Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. கிளிநொச்சி மாவட்டசெயலகத்தில் குடியரசுதின நினைவு நிகழ்வுகள் இலங்கை குடியரசுதினத்தினை நினைவுகூறும் நிகழ்வு இன்றுகாலை(22.05.2017) கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் அரசாங்கஅதிபர் சுந்தரம்அருமைநாயகம் தலைமையில் நடைபெற்றது. தேசியக்கொடிஏற்றலுடன் ஆரம்பமான இந்நிகழ்வில் அரசாங்கஅதிபர் தலமைஉரை ஆற்றும்போது, 1948ஆம்ஆண்டு பெப்ரவரிமாதம்04 ம்திகதியிலிருந்து இலங்கை பிரித்தானிய காலணித்துவத்திலிருந்து மீண்டபோதிலும் தொடந்தும் பிரித்தானிய அரசின் கிரீடத்தின் கீழ் டொமினிக் நிலைமையுடைய சுகந்திரமொன்று மட்டும்உரித்தாக இருந்தது. ஆனால் 1972 ஆம் ஆண்டின் குடியரசுரஅசியல் யாப்புடன ;இலங்கைமக்களுக்குப் பொறுப்புகூறுகின்ற முழுமையான இறைமையுடைய மற்றும் சுகந்த…

    • 1 reply
    • 256 views
  2. கிரகரி தோட்டத்தில் சோகம் : வெள்ளவத்தையில் உயிரிழந்த இளைஞனின் இறுதி ஊர்வலம் வெள்­ள­வத்தை சார்­லிமன்ட் வீதியில் சவோய் திரை­ய­ரங்கின் பின்னால் அமைந்துள்ள ஐந்து மாடி வரவேற்பு மண்­டபம் இடிந்து விழுந்­ததில் பலியான அட்டன், பத்தனை கிரகரி தோட்டத்தைச் சேர்ந்த 20 வயதுடைய இளைஞனின் இறுதி ஊர்வலம் இன்று முற்பகல் இடம்பெற்றது. இளைஞனின் அகால மரணத்தால் கிரகரி தோட்டமே சோகமயமாக காணப்பட்டது. வெள்­ள­வத்தை சார்­லிமன்ட் வீதியில் சவோய் திரை­ய­ரங்கின் பின்னால் அமைந்துள்ள 'எக்­ச­லன்ஸி' என்ற பெயரைக் கொண்ட ஐந்து மாடி வரவேற்பு மண்­டபம் இடிந்து விழுந்­ததில் மூவர் உயி­ரி­ழந்ததுடன் 21 பேர் காய­ம­டைந்­தமைந்திருந்தனர். இதில் குறித்த வரவேற்பு மண்டபவத்தில் பணியாற்றிய பத்தனை கிரகரி …

  3. புதிய எதிர்பார்ப்புக்களுடன் நாட்டை முன்னெடுத்துச் செல்லவே அமைச்சரவை மாற்றம் ; ஜனாதிபதி புதிய எதிர்பார்ப்புக்களுடன் ஒரு நாடு என்ற ரீதியில் முன்னேறிச் செல்வதற்கு அமைச்சரவையில் மாற்றங்களை செய்ததாக ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்தார். அந்த வகையில் நாட்டின் அபிவிருத்திக்காக அர்ப்பணிப்புடன் செயற்படுமாறு புதிதாக பதவிப்பிரமாணம் செய்துகொண்ட அமைச்சர்களிடம் தான் கேட்டுக்கொள்வதாக ஜனாதிபதி தெரிவித்தார். புதிய அமைச்சரவை மாற்றத்தின் கீழ் 9 புதிய அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்களும் இராஜாங்க அமைச்சர் ஒருவரும் இன்று முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டனர். இந்நிகழ்…

  4. பிள்ளையாரின் காணியை ஆக்கிரமித்த புத்தர் : பொதுமக்கள் விசனம் கிளிநொச்சி கிருஸ்ணபுரம் கிராமத்தில் முப்பது வருடங்களாக இருந்து வரும் பிள்ளையார் கோவிலின் காணியை கடந்த எட்டு வருடங்களாக புத்தர் ஆக்கிரமித்து இருப்பதாக கிராம மக்கள் கவலை தெரிவித்துள்ளனர். இது தொடர்பில் தெரியவருவதாவது கிளிநொச்சி கரைச்சி பிரதேச செயலக பிரிவில் உள்ள கிருஸ்ணபுரம் கிராமத்தில் காணப்பட்ட ஒரு அரச மரத்தில் கடந்த முப்பது வருடங்களாக பிள்ளையார் கோவில் ஒன்று காணப்பட்டு வந்திருக்கிறது. கிராமத்தைச் சேர்ந்த ஒருவர் தனது காணியை பிள்ளையார் கோவிலுக்கு வழங்கியிருக்கின்றார். பிள்ளையார் கோவிலும் கிழக்கு திசையாக வீதியை பார்த்த படி சிறியளவில் அமைக்கப்பட்டு பொது மக்களால் வழிபாடு …

  5. குருநாகலில் பள்ளிவாசல் மீது குண்டுத் தாக்குதல் – அமெரிக்கா கண்டனம் குருநாகல் – மல்லவப்பிட்டியவில் முஸ்லிம்களின் பள்ளிவாசல் மீது இன்று அதிகாலையில் இனந்தெரியாத நபர்களால் பெற்றோல் குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இன்று அதிகாலை 3.30 மணியளவில் பள்ளிவாசல் மீது மூன்று பெற்றோல் குண்டுகள் வீசப்பட்டதாகவும், அவற்றில் ஒன்று வெடித்து, பள்ளிவாசலின் கண்ணாடிகள் நொருங்கியதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. அதேவேளை, எல்பிட்டியவில் முஸ்லிம் வர்த்தகர் ஒருவர் வர்த்தக நிலையம் இன்று அதிகாலை 2.30 மணியளவில் இனந்தெரியாத நபர்களால் தீக்கிரையாக்கப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களாக சிங்கள பௌத்த அடிப்படைவாத பொது பலசேனா அமைப்பு, முஸ்லிம்களுக்…

    • 4 replies
    • 401 views
  6. யுத்த வெற்றி தினத்தை நாம் கொண்­டாடி வரும் நிலையில் மறு­புறம் வடக்கில் நினை­வேந்தல் நிகழ்­வுகள் இடம்­பெ­று­கின்­றமை இலங்­கைக்கு சாப­மாக அமைந்­துள்­ளது. அர­சாங்கம் கொள்கை ரீதியில் தீர்­மானம் எடுக்­கு­மாயின் சுதந்­திர தினத்தில் யுத்த வெற்றி தினத்­தையும் கொண்­டாட முடியும் என நீதி அமைச்சர் விஜ­ய­தாச ராஜபக் ஷ தெரி­வித்தார். யுத்­தத்தை வெற்றி கொண்­டதில் மஹிந்த, கோத்­தா­பாய ஆகி­யோரின் பங்­க­ளிப்­புக்கும் மதிப்­ப­ளிக்க வேண்டும் எனவும் அவர் குறிப்­பிட்டார். யுத்த வெற்றி தின நிகழ்­வுகள் கொண்­டா­டப்­பட்­டமை தொடர்பில் கருத்து தெரி­வித்த போதே அமைச்சர் மேற்­கண்­ட­வாறு குறிப்­பிட்டார். இது குறித்து அவர் மேலும் கூறு­கையில், இந்த நாட்டின் கொடிய யுத்­தத்தை முடி­வுக்கு கொண்…

    • 0 replies
    • 503 views
  7. இருபத்து நான்கு ஆண்டுகள் சிறையில் கழித்த தமிழ் அரசியல் கைதி உருக்கமான மனு?! கொழும்பு புதிய மகசீன் சிறைச்சாலையில் ஆயுட்காலச் சிறைத்தண்டனையும் அதற்குமேலதிகமாக 50 வருட கடூழிய சிறைத்தண்டனையும் அனுபவித்து வரும் சிறைக்கைதி ஒருவர் ஜனாதிபதிக்கு தனது ஆயுட்கால சிறைத்தண்டனையை சாதாரண சிறைத்தண்டனையாக குறைப்பதற்கு கருணை மனுக் கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அக் கடிதத்தில் மேலும் தெரிவிக்கையில், கடந்த 1993ஆம் ஆண்டு பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு அறியாத ஒரு குற்றத்திற்காக கடந்த 24 வருடங்கள் சிறை வைக்கப்பட்டுள்ளேன். இந்நிலையில் தயவு கூர்ந்து எனது இந்தக் கருணை வேண்டுகோளினை பரிசீலித்து நானுமொரு சா…

    • 0 replies
    • 409 views
  8. அழிக்கப்படும் ஆலங்குளம் துயிலுமில்லம் – மக்கள் விசனம்! மல்லாவியில் அமைந்துள்ள ஆலங்குளம் துயிலுமில்லத்திலிருந்து மண் அகழப்பட்டு அருகிலுள்ள இராணுவ முகாமைச்சுற்றி மண் அணை கட்டப்பட்டு வருவதாக அப்பகுதி மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர். இது தொடர்பில் மக்கள் தெரிவிக்கையில், கடந்த ஆண்டு சில துயிலுமில்லங்களிலிருந்து இராணுவத்தினர் வெளியேறிய நிலையில் நாம் எமது பிள்ளைகளுக்கு அஞ்சலி செலுத்தியிருந்தோம். இந்நிலையில், தற்போது சில தினங்களாக ஆலங்குளம் துயிலுமில்லம் இயந்திரங்களின் உதவியுடன் ஆழமாக அகழப்பட்டு அருகிலிருக்கும் இராணுவ முகாமைச்சுற்றி மண்ணணை கட்டப்பட்டு வருகின்றது. எமது பிள்ளைகளைப் புதைத்த இடத்தில் இவ்வாறு மண்ணை அகழ்ந்து இன்னொரு இடத்தில் அணை கட்…

    • 0 replies
    • 427 views
  9. கலாநிதி ஹர்ஷா டீ சில்வா மிகத் திறமையான பொருளியலாளர். தான் ஒரு கணக்காளர் என்றும் தனக்கு நிதி அமைச்சு வேண்டும் என்று அடம் பிடித்து அதில ஒக்காந்து இருந்தவர் ரவி. தனது பங்களிப்பை திறமையாக செய்வார் என எதிர்பார்க்கப்பட்ட கலாநிதி ஹர்சாவுக்கு பொருளாதார விவகாரங்களில் இடம் கொடாது, ரவி முழுவதுமாக நிதி அமைச்சின் முழு வேலைகளையும் பார்த்தத்தினால்... ஹர்ஷா, பிரதி அமைச்சராக, வெளிவிவகார அமைச்சில் மங்களவின் கீழ் இருந்தார். ஆனாலும் ரவியின் கீழ் நாட்டின் பொருளாதார நிர்வாகத்தில் ஒரே குழப்பம். இப்ப மங்களவும், ஹர்சாவும் நிதி அமைச்சுக்கும், ரவி வெளிவிவகார அமைச்சுக்கும் மாத்தியாச்சு. இந்த அமைச்சரவையின் மாறுதலின் மிக முக்கியமான விடயமாக கருதப்டுகிறது.

    • 0 replies
    • 332 views
  10. May 22, 2017 -பாறுக் ஷிஹான்- யாழ்ப்பாணத்தில் 27 வருடத்திற்கு பின்னர் ஐதுரூஸ் மகாம் பள்ளிவாசல் திறக்கப்பட்டது. யுத்தத்தினால் கடுமையாக பாதிக்கப்பட்ட குறித்த பள்ளிவாசலை யாழ் முஸ்லீம் மக்கள் இணைந்து மேற்கொண்ட புனரமைப்பின் பின்னர் நேற்று(21) மாலை திறந்து வைக்கப்பட்டது. இதன் போது யாழ் கிளிநொச்சி உலமா கிளை சபை தலைவர் சுபியான் மௌலவி உட்பட பலரும் கலந்து சிறப்பித்தனர். AkuranaToday.com | Read more http://www.akuranatoday.com/news/?p=138852 .

    • 0 replies
    • 377 views
  11. இன்று காலை அமைச்சரவை மாற்றம் – மங்கள, ரவியின் பதவிகள் பறிப்பு? சிறிலங்கா அதிபர் செயலகத்தில் இன்று காலை அமைச்சரவை மாற்றம் இடம்பெறவுள்ளது. இதன் போது நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க மற்றும் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர ஆகியோர் இப்போது வகித்து வரும் அமைச்சுப் பதவிகளை இழக்கவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கி்ன்றன. அலரி மாளிகையில் நேற்று பின்னிரவு நடந்த ஐதேக நாடாளுமன்றக் குழுக் கூட்டத்தில், இன்றைய அமைச்சரவை மாற்றத்தின் போது இடம்பெறவுள்ள மாற்றங்கள் தொடர்பான பிரதமர் ரணில் விக்கிரமசிங்க விபரங்களை வெளியிட்டுள்ளார். நிதியமைச்சராக மங்கள சமரவீரவும், வெளிவிவகார அமைச்சராக ரவி கருணாநாயக்கவும் பொறுப்பேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதேவேளை, அமைச்சரவை மாற்றத்தின் போது…

  12. . தமிழர்கள் தீர்வுக்காக போராடக்கூடாது, கடவுள் கருணையினாலேயே அது சாத்தியமாகும் – விஜயகலா! தமிழ் மக்கள் தீர்வு தீர்வு என தீர்வை எதிர்பார்க்காது இருக்கவேண்டுமெனவும், கடவுள் கருணை கூர்ந்தால் மாத்திரமே எங்களுக்குத் தீர்வு கிடைக்கும் எனவும் சிறுவர் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்துள்ளார். ஜனாதிபதி மக்கள் சேவை தேசிய நிகழ்ச்சி திட்டத்தின் கீழ் ஏற்பாடு செய்யப்பட்ட நடமாடும் சேவை கிளிநொச்சி கண்டாவளை தர்மபுரம் பாடசாலையில் இன்று இடம்பெற்றது. இதில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், 30 வருடங்களாக யுத்தம் நடந்த நிலையில் நாம் அந்த வடுக்களை இல்லாமல் செய்யவே பாடுபட வே…

    • 11 replies
    • 1k views
  13. இன்று கைது செய்யப்படுகிறார் ஞானசார தேரர்? சிறுபான்மையினருக்கு எதிரான இனவாத செயற்பாடுகளில் ஈடுபட்டுள்ள பொது பலசேனா அமைப்பின் பொதுச்செயலர் கலகொடஅத்தே ஞானசார தேரர் இன்று கைது செய்யப்படலாம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த இரண்டு வாரங்களாக முஸ்லிம்களுக்கு எதிரான 19 இனவாதச் செயற்பாடுகள் இடம்பெற்றுள்ளன. நேற்று அதிகாலை குருணாகலவில் பள்ளிவாசல் ஒன்றின் மீதும் பெற்றோல் குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டது. கடந்தவாரம் அமைச்சர் மனோ கணேசனின் செயலகத்துக்குள் அத்துமீறி நுழைந்த ஞானசார தேரர், அமைச்சருக்கு அச்சுறுத்தல் விடுத்திருந்தார். இதுகுறித்து அவர் காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்தார். இந்த நிலையில் ஞானசார தேரரை நேற்றுமுன்தினம் இரவு குருநாகலவில் கைது செய்வதற…

  14. விக்னேஸ்வரனின் தாளத்துக்கு ஆடமுடியாது – சரத் பொன்சேகா வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனின் தாளத்துக்கு சிறிலங்கா அரசாங்கம் ஆட முடியாது என்று சிறிலங்கா அமைச்சர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். கிரிபத்கொடவில் நேற்று நடந்த நிகழ்வு ஒன்றில் உரையாற்றிய அவர், “வடக்கில் இருந்து சிறிலங்கா படையினரை வெளியேற்றும் வீண் முயற்சியில் வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் ஈடுபட்டுள்ளார். அவர் அரசாங்கத்திடம் இந்தக் கோரிக்கையை விடுத்திருக்கிறார். அவரது அழுத்தங்களுக்கு நாம் பணிய மாட்டோம். ஒவ்வொருவதும் போடுகின்ற தாளத்துக்கு அரசாங்கத்தினால் ஆட முடியாது. வடக்கில் நிலைகொண்டுள்ள படையினர் விலக்கிக் கொள்ளப்படமாட்டார்கள். பளையில் நடந்த துப்…

    • 0 replies
    • 185 views
  15. வடக்கு, கிழக்கில் குடும்பங்களின் கடன்படுநிலை அதிகரிப்பு – மத்திய வங்கி ஆய்வு தமிழ் மக்கள் அதிகளவில் வசிக்கும் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் அதிகரிக்கும் கடன்படுநிலை தொடர்பாக சிறிலங்கா மத்திய வங்கி ஆய்வு நடத்தவுள்ளது. கொழும்பில் வெளிநாட்டுச் செய்தியாளர்களிடம் கருத்து வெளியிடும் போது, சிறிலங்கா மத்திய வங்கி ஆளுனர் இந்திரஜித் குமாரசுவாமி இந்த தகவலை வெளியிட்டுள்ளார். வீடு மற்றும் அதனைச் சார்ந்த குடும்பத்தினரின் கடன் அதிகரித்து வருவது குறித்து நாம் கவலையடைகிறோம். போருக்குப் பின்னர் குடும்பங்கள் தமது வாழ்வை மீளக் கட்டியெழுப்புவதற்கு சவால்களை எதிர்கொண்டுள்ளன. ஆய்வுகள் நடத்தப்பட்டு அதன் முடிவுகளுக்கு அமைய தேவையான நடவடிக்கை எடுக்கப்படும். 2009 மே மாதம்…

    • 0 replies
    • 199 views
  16. மே மாதம் 18 ஆம் நாள் இறுதி யுத்தத்தில் கொல்லப்பட்ட மக்களின் பெயர்களை நினைவுக் கற்களில் பொறித்து அஞ்சலி செய்வதற்கு சிறிலங்கா காவல்துறையினர் தடை விதித்ததுடன், ஏற்பாட்டாளர்களுக்கு அச்சுறுத்தல் விடுத்திருந்தது. காவல்துறையின் இச்செயற்பாட்டை உண்மை மற்றும் நீதிக்கான அமைப்பின் தலைவர் யஸ்மின் வன்மையாகக் கண்டித்ததுள்ளார். கடந்த புதன்கிழமை முல்லைத்தீவு நீதிமன்றமும் நினைவுக் கற்களில் விடுதலைப் புலிகளின் பெயர்கள் பொறிக்கப்பட்டிருக்கலாம் எனத் தெரிவித்து தடை விதித்திருந்தது. இது தொடர்பாக யஸ்மின் சூக்கா வெளியிட்டுள்ள அறிக்கையில், எந்தவொரு தாய், தந்தையருக்கும் தமது பிள்ளைகளை நினைவுகூர உரிமையுண்டு. அதனை நீங்கள் தடுக்கமுடியாது. அதேபோல் யுத்தத்தில் கொல்லப்பட்ட விடுதலைப்புலிகளையும் …

    • 0 replies
    • 303 views
  17. ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் பொருளாதாரக் கொள்கைகளை அரசாங்கம் ஏற்காது போனால் அரசிலிருந்து விலகி எதிர்க்கட்சிக் குழுவாக இயங்குவோம் என அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்குப் பதிலளிக்கையிலேயே இதனைத் தெரிவித்துள்ளார்.இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், “எமது கருத்துக்களை ஜனாதிபதிக்கு ஏற்கனவே அறிவித்துள்ளோம். இன்றளவில் நாடு பாரிய பொருளாதாரப் பிரச்சினைகளுக்கு முகங்கொடுத்து வருகின்றமைக்கு, ஐக்கிய தேசியக்கட்சியின் பொருளாதாரம் தொடர்பாக தீர்மானம் எடுக்கும் குழுவின் செயற்பாடுகளே காரணமாகும். கூட்டு அரசாங்கமாகச் செயற்பட வேண்டுமானால் இரண்டு தரப்பினரும் ஏற்றுக்கொள்ளக்கூடிய பொருளாதாரத் திட்டங்களினை அரசாங்கம் நடைமுறைப்படுத்த வேண்ட…

    • 0 replies
    • 240 views
  18. சக்தி டிவி செய்திகள் 21th May 2017, 8PM

  19. தன்னை தடுத்த பொலிஸாருடன் இனவாதமாக பேசிய ஞான­சார தேரர் வீதியில் சென்ற தனது வாகனத்தை தடுத்த பொலிஸாருடன், ஞானசார தேரர் இனவாதத்தை தூண்டும் வகையில் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். குருநாகல் கொஸ்களை தோரப்பாய பிரதேசத்தின் அனுராதபுர மற்றும் குருநாகல் வீதியில் வைத்து பொதுபலசேனாவின் பொதுச்செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரரின் வாகனத்தை மறித்த பொலிஸார், அவரை கைது செய்யவுள்ளதாக கூறி தேரர் மற்றும் அவரது ஆதரவாளர்கள் பொலிஸாருடன் இனவாதத்தை தூண்டும் வகையிலான வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். மேலும் குருநாகலில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு அனுராதபுரம் சென்ற ஞானசார தேரர் கொஸ்களை பகுதியில் வைத்து பொலிஸாரினால் இடை நிறுத்தப்பட்டுள்ளார். …

  20. கிழக்கின் ஆட்சியில் ‘மு.காவும் த.தே.கூவும் பங்குதாரர்கள்’ -வா.கிருஸ்ணா, எம்.எஸ்.எம்.நூர்தீன், ரீ.எல்.ஜவ்பர்கான், எஸ்.பாக்கியநாதன் “கிழக்கு மாகாண ஆட்சியின் பங்குதாரர்கள் என்ற அந்தஸ்து, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினதும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸினதும் நிரந்தர அந்தஸ்தாக இருக்க வேண்டும் என்று விரும்புபவர்கள் நாங்கள். அதன்மூலமே, நாங்கள் பல விடயங்களைச் சாதிக்க முடியும்” என, மு.காவின் தலைவரும் நகர அபிவிருத்தி மற்றும் நீர்வழங்கல் வடிகாலமைப்பு அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார். அதேவேளை, ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ், பிழைப்புவாத அரசியலையோ அல்லது சந்தர்ப்பவாத அரசியலையோ செய்யவில்லை என்றும், அமைச்சர் சுட்டிக்காட்டினார். …

  21. வடக்குப் பாதை வலையமைப்பை விருத்தி செய்வதில் டில்லி ஆர்வம் நேரில் வந்து ஆராயவுள்ளார் அமைச்சர் நிதின் கட்கரி ‘வடக்கு மாகாண பாதை வலை­ய­மைப்பை அபி­வி­ருத்தி செய்­வ­தில் இந்­தியா வெகு ஆர்­வ­மாக உள்­ளது. இந்­தி­யா­வின் நெடுஞ்­சா­லைத் துறை அமைச்­சர் நிதின் கட்­கரி இது தொடர்­பில் யாழ்ப்­பா­ணத்­துக்கு வந்து ஆரா­ய­வுள்­ளார்’ இவ்­வாறு தலைமை அமைச்­சர் ரணில் விக்கி­ர­ம­சிங்க தெரி­வித்­தார். யாழ்ப்­பாண மாவட்­டச் செய­ல­கத்­தில் நேற்று முன்­தி­னம் நடை­பெற்ற ‘பல­மிக்­க­தோர் இலங்கை’ பொரு­ளா­தா­ரக் கலந்­து­ரை­யா­ட­லின் தலைமை உரை நிகழ்த்­தும்­போதே அவர் மேற்­கண்­ட­வாறு கூறி­னார். அவர் மேலும் தெரி­வித்­த­தா­வது நான் அண்­மை­யில் இந்…

  22. ஞானசார மீது துரும்பளவில் தாக்குதல் ஏற்பட்டாலும் நாட்டில் சிங்கள பௌத்த புரட்சி வெடிக்கும் (ஆர்.யசி) பொதுபல சேனா பௌத்த அமைப்பின் பொதுச்செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரரை கைதுசெய்ய முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றது. அதேபோல் அரசாங்கத்தின் பிரதான அமைச்சர் ஒருவரின் மூலமாக ஞானசார தேரரை கொலைசெய்ய முயற்சிக்கப்பட்டுள்ளதாகவும் சிங்கள ராவய அமைப்பின் செயலாளர் மாகல்கந்தே சுதந்த தேரர் தெரிவித்தார். ஞானசார தேரரை கைது செய்தாலோ அவர் மீது சிறிய தாக்குதலேனும் நடத்தினால் நாட்டில் சிங்கள பௌத்த புரட்சி வெடிக்கும் எனவும் அவர் எச்சரித்தார். அண்மைக்காலமாக பௌத்த சிங்கள அமைப்புகள் நாட்டில் மாறுபட்ட கருத்துக்களை முன்வைத்து வரும் நிலையில் சிங்கள ராவய…

  23. வடக்கில் காணி­களை பெற்றுக் கொண்­டோரே வேறு இடத்தில் காணி கேட்டுப் போரா­டு­கின்­றனர் கடும்­போக்­கா­ளர்கள் மக்­களை தூண்­டி­வி­டு­கின்­றனர் என்­கிறார் ஜனா­தி­பதி திரு­மலை நவம் கிழக்கு மாகா­ணத்தைச் சேர்ந்த மக்கள் காணிகள்கேட்டு போராட் டம் நடத்தவில்லை வடக்கி­லுள்ள மக்­களே காணிகள் கேட்டு போராட்­டங்­களை நடத்­து­கின்றனர். வடக்கு மக்­க­ளுக்கு நாம் காணி களை வழங்­கி­யி­ருக்­கின்றோம், வீடு­களை வழங்­கியிருக்­கின் றோம். அதே­போன்று வாழ்வா ­தா­ரத்­தை­யும் தேடிக் கொடுத்­தி­ருக்­கின்றோம். ஆனால், காணி­களை பெற்­றுக்­கொண்­ட­வர்கள் வேறு இடங்­களில் காணி­களை கேட்டு போராட்­டங்­களை நடத்தி வரு­கின்­றனர். இந்த போராட்­டத்­துக்கு மக்கள் கார…

  24. 9 மாகா­ணங்­க­ளிலும் சம­மாக இரா­ணு­வத்தை நிறுத்­தினால் எமக்கு ஆட்­சே­பனை இல்லை ஜனா­தி­ப­தி­யிடம் வடக்கு முதல்வர் எடுத்­து­ரைப்பு நமது நிருபர் முழு இரா­ணு­வத்­தையும் ஒன்­ப­தாகப் பிரித்து ஒன்­பதில் ஒரு பங்கை ஒவ்­வொரு மாகா­ணத்­திலும் நிறுத்­துங்கள். சரி­ச­ம­னாக இரா­ணு­வத்தை நிறுத்­து­வதில் எமக்கு ஆட்­சே­பனை இல்லை என்று வட­மா­காண முத­ல­மைச்சர் சி.வி. விக்­னேஸ்­வரன் தெரி­வித்­துள்ளார். ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­னவை அண்­மையில் வட­மா­காண முத­ல­மைச்சர் சி.வி. விக்­னேஸ்­வரன் சந்­தித்து உரை­யா­டி­ய­போது இவ் வேண்­டு­கோளை அவர் விடுத்­துள்ளார். இது தொடர்பில் முத­ல­மைச்சர் விக்­னேஸ்­வ­ர­னிடம் கேட்ட கேள்­வி­க­ளுக்கு அவர் அளித்த பதில…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.