படியில், 61 ஆயிரத்து 422 பேர் 24 மாவட்டங்களில் உள்ள 107 அகதிகள் முகாம்களில் தங்கியுள்ளனர். மேலும் இந்த அகதிகள் முகாம்களுக்கு வெளியில் 35 ஆயிரத்து 316 பேர் தங்கி இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. …
-
- 1 reply
- 675 views
-
-
முல்லைத்தீவில் புற்றுநோயாகியுள்ள நுண்கடன் கலாசாரமும் அதிகரித்துவரும் தற்கொலைகளும் மூன்று தசாப்தகால போரினால் உறவுகள், உடமைகள், வாழ்வாதாரம் என அனைத்தையும் இழந்து, கேள்விக்குறியாகிப்போன எதிர்காலத்தோடு வாழ்ந்துவரும் வடக்கு, கிழக்கு மக்கள் தற்போது மற்றுமொரு பேரழிவில் சிக்கி மாண்டு வருகின்றனர். நுண்கடன் நிதிநிறுவனங்கள் பாதிக்கப்பட்டுள்ள மக்களை குறிவைத்து கடன் வழங்கல் மூலம் தொடுத்துள்ள மிக மோசமான ஆக்கிரமிப்பினால் தற்கொலையை முடிவாக்கிக்கொள்ளும் சமூகம் ஒன்று உருவாகியுள்ளது. இதனை மாபெரும் சமூகச் சீரழிவிற்கான ஆரம்ப அறிகுறியாகவே கருத முடிகிறது. குறிப்பாக முல்லைத்தீவு மாவட்டத்தைச் சேர்ந்த மக்கள் யுத்…
-
- 0 replies
- 456 views
-
-
சாவகச்சேரியில் அதிகாலை பயங்கரம் – வீடொன்றில் அச்சுறுத்திக் கொள்ளை வீட்டுக்குள் புகுந்த திருடர்கள் பெரும் தொகை பணத்தை கொள்ளையடித்துச் சென்றுள்ளனர் எனப் பொலிஸார் தெரிவித்துள்ளனர். சாவக்சேரி, மீசாலை பகுதியிலுள்ள வீடொன்றில் இன்று அதிகாலை இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. இந்த வீட்டில் 12 லட்சம் ரூபாவுக்கும் அதிகமான தங்க நகைகளைத் திருடிய கொள்ளையர்கள் தப்பிச் சென்றுள்ளனர் என சாவகச்சேரிப் பொலிஸார் தெரிவித்துள்ளனர். இரண்டு மோட்டார் சைக்கிளில் முகத்தை மூடிய நிலையில் வந்த 4 பேர் கொண்ட குழுவால் கொள்ளையிடப்பட்டுள்ளது. வீட்டில் உள்ளவர்களை வாளை காட்டி அச்சுறுத்திய நிலையில், 1,233,500 ரூபா பெறுமதியான தங்க…
-
- 0 replies
- 224 views
-