ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143340 topics in this forum
-
புத்தர் சிலையை எல்லைக் கல்லாக்கி காணி அபகரிப்பதை ஏற்க முடியாது ஹக்கீமுக்கு இப்போதுதான் சுடலை ஞானம் பிறக்கிறது மாணிக்கமடு ஒதுக்குப்புறமாகவுள்ள தமிழ்ப் பிரதேசம் என்று தமிழர்கள் இதனை உதாசீனம் செய்யமுடியாது. இது எல்லா சிறுபான்மை மக்களின் பிரச்சினை. இதன் பின்னாலிருப்பது ஆக்கிரமிப்பு என்பது தெளிவான விடயம். எல்லைக் கற்களாகப் புத்தர் சிலை வைக்கின்ற அட்டூழியத்துக்கு முடிவுகட்ட வேண்டும். இவ்வாறு சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார். அம்பாறை மத்தியமுகாம் விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும்போது, ஹக்கீம் …
-
- 0 replies
- 210 views
-
-
நாளை ஜெனீவா கூட்டத்தொடர் : இலங்கைக்கு நெருக்கடியாகுமா.? பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவின் போர்க் குற்ற ஆதார விவகாரத்தை ஐ. நா. மனித உரிமைகள் பேரவையின் கவனத்திற்கு கொண்டு வரும் நடவடிக்கையில் அனைத்துலக மனித உரிமைகள் அமைப்புகள் தீவிரமாக செயற்பட்டு வருகின்றன. எனவே நாளை ஆரம்பிக்கப்பட உள்ள மனித உரிமைப் பேரவையின் 36 ஆவது கூட்டத் தொடரில் இலங்கை பாரிய நெருக்கடிகளை எதிர்கொள்ளும் நிலை உருவாகியுள்ளது. இதனால் அனைத்துலக குற்றவியல் விசாரணைப் பொறிமுறைக்குள் இலங்கையை உள்வாங்குவதற்கான அழுத்தங்களும் வலியுறுத்தல்களும் ஏற்படலாம் என எதிர்வு கூறப்படுகின்றது. ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் 36 ஆவ…
-
- 0 replies
- 230 views
-
-
கூட்டு எதிர்க்கட்சி தாமரைமொட்டு சின்னத்தில் போட்டியிட தீர்மானம் கூட்டு எதிர்க்கட்சி எதிர்வரும் உள்ளூராட்சி மன் றத் தேர்தலில் தாமரை மொட்டு சின்னத்தைக் கொண்ட ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியூடாகப் போட்டியிடுவதற்கு தீர்மானித்துள்ளது. முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜ பக் ஷ உள்ளிட்ட கூட்டு எதிர்க்கட்சியில் அங்கம் வகிக்கும் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கிடையிலான சந்திப்பு கடந்த வியாழக்கிழமை பாராளுமன்ற கட்டிடத் தொகுதியில் நடைபெற்றது. அதன்போதே குறித்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. இதேவேளை உள்ளூராட்சி மன்றத் தேர்தலை இலக்காகக் கொண்டு கூட்டு எதிர்க்கட்சி ஏற்கனவே பல்வேறு வேலைத்திட்டங்களை மேற்கொண்டு வருக…
-
- 0 replies
- 152 views
-
-
இரணைதீவிலுள்ள 189 ஏக்கர் காணி நாளை மறுதினம் அளக்கப்படும் இரணைத்தீவில் கடற்படையால் சுவீகரிக்கப்பட்ட மக்களுடைய காணிகளில் 189 ஏக்கர் காணியை அளந்து மிகவிரைவில் மக்களிடம் கையளிப்பதற்கு கடற்படை நடவடிக்கை எடுத்துவருவதாக தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறிதரன் வீரகேசரி வாரவெளியீட்டுக்குத் தெரிவித்தார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், இரணைதீவு மக்கள் கடற்படையால் அபகரிக்கப்பட்ட தமது சொந்தக் காணிகளில் குடியேறவேண்டும் என தொடர்ச்சியாக கோரிவருகின்றனர். அதற்கமைவாக அண்மையில் முழங்காவில் கடற்படை முகாமில் பாதுகாப்பு இர…
-
- 0 replies
- 278 views
-
-
முழு அரசாங்கத்துக்கும் எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை ஒவ்வொரு அமைச்சர்கள் மீதும் தனித்தனியாக நம்பிக்கையில்லாப் பிரேரணைகளை சமர்ப்பிப்பதற்குப் பதிலாக ஒட்டுமொத்த அரசாங்கத்திற்கும் எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை ஒன்றை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்க ஒன்றிணைந்த எதிர்க்கட்சி தயாராகி வருவதாக ஒன்றிணைந்த எதிர்க்கட்சியின் தேசிய அமைப்பாளரும் இரத்தினபுரி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான ரஞ்சித் டிசொய்சா வீரகேசரி வாரவெளியீட்டுக்கு நேற்று தெரிவித்தார். இந்த நல்லாட்சி அரசாங்கம் மகாநாயக்கர்களுக்கும் இராணுவத்தினருக்கும் எதிராகவே செயற்பட்டு வருகின்றது. ஆகவே, ஒவ்வொரு அமைச்சர்களுக்கு…
-
- 0 replies
- 337 views
-
-
வடமாகாண சபைக்கு ரூபா 10,310 மில்லியன் தேவை அடுத்த ஆண்டு அபிவிருத்திகளை முன்னெடுப்பதற்கு வட மாகாணத் துக்கு 10 ஆயிரத்து 310 மில்லியன் ரூபா தேவை என்றும், அந்த நிதியை வழங்குமாறும் கொழும்பு அரசிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கொழும்பு அரசின் நிதி அமைச்சால் எதிர்வரும் நவம்பர் மாதம் 9ஆம் திகதி வரவு – செலவுத் திட்டம் சமர்ப்பிக்கப்படவுள்ளது. அதற்கு முன்னதாக ஒவ்வொரு மாகாண சபைகளும் அடுத்த ஆண்டுக்கு எவ்வளவு நிதி தேவை என்ற கோரிக்கையை கொழும்பு அரசுக்கு முன்வைக்க வேண்டும். அதனடிப்படையில் வடக்கு மாகாண சபை 10 ஆயிரத்து 310 மில்லியன் ரூபாவை கோரிக்கையாக முன்வைத்துள்ளது. கடந்த ஆண்டு 10 ஆயிரத்து 2…
-
- 0 replies
- 417 views
-
-
லலித்துக்கு தண்டனை மகிந்தவுக்கு வியப்பு எனது முன்னைய செயலர் லலித் வீரதுங்கவுக்கு வழங்கப் பட்டுள்ள தண்டனை குறித்து நான் வியப்படைந்துள்ளேன். அரச அதிகாரிகள் எப்படி 7 மில்லியன் ரூபாவைச் செலுத்த முடியும். இவ்வாறு முன்னாள் அரச தலைவர் மகிந்த ராஜபக்ச கேள்வி எழுப்பியுள்ளார். கண்டி தலதா மாளிகையில் நேற்றுக் காலை முன்னாள் அரச தலைவர் வழி பாடுகளில் ஈடுபட்டார். இதன் பின்னர் ஊடகங்களிடம் அவர் தெரிவித்ததாவது: நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட உள்ளூராட்சி மன்ற தேர்தல் சட்டவரைவு தொடர்பில் அரச தலைவருடன் நாம் பேசவுள்ளோம். அரச அதிகாரிகளுக்கு உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிடு…
-
- 2 replies
- 441 views
-
-
மஹிந்தவை இணைத்துக்கொள்ள மைத்திரி முயற்சி முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட குழுவினரை மீண்டும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியுடன் இணைத்துகொள்வதற்கு கலந்துரையாடலொன்றை முன்னெடுக்க ஜனாதிபதி தலையைல் 3 அமைச்சர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இதற்கமைய, அமைச்சர்களான ஜோன் செனவிரத்ன, அநுர யாப்பா மற்றும் சுசில் பிரேமஜயந்த ஆகியோரே, நியமிக்கப்பட்டுள்ளனர். இதன்படி, நாடாளுமன்ற வளாகத்தில் எதிர்வரும் நாட்களில் இந்த கலந்துரையாடல் இடம்பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. http://www.tamilmirror.lk/பிரசித்த-செய்தி/மஹிந்தவை-இணைத்துக்கொள்ள-மைத்திரி-முயற்சி/150-203449
-
- 2 replies
- 350 views
-
-
28 பில்லியன் ரூபாவிற்கு மேல் நட்டமடையும் ஸ்ரீ லங்கன் விமான சேவையில் அதிக சம்பளம் பெறும் 4 அதிகாரிகள் 2016 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாத இறுதியில் எமது நாட்டிற்கு 9,402 பில்லியன் ரூபா கடன் சுமை இருந்தது. நாளுக்கு நாள் இந்த கடன் சுமை அதிகரித்து வருவதுடன் நாட்டு மக்களான, நாமே இதனை மீளச் செலுத்த நேரிடுகிறது. அதிக சம்பளம் பெறுகின்ற ஒரு சிலரின் அசமந்த நிர்வாகத்தினால் தொடர்ச்சியாக நட்டமடையும் நிறுவனமான ஸ்ரீ லங்கன் விமான சேவையும் கடன் சுமை அதிகரிக்க காரணமாக அமைகின்றது. நாடு மற்றும் நிறுவனத்திற்காக அர்ப்பணிப்புடன் சேவையாற்றும் அநேகமான ஊழியர்கள் இது குறித்து அதிருப்தி அடைந்துள்ளனர். ஸ்ரீ லங்கன் விமான நிறுவனத்தின…
-
- 0 replies
- 372 views
-
-
சக்தி டிவி செய்திகள் 09 09 2017 , 8PM
-
- 0 replies
- 390 views
-
-
கிளிநொச்சி வாள்வெட்டில் ஒருவர் காயம் : மோட்டார் சைக்கிள் தீக்கிரை கிளிநொச்சி பாரதிபுரம் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட வாள் வெட்டுச் சம்பவத்தில் ஒருவர் வாள் வெட்டுக்கு இலக்காகியதுடன் அவர் பயணித்த மோட்டார் சைக்கிளும் எரிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். குறித்த சம்பவம் இன்று மாலை 5.30 மணிக்கு இடம்பெற்றுள்ளது. கிளிநொச்சி முல்லைத்தீவு பிரதி பொலிஸ்மா அதிபர் அலுவலகத்திற்கு அருகில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. வாள் வெட்டுக்குள்ளானவர் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கிளிநொச்சி பொலிஸார் மேதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். http://www.virakesari.lk/article/24209
-
- 0 replies
- 328 views
-
-
சுகாதாரத்தை கேள்விக்குறியாக்கியுள்ள உன்னிச்சை குடிநீர் : மட்டக்களப்பு மக்கள் அச்சம் மட்டக்களப்பு மாவட்டத்தின் உன்னிச்சை குளம் அமைந்துள்ள பகுதியில் கடந்த சில தினங்களாக கால்நடைகள் திடீரென உயிரிழக்கும் சம்பவங்கள் அதிகளவில் பதிவாகியுள்ளன. இதேவேளை, உன்னிச்சைக்குளத்தினுள்ளும் அதனுடன் தொடர்புடைய நீர் நிலைகளினுள்ளும் இவ்வாறாக கால்நடைகள் உயிரிழப்பதால் சுகாதார சீர்கேடுகள் ஏற்படும் வாய்ப்புள்ளதாக பொதுமக்கள் அச்சம் தெரிவித்துள்ளனர். உன்னிச்சைக்குளத்திலிருந்தே மட்டக்களப்பு மாவட்டத்திற்கான குடி நீர் பெறப்பட்டு வருகின்றது. மட்டக்களப்பு மாவட்டத்தின் குடிநீர்த் தேவை உன்னிச்சைக்குளத்தின் மூலமே பூர்த்தி செய்யப்படுகின்ற நிலையில் குள…
-
- 1 reply
- 448 views
-
-
குப்பைக் காடாக காட்சியளிக்கும் மட்டக்களப்பு நகர் மட்டக்களப்பு, திருப்பெருந்துறை குப்பை மேடு தீ அனர்த்தத்தையடுத்து அங்கு குப்பை கொட்டுவதற்கு நீதிமன்றம் தடை உத்தரவை பிறப்பித்துள்ளதையடுத்து மாநகரசபை குப்பைகளை சேகரிப்பதை தற்காலிகமாக இடை நிறுத்தியுள்ள நிலையில் மட்டக்களப்பின் பல வீதிகள் குப்பை நிறைந்து காணப்படுவதாக மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர். இதன் காரணமாக மக்கள் குப்பைகள் அனைத்தையும் வீதியோரம் வீசியுள்ளதால் தற்போது துர்நாற்றம் வீசுகின்ற நிலை உருவாகியுள்ளது. தற்போது காலநிலையும் சற்று மாற்றமடைந்துள்ளதால் மழையில் நனையும் கழிவுகளும் சுகாதாரத்துக்கு பாரிய சவாலாக அமைந்துள்ளது. கடந்த இரண்டு வாரங்களுக்கு முன் இந்த சம்பவம் தொடர்பாக கிழக்கு மாக…
-
- 3 replies
- 549 views
-
-
கடமை தவறக்கூடாது தமிழ்க் கூட்டமைப்பு புதிய அரசமைப்புக்கான இடைக்கால அறிக்கை தயாராகிவிட்டது. இந்த மாதம் 21ஆம் திகதி அது நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்படலாம் என்கிற உறுதியான எதிர்பார்ப்பும் உள்ளது. அதன் மீது விவாதம் நடத்தப்பட்டு இறுதி செய்யப்பட்டு விட்டால், புதிய அரசமைப்புத் தொடர்பான இறுதி வரைவு தயாராகிவிடும். அதாவது தமிழர் தரப்பும் இணைந்து தயாரிக்கும் இலங்கையின் முதலாவது அரசமைப்புத் தயாராகிவிடும். இந்த நிலையில் அந்த அரசமைப்பு தமிழ் மக்களின் எதிர்பார்ப்பை, வேணவாவை, கடந்த…
-
- 1 reply
- 413 views
-
-
கூட்டமைப்பைச் சேர்ந்த ஒருவர் முதலமைச்சராக நியமிக்கப்பட வேண்டும் கிழக்கு மாகாணசபையில் ஆயுட்காலம் நீடிக்கப்படுமாயின் தமிழ்த் தேசிய கூட்டமைப்பைச் சேர்ந்த ஒருவர் முதலமைச்சராக நியமிக்கப்பட வேண்டும் என அந்த கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சதாசிவம் வியாழேந்திரன் வலியுறுத்தினார். இந்த நடவடிக்கையை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் நல்லிணக்க அடிப்படையில் செயற்படுத்த வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார். மட்டக்களப்பு - ஏறாவூர் ஐந்தாம் குறிச்சி ஸ்ரீ மகா பெரியதம்பிரான் ஆலய மூலஸ்தானத்துக்கான அடிக்கல் நடும் நிகழ்வு நேற்று நடைபெற்றது. இந்த நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே நாடாளுமன்ற உறுப்பினர் சதாசிவம் வியாழே…
-
- 0 replies
- 501 views
-
-
சிறைச்சாலை வைத்தியசாலையை உபயோகிப்பதற்கு கைதிகளுக்கு புதிய விதிமுறை சிறைக்கைதி ஒருவர் தனது நோயின் காரணமாக சிறைச்சாலை மருத்துவமனையில் தங்கியிருந்து சிகிச்சை பெற வேண்டிய தேவை ஏற்பட்டால், அம்மருத்துவமனை மருத்துவர்கள் மூவரின் பரிந்துரை பெறப்பட வேண்டும் என சிறைச்சாலை மறு சீரமைப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. இந்த உத்தரவு சிறைச்சாலை ஆணையாளர் நாயகத்துக்கு அனுப்பப்பட்டுள்ளது. மருத்துவர்களின் பரிந்துரைகள் முழுவதும் அமைச்சுக்கு அனுப்பப்படவேண்டும். அப்பரிந்துரைகள் தொடர்பாக அமைச்சு மட்டத்திலான விசாரணைகள் நடைபெறும் என சிறைச்சாலைகள் மறு சீரமைப்பு அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது. இதுவரை சிறைக்கதி ஒருவர் சிறை மருத்துவமனையில் சேர ஒரு மருத்துவரி…
-
- 1 reply
- 484 views
-
-
முன்னாள் போராளிகளால் மாவீரர் துயிலும் இல்லம் சிரமதானம் அம்பாறை, திருக்கோவில் பிரதேசத்தில் கஞ்சிகுடிச்சாறு பிரதேசத்தில் அமைந்துள்ள மாவீரர்களின் துயிலும் இல்லம், ஜனநாயகப் போராளிகள் கட்சியின் ஏற்பாட்டில் முன்னாள் போராளிகளால் இன்று (09 சிரமதானப் பணிகள் முன்னெடுக்கப்பட்டன. மட்டு./அம்பாறை மாவட்டங்களைச் சேர்ந்த ஜனநாயகப் போராளிகள் கட்சியின் இணைப்பாளர்களான கே.பிரபாகரன் மற்றும் எஸ்.சுதாகரன் ஆகியோரின் தலைமையில் இச்சிரமதானப் பணிகள் முன்னெடுக்கப்பட்டதுடன், முன்னாள் போராளிகளும் கலந்துகொண்டிருந்தனர். இதன்போது கருத்துத் தெரிவித்த அம்பாறை மாவட்ட ஜனநாயகக் கட்சியின் இணைப்பாளர் எஸ்.சுதாகரன், “கடந்த 1993…
-
- 0 replies
- 402 views
-
-
வடக்கிலுள்ள இந்துக்களின் மத வழிபாட்டு தலங்களை புத்தர் சிலைகளின் மூலம் ஆக்கிரமிக்கும் இரா ணுவத்தின் செயற்பாடுகள் தொடர்ந்து இடம்பெற்று வருகின்றன. வவுனியா மூளாய்மடு, பேயாடி கூழாங்குளம் மற்றும் தாண்டிக்குளம் ஆகிய பகுதிகளில் உள்ள ஆலயங்களின் வளாகத்திற்குள் புத்தர் சிலைகளை அமைத்து வரும் இராணுவம் அதனை தொடர்ந்தும் பராமரித்து வருகின்றது. வவுனியா மூனாய்மடு பேயாடி கூழாங்குளம் பகுதியிலுள்ள நாகபூ சணி அம்மன் ஆலய வளாகத்திற்குள் பெரியதொரு புத்தர் சிலையை 56 டிவிசன் படைமுகாமை சேர்ந்த இராணுவம் அமைத்துள்ளது. இவ்வாறு அமைக்கப்பட்ட புத்தர் சிலையானது நாகபூசணி அம்மன் ஆலயத்தை விட உயரமான நிலம் எழுப்பி பெரிதாக அமைக்கப்பட்டுள்ளதால் மழை காலங்களில் இந்து ஆலயத்திற்குள் வெ…
-
- 0 replies
- 537 views
-
-
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு பின்புறம் அமைந்துள்ள கடைகளை, யாழ்ப்பாண பல்கலைக்கழக நிர்வாகத்தினர் இன்று உடைக்கும் போது குழப்பம் ஏற்பட்டது
-
- 10 replies
- 623 views
-
-
இந்திய அனுசரணையின்றி தீர்வு சாத்தியமாகாது இந்தியாவின் அனுசரணையின்றி தமிழர்களின் பிரச்சினைக்கு என்றுமே தீர்வு கிடைக்காது. மத்தியில் ஆட்சியிலிருக்கும் பாரதீய ஜனதா கட்சி தமிழர் விடயத்தில் கொண்டிக்கும் கரிசனையைப் பயன்படுத்தி அரசாங்கத்திற்கு உரிய வலியுறுத்தலை செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என முன்னாள் எதிர்க்கட்சித்தலைவர் அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கத்தின் இளைய புதல்வரான வைத்திய கலாநிதி பகீரதன் தெரிவித்தார். கேசரிக்கு வழங்கிய பிரத்தியேக செவ்வியிலேயே இவ்வாறு தெரிவித்த அவர், விடுதலைப்புலிகள் போரியல் முறைமையை மாற்றியமையும், இந்தியாவின் அனுசர ணையை இழந்தமையுமே தோல்விக்…
-
- 0 replies
- 464 views
-
-
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் இரா.சம்பந்தன் அண்மையில் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண கரங்கோர்க்குமாறு மகிந்த ராஜபக்ஷவுக்கு பகிரங்கமாக அழைப்பு விடுத்திருந்தார். அதன்பின்னர் ராஜபக்ஷவை சந்தித்துமிருந்தார். ராஜபக்ஷவினால் மட்டுமே சமாதானத்தை நாட்டில் ஏற்படுத்த முடியுமெனவும் அதேபோன்று ராஜபக்ஷவால் மாத்திரமே சமூகங்களை ஒருநாள் ஐக்கியப்படுத்தக் கூடியதாக இருக்குமெனவும் தெரிவித்திருந்தார் என்று முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் இளைய சகோதரரும் முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சருமான பசில் ராஜபக்ஷ தெரிவித்திருக்கிறார். பூமொட்டு சின்னத்தைக் கொண்டுள்ள இலங்கை பொதுஜன முன்னணியின் முக்கியஸ்தர்களில் ஒருவராக விளங்கும் பசில் ராஜபக்ஷ எந்தவொரு சூழ்நிலையிலும் எதிர்காலத் தேர்தல…
-
- 0 replies
- 314 views
-
-
செங்கலடியில் பாரிய ஆர்ப்பாட்டம் பேரின்பராஜா சபேஷ், வா.கிருஸ்ணா மட்டக்களப்பு, செங்கலடி பிரதேச செயலகப் பரிவிலுள்ள ஏறாவூர் நன்காம் குறிச்சி, ஐந்தாம் குறிச்சி மற்றும் எல்லை நகர் கிராமங்களை, ஏறாவூர் நகர் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவின் கீழ் இணைப்பதற்கு மேற்கொள்ளப்படும் முயற்சிகளைக் கண்டித்து, செங்கலடியில் இன்று (09) பாரிய ஆர்ப்பாட்டப் பேரணி நடைபெற்றது. ஏறாவூர் நன்காம் குறிச்சி, ஐந்தாம் குறிச்சி மற்றும் எல்லை நகர் கிராம அபிவிருத்திச் சங்கங்களின் ஏற்பாட்டில், ஏறாவூர் ஐந்தாம் குறிச்சியிலிருந்து மட்டக்களப்பு – திருமலை பிரதான வீதியூடாக பேரணியாக வந்த பொதுமக்கள், செங்கலடி சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம் முன்…
-
- 0 replies
- 410 views
-
-
நல்லூர்த் திருவிழாவில் யாழ். மாநகர சபைக்கு ரூபா 2 கோடி வருமானம் கடந்த வருடத்தையும்விட இம்முறை அதிகரிப்பு நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்தத் திருவிழாவில் இம்முறை யாழ்ப்பாணம் மாநகர சபைக்கு 2 கோடியே 5 லட்சம் ரூபா வருமானமாகக் கிடைத்துள்ளதாக அதன் ஆணையாளர் பொ.வாகீசன் அறிவித்தார். இதுதொடர்பில் அவர் அனுப்பிய செய்திக்குறிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: 2017ஆம் ஆண்டு நல்லூர் திருவிழாவின் போது கடைகள், விளம்பரப் பதாகை, சித்த மருந்து விற்பனை, சஞ்சிகை விற்பனை, சேதன உர விற்பனை மற்றும் நன்கொடை மூலம் யாழ்ப்பாணம் மாநகர சபைக்குக் கிடைக்கப்பெற்ற மொத்த வருமானம் வரிகள் உள்ளடங்கலாக 2 கோடி…
-
- 1 reply
- 373 views
-
-
ஜெகத்தை விரைவில் சந்திப்பார் மைத்திரி அவருக்கெதிரான போர்க்குற்ற விசாரணை வழக்கு குறித்து ஆராய பிரேசில் நாட்டில் போர்க்குற்ற விசாரணையை எதிர்கொண்டுள்ள முன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் ஜெகத் ஜயசூரியவை விரைவில் சந்தித்துப் பேச உள்ளார் அரச தலைவர் மைத்திரிபால சிறிசேன. அதற்கு முன்னதாக இருவரும் நேற்றுமுன்தினம் இரவு அலைபேசிமூலம் உரையாடினர். தான் எதிர்கொண்டுள்ள பிரச்சினைகளை, சவால்களை நேரில் எடுத்துரைப்பதற்கு தனக்கு வாய்ப்பு வழங்குமாறுஜென ரல் ஜெகத் ஜயசூரிய அரச தலைவரிடம் அப்போது கோரிக்கை விடுத்தார். அதனை மைத்திரிபால சிறிசேன ஏற்றுக்கொண்டார். எனி…
-
- 0 replies
- 417 views
-
-
டெனீஸ் தாக்கல் செய்த வழக்கு மீது 19ஆம் திகதியே விசாரணை வடக்கு மாகாண முதலமைச்சர் உள்ளிட்ட வடக்கு அமைச்சரவைக்கு எதிராக, முன்னாள் அமைச்சர் பா.டெனீஸ்வரன் மேன்முறையீட்டு நீதிமன்றில் தாக்கல் செய்த வழக்கு எதிர்வரும் 19ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது. வடக்கு மாகாண அமைச்சரவையிலிருந்து பா.டெனீஸ்வரனை முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் நீக்கியிருந்தார். அமைச்சரை நீக்குவதற்கான அதிகாரம் முதலமைச்சருக்கு இல்லை எனத் தெரிவித்து முதலமைச்சருக்கு எதிராக, மேன்முறையீட்டு நீதிமன்றில் முன்னாள் அமைச்சர் பா.டெனீஸ்வரன் கடந்த மாதம் 30ஆம் திகதி வழக்குத் தாக்கல் செய்திருந்தார். இந…
-
- 0 replies
- 190 views
-