Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. வவுனியா நகரசபையின் செயற்பாடுகள் இனத்தின் இருப்பை கேள்விற்குட்படுத்துவதாக பலரும் தமிழர் விடுதலைக் கூட்டனியின் செயலாளரிடம் எடுத்துரைப்பு தமிழர் விடுதலைக் கூட்டனியால் ஆட்சி அமைக்கப்பட்டுள்ள வவுனியா நகரசபையின் செயற்பாடுகள் தமிழ் மக்களின் இருப்பையும், இன ரீதியான நில விகிதாசார பரம்பலையும் கேள்விக்குட்படுத்தும் வகையில் அமைந்துள்ளதாக பல்வேறு தரப்புகள் அக் கட்சியின் செயலாளர் நாயகம் ஆனந்தசங்கரியிடம் சுட்டிகாட்டியுள்ளனர். இது தொடர்பில் தமிழர் விடுதலைக் கூட்டனியின் செயலாளர் நாயகம் ஆனந்தசங்கரியிடம் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, வவுனியா நகரசபையில் தென்னிலங்கை கட்சிகளுடன் ஆதரவுடன் தமிழர் விடுதலைக் கூட்டனி ஆட்சி அமைத்திருந்தது. தற்போது ந…

  2. 93 பில்லியன் ரூபாயை வழங்கியது சீனா ஹம்பாந்தோட்டை துறைமுகத்துக்கான மூன்றாவதும், இறுதிக்கட்ட குத்தகைக் கொடுப்பனவுமான 93 பில்லியன் ரூபாய்க்கான (584,194,800 அமெரிக்க டொலர்கள்) காசோலையை சீன, மேர்ச்சன்ட் போர்ட் ஹோல்டிங்ஸ் நிறுவனம் நேற்றைய தினம் (20) அரசாங்கத்திடம் கையளித்துள்ளது. சீன நிறுவனத்தின் இலங்கை பிரதிநிதி ரே ரென், துறைமுக அதிகாரசபைத் தலைவர் பராக்கிரம திசநாயக்கவிடம், இறுதிக்கட்டக் கொடுப்பனவுக்கான காசோலையை வழங்கியுள்ளார். முதல்கட்டத் தொகையான 292 மில்லியன் டொலர், கடந்த ஆண்டு டிசம்பரிலும், இரண்டாம் கட்டத் தொகையான 97 மில்லியன் டொலர் கடந்த ஜனவரியிலும் வழங்கப்பட்டிருந்தது. http://www.t…

  3. இந்தியாவைப் பகைத்ததால் விளைவுகளை அனுபவிக்கிறோம் – மகிந்த அமரவீர முன்னைய அரசாங்கம் இந்தியாவுடன் மோதல் போக்கை கடைப்பிடித்ததால், தற்போதைய அரசாங்கம் பல்வேறு சிக்கல்களை எதிர்கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டிருப்பதாக தெரிவித்துள்ளார் சிறிலங்காவின் விவசாய அமைச்சர் மகிந்த அமரவீர. நேற்று நாடாளுமன்றத்தில் உரையாற்றிய அவர், “மனித உரிமை மீறல்கள் விவகாரத்தில் ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் ஆரம்பத்தில் இந்தியா எம்மை ஆதரித்தது. பின்னர், எதிராகச் செயற்பட்டது. அப்போதைய அரசாங்கத்தின் அணுகுமுறையே அதற்குக் காரணம். நாங்கள் இந்தியாவை எதிரியாக்கியிருக்கிறோம். இது முன்னைய அரசாங்கத்தின் மிகப் பெரிய தவறு. இந்தியா போரின் போதும், ஐ.நா மனித உரிமைகள் பேரவையிலும் எமக்கு உதவியது…

  4. தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்புடன் தொடர்புடையவர்கள் என்ற குற்றச்சாட்டில் புலம்பெயர் நாடுகளில் வசிக்கும் 14 பேருக்கு இலங்கைக்குள் நுழையத் தடை விதிக்கப்பட்டுள்ளது. குறித்த தமிழர்களின் பெயர் பட்டியலை வர்த்தமானி அறிவித்தல் ஊடாக பாதுகாப்பு அமைச்சு வெளியிட்டுள்ளது. 2016 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட தடைப் பட்டியலில் இடம்பெறும் 86 தனிநபர்கள் பட்டியலுடன் இந்தப் 14 தமிழர்களும் இணைக்கப்பட்டுள்ளனர். இலங்கை ஐக்கிய நாடுகள் ஒழுங்கு விதிகள் சட்டத்தின் 47ஆம் பிரிவின் கீழ் தமிழீழ விடுதலைப் புலிகள், தமிழர் புனர்வாழ்வுக் கழகம் (ரிஆர்ஓ), தமிழர் ஒருங்கிணைப்புக் குழு (ரிசிசி) உள்பட 8 அமைப்புகளுக்கு இலங்கையில் தடை விதிக்கப்பட்டுள்ளது அத்துடன், தடைசெய்யப்பட்ட அமைப்புக்களுடன் தொடர்புடைய…

    • 2 replies
    • 858 views
  5. புலிகளின் முக்கியஸ்த்தர்கள் உள்ளிட்ட காணாமல் போனோர் பலரின் பட்டியல் வெளியானது… June 20, 2018 காணாமல்போன மற்றும் காணமல் ஆக்கப்பட்டதாக கருதப்படும் நபர்களின் பெயர்பட்டியல் இணையத்தளத்தில் வெளியிடப்பட்டுள்ளதாக வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு தெரிவித்துள்ளது. இது குறித்து மேலும் தெரியவருகையில், 2009 இலங்கையில் இடம்பெற்ற யுத்த காலப்பகுதியில் காணாமல் போன மற்றும் காணாமல் ஆக்கப்பட்டவர்களாக கருதப்படும் நபர்கள் தொடர்பான விடயங்கள் சர்வதேச உண்மை மற்றும் நீதி திட்டத்திற்கமைய இணையத்தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இது தொடர்பான தகவல்களை http://www.disappearance.itjpsl.com/#lang=tamil என்ற இணையத்தள முகவரியினூடாக அறிந்துகொள்ளலாம். அத்தோடு 351 நபர்களது பெயர் மற்றும் விபரங்க…

  6. சம்பந்தன்- விக்னேஸ்வரன்- சுமந்திரன் இரகசிய சந்திப்பு: விக்கியை நோக்கி நகரும் தமிழரசுக்கட்சி! June 21, 2018 தமிழ் தேசிய கூட்டமைப்பின் அடுத்த முதலமைச்சர் வேட்பாளர் யார் என்ற விவாதங்கள் சூடு பிடித்துள்ள நிலையில், தமிழரசுக்கட்சி குழப்பமான கட்டத்தை எட்டியுள்ளதாக தெரிகிறது. மீண்டும் விக்னேஸ்வரனையே முதலமைச்சர் வேட்பாளராக நியமிக்கப்படுவதற்கான சாத்தியங்களும் தென்பட்டுக் கொண்டிருக்கின்றன. எனினும் அதை உத்தரவாதப்படுத்த முடியாது. விக்னேஸ்வரனை தவிர்த்து, வடமாகாணசபை கைப்பற்றுவது மிக கடினமானதென்ற நிலைப்பாட்டில் கூட்டமைப்பின் பங்காளி கட்சிகளின் தலைவர்கள் மட்டுமல்ல, தமிழரசுக்கட்சியின் உயர்மட்ட தலைவர்களும் இருக்கிறார்கள். கடந்த ஓருசில வாரங்களில் சடுதியாக ஏற்பட்ட மாற்றம் இது…

  7. ஆலயடிவேம்பு பிரேதேச சபைத் தவிசாளரை விடுவிக்கக் கோரி, அக்கரைப்பற்றில் தமிழ் மக்கள் சற்றுமுன்னர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் அந்தப் பகுதியில் பதற்றம் ஏற்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்படுகிறது. அக்கரைப்பற்று 40 ஆம் கட்டை பகுதியில் முஸ்லிம்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலுடன் தொடர்புபட்டார் என்ற குற்றச்சாட்டின் அடிப்படையில் ஆலயடிவேம்பு பிரேதேச சபைத் தவிசாளர் க.பேரின்பராசாவை, எதிர்வரும் 26ந் திகதி வரை விளக்க மறியலில் வைக்குமாறு, அக்கரைப்பற்று நீதவான் நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது. குறித்த தவிசாளரை விடுவிக்கக் கோரி பிரதேச தமிழ் மக்கள் கோசங்களை எழுப்பி, பதாகைகளை ஏந்தியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். http://newuthayan.com/story/11/தமிழ்-முஸ்லிம்கள்-இடை…

  8. பொதுபல சேனா அமைப்பின் பொதுச்செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரரை விடுவிக்குமாறு கோரி ஹற்றனில் அமைதியான முறையில் எதிர்ப்பு ஊர்வலம் இன்று இடம்பெற்றது. ஹற்றன் நீக்ரோதாரம விகாரையின் பிக்குமார்களும், பிரதேச மக்களும் ஒன்றிணைந்து குறித்த எதிர்ப்பு ஊர்வலத்தை நடத்தினர். பிக்குமார் மற்றும் பிரதேச மக்கள் மலர் தட்டுக்களை ஏந்தியவண்ணம் ஹற்றன் மல்லியப்பு சந்தியிருந்து நீக்ரோதாரம விகாரைக்கு ஊர்வலமாகச் சென்று விகாரையில் பூசை வழிபாடுகளில் ஈடுப்பட்டனர். http://newuthayan.com/story/16/ஞானசாரரை-விடுவிக்கக்-கோரி-மலர்-ஏந்தி-ஊர்வலமாகச்-சென்று-அஞ்சலி.html

  9. பிறிஜிங் லங்கா நிறுவனத்தின் அனுசரணையுடன் தாயிலான் குடியிருப்பு மக்களும் இணைந்து மன்னாரில் புதிதாக நிர்மாணிக்கப்பட்டுள்ள கழுதைகள் மருத்துவமனை மற்றும் கல்வி மையம் ஆகியை இன்று வியாழக்கிழமை காலை உத்தியோக பூர்வமாக திறந்து வைக்கப்பட்டுள்ளது. மன்னார்-தலைமன்னார் பிரதான வீதி, சின்னக்கரிசல் தாயிலான் குடியிருப்பு பகுதியில் அமைக்கப்பட்ட கழுதைகள் மருத்துவமனை மற்றும் கல்வி மையம் ஆகியை திறந்து வைக்கப்பட்டுள்ளது. பிரதம விருந்தினராக உலக மிருகங்கள் பாதுகாப்பு அமையத்தின் பிரதி நிதி ஒட்தார குணவர்த்தன கலந்து கொண்டதோடு,விருந்தினர்களான மன்னார் பிரதேச சபையின் தலைவர் முஹமட் முஜாகிர், உறுப்பினர்கள், நகர சபையின் உறுப்பினர…

  10. மன்னார் பிரதான பாலத்தடி கடற்பகுதியில் இன்று வியாழக்கிழமை (21) காலை மீன் பிடிக்கச் சென்ற மீனவர் ஒருவரின் வலையில் பொருள் ஒன்று சிக்கிய நிலையில் குறித்த பொருள் பிள்ளையார் சிலை என தெரிய வந்துள்ளது. மன்னார் பிரதான பாலத்தடி கடற்கiயில் இன்று காலை மீனவர் ஒருவர் மீன் பிடிக்க கடலில் போட்டிருந்த வலையை கடலில் இருந்து எடுத்துக்கொண்டிருந்த போது குறித்த வலையில் பொருள் ஒன்று சிக்கிய நிலையில் குறித்த மீனவர் அதனை மீட்டு கடற்கரைக்கு கொண்டு சென்றார். குறித்த பொருளில் உள்ள மண்ணை அகற்றிய நிலையில அது ஒரு பிள்ளையார் சிலை என தெரிய வந்துள்ளது. குறித்த பிள்ளையார் சிலை பழைமை வாய்ந்ததா?அல்லது அண்மைக்காலங்களாக மன்னாரில் இனம் தெரியாத நபர்களினால் உடைக்கப்…

  11. மிருசுவில் படித்த மகளிர் திட்டம் பகுதியில் உள்ள வீட்டிற்குள் புகுந்த கொள்ளையர்கள் அங்கு ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தவர்களை கொடூரமான முறையில் தாக்கிவிட்டு அங்கிருந்த நகை, பணம் மற்றும் பெறுமதியான பொருட்களை கொளையடித்து சென்றுள்ளனர். வாள், கத்தி மற்றும் கூரிய ஆயுதங்களுடன் வந்த ஐந்திற்கும் மேற்பட்டவர்களினாலே இக் கொள்ளை சம்பவம் அரங்கேற்றப்பட்டுள்ளது. இன்று வியாழக்கிழமை அதிகாலை நடந்த இச் சம்பவத்தில் 5 இலட்சத்திற்கும் அதிகமான உடமைகள் கொள்ளையிடப்பட்டுள்ளதாக கொடிகாமம் காவல்துறையினர் தெரிவித்தனர் இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது:- மிருசுவில் ஆசைப்பிள்ளையேத்தம் படித்த மகளிர் திட்டத்தில் உள்…

  12. தமிழர் இனஅழிப்பு கண் கலங்கினார் ஐ.நா. செயலாளர் on: June 20, 2018 Print Email பிரதான செய்திகள்:போதுமான வளங்கள் இல்லாதே காரணத்தினாலேயே பொறுப்பு கூறல் பொறிமுறையை விடயத்தில் இலங்கை அரசை ஐ.நா. வினால் நிர்பந்திக்க முடியாமல் இருப்பதாக ஐ.நா. செயலாளர் நாயகம் அன்டோனியோ குட்டர்ஸ் தெரிவித்துள்ளார். இன்று நோர்வையின் ஒஸ்லோ நகரில் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பின் போதே அவர் இதனை தெரிவித்தார். ஐ.நா. இலங்கை விடயத்தில் ஏன் தோல்வியை சந்திக்கவேண்டி ஏட்பட்டது… இலங்கை விடயத்தில் ஏன் இதுவரை சரியான பொறுப்புக்கூறல் நடைமுறைப்படுத்தப்படவில்லை என்று தமிழ் ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்கு பதில் அளிக்கும் போதே ஐ.நா. செயலாளர் நாயகம் இவ்வாறு தெரிவித்தார். …

    • 5 replies
    • 1.4k views
  13. கிழக்கை தாரைவார்த்து கொடுப்பதுதான் கட்சியின் கொள்கையா?:வியாளேந்திரன் கேள்வி! June 21, 2018 ஒரு புறம் வடகிழக்கு இணைப்பைப் பற்றி பேசிக்கொண்டு மறுபுறம் வடகிழக்கு இணைப்பிற்கு எதிரான கட்சிகளுக்கு கிழக்கு மாகாண முதலமைச்சர் பதவியை தாரைவார்த்து கொடுப்பதுதான் உங்கள் கட்சியின் கொள்கையா? என பாராளுமன்ற உறுப்பினர் வியாளேந்திரன் கேள்வி எழுப்பியுள்ளார். கிழக்கு மாகாண சபைத் தேர்தல் குறித்தும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் கொள்கையை பின்பற்றி வெற்றி பெற்றவர்கள் யோக்கியமானவர்கள் என்றால் அதில் இருந்து வெளியேறிவிட்டு தமிழ் தேசியக் கூட்டமைப்பை விமர்சிக்க வேண்டும் என கிழக்கு மாகாண முன்னாள் விவசாய அமைச்சரும் தமிழரசுக் கட்சியின் செயலாளருமாகிய கி.துரைராஜசிங்கம் அண்மையில் தெரிவித்த க…

  14. UNHCR இல் இருந்து அமெரிக்கா வெளியேற்றம் - இலங்கை மீதான சர்வதேசத்தின் அழுத்தம் குறையும் ஐக்கிய நாடுகள் சபை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் இருந்து அமெரிக்கா வெளியேறியமையால் இலங்கை மீதான சர்வதேசத்தின் அழுத்தம் குறையும் என சுகாதார போஷாக்கு மற்றும் சுதேச வைத்தியத்துறை அமைச்சரும் அமைச்சரவைப் பேச்சாளருமான டொக்டர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். அமெரிக்கா வெளியேறினாலும், நாம் சர்வதேசத்துக்கு வழங்கிய வாக்குறுதிகளில் இருந்து ஒருபோதும் பின்வாங்கவோ விலகியோ செயற்படப்போவதில்லை என்பதையும் நாம் உறுதியாகக் கூறிக்கொள்ள விரும்புகிறோம் எனவும் அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார். ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி அரசாங்கத்தை இக்கட்டான நிலைக்கு தள்ள திட்டமிட்ட சதி முயற்சிகளை ஆரம்பித்து…

    • 0 replies
    • 458 views
  15. கோத்தபாயவுக்கு ஆதரவு அளிக்க முடியாது…. June 21, 2018 அரசாங்கத்திற்கு சார்பாக கூட்டு எதிர்கட்சியில் சிலர் – மகிந்தானந்த…. குளோபல் தமிழ்ச் செய்தியாளர்… அரசாங்கத்தின் தவறுகளை சுட்டிக்காட்டி மீண்டும் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்ற கூட்டு எதிர்க்கட்சி போராட்டம் நடத்தி வரும் நிலையில், கூட்டு எதிர்க்கட்சியை சேர்ந்த சிலர், அரசாங்கத்திற்கு சாதமான நிலைமையை உருவாக்க முயற்சித்து வருவதாக நாடாளுமன்ற உறுப்பினர் மகிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார். இவர்களின் குறுகிய நோக்கம் கொண்ட செயற்பாடுகள் காரணமாக வீழ்ச்சியடைந்து வரும் அரசாங்கத்திற்கு சாதகமான சூழல் உருவாகியுள்ளது எனவும் அவர் கூறியுள்ளார். கூட்டு எதிர்க்கட்சிக்குள் தற்போது சிறிய அணிகள் சில உருவாகியுள்ளதுடன் பெ…

  16. வட­மா­காண சபைத் தேர்தலில் விக்கி தனி அணியில் களம் புகுவாரா? June 17, 2018 வட­மா­காண முத­ல­மைச்சர் சி.வி.விக்­னேஸ்­வரன் கூட்­ட­மைப்­பி­லி­ருந்து பிரிந்து சென்று தனித்து போட்­டி­யிடும் வகையில் கூட்­ட­மைப்­புக்கு சவா­லாக மாற்று அணி ஒன்றை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டு வரு­வ­தாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. எனினும் விக்­னேஸ்­வரனை தனி­யாக பிரிந்து செல்ல இட­ம­ளிக்க வேண்டாம் என தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் பங்­காளிக் கட்­சி­க­ளான தமி­ழீழ விடு­தலை இயக்கம்(ரெலோ) தமி­ழீழ மக்கள் விடு­தலைக் கழகம் (புளொட்) ஆகி­யன, கூட்­ட­மைப்பின் தலை­வரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்­பந்­த­னி­டம் எடுத்துக் கூறியுள்ளதாகவும் கூறப்படுகிறது. ஜனா­தி­பதி மைத்­தி…

  17. -எம்.றொசாந்த் சாவகச்சேரி கல்வி வலயத்துக்கு உட்பட்ட கொடிகாமம் - கச்சாய் பகுதியில், அதிபரின் தாக்குதலுக்கு இலக்கான மாணவி ஒருவர், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இச்சம்பவம், நேற்று (19) மாலை இடம்பெற்றுள்ளது. கச்சாய் பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றில் தரம் 10இல் கல்வி கற்கும் மாணவியே, இவ்வாறு அதிபரின் தாக்குதலுக்கு இலக்காகியுள்ளார். குறித்த பாடசாலையில் தரம் 10, 11 மாணவர்களின் பெற்றோருக்கான கூட்டம் பாடசாலையில் இடம்பெற்றுள்ளது. இந்தக் கூட்டத்துக்…

  18. தென்கிழக்கு பல்கலையின் துணைவேந்தர் பதவியிழப்பு: பேராசிரியர் உமா குமாரசாமி பதில் கடமைக்கு நியமனம்! June 20, 2018 தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தரின் கடமைகளை நிறைவேற்றுகின்ற நிறைவேற்று அதிகாரியாக பேராசிரியர் உமா குமாரசாமி நியமிக்கப்பட்டுள்ளார். இந்த நியமனம் ஜூன் 18ஆம் திகதியான நேற்றுமுன்தினம் திங்கட்கிழமை முதல் நடைமுறைக்கு வரும் வகையில் வர்த்தமானி அறிவிப்பை உயர்கல்வி மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் விஜேதாஸ ராஜபக்ச விடுத்துள்ளார். தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பேராசிரியர் எம்.எம்.எம். நாஜிமின் பதவிக் காலம் நிறைவடைவதற்கு மூன்று நாள்கள் முன்னதாகவே, அவரின் சேவை முடிவுறுத்தப்பட்டுள்ளது. வர்த்தமானி அறிவிப்பில் விதந்துரைக…

  19. அபிவிருத்தி முக்கியம்தான்; ஆனால் தனித்துவத்தை சிதைக்காமல் இருக்க வேண்டும்: முதலமைச்சர்! June 20, 2018 மண்டைதீவு-அல்லைப்பிட்டி இடையே புதிதாக அமைக்கப்பட்ட தொடுப்புப் பாலம் வடக்கு மாகாண முதலமைச்சர் நீதியரசர் விக்கினேஸ்வரனால் இன்று புதன்கிழமை காலை திறந்துவைக்கப்பட்டது. ஆயிரம் கிராமிய பாலங்கள் திட்டத்தின் கீழ் வடக்கு மாகாண வீதி அபிவிருத்தி திணைக்களத்தால் 32 மில்லியன் ரூபா செலவில் இந்தப் பாலம் புதிதாக அமைக்கப்பட்டிருந்தது. நிகழ்வில் பிரதம விருந்தினராகக் கலந்து கொண்ட முதலமைச்சர், பாலத்தை நாடாவெட்டித் திறந்து வைத்ததுடன் பெயர்ப் பலகையையும் திரை நீக்கம் செய்துவைத்தார். இந்த நிகழ்வில் மாகாண கல்வி அமைச்சர் கலாநிதி கந்தையா சர்வேஸ்வரன், மகளிர் விவகார அ…

  20. சுவிஸ் குமார் தப்பிக்க உதவிய பொலிஸ் அதிகாரிகளின் வழக்கு விசாரணை அறிக்கை சட்டமா அதிபரிடம்! June 20, 2018 புங்குடுதீவு மாணவி கொலை வழக்கின் முக்கிய சூத்திரதாரியான சுவிஸ்குமாரை விடுவித்து உதவியதாக பொலிஸ் அதிகாரிகளுக்கு எதிரான வழக்கின் விசாரணைகள் முற்றுப்பெற்று மேற்கொண்டு நடவடிக்கை எடுப்பதற்காக அறிக்கை சட்ட மா அதிபரிடம் கையளிக்கப்பட்டுள்ளதாக ஊர்காவற்றுறை நீதிவான் நீதிமன்றில் இன்று அறிவிக்கப்பட்டது. புங்குடுதீவு மாணவி வித்தியா சிவலோகநாதன் படுகொலை வழக்கின் முக்கிய சூத்திரதாரியாக கூறப்படும் சுவிஸ்குமார் என அழைக்கப்படும் மகாலிங்கம் சசிக்குமார் என்பவரை விடுவித்து உதவினார்கள் என்ற குற்றச்சாட்டில் வடக்கு மாகாண முன்னாள் மூத்த பிரதிப் பொலிஸ் மா அதிபர் லலித் ஏ ஜெயசிங்க …

  21. அரவணைப்பில் இருந்த தாயாரும் உயிரிழந்த நிலையில் , சுதாகரனின் பிள்ளைகள் தற்போது பாதுகாப்பின்றி உள்ளனர். பிள்ளைகளுக்காகவது மனம் இரங்கி ஆனந்த சுதாகரனை விடுவியுங்கள். இவ்வாறு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதியான ஆனந்தசுதாகரனின் தாயார் அரசிடம் உருக்கமான கோரிக்கையை விடுவித்துள்ளார். நவோதயா மக்கள் முன்னணியால் கொழும்பில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இந்தக் கோரிக்கையை விடுத்துள்ளார். http://newuthayan.com/story/17/பிள்ளைகளுக்கு-பாதுகாப்பில்லை-சுதாகரனை-விடுவியுங்கள்-தாயார்-உருக்கமான-வேண்டுகோள்.html

  22. தெற்கு அதிவேக வீதியில் குருந்து கஹஹெதெக்ம பிரதேசத்தில் இன்று அதிகாலை இடம்பெற்ற வீதி விபத்தில் அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த தாயும் மகளும் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது . கொட்டாவையிலிருந்து காலி நோக்கி புறப்பட்ட வான் இயந்திரகோளாறு காரணமாக வீதியின் ஓரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பாரவூர்தியுடன் மோதி ஏற்பட்ட இந்த விபத்தில் வானில் பயணித்த நான்கு அவுஸ்திரேலிய பிரஜைகளும் லொறியின் சாரதியும் காயங்களுக்குள்ளாகி வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி 37 வயதுடைய தாயும் நான்கு வயதுடைய அவருடைய மகளும் உயிரிழந்துள்ளனர். காயமடைந்த ஏனைய மூவரும் வைத்தியசாலையில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சைப் பெற்று வருகின்ற நிலையில் மேலதிக விசா…

  23. சிறைத் தண்டனை பெற்றுள்ள பொதுபலசேனா அமைப்பின் பொதுச் செயலாளர் ஞானசார தேரருக்கு பொது மன்னிப்பு வழங்குவது தொடர்பில் ஜனாதிபதியும் பிரதமரும் கலந்துரையாடி வருவதாக அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். கூறியுள்ளார். அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். இதற்கு முன்னரும் பௌத்த தேரர்களுக்கு எதிராக வழக்குத் தொடரப்பட்டு தண்டனைகள் வழங்கப்பட்டிருப்பதாக சுட்டிக்காட்டியுள்ள அமைச்சர் சட்டத்தின் மூலம் வழங்கப்படுகின்ற தீர்ப்பு குறித்து எதுவும் கூற முடியாது எனவும் தெரிவித்துள்ளார். தற்போதும் தண்டனை பெற்றுள்ள 15 பௌத்த தேரர்களும் 3 இந்து மத தலைவர்களும்…

  24. குளோபல் தமிழ்ச் செய்தியாளர் கிளிநொச்சி அறிவியல் நகர் காட்டுப்பகுதியில் நவீன ஸ்னார் இயந்திரத்துடன் புதையல் தேடிய இருவரில் ஒருவர் காவல்துறையினரினால் கைது செய்யப்பட்டுள்ளார். அறிவியல் நகர் காட்டுப்பகுதியில் நவீன ஸ்கானர் இயந்திரம் கொண்டு சந்தேகத்திற்கிடமான இருவர் புதையல் தேடுவது தொடர்பில் விசேட அதிரடிப்படையினருக்கு கிடைத்த இரகசிய தகவலை அடுத்து சுற்றி வளைப்பை மேற்கொண்டு விசேட அதிரடிப்படையினர் ஒருவரை கைது செய்துள்ளனர் இதன்போது ஒருவர் தப்பியோடியதுடன், மற்றுமொருவர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளதுடன் குறித்த நபர்கள் பயன்படுத்திய சுமார் 50 லட்சம் மதிக்கத்தக்க நவீன ஸ்கானர் இ…

  25. போரில் இறந்த புலிகளுக்கு இழப்பீடு வழங்கும் அமைச்சரவைப் பத்திரம் மீண்டும் நிராகரிப்பு கொழும்புச் செய்தியாளர்Jun 20, 2018 | 3:02 by in செய்திகள் போரில் இறந்த விடுதலைப் புலிகளின் குடும்பங்களுக்கு இழப்பீடுகளை வழங்குவதற்காக, சமர்ப்பிக்கப்பட்ட அமைச்சரவைப் பத்திரத்தை சிறிலங்கா அமைச்சரவை மூன்றாவது தடவையாக நேற்று நிராகரித்துள்ளது. இந்த அமைச்சரவைப் பத்திரத்தை, மீள்குடியேற்ற, புனர்வாழ்வு மற்றும் வடமாகாண அபிவிருத்தி, இந்து கலாசார அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் நேற்றைய அமைச்சரவைக் கூட்டத்தில் முன்வைத்திருந்தார். கடந்த இரண்டு வாரங்களாக அமைச்சரவையில் இந்தப் பத்திரம் சமர்ப்பிக்கப்பட்ட போது சிறிலங்கா அதிபரும், அமைச்சர்களும் எதிர்ப்புத் தெரிவித்தமையால், நிறுத்தி வைக்கப்ப…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.