ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143361 topics in this forum
-
பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தை நீக்க வேண்டும் -எஸ்.நிதர்ஷன் பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்தை நீக்குவதற்கு அரசாங்கத்துக்கு அழுத்தம் வழங்குவதென, ஐந்து தமிழ்க் கட்சிகள் ஒன்றிணைந்து தீர்மானம் ஒன்றை மேற்கொண்டுள்ளன. யாழ். நகரில், ஞாயிற்றுக்கிழமையன்று (21) இடம்பெற்ற கலந்துரையாடலில், தமிழரசுக் கட்சி, தமிழீழ மக்கள் விடுதலைக்கழகம், ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி, தமிழர் சமூக ஜனநாயக கட்சி மற்றும் தமிழீழ விடுதலை இயக்கம் ஆகியன கலந்துகொண்டிருந்தன. இதன்போது, பயங்கரவாத தடைச் சட்டம் ஒன்று தேவையற்றது எனவும், தற்போது கொண்டுவரப்பட்டுள்ள புதிய பயங்கரவாத எதிர்ப்புத் தடைச் சட்டம் நீக்கப்பட வேண்டும் எனவும் தீர்மானம் ந…
-
- 0 replies
- 185 views
-
-
கேரள கஞ்சாவுடன் இராணுவ வீரர் கைது! வவுனியா மத்திய பஸ் நிலையத்தில் நேற்று (22) மாலை 5.30 மணியளவில் கேரள கஞ்சா வைத்திருந்த இராணுவ வீரர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். யாழ்ப்பாணத்திலிருந்து தனது சொந்த ஊரான மதவாச்சி பஸ்ஸில் பயணித்த இராணுவ வீரரின் கைவசமிருந்த 50 கிராம் 200 மில்லிகிராம் கேரள கஞ்சாவினை வவுனியா மத்திய பஸ் நிலையத்தில் வைத்து பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். இராணுவ வீரரை மேலதிக விசாரணைகளின் பின்னர் வவுனியா மாவட்ட நீதவான் நீதிமன்றில் ஒப்படைக்கவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். கைது செய்யப்பட்ட இராணுவ வீரர் யாழ்ப்பாணம் பூரணி இராணுவ நிலையத்தில் பணிபுரிகின்றமை குறிப்பிடத்தக்கது. http://www.virakesari.lk/article/20237
-
- 0 replies
- 276 views
-
-
இடைக்கால அறிக்கை வரைபு வெளியீடு குறித்து இறுதி தீர்மானம் எடுக்கப்படுமா? (ஆர்.ராம்) புதிய அரசியலமைப்பினை உருவாக்குவதற்கான வழிநடத்தல் குழுக் கூட்டம் இன்றைய தினம் பிற்பகல் 2.30 மணிக்கு நடைபெறவுள்ளது. கடந்த மூன்றாம் திகதி பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் கூடியிருந்த வழிநடத்தல் குழுக்கூட்டத்தில் புதிய அரசியலமைப்பை உருவாக்குவதற்காக கலந்துரையாடப்பட்டு கொள்கையளவில் இணக்கப்பாட்டை எட்டிய விடயங்கள் மற்றும் உபகுழுக்களின் அறிக்கைகளில் முன்மொழியப்பட்ட விடயங்கள் ஆகியவற்றை உள்ளடக்கிய இடைக்கால அறிக்கையின் வரைபு வழிநடத்தல் குழுவில் அங்கம் வகிக்கும் 21 உறுப்பினர்களிடத்திலும் …
-
- 0 replies
- 266 views
-
-
அமைச்சர் மனோவுக்கு தூதுவிட்ட ஞானசாரர் தனது கைதைத் தடுப்பதற்காக தான் கைது செய்யப்படுவதைத் தடுப்பதற்காகப் பொது பல சேனாவின் பொதுச் செய லாளர் அத்தே ஞானசார தேரர் சார்பில் அமைச்சர் மனோ கணேசனிடம் தூது சென்றுள்ளார் மாகாண முதலமைச்சர் ஒருவர். தேரரைக் கைது செய்யுமாறு அரச தலைவர் மைத்திரிபால சிறிசேனவிடம் வலியுறுத்த வேண்டாமென குறித்த முதலமைச்சர் தன்னிடம் கேட்டார் என்று மேல் மாகாண மக்கள் முன்னணி யின் தலைவரும் தேசிய கலந்துரையா டல், சகவாழ்வு மற் றும் அரசகரும மொழி கள் அமைச்சருமான மனோ கணேசன் நேற்றுத் தனது சமூக வலைத்தளப் பக்கங்களில் தெரிவித்திருந்தார். சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் மையக் குழ…
-
- 0 replies
- 356 views
-
-
9 வருடங்கள் தடுப்பிலிருந்த அரசியல் கைதி விடுதலை சிறப்பு நீதிமன்றம் நேற்றுத் தீர்ப்பு பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுக் கடந்த 9 வருடங்களாகத் தடுத்து வைக் கப்பட்டிருந்த தமிழ் அரசியல் கைதிக்கு கொழும்பு சிறப்பு மேல் நீதிமன்றம் நேற்று விடுதலை வழங்கியது. கிளிநொச்சியைச் சேர்ந்த ஜெயராம் இராமநாதனுக்கு எதிராக சட்டமா அதிபரால் பயங்கரவாதச் சட்டத்தின் கீழ் முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகளை கொழும்பு சிறப்பு மேல் நீதிமன்ற நீதிபதி பியசேன ரணசிங்க நிராகரித்தார். ஜப்பான் அரசால் நிர்மாணிக்கப்பட்ட கொழும்பு தொட்டலங்க பாலத்துக்கு வெடிகுண்டு வைத்து தகர்க்கத் திட்டம் தீட்டினார் என்று முதல் குற்றச்சாட்டும், …
-
- 0 replies
- 197 views
-
-
இன்று இலங்கையில் முஸ்லிம்களை குறிவைத்து நடக்கும் இனவாத தாக்குதல்களுக்கும், எதிர்ப்புகளுக்கும் மூலவேர் எது என்று நாம் சிந்திக்க துவங்கினோமானால் அதற்கு நாமும் ஒரு காரணம்தான் என்பதை புரிந்து கொள்ளமுடியும். அதற்கு இந்தியாவின் தமிழ் நாட்டு அரசியலைபற்றியும் கொஞ்சம் சீர்தூக்கி பார்க்கவேண்டும் அப்போதுதான் நமது நாட்டு அரசியலில் ஏற்பட்ட குறைபாடுகளுக்கு அர்த்தம் கண்டுபிடிக்க முடியும். இன்று தமிழ்நாட்டு அரசியலை பொருத்தவரை அங்கே ஒருகோடிக்குமேல் முஸ்லிம் மக்கள் வாழ்ந்தாலும், தமிழ்நாட்டின் சட்டசபைக்கு முஸ்லிம்கள் தரப்பாக யாரும் சட்டசபை உறுப்பினராகவோ அமைச்சராகவோ கோலோச்சிய வரலாறுகளை காணமுடியவில்லை, அதனால் முஸ்லிம்கள் என்ற காரணத்தினால் அபிவிருத்தியிலும் உரிமையிலும் நாங்கள் பி…
-
- 1 reply
- 552 views
-
-
வடக்கின் முதலமைச்சர் களத்தில் இறங்க வேண்டும் தமிழ் மக்களின் விடயம் தொடர்பில் இலங்கை அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தையை ஆரம்பிக்கின்ற அதேநேரம் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்து தமிழ் மக்களின் மிக இக்கட்டான சூழ்நிலையை முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் அவர்கள் எடுத்துக் கூற வேண்டும். இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி கொழும்புக்கு வந்திருந்தாராயினும் அவர் தமிழ் மக்களின் விடயம் தொடர்பில் எந்தவிதமான உறுதி மொழிகளையோ அல்லது இலங்கை அரசுக்கான அழுத்தத்தையோ கொடுக்கவில்லை என்பதுதான் உண்மை. நாங்களும் பிரதமர் மோடியைச் சந்தித்தோம் என்ற ஒரு பதிவைத் தவிர தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமைக்கும் இந்தியப் பிரதமருக்குமான சந்திப்பு எந்த வகையி…
-
- 0 replies
- 564 views
-
-
சக்தி டிவி செய்திகள் 22th May 2017, 8PM
-
- 0 replies
- 231 views
-
-
மிகச் சிறந்த நிதி அமைச்சரை ஏன் மாற்ற வேண்டுமென கூட்டு எதிர்க்கட்சி கேள்வி மிகச் சிறந்த நிதி அமைச்சரவை ஏன் மாற்ற வேண்டுமென கூட்டு எதிர்க்கட்சியினர் அரசாங்கத்திடம் கேள்வி எழுப்பியுள்ளனர். ஆசிய பசுபிக் பிராந்திய வலயத்தின் மிகச் சிறந்த நிதி அமைச்சராக தெரிவு செய்யப்பட்ட ரவி கருணாநாயக்கவை ஏன் மாற்ற வேண்டுமென கேள்வி எழுப்பியுள்ளனர். கூட்டு எதிர்க்கட்சியின் அழைப்பாளர் டலஸ் அழப்பெரும இந்தக் கேள்விளை எழுப்பியுள்ளார். மிகச் சிறந்த நிதி அமைச்சரை அரசாங்கம் ஏன் மாற்றியது என்பது புரியவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார். http://globaltamilnews.net/archives/27679
-
- 0 replies
- 330 views
-
-
ஜனாதிபதியின் கருத்தால் அதிர்ச்சி அடைந்துள்ளோம் – ச.சஜீவன் ஜனாதிபதிக்கு எதிராக யாழில் மக்கள் போராட்டங்கள் முன்னெடுக்கப்படும் என வலி.வடக்கு மீள் குடியேற்ற தலைவர் ச.சஜீவன் தெரிவித்துள்ளார். யாழ்.ஊடக அமையத்தில் திங்கட்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில் , வடக்கில் இராணுவத்தினர் பல ஆயிர கணக்கான ஏக்கர் நிலத்தினை அபகரித்து நிலை கொண்டுள்ளனர். அதனால் மக்கள் தமது சொந்த காணிகளை இழந்து நலன்புரி நிலையங்களில் வாழ்கின்றனர். இந்த நிலையில் ஜனாதிபதி வடக்கில் காணிகள் விடுவிக்கப்பட்டு விட்டன. தற்போது காணி வேண்டி போராடுபவர்கள் மேலதிக காணி வேண்டியே போராடுகின்றார்கள். என திருகோணமலையில் நடை…
-
- 0 replies
- 420 views
-
-
கிளிநொச்சி மாவட்டசெயலகத்தில் குடியரசுதின நினைவு நிகழ்வுகள் இலங்கை குடியரசுதினத்தினை நினைவுகூறும் நிகழ்வு இன்றுகாலை(22.05.2017) கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் அரசாங்கஅதிபர் சுந்தரம்அருமைநாயகம் தலைமையில் நடைபெற்றது. தேசியக்கொடிஏற்றலுடன் ஆரம்பமான இந்நிகழ்வில் அரசாங்கஅதிபர் தலமைஉரை ஆற்றும்போது, 1948ஆம்ஆண்டு பெப்ரவரிமாதம்04 ம்திகதியிலிருந்து இலங்கை பிரித்தானிய காலணித்துவத்திலிருந்து மீண்டபோதிலும் தொடந்தும் பிரித்தானிய அரசின் கிரீடத்தின் கீழ் டொமினிக் நிலைமையுடைய சுகந்திரமொன்று மட்டும்உரித்தாக இருந்தது. ஆனால் 1972 ஆம் ஆண்டின் குடியரசுரஅசியல் யாப்புடன ;இலங்கைமக்களுக்குப் பொறுப்புகூறுகின்ற முழுமையான இறைமையுடைய மற்றும் சுகந்த…
-
- 1 reply
- 255 views
-
-
கிரகரி தோட்டத்தில் சோகம் : வெள்ளவத்தையில் உயிரிழந்த இளைஞனின் இறுதி ஊர்வலம் வெள்ளவத்தை சார்லிமன்ட் வீதியில் சவோய் திரையரங்கின் பின்னால் அமைந்துள்ள ஐந்து மாடி வரவேற்பு மண்டபம் இடிந்து விழுந்ததில் பலியான அட்டன், பத்தனை கிரகரி தோட்டத்தைச் சேர்ந்த 20 வயதுடைய இளைஞனின் இறுதி ஊர்வலம் இன்று முற்பகல் இடம்பெற்றது. இளைஞனின் அகால மரணத்தால் கிரகரி தோட்டமே சோகமயமாக காணப்பட்டது. வெள்ளவத்தை சார்லிமன்ட் வீதியில் சவோய் திரையரங்கின் பின்னால் அமைந்துள்ள 'எக்சலன்ஸி' என்ற பெயரைக் கொண்ட ஐந்து மாடி வரவேற்பு மண்டபம் இடிந்து விழுந்ததில் மூவர் உயிரிழந்ததுடன் 21 பேர் காயமடைந்தமைந்திருந்தனர். இதில் குறித்த வரவேற்பு மண்டபவத்தில் பணியாற்றிய பத்தனை கிரகரி …
-
- 0 replies
- 347 views
-
-
புதிய எதிர்பார்ப்புக்களுடன் நாட்டை முன்னெடுத்துச் செல்லவே அமைச்சரவை மாற்றம் ; ஜனாதிபதி புதிய எதிர்பார்ப்புக்களுடன் ஒரு நாடு என்ற ரீதியில் முன்னேறிச் செல்வதற்கு அமைச்சரவையில் மாற்றங்களை செய்ததாக ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்தார். அந்த வகையில் நாட்டின் அபிவிருத்திக்காக அர்ப்பணிப்புடன் செயற்படுமாறு புதிதாக பதவிப்பிரமாணம் செய்துகொண்ட அமைச்சர்களிடம் தான் கேட்டுக்கொள்வதாக ஜனாதிபதி தெரிவித்தார். புதிய அமைச்சரவை மாற்றத்தின் கீழ் 9 புதிய அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்களும் இராஜாங்க அமைச்சர் ஒருவரும் இன்று முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டனர். இந்நிகழ்…
-
- 0 replies
- 227 views
-
-
பிள்ளையாரின் காணியை ஆக்கிரமித்த புத்தர் : பொதுமக்கள் விசனம் கிளிநொச்சி கிருஸ்ணபுரம் கிராமத்தில் முப்பது வருடங்களாக இருந்து வரும் பிள்ளையார் கோவிலின் காணியை கடந்த எட்டு வருடங்களாக புத்தர் ஆக்கிரமித்து இருப்பதாக கிராம மக்கள் கவலை தெரிவித்துள்ளனர். இது தொடர்பில் தெரியவருவதாவது கிளிநொச்சி கரைச்சி பிரதேச செயலக பிரிவில் உள்ள கிருஸ்ணபுரம் கிராமத்தில் காணப்பட்ட ஒரு அரச மரத்தில் கடந்த முப்பது வருடங்களாக பிள்ளையார் கோவில் ஒன்று காணப்பட்டு வந்திருக்கிறது. கிராமத்தைச் சேர்ந்த ஒருவர் தனது காணியை பிள்ளையார் கோவிலுக்கு வழங்கியிருக்கின்றார். பிள்ளையார் கோவிலும் கிழக்கு திசையாக வீதியை பார்த்த படி சிறியளவில் அமைக்கப்பட்டு பொது மக்களால் வழிபாடு …
-
- 0 replies
- 365 views
-
-
நாசமாகும் தமிழர் தேசம்
-
- 0 replies
- 321 views
-
-
குருநாகலில் பள்ளிவாசல் மீது குண்டுத் தாக்குதல் – அமெரிக்கா கண்டனம் குருநாகல் – மல்லவப்பிட்டியவில் முஸ்லிம்களின் பள்ளிவாசல் மீது இன்று அதிகாலையில் இனந்தெரியாத நபர்களால் பெற்றோல் குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இன்று அதிகாலை 3.30 மணியளவில் பள்ளிவாசல் மீது மூன்று பெற்றோல் குண்டுகள் வீசப்பட்டதாகவும், அவற்றில் ஒன்று வெடித்து, பள்ளிவாசலின் கண்ணாடிகள் நொருங்கியதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. அதேவேளை, எல்பிட்டியவில் முஸ்லிம் வர்த்தகர் ஒருவர் வர்த்தக நிலையம் இன்று அதிகாலை 2.30 மணியளவில் இனந்தெரியாத நபர்களால் தீக்கிரையாக்கப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களாக சிங்கள பௌத்த அடிப்படைவாத பொது பலசேனா அமைப்பு, முஸ்லிம்களுக்…
-
- 4 replies
- 400 views
-
-
யுத்த வெற்றி தினத்தை நாம் கொண்டாடி வரும் நிலையில் மறுபுறம் வடக்கில் நினைவேந்தல் நிகழ்வுகள் இடம்பெறுகின்றமை இலங்கைக்கு சாபமாக அமைந்துள்ளது. அரசாங்கம் கொள்கை ரீதியில் தீர்மானம் எடுக்குமாயின் சுதந்திர தினத்தில் யுத்த வெற்றி தினத்தையும் கொண்டாட முடியும் என நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக் ஷ தெரிவித்தார். யுத்தத்தை வெற்றி கொண்டதில் மஹிந்த, கோத்தாபாய ஆகியோரின் பங்களிப்புக்கும் மதிப்பளிக்க வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டார். யுத்த வெற்றி தின நிகழ்வுகள் கொண்டாடப்பட்டமை தொடர்பில் கருத்து தெரிவித்த போதே அமைச்சர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். இது குறித்து அவர் மேலும் கூறுகையில், இந்த நாட்டின் கொடிய யுத்தத்தை முடிவுக்கு கொண்…
-
- 0 replies
- 502 views
-
-
இருபத்து நான்கு ஆண்டுகள் சிறையில் கழித்த தமிழ் அரசியல் கைதி உருக்கமான மனு?! கொழும்பு புதிய மகசீன் சிறைச்சாலையில் ஆயுட்காலச் சிறைத்தண்டனையும் அதற்குமேலதிகமாக 50 வருட கடூழிய சிறைத்தண்டனையும் அனுபவித்து வரும் சிறைக்கைதி ஒருவர் ஜனாதிபதிக்கு தனது ஆயுட்கால சிறைத்தண்டனையை சாதாரண சிறைத்தண்டனையாக குறைப்பதற்கு கருணை மனுக் கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அக் கடிதத்தில் மேலும் தெரிவிக்கையில், கடந்த 1993ஆம் ஆண்டு பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு அறியாத ஒரு குற்றத்திற்காக கடந்த 24 வருடங்கள் சிறை வைக்கப்பட்டுள்ளேன். இந்நிலையில் தயவு கூர்ந்து எனது இந்தக் கருணை வேண்டுகோளினை பரிசீலித்து நானுமொரு சா…
-
- 0 replies
- 408 views
-
-
அழிக்கப்படும் ஆலங்குளம் துயிலுமில்லம் – மக்கள் விசனம்! மல்லாவியில் அமைந்துள்ள ஆலங்குளம் துயிலுமில்லத்திலிருந்து மண் அகழப்பட்டு அருகிலுள்ள இராணுவ முகாமைச்சுற்றி மண் அணை கட்டப்பட்டு வருவதாக அப்பகுதி மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர். இது தொடர்பில் மக்கள் தெரிவிக்கையில், கடந்த ஆண்டு சில துயிலுமில்லங்களிலிருந்து இராணுவத்தினர் வெளியேறிய நிலையில் நாம் எமது பிள்ளைகளுக்கு அஞ்சலி செலுத்தியிருந்தோம். இந்நிலையில், தற்போது சில தினங்களாக ஆலங்குளம் துயிலுமில்லம் இயந்திரங்களின் உதவியுடன் ஆழமாக அகழப்பட்டு அருகிலிருக்கும் இராணுவ முகாமைச்சுற்றி மண்ணணை கட்டப்பட்டு வருகின்றது. எமது பிள்ளைகளைப் புதைத்த இடத்தில் இவ்வாறு மண்ணை அகழ்ந்து இன்னொரு இடத்தில் அணை கட்…
-
- 0 replies
- 426 views
-
-
கலாநிதி ஹர்ஷா டீ சில்வா மிகத் திறமையான பொருளியலாளர். தான் ஒரு கணக்காளர் என்றும் தனக்கு நிதி அமைச்சு வேண்டும் என்று அடம் பிடித்து அதில ஒக்காந்து இருந்தவர் ரவி. தனது பங்களிப்பை திறமையாக செய்வார் என எதிர்பார்க்கப்பட்ட கலாநிதி ஹர்சாவுக்கு பொருளாதார விவகாரங்களில் இடம் கொடாது, ரவி முழுவதுமாக நிதி அமைச்சின் முழு வேலைகளையும் பார்த்தத்தினால்... ஹர்ஷா, பிரதி அமைச்சராக, வெளிவிவகார அமைச்சில் மங்களவின் கீழ் இருந்தார். ஆனாலும் ரவியின் கீழ் நாட்டின் பொருளாதார நிர்வாகத்தில் ஒரே குழப்பம். இப்ப மங்களவும், ஹர்சாவும் நிதி அமைச்சுக்கும், ரவி வெளிவிவகார அமைச்சுக்கும் மாத்தியாச்சு. இந்த அமைச்சரவையின் மாறுதலின் மிக முக்கியமான விடயமாக கருதப்டுகிறது.
-
- 0 replies
- 331 views
-
-
May 22, 2017 -பாறுக் ஷிஹான்- யாழ்ப்பாணத்தில் 27 வருடத்திற்கு பின்னர் ஐதுரூஸ் மகாம் பள்ளிவாசல் திறக்கப்பட்டது. யுத்தத்தினால் கடுமையாக பாதிக்கப்பட்ட குறித்த பள்ளிவாசலை யாழ் முஸ்லீம் மக்கள் இணைந்து மேற்கொண்ட புனரமைப்பின் பின்னர் நேற்று(21) மாலை திறந்து வைக்கப்பட்டது. இதன் போது யாழ் கிளிநொச்சி உலமா கிளை சபை தலைவர் சுபியான் மௌலவி உட்பட பலரும் கலந்து சிறப்பித்தனர். AkuranaToday.com | Read more http://www.akuranatoday.com/news/?p=138852 .
-
- 0 replies
- 376 views
-
-
இன்று காலை அமைச்சரவை மாற்றம் – மங்கள, ரவியின் பதவிகள் பறிப்பு? சிறிலங்கா அதிபர் செயலகத்தில் இன்று காலை அமைச்சரவை மாற்றம் இடம்பெறவுள்ளது. இதன் போது நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க மற்றும் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர ஆகியோர் இப்போது வகித்து வரும் அமைச்சுப் பதவிகளை இழக்கவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கி்ன்றன. அலரி மாளிகையில் நேற்று பின்னிரவு நடந்த ஐதேக நாடாளுமன்றக் குழுக் கூட்டத்தில், இன்றைய அமைச்சரவை மாற்றத்தின் போது இடம்பெறவுள்ள மாற்றங்கள் தொடர்பான பிரதமர் ரணில் விக்கிரமசிங்க விபரங்களை வெளியிட்டுள்ளார். நிதியமைச்சராக மங்கள சமரவீரவும், வெளிவிவகார அமைச்சராக ரவி கருணாநாயக்கவும் பொறுப்பேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதேவேளை, அமைச்சரவை மாற்றத்தின் போது…
-
- 1 reply
- 308 views
-
-
. தமிழர்கள் தீர்வுக்காக போராடக்கூடாது, கடவுள் கருணையினாலேயே அது சாத்தியமாகும் – விஜயகலா! தமிழ் மக்கள் தீர்வு தீர்வு என தீர்வை எதிர்பார்க்காது இருக்கவேண்டுமெனவும், கடவுள் கருணை கூர்ந்தால் மாத்திரமே எங்களுக்குத் தீர்வு கிடைக்கும் எனவும் சிறுவர் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்துள்ளார். ஜனாதிபதி மக்கள் சேவை தேசிய நிகழ்ச்சி திட்டத்தின் கீழ் ஏற்பாடு செய்யப்பட்ட நடமாடும் சேவை கிளிநொச்சி கண்டாவளை தர்மபுரம் பாடசாலையில் இன்று இடம்பெற்றது. இதில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், 30 வருடங்களாக யுத்தம் நடந்த நிலையில் நாம் அந்த வடுக்களை இல்லாமல் செய்யவே பாடுபட வே…
-
- 11 replies
- 1k views
-
-
இன்று கைது செய்யப்படுகிறார் ஞானசார தேரர்? சிறுபான்மையினருக்கு எதிரான இனவாத செயற்பாடுகளில் ஈடுபட்டுள்ள பொது பலசேனா அமைப்பின் பொதுச்செயலர் கலகொடஅத்தே ஞானசார தேரர் இன்று கைது செய்யப்படலாம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த இரண்டு வாரங்களாக முஸ்லிம்களுக்கு எதிரான 19 இனவாதச் செயற்பாடுகள் இடம்பெற்றுள்ளன. நேற்று அதிகாலை குருணாகலவில் பள்ளிவாசல் ஒன்றின் மீதும் பெற்றோல் குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டது. கடந்தவாரம் அமைச்சர் மனோ கணேசனின் செயலகத்துக்குள் அத்துமீறி நுழைந்த ஞானசார தேரர், அமைச்சருக்கு அச்சுறுத்தல் விடுத்திருந்தார். இதுகுறித்து அவர் காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்தார். இந்த நிலையில் ஞானசார தேரரை நேற்றுமுன்தினம் இரவு குருநாகலவில் கைது செய்வதற…
-
- 1 reply
- 384 views
-
-
விக்னேஸ்வரனின் தாளத்துக்கு ஆடமுடியாது – சரத் பொன்சேகா வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனின் தாளத்துக்கு சிறிலங்கா அரசாங்கம் ஆட முடியாது என்று சிறிலங்கா அமைச்சர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். கிரிபத்கொடவில் நேற்று நடந்த நிகழ்வு ஒன்றில் உரையாற்றிய அவர், “வடக்கில் இருந்து சிறிலங்கா படையினரை வெளியேற்றும் வீண் முயற்சியில் வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் ஈடுபட்டுள்ளார். அவர் அரசாங்கத்திடம் இந்தக் கோரிக்கையை விடுத்திருக்கிறார். அவரது அழுத்தங்களுக்கு நாம் பணிய மாட்டோம். ஒவ்வொருவதும் போடுகின்ற தாளத்துக்கு அரசாங்கத்தினால் ஆட முடியாது. வடக்கில் நிலைகொண்டுள்ள படையினர் விலக்கிக் கொள்ளப்படமாட்டார்கள். பளையில் நடந்த துப்…
-
- 0 replies
- 184 views
-