ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143356 topics in this forum
-
ஐ.தே.க.வின் தீர்மானத்தினை சு.க. ஆதரிக்கப்போவதில்லை மத்திய செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் (ஆர்.ராம்) கிழக்கு, வடமத்திய, சப்ரகமுவ மாகாண சபைகளின் கால எல்லையை நீடித்து ஒன்பது மாகாணங்களுக்கும் ஒரே தினத்தில் தேர்தலை நடத்துவதென ஐக்கிய தேசியக் கட்சி எடுத்துள்ள தீர்மானத்தினை ஆதரிப்பதில்லையென ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் மத்திய செயற்குழு தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய செயற் குழுக் கூட்டம் அக்கட்சியின் தலைவர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நேற்று முன்தினம் வியாழக்கிழமை இரவு நடைபெற்றது. இதன்போதே மேற்கண்டவாறு தீர்மானம் நிறைவேற்ற…
-
- 0 replies
- 139 views
-
-
வாளுடன் ஒருவர் வவுனியாவில் கைது! வவுனியா தேக்கவத்தையில் வாளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார் என்று தெரிவிக்கப்படுகின்றது. நேற்று மாலை அந்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார். 25 வயதான குடும்பஸ்தர் ஒருவரே கைது செய்யப்பட்டார் என்று கூறப்படுகின்றது. அவரது வீட்டில் இருந்து வில்லுத்தகடுகளும், 21.5 அங்குல வாளொன்று மீட்கப்பட்டுள்ளது என்றும் தெரிவிக்கப்படுகின்றது. இந்த நபர் யாழ்ப்பாணத்தில் இருந்து வவுனியா வந்து தொழில் செய்கின்றார் என்றும், ஆவா குழுவுடன் அவருக்கு தொடர்புகள் உண்டா என்ற ரீதியில் விசாரணைகள் நடத்தப்படுகின்றன என்றும் பொலிஸ் தகவல்கள் தெரிவித்தன. http://newuthayan.com/story/18606.html
-
- 0 replies
- 350 views
-
-
வடக்கில் மீண்டும் இராணுவம் புதிய அரசியலமைப்புக்கான செயற்பாடுகள் ஆமை வேகத்தினை அடைந்திருப்பதாக சபையில் சுட்டிக்காட்டிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் வடக்கில் மீண்டும் இராணுவப்பதிவுகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார் பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை இடம்பெற்ற இலங்கை மத்திய வங்கியின் 2016ஆம் ஆண்டுக்கான ஆண்டறிக்கை குறித்த சபை ஒத்திவைப்பு வேளை விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் உரையாற்றுகையில், ஊழல் மோசடிகள் குறித்து தற்போது பேசப்படுகின்றது. கடந்த ஆட்ச…
-
- 1 reply
- 213 views
-
-
ரவி நிரபராதியாகிவிட முடியாது விசாரணை முன்னெடுக்கப்பட வேண்டும்; ஜே.வி.பி.தலைவர் அனுரகுமார திஸாநாயக்க வலியுறுத்தல் (ஆர்.யசி) அமைச்சுப் பதவியில் இருந்து இராஜினாமா செய்தவுடன் ரவி கருணாநாயக்க நிரபராதியாகி விட முடியாது. அவர் தொடர்பிலான விசாரணைகளை உடனடியாக ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு முன்னெடுக்க வேண்டும் என்று மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுரகுமார திசாநாயக்க தெரிவித்தார். மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜுன மகேந்திரனை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பாதுகாக்கின்றார். ஆகவே இவர்களுக்கு இடையிலான தொடர்புகள், இந்த ஊழலில் வேறு நபர்கள் கொண்டுள்ள தொடர்புகள் குறித்து ஜனாதிபதி வ…
-
- 1 reply
- 198 views
-
-
தயாராகிறார் திலக் மாரப்பன (ரொபட் அன்டனி) வெளிவிவகார அமைச்சராக பதவி வகித்த ரவி கருணாநாயக்க தனது பதவியை இராஜினாமா செய்துள்ள நிலையில் புதிய வெளிவிவகார அமைச்சராக ஐக்கிய தேசியக்கட்சியின் சிரேஷ்ட உறுப்பினரும் தற்போதைய அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் குறித்த இராஜாங்க அமைச்சருமான திலக்க மாரப்பன ஜனாதிபதியால் நியமிக்கப்படலாம் என நம்பகரமாக தெரியவருகிறது. ஐக்கிய தேசியக்கட்சியின் சிரேஷ்ட உறுப்பினராக இருக்கின்ற திலக் மாரபனவையே புதிய வெளிவிவகார அமைச்சராக நியமிக்கப்படவேண்டுமென கட்சிக்குள் கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டு வருவதாகவும் இந்த யோசனையை கட்சியின் தலைவ…
-
- 0 replies
- 754 views
-
-
வடமாகாண சுகாதார அமைச்சரின் பதவி விலகலை ஏற்றுக்கொண்டார் சி.வி. குளோபல் தமிழ்ச் செய்தியாளர் வடமாகாண சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கத்தின் பதவி விலகலை ஏற்றுக் கொண்டு முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் உத்தியோகபூர்வமாக எழுத்தில் பதில் அனுப்பி வைத்துள்ளார். ‘வடக்கு மாகாண சுகாதார அமைச்சரான தங்களது 6.8.2017ம் திகதிய பதவி விலகல் கடிதம் சார்பாக குறித்த அமைச்சர் பதவியில் இருந்து விலகுவதாக அறிவிக்கப்பட்டதன் அடிப்படையிலும் கடந்த சில தினங்களாக நீங்கள் பணிக்குச் செல்லாத்தன் திமித்தமும் தங்களது பதவி விலகல் முடிவு ஏற்றுக்கொள்ளப்படுகின்றது’ என முதலமைச்சரால் நேற்றைய தினம் பதில் வழங்கப்பட்டுள்ளது. அடுத்த சுகாதார அம…
-
- 0 replies
- 192 views
-
-
இலங்கை தொடர்பில் ஜெனிவாவில் பல்வேறு அறிக்கைகள் சமர்ப்பிக்கப்படும்.! ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் 36 ஆவது கூட்டத் தொடர் அடுத்தவாரம் 11 ஆம் திகதியிலிருந்து 29 ஆம் திகதிவரை நடைபெறவுள்ள நிலையில் இலங்கை குறித்து எந்தவொரு விடயமும் கலந்துரையாடப்படமாட்டாது என எதிர்பார்க்கப்படுகிறது. எனினும் சர்வதேச மனித உரிமை அமைப்புக்கள் மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்கள் ஜெனிவா பிரேரணையின் அமுலாக்கம் தொடர்பில் இம்முறையும் ஜெனிவா கூட்டத் தொடரில் கேள்வி எழுப்பும் என தெரிவிக்கப்படுகிறது. இம்முறை கூட்டத் தொடரில் இலங்கை தொடர்பான எந்தவொரு விடயமும் இடம்பெறுவதற்கான சாத்தியமில்லை…
-
- 0 replies
- 204 views
-
-
தவராசா தனது பதவியை இராஜினாமா செய்யட்டும் ; மு.தம்பிராசா வட மாகாண சபையை கலைக்க வேண்டும் என்று கூறுகின்ற வடக்கு மாகாண சபையின் எதிர்க்கட்சி தலைவர் சி.தவராசா வேண்டுமானால் தன்னுடைய எதிர்க்கட்சி தலைவர் பதவியை முதலில் இராஜினாமா செய்யவேண்டும் என அடக்கு முறைகளுக்கு எதிரான ஜனநாயக அமைப்பின் தலைவர் மு.தம்பிராசா தெரிவித்துள்ளார். சமகால அரசியல் நிலைமை தொடர்பில் யாழ் ஊடக அமையத்தில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்வாறு தெரிவித்தார். அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்., தமிழ் மக்களின் இன்றைய நல்வாழ்வுக்காக உருவாக்கப்பட வட மாகாணசபை ஆட்சியை கலைக்க வேண்டும் என்று வடக்கு மாகாண சபையின் எதிர்கட்ச…
-
- 0 replies
- 286 views
-
-
வெளியானது ஆவா தலைவன் விக்டரின் வாக்கு மூலம் : ''நானும் மனோஜும் இணைந்தே இரு பொலிஸாரை வெட்டினோம்'' ஆவா குழுவில் இருந்து என்னுடன் முரண்பட்டுக்கொண்டு வேறு குழுவை உருவாக்கச் சென்ற ' தனு ரொக்' என்பவரை வெட்டவே நாம் சென்றோம். அவரது வீட்டில் அவர் இருக்கவில்லை. இதனால் நாம் மீள திரும்ப முட்பட்ட போது, பொலிஸார் இருவர் மோட்டார் சைக்கிளில் வருவதை அவதானித்தோம். அவர்கள் எம்மை மடக்கிப் பிடிக்கவே வருவதாக எண்ணியே அவர்களை பின் தொடர்ந்து திரத்திச் சென்று வெட்டினோம். நானும் மனோஜும் சேர்ந்தே அவர்களை தொடர்ச்சியாக வெட்டினோம்' என பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டு விசாரணை செய்யப்பட்டு வரும் ஆவா பாதாள உலகக் குழுவின் தலைவன் நிஷா விக்டர் பொலிஸாருக்கு வா…
-
- 3 replies
- 611 views
-
-
வித்தியா படுகொலை, 11 இளைஞர்கள் கடத்தல் வழக்கின் விசாரணை அதிகாரியைக் கொல்ல சதித்திட்டம் யாழ். புங்குடுதீவு மாணவி சிவலோகநாதன் வித்தியா படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்ட குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் அதிகாரி நிசாந்த சில்வாவை கொலை செய்ய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக நீதிமன்றத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது. கொழும்பு கோட்டை நீதவான் லங்கா ஜயரத்ன முன்னிலையில் எடுத்துக்கொள்ளப்பட்ட பிறிதொரு வழக்கினூடாக இந்த விடயம் அறிவிக்கப்பட்டுள்ளது. வித்தியா படுகொலை, 11 தமிழ் இளைஞர்கள் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டமை உள்ளிட்ட பல வழக்குகளின் விசாரணை அதிகாரியாக நிசாந்த சில்வா செயற்படுகின்றார். இந்நிலை…
-
- 0 replies
- 239 views
-
-
சக்தி டிவி செய்திகள் 11 08 2017 , 8PM
-
- 0 replies
- 393 views
-
-
நிர்வாணப்படுத்தி, தண்ணீரில் மூழ்கடித்து கொடூரமாக கொலை செய்த முன்னாள் பௌத்த பிக்கு ஒருவருக்கு பாணந்துறை மேல் நீதிமன்றம் இன்று மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது. பன்னிப்பிட்டி பிரதேசத்தில் வசித்து வரும் 34 வயதான ஹேனேகம ரத்னசிறி தேரர் என்ற கொடித்துவக்கு ஆராச்சிகே சாரங்க என்ற நபருக்கு இந்த தண்டனை விதித்து நீதிபதி பத்மினி ரணவக்க குணதிலக்க உத்தரவிட்டுள்ளார். குற்றச்சாட்டை எதிர்நோக்கிய இந்த நபர் கடந்த 2010 ஆம் ஆண்டு மே மாதம் 25 ஆம் திகதி தனது காதலியான இங்கிரிய பிரதேசத்தை சேர்ந்த தோன சுனேத்ரா பிரியதர்ஷனி என்ற பெண்ணை நிர்வாணப்படுத்தி, நாச்சிமலை நீர்தேக்கத்தில் மூழ்கடித்து கொலை செய்துள்ளார். நீண்ட வழக்கு விசாரணைகளின் பின்னர் தீர்ப்பை அறிவித்த நீ…
-
- 3 replies
- 632 views
-
-
வாள் வெட்டில் முடிந்த குடும்பத் தகராறு; நால்வர் படுகாயம்; ஒருவர் நிலை? கிளிநொச்சி மாவட்டம் பளை பகுதியில் குடும்பத் தகராறு வாள்வெட்டில் முடிந்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. குறித்த சம்பவம் நேற்றைய தினம் பிற்பகல் வேளையில் நடந்துள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் குறிப்பிட்டுள்ளார். பளை பொலிஸ்…
-
- 2 replies
- 618 views
-
-
கற்பூரம் கொளுத்திய பெண் தீக்குள் தவறி விழுந்தார் – நல்லூரில் சம்பவம் நல்லூர் முருகன் ஆலயத்தின் முன்புறத்தில் ஏற்பட்ட விபத்தில் ஒரு பெண் தீக் காயங்களுக்கு உள்ளாகியுள்ளார். ஆலயத்தின் முன்பாக கற்பூரம் கொளுத்தப்படும் பகுதியில் கற்பூரம் கொளுத்த முற்பட்டபோது அவர தீக்குள் தவறி விழுந்தார் என்று தெரிவிக்கப்பட்டது. இந்தச் சம்பவம் இன்று இரவு 7.30 மணியளவில் நடந்துள்ளது. காயமடைந்த பெண் யாழ்.போதனா வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளார். அவரது கையிலும், முகத்திலும் தீக்காயங்கள் ஏற்பட்டுள்ளன என்று கூறப்படுகின்றது. காயமடைந்தவர் 51 வயதுடையவர் என்றும் கூறப்படுகின்றது. http://newuthayan.com/story/18450.html
-
- 0 replies
- 457 views
-
-
அம்பாந்தோட்டை துறைமுகம் சீனாவுக்கு மத்தள வானூர்தி நிலையம் இந்தியாவுக்கு இலங்கையின் சமாளிப்பு வியூகம் அம்பாந்தோட்டை துறைமுகத்தை 99 ஆண்டுகாலப் பகுதிக்கு சீன நிறுவனத்துக்கு குத்தகைக்கு வழங்கியதால் ஆத்திரமடைந்துள்ள இந்தியாவைச் சமாளிப்பதற்காக துறைமுகத்தை அண்மித்து அமைக்கப்பட்டுள்ள மத்தல வானூர்தி நிலையத்தை இந்தியாவுக்குக் குத்தகைக்கு வழங்க இலங்கை அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. இந்திய நிறுவனத்துக்கு மத்தல வானூர்தி நிலையத்தை 40 ஆண்டுகளுக்கு குத்தகைக்கு வழங்கும் வகையில் அமைச்சரவைப் பத்திரம் நேற்று முன்தினம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. சிவில் வானூர்திப் போக்குவ…
-
- 8 replies
- 590 views
-
-
மீன் வாடியில் மர்மப் பொருள் நீதிவான் முன்னிலையில் அகழ்வு நடவடிக்கை மன்னார் – பேசாலை 4 ஆம் வட்டார கடற்கரைப் பகுதியில் உள்ள மீனவர் ஒருவரின் வாடி ஒன்றினுள் இனம் தெரியாத பொருட்கள் புதைத்து வைக்கப்பட்டுள்ளதாகக் பொலிஸ் குற்ற தடுப்பு பிரிவினருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதற்கமைய மன்னார் நீதவான் ஏ.ஜீ.அலெக்ஸ்ராஜா முன்னிலையில் இன்று மதியம் குறித்த பகுதியில் அகழ்வு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இதன் போது அழைக்கப்பட்ட திணைக்களங்களின் அதிகாரிகள்,மன்னார் மாவட்ட மேலதிக அரச அதிபர் திருமதி நந்தினி ஸ்ரான்லி டி மேல், பொலிஸ், இராணுவ அதிகாரிகள் உட்பட பலர் கலந்துகொண்டிருந்தனர். முதலில் குறித்த மீன் வாடி முழுமையாக அகற்றப்பட்ட நிலைய…
-
- 1 reply
- 569 views
-
-
யாழ். வடமராட்சியில் வாள்வெட்டு : ஒருவர் படுகாயம்..! நேற்று அதிகாலை யாழ்ப்பாணம் வடமராட்சி அல்வாய் பகுதியில் இனந்தெரியாத நபர்கள் மேற்கொண்ட வாள்வெட்டுக்கு இலக்காகி குடும்பஸ்தர் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். வாள்வெட்டில் படுகாயமடைந்த நபர் சிகிச்சைகளுக்காக பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அல்வாய் வடக்கு முத்துமாரியம்மன் கோவிலடியைச் சேர்ந்த சின்னத்தம்பி கமல்ராஜ் என்ற 53 வயது நபரே வாள்வெட்டுக்கு இலக்காகியுள்ளார். இச் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பருத்தித்துறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். https://news.ibctamil.com/ta/internal-affairs/one-person-injured-in-jaffna-vaal-vettu
-
- 1 reply
- 427 views
-
-
இந்தியாவின் 70 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு யாழில் பல நிகழ்வுகள் இந்தியாவின் 70 ஆவது சுதந்திரதினத்தை முன்னிட்டு யாழ்ப்பாணத்திலுள்ள இந்திய துணைத் தூதரகம் பல்வேறு நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்துள்ளது. இந்திய சுதந்திர தினத்தின் 70 ஆவது ஆண்டு நிறைவையும், நல்லூர் கந்தசுவாமி கோவிலின் வருடாந்த மஹோற்சவத்தையும் முன்னிட்டு இந்த நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதனை முன்னிட்டு நாளை 12 ஆம் திகதி ஸ்ரீதேவி நடித்த 'மம்' திரைப்படம் ராஜா திரையரங்கில் பிற்பகல் 2.30 க்கு திரையிடப்படவுள்ளது. இவற்றிற்கான நுழைவுச்சீட்டுக்கள் இலவசம். எதிர்வரும் 16 ஆம் திகதி சங்கிலியன் தோப்பில் பெங்களுரைச் சேர்ந்த மஞ்சுநாத் சகோதர்களின் வயலின் இசைக்கச்சேரி…
-
- 5 replies
- 1.5k views
-
-
பூநகரியில் டோக்கியோ சீமெந்து நிறுவனம் ஆய்வு – தொழிற்சாலை நிறுவ திட்டமா ? குளோபல் தமிழ்ச் செய்தியாளர் பூநகரி பகுதியில் சீமெந்து தொழிற்சாலை ஒன்று நிறுவப்பட உள்ளதாக வடமாகாண மகளீர் விவகார அமைச்சர் அனந்தி சசிதரன் தெரிவித்துள்ளார். வடமாகாண சபையின் இன்றைய அமர்வின் போதே அவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில் , பூநகரி பொன்னவழி விநாயகர் ஆலயத்திற்கு அருகில் வெளிநாட்டு நிறுவனம் ஒன்று சீமெந்து தொழிற்சாலையை நிறுவ ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றது. அந்த ஆய்வுகளுக்காக நிலங்களில் பாரிய துளையிட்டு பாரிய இயந்திரங்களை பொருத்தி நீரினை இறைக்கின்றார்கள். அவ்வாறு இறைக்க…
-
- 7 replies
- 1.1k views
-
-
சர்ச்சைக்குரிய மத்திய வங்கியின் பிணை முறிப்பத்திர விவகாரம் தொடர்பான விசாரணைகளை நடத்தி வரும் ஜனாதிபதி ஆணைக்குழுவிற்கு சட்டமா அதிபர் திணைக்களம் நியமித்துள்ள இரு அதிகாரிகள் சம்பந்தமான அரசாங்கத்தின் நிலைப்பாட்டை அறிவிக்குமாறு கோரப்பட்டுள்ளது. ஆளும் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்த கோரிக்கையை முன்வைத்து பிரதமரின் அலுவலகத்தில் இன்று கடிதம் ஒன்றை கையளித்துள்ளதாக அரசியல் தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன. சட்டமா அதிபர் திணைக்களத்தின் முழு செயற்பாடுகள் தொடர்பாக ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள், பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுடன் விரிவாக கலந்துரையாடியுள்ளனர். இந்த கலந்துரையாடல் நேற்று நாடாளுமன்றத்தில் நடைபெற்றுள்ளது. ஜனாதிபதி ஆணைக்…
-
- 0 replies
- 549 views
-
-
கிளிநொச்சியில் விபத்துக்குள்ளான சொகுசு பேருந்து சாரதியை எதிர்வரும் 14 ஆம் திகதி விளக்கமறியலில் வைக்குமாறு கிளிநொச்சி மாவட்ட நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கிளிநொச்சி மாவட்ட நீதிவான் நீதிமன்றில் பதில் நீதிவான் நீதிவான் எஸ். சிவபால சுப்பிரமணியம் முன்னிலையில் ஆஜர்ப்படுத்திய போது நேற்று குறித்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் மேலும் தெரியவருவது, ஏ-9 வீதியில், கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்துக் கொண்டிருந்த சொகுசு பஸ் ஒன்று கடந்த 4 ஆம் திகதி அதிகாலை 2.30 மணியளவில வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளாகியுள்ளது. குறித்த சம்பத்தின் போது மின்கம்பங்கள், தொலைத்தொடர்பு கம்பங்கள், கிளிநொச்சி வலயக்கல்வி அலுவலகம் என்பன சேதமாக…
-
- 0 replies
- 400 views
-
-
வடபகுதியில் வர்த்தக நடவடிக்கைகளின் தரத்தை தேசிய – சர்வதேச தரத்திற்கு உயர்த்த முன்வர வேண்டும். – சி.வி. குளோபல் தமிழ்ச் செய்தியாளர் வடபகுதி இளைஞர் யுவதிகள் அரச சேவைகள் தவிர்ந்த வேறு எந்த வேலைகளிலும் ஈடுபட மாட்டார்கள் அல்லது வேறு தொழில்கள் தெரியாது என்று கூறப்படுகின்றது. இந்நிலை மாற்றப்பட வேண்டும். என வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். யாழ்.மாவட்ட செயலக சிறுதொழில் முயற்சி அபிவிருத்திப் பிரிவின் ஏற்பாட்டில் , ‘யாழ் தொழில் முனைவோர் – 2017’ எனும் தொனி பொருளில், யாழ்.சங்கிலியன் பூங்காவில் இன்று வெள்ளிக்கிழமை காலை கண்காட்சி ஆரம்பமானது. அக் கண்காட்சியினை பிரதமன விருந்தினராக கலந்து கொண்ட முதலை…
-
- 0 replies
- 380 views
-
-
இராணுவத்தினரின் செயற்பாட்டினால் அச்சத்தில் வாழும் கிளிநொச்சி மக்கள் கிளிநொச்சியில் மக்கள் செறிந்து வாழும் குடியிருப்புக்களுக்கு அருகில் குண்டுகளைச் செயலிழக்க வைக்கும் இராணுவத்தினரின் செயற்பாடுகள் தொடர்பில் மக்கள் விசனம் வெளியிட்டுள்ளனர். கிளிநொச்சி, உமையாள்புரம் மற்றும் தட்டுவன்கொட்டி, ஆனையிறவு பகுதிகளில் உள்ள மக்கள் குடியிருப்பு காணிகளிலேயே குறித்த செயற்பாடுகளை இராணுவத்தினர் முன்னெடுத்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. கடந்த 2 மாதங்களாக குறித்த பகுதியில் இவ்வாறு குண்டுகள் செயலிழக்க பண்ணும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாகவும், இதனால் தாம் அச்சத்துடன் வாழ்ந்து வருவதாக அப்பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர். மக்கள…
-
- 0 replies
- 284 views
-
-
தமிழில் உரையாற்ற முடியாமை எண்ணி கலங்கிய அமைச்சர் ஸ்ரீலங்காவின் பிரதான மொழிகளில் ஒன்றான தமிழ் மொழியில் பேச முடியாதது குறித்து ஸ்ரீலங்கா அரசாங்கத்தின் நிதி மற்றும் ஊடகத்துறை அமைச்சர் மங்கள சமரவீர வருத்தம் வெளியிட்டுள்ளார். அதேவேளை ஸ்ரீலங்காவின் அடுத்தத் தலைமுறை அரசியல்வாதிகளாவது தமிழ் சிங்களம் மற்றும் ஆங்கிலம் ஆகிய மூன்று மொழிகளிலும் கதைக்கக் கூடியவர்களாக திகழ வேண்டுமென்று குறிப்பிட்டுள்ள மங்கள சமரவீர அவ்வாறான நிலை ஏற்படும் பட்சத்திலேயே அனைத்து இன மக்களினதும் தனித்துவங்களை மதிக்கும் சமூகமொன்றை கட்டியெழுப்ப முடியும் என்றும் கூறியுள்ளார். யாழ்ப்பாணத்தில் வைத்தே ஸ்ரீலங்கா அரசாங்கத்தின் நிதி மற்றும் ஊடகத்துறை அமைச்சர் மங்கள சமரவீர இந்த…
-
- 0 replies
- 514 views
-
-
வடக்கு, கிழக்கு மக்களின் சுகாதாரம் தொடர்பில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் எச்சரிக்கை ! வட, கிழக்கு மாகாணங்களிலுள்ள வைத்தியசாலைகளில் சேவையாற்றும் வைத்தியர்கள் எதிர்வரும் திங்கட்கிழமை முதல் தொடர் சேவைப்புறக்கணிப்பை முன்னெடுக்கவுள்ளனர். வடக்கு, கிழக்கில் வாழும் மக்களுக்கு சுகாதார வசதிகள் முறையாக கிடைக்கப்பெறுவதில்லை. அங்குள்ள வைத்தியர்கள் கஷ்ட பிரதேசங்களுக்கு இடமாற்றம் பெறுவதுமில்லை. இதில் அரசியல் தலையீடுகளும் காணப்படுகின்றன. இவற்றுக்கெதிராக அரசாங்கம் துரிதமாக செயற்படாவிட்டால் தொடர் சேவைப்புறக்கணிப்பை முன்னெடுப்போம் என அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் எச்சரித்துள்ளது. இவ்வாறான செயற்பாடுகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்தே இந்த சேவைப்புறக்கண…
-
- 0 replies
- 276 views
-