ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143361 topics in this forum
-
இலங்கை வரலாற்றில் சிறுபான்மை மக்களான தமிழ், முஸ்லிம் மக்களை இலக்காக வைத்து பெரும்பான்மையினரால் மேற்கொள்ளப்பட்ட பல அடாவடித்தனங்கள் மறக்க முடியாத கறையாக படிந்த வரலாற்றைக் கொண்டவை. முஸ்லிம் மக்களை இலக்காக வைத்து நடத்தப்பட்ட தாக்குதல்களில் அளுத்கமை, பேருவளை சம்வங்களே அனேகமானோரின் மனதில் இன்னும் ஊசாலாடுகின்றன. எனினும், வரலாற்றில் பல இடங்கலில் இவ்வாறான சம்பவங்கள் நிறையவே இடம்பெற்றுள்ளன என்பது சிலருக்கு தெரிந்தும் மறந்து போன உண்மைகளாகும். அதிலும் குறிப்பாக முஸ்லிம்கள் செறிந்து வாழும் மாவனல்லை நகரில் 2001 மே மாதம் முதலாம், 2ஆம் திகதிகளில் மேற்கொள்ளப்பட்டிருந்த அடாவடிகள் ஓட்டுமொத்த இலங்கை வாழ் முஸ்லிம்களினதும் “கறுப்பு மே’ தினமாக அடையாளப்படுத்தப்படுகின்றன. இன்றுடன் 16 வருடங்…
-
- 1 reply
- 583 views
-
-
சம்பந்தனின் அலுவலகத்துக்கு முன்னால் காணாமற்போனோரின் உறவுகள் ஆர்ப்பாட்டம் எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தனின், கொழும்பிலுள்ள எதிர்க்கட்சி அலுவலகத்துக்கு முன்னால், காணாமற்போனோரின் உறவினர்கள், அமைதியான முறையில் தற்போது ஆர்ப்பாட்டமொன்றை மேற்கொண்டு வருகின்றனர். காணாமற்போனவர்களைக் கண்டுபிடித்துத் தருமாறு வலியுறுத்தி, எதிர்க்கட்சித் தலைவரிடம் மனுவொன்றைக் கையளிப்பதற்காக வருகை தந்திருந்த உறவினர்களே, இவ்வாறு அமைதிப் போராட்டமொன்றை மேற்கொண்டு வருகின்றனர். “காணாமற்போனோரைக் கண்டுபிடிப்பதற்கான அலுவலகத்தை விரைவில் ஸ்தாபிப்பதற்கு, ஜனாதிபதி நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்ற வாசகம் எழுதப்பட்ட பதாதைக…
-
- 0 replies
- 155 views
-
-
ஞானசார தேரருக்கு எதிராக பொலிஸ் தலைமையகத்தில் முறைப்பாடு ஞானசார தேரரின் இனவாத கருத்துக்கள் மற்றும் சமயத்தை இழிவுபடுத்துகின்றமைக்கு எதிராக நேற்று பொலிஸ் தலைமையகத்தில் கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மானினால் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. இதன்போது கருத்துத் தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர், மீண்டும் இந்நாட்டில் இனவாதத்தை தூண்ட ஒருசில சக்திகள் முயற்சி செய்கின்றன. முக்கியமாக ஞானசார தேரர் இந்நாட்டை பிரிக்கும் செயற்பாடுகளிலும் 2005 ஆம் ஆண்டுக்கு முன்னர் இருந்ததை போன்று மக்களிடத்தில் இனவாதத்தை பரப்பும் நடவடிக்கை களில் ஈடுபட்டு வருகிறார். ஒரு சமயத் தலைவர் எவ்விதம…
-
- 0 replies
- 141 views
-
-
சமாதானம் பேசவந்த நோர்வேயின் தேசிய தினத்தில் தேசிய இனமொன்று சுதந்திரம் இழந்த நாள் முள்ளிவாய்க்கால் தணியாத தமிழீழ விடுதலை தாகத்தின் அறை கூவல்….விழ்ந்த இடத்தில் இருந்து தொடரும் விடுதலைப்பயணத்தின் வேட்கை !!! ஈழத்து நிலவன் முள்ளிவாய்க்கால் படுகொலை தமிழர் தாயகமெங்கும் ஈழத்தமிழர்களின் இரத்தச் சகதியால் வரையப்பட்ட ஈழத்துக் காவியம் அது. தமிழர் வரலாற்றிலே மறக்க முடியாத நாட்கள் நீண்ட பெரு வலியுடன் ஈழத்தமிழர்களின் இறுதி மூச்சுக்காற்று தாயக மண்ணிலே புதையுண்டு, எரியுண்டு, கதறக் கதற படுகொலை செய்யப்பட்ட இந்த முள்ளிவாய்க்கால் படுகொலை தினம் என்றும் எமது நெஞ்சில் அணையாது எரியும் பெரு நெருப்பு. எத்தனை தடைகள் விதிக்கப்பட்டாலும் இந்த நெருப்பை எவராலும் அணைத்து விடமு…
-
- 0 replies
- 590 views
-
-
வித்தியா – மரணம் முதல் இன்றுவரை. – குளோபல் தமிழ்ச்செய்திகளுக்காக தொகுப்பு – மயூரப்பிரியன் 13.05.2015. -காலை பாடசாலைக்கு சென்ற மாணவி வித்தியா மாலை வரை வீடு திரும்பவில்லை. இரவிரவாக உறவினர்கள் மாணவியை தேடினார்கள். 14.05.2015. – காலையிலும் வித்தியாவின் சகோதரன் , வித்தியா வளர்த்த நாய் மற்றும் ஊரவர்கள் தேடுகின்றார்கள். வித்தியா பாடசாலை செல்லும் பாதையில் உள்ள பாழடைந்த வீடொன்றின் பின் புறமாக கைகள் கால்கள் கட்டப்பட்டு வாய்க்குள் துணி அடையப்பட்ட நிலையில் வித்தியா சடலமாக மீட்கப்படுகின்றாள். 14.05.2015. -மதியம். புங்குடுதீவில் உள்ள 9 பாடசாலைகளையும் சேர…
-
- 1 reply
- 1.1k views
-
-
காணாமல் போனோர் அலுவலகத்தை ‘உடனடியாக செயற்படுத்துக’ கவிதா சுப்ரமணியம் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள், கடந்த பல வருடங்களாக சித்திரவதைகளை அனுபவித்து வருகின்றனர் என்று தெரிவித்த தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன், காணாமல் ஆக்கப்பட்டோரைக் கண்டறிவதற்கான அலுவலகம், எந்தவொரு தாமதமும் இன்றி வெகு விரைவில் செயற்படுத்தப்பட வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார். சர்வதேச ஊடக சுதந்திர தினத்தை முன்னிட்டு, “ஆட்கள் காணாமல் போகச் செய்வதை குற்றவியல் குற்றமாக்கு” எனும் தொனிப்பொருளிலான கருத்தரங்கு, கொழும்பிலுள்ள தபால் தலைமையகக் கேட்போர் கூடத்தில், நேற்று (16) இடம்பெற்றது. இதன்போது உரையாற்றுகையிலேய…
-
- 0 replies
- 201 views
-
-
சிலாபத்தில் சிக்கிய 200 கோடி ரூபா பெறுமதியான ஹெரோயின் தொடர்பில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியானது..! (எம்.எப்.எம்.பஸீர்) பாகிஸ்தானிலிருந்து கடல்மார்க்கமாக கொண்டுவரப்பட்ட சுமார் 200 கோடி ரூபா பெறுமதியான ஹெரோயின் போதைப்பொருளை கடந்த வியாழனன்று புத்தளம் பிரதிப் பொலிஸ் மா அதிபர் அலுவலகத்தின் கீழ் இயங்கும் விசேட உளவுப் பிரிவினர் கைப்பற்றிய நிலையில், அதன் பின்னணியில் உள்ளதாக நம்பப்படும் பாயிஸ் பாய் குறித்து பல தகவல்களை பொலிஸார் வெளிப்படுத்தியுள்ளனர். பாகிஸ்தானியரான குறித்த நபர் டுபாயில் தங்கியிருந்து இந் நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றமை விசாரணைகளில் தெரியவந்துள்ளதுடன் நாட்டுக்குள் அவ…
-
- 0 replies
- 403 views
-
-
பஸ் விபத்தில் மாணவன் பலி : ஊர்காவற்றுறையில் பதற்றம் யாழ்ப்பாணம் ஊர்காவற்றுறை, பாலக்காட்டுச் சந்தியில் இடம்பெற்ற பஸ் விபத்தில் மாணவனொருவன் ஸ்தலத்தில் உயிரிழந்ததையடுத்து அப்பகுதியில் பெரும் பதற்றமான சூழ்நிலை உருவாகியுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார். இவ் விபத்துச் சம்பவம்இன்று காலை இடம்பெற்றுள்ளது. வேலணையில் இருந்து ஊர்காவற்றுறை நோக்கிப் பயணித்த தனியார் பஸ் வண்டியே பாலக்காட்டுச் சந்தியில் வைத்து துவிச்சக்கர வண்டியில் சென்ற மாணவன் மீது மோதியுள்ளது. இதன்போது மெலிஞ்சிமுனையைச் சேர்ந்த 16 வயதுடைய ஜெயக்குமார் அகிலன் என்ற மாணவனே சம்பவ இடத்தில் உயிரிழந்தவராவார். இதையடுத்த அப்பகுதியில் ஒன்றுதிரண்ட மக்கள் குறித்த பஸ் வண்ட…
-
- 0 replies
- 260 views
-
-
முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நாளை : விசேட போக்குவரத்தும் ஏற்பாடு 2009ஆம் ஆண்டு முன்னெடுக்கப்பட்ட இறுதி யுத்தத்தின் கொடூரத்தில் தமது உயிர்களைத் தியா கம் செய்தவர்களின் நினைவாக நாளை வியாழக்கிழமை முள்ளிவாய்க்கால் பூமியில் உணர்வெழுச்சியுடன் நினைவேந்தல் நிகழ்வு அனுஷ்டிக்கப்படவுள்ளது. வடமாகாண சபையின் ஏற்பாட்டில் நடைபெறும் இந்நினைவேந்தல் நிகழ்விற்கு வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் தலைமை தாங்கவுள்ளார். இந்நிகழ்வானது நாளை காலை 9.30 மணியவில் மூன்று நிமிட மௌன அஞ்சலியுடன் ஆரம்பமாக அதனைத்தொடர்ந்து மரணித்த ஆன்மாக்களுக்காக பிரார்த்தனையும் ஈகைச்சுடரும் ஏற்றப்…
-
- 0 replies
- 482 views
-
-
பெற்றோல் குண்டுகள், கற்கள் கொண்டு முஸ்லிம் பள்ளிவாசல்கள் மீது தாக்குதல் - பாணந்துறை, வெல்லம்பிட்டி பகுதிகளில் சம்பவம் பாணந்துறை மற்றும் வெல்லம்பிட்டி பகுதிகளில் இரு பள்ளிவாசல்கள் மீது அடையாளம் தெரியாதோர் தாக்குதல் நடத்தியுள்ளனர். நேற்று முன்தினமும் நேற்றும் இவ்விரு தாக்குதல் சம்பவங்களும் இடம்பெற்றுள்ளன. இந்த இரு சம்பவங்கள் தொடர்பிலும் வெவ்வேறான இரு சிறப்பு விசாரணைகளை பொலிஸார் ஆரம்பித்துள்ளனர். பாணந்துறை பழைய பஸார் பகுதியில் உள்ள வர்த்தக நிலையங்களிடையே அமைக்கப்பட்டுள்ள பள்ளிவாசலின் மேல் மாடி பெற்றோல் குண்டுத் தக்குதலுக்கு உள்ளாகியுள்ளதுடன் வெல்லம்பிட்டி, கொஹிலவத்தை பகுதியில் உள்ள பள்ளிவாசலானது கல் வீச்சு தாக்குதலுக்கு…
-
- 0 replies
- 373 views
-
-
வாள்வெட்டு வழக்கில் மூவருக்கு 8 ஆண்டு சிறை தண்டனை யாழ்ப்பாணம் மடத்தடி பகுதியில் இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவமொன்றில் தொடர்புபட்டவர்கள் என்ற சந்தேகத்தில் கைது செய்யப்பட்ட எட்டுப் பேரில் மூவருக்கு மூன்றாண்டு கடூழிய சிறைத் தண்டனையும், ஏனைய ஐவருக்கு ஓராண்டு கடூழிய சிறைத் தண்டனையும் விதித்து யாழ்.நீதிவான் நீதிமன்ற நீதிவான் எஸ்.சதீஸ்கரன் உத்தரவிட்டுள்ளார். கடந்த 2012ஆம் ஆண்டு யாழ்ப்பாணம் மடத்தடி பகுதியில் வாள்வெட்டு சம்பவம் ஒன்று இடம்பெற்றிருந்தது. இச் சம்பவத்தில் ஒருவர் படுகாயமடைந்திருந்தார். இந்நிலையில் இச் சம்பவம் தொடர்பாக மாணவர்கள் இருவர் உட்பட எட்டுப் பேர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டி…
-
- 0 replies
- 275 views
-
-
கிழக்கில் இனமுறுகலை ஏற்படுத்த ஞானசார தேரர் முயற்சியா? ஞானசார தேரரின் தொடர்ச்சியான கருத்துக்கள் நாட்டின் நீதித்துறையை கேள்விக்குட்படுத்துவதாக அமைந்துள்ளன என்று கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் தெரிவித்தார், நாட்டின் சட்டம் ஒழுங்கை சீர்குலைக்கும் விதமாக தீவிரவாத ரீதியில் கருத்துக்களை வெளியிட்டு வரும் ஞானசார தேரரின் கருத்துக்கள் இலங்கையின் தேசிய ஒருமைப்பாட்டுக்கும் ஜனநாயகத்திற்கும் பாரிய அச்சுறுத்தலாக அமைந்துள்ளதாகவும் கிழக்கு முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் குறிப்பிட்டார். அண்மையில் ஞானசார தேரர் இஸ்லாமிய மதத்தையும் சிறுபான்மையினரை தூற்றியும் தெரிவி…
-
- 0 replies
- 384 views
-
-
வடக்கு கிழக்கில் கடும் பாதுகாப்பு ஏற்பாடுகள் வடக்கு கிழக்கு மாகாணங்களில் கடும் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. போரில் உயிர் நீத்த உறவுகளுக்காக நடத்தப்படும் நினைவேந்தல் நடவடிக்கைகளை தடுக்கும் வகையில் இவ்வாறு விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இன்றைய தினம் முதல் வடக்கு கிழக்கு மாகாணங்களில் இந்த விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட உள்ளன. உயிரிழந்த தமிழீழ விடுதலைப் புலி போராளிகளுக்கு அஞ்சலி செலுத்தும் அரச விரோத செயற்பாடுகள், பேரணிகள், கூட்டங்களை நாளைய தினம் நடாத்த சில திட்டமிட்ட குழுக்கள் முயற்சித்து வருவதாகக் பாதுகாப்புதரப்பு தெரிவித்துள்ளது. வடக்கில் செயற்பட்டு…
-
- 0 replies
- 192 views
-
-
மட்டக்களப்பில் முள்ளிவாய்க்கால் நினைவு தினம் அனுஷ்டிப்பு முள்ளிவாய்க்காலில் உயிர் நீர்த்த உறவுகளுக்கு மட்டக்களப்பில் நினைவு தினம் அனுஷ்டிக்கப்பட்டுள்ளது. தமிழீழ விடுதலை இயக்கத்தின் தேசிய அமைப்பாளரும் வடக்கு மாகாணசபை உறுப்பினருமான சிவாஜிலிங்கம் தலைமையில் குறித்த நிகழ்வுகள் இன்று மாலை 5.45 மணியளவில் கல்லடி கடற்கரையில் இடம்பெற்றது. இதன்போது இரண்டு நிமிடங்கள் மொளன அஞ்சலி செலுத்தப்பட்டதோடு பொதுமக்களால் தீபம் ஏற்றி மலர் அஞ்சலி செலுத்தப்பட்டது. http://www.virakesari.lk/article/20067
-
- 0 replies
- 278 views
-
-
ஐ.தே.கவின் முக்கிய மூன்று அமைச்சர்கள் பதவி விலகத் தீர்மானம்? ஐக்கிய தேசியக் கட்சியின் முக்கிய மூன்று அமைச்சர்கள் பதவி விலகத் தீர்மானித்துள்ளனர். அமைச்சரவை மாற்றத்தில் தமது அமைச்சுப் பொறுப்புக்கள் மாற்றப்பட்டால் இவ்வாறு கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளனர். தற்போது வகித்து வரும் சகல பதவிகளிலிருந்தும் விலக இவ்வாறு மூன்று சிரேஸ்ட அமைச்சர்கள் தீர்மானித்துள்ளனர். அவசரமாக மேற்கொள்ளப்படும் அமைச்சரவை மாற்றத்தில் உடன்பாடு கிடையாது என கட்சித் தலைமையகத்திற்கு குறித்த அமைச்சர்கள் உத்தியோகப்பற்றற்ற ரீதியில் அறிவித்துள்ளனர். இதேவேளை, அமைச்சரவையில் மாற்றம் செய்யப்படுவதற்கு ஐக்கிய தேசியக் கட்சியின் பின்வரிசை பாராளும…
-
- 0 replies
- 183 views
-
-
வடக்கில் அரங்கேற்றும் நாடகத்தை நிறுத்துக…. இராணுவத்தை தண்டிக்க இடமளிக்கபோவதில்லை..! நினைவேந்தல் நிகழ்வுகள் எனற பெயரில் புலம்பெயர் அமைப்புகளை தூண்டிவிடும் வகையில் வடக்கில் அரங்கேற்றும் நாடகத்தை இத்துடன் நிறுத்திக்கொள்ள வேண்டும். இராணுவத்தை குற்றம் சுமத்தி மக்களை தூண்டிவிடும் நாடகத்தை இனியும் நடத்தினால் தக்க பாடம் கற்பித்துக்கொடுக்க வேண்டிய வரும் என பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜயவர்தன தெரிவித்தார். இராணுவத்தை தண்டிக்க ஒருபோதும் இடமளிக்கபோவதில்லை எனவும் அவர் குறிப்பிட்டார். அரநாயக பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். http://www.virakesari.lk/artic…
-
- 9 replies
- 627 views
-
-
வீரம் செறிந்த தமிழர் வரலாற்றை ஆவணம் ஆக்குவது கட்டாயம் வடக்கு- கிழக்கு தமிழர் தாயகம் எங்கும் சிதறிக் கிடக்கும் வீரம் செறிந்த தமிழர் வரலாற்றை ஆவணப்படுத்துவதற்கு வடக்கு மாகாண சபை முன்வர வேண்டும் எனத் தமிழ் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். உரிமை மறுக்கப்பட்ட தமிழ் இனம் தனது உரிமையைப் பெற்றுக் கொள்வதற்காக 30 ஆண்டுகளுக்கு மேலாக ஆயுதப் போராட்டத்தை நடத்தியது. தரைப்படை, கடற்படை, விமானப் படை, கரும்புலிப் படை ஆகியவற்றைக் கொண்டு ஒர் மரபுவழிப் படையாக போராட்டத்தை முன்னகர்த்தி வந்தது. 2009ஆம் ஆண்டு தமிழரின் ஆயுதப் போராட்டம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டது. இலங்கையில் வடக்கு – -கிழக்குப் …
-
- 0 replies
- 516 views
-
-
‘காணொளியில் ஐயா இருட்டடிப்பு‘ க.ஆ.கோகிலவாணி “இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, நோர்வூட் மைதானத்துக்கு வந்திருந்த போது, காண்பிக்கப்பட்ட காணொளியில், மலையகத்தின் மாபெரும் மகானான சௌமியமூர்த்தி தொண்டமான் பற்றிய எந்தவொரு விடயமும் உள்ளடக்கப்படவில்லை” என்று, இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் குற்றஞ்சாட்டியுள்ளது. எனினும், “அமரர் சௌமியமூர்த்தி தொண்டமான் இல்லாத மலையகத்தை யாரும் காணமுடியாது என்பதை முழு உலகமே அறிந்துவைத்துள்ளது என்றும் காங்கிரஸ் சுட்டிக்காட்டியுள்ளது. காங்கிரஸின் தலைமையகமான சௌமியபவனில், நேற்று (16) நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துரைத்த போதே, காங்கிரஸின் உப-தலைவரும் மத்திய மாகாணசபையின் முன்னா…
-
- 0 replies
- 216 views
-
-
‘வெள்ளை வானுக்கு அவர்களே பொறுப்பு’ தீஷான் அஹமட் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியின் முறைமையின் கீழ், ஆட்சியதிகாரத்தில் இருக்கும் ஜனாதிபதி மற்றும் முன்னாள் ஜனாதிபதிகளே, வெள்ளை வானுக்கு பொறுப்புக் கூறவேண்டும் என்று, வடமாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரன் தெரிவித்தார். ஜனாதிபதி அல்லது முன்னாள் ஜனாதிபதி முப்படைகளுக்கும் தளபதியாக இருக்கும் அதிகாரத்தை கொண்டுள்ளதால், இராணுவம், கடற்படை, வான்படை அதன் கீழ் இயங்கும் ஊர்காவற்படை ஆகியவற்றால் இயக்கப்படும் வெள்ளை வான் கடத்தல் மற்றும் ஏனைய இனக் குழுமங்களினால் மேற்கொள்ளப்பட்ட அனைத்துப் படுகொலைகளுக்கும் அவர்களே பொறுப்பாளர்களாக காணப்படுகின்றனர் என்றும்…
-
- 0 replies
- 252 views
-
-
யாழ் பல்கலைக்கழகத்தில் கவனயீர்ப்பு போராட்டம் யாழ் பல்கலைக்கழகத்தில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டு வருகின்றதாக தெரிவிக்கப்படுகின்றது. புங்குடுத்தீவு மாணவி கொலை வழக்கினை கொழும்புக்கு மாற்றக் கூடாது எனத் தெரிவித்தும் யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் காவல்துறையினர் கொல்லப்பட்டமைக்கு நீதி கோரியும் இவை தொடர்பில் அரசாங்கம் 30 நாட்களுக்குள் உரிய பதிலை வழங்க வேண்டும் என தெரிவித்தும் அவர்கள் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர். பல்கலைக்கழக மாணவர்கள் ,ஆசிரியர் சங்க பிரதிநிதிகள், மற்றும் பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்கள் ஆகியோர் இந்த போராட்டத்தில் கலந்து கொண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. …
-
- 1 reply
- 292 views
-
-
யுத்தம் முடிவடைந்து எட்டு ஆண்டுகள் நிறைவடைந்த நிலையிலும் விடுதலைப்புலிகள் அமைப்பின் கடற்புலிகளின் திறனைக் கண்டு இலங்கை இராணுவம் வியந்துள்ளது. விடுதலைப்புலிகளால் அமைக்கப்பட்ட நீர்மூழ்கிக் கப்பல்கள் மற்றும் அதி விரைவுத் தாக்குதல் படகுகளை முள்ளியவாய்கால் பகுதியில் உள்ள இடம் ஒன்றில் வைத்து, தென்னிலங்கையில் இருந்து வருபவர்களுக்கும், சுற்றுலா பயணிகளுக்கும் இது குறித்து விளக்கமளிக்கப்படுகிறது. அத்துடன், விடுதலைப்புலிகளின் கடற்படையின் பொறியியல் திறன்களாக இதனை அடையாளம் காட்டப்படுகின்றது. மேலும், அங்கு விடுதலைப்புலிகளின் கடற்கலங்கள், நீர் மூழ்கிக் கப்பல்களின் பாகங்கள், விடுதலைப்புலிகளின் கடற்கலங்களை பரீட்சித்து பார்க்கும் செயற்கை நீர் தடாகம் என்பன காணப்பட…
-
- 0 replies
- 342 views
-
-
மே18 யை “ டெங்கு ஒழிப்பு தினம்” என குழப்பும் முயற்சியை அனுமதிக்க முடியாது! முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் தினமான மே 18 ஆம் திகதி, டெங்கு ஒழிப்பு எனும் போர்வையில் வீடு வீடாக சென்று காவல்துறையினரும், இராணுவத்தினரும் எமது தமிழ் மக்களை அச்சுறுவதை அனுமதிக்க முடியாது என வடமாகாணசபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார். மே மாதம் 18ஆம் திகதி மத்திய அரசினால் டெங்கு ஒழிப்பு தினமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ள நிலையில் அது தொடர்பில் ஊடகவியலாளர்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார். இது குறித்து மேலும் தெரிவித்த அவர், “மே மாதம் 18 மற்றும் 19 ஆகிய இரு நாட்கள் இலங்கையில் டெங்கு ஒழிப்பு தினங்களாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளன. மே 18 என்பது…
-
- 3 replies
- 633 views
-
-
யாழ்தேவி புகையிரதத்துடன் உழவு இயந்திரம் கோர விபத்து; இருவர் பலி கொழும்பில் இருந்து காலை 6.35 மணிக்கு காங்கேசன்துறை நோக்கிப் பயணித்த யாழ்தேவி புகையிரதத்துடன் புளியங்குளம் - புதூர் சந்திக்கு அண்மையாக உள்ள பாதுகாப்பற்ற புகையிரதக் கடவையின் ஊடாக ஆற்று மணலை ஏற்றி பயணித்த உழவு இயந்திரம் மோதுண்ட விபத்துச் சம்பவத்தில் இரு இளைஞர்கள் பரிதாபகரமாக உயிரிழந்ததுடன் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். இச்சம்பவம் நேற்று திங்கட்கிழமை பிற் பகல் 2 மணியளவில் இடம்பெற்றுள்ளது. இது தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது, புதூர் நாகதம்பிரான் ஆலயம் அமைந்துள்ள காட்டுப் பகுதியில் உள்ள ஆற்றில் இருந்து மணலை ஏற்றி பயணித்த உழவு இயந்திரம் புதூர் சந்திக்கு அண்மையா…
-
- 1 reply
- 516 views
-
-
நிரூபித்தால் எம்.பி பதவியைத் துறப்பேன்! - சிறிதரன் சவால் இலங்கைக்கு ஜீ.எஸ்.பி வரிச் சலுகை வழங்கப்பட வேண்டும் என்று கோரியே ஐரோப்பிய பாராளுமன்றத்திற்கு சென்றதாக கூறப்படும் விமர்சனங்கள் பொய்யானவை என்றும், நான் அதற்காகவே சென்றேன் என்பதை எவராவது நிரூபித்தால் பாராளுமன்ற உறுப்பினர் பதவியை துறப்பேன் எனவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் சவால் விடுத்துள்ளார். சமகால அரசியல் நிலமைகள் தொடர்பாக இன்று யாழ். ஊடக அமையத்தில் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பின் போதே பாராளுமன்ற உறுப்பினர் மேற்கண்டவாறு கருத்து வௌியிட்டுள்ளார். அங்கு சிறிதரன் எம்.பி மேலும் கூறியதாவது, இலங்கை பார…
-
- 1 reply
- 332 views
-
-
‘இலங்கைக்கு உதவ மோடி யார்?’ “சர்வதேச வெசாக் நிகழ்வில் பிரதான விருந்தினராக மாத்திரம் நாட்டுக்கு வருவதாகக் கூறிய இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, இந்தியாவின் 30ஆவது மாநிலமாக நினைத்துக்கொண்டே நாட்டுக்கு வந்து சென்றுள்ளார்” என, பிவிதுரு ஹெல உறுமயவின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். பிற்றக்கோட்டேயில் உள்ள கட்சியின் அலுவலகத்தில் நேற்று(15) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைக் கூறினார். “மேல் மற்றும் தெற்கு மகாணங்களில் மாத்திரம் நடைமுறையில் உள்ள அவசர அம்பியூலன்ஸ் சேவை, நாடளாவிய ரீதியில் விஸ்தரிக்கப்படும் என்றும், பெருந்தோட்ட தொழிலாளர்களுக்…
-
- 4 replies
- 572 views
-