ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143312 topics in this forum
-
இலங்கை அரசியலில் பரபரப்பு ! தனி அரசாங்க முயற்சியில் ஐ.தே.க. - த. தே.கூ வுடன் பேச்சு ! ஐக்கிய தேசியக்கட்சியின் தனி அரசாங்கம் அமைக்கும் முயற்சியில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் கலந்துரையாடப்பட்டுள்ளதாக தெரியவருகின்து. ஐக்கிய தேசியக் கட்சி தனியரசாங்கம் அமைக்கும் பட்சத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆரதரவு வழங்குமெனவும் அரசியல் வட்டங்களின் மூலம் தெரியவருகின்றது. உள்ளூராட்சி மன்றத்தேர்தலின் பின்னர் தேசிய அரசாங்கத்தில் ஏற்பட்டுள்ள முரண்பாடுகள் காரணமாக ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோருக்கிடையில் கருத்து முரண்பாடுகள் ஏற்பட்டுள்ள நிலையில் நேற்று கூடிய ஐக்கிய தேசியக் கட்சியின் இராஜாங்க அமைச்சர்கள் கூட்டம்,…
-
- 0 replies
- 273 views
-
-
சிவராத்திரி தினத்தை கொச்சைப் படுத்தாதீர்!! சிவராத்திரி தினத்தை கொச்சைப் படுத்தாதீர்!! யாழ். இந்தியத் துணைத்தூதரக கொன்சியூலரிடம் கோரிக்கை யாழில் உள்ள இந்தியத் தூதரகத்தின் ஏற்பாட்டில் சிவராத்திரி நாளில் கீரிமலை நகுலேஸ்வரர் ஆலயத்தில் நடைபெறும் பட்டிமன்றத்தை நிறுத்த வேண்டும் என்று இந்து சமயப் பேரவை கோரியுள்ளது. இந்துக்களின் புனிதமான சிவராத்திரி தினத்தைக் கொச்சைப்படுத்த வேண்டாம் என்றும் அந்த அமைப்பு வேண்டு…
-
- 0 replies
- 357 views
-
-
யாழ். மாநகரசபை மேயர் யார் என்பதில் தொடரும் இழுபறி யாழ். மாநகரசபை மேயர் தெரிவில் இழுபறி நிலை தோன்றியுள்ளது. யாழ். மாநகரசபை மேயர், முன்னாள் மாகாணசபை உறுப்பினர் ஆர்னோல்ட் என கூட்டமைப்பின் ஊடக பேச்சாளர் சுமந்திரன் அறிவித்திருந்த நிலையில் தேர்தல் காலத்திலேயே அந்த கருத்து வாபஸ் வாங்கப்பட்டிருந்தது. இதன் பின்பு தேர்தல் முடிவு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் யாழ். மாநகரசபைக்கான மேயர் தெரிவு தொடர்பில் கட்சிக்குள் நிலவரம் சூடு பிடித்துள்ளது. அதனடிப்படையில் யாழ். மாநகரசபை மேயராக ஆர்னோல்ட்டை தெரிவு செய்ய வேண்டாம் என கூட்டமைப்பின் வெற்றி பெற்ற உறுப்பினர்கள் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜாவிடம் எடுத்து கூறியுள்ளதாக உத்தியோகப்பற்றற்ற தகவல்கள் த…
-
- 1 reply
- 474 views
-
-
கிங்மேக்கர் கனவுடன் காத்திருக்கும் டக்ளஸ்!! கிங்மேக்கர் கனவுடன் காத்திருக்கும் டக்ளஸ்!! உள்ளூராட்சித் தேர்தல் முடிவுகளின் அடிப்படையில் நாங்கள் தான் “கிங்மேக்கர்கள்” என்று யாழ்ப்பாணம் மாநகர சபையின் முன்னாள் மேயர் திருமதி யோகேஸ்வரி பற்குணராஜா, சிறிதர் தியேட்டரில் யாழ்ப்பாண நகர வர்த்தகர்களுடன் நடந்த கலந்துரையாடலில் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாண நகரத்தில் உள்ள முக்கியமான சில வர்த்தகர்கள் (பத்துக்கு…
-
- 0 replies
- 286 views
-
-
தமிழ் மக்கள் விடுதலை, உரிமைகளுடன் வாழ வேண்டுமாயின் சம்பந்தன் போன்றவர்கள் தேசிய அரசியலிலிருந்து ஓரங்கட்டப்பட வேண்டும்! -தேசப்பற்றுள்ள தேசிய இயக்கம் (இராஜதுரை ஹஷான்) நல்லாட்சி என்ற கொடுங்கோலாட்சியின் அழிவின் ஆரம்பம் உள்ளூராட்சித் தேர்தலில் பிரதிபலித்துள்ளது. கடந்த மூன்று வருடகாலமாக நல்லாட்சி அரசாங்கத்தின் உறுப்பினர்கள் மக்களை தொடர்ச்சியாக ஏமாற்றி வந்ததன் பயனே பாரிய தோல்விக்கான முதற்காரணம் என தேசப்பற்றுள்ள தேசிய இயக்கத்தின் தலைவர் கலாநிதி குணதாச அமரசேகர தெரிவித்தார். தமிழ் மக்கள் தமக்கான விடுதலை மற்றும் உரிமைகளுடன் வாழ வேண்டுமாயின் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் போன்றவர்கள் தேசிய அரசிய…
-
- 0 replies
- 135 views
-
-
சுதந்திரக் கட்சித் தலைவர் பதவியை ஏற்கத் தயார் – மகிந்த ராஜபக்ச சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமைப் பதவியை ஏற்றுக் கொள்ளத் தாம் தயாராகவே இருப்பதாக சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று நடத்திய செய்தியாளர் சந்திப்பின் போது, சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர் பதவி வழங்கப்பட்டால் ஏற்றுக் கொள்வீர்களா என்று கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு மகிந்த ராஜபக்ச “நிச்சயமாக அதனை நான் ஏற்றுக் கொள்வேன். ஆனால், மைத்திரிபால சிறிசேன நிச்சயமாக அதனை வழங்கமாட்டார் என்று எனக்குத் தெரியும். ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்கு கூட்டு எதிரணி ஒருபோதும் சூழ்ச்சிகளில் ஈடுபடாது, ஜனநாயக முறையிலேயே அதிகாரத்தைக் கைப்பற்றும்…
-
- 0 replies
- 162 views
-
-
மாவையின் மகனும் வலி.வடக்கு பிரதேச சபையில் வெற்றி உள்ளூராட்சித் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் வலி.வடக்கு பிரதேச சபைக்குப் போட்டியிட்ட, தமிழ் அரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசாவின் மகனும் வெற்றி பெற்றுள்ளார். வலிகாமம் வடக்கு பிரதேச சபைக்கு, மாவிட்டபுரம், வீமன்காமம் 9 ஆம் வட்டாரத்தில், மாவை சேனாதிராசாவின் மகன், கலைஅமுதன் போட்டியிட்டிருந்தார். இந்தத் தேர்தலில் அவர் வெற்றி பெற்றதன் மூலம், வலி.வடக்கு பிரதேச சபைக்குள் நுழையவுள்ளார். அதேவேளை, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியை உருவாக்குவதில் ஆரம்பத்தில் முக்கிய பங்காற்றியவரான, பொருளியல் ஆசான் வரதராஜனின் மகன் பார்த்தீபனும், யாழ். மாநகரசபைக்குத் தெரிவாகியுள்ளார். உள்ளூராட்…
-
- 0 replies
- 187 views
-
-
அரசியல் குழப்பங்களால் சிறிலங்காவின் பொருளாதாரமும் தள்ளாட்டம் சிறிலங்காவில் உள்ளூராட்சித் தேர்தலை அடுத்து ஏற்பட்டுள்ள அரசியல் குழப்பநிலைகளால், நாட்டின் பொருளாதாரத்தில் உறுதியற்ற நிலை ஏற்பட்டுள்ளது. உள்ளூராட்சித் தேர்தலில், கூட்டு அரசாங்கத்தில் இடம்பெற்றுள்ள இரண்டு பிரதான கட்சிகளும் தோல்வியைச் சந்தித்துள்ளன. இதையடுத்து, கூட்டு அரசாங்கத்துக்குள் அரசியல் குழப்பங்கள் ஏற்பட்டு உறுதியற்ற நிலை தோன்றியுள்ளது. இதனால் சிறிலங்காவின் பங்குச்சந்தையில் நேற்று வீழ்ச்சி ஏற்பட்டது. முக்கியமான பங்குகளின் விலைகளில் நேற்று கணிசமான சரிவு ஏற்பட்டுள்ளது. அரசியல் குழப்பநிலையால் முதலீட்டாளர்கள் பங்குகளை வாங்கத் தயக்கம் காட்டுவதாகவும் இதனால், பங்குச் சந்தையி…
-
- 0 replies
- 95 views
-
-
ஈழப் பிராந்தியம் சுருங்கி விட்டது – மகிந்த ஈழப் பிராந்தியம் சுருங்கி விட்டது என்பதையே உள்ளூராட்சித் தேர்தல் முடிவுகள் எடுத்துக் காட்டுவதாக சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று நடத்திய செய்தியாளர் சந்திப்பின் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். உள்ளூராட்சித் தேர்தலில் சிறிலங்கா பொதுஜன முன்னணி பெற்றுள்ள வெற்றி தொடர்பாக, நாளிதழ் ஒன்றில் வெளியாகியிருந்த சி்றிலங்காவின் வரைபடத்தை காண்பித்து மகிந்த ராஜபக்ச இவ்வாறு கூறியிருக்கிறார். “ஒவ்வொரு மூலை முடுக்கிலும் சிறிலங்கா பொதுஜன முன்னணி வெற்றியைப் பெற்றிருக்கிறது. நாடு முழுவதிலும் அரக்கு நியம் (maroon) பரவியுள்ளது. ஈழப் பிரதேசமும் கூட சு…
-
- 0 replies
- 346 views
-
-
தீவிரமுயற்சியில் ஐ.தே.க. ; பிரதமர் ஜனாதிபதியிடம் கூறியது என்ன ? நடைபெற்று முடிந்த உள்ளூராட்சிமன்றத் தேர்தலில் சிறிலங்கா பொதுஜன பெரமுனவிடம் ஐக்கிய தேசியக்கட்சி பின்னடைவை சந்தித்துள்ள நிலையில் அக்கட்சி மத்தியில் தனித்து ஆட்சி அமைப்பது தொடர்பில் கட்சி மட்டத்தில் ஆராய்ந்து வருகின்றது. தற்போது ஐக்கிய தேசியக்கட்சியும் சிறிலங்கா சுதந்திரக்கட்சியும் இணைந்து தேசிய அரசாங்கத்தை அமைத்துள்ள நிலையில் தேசிய அரசாங்கமின்றி தனித்து அரசாங்கத்தை நிறுவுவது தொடர்பில் ஐக்கிய தேசியக்கட்சியின் உயர் மட்டத்தரப்பினர் ஆராய்ந்து வருகின்றனர். இது தொடர்பில் நேற்று முன்தினம் மாலை ஐக்கியதேசிய…
-
- 0 replies
- 167 views
-
-
இரவில் இடம்பெற்ற மைத்திரி - ரணில் சந்திப்பு : முக்கிய தீர்மானம் இன்று வெளியாகும் ! தேசிய அரசாங்கத்தை மாற்றம் செய்வது தொடர்பில் பிரதமர் தான் தீர்மானிக்க வேண்டும் என்பதை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பிரதமரிடம் தெரிவித்துள்ளார். இதன்போது ஐக்கிய தேசியக் கட்சியின் அங்கத்தவர்களுடன் பேச்சுவார்ததை நடத்திய பின்னர் தனது தீர்மானத்தை எடுப்பதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். இச் சந்திப்பு நேற்றிரவு 9.30 மணியளவில் ஆரம்பித்து குறைந்தது 2 மணித்தியாலங்கள் நீடித்ததாக எமது செய்தியாளர் தெரிவித்தார். கட்சி அங்கத்தவர்களுடன் இன்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மறுபடியும் பேச்சுவார்த்தை நடத்திய பின்னர் தீர்மானத்த…
-
- 0 replies
- 215 views
-
-
தமிழர்களது ஒற்றுமையே இனத்தைக் காக்க வல்லது!! தமிழர்களது ஒற்றுமையே இனத்தைக் காக்க வல்லது!! தமிழிலே ஒரு முது மொழி ‘‘ அரசன் அன்றறுப்பான் தெய்வம் நின்றறுக்கும்’’ என்பதாகும். இந்த முதுமொழியின் தாக்கத்தை இலங்கையின் இறைமையில் தெளிவாகக் காணலாம். ஆங்கிலேயர் கையில் இருந்த இறைமை சுதந்திரம் என்ற பெயரில் சிங்கள இனத்தின் கைக்கு மாறியது. மூவினத்தலை மைகளின் ஒற்றுமையினால் பிறந்ததுதான் சுதந்திரம். ச…
-
- 2 replies
- 633 views
-
-
தமிழ் வண்டுகளும் – முஸ்லீம் தேனீக்களும் மொய்க்க மொட்டு மலரும் சாத்தியம்? குளோபல் தமிழ்ச் செய்திகளின் விசேட செய்தியாளர்.. தமிழ் வண்டுகளும் – முஸ்லீம் தேனீக்களும் மொய்க்க மொட்டு மலரும் என நாடாளுமன்ற உறுப்பினரும், பிவித்துரு ஹெலஉறுமய கட்சியின் தலைவருமான, உதயகம்மன்பில தெரிவித்துள்ளார். உள்ளூராட்சி சபைத் தேர்தலில், முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸவின் பொதுஜனபெரமுன கட்சி அடைந்த வெற்றியுடன் கொழும்பு அரசியல் தன் வலுச் சமநிலையை இழந்துள்ளது. 19ஆவது திருத்தச் சட்டத்தின் கீழ் நாலரை ஆண்டுகளுக்கு பாராளுமன்றை ஜனாதிபதி கலைக்க முடியாத நிலையில், 59 நாடாளுமன்ற உறுப்பினர்களைக்கொண்ட கூட்டு எதிரணியினர் பல நாடாளுமன்ற உறுப்பினர்களை தம்பக்…
-
- 1 reply
- 367 views
-
-
தேர்தல் முடிவின் எதிரொலி! பதவி விலகுகிறார் ரணில்? 1 பிரதமர் ரணில் விக்ரமசிங்க பதவி விலகுவதாக, முன்னாள் நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்சவின் மகன் ராகீத ராஜபக்ச முகநூலில் பதிவிட்டுள்ளார். உள்ளுராட்சி மன்றத் தேர்தல் முடிவுகள் வெளியாகிக் கொண்டிருந்த போது இவ்வாறு பதிவிட்டுள்ளார். உத்தியோகப்பற்றற்ற வகையிலான தகவல் கிடைத்துள்ளது என பிரதமர் பதவி விலகுகின்றார் என ராகீத ராஜபக்ச பதிவிட்டிருந்தார். அவரின் இந்தக் கருத்தால் சமூக வலைத்தளங்களில் கருத்து மோதல்கள் ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. http://www.tamilwin.com/politics/01/173997?ref=home-latest
-
- 7 replies
- 999 views
-
-
தேர்தல் சுவரொட்டிகள் தமிழ் தேசிய பேரவையால் அகற்றப்படுகிறது. குளோபல் தமிழ்ச் செய்தியாளர் யாழ்.சாவகச்சேரி நகர சபைக்கு உட்பட்ட பகுதிகளில் ஒட்டப்பட்ட தேர்தல் பரப்புரை சுவரொட்டிகள் இளைஞர்களால் அகற்றப்பட்டு வருகின்றன. கடந்த 10 ஆம் நடைபெற்ற உள்ளூராட்சி தேர்தலை முன்னிட்டு சாவகச்சேரி நகர சபைக்கு உட்பட்ட பகுதிகளில் ஒட்டப்பட்ட தேர்தல் பரப்புரை சுவரொட்டிகள் தமிழ் தேசிய பேரவை ஆதரவு இளைஞர்களால் அகற்றப்பட்டு வருகின்றன. நடைபெற்று முடிந்த தேர்தலில் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சியின் சைக்கிள் சின்னத்தில் போட்டியிட்ட தமிழ் தேசிய பேரவை வெற்றியீட்டி நகரசபையை கைப்பற்றி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. h…
-
- 2 replies
- 546 views
-
-
மகிந்த ராஜபக்சவுக்கு ஜம்பர் அணிவிப்பதாகக் கூறிய ராஜித சேனாரத்னவுக்கு, பம்பஸ் அணிவிக்க பேருவளைமக்கள் தேடி வருகின்றனர் என்று நாடாளுமன்ற உறுப்பினர் டளஸ் அழகப்பெரும கிண்டலடித்தார். கொழும்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். http://newuthayan.com/story/68403.html
-
- 0 replies
- 292 views
-
-
பிரதேசசபைத் தேர்தல்கள் முடிவுற்று தேர்தல் முடிவுகள் கிடைக்கப்பெற்றிருக்கின்றன. புதிதாகப் பிரதேசசபை உறுப்பினர்களாக தெரிவு செய்யப்பட்டவர்கள் கிராமங்களின் அபிவிருத்தி தொடர்பில் மிகக் கூடிய அக்கறை காட்டி தங்கள் தங்கள் பிரதேசங்களை முன்னேற்றப் பாதையில் கொண்டு செல்வார்கள் என வடமாகாண முதலமைச்சர் சிவி விக்கினேஸ்வரன் நம்பிக்கை வெளியிட்டுள்ளார். இன்றையதினம் வவுனியா இந்துக்கல்லூரிவருடாந்த இல்ல மெய்வல்லுநர் திறனாய்வுப் போட்டியில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார் இயலக்கூடியளவு பொதுமக்களை நேரில் சந்தித்து உரையாடவும் அவர்களின் குறைகளைக் கேட்டறியவும் விருப்பமுள்ள போதும் சில நேரங்களில் அது தனது சக்திக்கு அப்பாற்பட்ட சில காரணிகளால் இயலாமல…
-
- 0 replies
- 192 views
-
-
பெரும் பரபரப்பில் கொழும்பு அரசியல்! பதவி விலகுவாரா ரணில்?? Report us Dias 55 minutes ago பிரதமர் ரணில் விக்ரமசிங்க பதவியிலிருந்து விலகக் கூடும் என கொழும்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும், பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கும் இடையே தற்பொழுது சந்திப்பு வெளியாகியுள்ள நிலையிலேயே இந்த தகவல் வெளியாகியுள்ளது. ரணிலின் பதவி விலகல் முடிவால் நாட்டின் அரசியலில் பெரும் பரபரப்பான சூழல் ஏற்படலாம் என்று எதிர்பார்க்கப் படுகிறது. அப்படி பதவியில் இருந்து ரணில் விக்ரமசிங்க விலகலுக்கான முடிவினை எடுப்பாராயின் நாட்டில் பெரும் குழப்பகரமான அரசியல் சூழல் ஏற்படலாம் என கூறப்படுகிறது. இந்த த…
-
- 1 reply
- 369 views
-
-
வெளியேறுகிறது சிறிலங்கா சுதந்திரக் கட்சி – உடைகிறது கூட்டு அரசு ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து அமைத்துள்ள கூட்டு அரசாங்கத்தில் இருந்து வெளியேற சிறிலங்கா சுதந்திரக் கட்சி முடிவு செய்துள்ளதாக கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. இன்று நடந்த சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய குழுக் கூட்டத்திலேயே இந்த முடிவு எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. உள்ளூராட்சித் தேர்தலில் ஏற்பட்ட தோல்வியை அடுத்து, பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை பதவியில் இருந்து நீக்குமாறு சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் அமைச்சர்கள், சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவிடம் வலியுறுத்தியி்ருந்தனர். இந்த நிலையில் ஐதேக தனித்து ஆட்சியமைப்பதற்கான நடவடிக்கைகளில் இறங்கியுள்ளதை அடு…
-
- 0 replies
- 294 views
-
-
ஐக்கியதேசியக் கட்சி தனித்து ஆட்சி அமைக்கிறதா? ஐக்கிய தேசியக் கட்சி தனித்து ஆட்சி அமைக்கக்கூடிய சாத்தியம் உருவாகியுள்ளது. உள்ளுராட்சி மன்றத் தேர்தல் தொடர்பில் அதிருப்தி அடைந்துள்ள ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்கள் அரசாங்கத்தை விட்டு விலகிச் செல்ல ஜனாதிபதி அனுமதி வழங்க உள்ளதாக அரசியல் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. நல்லாட்சி அரசாங்கத்தில் தொடர்ந்தும் அங்கம் வகிக்கக் கூடாது என சுதந்திரக் கட்சியின் பத்து சிரேஸ்ட அமைச்சர்கள் ஜனாதிபதியிடம் அறிவித்துள்ளனர். அமைச்சுப் பதவிகளை ஏற்றுக்கொண்டமையே கட்சி மீது மக்களுக்கு அதிருப்தி ஏற்படக் காரணமேயாகும் என குறிப்பிட்டுள்ளனர். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி எதிர்க்கட்சியில் அமர வேண்டுமென தெரிவி…
-
- 1 reply
- 391 views
-
-
கட்சித் தலைமைப் பொறுப்பிலிருந்து விலகுமாறு ஜனாதிபதிக்கு அழுத்தம்? குளோபல் தமிழ்ச் செய்தியாளர் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமைப் பொறுப்பிலிருந்து விலகுமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு அழுத்தங்கள் பிரயோகிக்கப்பட்டு வருவதாக அரசியல் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. நடைபெற்று முடிந்த உள்ளூட்சி மன்றத் தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி வெறும் 13 வீதமாக வாக்குகளையே பெற்றுக்கொண்டுள்ளது. சுதந்திரக் கட்சியில் அங்கம் வகித்து ஆளும் கட்சிக்கு ஆதரவளித்து வந்த ஒரு தரப்பினர் ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து கொள்ளவும், மற்றுமொரு தரப்பினர் மஹிந்தவுடன் இணைந்து கொள்ளவும் தீர்மானித்துள்ளனர். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு ச…
-
- 0 replies
- 203 views
-
-
மஹிந்தவின் வெற்றி குறித்து சம்பந்தன் வெளியிட்டுள்ள தகவல் எதிர்கால நடவடிக்கைகளை முன்னெடுத்து செல்வதற்கு தமிழ் கட்சிகள் அனைத்தும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டியது அவசியம் என எதிர்க் கட்சித் தலைவர் இரா. சம்பந்தன் தெரிவித்துள்ளார். தமிழரசுக் கட்சியின் வேட்பாளர்களுக்கும், கட்சியினருக்கும் பொதுமக்களுக்கும் இடையில் எதிர்க்கட்சி தலைவரின் இல்லத்தில் இன்று சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளது. இதன்போதே சம்பந்தன் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். தொடர்ந்து தெரிவிக்கையில், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தலைமையிலான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் வெற்றி, எந்தவகையிலும் கூட்டு அரசாங்கத்தை பாதிக்காது. எதிர்கால நடவடிக்கைகளை…
-
- 1 reply
- 365 views
-
-
சிறிலங்காவுக்குள் நடப்பதை அமெரிக்கா வெளிக்கொணர வேண்டும் பெப்ரவரி 4 அன்று சிறிலங்கா தனது 70வது சுதந்திர தினத்தைக் கொண்டாடியது. பெப்ரவரி 01 அன்று கொழும்பிலுள்ள அமெரிக்கத் தூதரகத்தால் வெளியிடப்பட்ட ஊடக அறிக்கையில் ‘அமெரிக்க-சிறிலங்கா உறவு கடந்த 70 ஆண்டுகளாகத் தொடரப்படுவதாகவும் இனி வருங்காலங்களில் இரு நாடுகளின் உறவையும் மேலும் மேம்படுத்துவதற்கான புதிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும்’ எனவும் குறிப்பிடப்பட்டிருந்தது. சிறிலங்கா இராணுவத்துடனான உறவை அமெரிக்கா மேலும் பலப்படுத்தவுள்ளதாகவும் கொழும்பிலுள்ள அமெரிக்கத் தூதரகத்தால் வெளியிடப்பட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது. ‘சிறிலங்காவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையில் இணைந்து மேற்கொள்ளப்படவுள்ள புதிய நடவட…
-
- 0 replies
- 311 views
-
-
பரபரப்பான சூழலில் இன்று நாடு திரும்புகிறார் கோத்தா – கைது செய்யப்படுவாரா? சிறிலங்காவில் நேற்று முன்தினம் நடந்த உள்ளூராட்சித் தேர்தலில் மகிந்த ராஜபக்சவின் சிறிலங்கா பொதுஜன முன்னணி எதிர்பாராத வெற்றியைப் பெற்றுள்ள சூழலில், அமெரிக்கா சென்றிருந்த முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச இன்று நாடு திரும்பவுள்ளார். ஊழல் வழக்குகளில் கைது செய்யப்படக் கூடிய சூழல் ஏற்பட்டிருந்த நிலையில் கோத்தாபய ராஜபக்ச அமெரிக்காவுக்குச் சென்றிருந்தார். அவரை சிறிலங்கா அதிபரே காப்பாற்றியதாக ஐதேகவினர் குற்றம்சாட்டியிருந்தனர். நாடு திரும்பும் கோத்தாபய ராஜபக்ச உடனடியாக கைது செய்யப்படுவார் என்று அமைச்சர் ராஜித சேனாரத்ன கூறியிருந்தார். இந்த நிலையில் கோத்தாபய ராஜபக்ச …
-
- 2 replies
- 511 views
-
-
வெற்றி பெற்றாலும் கவலைப்பட வேண்டிய விடயமும் உண்டு தமக்கு வாக்களிக்க இருந்தவர்கள் திசை திருப்பப்பட்டதாக கிழக்கு மாகாணசபையின் முன்னாள் அமைச்சர் கி.துரைராஜசிங்கம் குறிப்பிட்டுள்ளார். மட்டக்களப்பு - நல்லையா வீதியில் உள்ள இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைமையகத்தில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார். இதன்போது தொடர்ந்தும் கூறுகையில், உள்ளூராட்சி மன்றத் தேர்தல் முடிவடைந்திருக்கின்றது. வடக்கு, கிழக்கு மாகாணங்களைப் பொருத்தவரையில் ஆரம்பத்தில் இருந்தே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பல்வேறு பொய்ப்பிரச்சாரங்களுக்கு முகங்கொடுத்திருந்தது. அதனை நாங்கள் மக்களுக்கு தெளிவுபடுத்தியிருந்தோம். இருப்பின…
-
- 1 reply
- 394 views
-