Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. இலங்கை அரசு இழைத்த அநீதிகளை மறக்கவோ மன்னிக்கவோ முடியாது. – குகதாஸ் குளோபல் தமிழ்ச் செய்தியாளர் இலங்கை அரசாங்கமும் அதன் முப்படைகளும் தமிழ் மக்களுக்கு எதிராக இழைத்த அநீதிகளை தமிழ் மக்கள் மறக்கவும் மாட்டார்கள், மன்னிக்கவும் மாட்டார்கள் என வடமாகாண சபையின் ஆளும் கட்சி உறுப்பினர் எஸ்.குகதாஸ் தெரிவித்தார். வடமாகாண சபையின் 117 ஆவது அமர்வு இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை கைதடியில் உள்ள பேரவை செயலகத்தில் நடைபெற்றது. அதன் போது புதிதாக பதவியேற்ற தமிழ் தேசிய கூட்டமைப்பின் உறுப்பினரான எஸ். குகநாதன் தனது முதல் உரையை ஆற்றிய போதே இவ்வாறு தெரிவித்துள்ளார் மேலும் தெரிவிக்கையில் , போரின் இறுதிவரை ப…

  2. ‘எனது பலத்தை நிரூபிக்க வேண்டிய காலம் இது’ “சும்மா இருந்த என்னை கொண்டுவந்து எழிலனின் மனைவி என அடையாளப்படுத்தி, அரசியலில் இணைத்து விட்டு, தமிழரசுக் கட்சி இவ்வாறு என் மீது அடாத்தான செயற்பாடுகளை மேற்கொள்வது, ஜனநாயகம் அற்றதொன்றாகும். இனிமேல், நானும் சும்மா இருக்கப்போவதில்லை. என் பலம் எதுவென அனைவரும் உணரும் தருணம் இது” என வடக்கு மாகாண மகளிர் விவகார அமைச்சர் அனந்தி சசிதரன் தெரிவித்தார். தமிழரசுக்கட்சியில் இருந்து அனந்தி சசிதரனை நீக்குவதாக கட்சியின் மையச் செயற்குழு முடிவெடுத்துள்ளது என வெளியாகியுள்ள செய்தி தொடர்பாக, அவரிடம் தொடர்பு கொண்டு கேட்டபோதே இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், …

  3. அம்பாந்தோட்டை குறித்து இந்தியாவுக்கு சிறிலங்கா கொடுத்துள்ள உத்தரவாதம் அம்பாந்தோட்டை துறைமுகம் எந்தவொரு வெளிநாட்டுக் கடற்படைக்கும் வழங்கப்படாது என்று இந்தியாவுக்கு வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது என்று சிறிலங்காவின் கூட்டுப்படைகளின் தளபதியான அ்ட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்ன தெரிவித்துள்ளார். இந்தியாவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள அவர்,’தி ஹிந்து’ ஆங்கில நாளிதழுக்கு அளித்துள்ள செவ்வியிலேயே இதனைக் கூறியுள்ளார். ”இந்தியாவின் பாதுகாப்புக்குக் கவலைகளை ஏற்படுத்தக் கூடிய எத்தகைய நடவடிக்கைகளும் அம்பாந்தோட்டை துறைமுகத்தில் மேற்கொள்ளப்படாது என்று என்னால் உத்தரவாதம் அளிக்க முடியும். அம்பாந்தோட்டையின் பாதுகாப்புத் தொடர்பாக எந்த இராணுவக் கூட்டணிக்குள்ளேயும் …

  4. கஜேந்திர குமாரும், சுரேஸ் பிரேமச்சந்திரனும் பொய்யான கருத்துகளை கூறுகின்றனர் தமிழ் தேசிய கூட்டமைப்பு தமிழ் மக்களுக்கு எதிராக செயற்படுவது போன்ற பொய்யான கருத்துகளை கஜேந்திர குமாரும், சுரேஸ் பிரேமச்சந்திரனும் தெரிவித்துவருவதாக இலங்கை தமிழரசுக்கட்சியின் பொதுச்செயலாளரும் முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினருமான கி.துரைராஜசிங்கம் தெரிவித்துள்ளார். வடகிழக்கு இணைப்பினையும், தமிழ் தேசிய கொள்கையினையும் ஏற்றுக்கொள்ளாத எந்த கட்சியுடனும் உள்ளூராட்சி சபை அமைப்பது தொடர்பில் பேசுவதில்லையென தீர்மானித்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இன்று (27) மாலை மட்டக்களப்பு நல்லையா வீதியில் உள்ள இலங்கை தமிழரசுக்கட்சியின் மாவட்ட தலைமை காரியாலயத்தில் நடைபெற்ற செய்தியாளர் …

  5. இலங்கையை ஒரு சர்வதேச நீதிப்பொறிமுறை முன் முற்படுத்தமாறு ஐ.நா மனித உரிமை பேரவையிடம் வடமாகாணசபை கோரியுள்ளது எனது இல: ஆர்Æ117Æ2018Æ394 27.02.2018 சையிட் அல் ஹூசைன் அவர்கள் மனித உரிமைகளுக்கான ஐக்கிய நாடுகள் உயர் ஸ்தானிகர் மனித உரிமைகளுக்கான உயர்ஸ்தானிகர் அலுவலகம் பெலாயிஸ் டெஸ் நேசன்ஸ் சிஎச்-1211 ஜெனீவா 10, சுவிற்சர்லாந்து தீர்மானம் இல: ஆர்Æ117Æ2018Æ394 வட மாகாண சபையால் 2018.03.27 ஆம் திகதியன்று நடைபெற்ற அமர்வில் அங்கீகரிக்கப்பட்ட இல: ஆர்Æ117Æ2018Æ394 ஐக் கொண்ட தீர்மானத்தின் பிரதியொன்றை, தங்களுடைய கனிவான கவனத்தின் பொருட்டும் உரிய நடவடிக்கையின் பொருட்டும் இத்தால் நா…

  6. தேர்தல் அமளியில் நாடு – மூன்று பிள்ளைகளின் தந்தையான முன்னாள் போராளி மரணம் : குளோபல் தமிழ் செய்தியாளர் நாடு தேர்தல் அமளியில் காணப்படுகின்ற நிலையில் வன்னியில் விசுவமடுவில் முன்னாள் போராளி ஒருவர் மரணமடைந்துள்ளார். மூன்று பிள்ளைகளின் தந்தையான வீரப்பன் என்று அழைக்கப்படும் சந்திரச்செல்வனின் மரணம் அப் பகுதி மக்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தில் இணைந்த இவர், போராட்டத்தின்போது தனது இரண்டு கால்களை இழந்ததுடன் தனது இரண்டு கைகளிலும் கடும் காயத்திற்கு உள்ளாகியிருந்தார். விசுவமடுவில் வசித்து வந்த இவர் இன்று 8ஆம் திகதி மரணமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. நாட்டுக்காக போராட்டத்தில் இண…

  7. கிளிநொச்சி மத்திய கல்லூரி மைதானத்தை இராணுவத்தினர் சொந்தமாக்கிக் கொண்டனரா? குளோபல் தமிழ்ச் செய்திகளின் விசேட செய்தியாளர்… கிளிநொச்சி மத்திய கல்லூரி மைதானத்தை இராணுவத்தினர் சொந்தமாக்கிக் கொண்டுவிட்டார்களா? என்று பாடசாலை மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் பழைய மாணவர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். மாவட்ட மட்ட மெய் வல்லுனர் போட்டிக்கான காலத்தில் தமது பயிற்சிகளை பாதிக்கும் விதமாக இராணுவத்தினர் தமது நிகழ்ச்சிகளை நடாத்தி வருவதாக மாணவர்கள் கூறுகின்றனர். போர் முடிவடைந்து ஒன்பது ஆண்டுகள் ஆகின்றபோதும் கிளிநொச்சி மத்திய கல்லூரியின் மைதானம் இராணுவ வசமாகவே காணப்படுகின்றதா என கேள்வி எழுப்பபட்டுள்ளது. கிளிநொச்சியில் உள்ள நகரப்…

  8. முல்லைத்தீவில் வாள்­வெட்டு- 9 பேர் காயம்!! முல்லைத்தீவில் வாள்­வெட்டு- 9 பேர் காயம்!! முள்­ளி­ய­வளை, கிச்­சி­ரா­பு­ரத்­தில் நேற்று இரவு நடந்த மோதல், வாள்­வெட்­டுச் சம்­ப­வங்­க­ளில் 9 பேர் காய­ம­டைந்­துள்­ள­னர். இரு கட்சி ஆத­ர­வா­ளர்­க­ளி­டையே ஏற்­பட்ட முரண்­பாடே இதற்­குக் கார­ணம் என்று கூறப்­ப­டு­கின்­றது. இந்­தச் சம்­ப­வங்­கள் தொடர்­பில் முள்­ளி­ய­வ­ளைப் பொலி­ஸா­ரால் 8 பேர் கைது செய்­யப்­பட்­டுள்­ள­னர். இரு கட்சி ஆத­ர­வா­ளர்­க­ள…

  9. பனம் வெல்­லத்­துக்கு பெரும் மவுசு பனம் வெல்­லத்­துக்கு பெரும் மவுசு தெற்­கி­லும், புலம்­பெ­யர்­நா­டு­க­ளி­லும் யாழ்ப்­பா­ணத்து பனம் வெல்லத்துக்கு தென்­ப­கு­தி­யி­லும், புலம் பெயர் நாடு­க­ளி­லும் பெரும் கிராக்கி ஏற்­பட்­டுள்­ளது எனவே பத­நீர் உற்­பத்­தியை ஊக்­கு­வித்து பனம்­வெல்ல உற்­பத்­தியை ஆரம்­பிக்­கும் நட­வ­டிக்­கையை பனை அபி­வி­ருத்தி சபை ஆரம்­பித்­துள்­ளது என்று தெரி­விக்­கப்­ப­டு­கி­றது. யாழ…

  10. உலகல் தற்பொழுது வெட்கமென்பது இல்லாமல் போய் விட்டது…. நவீன காலத்தில் ஏனையோரை ஒடுக்குதல் வழக்கத்துக்கும் புதியதொரு பாணியாகவும் மாறிவிட்டது எனவும உலகின் ஒவ்வொரு பிராந்தியத்திலும் அடிப்படை உரிமைகள் பின்னடைவைச் சந்தித்துள்ளன எனவும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் ஆணையாளர் சயிட் அல் ஹூசெய்ன் தெரிவித்துள்ளார். ஜெனீவாவில் நேற்றையதினம் ஆரம்பமாகிய ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 37ஆவது அமர்வில் ஆரம்ப உரை ஆற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். உலகல் தற்பொழுது வெட்கமென்பது இல்லாமல் போய் விட்டது எனவும் வெளிநாட்டவர்கள் மீதான வெறுப்பு இனவாதம் ஆகியன ஐரோப்போவிலும் அதிகரித்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டியு…

  11. கோத்தபாய கைது தொடர்பில் நீதிமன்றம் இன்று பிறப்பித்த உத்தரவு.! முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷவை மார்ச் 23 திகதி வரை கைது செய்ய இடைக்காலத் தடை விதித்து மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது. பொதுவுடைமைகள் சட்டத்தின் கீழ் தன்னை கைது செய்வதை தடுக்குமாறு கோரி கோத்தபயாவினால் கடந்த நவம்பர் 28 இல் தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான இடைக்கால தடையுத்தரவு இன்று 6வது முறையாக மேலும் நீடிக்கப்பட்டுள்ளது. http://www.virakesari.lk/article/31064

  12. பூதாகாரமாக மாறும் லண்டன் விவகாரம்! இலங்கைக்கு தப்பியோடிய பிரிக்கேடியர்! வலைவீசும் பிரித்தானியா Report us Vethu 6 hours ago சமகாலத்தில் இலங்கைக்கும் பிரித்தானியாவுக்கு இடையில் ராஜதந்திர ரீதியான முறுகல் நிலை ஏற்பட்டுள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று சுட்டிக்காட்டியுள்ளது. பிரித்தானியாவுக்கான இலங்கை தூதுவரின் பதவி விலகல் தொடர்பில் பல்வேறு சர்ச்சை நிலை ஏற்பட்டுள்ளது. லண்டனில் செயற்படும் இலங்கைத் தூதரகத்தின் உயர்ஸ்தானிகர் அமரி விஜேவர்தன பதவியை ராஜினாமா செய்யவுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. எனினும் இதனை மறுக்கும் இலங்கை வெளிவிவகார அமைச்சு, அவர் அடுத்த மாதம் 31ம் திகதி வரையில் பதவியில் தொடர்வார் என அறிவித்துள்ளது. …

  13. சிவா­ஜி லிங்கத்துக்கு அழைப்­பாணை!! சிவா­ஜி லிங்கத்துக்கு அழைப்­பாணை!! வடக்கு மாகாண சபை உறுப்­பி­னர் எம்.கே.சிவா­ஜி­லிங்­கம் இன்று முல்­லைத்­தீவு நீதி­மன்றில் முன்­னி­லை­யாக வேண்­டும் என்று மன்று அழைப்­பாணை அனுப்­பி­யுள்­ளது. வல்­வெட்­டித்­து­றைப் பொலிஸ் நிலை­யத்­தி­னூ­டாக இந்த அழைப் பாணை சிவா­ஜி­லிங்­கத்­தி­டம் வழங்­கப்­பட்­டுள்­ளது என்று தெரி­விக்­கப்­பட்­ட­டது. அரச சொத்­துக்கு சேதம் விளை­வித்­தமை, அரச அதி­கா­ரி­களை கடமை செய்­ய­வி­டாது இடை­யூறு விளை­…

  14. யாழ்ப்பாணம் வந்தது கரிக்கோச்சி!! படங்கள் செ.நிருஜன் யாழ்ப்பாணம் வந்தது கரிக்கோச்சி!! நீண்ட கால இடைவெளியின் பின்னர் இரண்டாவது முறையாக இன்று வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுடன் கரிகோச்சி (Viceroy ) புகையிரதம் சற்று முன்னர் (7 மணியளவில்) யாழ்ப்பாணம் வந்தது. நேற்றுக் காலை (26) ஆம் திகதி 8 மணிக்கு மணியளவில் அநுராதபுரம் ரயில் நிலையத்திலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி தொடருந்து புறப்பட்டது. இது யாழ்.ரயில் நிலையத்தை 4 மணியளவில…

  15. இலங்கை குறித்து ஜெனி­வாவில் 14 உப குழுக்­கூட்­டங்கள் ஐக்­கிய நாடுகள் மனித உரிமை பேர­வையின் 37 ஆவது கூட்டத் தொடர் ஜெனி­வாவில் ஆரம்­ப­மா­கி­யுள்ள நிலையில் இலங்கை மனித உரிமை விவ­காரம் தொடர்பில் 14 உபக்­கு­ழுக்­கூட்­டங்கள் ஜெனிவா மனித உரிமை பேரவை வளா­கத்தில் நடை­பெ­ற­வுள்­ளன. இந்த கூட்­டங்­களில் இலங்கை பிர­தி­நி­திகள் பாதிக்­கப்­பட்­டோரின் பிர­தி­நி­திகள் என பல்­வேறு தரப்­பி­னரும் கலந்­து­கொண்டு உரை­யாற்­ற­வுள்­ளனர். அந்­த­வ­கையில் எதிர்­வரும் 2ஆம் திகதி வெள்­ளிக்­கி­ழமை தென்றல் அமைப்பு இலங்கை தொடர்பில் 11ஆவது இலக்க அறையில் ஒரு உபக்­கு­ழுக்­கூட்­டத்தை ஏற்­பாடு செய்­துள்­ளது. அதே­போன்று ஏ.பி.சி. தமி…

  16. அரைக் கம்பத்தில் பறக்கும் ஐ.நா கொடி – வெள்ளியன்று கொழும்பில் உனாவின் இறுதி நிகழ்வு உடல்நலக் குறைவினால் திடீரென மரணமான சிறிலங்காவுக்கான, ஐ.நாவின் நிரந்தர வதிவிடப் பிரதிநிதி உனா மக்கோலியின் இறுதிநிகழ்வு வரும் வெள்ளிக்கிழமை கொழும்பில் நடைபெறவுள்ளது. மருத்துவ விடுப்பில் இருந்து சிகிச்சை பெற்று வந்த உனா மக்கோலி, கடந்த வெள்ளிக்கிழமை இரவு காலமானார். அவரது மறைவுக்கு அனுதாபம் தெரிவித்து கொழும்பில் உள்ள ஐ.நா பணியகத்தில் ஐ.நா கொடி அரைக்கம்பத்தில் பறக்க விடப்பட்டுள்ளது. அத்துடன் சிறிலங்காவில் செயற்படும், ஐ.நா அமைப்புகளின் அதிகாரிகள், பணியாளர்கள் நேற்று நடந்த நிகழ்வில், உனா மக்கோலியின் மறைவுக்கு இரண்டு நிமிட மௌன வணக்கம் செலுத்தினர். இந…

  17. அட்மிரல் கரன்னகொடவைக் கைது செய்ய நடவடிக்கை கொழும்பில் 11 தமிழ் இளைஞர்கள் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக சிறிலங்காவின் முன்னாள் கடற்படைத் தளபதி அட்மிரல் வசந்த கரன்னகொடவைக் கைது செய்வதற்கான நடவடிக்கைகளில் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் ஈடுபட்டுள்ளனர். கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்று இந்தச் செய்தியை வெளியிட்டுள்ளது. 2008-2009 ஆம் ஆண்டு காலப்பகுதியில், 11 இளைஞர்கள் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டமை தொடர்பாக வழக்கு கொழும்பு கோட்டே நீதிவான் நீதிமன்றில் நடந்து வருகிறது. இந்தக் கடத்தல்கள் தொடர்பாக முன்னாள் கடற்படைத் தளபதி அட்மிரல் வசந்த கரன்னகொட அறிந்திருந்தார் என்று, குற்றப் புலனாய்வுப் பிரிவினர் நீதிவானிடம் தெரிவித்திருந்தார். …

  18. ‘இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை ஐ.நா நிறைவேற்ற வேண்டும்’ - எஸ்.நிதர்ஷன் சர்வேதேச குற்றவியல் தீர்ப்பாயத்தை உருவாக்கும் தீர்மானத்தை ஐ.நா.பாதுகாப்புச்சபை நிறைவேற்ற வேண்டும் என கோரி, சர்வதேச பொறுப்புக்கூறல் பொறிமுறைக்கான தமிழர் செயற்பாட்டுக்குழுவால் முன்னெடுக்கப்பட்டுள்ள கையெழுத்துப்போராட்டம் யாழ்.பஸ் நிலையத்தில் இன்று (26) மாலை இடம்பெற்றது. இலங்கை அரசாங்கத்துக்கு ஐ.நா மனித உரிமை ஆணைக்குழுவால் வழங்கப்பட்ட கால அவகாசத்தில் 1 வருடம் நிறைவடைந்துள்ளது. இந்நிலையில், இன்னும் ஒரு வருடத்தை வீணடிக்காது, இலங்கை விவகாரம் தொடர்பில் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்துக்கு நியாயாதிக்கத்தை அளிக…

  19. த.தே.கூ வே எதிர்க்கட்சி, மஹிந்தவுக்கு எதிர்க்கட்சி அந்தஸ்து கிடைக்காது ; துமிந்த திசாநாயக்க (ஆர்.யசி) தேசிய அரசாங்கத்தில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி நீடிக்கின்றதாக தீர்மானம் எடுத்துள்ளோம். ஆகவே எதிர்க்கட்சி அந்தஸ்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பே நீடிக்கும். ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணிக்கு எதிர்க்கட்சி அந்தஸ்தை பெற்றுக்கொள்ள முடியாது என்கிறது ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி. ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியில் தொடர்ந்தும் மஹிந்த தரப்பினர் அங்கம் வகிப்பது பொருத்தமில்லாததாகும். அவர்களை தொடர்ந்தும் கட்சியுடன் வைத்திருப்பதா என்பது குறித்து கட்சியின் மத்திய குழுக் கூட்டத்தில் அழுத்தமாக கேள்வி எழுப்புவோம் எனவும் குறிப்பிட்டது. அதேபோல் ஸ்ரீலங்கா சுதந்திர கட்ச…

  20. காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களை சந்தித்த ஜப்பான் பௌத்த துறவிகள் இலங்கையில் காணாமல் ஆக்கப்பட்டவர்கள் மீண்டும் உறவினர்களுடன் சேர்ந்துகொள்ள வேண்டுமென தாம் பிரார்த்திப்பதாக ஜப்பான் நாட்டைச் சேர்ந்த பௌத்த துறவிகள் தெரிவித்துள்ளனர். போனினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான சர்வமத வழிபாட்டு ஊர்வலம் மேற்கொள்ளும் குழு இன்று கிளிநொச்சியில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களை சந்தித்தனர். கிளிநொச்சி கந்தசுவாமி ஆலய முன்றலில் 372 நாட்களாக காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை மீட்டுத்தருமாறுகோரி போராட்டத்தில் ஈடுபட்டுவரும் மக்களை குறித்த குழுவினர் இன்று பகல் சந்தித்து வழிபாட்டினையும் முன்னெடுத்தனர். ஜப்பான், ஐரோப…

  21. அனந்தியையும், சிவகரனையும் நீக்கத் தமிழரசுக் கட்சி தீர்மானம் அனந்தியையும், சிவகரனையும் நீக்கத் தமிழரசுக் கட்சி தீர்மானம் வடக்கு மாகாண சபை அமைச்­சர் திரு­மதி அனந்தி சசி­த­ரன் மற்­றும் தமிழ் அர­சுக் கட்­சி­யின் இளை­ஞர் அணி­யின் முன்­னாள் செய­லர் சிவ­க­ரன் இரு­வ­ரை­யும், இலங்­கைத் தமிழ் அர­சுக் கட்­சி­யி­லி­ருந்து நீக்­கு­வது என்று அந்­தக் கட்­சி­யின் மையச் செயற்­கு­ழுக் கூட்­டத்­தில் ஏக­ம­ன­தாக முடி­வெ­டுக்­கப்­பட்­டுள்­ளது. இலங்­கைத் தமிழ் அர­சுக் கட்­சி­யின் மை…

  22. மத்தல விமான நிலையத்தின் ஓடுபாதை, நிலப்பரப்பை வசப்படுத்துகிறது சிறிலங்கா விமானப்படை மத்தல விமான நிலையத்தை அவசர தேவைகளுக்கும், தேசிய பாதுகாப்புத் தேவைகளுக்கும் பயன்படுத்துவதற்கான உரிமையையும், விமான நிலையத்தின் ஒரு பகுதி நிலத்தையும் தமக்கு வழங்க வேண்டும் என்று சிறிலங்கா விமானப்படை கோரிக்கை விடுத்துள்ளது. மத்தல விமான நிலையத்தை இந்தியாவுடன் இணைந்து கூட்டு முயற்சியாக அபிவிருத்தி செய்வதற்கான பேச்சுக்கள் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில், சிறிலங்கா விமானப்படை இந்தக் கோரிக்கைகளை முன்வைத்துள்ளது. அவசர தேவைகளின் போதும், தேசிய பாதுகாப்பு பயன்பாடுகளுக்காகவும், மத்தல அனைத்துலக விமான நிலையத்தின் ஒரு ஓடுபாதைதையைப் பயன்படுத்துவதற்கு தமக்கு அனுமதி அளிக்கப்பட வேண்டு…

  23. ’சட்டம், ஒழுங்கு; பொன்சேக்காவுக்கு கிடைக்கும்’ சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சு, இரண்டு வாரக் காலப்பகுதிக்கே, பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு வழங்கப்பட்டுள்ளதெனக் கூறிய கூகாதார அமைச்சர் ராஜித்த சேனாரத்ன, இன்னும் இரண்டு வாரக் காலப்பகுதியில், குறித்த அமைச்சு, பீல்ட் மார்ஷல் சரத் சரத் பொன்சேகாவுக்கு வழங்கப்படுமெனவும் குறிப்பிட்டார். சுகாதார அமைச்சில், இன்று (26) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்தத் தெரிவிக்கும் போதே, அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அங்கு தொடர்ந்துரையாற்றி அமைச்சர், சரத் பொன்சேகாவை, குறித்த பதவியில் நிறுத்துவதற்கு, பொலிஸ் உயரதிகாரிகள் விருப்பம் தெரிவித்துள்ளதாகக் கூறினார். …

  24. ‘மீட்கப்பட்ட ஆயுதங்கள், இராணுவத்தினுடையவை’ “முன்னாள் புளொட் உறுப்பினரின் வீட்டிலிருந்து மீட்கப்பட்ட ஆயுதங்கள், இராணுவத்தினருக்கு 1998 ஆம் ஆண்டு வழங்கப்பட்டிருந்தன. எனினும் அவை காணாமற்போயிருந்ததாக இராணுவத்தலைமையகம் தெரிவித்துள்ளது” என யாழ்.பொலிஸார் யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றத்துக்கு அறிவித்துள்ளனர். முன்னாள் புளொட் உறுப்பினர் தங்கியிருந்த வீட்டிலிருந்து ஆயுதங்கள் மீட்கப்பட்டமை தொடர்பான வழக்கு, விசாரணைக்கு இன்று (26) எடுத்துக் கொள்ளப்பட்ட போதே பொலிஸார் குறித்த விடயத்தை நீதவானின் கவனத்துக்கு கொண்டு வந்திருந்தனர். புளொட்டின் முன்னாள் உறுப்பினரான மானிப்பாயைச் சேர்ந்த சிவகுமார் (வயது 55) என்பவர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை வீதியில் உள்ள வீட…

  25. துணைத்தூதருக்கு வாளை வழங்கிய முதலமைச்சர் - டி.விஜிதா யாழில் இருந்து விடைபெற்றுச் செல்லவுள்ள, இந்திய துணைத்தூதுவர் ஆர்.நடராஜனுக்கு வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் நினைவு பரிசாக வாள் வழங்கி கௌரவித்துள்ளார். எதிர்வரும் மார்ச் மாதத்துடன் தனது சேவைக்காலத்தை நிறைவு செய்து இந்தியாவுக்கு திரும்பவுள்ள, இந்திய துணைத்தூதர் கொன்சலட் ஜெனரல் ஆர்.நடராஜனுக்கான கௌரவிப்பு நிகழ்வு இந்திய துணைத் தூதரகத்தின் ஏற்பாட்டில், யாழ். கிறீன் கிறாஸ் விருந்தினர் விடுதியில் நேற்று இரவு (25) இடம்பெற்றது. இந்நிகழ்வில் கலந்து கொண்ட முதலமைச்சர் வாளைப்பரிசாக வழங்கினார். இந்நிகழ்வில், வடமாகாண ஆளுந…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.