Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. வடக்கு கிழக்கு வாழ் தமிழ் மக்களின் கடன் நிலைமைகள் குறித்து ஆராயப்பட உள்ளதாக மத்திய வங்கி அறிவித்துள்ளது. இதனைத் தெரிவித்துள்ள மத்திய வங்கியின் ஆளுனர் இந்திரஜித் குமாரசுவாமி குறித்த பகுதிகளில் வீட்டுக் கடன்களின் எண்ணிக்கை கணிசமாக உயர்வடைந்துள்ளது எனவும் இது குறித்து கவனம் செலுத்தப்பட வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார். ஆய்வுகளை நடத்தி அதன் பின்னர் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்கள் தங்கள் வாழ்வாதாரத்தை மீளக் கட்டியெழுப்புவதில் பெரும் சிரமங்களையும் சவால்களையும் எதிர்நோக்கி வருவதாகவும் இதனால் அவர்களின் படுகடன் தொகை வெகுவாக உயர்வடைந்து செல்வதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். வடக்கு கிழக்கு மாகாணங்களில் அதிகளவில் வறும…

    • 0 replies
    • 288 views
  2. யாழ் பல்கலைகழத்தின் கிளிநொச்சி அறிவியல்நகர் வளாகத்தில் இன்று(18) மாணவர்களால் கறுப்பு கொடிகள் பறக்கவிடப்பட்டு துக்க தினம் அனுஸ்டிக்கப்பட்டுள்ளது. முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் எட்டாம் ஆண்டு நிகழ்வு மாணவர்களால் நினைவு கூறப்பட்டுள்ளது. இறுதி யுத்தத்தின் போது தங்களது உறவுகளை இழந்த பல மாணவர்கள் ஒன்று சேர்ந்து நினைவேந்தல் நிகழ்வை முன்னெடுத்துள்ளனர். இதில் விவசாயபீடம் , பொறியியல் பீடம் மற்றும் தொழிநுட்ப பீட மாணவர்கள் பங்குபற்றியிருந்தனர். இந்த நிகழ்வு அமைதியான முறையில் இடம்பெற்றது. இந்த நிலையில் கிளிநொச்சி தொழிநுட்ப பீடத்தில் கல்வி பயிலும் பெரும்பான்மையின மாணவர்கள் மாத்திரம் தாங்கள் இன்று வெற்றி விழா கொண்டாடப் போவதாகவும் எனவே கறுப்புக் கொடிகளை அகற்றிவிடுமாறும் தெரிவித…

  3. மட்டக்களப்பு நகர் பகுதியில் அமைந்திருந்த பொலீஸ் நிலையத்திற்கு முன்னால் 17 வருடங்களுக்கு முன்னர் ஒரு வெசாக் தினத்தில் நடைபெற்ற குண்டுவெடிப்புச் சம்பவமும் அதனை தொடர்ந்து நடத்தப்பட்ட துப்பாக்கிச் சுட்டு சம்பவங்கள் குறித்த உண்மைகளை இன்று வரை இலங்கை அரசாங்கம் முடிமறைத்து வரும் நிலையில் அது குறித்த உண்மைகள் மீண்டும் வெளிவரத்தொடங்கியுள்ளது. 2000.05.17 அன்று மாலை ஒரு வெசாக் தினத்தில் மட்டக்களப்பு நகரில் நடைபெற்ற குண்டுவெடிப்பு சம்பவம் குறித்தும் அதன் பின்னர் ஆயித்தியமலை சிறுவர் இல்ல சிறார்கள் மற்றும் பொதுமக்கள் சுட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து மட்டக்களப்பில் மிக நீண்டகாலமாக மக்களுக்காக பணியாற்றிவரும் அருட்தந்தை பாதர் ஜோசப் மேரி அவர்கள் வெளியிட்ட உண்மைகளை இங்கு தொகுத்து…

    • 0 replies
    • 377 views
  4. கட்டிடம் இடிந்து விழுந்ததில் பலர் காயம் வெள்ளவத்தை – சாவோய் திரையரங்கின் அருகில்; உள்ள கட்டிடத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்ததில் பலர் காயமடைந்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வெள்ளவத்தை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். http://www.virakesari.lk/article/20115

  5. நாங்கள் உங்களைத்தான் நம்பி இருக்கிறோம். எங்களை கைவிட்டு விடாதீர்கள் எனவடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரனின் காலைப் பிடித்து தாய்மார் அழுதசம்பவம் நேற்று முள்ளிவாய்க்காலில் இடம்பெற்றுள்ளது. முள்ளிவாய்க்காலில் இடம்பெற்ற நினைவேந்தல் நிகழ்வின் போதே இச் சம்பவம்இடம்பெற்றுள்ளது. இதன்போது சில தாய்மார் முதலமைச்சர் அஞ்சலி உரையாற்றுவதற்காக எழுந்து சென்ற போது,சம்பந்தன் ஐயாவை பேச விடாதீர்கள். அவரை வெளியேற்றுங்கள் ஐயா. நாங்கள்சொத்துக்களை இழந்து விட்டோம். உறவுகளையும் இழந்து விட்டோம். உங்களைத் தான்நம்பியுள்ளோம். எங்களை கைவிட்டு விடாதீர்கள் என கூட்டமைப்பின் தலைவர்இரா.சம்பந்தன் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் முன்னிலையில் முதலமைச்சர்சி.வி.விக்கினேஸ்வரனி…

  6. சக்தி டிவி செய்திகள் 19th May 2017, 8PM

  7. எமது உற­வுகள் தொலைந்து விட்­டார்கள். நிரந்­த­ர­மாக பிரிந்து விட்­டார்கள். ஒவ்­வொ­ரு­வ­ரையும் இழந்து தற்­போது நடுத்­தெ­ருவில் நிற்­கின்றோம் என நினை­வேந்தல் நிகழ்வில் பங்­கேற்ற உற­வுகள் தமது ஆதங்­கத்தை கண்­ணீ­ருடன் தெரி­வித்­தனர். முள்­ளி­வாய்க்கால் நினை­வேந்தல் நிகழ்வு நேற்று வியா­ழக்­கி­ழமை எட்­டா­வது ஆண்­டா­கவும் நடை­பெற்­றி­ருந்­தது. இதன்­போது அந்­நி­கழ்வில் பங்­கேற்­ப­தற்­காக முல்லை மண் உட்­பட தமிழர் தாய­கத்தின் நாலா­பு­றங்­க­ளி­லி­ருந்தும் வருகை தந்­தி­ருந்த உற­வுகள் தமது ஆதங்­கத்தை கண்­ணீ­ருடன் வெளிப்ப­டுத்­தினர். அந்த ஆதங்­கங்­களும் நியா­ய­மான கேள்­வி­களும் வரு­மாறு, 01.எஸ்.லதா எனப்­படும் பெண்­மணி, நாங்கள் 2009ஆம் ஆண்டு மே மாதம் 12ஆம் திகதி இப்­போது…

    • 0 replies
    • 381 views
  8. யுத்தத்தில் பலியான உறவுகளுக்கு கிளிநொச்சியில் ஆத்மசாந்தி பிரார்த்தனை இறுதி யுத்தத்தின் போது பலியான அனைத்து உறவுகளுக்கும் ஆத்மசாந்தி வேண்டி கிளிநொச்சி நகர பிள்ளையார் ஆலயத்தில் விசேட ஆத்மசாந்தி பிரார்த்தனை இடம்பெற்றுள்ளது. சமத்துவம் சமூக நீதிக்கான மக்கள் அமைப்பினால் இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. யுத்தத்தின் போது பலியான உறவுகளை நினைந்து சுடரேற்றுவோம் அவர்களின் கனவுகளை மனதெடுத்து இந்த மண்ணின் மனிதர்களுக்கு வாழ்வளிப்போம் என்ற அடிப்படையில் சமத்துவம் சமூக நீதிக்கான மக்கள் அமைப்பு இவ்வருடமும் யுத்த காவலத்தில் இறந்த மக்களுக்கான ஆத்மசாந்தி பிரார்த்தனையை மேற்கொண்டுள்ளது. http://www.virakesari.lk/article/20159

  9. முத்தரப்புக்களதும் ஆதரவாளர்கள் குறித்து அவதானமாகச் செயற்ப்பட வேண்டும் அர­சில் அங்­கம் வகிக்­கும் இரு­பி­ர­தான கட்­சி­கள் மத்­தி­யில் கருத்து வேறு­பா­டு­கள் உச்­ச­ம­டைந்­தி­ருப்­ப­தா­க­வும், அதன் பிர­கா­ரம் எதிர்­வ­ரும் நாள்­க­ளில் அரசு வீழ்ச்­சி­யுற நேரிக்­கூ­டும் என்ற தக­வ­லொன்று நாட்­டின் அர­சி­ய­ல­ரங்கை சூடு­பி­டிக்க வைத்­துள்­ளது. இருப்­பி­னும் நாட்­டின் பொரு­ளா­தார நிலையை உயர்த்­து­வ­தாக வாக்­கு­றுதி வழங்­கி­யுள்ள அரசு பொரு­ளா­தார ரீதி­யில் தற்­போது பார­தூ­ர­மான சிக்­கலை எதிர்­நோக்­கி­யுள்­ள­தா­கத் தோன்­று­கி­றது. இது அர­சின் இருப்­புக்கு அத்­தனை தூரம் ஆ­ரோக்­கி­மா­ன­தல்ல. அது­வும், இரண்­டாண்­டு­கள் என்ற குறு­கிய கால நிர்வாகத்…

  10. முல்லையில் ஆடைத்தொழிற்துறை பயிற்சி நிலையம் I முல்லைத்தீவில் வறுமைக்கோட்டிற்கு உட்பட்ட மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தும் நோக்கில் ஆடைத்தொழிற்துறை பயிற்சி நிலையம் ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது. முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் ரூபவதி கேதீஸ்வரன் முல்லைத்தீவு பிரதேசத்திற்கு பொறுப்பான கட்டளைத்தளபதி ஆகியோரின் வழிநடத்தலின் கீழ் குறித்த பிரதேசத்தை சேர்ந்த 150 இளைஞர் யுவதிகளுக்கு இப் பயிற்சி தொடர்பிலான நேர்முகப்பரீட்சைகள் நடத்தப்பட்டன. தெரிவுசெய்யப்பட்ட 35 பேருக்கு இங்கு பயிற்சிகள் வழங்கப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இச் சேவைக்காகத் தனியார் ஆடைத்தொழிற்துறை நிறுவனம் ஒன்று முன்வந்துள்ள நிலையில், ஆடைத்த…

  11. கூட்டு அரசின் போக்கு மாற்றம் பெறவேண்டும் IMAGE கொழும்பு அர­சின் போக்கை அச்­சொட்­டாக, அப்­பட்­ட­மாக வெளிப்­ப­டுத்­தும் விதத்­தில் அமைந்­தி­ருக்­கி­றது பன்­னாட்டு நெருக்­க­டி­கள் குழு­வின் அறிக்கை. மாற்­றம் என்ற முழக்­கத்துடன் 2015ஆம் ஆண்டு தை மாதம் தொடங்­கிய இந்த ஆட்­சி­யின் விறு­வி­றுப்பு படிப்­ப­டி­யா­கக் குறைந்து – கழுதை தேய்ந்து கட்­டெ­றும்­பாகிப் போனது. வழக்­க­மான சிங்­கள, பௌத்த அர­சியல் மாயைக் குள்ளேயே இந்த அரசும் சிக்கிக் கொண்டுள்ளது என்பதை குறித்த அறிக்கை தெள்­ளத் தெளி­வா­கக் குறிப்­பி­டு­கி­றது. “அரச தலை­வ­ராக மைத்­தி­ரி­பால சிறி­சேன பத­வி­யேற்ற முதல் 9 மாதங்­க­ளில் அர­சின் சீர­மைப்­புகள் மள­ம…

  12. தடுப்பிலுள்ள ஆண்களுக்கு பாலியல் துன்புறுத்தல் அனைத்துல மனித உரிமை அமைப்பு குற்றச்சாட்டு இலங்­கை­யில் போர் முடி­வுக்கு வந்த பின்­ன­ரும், சிறை­க­ளில் தடுத்து வைக்­கப்­பட்­டுள்ள ஆண்­கள் பலர் பாலி­யல் துன்­பு றுத்­தல்­களுக்கு உட்­ப­டுத்­தப்­ப­டு­கின்­ற­னர். இவ்­வாறு அனைத்­து­லக மனித உரிமை அமைப்பு ஒன்று குற்­றஞ்­சாட்­டி­யு ள்­ளது. அமெ­ரிக்­கா­வைச் சேர்ந்த மனித உரி­மை­கள் அமைப்­பொன்­றின் ஆய்வு அறிக்­கை­யில் இவ்­வாறு குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது அதில் மேலும் தெரி­விக்­கப்­பட்­டுள்­ள­தா­வது, தடுத்து வைக்­கப்­பட்­டி­ருக்­கும் தமி­ழர்­கள் மீதான சித்­தி­ர­வ­தை­யாக, பாலி­யல் துன்­பு­றுத்­தல்­கள் தொடர்ச்­சி­யாக நடத்­தப்­பட்டு வரு­கின்­றன. ஆண்­கள் அதி­க­ள­வ…

  13. மன்னாரில் பிரதமர்... -எஸ்.றொசேரியன் லெம்பேட் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட மன்னார் மாவட்டச் செயலகத்தின் 4 மாடிக் கட்டடத் தொகுதியை, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, இன்று வெள்ளிக்கிழமை, வைபவ ரீதியாகத் திறந்துவைத்து, மக்களின் பாவனைக்காகக் கையளித்தார். உள்நாட்டலுவல்கள் அமைச்சின் நிதியுதவியுடன், 305 மில்லியன் ரூபாய் நிதி உதவியில் நிர்மாணிக்கப்பட்ட இந்த மாவட்டச் செயலகக் கட்டடத் தொகுதி, திறப்பு விழா நிகழ்வு, மாவட்ட அரசாங்க அதிபர் எம்.வை.எஸ்.தேசப்பிரிய தலைமையில் இடம்பெற்றது. இதில், அமைச்சர்களான வஜீர அபேவர்த்தன, ரிஷாட் பதியுதீன், டீ.எம்.சுவாமிநாதன், சாகல ரத்நாயக்க, நாடாளுமன்ற குழுக்களின் பிரதி அவைத்தலைவர் செல்வம் அடைக்கலநாதன், நா…

  14. ஜி.எஸ்.பி.பிளஸ் வரிச்சலுகை உத்தியோகபூர்வமாக கிடைக்கப்பெற்றது (பா.ருத்ரகுமார்) இலங்கைக்கு ஜி.எஸ்.பி.பிளஸ் வரிச்சலுகை உத்தியோக பூர்வமாக கிடைக்கப்பெற்றுள்ளதாக ஐரோப்பிய ஒன்றியத்தின் உத்தியோகப்பூர்வ சஞ்சிகை உறுதிப்படுத்தியுள்ளது. அதன்படி ஐரோப்பிய சந்தை நடைமுறைக்குள் இன்று முதல் இலங்கையும் உள்வாங்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அச் சஞ்சிகையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, ஜி.எஸ்.பி.பிளஸ் வரிச்சலுகையை பெற்றுக்கொண்டு இலங்கை மனித உரிமை நிலைமைகளை மேம்படுத்துவது குறித்து சர்வதேசத்திற்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் காத்திரமான முன்னேற்றங்கள் வேண்டும் எனகுறிப்பிடப்பட்டுள்ளது. இலங்கையில் மோசமடைந்திர…

  15. ரொஹினியா பிரஜைகள் இலங்கையை விட்டு வெளியேற மறுப்பு மியன்மாரின் ரொஹினியா பிரஜைகள் நாட்டை வெளியேற மறுப்பு வெளியிட்டுள்ளனர். அண்மையில் ரொஹினியா பிரஜைகள் இலங்கைக்குள் பிரவேசித்திருந்தனர். இவர்கள் தற்போது நீர்கொழும்பு தடுப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ள நிலையில் இந்தப் பிரஜைகள் தங்களை நாடு கடத்த வேண்டாம் என கோரியுள்ளனர். அவுஸ்திரேலியா நோக்கிப் பயணிக்க முயற்சித்த போது இவர்கள் இவ்வாறு இலங்கையை வந்தடைந்துள்ளனர் என்பது குறிப்படத்தக்கது https://globaltamilnews.net/archives/27367

    • 2 replies
    • 903 views
  16. கடைக்கு வரும் இளம் யுவதிகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்த தமிழ் சகோததர்களுக்கு பிரித்தானியா நீதிமன்றம் சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது. கடைக்கு வரும் இளம் யுவதிகளுக்கு இனிப்பு மற்றும் ரிசார்ஜ் செய்து கொடுத்து துஷ்பிரயோகம் செய்தார்கள் என்ற குற்றச்சாட்டின் அடிப்படையில் இந்த தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இளவரசன் மற்றும் வினோதன் ராஜேந்திரன் என்ற சகோரர்கள், ஒன்பது யுவதிகளுக்கு மதுபானம் வழங்கி அவர்களை துஷ்பிரயோகம் செய்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. 26 வயதுடைய இளவரசனுக்கு 22 1/2 வருட சிறை தண்டனையும் 27 வயதுடைய வினோதன் ராஜேந்திரனுக்கு 18 1/2 வருட சிறை தண்டனையும் வழங்கப்பட்டுள்ளது. கடந்த ஐந்து வருடங்களில் இவர்கள் மீது 30 குற்றச்சாட்…

  17. முதலமைச்சர் பொதுச் சுடர் ஏற்றிவைத்து ஆரம்பித்து வைத்தார்:- முள்ளிவாய்க்கால் நினைவேந்தலின் பிரதான நிகழ்வினை வடக்கு முதல்வர் சி.வி.விக்னேஸ்வரன் பொதுச் சுடரினை ஏற்றிவைத்து ஆரம்பித்து வைத்தார். அதனைத் தொடர்ந்து எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தனும் பொதுச்சுடர் ஏற்றி அஞ்சலி செலுத்தியதனைத் தொடர்ந்து நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாகாண சபை உறுப்பினர்கள், பொதுமக்கள் என பலரும் உயிரிழந்த உறவுகளுக்கு அஞ்சலி செலுத்தினர். இதன்போது தமது உறவுகளை நினைத்து மக்கள் கண்ணீர் மல்க கதறியழுது மக்கள் தமது ஆற்றாமையை தீர்த்துள்ளனர். முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வில் முதன் முதலாக இம்முறை சர்வமதத் தலைவர்களும் கலந்துகொண்டுள்ளதோடு, அவர்களும் அஞ…

  18. முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வில் சம்பந்தனுக்கு மக்கள் எதிர்ப்புத் தெரிவித்த விவகாரத்தை குழந்தைகளுக்கு நிலாக்காட்டி சோறு ஊட்டுவது போல திசைதிருப்ப முற்பட்டிருக்கிறது தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு. அந்த விவகாரத்தை மூடிமறைப்பதற்கு தங்களாலான விசுவாத்தைக் காட்டவும் முற்பட்டிருக்கின்றன யாழ்ப்பாணத்து பத்திரிகைகள் சிலவும். முள்ளிவாய்க்கால் நினைவேந்தலில் திரண்டிருந்தவர்கள் ஏழு ஆண்டுகளைக் கடந்தும் நீதிக்காக அழுது அரற்றி கண்ணீர்வற்றிப் போன உறவுகள் தான். நினைவேந்தல் நிகழ்வுக்காக ஒன்றுகூடிய மக்கள் சம்பந்தன் தொடர்பில் எழுப்பிய கூச்சலும் விக்னேவஸ்வரின் காலில் விழுந்து சம்பந்தனை வெளியேற்றுமாறு மன்றாடிய சம்பவங்களும் சில இணைய ஊடகங்களில் மட்டும் வெளிவந்திருக்கின்றன. ஆ…

    • 3 replies
    • 609 views
  19. குழப்பகரமான நிலை! IMAG முள்­ளி­வாய்க்­கா­லில் நினை­வேந்­தல் நிகழ்வு நேற்று இடம்­பெற்­றது. எனி­னும் கடந்த முறை­யைப் போலன்றி ஒரு­வித குழப்­ப­க­ர­மான நிலை இருந்­ததை அவ­தா­னிக்க முடிந்­தது. ஒளிப்­ப­டம் மற்­றும் காணொ­லி­களை எடுப்­ப­தற்காக குழுமி நின்ற ஊட­க­வி­ய­லா­ளர்­கள் உள்­ளிட்ட பல­ ர◌ால் நிகழ்­வி­டத்­தில் பெரும் நெரி­சல் ஏற்­பட்­டது. நிகழ்­வுக்­கான கட்­டுப்­பாட்டு எல்­லை­கள் சிவப்பு மஞ்சள் கொடிகளைக் கொண்டு மட்டுப்படுத்தப்பட்டிருந்தன எனினும் அவர்கள் அதனை மீறி அஞ்சலி உரையாற்றியவர்களை நெருங்கிச் சென்றதால் ஒருவித அமைதியின்மை தொடர்ந்து கொண்டிருந்தது. இதனால் நெரிசல், தள்ளுமுள்ளு ஏற்பட்டது. …

  20. பழைய நினைவுகளை மீட்டிய முள்ளிவாய்க்கால் இலைக்கஞ்சி:- முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் எட்டாம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு முள்ளிவாய்க்கால் கிழக்கில் இன்று காலை ஒன்பது மணிக்கு இடம்பெற்றது இன் நிகழ்வில் சுவிஸ் அருள்மிகு சூரிச் சிவன் கோவில் சைவத் தமிழ்ச் சங்கத்தின் இன் ஏற்பாட்டில் வருகைதந்த அனைவருக்கும் இலைக் கஞ்சி வழங்கப்பட்டது. வழங்கப்பட்ட கஞ்சியை குடித்த மக்கள் நாட்டில் நிலவிய யுத்தத்தின் போது அக் கொடிய யுத்தத்தின் கடைசி வாரங்களில் தமது உயிரைக் காப்பாற்றிய உணவு என விரும்பி அருந்தியதனை காணக் கூடியதாக இருந்தது அத்துடன் மக்கள் பிரதிநிதிகளும் “இது உணமையாகவே எமது பழைய நினைவுகளை மீட்டிப் பார்க்க வைக்கின்றது ஆனால் இவற்றை நினைக்…

  21. யுத்த வெற்றிக்கான தேசிய நிகழ்வு இன்று மஹிந்த அணியும் கொண்டாடுகின்றது (க.கம­ல­நாதன்) யுத்த வெற்­றி­நாளை கொண்­டாடும் நோக் கில் இரண்டு நிகழ்­வுகள் கொழும்பில் இன் றும் நாளையும் ஏற்­பாடு செய்­யப்­பட்­டுள் ­ளன. இன்றைய தினம் இடம்­பெ­ற­வுள்ள தேசிய யுத்த வெற்­றி­நா­ளுக்­கான நிகழ்வு ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன தலை­மை­யிலும் மற்­று­மொரு யுத்த வெற்றி விழா நிகழ்வு முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக்ச தலை­மை­யிலும் இடம்­பெ­ற­வுள்­ளன. யுத்­த­கா­லத்தில் உயி­ரி­ழந்த இரா­ணுவ வீரர்­களை நினைவு கூறும் யுத்த வெற்­றி­நா­ளுக்­கான தேசிய நிகழ்வு நாளை­ய­தினம் பாரா­ளுன்ற மைதா­னத்தில் இடம்­பெ­ற­வுள்­ளது. இந்­நி­கழ்வு ஜனா­தி­பதி மைத்­தி­ர…

  22. கிளிநொச்சியில் மஹாசேன் பலகாய அட்டகாசம் இருந்து கிளிநொச்சிக்கு பேருந்து ஒன்றில் வந்த மஹாசேன் பலகாய சிங்கள இனவாதக் கும்பல் ஒன்று கிளிநொச்சி நகரின் நடுவில் உள்ள மின்கம்பங்களில் தேசியக் கொடியினை பறக்கவிட்டு தப்பி ஓடி உள்ளனர் இன்று நடைபெற்ற குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது, இலங்கையின் தேசியக் கொடியில் முஸ்லீம் மற்றும் தமிழ் மக்களைப் பிரதிநிதித்துவப் படுத்துகின்ற இரு நிறங்களும் அற்ற இலங்கை தேசியக் கொடிகளை பறக்கவிட்ட சிங்கள இனவாதக் கும்பல்யாழ் நோக்கி ஓடினர் யுத்தத்தினால் பாதிக்கப்பட்டு, மீண்டு நல்லிணக்கத்துடன் இன மத பேதமின்றி வாழ்ந்து கொண்டுள்ள கிளிநொச்சி மக்களின் மனதை காயப்படுத்தியதுடன் இனவாதத்தையும் குறித்த கும்பல் வித்தைத்…

  23. பள்­ளி­வா­சல்கள் மீது தாக்­குதல் : சந்­தேக நபர்­களை கைது செய்ய விசேட பொலிஸ் குழு முஸ்லிம் பள்­ளி­வா­சல்கள் மற்றும் வழி­பாட்டுத் தலங்கள் மீது முன்­னெ­டுக்­கப்­பட்ட தாக்­கு­தல்கள் தொடர்பில் சந்­தேக நபர்களை கைது செய்ய விசேடபொலிஸ் குழு­வொன்று அமைக்­கப்­பட்­டுள்­ளது. பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜய­சுந்­த­ரவின் நேரடி கண்­கா­ணிப்பின் கீழ் பொலிஸ் மா அதிபர் அலு­வ­லக பிர­தானி பிரதி பொலிஸ் மா அதிபர் ரன்மல் கொடி­து­வக்­குவின் மேற்­பார்­வையில் பொலிஸ் தலை­மை­ய­கத்­திற்கு பொறுப்­பான சிரேஷ்ட பொலிஸ் அத்­தி­யட்­சரின் கீழ் இந்த குழு நிய­மிக்­கப்­பட்­டுள்­ளது. சட்டம் ஒழுங்கு அமைச்சர் சாகல ரத்­நா­யக்­கவின் உத்­த­ர­விற்கு அமை­வாக இக்­குழு பொலி…

  24. ஜனநாயக போராளிகள் கட்சியின் நினைவேந்தல் நிகழ்வு GALLE ஜனநாயக போராளிகள் கட்சியால் ஏற்பாடு செய்யப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு நேற்று இரட்டைப்புளியடியில் நடைபெற்றது. இன்று மாலை 4 மணியளவில் நடைபெற்ற நினைவேந்தல் நிகழ்வில் ஜனநாயக போராளிகள் கட்சி உறுப்பினர்கள், பொதுமக்கள் எனப் பலரும் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர். http://uthayandaily.com/story/3351.html

  25. கடைசி தமிழன் இருக்கும் வரை மறக்க முடியாத மே 18! மாவீரர்கள், சூழ்ச்சியினால் வீழ்ந்து போன வலியினைப் பற்றி நிறைய கட்டுரைகளை வலைப்பக்கத்தில் எழுதியிருக்கிறேன். சானல் 4 ஒவ்வொரு முறை ஈழப் படுகொலைகளைப் பற்றி காணொளி வெளியிட்ட போதும் அது அமீரக நேரம் அதிகாலை மூன்றறை மணியாயிருக்கும், இரவு முழுதும் கண்விழித்து நமது பெண்களும் பிள்ளைகளும் அலறி அழும் காட்சிகளைப் பார்த்து கையாலாகாதவனாய் வான் பார்த்து அழுதிருக்கிறேன். பதுங்கு குழிக்குள் இருந்து சிறுமியொறுத்தி அப்பா வாங்கோல் வாங்கோல் என்று அலறிக் கொண்டிருந்த போதே குண்டு விழுந்து செத்துப் போன தகப்பானாயும் நானிருந்தேன், குழிக்குள் இருந்து கதறிய பிள்ளையாயும் நானிருந்தேன், மரத்தடியில் குலுக்கோஸ் பாட்டில்களைக் கையில் பிடித்துக் கொண்…

    • 0 replies
    • 690 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.