ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143356 topics in this forum
-
சக்தி டிவி செய்திகள் 14 08 2017 , 8PM
-
- 0 replies
- 305 views
-
-
“புலிகளாக இருந்தால் அவர்களை இனம் கண்டு நீங்கள் படுகொலை செய்யுங்கள் நாங்கள் கேட்க வரமாட்டோம்.” ஆனால் எங்களுடைய அப்பாவி பொது மக்களை படுகொலை செய்திருக்கின்றீர்கள் – விஜயகலா மகேஸ்வரன்:- குளோபல் தமிழ்ச் செய்தியாளர்:- தமிழீழ விடுதலைப்புலிகளாக இருந்தால் அவர்களை இனம் கண்டு நீங்கள் படுகொலை செய்யுங்கள் நாங்கள் கேட்க வரமாட்டோம். ஆனால் எங்களுடைய அப்பாவி பொது மக்களை படுகொலை செய்திருக்கின்றீர்கள் என சிறுவா் பெண்கள் விவகார இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்துள்ளார். இன்று சனிக்கிழமை கிளிநொச்சி கரைச்சி பிரதேச செயலகத்தில் இடம்பெற்ற நில மெஹர ஜனாதிபதி நடமாடும் சேவை நிகழ்வில் கலந்த…
-
- 16 replies
- 953 views
-
-
செஞ்சோலை படுகொலையின் 11ம் ஆண்டு நினைவு நிகழ்வுகள் செஞ்சோலை படுகொலையின் 11 ஆம் ஆண்டு நினைவஞ்சலி நிகழ்வுகள் மட்டக்களப்பு கோப் சென்டர் மண்டபத்தில் உணர்வெழுச்சியுடன் ஆரம்பமாகி நடைபெற்று வருகின்றது. தமிழ் தேசிய மக்கள் முன்னணி மற்றும் அகில இலங்கை தமிழ் காங்கிரஸின் ஏற்பாட்டில் இன்று காலை 11 மணியளவில் தீபம் ஏற்றி ஆரம்பிக்கப்பட்டது. வள்ளிபுனம் பகுதியில் அமைந்திருந்த செஞ்சோலை சிறுவர் இல்லத்தின் மீது 2006 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 14 ஆம் திகதி காலை 7 மணியளவில் மேற்கொள்ளப்பட்ட வான் தாக்குதலில் பாடசாலை மாணவர்கள் உள்ளிட்ட 61 பேர் உயிரிழந்ததுடன் 150 க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். குறித்த படுகொலைக்கு நீதிகோரியும், உயிரிழந்த மழலை…
-
- 15 replies
- 2.1k views
-
-
பேரனை தீண்டிய நாகத்தை வைத்தியசாலைக்கு கொண்டுசென்ற தாத்தா : நாவலப்பிட்டியில் சம்பவம் மூன்று வயது பேரனை தீண்டிய தாக நாகபாம்பை கம்பியொன்றில் சுருக்கு வைத்து பிடித்துக்கொண்டு அதனை முதியவர் ஒருவர் வைத்தியசாலை க்கு கொண்டு சென்றுள்ளார். கலவரத்துடன் காணப்பட்ட முதியவர் குறித்த பாம்பினை மக்கள் கூடி நின்ற இடத்திற்கு தூக்கிக்கொண்டு ஓடியதால் வைத்தியசாலையில் நின்றி ருந்த நோயாளர்கள் ஓட்டமெடுத்த சம்பவமொன்று நாவலப்பிட்டி லக்சபான பகுதியில் இடம்பெற்றுள்ளது. இச்சம்பவம் குறித்து மேலும் தெரிய வருவதாவது, நேற்று காலை பெற்றோர் வேலை க்குச் சென்றிருந்த நிலையில் குறித்த சிறுவன் தனது தாத்தா – பாட்டியின் ப…
-
- 1 reply
- 318 views
-
-
வடக்குப் பிரச்சினைகளை ஐ.நா.விடம் எடுத்துரைத்தார் முதல்வர் வடக்கில் இன்னும் ஒரு இலட்சத்து 50 ஆயிரம் இராணுவத்தினர் நிலைகொண்டுள்ளதாகவும் மக்களுடைய பயிர்நிலங்களையும் அலுவலக கட்டடங்களையும் இயற்கை வளங்களையும் அவர்கள் உபயோகித்து வருவதாகவும் வட மாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். ஐக்கிய நாடுகளுக்கான வதிவிட இணைப்பாளர் ஊனா மெக்கோலேய் தலைமையிலான குழுவினருடனான சந்திப்பு, கைதடியில் அமைந்துள்ள வட மாகாண முதலமைச்சர் அலுவலகத்தில் இன்று (14) நடைபெற்றது. இதன்போது கருத்து வெளியிடுகையிலேயே முதலமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். அவர் அங்கு மேலும் குறிப்பிடுகையில், வட மாகாணத்தில் நிலைகொண்டுள்ள இராணுவத்தினர் நீர் உள்ளிட்ட இயற்கை வளங்களை பய…
-
- 1 reply
- 238 views
-
-
ரயிலுடன் மோதியது ஓட்டோ – இளம் குடும்பஸ்தர் உயிரிழப்பு!! Share கடுகதி தொடருந்துடன் முச்சக்கர வண்டி மோதி விபத்துக்குள்ளானது. அதில் இளம் குடும்பத் தலைவர் ஒருவர் உயிரிழந்தார். இந்தச் சம்பவம் இன்று மாலை 4.30 மணியளவில் நடந்துள்ளது. தண்டிக்குளம் பிரதான தொடருந்துக் கடவையில் விபத்து நடந்துள்ளது. முச்சக்கர வண்டி ஒரு கிலோமீற்றர் தூரம் வரை இழுபட்டுச் சென்றது என்று அங்கிருந்தவர்கள் கூறுகின்றனர். முச்சக்கர வண்டியின் சாரதி தாண்டிக்குளம் தொடருந்து நிலையத்துக்கு அருகில் உள்ள பாலத்தில் இருந்தில் இருந்து வெளிக் காயங்கள் இ…
-
- 1 reply
- 479 views
-
-
வல்வைப் படுகொலைகள 28 வருட கால தொடரும் வேதனை.... மனைவியைப் பிணமாகத் தேடிய கணவனும்,கணவனை பிணமாகத் தேடிய மனைவியும்..சோகத்தையும் சொத்துகளையும் இழந்த நாட்கள் அவை! -அமைதிப் படையின் அட்டூழியங்கள்!போராட்ட காலத்தில் சில நினைவில் இருந்து அழியாத நினைவுகள்!– 1989ஆம் ஆண்டு ஓகஸ்ட் திங்கள் 2ஆம் நாள் ஊரிக்காடு இந்திய இராணுவ முகாமில் இருந்தும், பொலிகண்டி இராணுவ முகாமில் இருந்தும் வெளியேறிய இந்திய ஆக்கிரமிப்பு இராணுவக்கும்பலுக்குத் தலைமை வசித்தவர்களில் கப்டன் மேனன், கப்டன் கபூர் முக்கியமானவர்களாக இருந்தனர். ஆம்! கப்டன் மேனன் பழிவாங்கும் ஒருகளமாக அன்று வல்வெட்டித்துறையைக் குறிவைத்துச் செயற்பட்டான். அவனுடன் ஊரிக்காடு இராணுவ முகாம் பொறுப்பாளராக இருந்த மேஜர் சுதர…
-
- 5 replies
- 2.4k views
- 1 follower
-
-
”சுய விருப்புடன் பதவி விலக மாட்டேன்” சுய விருப்பத்துடன் ஒருபோதும் பதவி விலகப் போவதில்லை என வட மாகாண மீன்பிடி, போக்குவரத்து அமைச்சர் பா.டெனீஸ்வரன் தெரிவித்துள்ளார். அமைச்சுப் பதவி குறித்த நிலைப்பாட்டை விளக்கும் ஊடகவியலாளர் சந்திப்பு, மன்னாரில் அமைந்துள்ள அமைச்சின் உப அலுவலகத்தில் இன்று (14) இடம்பெற்றது. இதன்போது கருத்து வெளியிடுகையிலேயே அமைச்சர் டெனீஸ்வரன் இவ்வாறு குறிப்பிட்டார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், தமிழீழ விடுதலை இயக்கத்தின் உயர் மட்டக் கூட்டம் கட்நத 12 ஆம் திகதி சனிக்கிழமை வவுனியா அலுவலகத்தில் இடம் பெற்றது. குறித்த கூட்டத்தில் கலந்துகொள்ள எனக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. அங்கு சென்று அவர்கள் கேட்ட விளக்கங்களுக்கு எனது …
-
- 1 reply
- 275 views
-
-
அம்பாறை வீரமுனையில் 400 இற்கும் அதிகமான தமிழ் மக்கள் கொன்று குவிக்கப்பட்டு இன்றுடன் 27 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. இந்த படுகொலையினை நினைவு கூர்ந்து இன்றைய தினம் வீரமுனையில் அமைந்துள்ள நினைவுத்தூபிக்கு முன்னால் அஞ்சலி நிகழ்வுகள் இடம்பெற்றன. குறித்த நிகழ்வினை, முன்னால் கிராம உத்தியோகஸ்த்தர் பொன்னம்பலம் தலைமை தாங்கி நடத்தியுள்ளார். இதன்போது, பிள்ளையார் ஆலயத்திற்கு முன்னால் அமைக்கப்பட்டுள்ள நினைவுத்தூபிக்கு மாலை அணிவிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டவர்களை நினைவு கூர்ந்து சுடர் ஏற்றி ஒரு நிமிட அஞ்சலியுடன் அகவணக்கமும் செலுத்தப்பட்டுள்ளது. மேலும், குறித்த நிகழ்வில், அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன், மட்டக்களப்பு மாவட…
-
- 7 replies
- 669 views
-
-
ரகசியமான முறையில்.. பூநகரியில் சீன நிறுவத்தின் ஆய்வின் கீழ் சீனாவின் முதலீட்டில்.. விமான நிலையம் ஒன்றும்.. அரியாலை கிழக்கில் நன்னீர் நண்டு வளர்ப்பு என்ற பெயரிலும்.. சூரிய சக்தி - மின் காற்றாலைகள்.. நிர்மானிப்பு என்ற பெயரிலும்.. சீன நிறுவனங்கள் வடக்கு நோக்கி ஆக்கிரமிப்பை மேற்கொள்ள ரணில் - மைத்திரி- சந்திரிக்கா.. சம் சும் கும்பல் கூட்டு நாசமறுப்பு அரசாங்கம் வடக்கு மாகாண சபைக்கு தெரியாமல் நகர்வுகளை மேற்கொண்டுள்ள அதிர்ச்சி செய்தி வெளியாகியுள்ளது. ஏலவே தமிழினப் படுகொலையாளன் மகிந்த காலத்தில் கச்சதீவையும் சீனா ஆக்கிரமித்து நின்றமை இங்கு குறிப்பிடத்தக்கது. இதற்கிடையே பூநகரியில்.. ஜப்பான் நிறுவனம் ஒன்று சீமெந்து தொழிற்சாலை ஆரம்பிக்கும் முன்னாய்வில் உள்ளது ஏலவே செய்தியாக …
-
- 2 replies
- 649 views
-
-
நிதி திரும்புமாயின் முழுப் பொறுப்பையும் முதலமைச்சரே ஏற்க வேண்டும் கடந்த சில மாதங்களாக வடமாகாண சபையில் ஏற்பட்டுள்ள அசாதாரண அரசியல் சூழ்நிலையால் வட மாகாணத்திற்கு அபிவிருத்தி திட்டங்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ள நிதி திரும்பிச் செல்கின்ற அபாயம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவ்வாறு நிதி பயன்படுத்தப்படாமல் திரும்புமாயின் அதற்கான முழுப் பொறுப்பையும் முதலமைச்சரே பொறுப்பேற்க வேண்டுமென்று வடமாகாண மீன்பிடி, போக்குவரத்து, கிராம அபிவிருத்தி, வீதி அபிவிருத்தி, வர்த்தக வாணிபம் மற்றும் மோட்டார் போக்குவரத்து அமைச்சர் பா.டெனிஸ்வரன் தெரிவித்துள்ளார். கடந்த காலங்களில் வடமாகாணத்திற்கு ஒதுக்கப்பட்ட நிதியானது ஒதுக்கீடு செய்யப்பட்ட வேலைத் திட்டத்திற்கு பயன்பட…
-
- 2 replies
- 234 views
-
-
எனது விடயத்தில் காட்டிய விரைவை ஏனையவற்றிலும் காண்பிக்க வேண்டும் சட்டமா அதிபர் திணைக்களத்திற்கு ரவி அறிவுரை (க.கமலநாதன்) எனது விடயத்தில் சட்டமா அதிபர் திணைக்களம் காட்டிய விரைவினை ஏனைய விடயங்களிலும் காட்ட வேண்டும் என வலியுறுத்திய முன்னாள் வெளிவிவகார அமைச்சர் ரவி கருணாநாயக்க இவ்வாறான செயற்பாடுகளை செய்ய அழுத்தம் கொடுப்பவர்கள் மறுதாக்கத்தை எதிர்கொள்ள நேரிடலாம் என்றும் சுட்டிக்காட்டியுள்ளார். கண்டி அஸ்கிரிய பீடாதிபதிபதியை நேற்று சந்தித்து ஆசி பெற்றுக்கொண்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே முன்னாள் அமைச்சர் ரவி கருணாநாயக்க மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். …
-
- 1 reply
- 398 views
-
-
வடக்கின் பாதுகாப்|பு நிலமைகள் தொடர்பாக ஆராய வருகிறார் அஸ்கிரிய மகாநாயக்க தேரர்! வடக்கின் பாதுகாப்பு நிலமைகள் தொடர்பாக ஆராய்வதற்கு அஸ்கிரிய மகாநாயக்க தேரர் இரண்டு நாள் பயணமாக யாழ்ப்பாணத்திற்கு பயணம்செய்யவுள்ளார். எதிர்வரும் 28ஆம் நாள் தொடக்கம் 29ஆம் நாள்வரை வடக்கிற்கு பயணம் செய்யவுள்ள அஸ்கிரியபீட மகாநாயக்க தேரர் பாதுகாப்பு நிலமைகள் தொடர்பாக நேரில் ஆராய்வார் என இராணுவத் தளபதி லெப். ஜெனரல் மகேஸ் சேனநாயக்க தெரிவித்துள்ளார். லெப் ஜெனரல் இராணுவத் தளபதியாகப் பொறுப்பேற்ற பின்னர் முதல் தடவையாக அஸ்கிரிய பீட மகாநாயக்க தேரரைச் சந்தித்துக் கலந்துரையாடியிருந்தார். இதன்போது வடக்கின் நிலமைகள் தொடர்பாக ஆராயப்பட்டதுடன், அஸ்கிரிய பீட மகாநாயக்க தேரரை வடக்…
-
- 2 replies
- 340 views
-
-
கேப்பாப்புலவிலுள்ள 2ரூட்/73.11 ஏக்கர் காணிகளை விடுவிப்பதை தாமதிக்க வேண்டாம் முல்லைத்தீவு மாவட்டம், கேப்பாப்புலவிலுள்ள இடம்பெயர்ந்த தமிழ் மக்களுக்குச் சொந்தமான காணிகளில், 111 ஏக்கர் மற்றும் 70ஏக்கர் 2ரூட்/73.11 ஏக்கர் காணிகள் எவ்வித தாமதமும் இன்றி விடுவிக்கப்பட்டு, மக்களிடம் கையளிக்கப்பட வேண்டும் என நான் மிக ஆணித்தரமாக வலியுறுத்த விரும்புகிறேன் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா. சம்பந்தன் வலியுறுத்தியுள்ளார். பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கபில வைத்தியரத்னவுக்கு ஞாயிற்றுக்கிழமை (13) அனுப்பிவைத்துள்ள கடிதத்திலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். பிரதமர் ரணில் விக்ரமசிங்க, புனர்வாழ்பு அமைச்சர் டி.…
-
- 1 reply
- 151 views
-
-
தேர்தல் காலம் தாழ்த்தப்படுவது ஜனநாயகத்தை பலவீனப்படுத்தும் 20 குறித்து த.தே.கூ.வின் முடிவு விரைவில் என்கிறார் சம்பந்தன் (ஆர்.ராம்) மக்களின் ஜனநாயக உரிமை மதிக்கப்படவேண்டும். உரிய திகதியிலிருந்து தேர்தல்கள் காலம் தாழ்த்தப்படுவது ஜனநாயகத்தினை பலவீனப்படுத்தும் செயல் எனத் தெரிவித்துள்ள எதிர்க்கட்சித்தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன், 20 ஆவது திருத்தச்சட்டம் குறித்து தமது தரப்பின் தீர்மானம் விரைவில் அறிவிக்கப்படும் எனவும் குறிப்பிட்டார். கிழக்கு, வடமத்திய, சப்ரகமுவ ஆகிய மூன்று மாகாணங்களுக்கான ஆயுட்காலம் நிறைவுக்கு வரவுள்ள நிலையில் அம்மாகா…
-
- 0 replies
- 399 views
-
-
போதைப்பொருள் மற்றும் திட்டமிட்ட குற்றச்செயல்களை தடுக்க சிறப்பு நடவடிக்கை Share ஸ்ரீலங்காவில் போதைப்பொருள் மற்றும் திட்டமிட்ட குற்றச்செயல்கள் குறித்து பொதுமக்களின் தகவல்களைப் பெற்றுக் கொள்வதற்கு சிறப்பு நடவடிக்கைப் பிரிவொன்று பொலிஸ் அதிரடிப்படை தலைமையகத்தில் அமைக்கப்பட்டுள்ளது. நாட்டில் அதிகரித்துவரும் குற்றச்செயல்களைக் கட்டுப்படுத்தும் நோக்கில் உருவாக்கப்பட்டுள்ள இப்பிரிவு, 24 மணிநேரமும் செயற்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. போதைப்பொருள் அல்லது குற்றச்செயல்கள் இடம்பெறுமாயின் அது தொடர்பாக 0112-580518, 0112-058552 அல்லது 0112-081040 என்ற தொலைபேசி இலக்கத்…
-
- 0 replies
- 243 views
-
-
மகிந்தவுக்கு எதிரான விசாரணைகளை துரிதப்படுத்த நடவடிக்கை முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்களுக்கு எதிராக சுமத்தப்பட்டிருக்கும் குற்றச்சாட்டுக்கள் தொடர்பிலான விசாரணைகளை துரிதப்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரியவந்துள்ளது. ஐக்கிய தேசிய கட்சியின் முன்னணி உறுப்பினர்கள் சிலர் மகிந்த ராஜபக்ஷ மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்களுக்கு எதிராக சுமத்தப்பட்டிருக்கும் குற்றச்சாட்டுக்கள் தொடர்பிலான விசாரணைகளை மிகவும் மந்த கதியில் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தொடர்ச்சியாக தெரிவித்து வருகின்றனர். அத்துடன் நல்லாட்சி அரசாங்கம் ஆட்சிக்கு வந்து இரண்டரை வருடங்கள் கடந்துள்ள போதிலும் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ மற்றும…
-
- 0 replies
- 155 views
-
-
எமது நிலைப்பாட்டில் அமைச்சர் விஜயதாஸ முன்னாள் ஜனாதிபதி மஹிந்த கூறுகின்றார் (எம்.ஆர்.எம்.வஸீம்) அமைச்சர் விஜயதாஸ ராஜபக் ஷ அம்பாந் தோட்டை துறைமுக விவகாரத்தில் எமது நிலைப்பாட்டில் உள்ளார். இதனால்தான் அவருக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரே ரணை கொண்டுவர முயற்சிக்கப்படு கின்றது. அரசாங்கத்தில் இருக்கும் அமைச்சர் ஒருவருக்கு எதிராக அரசாங்கமே நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டுவருவது உலகில் இதுவே முதல் தடவையாகும் என்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ தெரிவித்தார். நாட்டின் வளங்களை விற்பதுதான் ஐக்கிய தேசியக்கட்சியின் கொள்கையாகும். ஜனாதிபதி உட்பட அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் சிறிலங்கா சுதந்திரக்கட்சியினர் கட்சியி…
-
- 0 replies
- 208 views
-
-
நெடுந்தீவு அருகே 4 தமிழக மீனவர்கள் கைது எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி தமிழக மீனவர்கள் அண்மைக்காலமாக அதிகளவில் கைது செய்யப்பட்டு வருகின்றனர். எத்தகைய விதிமுறைகள் மற்றும் சட்ட நடவடிக்கைககள் எடுக்கப்பட்ட போது அதனை மீறும் வகையிலோ அல்லது வழிதவறி வரும் பல மீனவர்கள் இலங்கை கடற்படை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு வருகின்றனர். கடலுயிரினங்களின் இனப் பெருக்க காலம் நிறைவடைந்து மீண்டும் மீன்பிடிக்கான கால அவகாசம் வழங்கப்பட்ட பின்னரே இந்த நிலை தீவிரமடைந்துள்ளது. இந்த நிலையில், நெடுந்தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்த நாகை மாவட்டம் வேதாரண்யத்தைச் சேர்ந்த மீனவர்கள் 4 பேரை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது. பருத்தித்துறை கடற்பகுதி அருகே எல்லை தாண்டி மீன்ப…
-
- 0 replies
- 206 views
-
-
சுவிட்சர்லாந்து நாட்டில் புகலிடம் கோரி காத்திருக்கும் இலங்கை குடிமகன் மீது எரித்திரியா நாட்டை சேர்ந்தவர்கள் தாக்குதல் நடத்தியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆர்கவ் மாகாணத்தில் உள்ள Brugg ரயில் நிலையத்தில் தான் இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது. நேற்று இரவு 11 மணியளவில் சுவிஸ் நாட்டை சேர்ந்த 41 வயதான நபர் மற்றும் இலங்கையை சேர்ந்த 34 வயதான நபர் ஆகிய இருவரும் நடந்து சென்றுள்ளனர். அப்போது, 4 பேர் அடங்கிய கும்பல் ஒன்று இருவர் மீது மது பாட்டில்களை வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர். இத்தாக்குதலில் இருவருக்கும் மண்டை உடைத்துள்ளது. இத்தாக்குதல் குறித்து தகவல் அறிந்து வந்த பொலிசார் இருவரையும் மருத்துவமனையில் அனுமதித்தனர…
-
- 0 replies
- 301 views
-
-
திருகோணமலையில் எங்களுக்கு அடி விழுகிறது எனத் திருகோணமலையைச் சேர்ந்த தமிழ் இளைஞரொருவர் யாழில் மனம் குமுறியுள்ள சம்பவம் பலரையும் சோகத்தில்ஆழ்த்தியுள்ளது. அகில இலங்கை சைவ மகா சபையின் ஏற்பாட்டில் நேற்று யாழ்ப்பாணத்தில் ஆரம்பமாகிய உலக சைவ இளைஞர் மாநாட்டின் இரண்டாம் நாள் நிகழ்வுகள் இன்று யாழ்.நீராவியடியில் அமைந்துள்ள இலங்கை வேந்தன் கலைக் கல்லூரியில் இடம்பெற்றது. இதில் கலந்து கொண்டு மிக உருக்கமாக கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இதன்போது தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த அவர், நாங்கள் இன முரண்பாடுகளுக்குக்கிடையில், வலிகள், வேதனைகளுக்கு மத்தியில் தான் யாழ்ப்பாணம் வந்திருக்கிறோம். எமது மண்ணில் எமது இருப்ப…
-
- 3 replies
- 432 views
-
-
ஸ்ரீலங்காவிற்கு வருகை கனடா தம்பதியினர் சுமார் 51 இலட்சம் ரூபா பெறுமதியான நகைகள் கொள்ளையிடப்பட்டதாக பொய் முறைப்பாடு செய்துள்ளனர். இதன் பின்னர் குறித்த முறைப்பாட்டின் பிரதியை கனடாவில் ஒப்படைத்து பெருந்தொகை காப்புறுதி பணத்தை பெற முயற்சி செய்ய செயல் தற்போது அம்பலமாகியுள்ளது. 89 பவுண் நகைகள் கொள்ளையிடப்பட்டதாக கொடிகாமம் பொலிஸ் நிலையத்தில் பொய் முறைப்பாடு பதிவு செய்யப்பட்ட நிலையில் இது திட்டமிடப்பட்ட பொய் முறைப்பாடு என கொடிகாமம் பொலிஸாரின் இறுதி விசாரணை அறிக்கையில் தெரியவந்துள்ளது. வரணி பகுதியில் உள்ள வீடொன்றில் கடந்த 7 ம் திகதி இரவு 8 மணியளவில் நுழைந்த திருடர்கள் சுமார் 51 லட்சம் பெறுமதியான 89 பவுண் நகைகளை கொள்ளையிட்டுச் சென்றதாக கனடா நாட்டில் இருந்து வந்திருந்த…
-
- 3 replies
- 541 views
-
-
முதலமைச்சர் விசாரணைக் குழு அறிக்கையின் அடிப்படையில் அமைச்சு செயலர்களிடம் விளக்கம் கேட்கிறார் தலைமைச் செயலாளர் வட மாகாண அமைச்சர்கள் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்களை விசாரிக்க முதலமைச்சரால் நியமிக்கப்பட்ட குழு அமைச்சுச் செயலாளர்கள் தொடர்பில் அறிக்கையிட்டிருந்த விடயங்கள் குறித்து அவர்களிடம் விளக்கம் கோரப் பட்டுள்ளது. விசாரணை அறிக்கையில் கூறப்பட்டுள்ள விடயங்கள் தொடர்பில் உடன் விளக்கம் அளிக்குமாறு மாகாணத் தலைமைச் செயலாளர் அ.பத்திநாதன் சம்பந்தப்பட்ட செயலாளர்களிடம் கேட்டுள்ளார். வட மாகாண விவசாய அமைச்சர் தொடர்பில் விசாரணை மேற்கொள…
-
- 1 reply
- 223 views
-
-
திலக் மாரப்பன இன்று வெளிவிவகார அமைச்சராக பதவி ஏற்கின்றார் குளோபல் தமிழ்ச் செய்தியாளர் விசேட திட்டங்கள் அமைச்சர் திலக் மாரப்பன வெளிவிவகார அமைச்சராக இன்றைய தினம் பதவி ஏற்றுக்கொள்ள உள்ளார். மத்திய வங்கி பிணை முறிமோசடி குறித்த குற்றச்சாட்டுக்களின் காரணமாக கடந்த வியாழக்கிழமை, ரவி கருணாநாயக்க பதவி விலகியிருந்தார். இந்தநிலையில் இந்தப் பதவி வெற்றிடத்திற்கு திலக் மாரப்பனவை நியமிக்க பிரதமரும், ஜனாதிபதியும் இணங்கியிருந்தனர். இதன்படி, இன்றைய தினம் ஜனாதிபதி செயலகத்தில் திலக் மாரப்பன பதவிப் பிரமாணம் செய்து கொள்ள உள்ளார். இன்றைய தினம் முற்பகல் திலக் மாரப்பன வெளிவிவகார அமைச்சராக பதவிப் பிரமாணம் செய்து கொள்…
-
- 1 reply
- 278 views
-
-
கேப்பாப்புலவு காணி விடுவிப்பு அமைச்சரவைப்பத்திரம் நாளை கேப்பாப்புலவில் மக்களுக்குச் சொந்தமான 111ஏக்கர் காணியை விடுவிப்பதற்காக 148 மில்லியன் ரூபாவை வழங்குவதற்கான அமைச்சரவைப்பத்திரம் சிறைச்சாலை மறுசீரமைப்பு, மீள்குடியேற்றம், புனர்வாழ்வு மற்றும் இந்து சமய அலுவல்கள் அமைச்சினால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள நிலையில் நாளை செவ்வாய்க்கிழமை கலந்துரையாடலுக்கு எடுத்துக்கொள்ளப்படும் என தெரியவருகின்றது. முன்னதாக ஜூலை 19ஆம் திகதி 189 ஏக்கர் காணி விடுவிக்கப்படுவதாகவும் அதற்காக 5மில்லியன் ரூபா நிதியை இராணுவத்திற்கு கையளிக்கப்பட்டுள்ளதாக அமைச்சு ஏற்கனவே அறிவித்திருந்தது. …
-
- 0 replies
- 201 views
-