ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143312 topics in this forum
-
எதிர்க்கட்சி அந்தஸ்தை இழக்கிறது கூட்டமைப்பு! எதிர்க்கட்சித் தலைவராகிறார் நிமல் தேசிய அரசிலிருந்து வெளியேறி எதிர்க்கட்சி வரிசையில் அமர்வதற்கு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்கள் தீர்மானித்துள்ளதால், பிரதான எதிர்க்கட்சி என்ற அந்தஸ்தை இழக்க வேண்டிய நிலை தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு ஏற்பட்டுள்ளது என கொழும்பு ஊடகம் ஒன்று இன்று செய்தி வெளியிட்டுள்ளது. அந்த செய்தியில், நாடாளுமன்றத் தேர்தலில் கூடுதல் ஆசனங்களைப் பெறும் கட்சியே ஆட்சியமைப்பதற்கு உரிய ஆணையைப் பெறும். அதற்கு அடுத்தபடியான ஆசனங்களைக் கைப்பற்றும் கட்சிக்கே பிரதான எதிர்க்கட்சிப் பதவி கிடைக்கும். அந்தக் கட்சியின் தலைவரே எதிர்க்கட்சித் தலைவராகத் தெரிவு செய்யப்படுவார். 2017 ஆக…
-
- 2 replies
- 371 views
-
-
உள்ளூராட்சிமன்ற தேர்தல் முடிவுகள் 2018 மூன்று கட்டங்களில் வாக்கெண்ணும் பணி 340 உள்ளூராட்சிமன்றங்களுக்காக இன்று நடைபெறவுள்ள தேர்தல் பெறுபேறு முதற்கட்டமாக இரவு 7 மணியளவில் வெளிவரும் சாத்தியங்கள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வாக்கெண்ணும் பணி 3 கட்டங்களாக இடம்பெறும் என தேர்தல்கள் திணைக்களம் தெரிவித்துள்ளது. உள்ளுராட்சி மன்றத்திற்குட்பட்ட ஒரு வட்டாரத்திற்கான வாக்குகள் வட்டார வாக்களிப்பு நிலையத்திலேயே எண்ணப்படும். பல வாக்களிப்பு நிலையங்கள் இருக்குமாயின் கணிசமாக வாக்குகள் உள்ள நிலையங்களுக்கு கொண்டுசெல்லப்பட்டு ஒரே இடத்தில்வைத்து எண்ணப்படும். இருப்பினும் வாக்குகள் வெவ்வேறாகவே எண்ணப்படும். இதற்கு முன்னர் நடைபெற்ற தேர்…
-
- 142 replies
- 22.4k views
- 1 follower
-
-
"சர்வ மத ஒற்றுமையினை கொச்சைப்படுத்துபவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்" மன்னார் மாவட்டத்தில் அண்மைக்காலமாக இந்து மக்களின் வணக்க சிலைகள் உடைக்கப்பட்டு, சேதப்படுத்தப்படுகின்ற சம்பவங்கள் மாவட்டத்தில் மதங்களுக்கிடையில் பிரிவினையை ஏற்படுத்தும் சதி நடவடிக்கையாக உள்ளதாகவும், குறித்த சம்பவங்களை வன்மையாக கண்டிப்பதாகவும் தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார். குறித்த சம்பவம் தொடர்பாக அவர் இன்று விடுத்துள்ள ஊடக அறிக்கையில் மேலும் குறிப்பிடுகையில், "மன்னார் மாவட்டத்தில் சர்வமதங்களுக்கு இடையில் ஒற்றுமை காணப்படுகின்றது. கடந்த சில மாதங்களுக்கு முன…
-
- 0 replies
- 354 views
-
-
மிஹின் லங்கா மோசடிகளை கண்டறிவதற்கான ஜனாதிபதி ஆணைக்குழு உறுப்பினர்கள் நியமனம் ஶ்ரீ லங்கன் எயார் லைன்ஸ், ஶ்ரீ லங்கன் கேட்டரிங் மற்றும் மிஹின் லங்கா நிறுவனங்களில் இடம்பெற்ற மோசடிகளை கண்டறிவதற்கான ஜனாதிபதி ஆணைக்குழுவின் உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். ஶ்ரீ லங்கன் எயார் லைன்ஸ், வரையறுக்கப்பட்ட ஶ்ரீ லங்கன் கேட்டரிங் மற்றும் வரையறுக்கப்பட்ட மிஹின் லங்கா ஆகிய நிறுவனங்களில் 2006ஆம் ஆண்டு ஜனவரி 6ஆம் திகதி முதல் 2018 ஜனவரி 31 ஆம் திகதி வரை இடம்பெற்றதாகக் கருதப்படும் மோசடிகளைக் கண்டறிந்து அறிக்கை சமர்ப்பிப்பதற்காக நியமிக்கப்பட்டுள்ள ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் உறுப்பினர்களுக்கான நியமனக் கடிதங்கள் இன்று முற்பகல் ஜனாதிபதி செயலகத்தி…
-
- 0 replies
- 220 views
-
-
இரண்டு பிள்ளைகளின் இளம் தாய் கொலை!!! கிளிநொச்சி - வட்டக்கச்சி 10, வீட்டுத்திட்டத்தைச் சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் இளம் தாய் ஒருவர் இன்று மதியம் ஒரு மணியளவில் கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். கொலை செய்யப்பட்டவர் 24 வயதான இரண்டு பிள்ளைகளின் இளம் தாய் பாஸ்கரன் நிரோஷா என்பவராவார். கிராமத்தில் நடைபெறவுள்ள பூப்புனித நீராட்டு விழாவுக்கு அயலவர்கள் சென்றிருந்த சந்தர்ப்பத்திலேயே இக்கொலை இடம்பெற்றிருக்கிறது. கொலைக்கான காரணம் இது வரை தெரியவரவில்லை. படு கொலை செய்யப்பட்ட குறித்த பெண்ணிற்கு 7 வயதில் மகன் மற்றும் ஒன்றரை வயது மகள் உள்ளனர். கணவர் தொழிலுக்குள் சென்றிருந்தார் எனவும் தெரிவிக்கப்படுகிறது. …
-
- 1 reply
- 680 views
-
-
2200 இலங்கையர்கள் ஜப்பானில் கடந்த ஆண்டு புகலிடம் கோரியுள்ளனர்… 2200 இலங்கையர்கள் ஜப்பானில் கடந்த ஆண்டு புகலிடம் கோரியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. ஜப்பானிய நீதி அமைச்சினால் இந்த தகவல் வெளியிடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. புகலிடம் கோரிய 19628 பேரில் 20 பேருக்கு மட்டுமே ஜப்பானிய அரசாங்கம் இவ்வாறு புகலிடம் வழங்கியுள்ளனர். எகிப்து மற்றும் சிரியா ஆகிய நாடுகளிலிலிருந்தே அதிகளவான புகலிடக் கோரிக்கையாளர்கள் புகலிடம் கோரி விண்ணப்பம் செய்துள்ளனர். http://globaltamilnews.net/2018/66822/
-
- 0 replies
- 203 views
-
-
ரணிலின் ஒரு சொல்லை நம்புவேன் – மைத்திரி 7 ஆவணங்களில் கையொப்பமிட்டாலும் நம்பமாட்டேன்… குளோபல் தமிழ்ச் செய்தியாளர்.. பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை தாம் நம்புவதாகவும், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மீது நம்பிக்கை கிடையாது எனவும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். ரணிலின் ஒரு சொல்லை நம்புவேன். “ஆனால் மைத்திரி ஏழு ஆவணங்களில் கையொப்பமிட்டு உறுதியளித்த விடயங்களையும் நான் நம்பப் போவதில்லை” என அவர் குறிப்பிட்டுள்ளார். ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியுடன் இணைந்து உள்ளுராட்சி மன்றங்களில் ஆட்சி அமைப்பது குறித்து நேற்றைய தினம் சுதந்திரக் கட்சியின் சிரேஸ்ட உறுப்பினர்கள், மஹிந்தவுடன் பேச்சுவார்த்தை நடத்தியிருந்தனர். இந்த பேச்சுவார்த்தைகளின் போது…
-
- 0 replies
- 400 views
-
-
அரசின் நிலைப்பாடு குறித்து ஜனாதிபதி அறிக்கை அரசின் எதிர்கால நடவடிக்கைகள் குறித்து எதிர்வரும் வெள்ளிக்கிழமைக்கு முன்னதாக ஜனாதிபதி அறிக்கை வெளியிடுவார் என அமைச்சர் சுசில் ப்ரேமஜெயந்த தெரிவித்துள்ளார். உள்ளாட்சி மன்றத் தேர்தல் முடிவுகள் வெளியானதையடுத்து இலங்கையில் அரசியல் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. அதைத் தணிக்கு முகமாக நேற்று (13) கூட்டாட்சி அரசின் பங்காளிக் கட்சிகள் ஜனாதிபதியுடன் பல்வேறு கட்டப் பேச்சுவார்த்தைகளை நடத்தியிருந்தன. கூட்டாட்சியைக் கொண்டு செல்வதா, ஐ.தே.க. தனித்து ஆட்சி அமைப்பதா என்பதை முடிவு செய்வதற்காக நேற்றிரவு சுமார் மூன்று மணிநேர மந்திராலோசனை ஜனாதிபதிக்கும் பிரதமர் மற்றும் ஐ.தே.க. அமைச்சர்கள் சிலரின் பங்கேற்புடன் ந…
-
- 0 replies
- 233 views
-
-
யாழ்ப்பாணத்தில் என்ன நடக்கிறது? வாள்வெட்டுக் குழுக்களின் பங்காளர்களா காவற்துறை? வாள் வெட்டுக்குழுவுடன் இணக்கத்திற்கு செல்லுங்கள். – பொலிஸார் கட்டப்பஞ்சாயத்து….. வாள்வெட்டுத்தாக்குதல் நடத்திய குழுவுடன் இணக்கப்பாட்டுக்கு செல்லுமாறு காவற்துறையினர், தம்மை வற்புறுத்தி வருவதாக பாதிக்கப்பட்டவர்கள். தெரிவித்துள்ளனர். யாழ்.கொட்டடிப்பகுதியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை இடம்பெற்ற வாள் வெட்டு சம்பவத்தில் சகோதர்களான சந்திரகுமார் லோஜிபன் மற்றும் சந்திரகுமார் ஜீவராசா ஆகியோர் காயமடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் இருவரிடமும் சிவில் உடையில் சென்ற காவற்துறையினர்…
-
- 1 reply
- 354 views
-
-
167 சபைகளில் எந்தக் கட்சிக்கும் ஆட்சியமைக்க முடியாது! 340 உள்ளூராட்சி சபைகளில் 167 உள்ளூராட்சி சபைகளில் ஆட்சியமைப்பதற்கு ஐ.ம.சு.மு வினதும் சு.கவினதும் ஒத்துழைப்பு தேவைப்படுவதாக ஐ.ம.சு.மு செயலாளர் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார். எமது ஆதரவு இன்றி எந்தக் கட்சிக்கும் இந்த சபைகளில் ஆட்சியமைக்க முடியாது எனவும் எந்தத் தரப்புக்கு ஆதரவு வழங்குவது என்பது தொடர்பில் இது வரை எந்த தரப்புடனும் உடன்பாடு எட்டப்படவில்லை எனவும் அவர் குறிப்பிட்டார். இது தொடர்பில் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ள அவர், ஐ.ம.சு.மு மற்றும் சு.க சார்பில் உரித்துடைய உறுப்பினர்கள் யார் யார் என்பது தொடர்பாக கட்சி தொகுதி மற்றும் மாவட்ட அமைப்பாளர்களுடன் பேசியே முடிவு செய்யப்படு…
-
- 0 replies
- 286 views
-
-
யாழில். கூட்டமைப்பின் தோல்விக்கு மதவாதமே காரணம் – ஸ்ரீகாந்தா குளோபல் தமிழ்ச் செய்தியாளர் வடக்கு, கிழக்கில் தமிழ் தேசிய கூட்டமைப்பு ஆட்சி அமைக்க தமிழ் தேசிய மக்கள் முன்னணி மற்றும் தமிழர் விடுதலை கூட்டணி ஆரதவு வழங்க வேண்டும் என ரெலோ அமைப்பின் செயலாளர் நாயகமும் சட்டத்தரணியுமான சிறீக்காந்தா வேண்டுகோள் விடுத்துள்ளார் . அதேவேளை அது தொடர்பில், தமிழ் தேசிய மக்கள் முன்னணியில் இருந்து சில சாதகமான கருத்துக்கள் வந்துள்ளது என்றும் தெரிவித்தார். யாழிலுள்ள தனியார் விடுதியில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில், தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கு இ…
-
- 1 reply
- 611 views
-
-
தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் பேசத் தயார் நடந்து முடிந்த காரைதீவு பிரதேசசபைத் தேர்தல் பெறுபேற்றின் அடிப்படையில் கூடிய 4 ஆசனங்களைப் பெற்ற தமிழ்த் தேசியிக் கூட்டமைப்புடன் பேச்சுவார்த்தை நடத்த நாம் தயாரென சுயேச்சைக் குழுத் தலைவர் சந்திரசேகரம் நந்தகுமார் தெரிவித்துள்ளார். காரைதீவு மகா சபையின் வழிநடத்தல் குழு சபைச் செயலாளரின் இல்லத்தில் நேற்று இடம்பெற்ற சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். தொடர்ந்தும் அவர் கருத்து தெரிவிக்கையில், நாம் தேர்தலுக்கு முன்பு மகாசபை கூட்டிய கூட்டத்தில் எமது காரைதீவு தமிழ் மக்களின் இருப்பு மானம் காப்பாற்றும் வகையில் செயற்படுவதென்றும் எமக்குக் கிடைக்கின்ற ஆசனங்களை எம்மிடையே சுழற…
-
- 2 replies
- 565 views
-
-
மைத்திரியின் இணக்கத்துடன் றணிலின் ஐக்கியதேசிய முன்னணி அரசாங்கம் உருவாகிறது? இன்றைய தினம் நடைபெறவுள்ள அமைச்சரவைக் கூட்டத்தில் முக்கிய தீர்மானங்கள் எடுக்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும், பிரதமர் ரணில் விக்ரமசிங்கவும் இன்றைய தினம் நடைபெறவுள்ள அமைச்சரவைக் கூட்டத்தில் கூட்டு அரசாங்கத்தை நீடிப்பது குறித்து இறுதித் தீர்மானம் எடுக்க உள்ளனர். பெரும்பாலும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் புதிய அரசாங்கமொன்று அமைக்கப்படக்கூடிய சாத்தியங்கள் அதிகளவில் காணப்படுகின்றது. பெரும்பாலும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையில் புதிய அரசாங்கமொன்று அமைப்பது குறித்து இன்றைய அமைச்சரவைக் கூட்டத்தில் அறிவிக்கப்படும் என எதி…
-
- 0 replies
- 275 views
-
-
கருவை பிரதமராக்குமாறு ஆலோசனை வழங்கிய மைத்திரி முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ பலம்பெற்றுள்ளமையினால் அவரது செயற்பாடுகளை முறியடிக்கும் வகையில் நடவடிக்கைகளை எடுக்க வேண்டியுள்ளது. இதனால் பிரதமர் பதவியிலிருந்து தாங்கள் விலகி கரு ஜெயசூரியவை பிரதமராக நியமித்து நல்லாட்சியை கொண்டுசெல்வதே சிறந்தது என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம் தெரிவித்துள்ளதாக கூறப்படுகின்றது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நேற்று முன்தினமிரவு சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். இந்தப் பேச்சுவார்த்தையின்போது பிர…
-
- 0 replies
- 230 views
-
-
மஹிந்த ராஜபக்ஷவின் வாக்கு வங்கியில் பெரு வீழ்ச்சி முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ 2015 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலின்போது பெற்றுக்கொண்ட 5.77 மில்லியன் வாக்குகள்(47.6 %) கடந்த வாரம் இடம்பெற்ற உள்ளூராட்சி சபைக்கான தேர்தலில் 4.95 மில்லியன் வாக்குகளாக (44.7%) குறைவடைந்துள்ளன. இதனால் எமக்கும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் வாக்களித்தவர்களை மட்டுமன்றி மஹிந்த ராஜபக்ஷவுக்கு எதிராக வாக்களித்த 6.1 மில்லியன் மக்களையும் பாதுகாப்பது அரசாங்கத்தின் கடமையாகுமென நிதி மற்றும் ஊடக அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார். அமைச்சர் மங்கள சமரவீர வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் இதுதொடர்பாக மேலும் குறிப்பிட்டுள்ளதாவது: 2015 ஜனாதிபத…
-
- 0 replies
- 292 views
-
-
பேச்சுவார்த்தை முடிவு! நல்லாட்சி அரசைத் தொடர்ந்து கொண்டு செல்வதற்கு ஒரு விசேட குழு அமைக்கப்படவேண்டும் என, ஜனாதிபதி - பிரதமர் இடையே நடைபெற்ற பேச்சுவார்த்தையில் முடிவு காணப்பட்டுள்ளது. உள்ளூராட்சித் தேர்தல் முடிவுகளையடுத்து இலங்கை அரசியலில் ஒரு குழப்ப நிலை தோன்றியுள்ளது. இந்திய - அமெரிக்க தூதர்கள் ஜனாதிபதி மற்றும் பிரதமருடன் பேச்சுவார்த்தை நடத்தியதில் இருந்து, இந்தத் தேர்தல் முடிவுகள் உள்நாட்டு ரீதியாக மட்டுமன்றி சர்வதேச ரீதியாகவும் சிறு தாக்கத்தை ஏற்படுத்தியிருப்பதை உணர முடியும். தேர்தல் முடிவுகள் வெளியானதை அடுத்து இன்று (13) காலை முதல் ஐதேக மற்றும் ஸ்ரீலசுக ஆகிய கட்சிகள் பல்வேறு பேச்சுவார்த்தைகளை நடத்தின. குறிப்…
-
- 1 reply
- 342 views
-
-
தமிழில் தேசிய கீதம் பாடியதால் தான் ஐதேகவுக்கு தோல்வியாம் – திலக் மாரப்பன கண்டுபிடிப்பு உள்ளூராட்சித் தேர்தலில் ஐதேகவுக்குப் பின்னடைவு ஏற்பட்டமைக்கு சுதந்திர நாளன்று தமிழில் தேசிய கீதம் பாடப்பட்டதே முக்கிய காரணம் என்று சிறிலங்காவின் வெளிவிவகார அமைச்சர் திலக் மாரப்பன தெரிவித்துள்ளார். சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் நேற்றுமுன்தினம், நடந்த ஐதேகவின் உயர்மட்டக் கூட்டத்திலேயே அவர் இந்தக் கருத்தை வெளியிட்டுள்ளார். தமிழில் தேசிய கீதம் பாடப்பட்ட ஒவ்வொரு முறையும், ஐதேக, 50 ஆயிரம் சிங்கள பௌத்த வாக்குகளை இழந்துள்ளது என்றும் திலக் மாரப்பன கூறியுள்ளார். அவரது இந்தக் கருத்தை நிதி அமைச்சர் மங்கள சமரவீர நிராகரித்துள்ளார். இந்தக் கூட…
-
- 0 replies
- 209 views
-
-
மாமனிதர் சிவநேசனின் நினைவு நிகழ்வு !! மாமனிதர் சிவநேசனின் நினைவு நிகழ்வு !! யாழ்ப்பாண மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கி.சிவநேசனின் 10ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு நேற்று மல்லாவியில் உள்ள அவரது நினைவிடத்தில் கடைப்பிடிக்கப்பட்டது. 2008ஆம் ஆண்டு மார்ச் மாதம் 6 ஆம் திகதி மகா சிவராத்திரி தினத்தன்று இலங்கை இராணுவத்தின் ஆழ ஊடுருவும் படையினரின் கிளைமோர் தாக்குதலில் சிவநேசன் உயிரிழந்தார். …
-
- 0 replies
- 266 views
-
-
என்னுடன் எவரும் பேசவில்லை’ ‘புதிய அரசாங்கமொன்றை உருவாக்குவது தொடர்பில், தன்னுடன் எவரும் இதுவரை பேசவில்லை எனத் தெரிவித்துள்ள எதிர்க் கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா. சம்பந்தன், புதிய அரசாங்கமொன்றை உருவாக்கவேண்டிய தேவை, தமது கட்சிக்கு இல்லையென்றும் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை, தற்போதைய அரசாங்கத்துக்கு எதிராக மக்கள் வழங்கிய தீர்ப்பை மதிப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இதேவேளை, உள்ளூராட்சிமன்றத் தேர்தலில், அதிக வாக்குகளைப் பெற்று வெற்றிபெற்றுள்ள ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தலைவர் மஹிந்த ராஜபக்ஷவின் கரங்கள் பலமடைந்துள்ளதாகவும் நாட்டு மக்கள், மீண்டும் அவரிடம் அதிகாரத்தை வழங்க…
-
- 1 reply
- 339 views
-
-
லசந்த படுகொலை ; முன்னாள் பொலிஸ்மா அதிபர் கைது ஊடகவியலாளர் லசந்த விக்கிரமதுங்கவின் கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகத்தின் பேரில் கல்கிஸை பிரதேசத்திற்கு பொறுப்பாகவிருந்த முன்னாள் பிரதி பொலிஸ்மா அதிபர் பிரசன்ன நாணயக்கார கைது செய்யப்பட்டுள்ளார். இவர் நேற்றிரவு குற்றத் தடுப்பு பிரிவினால் கைது செய்யப்பட்டுள்ளார். உடகவியலாளர் லசந்த விக்கிரமதுங்க கடந்த 2009 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 08 ஆம் திகதி கல்கிஸை பிரதேசத்தில் வைத்து இனந்தெரியாத ஆயுததாரிகளால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் உயிரிழந்தார். இந்நிலையில் குறித்த கொலை தொடர்பான சாட்சியங்களை மறைத்தமை தொடர்பான சந்தேகத்தின் பேரிலேயே கல்கிஸை பிரதேசத்திற்கு பொறுப்பாக…
-
- 0 replies
- 281 views
-
-
அனைத்து சபைகளிலும் ஆட்சி அமைப்பதற்கு ஈ.பி.டி.பி ஆதரவு நடைபெற்று முடிந்த உள்ளூராட்சி சபை தேர்தலில் போட்டியிட்ட ஈழ மக்கள் ஜனநாயக கட்சியினுடைய பெறுபேறுகளில் தனக்கு திருப்தி இல்லா விட்டாலும் வாக்களித்த மக்களுக்கு எனது நன்றிகள் என நாடாளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவாநந்தா தெரிவித்துள்ளார். உள்ளூராட்சி சபை தேர்தலில் தொடர்பில் இன்று ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போதே இவ்வாறு கூறியுள்ளார். தொடர்ந்தும் அவர் கருத்து தெரிவிக்கையில், இந்த நிலையில் சில சபைகைளை தவிர்ந்து ஏனைய சபைகளில் தொங்கு நிலைமை காணப்படுவதால் எந்த கட்சி மக்கள் நலன் சார்ந்த திட்டங்களை முன்னெடுக்கப்படுகின்றதோ அந்த கட்சிக்கு நாங்கள் வெளியிலிருந்து ஆதரவு அளிப்பதற்கு தயாராக உள்ளோம். …
-
- 2 replies
- 507 views
-
-
மஹிந்த கனவு கண்டாலும் நடக்காது ; ராஜித்த சேனாரத்ன Weiterempfehlen நல்லாட்சி அரசாங்கத்துக்கு 2015 ஜனவரி 8 ஆம் திகதி ஜனாதிபதி தேர்தலின்போது கிடைக்கப்பெற்ற மக்கள் ஆணை உள்ளூராட்சிமன்ற தேர்தலில் மேலும் உறுதியாகியுள்ளது. அத்துடன் பிரதமரை மாற்றவோ அல்லது அரசாங்கம் ராஜினாமாசெய்யவோ எந்ததேவையும் வெளிப்படவில்லை என சுகாதார அமைச்சரும் அமைச்சரவை இணைப்பேச்சாளருமான ராஜித்த சேனாரத்ன தெரிவித்துள்ளார். உள்ளூராட்சிமன்ற தேர்தல் பெறுபேறுகள் தொடர்பாக ஊடகங்களுக்கு விடுத்துள்ள அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார். அதில் மேலும் தெரிவித்துள்ளதாவது, நடந்து முட…
-
- 4 replies
- 583 views
-
-
நல்லாட்சி அரசைத் தொடர்ந்து கொண்டு செல்வதற்கு ஒரு விசேட குழு அமைக்கப்படவேண்டும் என, ஜனாதிபதி - பிரதமர் இடையே நடைபெற்ற பேச்சுவார்த்தையில் முடிவு காணப்பட்டுள்ளது. உள்ளூராட்சித் தேர்தல் முடிவுகளையடுத்து இலங்கை அரசியலில் ஒரு குழப்ப நிலை தோன்றியுள்ளது. இந்திய - அமெரிக்க தூதர்கள் ஜனாதிபதி மற்றும் பிரதமருடன் பேச்சுவார்த்தை நடத்தியதில் இருந்து, இந்தத் தேர்தல் முடிவுகள் உள்நாட்டு ரீதியாக மட்டுமன்றி சர்வதேச ரீதியாகவும் சிறு தாக்கத்தை ஏற்படுத்தியிருப்பதை உணர முடியும். தேர்தல் முடிவுகள் வெளியானதை அடுத்து இன்று (13) காலை முதல் ஐதேக மற்றும் ஸ்ரீலசுக ஆகிய கட்சிக…
-
- 0 replies
- 415 views
-
-
படிப்பினைகளை வாரி வழங்கிய உள்ளூராட்சித் தேர்தல் !! படிப்பினைகளை வாரி வழங்கிய உள்ளூராட்சித் தேர்தல் !! இடம் பெற்று முடிந்த உள்ளூராட்சிச் சபைத் தேர்தல் அரசியல் தலைவர்களுக்கும், மக்களுக்கும் பல்வேறு படிப்பினைகளை எடுத்துக் கூறி யுள்ளது. தெற்கில் மகிந்த ராஜபக்ச மீள் எழுச்சி பெற்றுள்ளார். ஐக்கிய தேசியக் கட்சி இரண்டாவது இடத்தைப் பிடித்த அதேவேளை மைத்திரி தலைமையிலான சிறிலங்கா சுதந்திரக் கட்சி மூன்றாவது இடத்துக்குத் தள்ளப்பட்டுள்ளது. …
-
- 0 replies
- 465 views
-
-
அரசமைப்புத் தொடர்பில் ஆராய்வது மிக அவசியம்!! நடைபெற்று முடிந்துள்ள உள்ளூராட்சித் தேர்தல், உருவாக்கப்பட்டுவரும் புதிய அரசமைப்புத் தொடர் பாக வெளிவந்திருந்த இடைக்கால அறிக்கையின் மீதான கருத்துக்கணிப்பாக அமையும் என்று ஏற்கனவே கணிக்கப்பட்டிருந்தது. இவ்வாறிருக்க, அரசமைப்பின் உருவாக்கமும், அது தொடர்பிலான கோரிக்கைகள் மற்றும் நிபந்தனைகளும் மீண்டும் பரிசீலிக்கப்பட வேண்டிய தேவையும் கட்டாயமும் உள்ளது என்பதை தமிழர் தாயகத் தேர்தல் முடிவுகள் வெளிப்படுத்தியுள் ளன. அரசமைப்பில், வடக்கு – கிழக்கு இணைந்த ஒன்றுபட்ட இலங்கைக்குள் கூட்டாட்சி அடிப்படையில…
-
- 0 replies
- 376 views
-