Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. சோமாலிய என்றால் கடற்கொள்ளையர்கள் என்பது போல இலங்கையை வங்கி கொள்ளையர்கள் இருக்குமிடமாக முழு உலகமுமே வியந்து பார்க்கும் அளவிற்கு நல்லாட்சி அரசாங்கத்தின் ஆட்சி புகழ்பெற்றுள்ளதாக தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவனச , ஜனாதிபதி ஆணைக்குழு முன் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க எப்போது அழைக்கப்படுவார எனவும் கேள்வி எழுப்பியுள்ளார். கூட்டு எதிர்கட்சியின் ஊடக சந்திப்பு நேற்று வியாழக்கிழமை பொரள்ளையில் அமைந்துள்ள என்.எம்.பெரேரா நிலையத்தில் இடம்பெற்றது. இதன் போது உரையாற்றுகையிலேயே பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவனச மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் தொடர்ந்தும் கூறுகையில் , அன்னத்திற்கு புள்ளடியிட்ட அனைத்து மக்களும் இன்று நல்லாட்சி அரசாங்கம் தொடர்பில் வெட்கித்துள்ள…

  2. பிரதமரை உடனடியாக பதவி நீக்க ஒன்றிணைந்து போராடுவோம் : திஸ்ஸ விதாரண (லியோ நிரோஷ தர்ஷன்) அமெரிக்காவுடன் ஒருமித்து செயற்படும் பிரதமரின் கொள்கைகள் இலங்கையின் தேசிய பாதுகாப்பிற்கு பாரிய அச்சுறுத்தலாகியுள்ளது. எனவே அவரை உடனடியாக பதவி நீக்க வேண்டும். அதற்கான போராட்டத்தை பொது மக்களுடன் ஒன்றிணைந்து முன்னெடுப்போம் என பேராசிரியர் திஸ்ஸ விதாரண தெரிவித்தார். கூட்டு எதிர்கட்சியின் ஊடக சந்திப்பில் இன்று வியாழக்கிழமை கலந்துக்கொண்டு உரையாற்றுகையிலேயே பேராசிரியர் திஸ்ஸ விதாரண மேற்கண்டவாறு தெரிவித்தார். மேற்குலக செல்வந்த நாடுகளின் பொருளாதார கொள்கைகள் தற்போது வீழ்ச்சி அடைந்து வருகின்றது. சீனாவிடமிருந்து அமெரிக்கா சுமார் 3.3 ரில்லியன…

    • 2 replies
    • 387 views
  3. ஐ.நா.வின் விசேட பிரதிநிதிகள் முள்ளிவாய்க்காலுக்கு திடீர் விஜயம் ஐக்கிய நாடுகள் சபையின் இடைநிலை நீதி தொடர்பான விசேட பிரதிநிதி பப்லோ டி கிரீஃப் தலைமையிலான ஐக்கிய நாடுகள் சபை குழுவினர் இன்று காலை இறுதிப்போர் இடம்பெற்ற முல்லைத்தீவு முள்ளிவாய்க்கால் பகுதிக்கு விஜயம் மேற்கொண்டிருந்தனர். யுத்தத்தின் போது ஏற்பட்ட அசம்பாவிதங்கள், ஏற்றுமதி நடவடிக்கைகள் மற்றும் இலங்கை அடைந்துள்ள முன்னேற்றங்களை ஆராய்வதற்காகவே ஐக்கிய நாடுகள் சபையின் இடைநிலை நீதி தொடர்பான விசேட பிரதிநிதி பப்லோ டி கிரீஃப் இலங்கைக்கு விஜயம் செய்துள்ளார். இதன் பிரகாரம் நேற்றையதினம் திருகோணமலைக்கு விஜயம் மேற்கொண்டிருந்த குறித்த ஐ.நா. குழுவினர் இன்று முல்லைத்…

  4. நான் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிலிருந்திருந்தால், நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவர் பதவியைப் பெற்றுக்கொண்டு, சர்வதேச சமூகத்தினூடாக அரசாங்கத்துடன் பேரம்பேசியிருப்பேன் என தேசிய சகவாழ்வு மற்றும் அரச கரும மொழிகள் அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். வடக்கு – கிழக்கு இணைப்பு, சமஷ்டி மற்றும் மதம் சார்பற்ற நாடு என்ற விடயத்தை அமைச்சர் மனோ கணேசன் ஆதரிக்கின்றார் என்பதை இப்போதே அறிந்துகொள்ள முடிந்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்திருந்தார். சுமந்திரனின் இக்கருத்துக்குப் பதிலளிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். மேலும் அவர் தெரிவிக்கையில், உண்மையில், நான் தமிழ் தேசிய கூட்டமைப்பாக இருந்திருந்தால், பாராளுமன்றத…

  5. நாடு பிரிபடக்கூடாதுஅதிகாரம் பகிரலாம் நாட்டைப் பிரிக்­கா­மல் வடக்கு -– கிழக்­குக்கு அதி­கா­ரப் பகிர்வை வழங்­கும் யோச­னையை மக்­கள் விடு­தலை முன்­னணி ஒரு­போ­தும் எதிர்க்­காது என்று அந்­தக் கட்சி தெரி­வித்­துள்­ளது. இது தொடர்­பில் அந்­தக் கட்­சி­யின் நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் நலிந்த ஜய­திஸ்ஸ தெரி­வித்­த­தா­வது: எமது நாடா­ளு­மன்­றத்­துக்கு வயது 70. இந்த 70 வரு­டங்­க­ளில் நாம் மூன்று அர­ச­மைப்­பைக் கண்­டு­விட்­டோம். இந்த அர­ச­மைப்­புக்­கள் எவற்­றா­லும் நாட்­டின் முக்­கிய பிரச்­சி­னை­க­ளைத் தீர்க்க முடி­ய­ வில்லை. இந்த நிலை­யில்­தான் நான்­கா­வது அர­ச­மைப்பை உரு­வாக்­கு­வ­தற்­கான முயற்­சி­கள் இடம்­பெ­று­கின்­றன. நாடா­ளு­ம…

  6. ஐ.நா. சிறப்பு அறிக்கையாளரும் அரசமைப்புத் தொடர்பில் ஆராய்வார் சுமந்திரன், ஜயம்பதியுடன் 20ஆம் திகதி பேச்சு புதிய அர­ச­மைப்பு முயற்சி தொடர்­பாக, இலங்கை வந்­துள்ள ஐ.நாவின் சிறப்பு நிபு­ணர் பப்லோ டி கிறிப்­பும் ஆரா­ய­வுள்­ளார். எதிர்­வ­ரும் 20ஆம் திகதி கொழும்­பில் முக்­கிய சந்­திப்பை அவர் நடத்­த­ வுள்­ளார். புதிய அர­ச­மைப்பு உரு­வாக்­கத்­தின் வழி­ந­டத்­தல் குழு­வில் அங்­கம் வகிக்­கும் முக்­கிய உறுப்­பி­னர்­க­ளான ஐக்­கிய தேசி­யக் கட்­சி­யின் நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் ஜயம்­பதி விக்­கி­ர­ம­ரட்ன, தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பின் பேச்­சா­ள­ரும் நாடா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான எம்.ஏ.சும ந் ­திரன் ஆகி­யோ­ரி­டம் இடைக்­கால அறிக்­…

  7. 'உயிரைவிட எமது உரிமையே மேலானது' ஐ.நா. விசேட பிரதிநிகளிடம் தெரிவித்த கேப்பாபுலவு மக்கள் எமது உயிரைவிட நாம் எமது சொந்த நிலத்தில் வாழ வேண்டும் என்ற உரிமையே எமக்கு மேலானது என திடீர் பயணமாக இன்றையதினம் கேப்பாபுலவுக்கு விஜயம் மேற்கொண்ட ஐக்கிய நாடுகள் சபையின் விசேட பிரதிநிகளிடம் கேப்பாபுலவு மக்கள் தெரிவித்துள்ளனர். ஐக்கிய நாடுகள் சபையின் உண்மை,நீதி, நட்­ட­ஈடு மற்றும் மீள் நிக­ழா­மையை ஊக்­கு­விப்­ப­தற்­கான தொடர்பான விசேட பிரதிநிதி பப்லோ டி கிரீஃப் தலைமையிலான ஐக்கிய நாடுகள் சபை குழுவினர் இன்று 219 ஆவது நாளாக கேப்பாபுலவில் அமைந்துள்ள இராணுவத்தலைமையக வாயிலில் தமது சொந்த நிலங்களை கேட்டு போராடிவரும் மக்களை சந்தித்து கலந்துரையாடும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தனர்.…

  8. வடக்கில் வெள்ளியன்று ஹர்த்தால் - எஸ். நிதர்ஷன் அநுராதபுரத்தில் உண்ணாவிரதமிருந்து வரும் தமிழ் அரசியற் கைதிகளின் நியாயமான கோரிக்கையை ஏற்று, அவர்களின் வழக்குகளை அநுராதபுரத்திலிருந்து வவுனியாவுக்கு மாற்றுமாறும் தமிழ் அரசியல் கைதிகளை பொதுமன்னிப்பளித்து விடுதலை செய்யுமாறும் கோரி, வடக்கெங்கும் எதிர்வரும் வெள்ளிக்கிழமை ஹர்த்தால் அனுஷ்டிக்கப்படவுள்ளது. இதற்கான அறிவிப்பை, அரசியற் கட்சிகள், பொது அமைப்புகள் இணைந்து இன்று வெளியிட்டுள்ளன. http://www.tamilmirror.lk/யாழ்ப்பாணம்/வடகில்-வெள்ளியன்று-ஹர்த்தால்/71-205279

    • 6 replies
    • 585 views
  9. அமெரிக்க அதிகாரி இலங்கைக்கு புத்திமதி சீனா­வு­டன் இணைந்து செயற்­ப­டும் போது ஒவ்­வொரு நாடும் எச்­ச­ரிக்­கை­யாக இருக்­க­வேண்­டும். இவ்­வாறு அமெ­ரிக்­கக் கடற்­ப­டை­யின் உயர்­மட்ட அதி­கா­ரி­யான றியர் அட்­மி­ரல் டொனால்ட் டி கப்­ரி­யேல்­சன் தெரி­வித்­தார். இலங்­கை­யில் சீனா­வின் பிர­சன்­னத்தைப் பற்றி அமெ­ரிக்கா கவலை கொண்­டுள்­ளதா என்று இலங்கை வந்­துள்ள றியர் அட்­மி­ரல் மொனால்ட் டி கப்­ரி­யேல்­ச­னி­டம் கொழும்பு ஆங்­கில ஊட­கம் கேள்வி எழுப்­பி­யி­ருந்­தது. சில விட­யங்­க­ளில் சீனா வெளிப்­ப­டைத்­தன்­மை­யு­டன் செயற்­ப­டா­த­தால், சீனா­வு­டன் இணைந்து செயற்­ப­டும் போது ஒவ்­வொரு நாடும் எச்­ச­ரிக்­கை­யாக இருக்­க­வேண்­டும். சீனா தற்­போது நன்­மை­களைப் பெற்…

  10. நல்லாட்சி அரசாங்கத்திற்கு தமிழ் மக்கள் மீதான பற்று தொடர்பில் தினேஷிற்கு சந்தேகம் (லியோ நிரோஷ தர்ஷன்) அரச ஊழியர்களுக்கு வழங்கப்படும் தீபாவளி பண்டிகை கொடுப்பனவை அரசாங்கம் இன்னும் வழங்கவில்லை . இதுவா ? நல்லாட்சி அரசாங்கத்தின் தமிழ் மக்கள் மீதான பற்று என பாராளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்தன கேள்வியெழுப்பியுள்ளார். ஹம்பாந்தோட்டை ஆர்ப்பாட்டத்தின் போது ஊடகவியலாளர் மீது தாக்குதல் நடத்து சர்வதேசத்தின் சாபத்திற்கு ஆழாகியுள்ளதாகவும் குறிப்பிட்டார். கூட்டு எதிர்க்கட்சியின் ஊடக சந்திப்பு இன்று வியாழக்கிழமை பொரெல்லையில் அமைந்துள்ள என்.எம்.பெரேரா நிலையத்தில் இடம்பெற்றது. இதன் போது உரையாற்றுகையிலேயே பாராளுமன்ற உறுப்பினர் தினேஷ்…

  11. என்னாள் எவ்வாறு முடியுமென ஜனாதிபதி கேள்வி (லியோ நிரோஷ தர்ஷன்) ஜே . ஆர் . ஜயவர்தனவினால் செய்ய முடியாதததை என்னாள் எவ்வாறு செய்ய முடியும் என கேள்வியெழுப்பியுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன புதிய அரசியலமைப்பு குறித்து முழுமையாக ஆராய்ந்து நடவடிக்கை எடுப்பாதாக உறுதியளித்துள்ளார். கூட்டு எதிர்கட்சியின் ஊடக சந்திப்பு இன்று வியாழக்கிழமை பொரள்ளையில் அமைந்துள்ள என்.எம்.பெரேரா நிலையத்தில் இடம்பெற்ற போது எழுப்பப்பட்ட கேள்விற்கு பதிலளிக்கும் போதே பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவனச மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் தொடர்ந்தும் கூறுகையில் , நல்லாட்சி அரசாங்கத்தின் புதிய அரசியலமைப்பிற்கான முன்னெடுப்புகள் பிரிவினைவாத்தை நோக்கியே உள்…

  12. அரசாங்கத்தின் சகபாடியே தமிழ் தேசிய கூட்டமைப்பு : பீரிஸ் (லியோ நிரோஷ தர்ஷன்) ஒழுக்கமான எதிர்கட்சியாக இருந்து நாட்டிற்கு சேவை செய்வதை விடுத்து தமிழ் தேசிய கூட்டமைப்பு அரசாங்கத்தின் திட்டங்களை ஆதரிக்கும் சகபாடியாக செயற்படுவதாக முன்னாள் வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் குற்றம் சுமத்தியுள்ளார். கூட்டு எதிர்கட்சியின் ஊடக சந்திப்பு இன்று வியாழக்கிழமை பொரெள்ளையில் அமைந்துள்ள என்.எம்.பெரேரா நிலையத்தில் இடம்பெற்றது. இதன் போது உரையாற்றுகையிலேயே பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் தொடர்ந்தும் கூறுகையில் , உள்ளுராட்சிமன்ற தேர்தலை ஜனவரியில் நடத்துவதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கும் வகைய…

  13. யாழில் இடம்பெறும் ஜனாதிபதியின் நிகழ்வை புறக்கணிக்க கோரிக்கை: பொது அமைப்புக்கள் யாழ்ப்பாணத்தில் இடம்பெறவுள்ள ஜனாதிபதியின் நிகழ்வை புறக்கணிக்குமாறு பொது அமைப்புகளும,அரசியல் கட்சிகளும் மக்களிடம் கோரிக்கை ஒன்றை முன்வைத்துள்ளனர். இது தொடர்பாக அவர்கள் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் பின்வருமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசியல் கைதிகள் தங்களின் உயிர்களை பணயம் வைத்து போராடி வருகின்ற நிலையில், அவர்களது நியாயமான கோரிக்கைகளை பொருட்படுத்தாது, எதிர்வரும் (14.10.2017) சனிக்கிழமை அன்று, ஜனாதிபதியும் எதிர்கட்சித் தலைவரும் பல்வேறு நிகழ்வுகளில் பங்குகொள்வதற்காக யாழ்ப்பாணத்திற்கு வருகை தரவுள்ளனர். இது தமிழ் மக்களுக…

  14. யாரையும் பழிவாங்கோம்;கூட்டமைப்பிற்கு எதிராக போட்டியிடுவோம்-பெசில் தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்கு எதிராக வடக்கில் செயற்படுகின்ற ஏனைய கட்சிகளுடன் இணைந்து உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தலில் வடமாகாணத்திலும் வேட்பாளர்களை களமிறக்கவுள்ளதாக முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பெசில் ராஜபக்ச தெரிவித்துள்ளார். முன்னாள் வெளிவிவகார அமைச்சர் ஜி.எல். பீரிஸ் தலைமைதாங்கும் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி ஏற்பாடு செய்திருந்த ஊடகவியலாளர் சந்திப்பு கொழும்பில் இன்றைய தினம் நடைபெற்றது. எதிர்வரும் உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தலில் புதிய கட்சியான ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி மேற்கொள்ளவுள்ள புதிய உத்திகள் தொடர்பில் இந்த ஊடக சந்திப்பில் கலந்துகொண…

  15. காணமல் ஆக்கப்பட்ட உறவுகளின் போராட்டத்தை மதிக்கும் ஐ.நா விசேட பிரதிநிதி பப்லோ டி கிரீஃப் ஐக்கிய நாடுகள் சபையின் இடைநிலை நீதி தொடர்பான விசேட பிரதிநிதி பப்லோ டி கிரீஃப் தலைமையிலான ஐக்கிய நாடுகள் சபை குழுவினர் இன்று காலை கிளிநொச்சி கந்தசாமி கோவில் முன்றலில் இருநூற்று முப்பத்தைந்தாவது நாளாக காணமல் ஆக்கப்பட்ட தமது உறவுகளுக்கு தீர்வு கோரி போராட்டத்தில் ஈடுபட்டுக்கொண்டுள்ள காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளை சந்தித்தனர். ஐக்கிய நாடுகள் சபை குழுவினரிடம் நிலைமாறு காலநீதி சம்பந்தமாகவும் அதில் உள்ள குறைபாடுகள் சம்பந்தமாகவும் காணாமல் ஆக்கப்பட்டவர்கள் அலுவலகம் தொடர்பில் எடுக்கப்பட்ட முடிவுகள் உறவுகளான தம்முடன் கலந்தாலோசிக்காது எடுக்கப்பட்ட முடிவு…

  16. யாழில் நாளை சுனாமி ஒத்திகை யாழ். மாவட்டத்தில் நாளை (13) சுனாமி ஒத்திகையொன்று நடத்தப்படவுள்ளதாக, அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது. யாழ்ப்பாண கரையேரப் பகுதிகள் உள்ளிட்டதாக அனைத்து இடங்களிலும் மக்களை விழிப்புணர்வடையச் செய்யும் வகையில், இந்த ஒத்திகை முன்னெடுக்கப்படும் என அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் பிரதிப் பணிப்பாளர் பிரதீப் கொடிப்பீலி தமிழ் மிரருக்குத் தெரிவித்தார். http://www.tamilmirror.lk/யாழ்ப்பாணம்/யாழில்-நாளை-சுனாமி-ஒத்திகை/71-205466

  17. தன்மீதான தாக்குதல் தொடர்பில் யோகேஸ்வரன் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு மட்டக்களப்பு மாவட்ட தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரனின் அலுவலகத்தில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் சம்பவம் தொடர்பில் மட்டக்களப்பு பொலிஸ் நிலையத்தில் முறையிடப்பட்டுள்ளது. நேற்று புதன்கிழமை மாலை மட்டக்களப்பு பார் வீதியில் உள்ள அலுவலகத்திற்கு சென்ற மட்டக்களப்பு மாவட்ட காணி சீர்திருத்த ஆணைக்குழுவின் பணிப்பாளர் பாராளுமன்ற உறுப்பினரைத் தாக்க முனைந்தபோது தடுக்க முனைந்த பொலிஸார் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் தெரிவித்தார். தன்மீது தாக்குதல் நடத்த உதவி ஆணையாளர் முயற்சிகளை மேற்கொண்டதாக பாராளுமன்ற உறுப்பினர் தெரிவித்தார்.…

  18. மற்றுமொரு புதிய கட்சி ஆரம்பம்! தமது புதிய அரசியல் கட்சி அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள தேர்தலில் போட்டியிடும் என, ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் உறுப்பினர் மைத்ரி குணரத்ன தெரிவித்துள்ளார். ஐக்கிய தேசிய சுதந்திர முன்னணி என்ற பெயரில் மைத்ரி குணரத்ன புதிய அரசியல் கட்சியொன்றை ஆரம்பித்துள்ளார். இது தொடர்பான ஊடகவியலாளர் சந்திப்பு இன்று (12) நடைபெற்றது. அதில் பேசியபோதே மைத்ரி இத்தகவலை வெளியிட்டார். “எங்கள் புதிய கட்சி அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள தேர்தலில் போட்டியிடும். இதற்கான ஆரம்ப வேலைகளை ஏற்கனவே ஆரம்பித்துவிட்டோம். இப்போது, கட்சிக்கான தொண்டர்களைச் சேர்க்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. “ஐக்கிய தேசியக் கட்சியில் இருக்கும்போது கட்சிய…

  19. யாழ்.பல்கலையில் திறந்த கலந்துரையாடல் புதிய அரசியல் யாப்பின் இடைக்கால வரைபு தொடர்பான திறந்த கலந்துரையாடல் ஒன்று இன்று யாழ்ப்பாணத்தில் இடம்பெறவுள்ளது. இந்த கலந்துரையாடல் யாழ்ப்பாணம் – கைலாசபதி கலையரங்கில் காலை நடைபெறவுள்ளது. கலந்துரையாடலை யாழ்ப்பாணம் கல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் ஏற்பாடு செய்துள்ளது. இந்த கலந்துரையாடலில் கலந்துகொள்ளுமாறும் ஏற்பாட்டாளர்கள் அழைப்பு விடுத்துள்ளனர். https://news.ibctamil.com/ta/internal-affairs/Interim-Plan-Constitution-Open-Discussion-Jaffna

  20. தமிழகத்திலிருந்து 55 பேர் நாடு திரும்பினர் கடந்த 25 வருடங்களுக்கு முன்னர் மன்னாரிலிருந்து படகு மூலம் இந்தியாவுக்குச் சென்ற 55 பேர் நேற்று இலங்கைக்கு அழைத்து வரப்பட்டனர். அவர்களுக்கான இலவச வானூர்திச் சிட்டைகளை ஐக்கிய நாடுகளின் அகதிகள் தூதுவராலயம் வழங்கியுள்ளது. அதேவேளை நாடு திரும்பியுள்ள 12 குடும்பங்களுக்கும் வாழ்வாதாரத்துக்கான ஆரம்பக் கொடுப்பனவுகளும் வழங்கப்பட்டுள்ளன எனத் தெரிவிக்கப்பட்டது. இவர்கள் அவர்களது சொந்த இடங்களில் மீள்குடியமர்த்தப்படுவர் என்றும் தெரிவிக்கப்பட்டது. http://newuthayan.com/

  21. தமிழ் மக்கள் பேரவை அரசியல் கட்சியாக மாறும்- விக்னேஸ்வரனை சந்திக்கவும் ஏற்பாடு தமிழரசுக் கட்சி அரசாங்கத்துக்கு முண்டு கொடுப்பதால், தமிழ் மக்கள் பேரவை அரசியல் கட்சியாக மாற்றமடைய வேண்டும் என சிவில் அமைப்புகள், கல்வியாளர்கள் கடும் அழுத்தம் கொடுப்பதாக ஐ.பி.சி.தமிழ் செய்தியாளர் தெரிவித்தார். அவசர அவசரமாக அரசியல் கட்சியாக மாற்றமடைந்து, வடக்கு கிழக்கில் மக்கள் மத்தியில் தமிழர்களின் தற்போதை அவல நிலை குறித்து விழிப்புணர்வுக் கூட்டங்கள் மற்றும் கலந்துரையாடல்களை நடத்தி, தேசிய இயக்கம் ஒன்றை கட்டியெழுப்ப வேண்டும் என ஆர்வலர்கள் கூறியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கத்தோலிக்க திருச்சபையின் யாழ், மன்னார் மறை மாவட்டங்களின் அருட்தந்தையர்கள் சிலர…

    • 1 reply
    • 581 views
  22. டெங்கு காய்ச்சல் என்றால் என்ன ? தடுப்பது எப்படி ? டெங்கு காய்ச்சல் என்பது, கொசுக்கடி மூலம் பரவும் ஒரு வைரஸ் நோய். இது சாதரணமாக, திடீரென பாதிப்பை ஏற்படுத்தி, அதிக காய்ச்சல், தலைவலி, உடம்பு வலி, கடுமையான தசை வலி, சோர்ந்து போதல், முட்டு வலி, கண்ணின் பின்புறம் வலி மற்றும் தோலில் ஒரு வகை கலர் மற்றம் ஏற்படுத்தும். இதில் குறிப்பாக ஜுரம், தோல் நிற மாற்றம், தலைவலி தான் எல்லா டெங்கு நோயாளிகளுக்கும் இருக்கும் மூன்று நோய் அறிகுறி. இதுபோக இரத்த கசிவுகளை ஏற்படுத்தலாம். இது நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்களை அதிகம், கடுமையாக பாதிக்கும்.இந்த நோய், நான்கு வகையான வைரஸ்களால் உண்டாக்கபடுவதால், ஒருவருக்கே பலமுறை டெங்கு வரலாம். ஆனால் டெங்கு வைரஸ் ஒரு வகையால், பாதிக்கபட்டால், அந்த வ…

  23. கோட்டை முதலான புகையிரதச் சேவைகள் இரத்து! புகையிரதச் சாரதிகள் மற்றும் பாதுகாப்பு அதிகாரிகள் திடீர் வேலைநிறுத்தத்தில் இறங்கியுள்ளனர். இதனால், தற்போது முதல் கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்தில் இருந்து ஆரம்பிக்கும் ரயில் சேவைகள் அனைத்தும் இரத்துச் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவலை கோட்டை புகையிரத நிலைய மக்கள் தொடர்பாடல் பிரிவு அறிவித்துள்ளது. http://www.virakesari.lk/article/25628

  24. நாம் ஆலோ­சனை வழங்­க­வில்லை 15 பில்­லியன் ரூபா நிதித் தேவையை சர்ச்­சைக்­கு­ரிய பிணை முறி கொடுக்கல் வாங்­கல்கள் ஊடாக நிவர்த்தி செய்ய தாம் ஒரு போதும் முன்னாள் மத்­திய வங்கி ஆளுநர் அர்­ஜுன மகேந்­தி­ர­னுக்கு ஆலோ­சனை வழங்­க­வில்லை என்று சர்­வ­தேச வர்த்­தகம் மற்றும் அபி­வி­ருத்தி மூலோ­பாய அமைச்சர் மலிக் சம­ர­விக்­ரம, அரச தொழில் முயற்­சி­யாண்மை அமைச்சர் கபீர் ஹாசிம் ஆகியோர் நேற்று ஜனா­தி­பதி விசா­ரணை ஆணைக் குழு முன்­னி­லையில் சாட்­சியம் அளித்­தனர். எவ்­வா­றா­யினும் நெடுஞ்­சா­லைகள் நிர்­மாணம் தொடர்பில் அர­சாங்­கத்­துக்கு 18 பில்­லியன் ரூபா அப்­போது தேவைப்­பட்­டமை, அதில் 3 பில்­லியன் ரூபா அர­சாங்­கத்­திடம் கையி­ருப்பில் இருந்­தமை தொடர்பில் சர்ச…

    • 1 reply
    • 383 views
  25. வெவ்வேறு சம்பவங்களில் பதினாறு பேர் கைது; கடற்படையினர் நடவடிக்கை நாட்டின் பல பகுதிகளிலும் சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்த சந்தேகத்தின் பேரில் வெவ்வேறு நடவடிக்கைகளில் பதினாறு பேரை கடற்படையினர் கைது செய்துள்ளனர். கிழக்குப் பிராந்தியத்தின் புறாத் தீவுப் பகுதியில், சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட பதின்மூன்று பேரை கடந்த நான்காம் திகதி கடற்படையினர் கைது செய்தனர். மீன்பிடிக்குப் பயன்படுத்தப்பட்ட இரண்டு படகுகள் மற்றும் அனுமதிக்கப்படாத வலைகள் இரண்டையும் பறிமுதல் செய்த கடற்படையினர், அவற்றை நிலாவெளி வனவிலங்கு அதிகார சபையில் ஏல விற்பனைக்காகக் கையளித்தனர். இதேவேளை, மற்றொரு சம்பவத்தில், கடற்படையினருக்குக் கிடைத்த தகவல்களின் அடிப்ப…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.