Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. பொறி­முறை ரீதி­யான சித்­தி­ர­வதை தொடர்­கி­றது! தற்­போ­தைய அர­சின் காலத்­தி­லும் தமிழ் இளை­ஞர்­கள் தடுப்­புக் காவ­லில் வைக்­கப்­பட்டு சித்­தி­ர­வ­தை­க­ளுக்­கும், பாலி­யல் துன்­பு­றுத்­தல்­க­ளுக்­கும் உள்­ளாக்­கப்­ப­டு­கி­றார்­கள் என்­கிற குற்­றச்­சாட்டு மீண்­டும் எழுப்­பப்­பட்­டுள்­ளது. ‘அசோ­சி­யேட் பிரஸ்’ பன்­னாட்டு ஊட­கம் இது தொடர்­பாக அண்­மை­யில் அறிக்­கை­யிட்­டி­ருந்­தது. அதில் புலம்­பெ­யர் நாடு­க­ளில் தஞ்­ச­ம­டைந்த இளை­ஞர்­கள் பல­ரது உடல் க­ளில் காணப்­பட்ட காயங்­க­ளும் ஆதா­ர­மாக முன்­வைக்­கப்­பட்­டி­ருந்­தன. இந்த விட­யம் பூதா­கா­ர­மா­கக் கிளம்­பி­யதை அடுத்து…

  2. சில்­லறை விட­யங்­க­ளுக்­கும் இன்­றும் கையூட்டு கொடுக்­க­ வேண்­டி­யுள்­ளது கீழ் நிலை­யில் உள்ள மக்­கள் இன்­னும் சாதா­ரண விட­யங்­க­ளுக்­கும் கையூட்­டுக் கொடுக்க வேண்­டிய நிலமை உள்­ளது. கையூட்டு மற்­றும் ஊழல் விசா­ரணை ஆணைக்­குழு வேக­மா­கச் செயற்­பட வேண்­டும். அடி­மட்ட ஊழ லைத் தடுக்க இத­னூ­டா­கவே முடி­யும். அடி­மட்ட ஊழலைத் தடுத்­தால் மேல் மட்­டத்­தி­லும் ஊழ­லைத் தடுக்க முடி­யும். இவ்­வாறு தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்பு நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் வியா­ழேந்­தி­ரன் தெரி­வித்­தார். நாடா­ளு­மன்­றத்­தில் நேற்று முன்தினம் 2018 ஆம் ஆண்­டுக்­கான வரவு -– செல­வுத் திட்­டத்­தில் அரச தலை­வர், தலைமை அமைச்­சர், எதிர்க்­கட்சித் தலை­வர்…

  3. சமஷ்டி ஒன்றே ஓரளவுக்கு சிங்களவரின் பேரினவாதத்தை முறியடிக்கக் கூடியது! வடக்கு மாகாண சபையின் முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன், பல்வேறு தரப்பினரிடமிருந்தும் தமக்குக் கிடைக்கும் பல கேள்விகளில் ஒன்றிற்கு வாராவாரம் பதிலளித்து வருகின்றார். அதன்படி இந்தவாரம் ஒரு கேள்விக்கும் அவர் பதிலளித்துள்ளார். குறித்த கேள்வியினையும் அதற்கான முதலமைச்சரின் பதிலினையும் இங்கே முழுமையாகத் தருகின்றோம். கேள்வி: தமிழ் மக்களின் பிரச்சனைக்குத் தீர்வுகாண தமிழ்த் தேசியக்கூட்டமைப்பின் தலைவர்கள் படாதபாடுபடுகையில் அண்மையில் அரசியலுக்கு வந்த நீங்கள் அதற்கு முட்டுக்கட்டையாக இருப்பதைப் பலரும் விமர்சனஞ் செய்கின்றார்கள். மற்றவர்களுடன் சேர்ந்து போகாமல் அவர்களின் …

  4. தமிழக அரசியல்வாதிகள் கருத்துக்களை வெளியிட முன்னர் இலங்கை வந்து நிலைமையை நேரில் பார்க்க வேண்டும் குளோபல் தமிழ்ச் செய்தியாளர் தமிழக அரசியல்வாதிகள் கருத்துக்களை வெளியிடுவதற்கு முன்னதாக இலங்கைக்கு வந்து நிலைமைகளை நேரில் பார்வையிட வேண்டுமென அமைச்சர் பழனி திகாம்பரம் தெரிவித்துள்ளார். தமிழக அரசியல்வாதிகள் மத்திய மலைநாட்டுக்கு நேரில் வந்து செய்து நிலைமைகளை பார்வையிடாது கருத்து வெளியிடுவதில் பயனில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார். தமிழக மாநில அரசியல்வாதிகள் எப்பொழுதம் ஈழத் தமிழர்கள் பற்றி மட்டுமே பேசி வருவதாகவும் மலையக பெருந்தோட்டப் பகுதிகளில் வாழ்;ந்து வரும் இந்திய வம்சாவளித் தமிழர்கள் பற்றியும் அவர்கள் எதிர்நோக்கி வரும் சவால்கள் பற்…

  5. Lycan VS Rox மோதல். “வாள்கள் மினுங்கும்” “பைக்” எல்லாம் கதறும்: “ஆவாக்கள்” கோலோச்சும் யாழ்ப்பாணம் – சுழிபுரம் கந்தசாமி யாழில்.இயங்கும் ஆவா குழுவுக்கும் தனு ரொக்ஸ் இடையில் ஏற்பட்ட மோதல் சம்பவங்களே கடந்த தினங்களில் யாழில்.நடைபெற்ற வாள் வெட்டு சம்பவங்கள் என காவற்துறை விசாரணைகளில் கண்டறியப்பட்டு உள்ளது. ஆவா குழுவை சேர்ந்த சன்னா என்று அழைக்கப்படும் பிரசன்னா, தேவா, மற்றும் பிரகாஸ் ஆகியோர் உள்ளதாகவும் , அவர்கள் பின்னால் பலர் உள்ளதாகவும் காவற்துறையினர் தெரிவித்து அவர்களை தேடப்படும் குற்றவாளிகளாக அறிவித்து இருந்தனர் அந்த நிலையில் தேவா மற்றும் பிரகாஸ் ஆகிய இருவரும் இந்தியாவுக்கு தப்பி சென்று இருந்த நிலையில் திருச்சி பொலிசாரினால் உரிய ஆவணங…

  6. தேசியக் கொடியை ஏற்ற மறுத்த விவகாரம்: சட்டமா அதிபரின் ஆலோசனை படி நடவடிக்கை வட மாகாண கல்வி அமைச்சர் எஸ்.சர்வேஸ்வரன் தேசியக் கொடியை ஏற்ற மறுத்த விவகாரம் தொடர்பில், சட்ட மா அதிபரின் ஆலோசனையின் படி, நடவடிக்கை எடுக்கவுள்ளதாக, வடக்கு ஆளுநர் ரெஜினோல்ட் குரே கூறியுள்ளார். நாளை இது குறித்து சட்டமா அதிபரின் ஆலோசனையைப் பெற நடவடிக்கை எடுத்துள்ளதாக, அவர் சுட்டிக்காட்டியுள்ளார். அண்மையில், வவுனியா பாடசாலை ஒன்றில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்து கொண்ட, சர்வேஸ்வரன், இலங்கை தேசியக் கொடியை ஏற்ற மறுத்தார். பல்லின மக்கள் வாழ்கின்ற இலங்கையின் தேசிய கொடியில் சிறுபான்மையினருக்கு உரிய இடம் வழங்கப்படவில்லை என்பதற்காகவே தான் தேசிய கொடியை ஏற்ற மறுப்பு தெரிவித்தத…

  7. விடுதலை புலிகளினால் விவசாய செய்கை மேற்கொள்ளப்பட்டு வந்த இரணைமடு காணி அளவிடப்படுகின்றது குளோபல் தமிழ்ச் செய்தியாளர் கிளிநொச்சி இரணைமடு பகுதியில் சிவில் பாதுகாப்பு திணைக்களத்தின் பராமரிப்பில் உள்ள அரச காணி அளவீட்டு பணிகள் இடம்பெற்ற வருகின்றன. விடுதலை புலிகளினால் விவசாய செய்கை மேற்கொள்ளப்பட்டு நூற்றுக்கணக்கான மக்களிற்கு வேலைவாய்பு வழங்கப்பட்ட பண்ணைக்காணியே இவ்வாறு நில அளவீடு செய்யப்பட்டு வருகின்றது. மீள்குடியேற்றத்தின் பின்னர் இராணுவத்தினரின் கட்டுப்பாட்டில் இருந்த குறித்த காணி பின்னர் இராணுவ சிவில் பாதுகாப்பு திணைக்களத்தினரால் பராமரிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் குறித்த காணியினை அளவீடு செய்யும் பணிகள் கடந்த வெள்ளிக்கிழமை …

  8. கல்வி இராஜாங்க அமைச்சின் அதிகாரங்களை பகிர்ந்தளிக்க இணக்கம் கல்வி அமைச்சில் கடந்த காலங்களில் நிலவிய அதிகார பகிர்வு தொடர்பான பிரச்சினைக்கு சுமுகமான தீர்வு எட்டப்பட்டுள்ளதாக கல்வி இராஜாங்க அமைச்சர் இராதாகிருஸ்ணன் தெரிவித்துள்ளார். மாத்தளை - ஹாமினா தேசிய கல்லூரியில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் கூறியுள்ளதாவது, கல்வி அமைச்சில் இராஜாங்க அமைச்சருக்கான அதிகாரங்கள் முறையாக வழங்கப்படுவதில்லை என நான் கடந்த வாரத்தில் பத்திரிக்கையாளர் சந்திப்பின் பொழுது கருத்து தெரிவித்திருந்தேன். இது தொடர்பாக பல மட்டத்திலும் எனக்கு ஆதரவாக க…

  9. ஐக்கிய அரபு இராச்சியத்தின் வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் ஜனாதிபதியை சந்தித்தார்..! ஐக்கிய அரபு இராச்சியத்தின் வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் சேக் அப்துல்லா பின் அல்நயன் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவை ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் நேற்று சந்தித்தார். இலங்கைக்கும் ஐக்கிய அரபு இராச்சியத்திற்கும் இடையிலான தொடர்புகளில் அண்மைக்காலத்தில் ஏற்பட்டுள்ள துரித வளர்ச்சி குறித்து ஜனாதிபதி இதன்போது மகிழ்ச்சி தெரிவித்தார். இரு நாட்டு உறவுகளுக்கும் பாரிய சக்தியாக விளங்கும் ஐக்கிய அரபு தேசத்தில் வசிக்கும் 125,000 இலங்கைத் தொழிலாளர்களின் பங்களிப்பு தமது பொருளாதாரத்தில் முக்கிய பங்கினை வகிப்பதாக ஐக்கிய அரபு இராச்சியத்தின் வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் …

  10. வவுனியாவில் இளைஞர்கள் மீது வாள்வீச்சு : மூவர் கைது.! வவுனியா மன்னார் வீதி புதிய கற்பகபுரம் பகுதியில் இளைஞர் குழு ஒன்று வாள் வீச்சில் ஈடுபட்டதுடன் புதிய கற்பகபுரம் பகுதியை சேர்ந்த இளைஞன் ஒருவனை முச்சக்கர வண்டியில் கடத்தி சென்ற சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. இச்சம்பவம் பற்றி தெரியவருவதாவது, நேற்று இரவு 8.30 மணியளவில் புதிய கற்பகபுரம் கிராமத்தினுள் வாள்களுடன் புகுந்த இளைஞர் குழு ஒன்று அங்கிருந்த இளைஞர்கள் மீது கண் மூடிதனமான தாக்குதலை மேற்கொண்டதுடன் வாள் வீச்சிலும் ஈடுபட்டதுடன் நிரோசன் (30) என்ற இளைஞனை (எ.எ.இ 5668) என்ற இலக்கமுடைய முச்சக்கர வண்டியில் கடத்திச் சென்றதுடன் இவர்களை பின் தொடர்ந்த அதே கிராமத்தை சேர்ந்த இளைஞர்கள் பூவரசங்குளம் பொல…

  11. வியாழன் இரவு, ஒரு முஸ்லீம் நபர் ஒருவர், சைக்கிளில் வந்த ஒரு சிங்கள நபரினால் மோதப் பட்டுள்ளார். சாதாரணமாக போயிருக்க வேண்டிய இந்த விடயத்தினை, அப்பகுதியை சேர்ந்த முஸ்லீம் குழு ஒன்று சேர்ந்து, அந்த சிங்கள நபரை தாக்கியதால், அவர் ஓடிச் சென்று தனது இன குழுக்களுடன், ஆயுதம் கொண்டு வந்து தாக்கியுள்ளனர். இது பெரும் கலவரமாக வெடித்து, பள்ளிவாசல், வீடுகள் தாக்கப் பட்டு, 7 பேர் வைத்திய சாலையில் அனுமதிக்கப் பட்டதுடன், அதிரடிப் படை, போலீசார் குவிக்கப் பட்டு, ஊரடங்கு உத்தரவும் அமுல் படுத்தப் பட்டுள்ளது. Several buildings have been set on fire and damaged in the Gintota area in Galle yesterday, following a commotion among the communities living in the area. According to …

  12. வடமராட்சி மாவீரர் துயிலுமில்லத்தில் சிரமதானப்பணி முன்னெடுப்பு மாவீரர் தினத்தினை முன்னிட்டு வடமராட்சி வல்வெட்டித்துறை துயிலுமில்ல சிரமதானப் பணிகள் இன்று காலை இடம்பெற்றது. மாவீரர் ஏற்பாட்டுக்குழுவின் ஏற்பாட்டில் முன்னாள் போராளிகள், மாவீரர்களின் உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் ஒன்றிணைந்து இந்த சிரமதான பணியினை முன்னெடுத்தனர். சிரமதானப் பணி நிறைவு செய்தபின் சங்கரின் நினைவுத்தூபிக்கு விளக்கேற்றி அஞ்சலி செலுத்தினர். இந்த நிகழ்வில் வடமராட்சி முன்னாள் போராளிகள், மாவீரர்களின் உறவினர்கள் பொதுமக்கள் எனப்பலரும் கலந்துகொண்டனர். http://newuthayan.com/story…

  13. அலோசியஸ் தொடர்பு கொண்ட 41 உறுப்பினர்களையும் அழைத்து பகிரங்கமாக விசாரணை செய்யுங்கள் அமைச்சர் தயாசிறி ஜயசேகர சபையில் கோரிக்கை ஆர்.ராம், எம்.எம்.மின்ஹாஜ் அர்ஜுன் அலோசியஸ் தொடர்பு கொண்டதாகக் கூறப்படும் 41பேரில் ஐந்து பாராளுமன்ற உறுப்பினர்களின் பெயர்கள் மட்டுமே வெளியாகியுள்ளன. ஆகவே அனைவரினதும் பெயர் விபரங்களை வெளியிட்டு ஊழல்மோசடி ஆணைக்குழு பகிரங்க விசாரணையை மேற்கொள்ள வேண்டுமென அமைச்சர் தயாசிறி ஜயசேகர சபையில் கோரிக்கை விடுத்தார். பாராளுமன்றத்தில் நேற்று சனிக்கிழமை 2018ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத்திட்டத்தில் பாதுகாப்பு, நீதி, சட்டம் ஒழுங்கு மற்றும் தென்மாகாண அபிவிருத்தி அமைச்சுக்கள் ஆகியவற்றுக்கான ஒதுக்கீடுகள் தொடர்பான குழு நிலை விவாதத்…

  14. காலி - கிந்­தொட்டயில் நேற்றும் ஊரடங்கு இயல்பு வாழ்க்கை பாதிப்பு; பீதியில் மக்கள் 66 வீடுகள் ; 26 கடைகள் 2 பள்ளிவாசல்கள் சேதம் கிந்­தொட்­ட­யி­லி­ருந்து எம்.பி.எம்.பைரூஸ், எம்.சி. நஜி­முதீன் கிந்­தொட்­டயில் ஏற்­பட்­டுள்ள அசா­தா­ரண சூழ்­நி­லை­யை­ய­டுத்து நேற்­றைய தினமும் அங்கு இயல்பு வாழ்க்கை பாதிக்­கப்­பட்­டி­ருந்­த­துடன் மக்கள் மத்­தியில் தொடர்ந்தும் பதற்­றமும் அச்­சமும் நிலவி வரு­கி­றது. இதே­வேளை நேற்று மாலை ஆறு மணி முதல் இன்று காலை ஆறு மணி வரையில் பொலிஸ் ஊர­டங்கு அமுல்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளது. இதே­வேளை நேற்று முன்­தினம் இரவு அப்­பி­ர­தே­சத்தில் இடம்­பெற்ற அசம்­பா­வி­தத்­தினால் ஐந்­துபேர் காய­ம­டைந்­துள்­ள­துடன் சம்­ப­வத்­த­து…

  15. தமி­ழர் புனர்­வாழ்­வுக் கழ­கத்­தின் கணக்­கு­கள் பற்றி விசா­ர­ணை­ ஆரம்­பம் தமி­ழர் புனர்­வாழ்­வுக் கழ­கத்­தின் (ரீ.ஆர்.ஓ) பணக் கொடுக்­கல் வாங்­கல்­கள் தொடர்­பில் பயங்­க­ர­வாத தடுப்­புப் பிரி­வி­ன­ரால் (ரி.ஐ.டி) விசா­ர­ணை­ கள் தற்­போது ஆரம்­பிக்­கப்­பட்­டுள்­ளன. அந்­தக் கழ­கத்­தின் வைப்­புக்­கள் இருந்த வங்­கி­க­ளின் முன்­னாள் முகா­மை­யா­ளர்­களை விசா­ர­ணைக்கு வரு­மாறு பயங்­க­ர­வாதத் தடுப்­புப் பிரிவு அழைப்பு விடுத்­துள்­ளது. தமி­ழீழ விடு­த­லைப் புலி­கள் அமைப்­பின் காலத்­தில் தமி­ழர் புனர்­வாழ்­வுக் கழ­கம் செயற்­பட்­டி­ருந்­தது. அந்­தக் கழ­கத்­தின் வைப்­புக்­கள் அரச வங்­கி­க­ளி­லும் இருந்­தன. அத்­து­…

  16. காலி வன்­மு­றை­கள் அரு­வ­ருக்­கத்­தக்­கன காலி­யில் முஸ்­லிம்­களை இலக்­கு­வைத்து மேற்­கொள்­ளப்­பட்ட வன்­மு­றைச் சம்­ப­வத்தை வன்­மை­யா­கக் கண்­டித்­துள்ள எதிர்க்­கட்­சித் தலை­வ­ரும் தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பின் தலை­வ­ரு­மான இரா.சம்­பந்­தன், இது அரு­வ­ருக்­கத்­தக்க செயல் என­வும் கூறி­யுள்­ளார். அவர் மேலும் தெரி­வித்­த­தா­வது: எமது சகோ­தர இன­மான முஸ்­லிம்­கள் மீது மேற்­கொள்­ளப்­பட்ட இந்­தச் சம்­ப­வத்தை நான் மிக­வும் வன்­மை­யா­கக் கண்­டிக்­கின்­றேன். இது வேண்­டத்­த­காத செயல் அரு­வ­ருக்­கத்­தக்க செயல். நாட்­டில் மீண்­டு­மொரு இன ரீதியான வன்­மு­றைக்­குத் தூப­மி­டும் செயல். முஸ்­லிம் மக்­கள், தமிழ் மக்…

  17. 35 கிலோ கஞ்சா கொடி­கா­மத்­தில் மீட்பு!! பொதி­யி­டத் தயா­ராக இருந்த 35 கிலோ கஞ்சா கொடி­கா­மத்­தில் நேற்று இரவு மீட்­கப்­பட்­டது. சந்­தே­க­த்தில் இருவர் கைது செய்­யப்­பட்­டனர் என்று கொடி­கா­மம் பொலி­ஸார் தெரி­வித்­த­னர். இர­க­சி­யத் தக­வ­லை­ய­டுத்து கொடி­கா­மம் திருநாவுக்கரசு மகாவித்தியாலயத்தை ஒட்டி சோதனை செய்த பொலி­ஸார் கஞ்­சாவை மீட்­ட­னர். ‘‘பொதி­யி­டத் தயா­ராக இருந்த நிலை­யில் 35 கிலோ கஞ்சா கைப்­பற்­றப்­பட்­டது. இதனை வைத்­தி­ருந்த சந்­தே­கத்­தில் இருவ­ரைக் கைது செய்­துள்­ளோம்’’ என்று பொலி­ஸார் தெரி­வித்­த­னர். http://newuthayan.com/story/48300.html

  18. பாவத்தை சுமக்­கிறோம்.! முன்­னைய ஆட்­சியின் போது திறை­சேரி செய­லாளர் மற்றும் மத்­திய வங்கி ஆளுநர் ஆகியோர் செய்த பாவத்­தையே நாம் போக்கி வரு­கின்றோம். முன்பு திறை­சே­ரிக்கு கீழேயே பாரா­ளு­மன்றம் கொண்டு வரப்­பட்­டது. எனினும் அதனை மாற்­றி­ய­மைத்து திறை­சே­ரி­யையும் மத்­திய வங்­கி­யையும் பாரா­ளு­மன்­றத்­துக்கு கீழ் கொண்டு வந்­துள்ளோம் .இதன்­படி முன்­னைய ஆட்­சியின் போது திறை­சேரி உள்­ளிட்ட நிறு­வ­னங்­களில் ஊழல் புரிந்த அதி­கா­ரிகள் பலரை நீக்­க­வுள்­ள­தாக பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க சபையில் தெரி­வித்தார். பாரா­ளு­மன்­றத்தில் நேற்று சனிக்­கி­ழமை வாய்­மூல விடைக்­கான வினா நேரத்தின் போது கூட்டு எதிர்க்­கட்­சியின் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் வ…

  19. தேர்தலில் தனித்து போட்டியிட முடிவு செய்தது முஸ்லிம் காங்கிரஸ்! எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் வடக்கு மற்றும் கிழக்கில் தனித்துப் போட்டியிட ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தீர்மானித்துள்ளது. இந்த விடயத்தை கட்சியின் செயலாளர் நிஷாம் காரியப்பர் தெரிவித்துள்ளார். அத்துடன், ஏனைய மாவட்டங்களில் முஸ்லிம் காங்கிரஸ் ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து போட்டியிட ஏற்கனவே முடிவு செய்யப்பட்டுள்ளது. எவ்வாறாயினும், விரைவில் நடைபெறவுள்ள கூட்டத்தில் இது குறித்த இறுதித் தீர்மானம் எடுக்கப்படும் என கட்சியின் செயலாளர் நிஷாம் காரியப்பர் தெரிவித்துள்ளார். https://news.ibctamil.com/ta/internal-affairs/slmc-go-to-election-

  20. காங்கேசன்துறைக் கடற்பரப்பில் 55 கிலோ கஞ்சா மீட்பு காங்கேசன்துறைக் கடற்பரப்பில் 55 கிலோ கஞ்சா இன்று மீட்கப்பட்டது. காங்கோசன்துறை கடற்படையினரே கஞ்சாவை மீட்டதாகவும் சந்தேகநபர் எவரும் கைது செய்யப்படவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டது. மீட்கப்பட்ட கஞ்சா பொதியை காங்கேசன்துறை பொலிஸாரிடம் ஒப்படைக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன. http://newuthayan.com/story/48328.html

  21. கிந்­தொட்ட சம்­ப­வம் எமக்கு தொடர்­பில்லை காலி கிந்­தொட்ட பிர­தே­சத்தில் நேற்று முன்தினம் இடம்­பெற்ற இனக்­க­ல­வரம் தொடர்பில் பொது­பலசேனா அமைப்பின் தலைவர் ஞான­சார தேர­ரினால் அறிக்­கைகள் எதுவும் வெளி­யி­டப்­ப­டாத நிலையில் அவரின் பெயரில் அறிக்­கைகள் வெளி­யி­டப்­பட்­டுள்­ள­தா­கவும் த­ளங்­க­ளூ­டாக அவ­ரு­டைய பெயரைப் பயன்­ப­டுத்தி ஊடக பிர­சா­ரங்கள் வெளி­யி­டப்­ப­டு­வ­தா­கவும் பொது பல சேனா அமைப்பு தெரி­வித்­துள்­ளது. சம்­பவம் தொடர்பில் நன்கு ஆராய்ந்து இக் கல­வ­ரத்தில் சொத்­துக்­களை இழந்­த­வர்­க­ளுக்கும் விஷே­ட­மாக காய­ம­டைந்­த­வர்­க­ளுக்கும் உரிய நஷ்­ட­ஈட்­டினை ப் பெற்றுக் கொடுப்­ப­தற்­கான நட­வ­டிக்­கை­களை எடுப்­ப­தோடு சமூ­கத்தில் ஒற்­று­மையை ஏற்­ப­டுத…

  22. "பிர­பா­க­ர­னிடம் இருந்தே யுத்­தத்தைக் கற்­றோம்" வேலுப்­பிள்ளை பிர­பா­க­ர­னிடம் இருந்தே நாம் யுத்­தத்தை கற்­றுக்­கொண்டோம். பிர­பா­கரன் ஒருவர் உரு­வா­கி­யதன் கார­ண­மா­கவே பீல்ட் மார்ஷல் ஒருவர் உரு­வா­கினார். பிர­பா­கரன் யுத்­த­க­ளத்தில் பல­மாகும் போது நாமும் பல­மா­கினோம். பிர­பா­கரன் யுத்தம் ஆரம்­பிக்கும் போது இரா­ணு­வத்தில் 10 ஆயிரம் பேரே இருந்­தனர். தற்­போ­துள்ள பல­மான இரா­ணுவம் அப்­போது இருந்­தி­ருந்தால் எம்மால் இரு வரு­டங்­களில் யுத்­தத்தை முடித்­தி­ருக்க முடிந்­தி­ருக்கும். எனவே, யுத்தம் இருந்­தாலும் இல்­லா­விட்­டாலும் இரா­ணுவம் பல­மாக இருக்க வேண்டும் என பிராந்­திய அபி­வி­ருத்தி அமைச்சர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்­சேகா சபையில் தெரி­வித்தார்அத…

  23. பன்னாட்டு நிறுவனங்கள் எமது வளங்களைச் சுரண்டுகின்றன: வடக்கு முதலமைச்சர்! நாட்டில் சமாதானச் சூழல் ஏற்பட்ட பின்னர் பன்னாட்டு நிறுவனங்களின் உள்நுழைவுகள் எமது வளங்களைச் சுரண்டிச் செல்கின்ற நிகழ்வுகள் இடம்பெற்று வருவதாக வடமாகாண சபை முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். குறித்த செயற்பாடுகள் மத்திய அரசின் அனுசரணையுடன் நடைபெற்று வருகின்றதோ என்ற சந்தேகம் வலுப்பெற்றுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். வடமாகாண மரநடுகை மாதத்தை முன்னிட்டு தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் ஏற்பாட்டில் மரநடுகையும் மலர்க் கண்காட்சியும் இன்று நல்லூர் சங்கிலியன் பூங்காவில் இடம்பெற்றபோதே வடமாகாண முதலமைச்சர் இதனை தெரிவித்துள்ளார். வடமாகாணத்த…

    • 6 replies
    • 782 views
  24. கசப்படைந்து வரும் தமிழர் முஸ்லிம் உறவும் எதிர்காலமும் தமிழர்களின் ஆயுதப் போராட்டம் மௌனிக்கப் பட்ட பின் வடக்கிலிருந்து வெளியேற்றப் பட்ட முஸ்லிம்களின் மீள்குடியேற்றம் நடந்தேறிக் கொண்டிருக்கிறது. ஏற்கனவே முஸ்லிம்கள் குடியிருந்த பகுதிகளில் நடத்தப் பட்ட நியாயமான குடியேற்றங்கள் தமிழ் மக்களின் அனுசரணையுடனேயே நடந்தேறின. ஆனாலும் இவை மீள்குடியேற்றம் என்ற போர்வையில் தமிழ் பகுதிகளின் குடிப்பரம்பலையே முஸ்லிம்களுக்கு சாதமாக மாற்றியமைத்து தமிழ் மக்களின் நில வளங்களை கபளீகரம் செய்யும் நிலைக்குச் சென்ற பின்பே தமிழர் தரப்பிலிருந்து எதிர்ப்புகள் வர ஆரம்பித்தன. கடந்த பத்தாண்டு காலமாக முஸ்லிம்களால் போரினால் பாதிக்கப் பட்ட தமிழ் மக்கள் மீதும் பழங்குடி மக்கள் மீதும் திட்டமிட்ட வகைய…

    • 6 replies
    • 630 views
  25. யாழில் இளைஞர் இருவர் கைது; கைபேசியில் வாள்களின் படங்கள்? (கோப்புப்படம்) யாழ்ப்பாணம் கொக்குவில் புகையிரத நிலைய வீதியில் இளைஞர்கள் இருவர் இன்றிரவு கைது செய்யப்பட்டுள்ளனர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த இளைஞர்களின் கைபேசிகளில் வாள்களி்ன் ஒளிப்படங்கள் பதிவு செய்து வைத்திருந்ததாகவும் அதனடிப்படையிலேயே சந்தேகத்தில் இருவரும் கைது செய்யப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர். மேலும், விசாரணைகளின் பின்னர் குறித்த இருவரும் நாளைய தினம் நீதிவான் முன்னிலையில் முற்படுத்தப்படவிருப்பதாகவும் தெரிவித்த பொலிஸார், கொக்குவில் புகையிரத நிலைய வீதியைச் சேர்ந்த 22 வயதையுடை ராஜ்குமார் மற்றும் ஜசிந்தன் ஆகிய இருவருமே கைது செய்யப்…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.