Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. தமிழ் மக்களின் அபிமானம் பெற்றவொரு தலைவராகவும் மக்களின் உணர்வுகளைப் பிரதிபலிக்கும் ஒருவராகவும் முதலமைச்சர் விக்னேஸ்வரன் விளங்குகிறார். அவரை பதவிநீக்கம் செய்ய முயல்வது எமது கண்களை நாமே குத்திக் கொள்ளும் செயலாகவே அமையும் என நாடுகடந்த தமழீழ அரசாங்கத்தின் பிரதமர் விசுவநாதன் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்படுகின்றது. குறித்த அறிக்கையில், வடக்கு மாகாண முதலமைச்சர் நீதியரசர் C.V விக்னேஸ்வரன் மீதான நம்பிக்கையில்லாத் தீர்மான முயற்சி குறித்து நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் தனது கவலையையும் கண்டனத்தையும் தெரிவித்துக் கொள்வதோடு, முதலமைச்சருக்கு ஆதரவாகத் தமிழ் அமைப்புகளும் மக்களும் முன்னெடுக்கும் போராட்டங்களுக்கும் தனது தோழமை கலந்த ஆதரவைத் தெரிவித்துக் கொள்கிற…

    • 0 replies
    • 370 views
  2. முதலமைச்சரின் நிலைப்பாடுகளுக்கு எதிராக சிறிலங்காஅரசாங்கத்துடன் இணைந்து மேற்கொள்ளப்பட்டுவரும் சதி நடவடிக்கைகளுக்கு, எதிர்ப்பு தெரிவித்தும், முதலமைச்சரின் கோட்பாடுகளுக்கான மக்கள் ஆதரவை வெளிப்படுத்தியும் இன்று நடைபெற்ற கடையடைப்பிற்கு எமது கோரிக்கையை ஏற்று ஒத்துழைப்பு தந்த அனைத்து உள்ளங்களுக்கும் தமிழ் மக்கள் பேரவை நன்றிகளை தெரிவித்துள்ளது. இது குறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள தமிழ் மக்கள் பேரவை இந்த விடயத்தினை தெரிவித்துள்ளது. அந்த அறிக்கையில், காலநெருக்கடி மிகுந்த சூழலில், மிகக்குறுகிய முன்னறிவித்தலின் மத்தியிலும், தாமாக முன்வந்து ஆதரவு வெளிக்காட்டிய வர்த்தகப்பெருமக்கள், போக்குவரத்து சங்கங்கள், பாடசாலைகள், பல்கலைக்கழக சமூகம், ஊடகங்கள் செயற்பாட்டாள…

    • 0 replies
    • 307 views
  3. வடமாகாண முதலமைச்சருக்கு எதிராக கொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லா பிரேரணைக்கு எதிர்ப்பு தெரிவித்து வடமாகாணத்தில் இன்று ஹர்த்தால் மேற்கொள்ளப்பட்டிருந்தது. இந்த ஹர்த்தாலுக்கு வவுனியா வடக்கு வர்த்தகர் சங்கம் பூரண ஆதரவை வழங்கியதுடன், இதனால் அப்பகுதி மக்கள் பெரும் அசௌகரியங்களுக்கு முகங்கொடுத்திருந்தனர். அந்த வகையில் வவுனியா வடக்கில் கனகராயன்குளம், நெடுங்கேணி ஆகிய பகுதிகளில் கடைகள் மூடப்பட்டு பூரண ஆதரவு வழங்கப்பட்டிருந்தது. குறித்த பகுதிகளில் பாடசாலைகள் மற்றும் அரச திணைக்களங்கள் வழமைபோன்று செயற்பட்ட போதிலும் மாணவர்களின் வருகையும், அரச உத்தியோகத்தர்களின் வருகையும் குறைவாக காணப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. …

    • 0 replies
    • 294 views
  4. விசாரணையை ஆரம்பித்தது முதல் அதை கொண்டு சென்ற படிகள் உட்பட அனைத்திலும் வடமாகாண முதலமைச்சர் தவறு செய்துள்ளார் என வடமாகாண அமைச்சர் பா.டெனீஸ்வரன் கூறியுள்ளார். வடமாகாண வீதி போக்குவரத்து அமைச்சின் மன்னார் மாவட்ட உப அலுவலகத்தில் இன்று மாலை விசேட ஊடகவியலாளர் சந்திப்பு இடம் பெற்றது. இதில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார். இதன்போது தொடர்ந்தும் தெரிவிக்கையில், வடமாகாண விவசாய அமைச்சர் ஐங்கரநேசன் எவ்வளவு நிதி மோசடி செய்தார்? எங்கு செய்தார்? எப்போது செய்தார் என்ற தொகை மதிப்பீட்டை உங்களினால் வெளிப்படுத்த முடியுமா? முடியாது. அறிக்கை வெளி வந்தவுடன் இரண்டு நீதிபதிகளும், முன்னாள் அரச அதிபரும் இந்த விடயங்களை கணக்காய்வுக்கு உட்…

    • 0 replies
    • 476 views
  5. நுவரெலியா - நானுஓயா பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் சிறுமி ஒருவர் பலியான சம்பவம் தொடர்பில் நானுஓயா பொலிஸ் நிலைய பொலிஸ் அதிகாரிகள் 7 பேர் இடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளுக்கு அமைய இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளதாக பெலிஸ் ஊடக பிரிவு தெரிவித்துள்ளது. அதன்படி , குறித்த அதிகாரிகள் நுவரெலியா பொலிஸ் நிலையத்திற்கு மாற்றப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இதேவேளை, உயிரிழந்த சிறுமியின் சடலம் ரதல்ல கீழ்ப்பிரிவு தோட்ட பொது மயானத்தில் இன்றைய தினம் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. http://www.tamilwin.com/community/01/149296?ref=ho…

  6. கிளிநொச்சியில் வழமைக்கு திரும்பிய பெரும்பான்மையான வர்த்தக நிலையங்கள் வடக்கு மாகாண முதலமைச்சர் மீது கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து வடக்கில் மேற்கொள்ளப்பட்ட ஹர்தால் காரணமாக கிளிநொச்சியின் இயல்பு நிலையும் இன்று காலை பாதிக்கப்பட்டிருந்தது. கிளிநொச்சியில் பெரும்பாலான வியாபார நிலையங்கள் பூட்டப்பட்டிருந்ததோடு போக்குவரத்து சேவைகளும் வழமைக்கு மாறாக குறைவாகவே காணப்பட்டது இருப்பினும், கிளிநொச்சியின் பெரும்பாலான வர்த்தக நிலையங்கள் திறக்கப்பட்டு கிளிநொச்சியின் வர்த்தக செயற்பாடுகள் இப்பொழுது வழமைக்குத் திரும்பிக்கொண்டுள்ளதனை அவதானிக்க கூடியதாக அங்கிருக்கும் எமது பிராந்திய செய்தியாளர் தெரிவிக்கின்றார். …

    • 5 replies
    • 482 views
  7. முடிவெடுக்கும் அதிகாரத்தை முதலமைச்சரிடம் விட்டு விடுங்கள் ஜனாதிபதி வட மாகாண சபை விவகாரத்தில் தீர்மானம் எடுக்கும் முழு அதிகாரத்தையும் முதலமைச்சரிடம் விட்டுவிடுமாறு ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன வட மாகாண ஆளுநர் ரெஜினோலட் குரேயிடம் வலியுறுத்தியுள்ளார். ஊழல் மோசடிக்கு எதிராக செயற்படுவது நல்லாட்சியின் கோட்பாடு என்பதால் முதலமைச்சரின் தீர்மானத்தில் மத்திய அரசு தலையிடுவது முரண்பாடாக அமையும் எனவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார். வடமாகாண அமைச்சர்களின் ஊழல் தொடர்பாக நடவடிக்கை மேற்கொண்ட வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனை பதவி நீக்குமாறு கோரி வடமாகாண சபையில் அங்கம் வகிக்கும் இலங்கை தமிழரசுக் கட்சி உறுப்பினர்கள் சிலரும், ரெலோ கட்சியிலிருந்து தமிழரசுக் கட்…

  8. நோயாளர் பராமரிப்பில் அக்கறையில்லை பணப்பதுக்கலில் அக்கறை செலுத்தும் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை நிருவாகம் "அபிவிருத்தி" எனும் மண் குதிரை ஒன்றை காண்பித்து மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை நிருவாகம் பாரிய பணப்பதுக்கலில் ஈடுபட்டு வருகிறது. இந்த பதுக்கல் நிகழ்வுக்கு அவ் வைத்தியசாலையில் கடமையாற்றும் பல துறைசார் நிபுணர்கள், பொறுப்பு வாய்ந்த உத்தியோகத்தர்கள் என பலரும் உடந்தையாக இருப்பதாக மிக வேதனையானது. இந்த அதிகாரிகளுக்கு நிருவாகம் பணப்பட்டுவாடா செய்வதில்லை.தமக்கு உதவுவதற்காக கடமை நேரத்தை வியாபார தேவைக்காக பயன்படுத்த உதவுவதே நிருவாகத்தின் நன்றிக்கடன். கடந்த மாதத்தில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை நிருவாகம் 100 கதிரைகளை கொள்வனவு செய்தது. இந…

  9. விசேட அதிரடிப்படையினர் ரோந்து எஸ்.நிதர்ஷன் வடக்கு மாகாண முதலமைச்சருக்கு ஆதரவாக, யாழ்ப்பாணத்தில் இன்று (16) ஹர்த்தால் அனுஸ்டிக்கப்பட்டு வரும் நிலையில், யாழ். குடா நாட்டில் இன்று பரவலாக விசேட அதிரடிப்படையினர் ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதை அவதானிக்கக் கூடியதாகவுள்ளது. இன்றையதினம், பாடசாலைகள், வியாபார நிலையங்கள் எவையும் இயங்கவில்லை. போக்குவரத்து சேவைகள் இடம்பெறவில்லை. http://www.tamilmirror.lk/யாழ்ப்பாணம்/விசேட-அதிரடிப்படையினர்-ரோந்து/71-198781

  10. பள்ளிவாசல்கள் தாக்கப்படுகின்றமை தொடர்பில் உடனடியாக தலையீட வேண்டும்..! (ஆர்.யசி) சிறுபான்மை இனத்தவர் மீதான அடக்கு முறைகள் மற்றும் அவர்கள் மீதான அழுத்தம் குறித்து சர்வதேச தரப்பு கண்டனம் தெரிவிப்பதாக ஐரோப்பிய ஒன்றிய தூதுக்குழுவின் ஆலோசகர் போல் கொட்ப்ரி தெரிவித்தார். பள்ளிவாசல்கள் தாக்கப்படுகின்றமை தொடர்பில் அரசாங்கம் உடனடியாக கவனம் செலுத்தப்பட வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டார். இலங்கையின் அண்மைக்கால செயற்பாடுகள் சிறுபான்மை மக்களுக்கு எதிரான அடக்குமுறைகள் மற்றும் பள்ளிவாசல்கள் தாக்கப்படுகின்றமை மற்றும் கடைகள் தீ வைக்கப்பட்டுள்ளமை உள்ளிட்ட சம்பவங்கள் குறித்து ஐரோப்பிய ஒன்றிய தூதுக்குழுவின் நிலைப்பாடு எவ்வாறானது என வினவியபோதே அவர் மேற்கண்ட…

  11. வடமாகாண முதலமைச்சரின் செயற்பாட்டிற்கு கடும் கண்டனத்தை தெரிவிக்கின்றோம். அத்துடன் வடமாகாண முதலமைச்சருக்கு எதிராக கொடும்பாவி எரிப்போம் என தமிழரசுக் கட்சியின் வவுனியா மாவட்ட இளைஞர் அணி உறுப்பினர் க.ஞானசீலன் தெரிவித்துள்ளார். தமிழரசுக் கட்சியின் வவுனியா மாவட்ட அலுவலகத்தில் நேற்று இரவு இடம்பெற்ற ஊடகசந்திப்பின் போதே இதனைத் தெரிவித்தார். இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில், தமிழரசுக் கட்சியின் வவுனியா மாவட்ட இளைஞர் அணி என்ற வகையில் வடமாகாண முதலமைச்சரின் செயற்பாட்டிற்கு நாம் எமது கண்டனத்தை தெரிவித்துக் கொள்கின்றோம். முதலமைச்சர் இரண்டு நீதிபதிகளையும், ஒரு அரச உத்தியோகத்தரையும் வைத்து இந்த விடயம் தொடர்பில் விசாரணை நடத்தியிருந்தார். …

  12. வடமாகாணசபைக்கு வந்த சோதனை -நிலாந்தன் அமைச்சர்கள் மீதான விசாரணைக்குழுவின் அறிக்கைக்குப் பின் வடமாகாணசபைக்கு வந்திருக்கும் சோதனை எனப்படுவது முதலாவதாக தமிழ்த்தேசியத்திற்கு வந்த சோதனைதான். இரண்டாவதாக தமிழ் ஜனநாயகத்திற்கு வந்த சோதனைதான். மூன்றாவதாக அமைச்சர்களுக்கு வந்த ஒரு சோதனை அது. நான்காவதாக விக்கினேஸ்வரனுக்கும் அது சோதனைதான். முதலாவதாக அது எப்படி தமிழ்த்தேசியத்திற்கு ஒரு சோதனையாக வந்திருக்கிறது என்று பார்க்கலாம். ஆட்சி மாற்றத்தின் பின் அம்மாற்றத்திற்குப் பங்காளியாக இருந்த கூட்டமைப்பானது அரசாங்கத்தோடு குறைந்தளவு எதிர்ப்பையும், கூடியளவு இணக்கத்தையும் பேணும் ஒரு நடைமுறையைப் பின்பற்றி வருகிறது. மகிந்தவின் காலத்தில் தன்னைப் புலிநீக்கம் செய்து கொண்ட கூட்டமை…

    • 8 replies
    • 720 views
  13. வடமாகாண சபை நிலைமை தொடர்பாக நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் ஐபிசி தமிழுக்கு பிரத்தியேக நேர்காணல்

  14. கடையடைப்புக்கு அழைப்பு எஸ்.நிதர்ஷன் மாகாணசபை உறுப்பினர்கள் சிலரினால், வடமாகாண சபை முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கு எதிராகக் கொண்டுவரப்பட்டிருக்கும் நம்பிக்கையில்லா தீர்மானத்தை கண்டித்து, வடக்கு மாகாணத்தில் நாளை (16) கடையடைப்பை மேற்கொள்ளுமாறு, தமிழ் மக்கள் பேரவை கேட்டுள்ளது. "இந்த குறுகிய முன்னறிவிப்பை பொறுத்துக்கொண்டு, இனத்தின் நலன்கருதி எமது உணர்வுகளை வெளிப்படுத்தும் நோக்குடன், அனைவரும் இந்தக் கடையடைப்புக்கு ஆதரவு தரவேண்டுமென நாம் விநயமுடன் வேண்டுகிறோம். மேலும், பதவி போன்ற அற்ப பேரங்களுக்காக கோட்பாடுகளை விட்டுக்கொடுக்காது, எமக்காக புரியப்பட்ட தியாகங்களையும் அர்ப்பணிப்புகளையும் மனதில் கொண…

    • 9 replies
    • 579 views
  15. முல்லைத்தீவில் கஞ்சாவுடன் மூவர் கைது முல்லைத்தீவு புதுக்குடியிருப்புப் பகுதியில் கஞ்சா போதைப்பொருளுடன் மூவரை கைதுசெய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இவ்வாறு கைதுசெய்யப்பட்டவர்களிடமிருந்து 60 கிலோ கிராம் கஞ்சா போதைப்பொருளை கைப்பற்றியுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர். கஞ்சா போதைப்பொருளுடன் கைதுசெய்யப்பட்டவர்களிடம் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். http://www.virakesari.lk/article/20947

  16. நாட்­டுக்­குத் தீ வைக்க முயற்­சிக்­கி­றார் மகிந்த முன்­னாள் அரச தலை­வர் மகிந்த ராஜ­பக்ச இந்த நாட்­டுக்கு மீண்­டும் தீ வைப்­ப­தற்கு முயற்சி செய்­கின்­றார் .இவ்வாறு ஐக்­கிய தேசிய காட்­சி­யின் கொழும்பு மாவட்ட நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் முஜி­புர் ரஹ்­மான் தெரி­வித்­தார்.அவர் தெரி­வித்­த­தா­வது, போர் முடிந்த பின்­னர் நாட்­டில் இனங்­க­ளி­டையே நல்­லி­ணக்­கத்­தைக் கட்­டி­யெ­ழுப்­பு­வ­தற்­கான வாய்ப்பு மகிந்­த­வுக்கு அதி­கம் இருந்­தது. நாட்­டில் இலங்­கை­யர் என்ற ஓரி­னம் மட்­டும் தான் உள்­ளது என்று அவர் கூறி­னார். அவ­ரால் நல்­லி­ணக்­கத்­தைக் கட்­டி­யெ­ழுப்ப முடி­ய­வில்லை. அவ­ரது ஆட்­சி­யில் தான் முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ரா­க­வும் தமி­ழர்­…

  17. வடக்கில் இன்று பூரண ஹர்த்தால் இயல்புநிலை பாதிப்பு வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரனுக்கு எதிரான செயற்பாடுகளுக்கு எதிர்ப்பை தெரிவிக்கும் முகமாக வடகிழக்கில் இன்றைய தினம் பூரண ஹர்த்தால் இடம்பெற்றுவருகின்றது. ஹர்த்தாலை முன்னிட்டு வடமாகாணமெங்கும் கடைகள் பூட்டப்பட்டு பாடசாலைகள், வங்கிகள் அரச தனியார் நிறுவனங்கள் அனைத்தின் செயற்பாடுகளும் முடக்கப்பட்டுள்ளன. இதனால் வடக்கின் இயல்புநிலை முற்றாக பாதிக்கப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார். குறித்த பொது கடையடைப்புக்கு தமிழ் மக்கள் பேரவை அழைப்பு விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது. http://www.virakesari.lk/article/20928

  18. முன்னாள் தமிழீழ விடுதலைப் புலி போராளி ஒருவருக்கு மரண தண்டனை முன்னாள் தமிழீழ விடுதலைப் புலி போராளி ஒருவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. மொனராகல் உயர் நீதிமன்றம் நேற்றைய தினம் இவ்வாறு மரண தண்டனை விதித்துள்ளது. மட்டக்களப்பு வெள்ளாவெளி பிரதேசத்தைச் சேர்ந்த 28 வயதான முன்னாள் போராளி ஒருவருக்கே இவ்வாறு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 2008ம் ஆண்டு ஜனவரி மாதம் 21ம் திகதி தனமல்வில பிரதேசத்தின் ஊவ குடாஓய அலிமங்கட பிரதேசத்தில் உப காவல்துறை பரிசோதகர் மற்றும் இரண்டு காவல்துறை கான்ஸ்டபிள்களை துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்தமை மற்றும் அவர்களது ஆயுதங்களை களவாடியமை ஆகியனவே இந்த முன்னாள் புலிப் போராளிக்கு எதிரான குற்றச்சாட்டுக்களாக…

  19. முதலமைச்சருக்கு ஆதரவு தெரிவித்து வவுனியாவில் மக்கள் ஆர்ப்பாட்டம் வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரனுக்கு ஆதரவு தெரிவித்து வவுனியா மத்திய பேருந்து தரிப்பிடத்திற்கு முன்பாக இன்று காலை 10 மணியளவில் வவுனியா மாவட்ட பொது அமைப்புக்களினால் ஏற்பாடு செய்யப்பட்ட ஆர்ப்பாட்டப்போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. இதில் ஊழல்வாதிகளைக் கைது செய்து ஊழலைத் தட்டிக்கேட்டதற்கு தண்டனையா? மக்கள் புரட்சி வெடிக்கட்டும். எங்கள் முதல்வர் விக்னேஸ்வரன் ஜயா, முதல்வரே எடுத்த முடிவை மாற்ற வேண்டாம். வாக்கிற்கு நாம், எம்மை சுரண்ட நீங்களா? போன்ற பல்வேறு கோசங்களை எழுப்பியவாறு போராட்டக்காரர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இப் போராட்டத்தில் வன்னி மாவட்ட பாரா…

  20. பொருத்து வீடு குறித்து அரச அதிகாரிகளுக்கு நேற்று வகுப்பெடுப்பு பொருத்து வீடு நிர்­மா­ணிக்­க­வுள்ள நிறு­வ­னத்­தி­னர், வடக்கு – – கிழக்கு மாவட்­டச் செய­லர்­கள் மற்­றும் பிர­தேச செய­லர்­க­ளைச் சந்­தித்து, இந்த வீடு அமைக்­கப்­ப­டு­வ­தன் நன்மை பற்றி விளக்­க­ம­ளித்­துள்­ள­னர். மீள்­கு­டி­யேற்ற அமைச்­சின் ஏற்­பாட்­டில் இந்­தக் கலந்­து­ரை­யா­டல் கொழும்பு ரேனுகா விடுதியில் நேற்று இரண்டரை மணி நேரம் நடைபெற்றது. மீள்குடியேற்ற அமைச்சின் மீளாய்வுக் கூட்டத்துக்கு மாவட்டச் செயலாளர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. இதற்கு அமைவாக நேற்றைய கூட்டத்தில், சுமார் அரை மணி நேரம் மீள்குடியேற்ற அமைச்சால் முன்னெடுக்கப்படும் வேலைகளின் முன்னேற்ற மீளா…

  21. இலங்கையில் இன்னமும் தாக்குதல் அச்சம் உள்ளது எச்சரிக்கை செய்கிறது பிரிட்டன் இலங்­கை­யில் இன்­ன­மும் தீவி­ர­வா­தத் தாக்­கு­தல் அச்­சம் நில­வு­வ­தாக பிரிட்­டன் தனது நாட்டு உல்­லா­சப் பய­ணிக­ளுக்கு எச்­ச­ரிக்கை விடுத்­துள்­ளது. பிரிட்­டன் அய­லு­றவு மற்­றும் கொமன்­வெல்த் பணி­ய­கம், தமது நாட்டு குடி­மக்­க­ளுக்கு விடுத் துள்ள பயண எச்­ச­ரிக்கை குறிப்­பி­லேயே இவ்­வாறு கூறி­யுள்­ளது.அதில் மேலும் தெரி­விக்­கப்­பட்­டுள்­ள­தா­வது, இலங்­கை­யில் தீவி­ர­வாத அச்­சு­றுத்­தல் பற்­றிய பிரிட்­டன் அர­சின் மதிப்­பீட்­டில் எந்த மாற்­ற­மும் இல்லை.2009 மே மாதம், இலங்கை அரசுக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையிலான இராணுவ மோதல்கள் முடிவுக்கு வந்தன. 2011…

  22. 6 இளைஞர்களுக்கு வவுனியா மேல் நீதிமன்றத்தால் 10 ஆண்டு கடூழியச்சிறைத்தண்டனை வவுனியாவில் 6 பேர் கொண்ட இளைஞர் குழுவினருக்கு வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி பாலேந்திரன் சசிமகேந்திரன் 10 வருட கடூழியச்சிறைத்தண்டனையும் தலா 10 ஆயிரம் ரூபா தண்டப்பணமும் செலுத்துமாறு தீர்ப்பளித்துள்ளார். கடந்த 2013 ஆம் ஆண்டு வவுனியா பூந்தோட்டம் பகுதிக்குச் சென்ற முச்சக்கரவண்டியினை வழிமறித்த பொலிசார் மேற்கொண்ட விசாரணையின்போது முச்சக்கரவண்டியில் பயணம் செய்த 6 இளைஞர்களை சோதனையிட்டபோது வாள்கள், கத்திகள், பொல்லுகள், கைக்குண்டு என்பனவற்றுடன் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்டனர். வழக்கு விசாரணைகள் இடம்பெற்றதையடுத்து பிணையில் செல்ல அனுமதிவழங்கப்பட்டது. …

  23. வடமாகாணசபையின் நிலைப்பாடு தொடர்பில் முதலமைச்சர் எடுத்த தீர்மானத்தினால் முழு நாட்டிற்கும் முன்மாதிரியாக திகழ்கின்றார் என அமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் கூறினார். கொழும்பில் மாற்று திறனாளிகளுக்கு பொருட்கள் வழங்கி வைக்கும் நிகழ்வில் நேற்று கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்தார். இதன்போது அவர் தொர்ந்தும் தெரிவிக்கையில், வடமாகாண முதலமைச்சரை பார்த்து முழு நாடும் இன்று பிரம்மித்து போயிருக்கின்றது. கடந்த காலத்தில் அவரை பார்த்து கேலி செய்தவர்கள் எல்லாம் இப்பொழுது வாயடைத்து போயுள்ளனர். காரணம் விக்னேஸ்வரன் தனது மாகாண சபையில் நான்கு அமைச்சர்களுக்கு எதிராக குற்றம் சாட்டப்பட்ட போது தயக்கமின்றி விசாரணை குழுவை அமைத்து அறிக்கை…

    • 0 replies
    • 273 views
  24. முதலமைச்சருக்கு ஆதரவு தெரிவித்து கிளிநொச்சியில் ஆர்ப்பாட்டம் வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரனுக்கு எதிராக கொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்தும் முதலமைச்சருக்கு தங்களின் ஆதரவை தெரிவித்தும் கிளிநொச்சி பொதுச் சந்தைக்கு முன்னாள் பொதுமக்கள் மற்றும் இளைஞர்களால் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. கிளிநொச்சி பொதுச் சந்தைக்கு முன்னாள் ஒன்று திரண்ட பொது மக்கள் முதலமைச்சருக்கு ஆதரவு தெரிவித்தும் நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்தும் இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டவா்கள் ஊழலுக்கு தண்டனை வழங்கு நீதியை, மக்களுக்காக ஆளுநரை…

  25. முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் மீது கைவைத்தால் வடமாகாண சபை முற்றிலுமாக முடக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வடமாகாண சபையில் ஏற்பட்டுள்ள குழப்ப நிலையை தொடர்ந்து, முதலமைச்சருக்கு ஆதரவு தெரிவித்து யாழ். நல்லூரில் பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், குறித்த போராட்டத்தில் பெருந்திரளான இளைஞர்கள் கலந்துகொண்டுள்ளதுடன், முதலமைச்சருக்கு வலுசேர்க்கும் வகையில் பல்வேறு கோஷங்களை எழுப்பி வருகின்றனர். யாழ். நல்லூர் கந்தசுவாமி ஆலயம் முன்பாக ஆரம்பிக்கப்பட்ட இந்த ஆர்ப்பாட்டம் தற்போது வடமாகாண முதலமைச்சரில் அலுவலகம் நோக்கி சென்று கொண்டிருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்நிலையில், போராட்டத்தில் கலந்துகொண்டுள்ள இளைஞர்கள் "மு…

    • 0 replies
    • 342 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.