Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. வாள்வெட்டு, திருட்டுகள் தொடர்பில் சிறப்புக் கூட்டம்! – இராணுவ தளபதி தலைமையில் யாழ்ப்பாணத்தில் நடக்கும் வாள்வெட்டு மற்றும் திருட்டுக் குற்றச்செயல்களைக் கட்டுப்படுத்துவது தொடர்பான சிறப்புப் கூட்டம் ஒன்று இராணுவத் தளபதி தலைமையில் நடைபெறுகின்றது. துன்னாலையில் நடத்தப்படும் இந்தக் கூட்டத்தில் யாழ். குடாநாட்டில் உள்ள அனைத்து இராணுவ முகாம்களைச் சேர்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டுள்ளனர் என்று தெரிவிக்கப்படுகின்றது. யாழ். குடாநாட்டில் நடந்த வாள்வெட்டு, திருட்டு, குற்றச் செயல்கள் தொடர்பில் சந்தேகத்தின்பேரில் கைது செய்யப்பட்டுள்ளர்களை விடுவிப்பது தொடர்பாகவும் அதில் ஆராயப்படுகின்றது என்று கூறப்படுகின்றது. http://newuthayan.com/story/23043.ht…

  2. சிறுபான்மை இன அரசியல் தலைவர்களின் இயலாமை நிருபணமாகிவிட்டது.. நல்லாட்சி அரசு கொண்டுவந்த சிறுபான்மையின மக்கள் பாதிக்கப்படக் கூடிய மாகாண சபை தேர்தல் முறை மாற்ற சட்டமூலத்தில், சிறு பான்மையின மக்களுக்கு இருந்த பாதிப்பை குறைத்துவிட்டதாகசிறுபான்மையின அரசியல் வாதிகள் பெருமை பேசுவதை பார்க்கும் போது நகைப்புக்குரியதாக உள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்‌ஷ தெரிவித்தார். ஊடகங்களுக்கு அவர் மேலும் தெரிவிக்கையில்… இந்த நல்லாட்சி அரசானது முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ மீது பலவாறான குற்றச் சாட்டுக்களை முன்னிறுத்தி கொண்டு வரப்பட்டிருந்தது. இதில் சிறுபான்மையின மக்கள் முன்னாள்ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ இனவாதிகளுடன் இணைந்து சிறுபான்ம…

  3. குகுலே கங்கை வான் கதவு திறப்பு : தாழ் நில மக்களுக்கு எச்சரிக்கை நாட்டில் நிலவும் மழையுடன் கூடிய சீரற்ற காலநிலையால் குகுலே கங்கையின் வான் கதவொன்று திறந்துவிடப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. மேலும் புலத்சிங்கள, அகலவத்த, மதுராவல மற்றும் இங்கிரிய உள்ளிட்ட தாழ்நில பிரதேச மக்களை அவதானமாக இருக்கமாறு எச்சரிக்கை விடுத்துள்ளனர். http://www.virakesari.lk/article/24962 நாட்டில் மண்சரிவு அபாயம் நாட்டில் நிலவும் மழையுடன் கூடிய சீரற்ற காலநிலையால் களுத்துறை, நுவரெலியா மற்றும் இரத்தினபுரி ஆகிய மூன்று மாவட்டங்களில் மண்சரிவு அபாயம் உள்ளதாக காலநிலை அவதான நிலையம் …

  4. ஐ.நா. பிரகடனத்திற்கு ஏற்பவே செயற்படுவோம் பொது எதிரணியின் கேள்விக்கு நீதியமைச்சர் பதில் (எம்.எம்.மின்ஹாஜ்) மிரி­ஹான பொலி­ஸுக்கு அரு­கா­மை யில் ஐக்­கிய நாடுகள் அமைப்பின் உத­வி யுடன் மியன்மார் அக­திகள் முகா­மொன்று நடத்­தப்­பட்டு வரு­கின்­றது. எனினும் முகாமில் உள்­ள­வர்கள் சட்­ட­வி‍­ரோ­த­மாக தனி­வீ­டுகள் அமைத்து இலங்­கை­யர்­க­ளாக வாழ்­கின்­றனர். இவர்­க­ளுக்கு எதி­ராக அர­சாங்கம் என்ன நட­வ­டிக்கை எடுக்க போகின்­றது என்று கூட்டு எதி­ர­ணி­யினர் நேற்று சபையில் கேள்வி எழுப்­பினர். தஞ்சம் புகுந்­துள்ள அக­தி­களில் குற்றம் இழைத்­த­வர்கள் இருந்தால் அவர்­க­ளுக்கு எதி­ராக நட­வ­டிக்கை எடுக்க முடியும்.எனினும் மியன்மார் அர­சாங்கம் இது தொடர்பில் எ…

  5. ‘அட்டூழியத்தை நிறுத்தவும்’ “ஐக்கிய நாடுகளின் மேற்பார்வையில், கொழும்பு, கல்கிஸையில் தங்கவைக்கப்பட்டுள்ள றோகிஞ்சா அகதிகளை, அங்கிருந்து வெளியேற்றச் செய்து அகதிகளையும் முஸ்லிம்களையும், மிகவும் மோசமான முறையில் தூஷித்து அடாவடித்தனம் மேற்கொண்ட இனவாதிகள் மீது, அரசாங்கம் கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும்” என்று, கைத்தொழில் மற்றும் வாணிப அலுவல்கள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் கோரிக்கை விடுத்துள்ளார். அவர்களுக்குப் பாதுகாப்புக்கு வழங்குவதற்கான நடவடிக்கைகளை எடுக்குமாறும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார். சட்டமும் ஒழுங்கும் மற்றும் தென் அபிவிருத்தி அமைச்சர் சாகல ரத்நாயக்கவை சந்தித்தபோதே, அவர் மேற்கண்டவாறு வலியுறுத்தியுள்ளார். அம…

  6. பஷில் தலை­மையிலான குழு 30 ஆம் திகதி யாழ்.செல்கிறது.! ஸ்ரீலங்கா பொது­ஜன முன்­ன­ணியை விரி­வாக்­கு­வ­தனை அடிப்­ப­டை­யாகக்­கொண்டு அக்­கட்சி எதிர்­வரும் 30 அம் திக­தி­யி­லி­ருந்து ஒக்­டோபர் மாதம் இரண்டாம் திகதி வரை யாழ். மாவட்­டத்தில் பரந்­து­பட்ட அர­சியல் கூட்­டங்­களை நடத்­து­வ­தற்கு தீர்­மா­னித்­துள்­ளது. முன்னாள் அமைச்சர் பஷில் ராஜ­பக் ஷ தலை­மையில் நடை­பெ­ற­வுள்ள அக்­கூட்­டங்­களில் ஸ்ரீலங்கா பொது­ஜன முன்­ன­ணியின் தலைவர் பேரா­சி­ரியர் ஜீ.எல். பீரிஸ் உட்­பட அக்­கட்­சியின் முக்­கி­யஸ்­தர்கள் பலரும் கலந்­து­கொள்­ள­வுள்­ளனர். அதற்­கான ஏற்­பா­டுகள் தற்­போது யாழ்ப்­பா­ணத்தில் மும்­மு­ர­மாக நடை­பெற்­று­வ­ரு­வ­தா­கவும் அக்­கட்சி தெரி­வித்த…

  7. குர்திஷ்தானின் பிராந்தியத்திய மக்களது பொதுசன வாக்கெடுப்பு,சுயநிர்ணய உரிமைக்காக போராடி வரும் ஈழத்தமிழர்களுக்கு புதிய நம்பிக்கையினையையும் உற்சாகத்தினையும் தந்துள்ளதாக நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரன் தெரிவித்துள்ளார். ஈராக்கின் சுயாட்சி பிராந்தியமான குர்திஸ்தான் மக்கள் தமது தனிநாட்டுக்கான பொதுசன வாக்கெடுப்பினை ஞாயிற்றுக்கிழமையன்று நடத்தியிருந்தனர். ஈராக், துருக்கி, சிரியா ஆகிய நாடுகளது கடுமையான நெருக்கடிகளுக்கு மத்தியில் பொதுவாக்கெடுப்பு வெற்றிகரமாக நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. இது குறித்து வி.உருத்திரகுமாரன் குர்திஷ்தான் தொலைக்காட்சி ஒன்றுக்கு வழங்கிய கருத்துரை ஒன்றின் போதே இதனைத் தெரிவித்துள்ளார். மேலும் தமிழீழம் உள்ளடங்கியதான அனை…

  8. $$ அண்மையில் வெளியிடப்பட்ட ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் சுயசரிதை புத்தகம் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ கருத்தொன்றை வெளியிட்டுள்ளார். “ஜனாதிபதி தந்தை” என்ற புத்தகம் தொடர்பில் சர்ச்சைக்குரிய கருத்தினை நாமல் வெளியிட்டுள்ளார் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் மகள் சத்துரிக்கா சிறிசேனவினால், சமகால ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் அரசியல் பயணம் தொடர்பில் புத்தகம் வெளியிடப்பட்டது. “ஜனாதிபதி தந்தை” என்ற புத்தகம் அண்மையில் பண்டநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் வைத்து வெளியிடப்பட்டது. இந்நிலையில் இந்தப் புத்தகத்தை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் மகன் நாமல் ராஜபக்சவினால், கொள்வனவு செய்யப்பட்ட போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் நேற்று …

  9. புதிய அர­ச­மைப்பு தமி­ழ­ருக்கு வெற்றி சிங்­க­ள­வர், முஸ்­லிம்­க­ளுக்கு ஏமாற்­றம் கிழக்கு மாகாண எதிர்க்கட்­சித் தலை­வ­ரின் நிலைப்­பாடு இது 1 வழி­ந­டத்­தல் குழு­வின் இடைக்­கால‌ அறிக்கை த‌மிழ் ம‌க்க‌ளுக்கு ஓர‌ள‌வு வெற்­றி­யா­க‌வும் முஸ்­லிம்­க‌ளுக்­கும், சிங்­க‌ள‌வ‌ருக்­கும் எந்த‌ ந‌ன்மையை­யும் வழங்­கா­மல் பாதிப்­புக்­களை ஏற்­ப­டுத்­தி­யுள்­ளது. இவ்­வாறு கிழக்கு மாகா­ண­ச­பை­யின் எதிர்க்கட்­சித் தலை­வ­ரும், முஸ்­லிம் உலமா கட்­சி­யின் தலை­வ­ரு­மான முபா­றக் அப்­துல் மஜீத் தெரி­வித்­தார். அவர் மேலும் தெரி­வித்­த­தா­வது: இடைக்­கால‌ அறிக்­கை­யில் வ‌ட‌க்கும் – க…

    • 2 replies
    • 657 views
  10. யாழ். சிறையில் இருக்கும் தந்தை தாக்கப்பட்டுள்ளார் மனித உரிமை ஆணைக்குழுவில் மகன் முறைப்பாடு Share யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தனது தந்தையை சிறைச்சாலை பாதுகாப்பு ஊழியர்கள் தாக்கினார்கள் என யாழ்ப்பாண மனித உரிமை ஆணைக்குழுவில் மகன் ஒருவர் முறைப்பாடு செய்துள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுபற்றி முறைப்பாடு செய்தவர் தரப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டதாவது: கடந்த 8 மாதங்களுக்கு முன்பு எனது தந்தை யாழ்ப்பாணத் துக்கு சுற்றுலா சென்றார். அதன்போது அவர் கஞ்சா வைத்திருந்ததாக குற்றம் சாட்டப்பட்டு யாழ்ப்பாணம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டார். …

  11. பௌத்­தத்­துக்கு முன்­னு­ரிமை வழங்க இணங்­கு­வது தமி­ழ­ரின் அர­சி­யல் தற்­கொ­லைக்கு ஒப்­பா­னது முன்­னாள் அமைச்­சர் ஐங்­க­ர­நே­சன் சாடல் Share பௌத்த மதத்­துக்கு முன்­னு­ரிமை வழங்­கு­வ­தற்­குத் தமிழ்த் தலை­மை­கள் ஏற்­றுக் கொண்­டி­ருப்­பது தமி­ழர்­க­ளின் அர­சி­யல் தற்­கொ­லைக்கு ஒப்­பா­னது. இவ்­வாறு முன்­னாள் விவ­சாய அமைச்­ச­ரும், வடக்கு மாகாண சபை உறுப்­பி­ன­ரு­மான பொ.ஐங்­க­ர­நே­சன் தெரி­வித்­தார். மல்­லா­கம் கல்­லா­ரை­யில் நேற்று முன்­தி­னம் ஞாயிற்­றுக்­கி­ழமை மாதர் அமைப்­பு­க­ளின் பிர­தி­நி­தி­க­ளைச் சந்­தித்­துச் சம­கால அர­சி­யல் நில­வ­ரம் தொடர்­பா­கக் கலந்­து­ரை­யா­டி­…

  12. சக்தி டிவி செய்திகள் 26 09 2017 , 8PM

  13. தியாக தீபத்­தின் நினைவு நாள் இன்று ஆரம்­பம் அமை­திப் படை­யா­கக் காலடி எடுத்­து­வைத்து ஆக்­கி­ர­மிப்­புப் படை­யாக மாறி ஈழத் தமி­ழர்­களை வேட்­டை­யாடி சூறை­யாடி – அழித்­தொ­ழித்த இந்­திய இரா­ணு­வத்­துக்கு எதி­ராக அகிம்சை வழி­யில் – 12 நாள்­கள் உணவு ஒறுப்­புப் போராட்­டம் நடத்தி வீரச்­சா­வ­டைந்த லெப். கேணல் தியாக தீபம் திலீ­ப­னின் நினை­வு­நாள் தாயக மண்­ணி­லும் – புலம் பெயர் தேசத்­தி­லும் இன்று ஆரம்­ப­மா­கின்­றது. மக்­கள் மத்­தி­யில் விடு­த­லைத் தீயை விதைத்த திலீ­பன், உணவு ஒறுப்­புப் போராட்­டத்தை இதே­போன்­ற­தொரு நாளில் 30ஆண்­டு­க­ளுக்கு முன்­ன­தாக – 1987ஆம் ஆண்டு ஆரம்­பித்­தார். ஈழத் தமி­ழ­ரின் தாயக தேசம் எங்­கும் நிலை கொண்­டி­ருந்த இந்­திய இரா­ணு­…

  14. யுத்த காலத்தில் ஒப்படைக்கப்பட்ட தங்க நகைகள் மீள கிடைக்கவில்லையென மக்கள் விசனம் யுத்த காலத்தில் தாம் ஒப்படைத்த தங்க நகைகள் தமக்கு இதுவரை கிடைக்கவில்லையென வடக்கு, கிழக்கு மக்கள் தெரிவித்தனர். அதிக பெறுமதியுடைய தங்க நகைகளுக்கு என்ன நடந்தது என மக்கள் கேள்வி எழுப்புகின்றனர். யுத்தம் இடம்பெற்ற காலத்தில் வங்கியில் வைப்பிலிடப்பட்டிருந்த தங்க நகைகளை அரசாங்கம் பொறுப்பேற்றதாக அறிவிக்கப்பட்டது. அதன் பின்னர், கடந்த ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னர் 2014 ஆம் ஆண்டு டிசம்பர் 04 ஆம் திகதி முன்னாள் அரசாங்கம் 2,379 பேருக்கு அவர்களின் தங்க நகைகளை மீளக்கையளித்தது. எனினும் அதிகப் பெறுமதியுடைய, அதிக எடை கொண்ட தங்க நக…

  15. 11 தமிழ் இளைஞர்கள் கடத்தல்: கொமடோர் டீ.கே.பி. தசநாயக்க முதற்தடவையாக திறந்த மன்றில் ஆஜர் கொழும்பு மற்றும் அதனை அண்மித்த பகுதிகளில் 11 தமிழ் இளைஞர்கள் கடத்தப்பட்டு, காணாமல் ஆக்கப்பட்டமை தொடர்பில் கைது செய்யப்பட்டு, விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள கடற்படையின் முன்னாள் பேச்சாளர் கொமடோர் டீ.கே.பி. தசநாயக்க முதற்தடவையாக இன்று திறந்த மன்றில் ஆஜர்படுத்தப்பட்டார். கோட்டை நீதவான் நீதிமன்றத்தில், நீதவான் லங்கா ஜயரத்ன முன்னிலையில் வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே அவர் நீதிமன்ற உத்தரவிற்கு அமைய ஆஜர்படுத்தப்பட்டிருந்தார். கடற்படை வைத்தியசாலையிலிருந்து அம்பியூலன்ஸ் வண்டியில் அழைத்து வரப்பட்ட சந்தேகநபர், சக்கர நா…

  16. படகுகளை மீட்க இந்திய மீனவர் குழு இலங்கை வருகை சர்வதேசக் கடற்பரப்பில் மீன்பிடித்த குற்றத்திற்காக கடற்படையால் கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்களிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட படகுகளை விடுவிக்க அரசு ஒத்துக்கொண்டதுடன் முதல் கட்டமாக 42 விசைப் படகுகளை விடுவித்துள்ளது. இந்தப் படகுகளின் நிலை பற்றி அறிந்துகொள்வதற்காக, கடந்த மாதம் ஏழு பேர் அடங்கிய இந்தியக் குழுவொன்று இலங்கை வந்திருந்தது. காங்கேசன்துறை மற்றும் கிராஞ்சி துறைமுகங்களில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த 42 படகுகளையும் ஆய்வு செய்த குழுவினர், அவற்றுள் 36 படகுகள் மட்டுமே பயன்பாட்டுக்கு உரிய நிலையில் இருப்பதாகக் கூறியிருந்தது. இந்நிலையில், நாளை (27) இலங்கை வரும் இந்தியக் குழுவினர்…

  17. வெளி­யா­னது இடைக்­கால அறிக்கை எந்­தக் கட்­சிக்­குமே இணக்­க­மில்லை புதிய அர­ச­மைப்பு உரு­வாக்­கத்­துக்­கான வழி­காட்­டல் குழு­வின் இடைக்­கால அறிக்கை நேற்று வெளி­யா­னது. தலைமை அமைச்­சர் ரணில் விக்­கி­ர­ ம­சிங்க அதனை நாடா­ளு­மன்­றத்­தில் முன்­வைத்­தார். இலங்கை பிரிக்­கப்­ப­டாத, பிரிக்­கப்­ப­ட­ மு­டி­யாத நாடு என்று அந்த அறிக்கை குறிப்­பி­டு­கி­றது. பௌத்­தத்­துக்கு முன்­னு­ரிமை வழங்­கப்­ப­ட­வேண்­டும் என்று பரிந்­து­ரைக்­கி­றது. வடக்கு –கிழக்கு மாகா­ணங்­களை இணைப்­பது தொடர்­பில் மூன்று தெரி­வு­களை முன்­வைத்து இணக்­க­மின்­மையை வெளிப்­ப­டுத்­தி­யுள்­ளது. தேசி­யம், மாகா­ணம், உள்­ளூ­ர­தி­கார சபை ஆகிய மூன்று மட்­டங்­க­ளில் அதி­கா­ரங்­க­ளைப் பகிர்­வ­தற…

  18. மட்டக்களப்பில் மூன்று வருடங்களாக ஓடாத கடிகாரம் கிழக்கு மாகாண முன்னாள் மாகாணசபைக் காலத்தில் மட்டக்களப்பு மத்திய பேருந்து பஸ் தரிப்பு நிலையத்தில் நிறுவப்பட்ட மணிக்கூடு, கடந்த சுமார் மூன்று வருட காலமாக ஓடாமல் ஒரே நேரத்தையே காட்டி வருகிறது. பின்தங்கிய பிரதேசங்களைச் சேர்ந்த மக்கள் பலரும் மட்டக்களப்பு மத்திய பேருந்து நிலையம் வழியாகவே தமது போக்குவரத்து நடவடிக்கைகளை மேற்கொள்கின்றனர். இதன்போது, சிலவேளைகளில் ஓடாத இந்த மணிக்கூட்டைப் பார்த்து நேரத்தைக் கணக்கிட்டுக்கொள்வதாகவும், இதனால் அவர்கள் சில சங்கடங்களுக்கு முகங்கொடுத்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கிழக்கின் பிரதான நகராக விளங்கும் மட்டக்களப்பின் பேருந்து நிலையத்தில் உள்ள இந்தப் ப…

  19. 19ஆவது திருத்தத்துக்கு ஆதரவளித்தது பிழை என்று இப்போது உணர்கின்றோம் மகிந்த அணி உறுப்பினரின் ஆதங்கம் இது மகிந்த ராஜ­பக்ச மூன்­றா­வது தட­வை­யும் அரச தலை­வர் தேர்­த­லில் போட்­டி­யிட முடி­யா­த­வாறு இந்த அர­சால் கொண்டு வரப்­பட்ட 19ஆவது திருத்­தச் சட்­டத்­துக்கு ஆத­ர­வ­ளித்­த­தன் மூலம் நாம் மகிந்­த­வுக்கு எதி­ராக மிகப் பெரிய பிழை­யைச் செய்­து­விட்­டோம். இவ்­வாறு மகிந்த அணி நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் ஜானக வகும்­புர தெரி­வித்­துள்­ளார். இது தொடர்­பில் அவர் மேலும் தெரி­வித்­த­தா­வது: மக்­க­ளின் ஜன­நா­யக உரி­மை­யைப் பெற்­றுக் கொடுப்­ப­தற்­காக உள்­ளூ­ராட்­சித் தேர்­தலை நடத்­து­மாறு கோரி நாம் நீதி­மன்­றம் சென்­றோம். உள்­ளூ­ராட்சி சபைத் தேர்­த­லி…

  20. கடந்த ஆகஸ்ட் மாதம் இடம்பெற்ற 5 ஆம் தர புலமைப்பரிசில் பரீட்சையின் பெறுபேறுகள் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 5 ஆம் திகதி வெளியிடுவதற்கு பரீட்சைகள் திணைக்களத்தால் அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. அறிக்கையொன்றை வெளியிட்டு அந்த அமைச்சு இதனைக் குறிப்பிட்டுள்ளது. இம்முறை 5 ஆம் தர புலமைப்பரிசல் பரீட்சையில் 3 லட்சத்து 56 ஆயிரம் பரீட்சாத்திகள் அளவில் தோற்றியிருந்தனர். இதேவேளை, கல்வி பொதுத் தராதர உயர் தர பரீட்சையின் பெறுபேறுகள் டிசம்பர் 27 ஆம் திகதி வெளியிடப்பட்டுள்ளது. கல்வி அமைச்சு ஏற்கனவே 5 ஆம் தர புலமைப்பரிசில் பரீட்சை, உயர் தர பரீட்சை மற்றும் சாதாரண தர பரீட்சையினதும் பெறுபேறுகளை வெளியிடும் திகதிகளை திட்டமிட்டிருந்தமை குறிப்ப…

  21. சி.வி.விக்னேஸ்வரனிற்கு சத்திரசிகிச்சை யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட வட மாகாண முதலமைச்சருக்கு இன்று சத்திர சிகிச்சை நடைபெற்றுள்ளதாக யாழ் போதன வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. வட மாகாண முதலமைச்சரின் உடலில் முக்கிய இடத்தில் ஏற்பட்டுள்ள கட்டியை அகற்றுவதக்கு சத்திர சிகிச்சை நடைபெற்று தற்போது இருதய சிகிச்சை விடுதியில் தங்கவைக்கப்பட்டுள்ளார். சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட வடக்கு முதலமைச்சர் விடுமுறை கோரியபோதும், யாழ்ப்பாணத்தில் தங்கி இருக்கின்ற காரணத்தினால் இதுவரை பதில் முதலமைச்சராக எவரையும் நியமனம் செய்யவில்லை என அறியமுடிகிறது. https://news.ibctamil.com/ta/internal-affairs/North…

  22. சபா­நா­ய­க­ருக்கு எண்­க­ணி­தம் தெரி­யா­தாம் மகிந்த அணி­யின் கண்­டு­பி­டிப்பு இது Share நாடா­ளு­மன்ற விதி­மு­றை­க­ளின் அடிப்­ப­டை­யில் நாம் குறிப்­பி­டும் விட­யங்­களை சபா­நா­யர் ஏற்­றுக்­கொள்­வ­தில்லை. அவ­ருக்கு எண் கணி­த­மும் தெரி­யாது. அது பார­தூ­ர­மான விட­ய­மா­கும். இவ்­வாறு மகிந்த அணி­யின் நாடா­ளு­மன்­றக் குழுத் தலை­வ­ரும் நாடா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான தினேஸ் குண­வர்­தன தெரி­வித்­துள்­ளார். மகிந்த அணி­யின் மக்­கள் சந்­திப்பு கிரி­பத்­கொ­ட ­வில் நேற்று நடை­பெற்­றது. இங்கு கருத்­துத் தெரி­விக்­கை­யி­லேயே அவர் மேற்­கண்­ட­வாறு கூறி­னார். அவர் ம…

  23. மக்கள் குடியிருப்புகளுக்கு மத்தியில் மயானங்கள் தேச உருவாக்கமானது பல்வேறு அடையாளங்களைக் கொண்ட மக்கள் கூட்டின் பரிமாணங்களை தன்னகத்தே கொண்டு தான் வளர்ச்சி பெறுகிறது. ஒரு தேசத்தின் அங்கமாக இருக்கும் வெவ்வேறு மக்கள் திரளின் தனித்துவங்களும் அவர்களது அடையாளங்களும் அவர்கள் சார்ந்த தேசத்திற்குட் பட்டதாக மட்டுமே எப்போதும் பார்க்கப் படவேண்டுமென்ற ஒற்றைப் பரிமாணப் பார்வையானது அடிப்படையில் அந்த மக்களின் உரிமையை மறுக்கும் சிந்தனையே; ஒரு தேசத்தின் பன்முகத் தன்மையை மறுக்கும் இறுக்கமான போக்காகவே பார்க்கப் பட வேண்டும். தமிழ் தேசத்தின் அக முரண்பாடுகளைப் பற்றிப் பேசுவது அல்லது ஒடுக்கப் பட்ட மக்கள் தமது உரிமைப் போராட்டங்களை முன்னெடுப்பது தமிழ் தேசத்தை பலவீனப் படுத்தும் செயலாக பொதுப…

  24. நேற்று காலை இடம்பெற்ற குறித்த தாக்குதலில் சிற்றப்பனால் துன்புறுத்தப்பட்ட சிறுவன் தற்போது யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றார். இவ்வாறு தாக்குதலுக்குள்ளன சிறுவன் 7 வயதுடையவராவார்.தவறு ஒன்று செய்ததாக கூறி சிறுவனை தாயின் இரண்டாவது கணவன் என கூறப்படும் நபரால் கடுமையாக தாக்கப்பட்டுள்ளார். இதன் போது சிறுவனின் தாயாரும் இதனைத் தடுக்காது வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்ததாக விசாரணையில் தெரிய வந்துள்ளது. இதனை தொடர்ந்து சிறுவனின் தாயாரும் சிற்றப்பனும் பருத்தித்துறை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர் முழு விபரம்: http://www.akuranatoday.com/news/?p=162462 .

  25. ஆணின் சடலம் மீட்பு : கொலையா? தற்கொலையா? மன்னார் - யாழ்ப்பாணம் பிரதான வீதி தள்ளாடி இராணுவ முகாமில் இருந்து சுமார் நூறு மீட்டர் தூரத்தில் உள்ள காட்டுப்பகுதியில் இருந்து நேற்று மாலை எரிந்த நிலையில் ஒரு ஆணின் சடலத்தை பொலிஸார் மீட்டுள்ளனர். சடலமாக மீட்கப்பட்டவர் மன்னார், தாழ்வுமடு கிராமத்தைச் சேர்ந்த 54 வயதுடைய ஒரு பிள்ளையின் தந்தையான அந்தோனி தாஸ் குரூஸ் என உறவினர்களால் அடையாளம் காட்டப்பட்டுள்ளார். தள்ளாடி இராணுவ முகாமிலிருந்து சுமார் நூறு மீட்டர் தொலைவில் உள்ள காட்டு பகுதியில் அடையாளம் தெரியாத நிலையில் சடலம் ஒன்று காணப்படுவதாக கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு சென்ற மன்னார் பொலிஸார் குறித்த சடலத்தை மீட்டு…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.