ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143496 topics in this forum
-
25 MAR, 2025 | 06:33 PM (எம்.நியூட்டன்) காங்கேசன்துறையில் அமைந்துள்ள ஜனாதிபதி மாளிகையை பயன்படுத்துவதற்கு முறையான திட்ட முன்மொழிவுகளை சமர்ப்பிக்குமாறு யாழ். மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் குழுவின் தலைவரும் அமைச்சருமான இராமலிங்கம் சந்திரசேகர், வடக்கு மாகாண ஆளுநர் வேதநாயகன், யாழ்ப்பாண மாவட்ட பதில் செயலாளர் மருதலிங்கம் பிரதீபன் முதலானோரின் பங்கேற்புடன் இன்று செவ்வாய்க்கிழமை (25) மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. இதன்போதே இந்த கோரிக்கை முன்வைக்கப்பட்டது. காங்கேசன் துறையில் அமைந்துள்ள ஜனாதிபதி மாளிகையை விடுவிப்பதற்கு பொருத்தமான திட்ட முன்மொழிவை சமர்ப்பிக்குமாறு ஜனாதிபதியால் கோரப்பட்ட…
-
- 1 reply
- 319 views
- 1 follower
-
-
யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு பொற்பதி பகுதியில் 10 வயது சிறுமி ஒருவர் கடை ஒன்றில் ‘கண்டோஸ்’ திருடியதாக குற்றம் சாட்டி கடை உரிமையாளர் சரமாரியாக தாக்கிய சம்பவம் இடம் பெற்றுள்ளது. குறித்த சம்பவம் தொடர்பில் தெரிய வருவதாவது; தாக்குதலுக்கு உள்ளான சிறுமியை அவரது தாயார் கடைக்கு சென்று அங்கு சில பொருட்களை கொள்வனவு செய்து வருமாறு அனுப்பியுள்ளார். இந்நிலையில் குறித்த சிறுமி கடைக்கு சென்று பொருட்களை கொள்வனவு செய்துள்ளார். மிகுதி பணத்திற்காக சிறுமி அதற்கு பெறுமதியான கண்டோஸ் ஒன்றினை எடுத்து உண்டுகொண்டிருந்த நிலையில், கடை உரிமையாளர் திருடப்பட்டதாக கருதி குறித்த 10 வயது சிறுமியை சிறுநீர் கழியும் வரை வயரால் கடுமையாக தாக்கியுள்ளார். பின்னர் சிறிது நேரம் கழித்து சிறுமியின் கட்டை அவிழ்த்து வ…
-
-
- 6 replies
- 447 views
- 1 follower
-
-
Published By: VISHNU 25 MAR, 2025 | 10:03 PM வனவளத் திணைக்களம் மற்றும் வனஉயிரிகள் திணைக்களம் என்பன கடந்த காலங்களில் வடக்கு மாகாணத்தில் விடுவிக்க இணங்கிய காணிகளை உடனடியாக விடுவிக்குமாறு கோருவது என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தலைமையில் செவ்வாய்க்கிழமை (25) ஆளுநர் செயலகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. வடக்கு மாகாணத்தில் மீள்குடியமர்வு, அபிவிருத்தி, விவசாயம், சுற்றுலாத்துறை என எந்தவொரு விடயத்தையும் மேற்கொள்ள முடியாதளவுக்கு வனவளத் திணைக்களம் மற்றும் வனஉயிரிகள் திணைக்களம் என்பனவற்றால் முட்டுக்கட்டைகள் தொடர்ச்சியாகப் போடப்படுவதாக வடக்கு மாகாண ஆளுநர் விசனம் வெளியிட்டார். கிளிநொச்சிக்கு வருகை தந்த காணி ஆணையாளர் நாயகத்திடம் இது தொடர்பில் முறையிட்ட நிலையில…
-
-
- 2 replies
- 197 views
- 1 follower
-
-
யாழ்ப்பாணம் 9 மணி நேரம் முன் தமிழில் பட்டப்படிப்பின் டிப்ளோமா கற்றுத் தேர்ந்த பௌத்த துறவி! யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் தமிழில் பட்டப்படிப்பின் டிப்ளோமாவைப் பயின்று பௌத்த துறவி ஒருவர் பட்டம் பெற்றுள்ளார். யாழ். பல்கலைக்கழகத்தில் 21 ஆம் திகதி வெள்ளிக்கிழமை இடம்பெற்ற பட்டமளிப்பு விழாவின் மூன்றாம் நாள், முதலாவது அமர்வின் போது சன்னாஸ்கம இந்திரானந்த தேரர் என்ற பெயருடைய பௌத்த துறவியே, உயர்பட்டப்படிப்புகள் பீடத்தினால் நடாத்தப்பட்ட தமிழில் பட்டப்பின் தகைமைக் கற்கை நெறியைப் பூர்த்தி செய்து, பட்டம் பெற்றுள்ளார். யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேராசிரியர் சி.சிறிசற்குணராஜாவினால் சம்பிரதாய பூர்வமாக இவரது பட்டம் கையளிக்கப்பட்டது. தமிழில் பட்டப்படிப்பின் டிப்ளோமா கற்றுத் த…
-
-
- 31 replies
- 1.9k views
-
-
25 Mar, 2025 | 04:57 PM பத்தொன்பது வயதில் கைதுசெய்யப்பட்ட சிவகுமார் பார்த்தீபன் என்ற இருவர் ,முப்பது வருடங்கள் கடந்தும் இன்று 50 வருடங்கள் ஆகியும் விடுதலையடைய முடியாமல் சிறையில் உள்ளனர் என தெரிவித்துள்ள மக்கள் போராட்ட முன்னணியின் ராஜ்குமார் ரஜீவ்காந் ஆனால் அரசியல் கைதிகள் விடுதலை குறித்து வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் என்பிபி தோழர்கள் பொய்யான வாக்குறுதிகளுடன்மீண்டும் தேர்தலிற்காக களத்தில் குதித்துள்ளனர் என தெரிவித்துள்ளார் மகசின் சிறைச்சாலைக்கு சென்று தமிழ்அரசியல்கைதிகள் சிலரை பார்த்த பின்னர் கருத்து தெரிவிக்கையில்இதனை குறிப்பிட்டுள்ள அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது என்பிபி அரசாங்கம் ஆட்சிக்கும் அதிகாரத்திற்கும் வந்துஆறுமாதங்களிற்கு மேல் ஆகிவிட்டது,இந்த ஆட்சிக்கு வர…
-
- 0 replies
- 120 views
-
-
25 Mar, 2025 | 05:09 PM மட்டக்களப்பு செங்கலடி பொது சுகாதாரப் பிரிவிலுள்ள உணவகம் ஒன்றில் மலசல கூடத்தில் மனித நுகர்வுக்கு பொருத்தமற்ற முறையில் உணவு தயாரித்து விற்பனை செய்த கடை உரிமையாளருக்கு ஒரு மாதகால சிறைத் தண்டனையும் 60 ஆயிரம் ரூபாவை அபராதமாக செலுத்துமாறும் ஏறாவூர் சுற்றுலா நீதிமன்ற மேலதிக நீதவான் திங்கட்கிழமை (24) உத்தரவிட்டார். குறித்த பிரதேசத்திலுள்ள உணவகங்களை சம்பவ தினமான திங்கட்கிழமை (24) பொது சுகாதார பரிசோதகர்கள், சுகாதார வைத்திய அதிகாரிகள் முற்றுகையிட்டு சோதனை நடவடிக்கையினை முன்னெடுத்தனர். இதன்போது ஒரு உணவகத்தில் மலசல கூடத்தில் உணவு தயாரித்து விற்பனை செய்து வந்ததை கண்டுபிடித்து அந்த உணவக உரிமையாளரை கைது செய்தனர். இதனையடுத்து குறித்த உணவக உரிமையாளர் ஏறாவூர் சுற…
-
- 0 replies
- 124 views
-
-
24 MAR, 2025 | 08:02 PM ஆர்.ராம்- ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் நடைபெறவுள்ள 59ஆவது கூட்டத்தொடரில் இலங்கையில் நல்லிணக்கம் பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகளை மேம்படுத்தலை மையப்படுத்திய புதிய பிரேரணையொன்று பிரித்தானியா தலைமையிலான இணை அனுசரணை நாடுகளால் கொண்டுவரப்படவுள்ளதாக பிரித்தானிய வெளிவிவகார, பொதுநலவாய மற்றும் அபிவிருத்தி அலுவலகத்தின் இந்தோ-பசிபிக் பிராந்திய பணிப்பாளர் பென் மெல்லர் இலங்கைத் தமிழரசுக்கட்சியின் பதில் பொதுச்செயலாளரும், ஊடகப்பேச்சாளருமான ஜனாதிபதி எம்.ஏ.சுமந்திரனிடத்தில் தெரிவித்துள்ளார். அத்துடன், அவர், வடக்கு,கிழக்கில் உள்ள நிலைமைகள் மற்றும் புதிய அரசாங்கத்தின் செயற்பாடுகள் தொடர்பிலும் கவனம் செலுத்தியிருந்ததோடு ஐக்கி…
-
- 3 replies
- 173 views
- 1 follower
-
-
23 MAR, 2025 | 09:13 AM கொழும்பில் உள்ள சீனத் தூதுவரின் இல்லத்தில் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு சீனத் தூதுவர் இராப்போசனம் வழங்கியுள்ளார். நாளை திங்கட்கிழமை (24) ரணில் விக்கிரமசிங்கவின் பிறந்தநாளை முன்னிட்டு இவ்வாறு இராப்போசனம் வழங்கப்பட்டுள்ளது. இதன்போது ரணில் விக்கிரமசிங்கவின் பாரியார் மைத்திரி விக்கிரமசிங்கவும் பங்கேற்றமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/209957
-
- 2 replies
- 245 views
- 1 follower
-
-
நெல்லியடியில் பெண்கள், சிறுவர்களை தாம் தாக்கவில்லையாம் மறுக்கின்றது பொலிஸ் தரப்பு யாழ்ப்பாணம் - நெல்லியடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில், பொதுமக்கள் மீது பொலிஸார் தாக்குதல் நடத்தியதாக முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுக்களை பொலிஸார் திட்டவட்டமாக மறுத்துள்ளனர். நெல்லியடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில், சட்டவிரோதமாக மாடு ஒன்றை இறைச்சியாக்கிய விசாரணைகளுக்காக பொலிஸார் சென்றுள்ளனர். இதன்போதே, அவர்கள் தம்மைத் தாக்கினார்கள் என்று அந்த வீட்டில் இருந்தவர்கள் குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ளனர். எனினும், இந்தத் தகவல்களை பொலிஸார் திட்டவட்டமாக மறுத்துள்ளனர். 'நாங்கள் எவரையும் தாக்கவில்லை. சட்டவிரோதமாக மாட்டை இறைச்சியாக்கிய நபர் வீட்டுக்குள் மறைந்திருந்தார். அவரைக் கைதுசெய்ய முற்ப…
-
- 1 reply
- 223 views
-
-
14 MAR, 2025 | 10:55 AM பட்டலந்த விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கைகள் தொடர்பில் நடவடிக்கை எடுப்பதற்கு ஜனாதிபதி அனுரகுமாரதிசநாயக்கவும் அமைச்சரவையும் கொள்கை தீர்மானமொன்றை எடுத்துள்ளதாக அமைச்சர் பிமல் ரத்நாயக்க நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். சபையில் பட்டலந்த ஆணைக்குழுவின் அறிக்கையை சமர்ப்பித்து உரையாற்றுகையில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். இந்த ஆணைக்குழுவின் அறிக்கை குறித்து ஆராய்வதற்கு விசேட குழுவொன்றை நியமிப்பது எனவும் சட்டமா அதிபரின் ஆலோசனையை பெறுவது எனவும் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/209156
-
- 14 replies
- 626 views
- 1 follower
-
-
தமிழக மீனவர்களின் விடுதலைக்காக இலங்கை வரும் இந்திய குழுவினர்! இலங்கை சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள மீனவர்களைச் சந்தித்து அவர்களின் விடுதலைக்கான ஏற்பாடுகளைச் செய்வதற்காக ஐந்து பேர் கொண்ட குழு இலங்கைக்கு புறப்படவுள்ளதாக நம்பகத் தகுந்த ஆதாரங்களை மேற்கொள்ளிட்டு இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. தினத்தந்தி செய்தியின்படி, ராமேஸ்வரத்தில் உள்ள பாரம்பரிய இந்திய மீனவர் நலச் சங்கத்தின் தலைவர் வி.பி. சேசுராஜா மற்றும் நான்கு உறுப்பினர்கள் அடங்கிய குழு, இன்று (25) திருச்சியிலிருந்து கொழும்பு நோக்கி பிற்பகல் 2 மணிக்கு விமானத்தில் ஏற திட்டமிடப்பட்டுள்ளது. மீனவர்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட படகுகளை ஆய்வு செய்யவும், இலங்கை மீன்வளத்துறை அமைச்சரை சந்தித்து சிறையில் உள்ள மீனவர்களை …
-
- 0 replies
- 190 views
-
-
கட்டுநாயக்கவில் 10 பங்களாதேஷ் பிரஜைகள் கைது! ஐரோப்பாவிற்கு தப்பிச் செல்லும் நோக்கில் சட்டவிரோதமாக இலங்கைக்குள் நுழைந்த 10 பங்களாதேஷ் பிரஜைகள் குழு, நேற்யை தினம் (24) கட்டுநாயக்கவின் ஆண்டியம்பலம பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளது. குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தின் புலனாய்வுப் பிரிவினால் கைது செய்யப்பட்ட இவர்கள் 20 முதல் 30 வயதுக்கு உட்பட்டவர்கள் ஆவர். குடிவரவு அதிகாரிகளின் கூற்றுப்படி, இவர்கள் அனைவரும் பெப்ரவரியில் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வருவதற்கு முன்பு பங்களாதேஷிலிருந்து இந்தியாவுக்குப் பயணம் செய்திருந்தனர். வருகை விசா முறையின் கீழ் பெறப்பட்ட சுற்றுலா விசாக்களில் அவர்கள் இலங்கைக்குள் நுழைந்தனர். ஆனால், அனுமதிக்கப்பட்ட காலத்திற்கு அப்பால் அவர்கள் நாட்டில…
-
- 0 replies
- 190 views
-
-
அமெரிக்க தூதரகம் மீது தாக்குதல் நடத்தத் திட்டம்: நீதிமன்றம் அதிரடி உத்தரவு. அமெரிக்க தூதரகம் மற்றும் அதன் அதிகாரிகள் மீது அடிப்படைவாத பயங்கரவாதிகள் குழுவொன்று தாக்குதல் நடத்துவதற்குத் திட்டமிட்டுள்ளதாக சமூக ஊடகங்களில் பிரசாரம் மேற்கொண்ட சந்தேக நபர் கைது செய்யப்பட்ட நிலையில் எதிர்வரும் 28 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். பயங்கரவாத தடுப்பு விசாரணை பிரிவினால் சந்தேக நபர் கைது செய்யப்பட்டிருந்தார். பத்தரமுல்லைச் சேர்ந்த குறித்த நபர் நேற்று நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட நிலையில், கொழும்பு மேலதிக நீதவான் பசன் அமரசேன இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார். சந்தேகநபர் சமூக ஊடகங்களில் தவறான பிரசாரத்தை மேற்கொண்டுள்ளமை இதுவரை நடத்தப்பட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது. …
-
- 0 replies
- 161 views
-
-
24 MAR, 2025 | 08:22 PM (எம்.ஆர்.எம்.வசீம்) இலங்கைக்கு வர இருக்கும் இந்திய பிரதமரின் நிகழ்ச்சித்திட்டங்கள் தொடர்பில் அரசாங்கம் இதுவரை வெளியிடவில்லை. ஆனால் ஐந்து ஒப்பந்தங்களில் கைச்சாத்திட இருப்பதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருக்கின்றன. அந்த ஒப்பந்தங்களை அரசாங்கம் உடனடியாக வெளியிட வேண்டும் என முன்னணி சோசலிச கட்சியின் கல்விச் செயலாளர் புபுது ஜாகொட தெரிவித்தார். பதுளை பிரதேசத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை (24) இடம்பெற்ற மக்கள் சக்திப்பொன்றில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார். அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில், இந்திய பிரதமர் நரேந்திர மோடி அடுத்த மாதம் இலங்கைக்கு வர இருப்பதாக அரசாங்கம் அறிவித்திருக்கிறது. இலங்கைக்கு வரும் இந்திய பிரதமர் இலங…
-
- 0 replies
- 131 views
- 1 follower
-
-
தையிட்டி திஸ்ஸ விகாரையில் மத வழிபாடுகளுக்கு இடையூறு விளைவிப்பது ஒட்டுமொத்த சிங்கள பௌத்தர்களின் மனங்களையும் பாதித்துள்ளது என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார். ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் காரியாலயத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். யாழ்ப்பாணம் காங்கேசன்துறை தையிட்டி திஸ்ஸ விகாரையில் நேற்று முன்தினம் புதிதாக ஒரு விகாரைக் கட்டிடம் திறந்து வைக்கப்பட்டது. இதன்போது 29 பௌத்த பிக்குகள் பூஜை வழிபாட்டில் கலந்துக் கொண்டிருந்தனர். இவர்களுக்கு மதிய உணவு வழங்கலுக்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. பூஜை வழிபாடுகள் ஆரம்பமாகிய நிலையில் காலை 07 மணியளவில் நேற்று முன்தினம் திஸ்ஸ விகாரையின் முன்ப…
-
- 0 replies
- 132 views
- 1 follower
-
-
24 MAR, 2025 | 08:19 PM (செ.சுபதர்ஷனி) களுத்துறை மாவட்ட பொது வைத்தியசாலைக்காக இறக்குமதி செய்யப்பட்ட சிரி ஸ்கேன் இயந்திரம் கடந்த 6 வாரங்களாக சுங்க பிரிவில் விடுவிக்கப்படாமல் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக கதிரியக்க தொழில்நுட்பவியலாளர்கள் சங்கத் தலைவர் சானக்க தர்மவிக்ரம தெரிவித்தார். மேற்படி விடயம் தொடர்பில் திங்கட்கிழமை (24) அவர் ஊடகங்களுக்கு மேலும் கருத்து தெரிவிக்கையில், களுத்துறை மாவட்ட பொது வைத்தியசாலைக்காக இறக்குமதி செய்யப்பட்டுள்ள சுமார் 1500 இலட்சம் ரூபா பெறுமதிமிக்க சிரி ஸ்கேன் இயந்திரம் கடந்த பெப்ரவரி 14 ஆம் திகதி நாட்டை வந்தடைந்தது. எனினும் தற்போது 6 வாரங்கள் கடந்துள்ள நிலையில் இவ்வியந்திரம் சுங்கப் பிரிவிலிருந்து விடுவிக்கப்படாமல் தடுத்து வைக்கப்பட்டுள்ளது. சுகாத…
-
- 1 reply
- 166 views
- 1 follower
-
-
ஐந்தாவது வருடமாக ஏற்பாடு செய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான வருடாந்த உள்ளக விளையாட்டுப் போட்டியில் வெற்றியீட்டியவர்களுக்கான கேடயங்கள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கும் வைபவம் பிரதமர் (கலாநிதி) ஹரினி அமரசூரிய மற்றும் சபாநாயகர் (வைத்தியர்) ஜகத் விக்கிரமரத்ன ஆகியோரின் தலைமையில் பாராளுமன்ற பிலியட் மண்டபத்தில் கடந்த 21ஆம் திகதி நடைபெற்றது. விளையாட்டுத் துறைப் பிரதியமைச்சர் சுகத் திலகரத்ன மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார ஆகியோரின் தலைமையின் கீழ் பாராளுமன்ற படைக்கல சேவிதர் திணைக்களத்தின் ஒத்துழைப்புடன் இந்தப் போட்டிங்கள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. ஏழு உள்ளக விளையாட்டுப் பிரிவுகளின் கீழ் இடம்பெற்ற போட்டிகளில் ஸ்நூகர் இறுதிப் போட்டி பிரதமர் மற்றும் சபாநாயகர் மு…
-
-
- 1 reply
- 286 views
-
-
24 MAR, 2025 | 07:10 PM (எம்.மனோசித்ரா) கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை எழுதும் 80 வயது முதியவர் ஒருவர், கணிதத் தேர்வுத் தாள் குறித்து அதிருப்தி தெரிவித்த பின்னர், கல்வி அமைச்சர் பிரதமர் ஹரிணி அமரசூரியவைச் சந்திக்க வேண்டுகோள் விடுத்துள்ளார். ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட அந்த முதியவர், பொறியாளர்களுக்காகத் தேர்ந்தெடுக்கப்பட்ட கணிதப் பாடத்திற்கான வினாத்தாள்கள் மாணவர்களுக்கு வழங்கப்படுவதாகக் கூறினார். முன்னர், கலை, வணிகம் மற்றும் பொறியியல் துறைகளைச் சேர்ந்த மாணவர்களுக்கு தனித்தனி கணிதத் தேர்வுத் தாள்கள் வழங்கப்பட்டன. இருப்பினும், இப்போது அனைத்து மாணவர்களுக்கும் பொறியாளர்களுக்காக தேர்ந்தெடுக்கப்பட்ட வினாத்தாள்கள் வழங்கப்படுகின்றன. இது நியாயமற்றது மற்றும் பல ஆண்டுகள…
-
- 0 replies
- 143 views
- 1 follower
-
-
24 MAR, 2025 | 07:08 PM (எம்.ஆர்.எம்.வசீம்) தனியார் மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களிடமிருந்து அறவிட வேண்டிய 36 பில்லியன் ரூபா ஊழியர் சேமலாப நிதி இருந்து வருகிறது. அதனை பெற்றுக்கொள்ள புதிய தொழில் ஆணையாளர் நாயகம் நடவடிக்கை எடுப்பார் எனற் நம்பிக்கை இருக்கிறது என தொழில் பிரதி அமைச்சர் மஹிந்த ஜயசிங்க தெரிவித்தார். தொழில் திணைக்களத்தின் புதிய தொழில் ஆணையாளர் நாயகமாக நியமிக்கப்பட்டுள்ள எச்.எம்.டி.என்.கே. வட்டலியத்த திங்கட்கிழமை (24) தொழில் அமைச்சில் கடமைகளை ஏற்றுக்கொள்ளும் நிகழ்வில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார். அவர்அங்கு மேலும் குறிப்பிடுகையில், தொழில் அமைச்சின் கீழ் செயற்பட்டுவரும் தொழில் திணைக்களத்திற்கு பாரியதொரு பொறுப்பு இருந்து வர…
-
- 0 replies
- 113 views
- 1 follower
-
-
தொலைத்தொடர்பு கோபுரங்களின் மின் கலங்களைத் திருடிய குற்றச்சாட்டில் 5 பேர் கைது! யாழ்ப்பாணத்தில் உள்ள தொலைத்தொடர்பு கோபுரங்களின் மின் கலங்களை தொடர்ச்சியாக திருடி வந்த குற்றச்சாட்டில் ஐந்து பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பொலிஸாருக்குக் கிடைக்கப்பெற்ற ரகசியத் தகவலையடுத்து இக்கைது நடவடிக்கை இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களில் ஒருவர் கடற்படையின் முன்னாள் சிப்பாய் எனவும் , மற்றுமொருவர் களவாடப்பட்ட மின் கலங்களை கொள்வனவு செய்தவர் எனவும் ஏனைய மூவரும் களவுக்கு உடந்தையாக செயற்பட்டவர்கள் எனவும் தெரியவந்துள்ளது. அத்துடன் இவர்கள் யாழ்ப்பாணத்தில் மாத்திரம் 192 மின் கலங்களை களவாடியுள்ளனர் எனவும், மின்கலம் ஒன்றின் பெறுமதி சுமார் ஒரு இலட்ச ரூபாய்க்கு…
-
- 1 reply
- 117 views
- 1 follower
-
-
Published By: DIGITAL DESK 3 23 MAR, 2024 | 04:11 PM காசநோயினால் வவுனியாவில் கடந்தவருடம் மூன்று பேர் உயிரிழந்துள்ளதுடன், 58 பேர் நோயாளர்களாக இனம் காணப்பட்டுள்ளதாக வவுனியா காசநோய் கட்டுப்பாட்டு வைத்திய அதிகாரி கே.சந்திரகுமார் தெரிவித்தார். வவுனியாவில் இன்று சனிக்கிழமை (23) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர், இம்முறை “ஆம் எங்களால் காசநோயை முடிவுக்கு கொண்டுவர முடியும்” எனும் தொனிப்பொருளில் உலக காசநோய் தினம் மார்ச் 24 ஆம் திகதி நினைவுகூரப்படுகின்றது. இலங்கையை பொறுத்தவரை ஒரு இலட்சம் பேரில் 62 பேர் காசநோயாளர்க…
-
- 3 replies
- 303 views
- 1 follower
-
-
இலங்கையில் பாலியல் வன்கொடுமை குற்றங்கள் மற்றும் வீட்டு வன்முறைகள் ஆபத்தான முறையில் அடிக்கடி பதிவாகி வருவதாக குழந்தைகள் மற்றும் பெண்கள் பணியகத்தின் துணை இன்ஸ்பெக்டர் ஜெனரல் (டிஐஜி) ரேணுகா ஜெயசுந்தரா கூறியுள்ளார். கொழும்பில் ஊடகங்களுக்கு அளித்துள்ள செவ்வியின்போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். மேலும், கடந்த 2024ஆம் ஆண்டில் பெண்களுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல் வழக்குகள் 2,252 பதிவாகியுள்ளதாகவும், அதில் அதிக எண்ணிக்கையிலான சம்பவங்கள் வீட்டில் (1,420 வழக்குகள்) நடப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார். பொது போக்குவரத்து (261 வழக்குகள்), ஒன்லைன் தளங்கள் (192 வழக்குகள்), சாலைகள் (117 வழக்குகள்), பணியிடங்கள் (41 வழக்குகள்), பாடசாலைகள் மற்றும் தனியார் கல்வி வகுப்புகள் (20 வழக்குகள்)…
-
- 0 replies
- 175 views
-
-
இந்தியாவில் தங்கியுள்ள ஈழ அகதிகள் இலங்கைக்கு திரும்பவேண்டும் என்பதே எமது எதிர்பார்ப்பு. அவர்கள் நாடு திரும்புவது தொடர்பில் இலங்கை மற்றும் இந்திய அரசாங்கங்கள் இடையே புரிந்துணர்வு உடன்படிக்கை ஒன்றை உருவாக்குவதற்கும் உரிய தரப்புக்களிடம் கோரிக்கை முன்வைக்கப்படும் என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்தார். இந்தியாவில் தங்கியுள்ள ஈழ அகதிகளை மீண்டும் நாட்டுக்கு அழைத்துவருவது தொடர்பில் வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்தில் நேற்று சனிக்கிழமை விசேட கலந்துரையாடல் நடைபெற்றது. இந்தச் செயற்பாடுகளை முன்னெடுத்துவரும் ஒபர் சிலோன் நிறுவனத்தின் வேண்டுகோளுக்கு அமைவாக இது ஒழுங்குபடுத்தப்பட்டிருந்தது. இந்தியாவில் தங்கியுள்ள ஈழ அகதிகளை மீண்டும் இலங்கைக்கு அழைத்துவரவேண்டும் என போர் முடிந்ததில…
-
- 0 replies
- 120 views
-
-
24 Mar, 2025 | 09:50 AM யாழ்ப்பாணத்தில் அண்மைக் காலமாக பல்வேறு பகுதிகளிலும் இணையம் மூலமாக நிதி மோசடி இடம்பெற்று வருகின்றது. இதன்மூலம் ஏராளமான மக்கள் பாதிக்கப்பட்டனர். இவ்வாறான நிதி மோசடிகள் ஊர்காவற்துறை பகுதியில் மாத்திரம் நன்கு இடம்பெற்றுள்ள நிலையில் ஊர்காவற்துறை நீதிமன்றத்தில் இது தொடர்பான வழக்குகளும் நடைபெற்று வருகின்றன. இந்த இணைய மோசடிகள் பல்வேறு வகையில் இடம்பெற்று வருகின்றன. நிகழ்நிலை செயலி (online App) ஒன்றினை மக்களிடையே பகிர்ந்து அதில் முதலீடு செய்யுமாறு ஊக்குவிக்கப்படுகிறது. அந்த செயலியில் ஆரம்பத்தில் சிறிய தொகையை முதலிடுவதன் மூலம் சிறிய அளவிலான கொடுப்பனவு வழங்கப்படுகிறது. மக்கள் முதல் வருமானத்தை நம்பி அடுத்த தடவை பெரிய ஒரு தொகையை முதலீடு செய்யும் பட்சத்தில் அந…
-
- 0 replies
- 137 views
-
-
24 Mar, 2025 | 12:32 PM கொழும்பு காசல் வீதி மகளிர் வைத்தியசாலையில் விந்தணு வங்கி நிறுவப்பட்டுள்ளது. கருத்தரிப்பின்மை பிரச்சினைக்கு தீர்வுகாணும் முகமாக இந்த விந்தணு வங்கி நிறுவப்பட்டுள்ளது. செயற்கை முறை கருத்தரிப்புக்கு பயன்படுத்துவதற்காக வழங்கப்படும் விந்தணுக்களைச் சேகரித்து இந்த விந்தணு வங்கி நிறுவப்பட்டுள்ளது. இந்த விந்தணு வங்கியானது குழந்தையின்மையால் அவதிப்படும் தனிநபர்கள் மற்றும் தம்பதிகளுக்கு புதிய நம்பிக்கையை அளிக்கிறது. செயற்கை முறை கருத்தரிப்பு, கருத்தரிப்பின்மை பிரச்சினைக்குத் தீர்வுகாணல் , கருத்தரிக்க விரும்பும் பெண்கள் மற்றும் தம்பதிகளுக்காக உலகம் முழுவதும் விந்தணு வங்கிகள் பல காணப்படுகின்றன. இந்த வசதி தற்போது இலங்கையிலும் கொண்டுவரப்பட்டுள்ளது. கொழும்பு காசல்…
-
- 0 replies
- 160 views
-