Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகளை கண்டிக்கிறார் ஐ.நா உதவிச்செயலர் சிறிலங்காவில் முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகளை ஐ.நாவின் அரசியல் விவகாரங்களுக்கான உதவிச் செயலர் ஜெப்ரி பெல்ட்மன் கண்டித்துள்ளார். சிறிலங்காவுக்கான பயணத்தை மேற்கொண்டுள்ள அவர், முஸ்லிம்களின் பள்ளிவாசல்கள், வணிகங்களை இலக்கு வைத்து நடத்தப்பட்ட தாக்குதலைக் கண்டித்து நேற்று கருத்து வெளியிட்டுள்ளார். அத்துடன், வன்முறைகளில் ஈடுபட்ட, வெறுப்புணர்வு கருத்துக்களை வெளியிட்ட குற்றவாளிகளை நீதியின் முன் நிறுத்துமாறும், அவர் சிறிலங்கா அரசாங்கத்திடம் கோரியுள்ளார். சிறிலங்காவின் முஸ்லிம் அரசியல் தலைவர்கள், ஐ.நாவின் அரசியல் விவகாரங்களுக்கான உதவிச் செயலர் பெல்ட்மனைச் சந்தித்த போது, சிறிலங்காவில்…

  2. இன்று ஜப்பான் செல்கிறார் சிறிலங்கா அதிபர் சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன ஐந்து நாள் பயணமாக இன்று ஜப்பானைச் சென்றடைவார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. புதுடெல்லியில் இருந்து புறப்பட்ட சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன, இன்று காலை 8 மணியளவில் ஜப்பானின் நரிடா அனைத்துலக விமான நிலையத்தை சென்றடைவார். இந்தப் பயணத்தின் போது, ஜப்பானிய பிரதமர் சின்ஷோ அபேயுடன் இருதரப்புப் பேச்சுக்களை நடத்தவுள்ள சிறிலங்கா அதிபர், ஜப்பானிய சக்கரவர்த்தி அகிஹிட்டோவையும் சந்திப்பார். சிறிலங்கா அதிபருடன் அமைச்சர்கள் திலக் மாரப்பன, நிமல் சிறிபால டி சில்வா, மலிக் சமரவிக்கிரம ஆகியோரும், ஜப்பான் சென்றுள்ளனர். http://www.puthinappalakai.net/2018/03/12/news/29739

  3. இன்று பிற்பகல் மோடியைச் சந்திக்கிறார் சிறிலங்கா அதிபர் இந்தியாவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன, நேற்று இந்திய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தை சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார். அனைத்துலக சூரியசக்தி கூட்டமைப்பின் மாநாட்டில் பங்கேற்பதற்காக, இரண்டு நாள் பயணமாக நேற்று புதுடெல்லி சென்றிருந்தார் சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன. அவர் நேற்று மாலை இந்திய குடியரசுத் தலைவர் மாளிகைக்குச் சென்று, குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தை சந்தித்துப் பேச்சு நடத்தினார். அத்துடன், மாநாட்டில் பங்கேற்க புதுடெல்லி வந்துள்ள வெளிநாட்டுத் தலைவர்களுக்கு இந்திய குடியரசுத் தலைவர் அளித்த இராப்போசன விருந்திலும் சிறிலங்கா அதி…

  4. காத்தான்குடியில் பிரபல வர்த்தகர் மாயம் காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட காத்தான்குடி நகரில் பிரபலமான பாதணிகள் உற்பத்தி நிறுவனத்தின் வர்த்தகர் ஒருவரைக் காணவில்லை என கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டின் அடிப்படையில் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர். காத்தான்குடி நகர், மீன்பிடி இலாகா வீதி, மனேஜர் ஒழுங்கையைச் சேர்ந்த ஏ.எல்.எம். முஹம்மது முபாறக் (வயது 35) எனும் பாதணி தொழிற்சாலையின் உரிமையாளரே நேற்று இரவு 7.30 மணியிலிருந்து காணாமல் போயுள்ளார். இதுபற்றி அவரது மனைவி பாத்திமா நஸ்லியா இன்று காலை காத்தான்குடி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார். இரண்டு குழந்தைகளின் தந்தையான இவர் வழமைபோன…

    • 2 replies
    • 606 views
  5. இன முரண்பாட்டை ஏற்படுத்தும் இணைய பயன்பாடு 186 முகநூல் கணக்குகள் கண்காணிப்பு – இருவர் கைது… மக்கள் மத்­தியில் பதற்­றத்­தையும் இன முறு­கல்­க­ளையும் ஏற்­ப­டுத்தும் வண்ணம் செயற்பட்டவர்களின் 186 முகநூல் கணக்குகள் இதுவரை அடையாளங் காணப்பட்டுள்ளதாக தகவல் தொழில்நுட்பவியலாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. சமூக வலைத்தளங்கள் ஊடாக இனவாத மற்றும் பொய்யான தகவல்கள் பரப்பியவர்கள் குறித்து விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள அந்த சங்கம், கண்­டியில் இடம்­பெற்ற வன்­முறை சம்­ப­வங்­கள் தொடர்பில் பெரும்பாலானோர் வதந்திகளை பரப்பியதாகவும் குறிப்பிட்டுள்ளது. இந்த நிலையில், சம்பங்களுடன் தொடர்புடையவர்களை கைது செய்வதற்கு குற்றப்புல…

    • 1 reply
    • 278 views
  6. நாட்டின் விவசாயத்துறையினை பாதித்துள்ள பெரும் வறட்சி தான் எமக்கு முன்னாள் இருந்த பெரும் சவால் என எண்ணி இருந்தோம். ஆனால் அண்மைய கலவரங்கள் உள்ளூர் மட்டுமன்றி சர்வதேச அளவில் பெரும் சவாலை உண்டாக்கி உள்ளது என கவலை வெளியிடடார், கண்டிக்கு வந்த பிரதமர். சுற்றுலாத் துறையில் இந்தாண்டு பெரும் வளர்ச்சி கிடைக்கும் என்று எதிர்பார்த்தோம். இன்றய நிலையில் இது உறுதியாக சொல்ல முடியாததாக உள்ளது. எதிர்பார்த்த வளர்ச்சியினை இந்த துறை அடையும் என்பது சந்தேகம் என்றார் ரணில். ஒரு விசாரணை ஆணைக்குழு அமைக்கப்பட்டிருப்பினும் அதன் முடிவு வரும் வரை காத்திருக்க முடியாது. உயிர், உடமை இழந்தவர்களுக்கு நஷ்ட்டஈடு வழங்கப் பட வேண்டும். 456 வீடுகள், வியாபார நிறுவனங்கள் பாதிப்புக்கு உள்ளாகி …

    • 0 replies
    • 375 views
  7. வன்முறை சம்பவங்கள் தொடர்பில் இதுவரை 230 பேர் கைது ; கண்டியில் 161 பேர் கைது கண்டியில் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலையையடுத்து இதுவரையில் கண்டியில் மாத்திரம் 161 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார். இதேவேளை, கண்டி பகுதியை தவிர்ந்த நாட்டின் ஏனைய பகுதிகளில் இடம்பெற்ற வன்முறை சம்பவங்கள் தொடர்பில் மேலும் 69 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் மொத்தமாக நாட்டில் ஏற்பட்ட வன்முறைச் சம்பவங்கள் தொடர்பில் 230 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் ஊடக பேச்சாளர் ருவன் குணசேகர மேலும் தெரிவித்தார். http://www.virakesari.lk/article/31534

  8. அமெரிக்காவின் கருப்புப் பட்டியலில் உள்ள நிறுவனத்திடம் விமானங்களை வாங்கும் சிறிலங்கா அமெரிக்க அரசாங்கத்தின் கருப்புப் பட்டியலில் சேர்க்கப்பட்ட ரஷ்ய நிறுவனத்திடம் இருந்து சிறிலங்கா விமானப்படைக்காக விமானங்கள் கொள்வனவு செய்யத் திட்டமிடப்பட்டுள்ளதாக, ரிவிர சிங்கள வாரஇதழ் செய்தி வெளியிட்டுள்ளது. ரஷ்ய அரசுக்குச் சொந்தமான, Rosoboronexport நிறுவனம் ஆயுத ஏற்றுமதி, இறக்குமதி நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது. இந்த நிறுவனம், 2014ஆம் ஆண்டு தொடக்கம் அமெரிக்க திறைசேரியினால் கருப்புப் பட்டியலில் இடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. இந்த நிறுவனத்தின் மூலமே சிறிலங்கா விமானப்படைக்கான விமானங்களைக் கொள்வனவு செய்யத் திட்டமிடப்பட்டுள்ளது. எம்.ஐ-171 உலங்குவானூர்திகள…

  9. யாழ்ப்பாணத்தை வந்தடைந்தார் புதிய யாழ் இந்திய துணைத்தூதுவர்! புதிய யாழ் இந்திய துணைவேந்தராக பதவியேற்கவுள்ள பாலசந்திரன் இன்று.யாழ்ப்பாணம் வநுதடைந்தார். கடந்த மூன்று வருடமாக யாழ் இந்திய துணைத்தூதுவராக கடமையாற்றிய ஆா். நடராஐன் சேவை முடிவுற்று இந்தியா அழைக்கப்பட்டுள்ள நிலையில், யாழ் இந்திய துணைத்தூதுவராக பாலச்சந்திரன் கடமைகளை பொறுப்பேற்கவுள்ளார். பாலச்சந்திரன் நேற்றைய தினம் யாழ்ப்பாணத்தை வந்தடைந்துள்ளத நிலையில் தனது கடமைகளை உத்தியோகபூர்வமாக பொறுப்பேற்கவுள்ளதாகவும் யாழ் இந்திய துணைதூதுவராலய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. https://news.ibctamil.com/ta/internal-affairs/Jaff…

    • 20 replies
    • 1.5k views
  10. யாழில் தேவாலயத்தில் வழங்கப்பட்ட உணவு ஒவ்வாமையால் 109 பேர் பாதிப்பு குளோபல் தமிழ்ச் செய்தியாளர் யாழ்.ஊர்காவற்துறை பகுதியில் உள்ள தேவாலயத்தில் வழங்கப்பட்ட பிரசாதம் ஒவ்வாமையினால் 109 பேர் பாதிப்படைந்த நிலையில் வைத்திய சாலையில் சிகிச்சை பெற்றுள்ளனர். சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது , ஊர்காவற்துறை நெருஞ்சி முனை பகுதியில் உள்ள தேவாலயத்தில் இன்று காலை தவக்கால சிறப்பு பூஜை வழிபாடு நடைபெற்றது. பூஜை வழிபாடுகளின் பின்னர் பூஜையில் கலந்து கொண்டவர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டுள்ளது. அதனை உட்கொண்ட 109 பேர் ஒவ்வாமையால் பாதிக்கப்பட்டு ஊர்காவற்துறை பிரதேச வைத்திய சாலையில் சிகிச்சை பெற்றுள்ளனர். சிகிச்சை பெற்ற பெரும்பால…

  11. புத்தளத்தில் உணவகம் தீக்கிரை புத்தளத்தில் உணவகம் தீக்கிரை புத்தளம் – ஆணைமடுவவில் உணவகம் ஒன்று இன்று அதிகாலை தீக்கிரையாக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். முஸ்லிம் வர்த்தகரின் மதீனா எனும் உணவகமே இவ்வாறு தீ்க்கிரையாக்கப்பட்டது எனத் தெரிவிக்கப்பட்டது. இதில் உயிர் ஆபத்துக்கள் ஏதும் ஏற்படவில்லை எனவும் சேத விபரங்கள் குறித்து முழுமைான தகவல்கள் எதுவும் கிடைக்கவில்லை எனவும் பொலிஸார் தெரிவித்தனர். இதேவேளை பேருவள…

  12. சர்வதேசத்தின் கவனம் இலங்கையின் பக்கம் ஈர்க்கப்பட்டுள்ளது ; ஜெப்ரி பெல்ட்மன் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஐக்கிய நாடுகள் சபையின் அரசியல் அலுவல்கள் தொடர்பான உதவி பொதுச் செயலாளர் ஜெப்ரி பெல்ட்மன் (Jeffrey Feltman) இன்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் சந்தித்து பேச்சுவார்ததை நடத்தினார். 5 ஆவது தடவையாக இலங்கைக்கு வருகை தந்திருக்கும் அவரை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சார்பில் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், மாவை சேனாதிராஜா, பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன், சித்தார்த்தன், செல்வம் அடைக்கலநாதன் ஆகியோர் வரவேற்றனர். முக்கியமான தருணத்தில் அவர் இங்கு வந்திருப்பதை தமிழத் தேசியக் கூட்டமைப்பு வரவேற்றது. இந்நிலையில் சந்த…

  13. சமூக வலைத்தளங்கள் தொடர்ந்தும் முடக்கம் வேறு வழி­களை அறிய பலரும் ஆர்வம் சி.சிவ­கு­மாரன்) கண்டி சம்­ப­வத்­தை­ய­டுத்து இன­வாத கருத்­துக்கள் வீண் வதந்­திகள் பர­வா­ம­லி­ருக்கும் வகையில் நாட்டின் பாது­காப்பை கருத்­திற்­கொண்டு அர­சாங்­கத்தால் முடக்­கப்­பட்­டி­ருந்த சமூக வளை­த­ளங்கள் நேற்று சனிக்­கி­ழமை முதல் இயங்கும் என அறி­விக்­கப்­பட்­டி­ருந்­தாலும் தொடர்ந்தும் அவை செயற்­ப­டா­ம­லேயே இருக்­கின்­றன. கண்­டியில் இடம்­பெற்ற வன்­முறை சம்­ப­வங்­க­ளை­ய­டுத்தே பேஸ்புக் , வட்ஸ்அப், வைபர் போன்ற சமூக வலை­த­ளங்கள் இலங்கை தொலை­தொ­டர்­புகள் மற்றும் ஒழுக்­காற்று ஆணைக்­குழு தற்­கா­லி­க­மாக முடக்­கி­யி­ருந்­தது. 72 மணித்­தி­யா­ல­யங்­க­ளுக்கு மட்­டுமே இக…

  14. கண்டி வன்­மு­றை­களின் பின்­னணியில் அரச விரோ­தி­களும், இன­வா­தி­களும் எஸ்.வினோத் மது­பானம் வழங்கி தாக்­கு­த­லுக்கு அழைத்துச் செல்­லப்­பட்­ட­தாக ஜனா­தி­பதி தகவல் அம்­பாறை மற்றும் கண்டி பிர­தே­சத்தில் இடம்­பெற்ற வன்­மு­றைகள் இயல்­பாக ஏற்­பட்­டவை அல்ல. அவை ஒரு தரப்­பி­னரால் நன்கு திட்­ட­மி­டப்­பட்டு மேற்­கொள்­ளப்­பட்­ட­தாகும். இதில் ஒரு புறம் இன­வா­தி­களின் பங்­க­ளிப்பும் மறு­புறம் அர­சாங்க விரோ­தி­களின் பங்­க­ளிப்பும் உள்­ள­தாக ஜனா­தி­பதி மைத்­ரி­பால சிறி­சேன தெரி­வித்­துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரி­வித்­துள்­ள­தா­வது; அம்­பா­றையில் இடம்­பெற்ற சம்­ப­வ­மா­னது நன்கு திட்­ட­மி­டப்­பட்டு மேற்­கொள்­ளப்­பட்ட வன்­முறைச் செய­லாகும். …

  15. மஹிந்த தலைமையிலான குழுவுக்கு சிவப்பு எச்சரிக்கை.! மைத்­திரி – மஹிந்த தரப்­புகள் இணை­யுமா? நிரந்­த­ர­மாகப் பிரி­யுமா? என்­பது தொடர்­பாக எதிர்­வரும் 3 ஆம் திகதி ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­னவின் தலை­மையில் நடை­பெ­ற­வுள்ள கூட்­டத்­தி­லேயே தெரி­ய­வரும் எனக் கட்சி வட்­டா­ரங்கள் தெரி­வித்­தன. உள்­ளூ­ராட்சித் தேர்­தல்கள் உட்­பட சில முக்­கிய விட­யங்கள் குறித்து ஆராய்­வ­தற்­காக ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சியின் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளது கூட்டம் எதிர்­வரும் 3 ஆம் திகதி ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன தலை­மையில் நடை­பெ­ற­வுள்­ளது. . இந்தக் கூட்­டத்தில் கலந்து கொள்­ளும்­படி அரசில் அங்கம் வகிக்கும் ஸ்ரீல.சு.கட்சி அமைச்­சர்­க­ளுக்குப் பாரா­ள…

  16. அருந்­த­வ­பா­ல­னும்- சுமந்­தி­ர­னும் பேச்சு!! அருந்­த­வ­பா­ல­னும்- சுமந்­தி­ர­னும் பேச்சு!! உள்­ளூ­ராட்­சித் தேர்­த­லின் போது தமிழ் அர­சுக் கட்­சிக்கு ஆத­ர­வா­கச் செயற்­ப­டா­தி­ருந்த அந்­தக் கட்­சி­யின் தென்­ம­ராட்சி அமைப்­பா­ளர் அருந்­த­வ­பா­ல­னுக்­கும், தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பின் பேச்­சா­ள­ரும், நாடா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான எம்.ஏ.சுமந்­தி­ர­னுக்­கும் இடை­யில் சந்­திப்பு நடை­பெற்­றுள்­ளது. தமிழ் மக்­கள் பேர­வை­யின் மத்­திய குழு உறுப்­பி­ன­ராக அருந்­த­வ­பா­…

  17. ஈ.பி.டி.பி அதி­ருப்­தி­யா­ளர்­கள் புதிய கட்சி ஆரம்­பிக்கத் திட்­டம்!! ஈ.பி.டி.பி அதி­ருப்­தி­யா­ளர்­கள் புதிய கட்சி ஆரம்­பிக்கத் திட்­டம்!! ஈ.பி.டி.பி அமைப்­பில் இருந்து பிரிந்து சென்­ற­வர்­கள் ஒன்­றி­ணைந்து புதிய அர­சி­யல் கட்சி ஒன்றை உரு­வாக்­க­வுள்­ள­னர். அத­னைப் பதிவு செய்­வ­தற்­கா­கத் தேர்­தல்­கள் ஆணைக்­கு­ழு­வின் உத­வியை நாடி­யுள்­ள­னர் என்று தெரி­விக்­கப்­ப­டு­கி­றது. ஈ.பி.டி.பி கட்­சி­யில் இருந்து கடந்த காலங்­க­ளில் வெளி­யே­றிய முன்­னாள் நாடா­ளு­மன்ற உறுப்­ப…

  18. யாழ்ப்பாணம் எடுத்து வரப்பட்ட ரூபா 80 இலட்சம் பணம் மாயம்!! யாழ்ப்பாணம் எடுத்து வரப்பட்ட ரூபா 80 இலட்சம் பணம் மாயம்!! அநு­ரா­த­பு­ரத்­தி­லி­ருந்து யாழ்ப்­பா­ணத்துக்கு எடுத்து வரப்­பட்ட 80 இலட்­சம் ரூபா பணம் திரைப்­ப­டப் பாணி­யில் திரு­டப்­பட்­டது. அரச வங்கி ஒன்­றுக்­காக நேற்­று­முன்­தி­னம் வாக­னத்­தில் இர­க­சி­ய­மாக எடுத்து வரப்­பட்­ட­போதே பணம் காணா­மற்­போ­யுள்­ளது. திருட்­டுத் தொடர்­பான சந்­தே­கத்­தில் பணத்தை எடுத்து வந்த வங்கி ஊழி­யர்­கள் மூவ­ரும் அவர்­க­ளுக்­குக் க…

  19. இலங்கைக்கு நீண்டகால நன்மைகளை கொண்டுவர ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு முடியும் ; இந்திய ஜனாதிபதி சமாதானத்தையும் நல்லிணக்கத்தையும் ஏற்படுத்தி இலங்கைக்கு நீண்டகால நன்மைகளை கொண்டுவர ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு முடியும் என்று இந்திய ஜனாதிபதி ராம்நாத் கோவிந் தெரிவித்துள்ளார். ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டதன் பின்னர் இருநாடுகளுக்கிடையிலான பொருளாதார, கலாசார, வர்த்தக தொடர்புகளுக்கு புதியதோர் பலம் கிடைக்கப்பெற்றுள்ளதாக இந்திய ஜனாதிபதி குறிப்பிட்டார். ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவுக்கும் இந்திய ஜனாதிபதி ராம்நாத் கோவிந்திற்கும் இடையில் பிற்பகல் இந்திய ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லமான ராஸ்ரபதி…

    • 1 reply
    • 187 views
  20. நாட்டில் அமைதி நிலைநாட்டப்பட்டுள்ளது ; வெளிநாட்டு தூதுவர்களிடம் ஜனாதிபதி தெரிவிப்பு கடந்த சில நாட்களாக நாட்டின் சில பகுதிகளில் நிலவிய பதற்றமான சூழ்நிலை முழுமையாக நீக்கப்பட்டு நாட்டில் அமைதியான சூழ்நிலை ஏற்படுத்தப்பட்டுள்ளது என்று ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன வெளிநாட்டு தூதுவர்களிடம் தெரிவித்தார். நாட்டின் தற்போதைய நிலை குறித்து வெளிநாட்டு தூதுவர்களுக்கு தெளிவுபடுத்துவதற்காக ஜனாதிபதியினால் நேற்று பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஒன்றுகூட்டப்பட்டிருந்த சந்திப்பின் போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார். இந்த சந்திப்பில் வெளிநாடுகளை பிரதிநிதித்துவப்படுத்தி உயர் ஸ்தானிகர்கள், தூதுவர்கள் மற்றும் இராஜதந்திர அதிகாரிகள் கலந்துகொ…

    • 1 reply
    • 256 views
  21. வன்முறைகளைத் தூண்டிய மகாசோஹோன் படையணிக்கு வெளிநாட்டு நிதி? கண்டியில் முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகளைத் தூண்டி விட்டவர்களுக்கு வெளிநாடுகளில் இருந்து நிதி வழங்கப்பட்டதா என்பது குறித்து விசாரித்து வருவதாக சிறிலங்கா காவல்துறை தெரிவித்துள்ளது. ‘முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகளைத் தூண்டி விட்டார்கள் என்ற குற்றச்சாட்டில், மகாசோஹோன் பலகாயவின் தலைவரான அமித் ஜீவன் வீரசிங்க உள்ளிட்ட 10 பேர் கைது செய்யப்பட்டு அவசரகாலச்சட்டத்தின் கீழ் இரண்டு வாரகாலம் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு யார் நிதி அளித்தார்கள், அவர்களின் எதிர்காலத் திட்டம் என்ன, இந்தச் சதிக்குப் பின்னால் எந்த உள்ளூர் அரசியல் தலைமைகள் அல்லது வெளிநாட்டு தலையீடுகள் இருந்ததா என்று இவர்க…

  22. வட, கிழக்கில் 15 உள்ளூராட்சி சபைகளில் பெண்களுக்கு 25 வீத இடம் இல்லை – தொடரும் இழுபறி வடக்கு கிழக்கில் உள்ள 15 உள்ளூராட்சி சபைகளில் பெண்களுக்கான 25 வீத பிரதிநிதித்துவத்தை உறுதிப்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக சிறிலங்கா தேர்தல்கள் ஆணைக்குழு தலைவர் மகிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். கடந்த பெப்ரவரி 10ஆம் நாள் நடந்த தேர்தலின் மூலம், 340 உள்ளூராட்சி சபைகளுக்கு 8690 உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். வட்டார அடிப்படையில், 535 பெண்கள் வெற்றிபெற்றுள்ளனர். எனவே, உள்ளூராட்சி சபைகளில் பெண்களுக்கான 25 வீத இடஒதுக்கீட்டை உறுதிப்படுத்த, மேலும் 1991 பெண்கள், மேலதிக பட்டியல்களின் மூலம் நியமிக்கப்பட வேண்டும். எனினும், வடக்கு கிழக்கு மாகாணங்களில் உள…

  23. இலங்கை முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறை: முன்னாள் நீதிபதிகள் குழு விசாரிக்கும் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க இலங்கையில் முஸ்லிம்களுக்கு எதிராக கண்டியில் நடந்த வன்செயல்கள் குறித்து விசாரணை நடத்தும் வகையில் மூன்று முன்னாள் நீதிபதிகளை கொண்ட குழு ஒன்றை அமைப்பது என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முடிவு செய்துள்ளதாக அவரது அலுவலகம் அறிவித்துள்ளது. படத்தின் காப்புரிமைGETT…

    • 5 replies
    • 656 views
  24. பாதசாரிகள் கடவையில் படுத்து பாராளுமன்ற உறுப்பினர் ஆர்ப்பாட்டம் கண்டி மாவட்ட ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ஆனந்த அளுத்கமகே பாதசாரிகள் கடவையில் படுத்து ஆர்பாட்டமொன்றில் ஈடுபட்டுள்ளார். நாவலப்பிட்டிய பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஆனந்த ராஜபைக்ஷவை இடமாற்றம் செய்யக்கோரியே இன்று காலை 5 மணி முதல் இவ் ஆர்பாட்டத்தில் அவர் ஈடுபட்டுள்ளார். கண்டி அட்டன் பிரதான வீதியின் நாவலப்பிட்டி பொலிஸ் நிலையத்தின் முன்னாள் உள்ள பாதசாரிகள் கடவையில் படுத்தவண்ணமே மேற்படி ஆர்பாட்டம் இடம்பெற்றுவருவதால் குறித்த பகுதிக்கான போக்குவரத்து மாற்று பாதையினூடாக இடம்பெற்று வருவதாக நாவலப்பிட்டி பொலிஸார் தெரிவித்தனர். …

    • 1 reply
    • 213 views
  25. இலங்கை: முஸ்லிம் பெண்கள் முகத்தை மூடுவது பற்றி நாடாளுமன்ற விவாதம் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க இலங்கையில் கண்டியிலும் அம்பாறையிலும் முஸ்லிம்களுக்கு எதிராக வன்செயல்கள் நடந்துள்ள சூழ்நிலையில், முஸ்லிம் பெண்கள் முகத்தை மூடும் வகையில் ஆடையணிவது குறித்து நாடாளுமன்றத்தில் வாதப் பிரதிவாதம் ஒன்று நடந்துள்ளது. படத்தின் காப்புரிமைGETTY IMAGES Image captionகோப்புப்படம் …

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.