Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. அம்மாச்சியின் யாழ்.கிளைக்கு பெயர் வைத்தப்பதில் குழப்பம் வடக்கு மாகாண விவ­சாய அமைச்­சி­னால் நடை­மு­றைப்­ப­டுத்­தப்­பட்டு வந்த அம்­மாச்சி உண­வ­கத்­தின் யாழ்ப்­பாண உண­வ­கத்துக்கு பெயர்ப் பலகை வைப்­ப­தில் குழப்­ப­நிலை தொடர்­கின்­றது. வடக்கு மாகா­ணத்­தில் இது­வரை கால­மும் முல்­லைத்­தீவு, கிளி­நொச்சி, வவு­னியா ஆகிய மாவட்­டங்­க­ளில் அம்­மாச்சி உண­வ­கம் ஆரம்­பிக்­கப்­பட்டு மக்­கள் மத்­தி­யில் பிர­பல்­ய­மாக இயங்கி வரு­கின்­றது. இந்த நிலை­யில் யாழ்ப்­பாண மாவட்­டத்­தி­லும் அம்­மாச்சி உண­வ­கம் ஆரம்­பிப்­ப­தற்­கான முயற்­சி­கள் எடுக்­கப்­பட்டு திரு­நெல்­வே­லி­யில் அமைந்­துள்ள விவ­சாயப் பயிற்சி நிலைய வளா­கத்­தி…

    • 3 replies
    • 588 views
  2. கிராமத்துக்குள் புகுந்த யானை கூட்டத்தால் மக்கள் அச்சம் : வீடுகள் சேதம் வவுனியா, ஓமந்தை, புதிய வேலர் சின்னக்குளம் கிராமத்தினுள் புகுந்த யானைக்கூட்டத்தின் அட்டகாசத்தால் வீடு சேதமடைந்துள்ளதுடன் சுமார் 30 தென்னை மரங்கள் முழுமையாக அழிக்கப்பட்டுள்ளன. இன்று அதிகாலை இச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, வவுனியாவில் அண்மைக்காலமாக மீள்குடியேற்றம் செய்யப்பட்ட பகுதிகளில் யானைகளின் அட்டகாசத்தால் அப்பகுதி மக்கள் பல்வேறு இடையூறுகளுக்கு முகம் கொடுத்து வருகின்றனர். இதன் காரணமாக பல இடங்களில் வன ஜீவராசிகள் திணைக்களத்தினால் யானை வேலி அமைக்கப்பட்ட போதிலும் இன்றும் பல கிராமங்கள் யானையின் அச்சுறுத்…

  3. அரசியல்வாதிகளுக்காக போர்க்குற்றங்களில் ஈடுபட்டது இராணுவம் – சிறிலங்கா அதிபர் ஒப்புக்கொண்டார் போரில் சிறிலங்கா படையினர் சிலர் போர்க்குற்றங்களை இழைத்தனர் என்பதை சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன ஒப்புக் கொண்டுள்ளார் என்று பிரிஐ செய்தி வெளியிட்டுள்ளது. அரசியல்வாதிகளின் உத்தரவின் பேரில், சில படையினர் போர்க்குற்றங்களில் ஈடுபட்டதாக அவர் கூறியுள்ளார். முன்னதாக, சிறிலங்கா படையினருக்கு எதிரான போர்க்குற்றச்சாட்டுகளில் இருந்து அவர்களைப் பாதுகாப்பதாக கூறியிருந்தார். இந்த நிலையில் அவர், “உங்கள் மனசாட்சிக்கு ஏற்ப, நீங்கள் சிலவற்றை ஏற்றுக்கொள்ள வேண்டியுள்ளது. இராணுவத்தின் கட்டுப்பாட்டிற்கு வெளியே சில விடயங்கள் இருந்தன. அரசியல்வாதிகளுக்காக இரா…

    • 8 replies
    • 692 views
  4. ஐ.நா.வின் பொதுச்செயலாளரை சந்தித்த சந்திரிக்கா முன்னாள் ஜனாதிபதியும்,தேசிய ஒற்றுமை மற்றும் நல்லிணக்க செயலாளர் அலுவலகத்தின் பணிப்பாளருமான சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்செயலாளர் அட்டோனியோ குட்டரஸை சந்தித்துள்ளார். அமெரிக்காவின் நியூயோர்க் நகரில் இந்தச் சந்திப்பு இடம்பெற்றுள்ளதாக தேசிய ஒற்றுமை மற்றும் நல்லிணக்க செயலாளர் அலுவலகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. இதன்போது நல்லிணக்க செயற்பாடுகளை பலப்படுத்துவதற்காக அரசினால் முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகள் மற்றும் நல்லிணக்க அலுவலகத்தின் பணிகள் உள்ளிட்டவை தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்காவினால் ஐ.நாவின் பொதுச்செயலாளருக்கு தெளிவுப்படுத்…

  5. 1990ம் ஆண்டு புலிகளால் வெளியேற்றப்பட்ட முசலிப்பிரதேச முஸ்லிம் மக்கள் யுத்தம் முடிந்ததன் பின்பு மீண்டும் தமது தாயாக பூமியில் மீள் குடியேறிவருகின்றனர். முஸ்லிம் மக்களுக்கு சொந்தமான வெள்ளிமலை கிராமத்தை அரிப்புக்கு சொந்தம் என எல்லை போட்டு அங்கு கோவில் அமைக்கும் வேலையினை ஆரம்பித்துள்ளனர். இது தடுக்கப்பட வேண்டும் பிரதேச செயலகத்தில் நடந்த கூட்டத்தில் இந்த இடம் வெள்ளிமலை கிராம மக்களுக்கு சொந்தம் என பிரதேச செயலாளர் தெளிவாக எடுத்து சொல்லியும் அதை பொருற்படுத்தாமல் தமிழ் சகோதரர்கள் அத்துமீறி இடத்தை அபகரிப்பது சரியா. இந்த இடத்தில் கோவில் அமைக்க வேண்டிய எந்த தேவையும் அவர்களுக்கு இல்லை அவர்கள் அமைப்பது முஸ்லிம்களுக்கு சொந்தமான இடத்தை அபகரிக்கவே தவிர வேறுகாரணம் ஒன்…

  6. வட மாகாண ஆளுநர் செயலகத்தை முற்றுகையிட்ட யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள்! தமிழ் அரசியற் கைதிகளின் விடுதலைக்காக தொடர்ச்சியான போராட்டங்களினை முன்னெடுத்துவரும் யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் சற்றுமுன்னர் வட மாகாண ஆளுநர் செயலகத்தை முற்றுகையிட்டனா். http://newuthayan.com/story/46976.html

  7. வழமைக்கு மாறாக… மட்டக்களப்பு மாவட்டத்தில் வழமைக்கு மாறாக இன்று (15) அதிகாலையிலிருந்து பொழது புலரும் வரை பனி மூட்டம் நிலவியது. ஏறாவூர், மட்டக்களப்பு நகர், காத்தான்குடி உள்ளிட்ட நகரப் பகுதிகளில் நிலவிய இந்தப் பனி மூட்டத்தால் மட்டக்களப்பு – கொழும்பு நெடுஞ்சாலையில் சுமார் 30 மீற்றர் தூரத்துக்கப்பால் வீதி தெளிவில்லாத நிலைமை இருந்தது. இதனால் வாகன ஓட்டிகள் முகப்பு வெளிச்சத்துடன், மிகுந்த அவதானமாகப் பயணிக்க வேண்டியிருந்தது. இதேவேளை, மட்டக்களப்பு மாவட்டத்தின் காடு சார்ந்த வயற் பிரதேசங்களில் நிலவிய பனி மூட்டம். பொழுது புலர்ந்த பின்னும் நீண்ட நேரம் நீடித்ததாக கிராம மக்கள் தெரிவித்தனர். வழமைக்கு…

  8. யாழ் - கொக்குவில் தொழிநுட்பக்கல்லூரி மாணவ குழுக்களிடையே மோதல் : 4 பேர் படுகாயம்! யாழ்ப்பாணம் கொக்குவில் தொழில்நுட்ப கல்லூரி மாணவர் குழுக்களிடையே ஏற்பட்ட மோதல் காரணமாக 4 பேர் காயமடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். நேற்றையதினம் கல்லூரி வளாகத்தில் குறித்த சம்பவம் இடம்பெற்றது. இந்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது.... தொழிநுட்பக்கல்லூரியில் நேற்றைய தினம் செவ்வாய் கிழமை (14-11-2017) பிரியாவிடை நிகழ்வு இடம்பெற்றது. இந்நிகழ்வு முடிவடைந்து மாணவர்கள் வெளியில் வந்த வேளை இரு மாணவர்களிடையே மோதல் ஏற்பட்டுள்ளது. குறித்த மோதலில் மாணவன் ஒருவரை பிறிதொரு கற்கை நெறி மாணவன் தலைக…

  9. ’போர்க் குற்றச்சாட்டுகளைப் பற்றிக் கவலையில்லை’ இலங்கைக்கு வேண்டுமானதை கொடுப்போம் என்கிறது சீனா மஹிந்த விசேடமானவர் அல்லர் எனவும் அறிவிப்பு - பெய்ஜிங்கிலிருந்து சந்துன் ஏ. ஜயசேகர இலங்கைக்கு வழங்கும் நிதி உதவிகள் தொடர்பாக, பின்னிணைப்புகள் எவற்றையும் சீனா கொண்டிருக்காது என்று உறுதியளித்த சீன வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு, மனித உரிமைகள் விசாரணைகளையோ அல்லது போர்க் காலத்தில் இடம்பெற்றதாகக் கூறப்படும் போர்க் குற்றங்களையோ, முன் நிபந்தனைகளாகச் சேர்க்காது எனவும் உறுதியளித்துள்ளது. கலாசார, ஊடக பரிமாற்ற நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ், சீனாவுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள இலங்கை ஊடகவியலாளர்க…

  10. '' ஹர்ஷவை ஜெனி­வா­வுக்கு அனுப்­பு­வதை ஏற்க முடி­யாது '' (நமது நிருபர்) மனித உரிமைகள் பேர­வையில் இல ங்கை தொடர்­பாக முன்­வைக்கும் குற்­றச் சாட்­டுக்­களை தகர்க்க இந்த அர­சாங் கம் எந்த வித­மான முறையான உபா­யங் களையும் இது­வரை மேற்­கொள்ள வில்லை. அமெ­ரிக்­காவின் கட்­ட­ளை­களை மறை­மு­க­மாக நிறை­வேற்றும் வகை­யி­லேயே செயற்­ப­டு­கின்­றது என தேசிய ஒருங்­க­மைப்பு ஒன்­றி­யத்தின் பிர­தி­நிதி கலா­நிதி குண­தாச அம­ர­சே­கர தெரி­வித்தார் . ஜெனிவா மனித உரிமை பேர­வையில் ஆரம்­ப­மா­கி­யுள்ள 28ஆவது பூகோல காலக்­கி­ரம மீளாய்வு அமர்வில் இன்று இலங்கை தொடர்­பான விட­யங்கள் மீளாய்வு செய்­யப்­பட உள்­ளன. இக் கூட்­டத்­தொ­ட­ரிற்கு இலங்கை சார்பில் பிரதி அமைச்சர் ஹர்ஷ…

  11. நிதி அமைச்­ச­ரின் பிரே­ர­ணை­யினால் அமைச்­ச­ர­வையில் சர்ச்சை கப்பல் நிறு­வன முக­வர்­க­ளாக வெளி­நாட்­ட­வர்கள் (நமது நிருபர்) கப்பல் நிறு­வன முக­வர்­க­ளாக வெளி­நாட் ட­வர்கள் செயற்­ப­டு­வ­தற்கு அனு­மதி வழங்க வேண்டும் என்ற பிரே­ரணை அமைச்­ச­ர­வை யில் நேற்று சமர்ப்­பிக்­கப்­பட்­ட­தை­ய­டுத்து பெரும் சர்ச்சை நிலை ஏற்­பட்­டது. ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன தலை­மையில் ஜனா­தி­பதி செய­ல­கத்தில் அமைச்­ச­ரவைக் கூட்டம் நேற்று முற்­பகல் நடை­பெற்­றது. இதன்­போது நிதி அமைச்சர் மங்­கள சம­ர­வீர கப்பல் நிறு­வன முக­வர்­க­ளாக வெளி­நாட்­ட­வர்கள் முத­லீ­டு­களை மேற்­கொள்­வ­தற்கு அனு­மதி அளிக்­கப்­ப­ட­வேண்டும் என்ற பிரே­ர­ணையை சமர்ப்­பித்­துள்ளார்.…

  12. எரி­பொருள் தட்­டுப்­பாட்டு விவ­கா­ரத்தால் அமைச்­ச­ர­வையில் தொடர்ந்தும் சர்ச்சை குற்­றப்­பு­ல­னாய்வு பிரிவின் விசா­ரணை வேண்டும் என்று அமைச்சர் அர்­ஜுன கோரிக்கை (நமது நிருபர்) நாட்டில் ஏற்­பட்ட எரி­பொருள் தட்­டுப்­பாட்­டுக்கு கார­ண­மான பின்­ன­ணியைக் கண்­ட­றி­வ­தற்கு குற்­றப்­பு­ல­னாய்வுப் பிரி­வி­னரின் விசா­ரணை நடத்­தப்­ப­ட­வேண்டும். இதற்­கான நட­வ­டிக்­கை­யினை ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன மேற்­கொள்­ள­வேண்டும் என்று பெற் றோ­லிய வளத்­துறை அமைச்சர் அர்­ஜுன ரண­துங்க அமைச்­ச­ர­வையில் கோரிக்கை விடுத்­துள்ளார். எரி­பொருள் தட்­டுப்­பாடு குறித்து பெற்­றோ­லிய வளத்­துறை அமைச்சர் முன்னாள் அமைச்­சர்­களை குற்­றம்­சாட்­டி­யமை தொட…

  13. மஹிந்த-வின் கூட்டத்தில் திடீரென கலந்துகொண்ட சுசில் பிரேம்ஜயந்த இரண்டு தரப்பையும் இணைப்பதற்கு சமரச முயற்சி (ரொபட் அன்டனி) எதிர்வரும் உள்ளூராட்சிமன்ற தேர்தலில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ தரப்பையும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தரப்பையும் இணைத்து களமிறக்குவதற்கான தீவிர முயற்சிகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அந்தவகையில் நேற்றைய தினம் நடைபெற்ற கூட்டு எதிர்க்கட்சியின் பாராளுமன்றக் குழுக் கூட்டத்தில் அமைச்சர் சுசில் பிரேமஜயந்த திடீரென கலந்து கொண்டு சமரச முயற்சிகைள முன்னெடுத்திருக்கிறார். முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டு எதிரணியின் பாராளுமன்றக் குழுக் கூட்டத்தில் கூ…

  14. மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபராக மாணிக்கம் உதயகுமார் நியமனம் எம்.எஸ்.எம்.நூர்தீன், வ.துசாந்தன் மட்டக்களப்பு மாவட்ட புதிய அரசாங்க அதிபராக மாணிக்கம் உதயகுமார் நியமிக்கப்பட்டுள்ளார். மட்டக்களப்பைச் சேர்ந்த மாணிக்கம் உதயகுமார், 16 வருடங்கள் பிரதேச செயலாளராகக் கடமையாற்றியுள்ளார் என்பதுடன், மட்டக்களப்பு மாநகர சபை ஆணையாளராகவும் கடமையாற்றி, மட்டக்களப்பு மாநகரத்தில் பல்வேறு அபிவிருத்திகளை மேற்கொண்டுள்ளார். அத்தோடு, கிழக்கு மாகாண உள்ளூராட்சி உதவி ஆணையாளராகவும் கடமையாற்றினார். இலங்கை நிர்வாக சேவையின் விசேட தகமையைப் பெற்ற இவரை, மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபராக நியமிப்பதற்கு, அமைச்…

  15. இணைவு சாத்­தி­ய­மில்லை : பிரிவே நிரந்­தரம் என்­கி­றது கூட்டு எதிர்க்­கட்சி கூட்டு எதிர்க்­கட்­சியில் அங்கம் வகிக்கும் உறுப்­பி­னர்­களை ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சியில் இணைந்­து­கொள்­ளு­மாறு அக்­கட்சி அழைப்பு விடுத்­துள்­ளது. எனினும் அக்­கட்சி ஐக்­கிய தேசியக் கட்சி தலை­மை­யி­லான அர­சாங்­கத்தில் பங்­கு­தா­ர­ராக இருக்­கும்­வ­ரையில் தாம் அதில் இணைந்­து­கொள்­ளப்­போ­வ­தில்லை என ஸ்ரீலங்கா பொது­ஜன முன்­ன­ணியின் தலை­வரும் முன்னாள் அமைச்­ச­ரு­மான பேரா­சி­ரியர் ஜீ.எல். பீரிஸ் தெரி­வித்தார். கூட்டு எதிர்க்­கட்சி ஏற்­பா­டு­செய்த ஊட­க­வி­ய­லாளர் சந்­திப்பு நேற்று கொழும்­பி­லுள்ள ஸ்ரீவ­ஜி­ரா­ஷர்ம பெளத்த நிலை­யத்தில் நடை­பெற்­றது. அந் நிகழ்வில் கலந்­து­ …

  16. புலிகளும் ஜே.வி.பியினரும் யுத்தம் செய்யவில்லை. கிளர்ச்சியே செய்தனர். – சி.வி. விடுதலைப் புலிகளின் வன்முறையும் ஜே.வீ.பியின் வன்முறையும் நாட்டில் நடந்த இரு கிளர்ச்சிகளேயொழிய யுத்தம் அல்ல. ஆகவே கிளர்ச்சி முடிவுக்குக் கொண்டுவந்ததும் இராணுவம் தமது முகாம்களுக்குச் சென்றுவிட வேண்டும். என வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். உள்ளுராட்சித் தேர்தல்களைத் தமிழ்ப் பிரதேசங்களில் மட்டும் வைக்க அரசாங்கம் உத்தேசித்திருப்பதாகவும் இது பொதுமக்கள் வாக்கெடுப்புக்கு முன்னர் தமிழ் மக்களின் மனோநிலையைக் கைபிடித்துப் பார்க்கும் ஒரு கைங்கரியம் என்றும் சிலரால் கூறப்படுகின்றதே. உங்கள் கருத்தென்ன? எனும் கேள்விக்கே அவ்வாறு பதில…

  17. ஜெனிவா சமர் இன்று ஐக்­கிய நாடுகள் மனித உரிமைகள் பேர­வையில் இடம்­பெற்­று­வரும் 28ஆவதுகாலக்­கி­ரம மீளாய்வு செயற் குழு கூட்­டத்­தொ­டரில் இன்று புதன்­கி­ழமை இலங்கை குறித்து ஆரா­யப்­ப­ட­வுள்­ளது. இதன்­போது நல்­லி­ணக்கம் மற்றும் பொறுப்­புக்­கூறல் செயற்­பாட்டில் இலங்கை எவ்­வா­றான முன்­னேற்­றத்தை அடைந்­துள்­ளது என்­பது குறித்து கேள்­விகள் எழுப்­பப்­ப­ட­வுள்­ளன. விசே­ட­மாக அமெ­ரிக்கா, பிரிட்டன், ஜேர்­மனி, பெல்­ஜியம் , எஸ்­டோ­னியா, நோர்வே, போர்த்­துக்கல் மற்றும் சுவிட்ஸர்­லாந்து ஆகிய நாடுகள் இலங்கை மீது கடும் அழுத்­தத்தை பிர­யோ­கிக்கும் வகையில் கேள்­வி­களை எழுப்­ப­வுள்­ளன. இந்த நாடுகள் இலங்கை தொடர்பில் கடும் அதி­ருப்­தியை வெளியிட்…

  18. யாழில் இன்று முன்னிரவு வாள்வெட்டு; நால்வர் படுகாயம்! (கோப்புப் படம்) யாழ்ப்பாணம் மானிப்பாய் பகுதியில் இன்று முன்னிரவு நடந்த வாள்வெட்டுத் தாக்குதலில் நான்குபேர் படுகாயமடைந்த நிலையில் யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மானிப்பாய், சங்குவேலிப் பகுதியில் உள்ள வீடு ஒன்றில் இருந்த 4 பேர் மீதே இனந்தெரியாத நபர்கள் குறித்த தாக்குதலினை மேற்கொண்டுவிட்டு தப்பிச் சென்றுள்ளனர். கொழும்பு செல்வதற்காக ஆயத்தமாகி நின்றவர்களை ஏற்றுவதற்கு முச்சக்கர வண்டி ஓட்டுநர் ஒருவர் குறித்த வீட்டுக்குச் சென்றுள்ளார். முன்னிரவு 7.30 மணியளவில் சுமார் 10 நபர்கள் வீட்டினுள் நுழைந்து அங்கு நின்றிருந்த அனைவரையும் …

  19. 500 கோடி ரூபா நட்டஈடு கோரி அவன்ட் கார்ட் நிறுவனம் வழக்குத் தாக்கல் குளோபல் தமிழ் செய்தியாளர் 500 கோடி ரூபா நட்டஈடு கோரி அவன்ட் கார்ட் நிறுவனம் வழக்குத் தாக்கல் செய்துள்ளது. சர்வதேச கடற் பரப்பில் பயணம் செய்யும் கப்பல்களுக்கு பாதுகாப்பு வழங்கி வந்ததாகவும், அந்த பணிகளை கடற்படையினர் பலவந்தமாக தம்மிடமிருந்து அபகரித்துக் கொண்டதாகவும் அவன்ட் கார்ட் நிறுவனம் தெரிவித்துள்ளது. இதனால் தமது நிறுவனத்திற்கு ஏற்பட்ட நட்டத்திற்காக கடற்படையினர் 500 கோடி ரூபா நட்டஈடு வழங்க வேண்டுமென தெரிவித்துள்ளது. அவன்ட் கார்ட் மரிடைம் நிறுவனம் இன்று கொழும்பு மாவட்ட நீதிமன்றில் இந்த வழக்கைத் தாக்கல் செய்துள்ளது. சட்ட மா அதிபர், பாதுகாப்புப் படைகளின் பிரத…

  20. பொய்ப் புகாரில் மன்னார் மீனவரின் 700 கிலோ பாறை மீன்களைப் பறித்த கடற்படையினர் மன்னார், பள்ளிமுனை மீனவர் ஒருவரின் பல இலட்சம் ரூபாய் பெறுமதியான பாறை மீன்களை கடற்படையினர் இன்று (14) காலை பறிமுதல் செய்தனர். மன்னார், பள்ளிமுனையைச் சேர்ந்த மீனவர் ஒருவர் நேற்று (13) திங்கட்கிழமை மாலை மீன் பிடிப்பதற்காக பள்ளிமுனை கடற்பகுதியில் இருந்து சக மீனவர்களுடன் கடலுக்குச் சென்றுள்ளார். அவர், இன்று காலை இரணைதீவு மேற்கு கடற்பகுதியில் உள்ள கடற்படை முகாமிற்கு சற்று தொலைவில் சுருக்கு வலையைப் பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபட்டுள்ளார். இதன் போது தான் பிடித்த சுமார் 700 கிலோ பாறை மீன்களை பள்ளிமுனை கடற்கரைக்கு காலை 11 மணியளவில் கொண்டு வந்துள்ளார். அப்ப…

  21. நல்லாட்சி அரசாங்கத்தில் நீதித்துறை விற்கப்பட்டு விட்டது என விஜயகலா மகேஸ்வரன் கவலை. குளோபல் தமிழ்ச் செய்தியாளர் நல்லாட்சி அரசாங்கத்தில் நீதித்துறை , சட்டத்துறை மற்றும் ஊடகத்துறை ஆகியன விற்கப்பட்டு உள்ளது. என மகளீர் விவகார இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்துள்ளார். யாழில்.உள்ள அவரது இல்லத்தில் இன்றைய தினம் திங்கட்கிழமை ஊடகவியலாளர்களை சந்தித்த போதே அவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில் , நீதித்துறை , ஊடக துறை , சட்டத்துறையும் விற்கப்படுகின்றது. இந்த ஜனநாயக நாட்டில் நல்லாட்சி நிலவும் காலத்தில் அவை விற்கப்பட்டு உள்ளது. ஒரு சில பொறுப்பு உள்ள அதிகாரிகளால் தான் அவை விற்கப்பட்டன. அதனால…

  22. 2 தடவைகள் சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த தாயின் கணவன் : இன்று தீர்ப்பு வவுனியா - மறவன்குளம் பகுதியில் 16 வயதிற்கு குறைந்த சிறுமி ஒருவரை பாலியல் வன்புனர்வு புரிந்த குற்றத்திற்காக 55வயதுடைய சிறிய தந்தைக்கு 20 வருட கடூழியச்சிறைத் தண்டனையை வழங்கி வவுனியா மேல் நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது. கடந்த 2003ஆம் ஆண்டு மறவன்குளம் பகுதியில் தனிமையிலிருந்த 16 வயதிற்கு குறைந்த சிறுமியை தாயின் இரண்டாவது கணவனான 55 வயதுடைய வைரமுத்து சிவலிங்கம் இரண்டு தடவைகள் பாலியல் வண்புனர்வுக்குட்படுத்தியுள்ளார். இதையடுத்து குறித்த நபரை வவுனியா பொலிஸார் கைது செய்து, விளக்கமறியலில் வைக்கப்பட்டு பின்னர் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டார். கடந்த வருடம…

    • 2 replies
    • 465 views
  23. வட்டிக்கு சட்டத்தரணிகள் வழங்கும் உடன்படிக்கைகள் சட்டவிரோதமானவை – மா.இளஞ்செழியன். மீற்றர் வட்டி, நாள் வட்டி , மாத வட்டி என்பன சட்டவிரோதமாவை. காசோலைக்கு பணம் வழங்குவதும் சட்டவிரோதமானது. அந்தப் பணத்தை மோசடியாக நீதிமன்றில் வழக்குப் போட்டு மீளப்பெறுவதும் தவறு. மீற்றர் வட்டிக்கு சட்டத்தரணிகள் அல்லது நொத்தாரிசுகள் வழங்கும் உடன்படிக்கைகளும் சட்டவிரோதமானவை. வங்கிகளால் அறவிடப்படும் அல்லது வழங்கப்படும் வட்டிகளே சட்டபூர்வமானவை என யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதி மா. இளஞ்செழியன் சுட்டிக்காட்டியுள்ளார். யாழ்ப்பாணம், சுதுமலை பகுதியில் திரையரங்கம் அமைப்பதற்காக 47 இலட்சத்துக்கு 85 ஆயிரம் ரூபா பணம் ஒருவருக்கு வழங்கப்பட்டுள்ளது. அவர் திரையரங்கம் அமைப்பதற்கான வ…

  24. தமிழ் அரசியலின் தலைவிதி! தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கட்டுக்கோப்புக்கு ஏதோவொரு ஆபத்து நேரப் போகின்றதென்று தமிழ் மக்கள் கவலைப்பட்டுக் கொண்டிருந்ததற்கு ஏற்ப அந்த ஆபத்து நேர்ந்தே விட்டது! தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கட்டுக்கோப்பானது நீண்ட கால இழுபறிக்குப் பின்னர் இறுதியில் சிதைந்தே போய் விட்டது. அடுத்த வருட ஆரம்பத்தில் நடைபெறுமென எதிர்பார்க்கப்படுகின்ற உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தலில், வட கிழக்கு தமிழினத்தின் ஒட்டுமொத்த கூட்டமைப்பான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இம்முறை களமிறங்கப் போவதில்லை. அது இப்போது முற்றாக…

  25. பண­மோ­ச­டி­யில் சமுர்த்­திக் கடன் வசூ­லிப்பு உத்­தி­யோ­கத்­தர்­கள்? யாழ்ப்­பா­ணம் மாவட்­டத்­தில் இரண்டு இடங்­க­ளில் சமுர்த்­திக் கடன் வசூ­லிப்பு உத்­தி­யோ­கத்­தர்­கள் பண­மோ­ச­டி­யில் ஈடு­பட்டனர் என்ற குற்றச்சாட்டை விசா­ரித்து நட­வ­டிக்­கை­கள் எடுப்­ப­தற்கு கணக்­குப் பரி­சோ­தனைக் குழு அனுப்­பப்­பட்­டுள்­ள­தா­க யாழ்ப்­பாண மாவட்­டச் செய­லக சமுர்த்தி வட்­டா­ரங்­கள் தெரி­வித்தன. இது பற்றி மேலும் தெரி­விக்­கப்பட்டதாவது: யாழ்ப்­பா­ணம் மாவட்­டத்­தில் தெல்­லிப்­ப­ழைப் பகு­தி­யில் உள்ள சமுர்த்தி பண வசூ­லிப்பு உத்­தி­யோ­கத்­தர் பண மோச­டி­யில் ஈடு­பட்­டுள்­ளார் என தெரி விக்கப்…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.