ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143361 topics in this forum
-
மொழியுரிமை மீறல் தொடர்பில் முறைப்பாடு செய்ய சென்ற இளைஞன் – முறைப்பாட்டை ஏற்க மறுத்த காவற்துறை:- குளோபல் தமிழ்ச் செய்தியாளர்:- மொழியுரிமை மீறல் தொடர்பான முறைப்பாட்டினை பொலிஸ் நிலையத்தில் மேற்கொள்ள முடியாது என கோப்பாய் காவல் நிலைய காவற்துறையினர் முறைப்பாட்டினை ஏற்காது முறைப்பாட்டாளரை திருப்பி அனுப்பி உள்ளனர். குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது , திருநெல்வேலி சந்தியில் நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை காலை கடமையில் இருந்த கோப்பாய் காவல் நிலைய போக்குவரத்து பிரிவு பொறுப்பதிகாரி வீதியில் சென்ற இளைஞர் ஒருவரை மறித்து சாரதி அனுமதி பத்திரத்தை பெற்று சிங்கள மொழியில் ஏசியுள்ளார். குறித்த இளைஞர் தனக்கு சிங்கள மொழி தெரியாது எனவும் ,…
-
- 1 reply
- 277 views
-
-
வீடுகளுக்குள் புகுந்து கும்பல் அடாவடித்தனம் ஈச்சமோட்டையில் நேற்றிரவு பயங்கரம் 4 பேர் வைத்தியசாலையில் யாழ்ப்பாணம், ஈச்சமோட்டையில் நேற்றிரவு 2 வீடுகளுக்குள் புகுந்த அடாவடிக் கும்பல் மேற்கொண்ட வாள்வெட்டுத் தாக்குதலில் 4 பேர் படுகாயமடைந்த நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர். ஆவாக் குழுவுடன் தொடர்புடையவர்களே இந்த வாள்வெட்டுத் தாக்குதலை நடத்தினர் என்று பொலிஸார் குற்றஞ்சாட்டினர். யாழ்ப்பாணம், ஈச்சமோட்டை குளத்தடிப்பகுதி யில் உள்ள வீடு ஒன்றுக்குள் நேற்றிரவு 8.30 நுழைந்த அடாவடிக் கும்பல் அங்கு இருந்தவர்களை தாக்கி…
-
- 1 reply
- 347 views
-
-
எம் தேசத்தை பாலைவனமாக்க அனுமதியோம் முல்லைத்தீவு மாவட்டத்தில் கூழாமுறிப்பு பகுதியில் பாரியளவிலான வன அழிப்பை மேற்கொண்டு, இனப் பரம்பலை சிதைக்கும் நோக்குடனான குடியேற்றத்தை தடுத்து நிறுத்தவேண்டிய கட்டாயத்தில் நாம் இருக்கின்றோம் என இளைஞர் அணி குறிப்பிட்டுள்ளது. இனப் பரம்பலை சிதைக்கும் நோக்குடனான குடியேற்றத்தை தடுத்து நிறுத்த கோரி இளைஞர் அணி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பிலேயே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது. அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, ஏற்கனவே மன்னாரில் வில்பத்து, வவுனியாவில் பம்பைமடு, முல்லைத்தீவில் குமாரபுரம் அடர் வனங்கள் முஸ்லிம் மக்களை குடியேற்றும் நோக்குடன் அழிக்கப்பட்ட வேளையில் இன நல்லிணக்கம் கருதி நாம் அனைவரும் அமைதி காத்திருந்தோம். ஆனால் இப்போது நிலமை எல்லை மீற…
-
- 6 replies
- 894 views
-
-
ஆடத் தெரியாதவர்களுக்கு மேடை கோணல் கதையைப் போன்று அரசாங்கம் தனது இயலாமையை மூடி மறைக்கின்றது – மஹிந்த இலங்கையின் பொருளாதாரம் பாரியளவில் வீழ்ச்சியடைந்துள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். பாணந்துறை பிரதேசத்தில் இன்றைய தினம் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். நாட்டின் பொருளாதாரம் பாரியளவில் வீழ்ச்சியடைந்துள்ளமைக்கான ஏதுவாக மஹிந்த ராஜபக்சவின் பெயர் குறிப்பிடப்படுகின்றது என அவர் குறிப்பிட்டுள்ளார். ஆடத் தெரியாதவர்களுக்கு மேடை கோணல் என்ற கதையைப் போன்று அரசாங்கம் தனது இயலாமையை மூடி மறைத்துக் கொள்ள பல்வேறு பொய்ப் பிரச்சாரங்களில் ஈடுபட்டு வருகின்றது என அவர் குறிப்பிட்டுள்ளார். http://globaltami…
-
- 0 replies
- 173 views
-
-
ஐநா விசேட பிரதிநிதி ராஜதந்திரமற்றவர் – இராணுவ அதிகாரியைப் போன்று கட்டளையிடும் தோரணையில் செயற்படுகின்றார் – நீதி அமைச்சர் குளோபல் தமிழ்ச் செய்தியாளர் ஐக்கிய நாடுகள் அமைப்பின் விசேட பிரதிநிதியின் நடவடிக்கைகள் குறித்து நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஸ கடும் அதிருப்தியை வெளியிட்டுள்ளார். இலங்கைக்கு அண்மையில் சென்றிருந்த பயங்கரவாத எதிர்ப்பு மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பான ஐக்கிய நாடுகள் அமைப்பின் விசேட பிரதிநிதி பென் எம்மர்சன் ராஜதந்திரமற்றவர் எனவும், தகுதியற்றவர் எனவும் குற்றம் சுமத்தியுள்ளார். ஐக்கிய நாடுகள் பிரதிநிதி ஓர் இராணுவ அதிகாரியைப் போன்று கட்டளையிடும் தோரணையில் செயற்பட்டதாகவும் அது விரும்பத்தக்க ஒன்றல்ல எனவும் அவர் குற…
-
- 0 replies
- 196 views
-
-
தமிழ் இளைஞர்கள் பொலிஸ் சேவையில் இணைந்தால் ஆதிக்கத்தினை கைப்பற்ற முடியும் தமிழ் இளைஞர் யுவதிகள் பொலிஸ் சேவையில் இணைந்து எமது ஆதிக்கத்தினை செலுத்தினால், பொலிஸ் அதிகாரத்தினை நாம் கையில் எடுக்க முடியும் வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். பொலிஸ் சேவைக்காக 500 விண்ணப்பங்கள் உள்ளன. அவற்றில் இணைந்துகொள்வதற்கு எமது தமிழ் இளைஞர் யுவதிகள் முன்வர வேண்டுமென அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார். வடமாகாண முதலமைச்சருக்கும், வடமாகாண சிரேஸ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் மற்றும் பொலிஸ் அதிகாரிகளுக்கும் இடையில் முதலமைச்சர் செயலகத்தில் இன்று வெள்ளிக்கிழமை; (14) சந்திப்பு இடம்பெற்றது. அந்த சந்திப்பின் போது, அண்மையில், மணற்காட்டில் சட்டவிரோத மண…
-
- 7 replies
- 581 views
-
-
கோணேஸ்வரத்தில் மான்களை பாதுகாக்க வழிதான் என்ன? போர்த்துக்கேயரால் துவம்சம் செய்யப்பட்ட போதும் ஆலய வளாகம் அதன் புறத்தேயுள்ள முற்றவெளி மைதானம் முழுவதும் சோலைகளும் மரங்களும் விருட்சங்களும் விரவிக் கிடந்தன. இவற்றை தமது இருப்பகங்களாகக்கொண்டுதான் ஆயிரக்கணக்கான மான்கள், மந்திகள், பறவை கள், பட்சிகள் வாசம் செய்தன. கோட்டை வாசலிலிருந்து நடந்து செல்லும் பக்தர்களுக்கு பந்தல் அமைத்தது போல் காணப்படும் விருட்சங்கள், இலந்தை மரங்கள், ஆல, அரச மரங்கள், கொடிகள், செடிகள், பற்றைகள், புதர்கள் என மண்டிக்கிடந்த ஆலய வளாகம் ஒரு காலத்தில் சரணாலயம் போல் காணப்பட்டது. மான்களும் மந்திகளும் ஓடித் திரிந்து, பறவைகளும் பல்லு யிர்கள…
-
- 2 replies
- 530 views
-
-
42 இந்திய படகுகளை விடுவிக்குமாறு உத்தரவு இலங்கை வசமிருக்கும் 42 இந்திய மீன்பிடி படகுகளை விடுதலை செய்யுமாறு நீதிமன்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 2015 பெப்ரவரி 26 ஆம் திகதி முதல் நவம்பர் 10 ஆம் திகதிவரையான காலப்பகுதியினுள் கைப்பற்றப்பட்ட குறித்த 42 படகுகளையும் விடுவிக்குமாறு இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய எதிர்வரும் 17 ஆம் திகதி இலங்கை வசமுள்ள இப்படகுகள் விடுவிக்கப்பட்டுள்ள இந்திய கடற் பாதுகாப்பு படையினலர்களிடம் ஒப்படைக்கப்படவுள்ளது. http://metronews.lk/?p=10182
-
- 0 replies
- 182 views
-
-
கைது நடவடிக்கை அச்சத்தால் இந்திய மீனவர்கள் மின்பிடிக்கச் செல்லவில்லை இலங்கை கடற்படையினாரால் பறிமுதல் செய்யப்பட்ட தமிழகம் மற்றும் புதுவையைச்சோந்த படகுகளை விடுவிக்க நீதிமன்றங்கள் உத்தரவிட்டுள்ள நிலையில் மீன்பிடி தொழிலாளர்களிடையே ஏறபட்டுள்ள பீதியால் மீபிடிக்கச் செல்லவில்லை. கடந்த ஆறாம் திகதி இலங்கை பாராளுமன்றத்தில் மீன்வளத்துறை அமைச்சரால் தாக்கல் செய்யப்பட்ட புதிய கடற்தொழிற்சட்டதை வாபஸ் பெற வலியுறுத்தியும், புதிய சட்டத்திற்கு இந்திய அரசு கண்டனம் தெரிவிப்தோடு சட்டத்தை வாபஸ் செய்ய வலியுறுத்த வேண்டும் என்பதை வலியுறுத்தி ராமேஸ்வரம் மீனவர்கள் கடந்த 9 ஆம் திகதி முதல் காலவரையறையற்ற வேலைநிறுத்பபோராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில…
-
- 1 reply
- 170 views
-
-
சிக்கினார் தஸநாயக்க! சிக்குவாரா கரண்ணாகொட? கொழும்பு மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் வைத்து 2008 ஆம் ஆண்டு 5 மாணவர்கள் உள்ளிட்ட 11 பேர் கடத்தப்பட்டு காணாமல் போகச் செய்யப்பட்ட சம்பவத்துடன் கடற்படை சிறப்பு புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பணிப்பாளரும் முன்னாள் ஊடகப் பேச்சாளருமான கொமாண்டர் டி.கே.பி. தஸநாயக்கவுக்கு உள்ள நெருங்கிய தொடர்பை மையப்படுத்தி அவர் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். விசாரணை வலயத்துக்குள் இருந்த அவரின் கடவுச்சீட்டு நீதிமன்றினால் முடக்கப்பட்டிருந்த நிலையில், அமெரிக்காவுக்கு செல்ல ஆயத்தங்களை முன்னெடுத்து வந்த நிலையிலேயே அவர் இவ்வாறு கைது செய்யப்பட்டார். சி.ஐ.டி.யின…
-
- 0 replies
- 435 views
-
-
மயிலிட்டி காச நோய் மருத்துவமனையை விடுவிக்க பேச்சு! வலி.வடக்கு, மயிலிட்டியில் இயங்கி வந்த காச நோயாளர்களுக்கான வைத்தியசாலைக் காணியில் இராணுவம் சொகுசு விடுதிகளை அமைத்துள்ளது. அதை தற்பொழுதும் தமது கட்டுப்பாட்டுக்குள் இராணுவம் வைத்துள்ளது. அந்தக் காணி விடுவிப்பது தொடர்பில் இராணுவத்தினருடன் பேச்சு நடத்தப்படுகின்றது என்று சுகாதாரத் திணைக்கள அதிகாரிகள் தெரிவித்தனர். யாழ்ப்பாண மாவட்டத்தில் காச நோயாளர்களுக்குச் சிகிச்சை வழங்குவதற்காகப் பிரத்தியேக வைத்தியசாலை ஆரம்பிக்கப்பட்டு அங்கு காச நோயாளர்கள் போருக்கு முன்னர் சிகிச்சை பெற்று வந்தனர். உள்நாட்டுப் போர் கா…
-
- 0 replies
- 305 views
-
-
பொருத்துவீடு: உடன் நடவடிக்கை எடுக்குமாறு அமைச்சு பணிப்பு! கோப்புப் படம் வடக்கின் 5 மாவட்டங்களிலும் பொருத்து வீடுகளை அமைப்பதற்கான நடவடிக்கைகளை உடனடியாக ஆரம்பிக்குமாறு மாகாணத்திலுள்ள 5 மாவட்டச் செயலர்களுக்கும் மீள்குடி யேற்ற அமைச்சு பணித்துள்ளது. முதற்கட்டமாக 5 ஆயிரத்து 400 பொருத்து வீடுகளை அமைக்க ஏற்பாடுகளை மேற்கொள்ளுமாறும் அமைச்சு அறிவுறுத்தியுள்ளது. வடக்கு மாகாணத்தில் போர் காரணமாக வீடுகளை இழந்து வாழும் 70 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு வீடுகள் தேவையாகவுள்ளன. இந்த நிலையில் வடக்கு–கிழக்கில் 60 ஆயிரம் பொருத்து வீடுகளை அமைத்து வழங்க மீள்குடியேற்ற அமைச்சு நடவடிக்கை எடுத்…
-
- 0 replies
- 382 views
-
-
ஜனாதிபதி நல்லாட்சி எனக் கூறி என் கணவனை சிறையிலடைத்து மகனின் எதிர்காலத்தையும் அழித்து விட்டார் ; தமிழ் அரசியல் கைதியின் மனைவி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனா தனது ஆட்சியை நல்லாட்சி எனக் கூறிக்கொண்டு என் கணவனை பயங்கரவாதி என அடையாளப்படுத்தி சிறையிலடைத்தது மட்டுமல்லாமல் என் 15 வயது மகனை மேசன் தொழிலாளி ஆக்கி ஒரு பாடசாலை சிறுவனின் எதிர்காலத்தையே அழித்துவிட்டார். உண்மையில் இங்கே நடப்பது நல்லாட்சி என்றால் என் கணவனை விடுதலை செய்யுங்கள். என் மகனின் எதிர்காலத்தை பாதுகாத்து கொடுங்கள். என தமிழ் அரசியல் கைதி ஒருவரின் மனைவி கண்ணீர்மல்க உருக்கமான கோரிக்கை ஒன்றினை விடுத்திருக்கின்றார். கடந்த 2013 ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டு விசா…
-
- 0 replies
- 232 views
-
-
க.குமார் அணி வாக்குகளை சிதறடிக்கத் திட்டம் மாகாணசபை முறைமையை ஏற்கோம் என்று சொல்லி முதல்வர் விக்னேஸ்வரன் தலைமையில் நடந்த முள்ளிவாய்க்கால் நினைவேந்தலில் பங்குகொள்ளாமலிருந்த தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினர், தமிழ் மக்களின் வாக்குகளைச் சிதறடித்து தமிழ் முதலமைச்சர் கிடைக்காமல் செய்வதற்கே கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் களமிறங்கவுள்ளனர். இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம் தெரிவித்தார். கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி போட்டியிடப் போவதாகத் தெரிவித்துள்ளமை தொடர்பாக கருத்துக் கூறுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் தெரிவித்ததாவது…
-
- 1 reply
- 304 views
-
-
ஜனாதிபதி, பிரதமருடன் கேப்பாப்புலவு மக்கள் நேரடி சந்திப்புக்கு முயற்சி கேப்பாப்புலவு மக்களின் கோரிக்கைகளுக்கு பெற்றுக்கொடுப்பதற்காக அவர்களை ஜனாதிபதி, பிரதமருடன் நேரடிச்சந்திப்பொன்றை ஏற்படுத்துவதற்கு முயற்சிகளை எடுத்துள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக்கட்சியான ரெலோ தலைவரும் பாராளுமன்ற குழுக்களின் பிரதி தலைவருமான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார். கேப்பாப்புலவில் தமக்குச் சொந்தமான 482 ஏக்கர் நிலங்களை விடுவிக்க கோரி 136 நாட்களுக்கு மேலாக 138 குடும்பங்கள் போராட்டத்தில் தொடர்ச்சியாக ஈடுபட்டு வருகின்றன. தமக்கான தீர்வு கிடைக்கும் வரை போராட்டத்தைக் கைவிடப் போவதில்லை என அவர்கள…
-
- 0 replies
- 178 views
-
-
அம்பாறையில் 86 புத்தர்: மகிந்த காலத்து வர்தமானி அறிவித்தலை சத்தமின்றி நடைமுறைப்படுத்தும் நல்லாட்சி அரசு! அம்பாறை மாவட்டத்தில் பாரம்பரியமாக தமிழ், முஸ்லிம் மக்கள் வாழ்ந்துவரும் பூர்வீக நிலங்களில் 86 இடங்கள் புத்தர் சிலை அமைப்பதற்கு வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளதாகத் தெரியவருகின்றது. முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ஷ காலத்தில் இந்த வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டதாகவும், அதனை நல்லாட்சி அரசாங்கம் நடைமுறைப்படுத்தி வருவதாகவும் தெரியவந்துள்ளது. குறித்த வர்த்தமானி அறிவித்தலில், கிழக்கு மாகாணத்தில் தொல்பொருள் திணைக்களத்திற்கு சொந்தமான 246 இடங்கள் பற்றி அறிவிக்கின்றது. அப்போதைய தேசிய மரபுரிமைகள் அமைச்சர் ஜகத் பாலசூரிய கைய…
-
- 0 replies
- 395 views
-
-
ஆசிரிய நியமனம் பெற்ற 38 பேர் ஒரு மாதம் கடந்தும் கடமைகளை பொறுபேற்கவில்லை – குளோபல் தமிழ்ச் செய்தியாளர்:- வடமாகாண கல்வி அமைச்சினால் கணிதம் மற்றும் விஞ்ஞான பாட ஆசிரியர் நியமனம் பெற்ற 38 பேர் ஒரு மாத காலத்தை கடந்ததும் தமது கடமைகளை பொறுப்பேற்கவில்லை என தெரிவிக்கப்படுகின்றது. இது குறித்து மேலும் தெரியவருவதாவது, வடமாகாண கல்வி அமைச்சிற்கு உட்பட பாடசாலைகளில் கணிதம் மற்றும் விஞ்ஞான பாடத்திற்கு 418 ஆசிரியர் வெற்றிடம் காணப்பட்டது. அதனை நிரப்புவதற்காக பத்திரிக்கை விளம்பரங்கள் ஊடாக கடந்த பெப்ரவரி மாதம் விண்ணப்பங்கள் கோரப்பட்டது. குறித்த வெற்றிடங்களுக்கு வடமாகாணத்தில் 353 விண்ணப்பங்களே கிடைக்க பெற்று உள்ளன. அதனால் போட்…
-
- 0 replies
- 236 views
-
-
நல்லாட்சியில் வடக்குக் கிழக்கில் சத்தமின்றி முன்னெடுக்கப்படும் சிங்களக் குடியேற்றம்! தமிழர் தாயகப் பகுதிகளான வடக்குக் கிழக்கில் இனப்பரம்பலை மாற்றும் நடவடிக்கையில் நல்லாட்சி அரசாங்கம் ஈடுபட்டு வருவதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இதன் ஒரு கட்டமாக திருகோணமலை மாவட்டத்திலுள்ள பாரம் பரிய தமிழர் கிராமமான நொச்சிக்குளத்தில் இரவோடு இரவாக புத்த சிலை அமைக்கும் பணி இடம்பெற்று வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. நொச்சிக்குளம் வவுனியா – திருகோணமலை வீதியில் அமைந்துள்ள தமிழர்களின் பூர்வீகக் கிராமமாகும். இக்கிராமத்தை ஆக்கிரமிக்கும் நோக்கிலேயே அங்கு புத்தர் சிலை நிறுவப்பட்டு வருவதாக அப்பிரதேச மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர். இதன் முதற்கட்டமாக அங்கு பெயர்ப்பலகை …
-
- 0 replies
- 354 views
-
-
எழுத்து மூலமான கேள்விக்கு மட்டுமே பதிலளிக்கப்படும் – தமிழரசுக் கட்சி! சமகால அரசியல் நிலவரம் தொடர்பாக எழுத்துமூலமான கேள்விகளுக்கு மாத்திரமே பதிலளிக்கப்படும் என தமிழரசுக் கட்சி அறிவித்துள்ளது. “சமகால அரசியல் கருத்தரங்கும் கேள்வி பதில் நிகழ்ச்சியும்” என்ற குறித்த நிகழ்வுஎதிர்வரும் 11ஆம் நாள் செவ்வாய்க்கிழமை பி.ப.3.30க்கு நீர்வேலியில்இடம்பெறவுள்ளது. இலங்கை தமிழரசுக் கட்சித் தலைவரான நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா மற்றும்நாடாளுமன்ற உறுப்பினர்களான சி.சிறிதரன், எம்.ஏ.சுமந்திரன் ஆகியோர் இதில்பங்கேற்கவள்ளனர். குறித்த நிகழ்வில் பங்கேற்பவர்களால் எழுத்து மூலமாக முன்வைக்கப்படும் கேள்விகளுக்கு மாத்திரமே இதன்போது பதில் வழங்கப்படும் என நிகழ்வை ஏ…
-
- 3 replies
- 626 views
-
-
கோத்தா விரைவில் கைதாகும் சாத்தியம் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச எதிர்வரும் நாள்களில் கைது செய்யப்படவுள்ளார் எனக் கொழும்பு அரசியல் வட்டாரங்களில் பரபரப்பாகப் பேசப்படுகின்றது. கோத்தபாயவின் தந்தையான டீ.ஏ.ராஜபக்சவின் கல்லறையை நிர்மாணிப்ப தற்காகப் பணம் ஒதுக்கியமை தொடர்பிபான விசாரணைக்கு அமைவாக இந்தக் கைது இடம்பெறலாம் எனத் தெரிவிக்கப்படுகின்றது. கடந்த கடந்த புதன்கிழமை அரச தலைவர் தலைமையில் இடம்பெற்ற சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் அமைச்சர்கள், உறுப்பினர்கள் சந்திப்பில் இந்த விடயம் தொடர்பில் கலந்துரையாடப்ப…
-
- 1 reply
- 478 views
-
-
அரசியலமைப்பு பேரவையிலிருந்து அடுத்த வாரம் நாம் விலகுவோம் விமல் வீரவன்ச எம்.பி. அறிவிப்பு (பா.ருத்ரகுமார்) தேசிய சுதந்திர முன்னணியின் ஐந்து பாராளுமன்ற உறுப்பினர்களும் அடுத்த வாரத்துக்குள் அரசியலமைப்பு பேரவையிலிருந்து விலக தீர்மானித்துள்ளதாக அக்கட்சியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவன்ச தெரிவித்தார். புதிய அரசியலமைப்பு மூலம் சமஷ்டியை கொண்டுவர பல சூட்சுமமமான விடயங்கள் இடம்பெற்றுள்ளதாகவும் இதற்கெதிராக பாராளுமன்றத்தில் எதிர்ப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார். கம்பஹாவில் நேற்று வெள்ளி…
-
- 0 replies
- 315 views
-
-
மாநாயக்க தேரர்களை சந்திக்க த.தே.கூ.தயார் முதலில் சிங்கள தலைமைகள் அவர்களை சந்தித்து தெளிவுபடுத்த வேண்டும் என்கிறார் சம்பந்தன் புதிய அரசியலமைப்பு விவகாரம் தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தமது நிலைப்பாடு களை மாநாயக்க தேரர்களுக்கு தெ ளிவுபடுத்த வேண்டுமானால் அதற்கு முன்பதாக சிங்களத் தலைமைகள் மாநாயக்கர்களை சந்தித்து அவர்கள் தமது நிலைப்பாடுகளை வெ ளிப்படுத்த வேண்டும். அதன்பின்னர் நாம் தேரர்களை சந்தித்து தெ ளிவுபடுத்துவோம் என்று எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா. சம்பந்தன் தெரிவித்துள்ளார். அரசாங்கத்தினால் அறிமுகப்படுத்தப்படுவதற்கு முனைந்துள்ள புதிய அரசியலமைப்புச் சட்டம் தொடர்பில் எழுந்துள்ள சர்ச்சை…
-
- 0 replies
- 216 views
-
-
பங்களாதேஷ் பிரதமருடன் ஜனாதிபதி முக்கிய சந்திப்பு பல உடன்படிக்கைகளும் கைச்சாத்து பங்களாதேஷுக்கு மூன்று நாள் உத்தியோக பூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, அந்நாட்டின் பிரதமர் ஷேக் ஹசீனாவை சந்தித்ததோடு வர்த்தக உடன்படிக்கையை ஏற்படுத்துதல் மற்றும் விசேட பொருளாதார வலயத்தை ஏற்படுத்தல் தொடர்பாகவும் கவனம் செலுத்தியுள்ளார். பங்களாதேஷ் பிரதமர் அலுவலகத்திற்கு நேற்று வெள்ளிக்கிழமை விஜயம் செய்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, அந்நாட்டு பிரதமருடன் சிநேகபூர்வ உரையாடலொன்றை மேற்கொண்டார். இதன்போது நட்பு நாடுகளாக செயற்பட்டுவரும் இலங்கை மற்றும் பங்களாதேஷ் நாடுக…
-
- 0 replies
- 222 views
-
-
பலவந்தமாக காணாமல் ஆக்கப்படுவதை குற்ற செயலாக அறிவிக்கும் சட்டத்தை கொண்டுவாருங்கள் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுப் பெண்கள் கோரிக்கை வவுனியா, இலங்கையில் ஆட்கள் வலிந்து காணாமல் ஆக்கப்படுவது தொடர்பில் தண்டனை விலக்கு உரிமையை முடிவுக்குக் கொண்டு வருவதுடன், அவை மீண்டும் இடம்பெறா மல் இருப்பதை உறுதி செய்யுமாறு காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களான பெண்கள் கோரிக்கை விடுத்திருக்கின்றனர். வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களான சுமார் 400 பெண்கள் இணைந்து கையெழுத்திட்டு இந்த கோரிக்கையை முன்வைத்திருக்கின்றனர். இன முரண்பாட்டினால் பாதிக்கப்பட்டுள்ள ஆயிரக்கணக்கிலான இந்தப் பெண்கள் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட தமது உறவினர்களைத் தொடர்ச்சி…
-
- 0 replies
- 196 views
-
-
கொக்காவில் பகுதியில் ஆணின் சடலம் மீட்பு மாங்குளம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கொக்காவில் பகுதியில் ஆணொருவரின் சடலம் இன்று காலை மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். சடலமாக மீட்கப்பட்ட நபர் நேற்று புகையிரதத்திலிருந்து விழுந்திருக்கலாமென சந்தேகிப்பதாக மாங்குளம் பொலிசார் தெரிவித்தனர். இதேவேளை, மேலதிக விசாரணைகளை மாங்குளம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். http://www.virakesari.lk/article/21895
-
- 0 replies
- 165 views
-