Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. சமஷ்டித் தீர்வுக்கு இந்தியா ஒத்துழைக்க வேண்டும்! - மோடியிடம் கோரிய கூட்டமைப்பு பிரதிநிதிகள் இணைந்த வடக்கு கிழக்கில் சமஷ்டி முறையிலான அரசியல் தீர்வொன்றை தமிழ் மக்களுக்கு வழங்குவதற்கு இந்தியா அழுத்தம் கொடுக்க வேண்டும் என்று, இந்திய பிரதமர் நரேந்திர மோடியிடம் தமிழ் தேசியக் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்ததாக, கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார். இலங்கை வந்திருந்த இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை, தமிழ் தேசியக் கூட்டமைப்பு பிரதிநிதிகள் இன்று மாலை சந்தித்து பேச்சு நடத்தினர். குறித்த சந்திப்பில் கலந்துரையாடப்பட்ட விடயங்கள் தொடர்பாக, கருத்துத் தெரிவித்த செல்வம் அடைக்கலநாதன் தமிழ் மக்கள் எ…

    • 1 reply
    • 475 views
  2. தமிழில் உரையாற்றிய மோடி : மேலும் 10 ஆயிரம் வீடுகள் !! . மலையகத்தில் இந்திய வம்சாவளி மக்களிடம் மோடி தமிழில் உரையாற்றியுள்ளமை அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. அங்கு மோடி, அங்கு உரையாற்றும் போது 'யாதும் ஊரே யாவரும் கேளிரே” என்ற வரிகளை குறிப்பிட்டுள்ளார். இதனால், அரங்கத்தில் அவருக்கு பாரிய வரவேற்பு ஏற்பட்டுள்ளது. மேலும் 10 ஆயிரம் வீடுகளை மலைய மக்களுக்கு அமைத்துக் கொடுப்பதாக அவர் இதன்போது உறுதிமொழியளித்தார். இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் மலையகத்திற்கான விஜயத்தில் பல்லாயிரக்கணக்கான மக்கள் நோர்வூட் மைதானத்தில் ஒன்று திரணடுயிருந்தமை குறிப்பிடத்தக்கது. http://www.virakesari.lk/article/19932  '…

  3. இரண்டாம் நாள் நினைவேந்தல் கடைப்பிடிப்பு வல்வெட்டித்துறை ஊறணி வைத்தியசாலைக்கு அருகில், இலங்கை இராணுவத்தினரால் சுட்டுக் கொல்லப்பட்ட இளைஞர்களின் நினைவிடத்தில், முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரத்தின் இரண்டாம் நாள் நினைவு அஞ்சலி நிகழ்வு நடைபெற்றது. வடக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கத்தின் தலைமையில் இந்த நினைவேந்தல் நடைபெற்றது. http://uthayandaily.com/story/2614.html

  4. முள்ளிவாய்க்காலில் இன்னும் இறுதிப்போர் அடையாளங்கள் இறு­திப்போர் நடை­பெற்ற முள்­ளி­வாய்க்கால் பகு­தி­யில் வெடிக்­காத துப் பாக்கி ரவை­கள் உக்­கிய நிலை­யில் இப் போ­தும் காணப்­ப­டு­கின்­றன. முள்­ளி­ய­வாய்க்­கால் கிழக்­குப் பகு­தி­யில் மண்­ணில் புதை­யுண்ட நிலை­யில் விடு­த­லைப் புலி­க­ளால் பயன்­ப­டுத்­தப்­பட்­ட­தா­கக் கூறப்­ப­டும் துப்­பாக்கி ரவை­கள் பல வெடிக்­காத நிலை­யில் உக்­கிக் காணப்­ப­டு­கின்­றன என்று கூறப்­பட்­டது. போர் முடி­வ­டைந்து 8 வரு­டங்­கள் கடந்த நிலை­யி­லும் போரின் அடையாளங்களையும்,வடுக்களையும் அங்கு ஒரு சில இடங்களில் பரவலாகக் காணமுடிவதாக அங்கு சென்றவர்கள் தெரிவித்தனர். அந்தப் பகுதியில் மக்கள் மீள்குடியேற்றம் செய்யப்பட்டுள…

  5. டிக்கோயா தள வைத்தியசாலையை திறந்து வைத்தார் மோடி மலையகத்திற்கு விஜயம் செய்த பாரத பிரதமர் நரேந்திர மோடி, இந்திய அரசின் உதவியில் கட்டப்பட்ட டிக்கோயா கிளங்கன் தள வைத்தியசாலையை சற்றுமுன்னர் திறந்து வைத்தார். Tags http://www.virakesari.lk/article/19930

  6. தலதா மாளிகையில் மோடி வழிபட்டார் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, கண்டி ஸ்ரீ தலதா மாளிகையில் வழிபாடுகளில் ஈடுபட்டார். அவருடன், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் சென்றிருந்தார். - See more at: http://www.tamilmirror.lk/196520/தலத-ம-ள-க-ய-ல-ம-ட-வழ-பட-ட-ர-#sthash.5CyYSx5q.dpuf

  7. மோடியுடனான சந்திப்புக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை! - விக்னேஸ்வரன் வேதனை தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு தான் வேண்டாதவர் என்றும், இதனால் இந்திய பிரதமர் நரேந்திர மோடியுடனான சந்திப்புக்குத் தனக்கு அழைப்பு விடுக்கவில்லை என்றும் வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் கூறியுள்ளார். வடமாகாண முதலமைச்சர் அலுவலகத்தில் இன்று இடம்பெற்ற அவுஸ்திரேலிய சர்வதேச நீர் மையத்தின் அதிகாரிகளுடனான சந்திப்பின் பின்னர், ஊடகவியலாளர்களிடம் பேசும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். தொடர்ந்து அவர் கூறும் போது, "நான் நேற்றைய நிகழ்விற்கு சென்றேன். மோடி எனக்கு கைலாகு கொடுத்து நலம் விசாரித்தார். நான் இருந்த இடத்திலிருந்து மோடி சற்று தொலைவிலேயே இர…

    • 0 replies
    • 476 views
  8. செங்கலடியில் முன்னால் போராளி தூக்கிட்டு தற்கொலை செங்கலடியில் 6 வயது குழந்தையின் தாய் யோகேந்திரன் ரமணி தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். தனது கணவரும் பேராளியாக இருந்து உயிர் இழந்தமையால் விரக்தியில் தமது குழந்தையின் எதிர்காலத்தை யோசிக்காமல் தூக்கிட்டு நேற்று தற்கொலை செய்துள்ளாதாக குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். நேற்று மாலை ஏறாவூர் பொலிஸாரால் செங்கலடி வைத்தியசாலை பிணைவறையில் சடலம் பிரேத பரிசோதனைக்காக கொண்டு வைக்கப்பட்ட நிலையில் இன்னும் பிரேதபரிசோதனை செய்யப்படாமையினால் சடலத்தை பெறுவதற்காக உறவினர்கள் வீதியில் கவலையுடன் அமர்ந்துள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார். http://www.virakesari.lk/article/19810

    • 16 replies
    • 1.4k views
  9. புங்குடுதீவு வித்தியா படுகொலை : குற்றப்பத்திர ஏடுகளை பாதுகாக்க நீதிமன்று உத்தரவு யாழ்ப்பாணம், புங்குடுதீவு வித்தியா படுகொலை தொடர்பில் முதல் ஒன்பது எதிரிகளுக்கும் எதிரான குற்றப்பகிர்வு பத்திர வழக்கு ஏடுகள் இன்றைய தினம் யாழ்.மேல் நீதிமன்ற பதிவாளருக்கு கிடைக்கப்பெற்றுள்ளது. இந்நிலையில் குறித்த வழக்கு விசாரணையானது கொழும்புக்கு மாற்றப்படுவது தொடர்பான முயற்சிகள் உயர் மட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், குறித்த வழக்கு தொடர்பான குற்றப்பகிர்வு பத்திரத்தை இரும்பு பெட்கத்தில் வைத்து பாதுகாக்குமாறு யாழ்.மேல் நீதிமன்றமானது நீதிமன்ற பதிவாளருக்கு உத்தரவிட்டுள்ளது. இதேவேளை குறித்த வழக்கானது கடந்த திங்கட்கிழமையே சட்டமா அதிபரால் யாழ்.மேல் …

    • 4 replies
    • 418 views
  10.  மஹிந்த - மோடி இரவோடிரவாகச் சந்திப்பு இலங்கைக்கான உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டுள்ள இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கும் இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கும் இடையில், கலந்துரையாடலொன்று இடம்பெற்றுள்ளது. இவ்வாறான கலந்துரையாடலொன்று தொடர்பில், இந்தியப் பிரதமரின் உத்தியோகபூர்வ நிகழ்ச்சி நிரலில் காணப்படவில்லை என்ற போதிலும், முன்னாள் ஜனாதிபதியின் வேண்டுகோளுக்கிணங்கவே, இந்தச் சந்திப்பு இடம்பெற்றதாக, இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் நரஞ்சித் சிங் சந்து தெரிவித்தார். நேற்று (11) மாலை, கங்காரம விகாரையில் இடம்பெற்ற மத வழிபாட்டை அடுத்து, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால்…

  11. சக்தி டிவி செய்திகள் 12th May 2017, 8PM

  12. அமெரிக்க குடியுரிமையை நீக்கிக் கொள்ளப் போவதில்லை – கோதபாய அமெரிக்க குடியுரிமையை நீக்கிக்கொள்ளப் போவதில்லை என முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். செயற்பாட்டு அரசியலில் களமிறங்கும் திட்டங்கள் எதுவும் கிடையாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். 2020ம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் நோக்கில் கோதபாய அமெரிக்க குடியுரிமையை ரத்து செய்யப் போவதாக ஊடகங்களில் தகவல் வெளியிடப்பட்டிருந்தது. தமது மகன் உள்ளிட்ட பல உறவினர்கள் அமெரிக்காவில் வாழ்ந்து வருவதாகவும் இதனால் அடிக்கடி அமெரிக்கா சென்று வர வேண்டியிருப்பதாகவும் அமெரிக்க குடியுரிமையை நீக்கிக்கொள்ள எவ்வித அவசியமும் கிடையாது எனவும் அவர் குறிப்பிட்டுள்…

  13. இலங்கைக்கான பயணம் மிகவும் முக்கியமானதும் நினைவில் நிற்கக் கூடியதுமாக அமைந்திருந்தது – நரேந்திர மோடி இந்திய பிரதமர் நரேந்திர மோடி இலங்கைக்கான பயணத்தை முடித்துக் கொண்டு நாடு திரும்பியுள்ளார். இரண்டு நாள் பயணமொன்றை மேற்கொண்டு பிரதமர் மோடி நேற்று இலங்கைக்கு வந்திருந்தார். இன்று மாலை தனது இலங்கைக்கான பயணத்தை முடித்துக் கொண்டு இந்தியன் எயர்லைன்ஸ் விமான சேவையின் விசேட விமானமொன்றின் மூலம் பிரதமர் நாடு திரும்பியுள்ளார். பிரதமர் மோடி நாடு திரும்பிய போது, இலங்கைப் பிரதமர் ரணில் விக்ரமசிங்க கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு சென்று அவரை வழியனுப்பி வைத்துள்ளார். இலங்கைக்கான பயணம் மிகவும் முக்கியமானதும் நினைவில் நிற்கக் கூடியதுமாக …

  14. வடக்கு, கிழக்கில் பொருத்து வீட்டை அமைப்பதற்கு அமைச்சரவைக் கூட்டத்தில் அனுமதி வடக்கு, கிழக்கில் முன்நிர்மாணிக்கப்பட்ட பொருத்து வீட்டை அமைப்பதற்கு அமைச்சரவைக் கூட்டத்தில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதன்படி, தலா 15 இலட்சம்ரூபா செலவில் 6 ஆயிரம் வீடுகள் அமைக்கப்படவுள்ளன. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நேற்றுமுன்தினம் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தின் போதே இவ் அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது. முன்நிர்மாணிக்கப்பட்ட பொருத்து வீட்டை, வடக்கு – கிழக்கில் அமைப்பதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எதிர்ப்பு வெளியிட்டிருந்ததுடன் வடக்கு மாகாண சபையும் இதற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றியிருந்தது. இவற்றை புறமொதுக்கி, முன் நிர்மாணிக்கப்…

  15. காங்கேசன்துறை கடலில் மிதந்த 9 கோடி ரூபா பெறுமதியான ஹெரோயின் மீட்பு (படங்கள்) காங்கேசன்துறை கடற்படை தலைமைப்பீடத்தில் இருந்து சுமார் 10 கடல் மைல் தொலைவில் கடலில் மிதந்தவாறு இருந்த 9.3 கிலோகிராம் ஹெரோயின் போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளதாக கடற்படையின் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. அதிகாலை ரோந்துப்பணியில் ஈடுபட்டிருந்த கடற்படையினர் சந்தேகத்திற்கிடமான முறையில் மிதந்துவந்த பொதி ஒன்றினை கைப்பற்றியிருந்தனர். அதனை பிரித்து சோதனையிட்ட போது ஹெரோயின் போதைப்பொருள் இருந்துள்ளமை தெரியவந்துள்ளது. குறித்த ஹெரோயினை கடற்படைதளத்திற்கு கொண்டு வந்து மேலதிக பரசோதனைகள் மேற்கொள்ளப்பட்ட போது 100 வீதம் ஹெரோயின் என கண்டறியப்பட்டுள்ளது. மீட…

  16. அங்குரார்ப்பண நிகழ்வில் மோடி உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கைக்கு வந்துள்ள இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில், இன்று காலை ஆரம்பமான சர்வதேச வெசாக் தின அங்குரார்ப்பண நிகழ்வுகளில் கலந்துகொண்டுள்ளார். - See more at: http://www.tamilmirror.lk/196476/அங-க-ர-ர-ப-பண-ந-கழ-வ-ல-ம-ட-#sthash.jigQTsvD.dpuf மோடியின் விசேட உரையானது ‘3 மொழிகளில் உரைபெயர்ப்பு’ 12-05-2017 09:37 AM Comments - 0 Views - 11 டி.ஷங்கீதன் நோர்வூட் மைதானத்தில், இன்று (12) இடம்பெறும் பிரதான வைபவத்தில் பங்கேற்கும், இந்தியப் பிரதமர் நரே…

    • 3 replies
    • 420 views
  17. பிரதமர் மோடி - மனோ தலைமையிலான தமிழ் முற்போக்குக் கூட்டணி உறுப்பினர்கள் சந்திப்பு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அமைச்சர் மனோ கணேசன் தலைமையிலான தமிழ் முற்போக்குக் கூட்டணி உறுப்பினர்களை சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். இச் சந்திப்பில் இந்தியாவுக்கான இலங்கை உயர்ஸ் தானிகர் தரண்ஜித் சிங் சத்துவும் கலந்துகொண்டிருந்தார். இச் சந்திப்பு டிக்கோயா மைதானத்தின் கோட்போர் கூடத்தில் இடம்பெற்றுள்ளது. கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெறும் ஐக்கிய நாடுகள் வெசாக் தின நிகழ்வை நிறைவுசெய்துவிட்டு மலையகத்திற்கான விஜயத்தை மேற்கொண்ட இந்தியப் பிரதமர் மோடி, டிக்கோயா கிளங்கன் வைத்தியசாலையை திறந்து வைத்தார்…

  18.  முரளியை பரிசளித்துள்ளீர்கள்: பிரதமர் மோடி இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் சுழல்பந்துவீச்சாளர் முத்தையா முரளிதரனை பரிசளித்துள்ளீர்கள் என இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார். நோர்வூட்டில் தற்போது நடைபெற்றுகொண்டிருக்கின்ற விசேட கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றிகொண்டிருக்கின்றார். அதன் போதே, அவர் மேற்கண்டவாறு இவ்வாறு தெரிவித்தார். - See more at: http://www.tamilmirror.lk/196508/ம-ரள-ய-பர-சள-த-த-ள-ள-ர-கள-ப-ரதமர-ம-ட-#sthash.IYayt9bw.dpuf

  19. மோடியுடன் எந்தவிதமான பொருளாதார உடன்படிக்கைகளும் கைச்சாத்திடப்பட மாட்டாது..! இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் இலங்கை விஜயத்தின் போது எந்தவிதமான பொருளாதார உடன்படிக்கைகளையும் மேற்கொள்ள போவதில்லை. இரு நாடுகளின் நட்புறவு பலமடையும் வகையிலேயே இந்த விஜயம் அமைந்துள்ளது என பிரதி வெளிவிவகார அமைச்சர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்தார். கடந்த ஆட்சியில் மேற்கொண்ட மோசமான உடன்படிக்கைகள் இந்த அரசாங்கத்தில் மேற்கொள்ளப்படாது எனவும் அவர் குறிப்பிட்டார். உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கை வருகைதரவுள்ள இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் விஜயத்தில் இரு நாடுகளுக்கு இடையிலான பொருளாதார உடன்படிக்கை எவையும் மேற்கொள்ள படுமா என வினவியபோதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார…

    • 7 replies
    • 490 views
  20. இலங்கையில் தமிழர்களுக்கு சுயாட்சி அதிகாரங்களை வழங்க பிரித்தானியா முயற்சிக்கும் – தொழிற்கட்சி இலங்கையில் தமிழர்களுக்கு சுயாட்சி அதிகாரங்களை வழங்குவதற்கு பிரித்தானியா முயற்சிக்கும் என பிரித்தானிய தொழிற்கட்சி தெரிவித்துள்ளது. கொழும்பு ஊடகமொன்று இந்த தகவலை வெளியிட்டுள்ளது. எதிர்வரும் ஜூன் மாதத்தில் பிரித்தானியாவில் பாராளுமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது. இலங்கைக்கு இராணுவ உதவிகள் வழங்குவதனை ரத்து செய்யப் போவதாக தொழிற் கட்சியின் தலைவர் ஜெரோம் கோர்பின் (Jeremy Corbyn) , புலம்பெயர் புலி ஆதரவாளர்களுக்கு உறுதியளித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரித்தானிய தொழிற் கட்சி தேர்தல் விஞ்ஞாபனத்தை வெளியிட்டுள்ள நிலையில் இ…

    • 2 replies
    • 290 views
  21. மோடியைக் கூட்டமைப்பு வரவேற்பது வெட்கக்கேடு சீறுகின்றார் நாமல் எம்.பி. முன்னாள் அரச தலைவர் மகிந்த ராஜபக்ச இறுதிப் போரில் தமிழ் மக்களைக் கொன்று குவித்ததாகப் பன்னாடு வரை சென்ற தமிழ்த் தேசியக் கூட்ட மைப்பு அரசியல் வாதிகளும், மனோ கணேசன் போன்றவர்களும் இரத்தக்கறை படிந்த மோடியுடன் கைகுலுக்க இன்று தயாராகிவிட்டார்கள். இது பெரும் வெட்கக்கேடான செயல். இவ்வாறு முன்னாள் அரச தலைவர் மகிந்த ராஜபக்சவின் மூத்த புதல்வரும் அம்பாந்தோட்டை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ச தெரிவித்தார். கொழும்பில் நேற்று நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார். அவர் மேலும் தெரிவிக்கையில், முன்னாள் அரச தலைவர் மகிந்…

    • 2 replies
    • 441 views
  22. விழாக்கோலமானது மலையகம் ; பாரத பிரதமரின் வருகையை எதிர்பார்த்து பல்லயிரக்கணக்கான மக்கள் காத்திருப்பு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் மலையகத்திற்கான விஜயத்தை எதிர்பார்த்து பல்லாயிரக்கணக்கான மக்கள் நோர்வூட் மைதானத்தில் ஒன்று திரண்டுள்ளதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவித்தார். கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெறும் ஐக்கிய நாடுகள் வெசாக் தின நிகழ்வை நிறைவுசெய்துவிட்டு மலையகத்திற்கான விஜயத்தை இந்தியப் பிரதமர் மோடி மேற்கொள்ளவுள்ளார். அங்கு விஜயம் மேற்கொள்ளும் இந்தியப் பிரதமர், டிக்கோயா கிளங்கன் வைத்தியசாலையை திறந்து வைக்கவுள்ளார். அதன் பின் அங்கு இடம்பெறும் பொதுக்கூட்டம் ஒன்றிலும் பிரதமர் உரையாற்றவ…

  23. கீதா விவகாரம்: தீர்ப்பு நிறுத்தம் கீதா குமாரசிங்க, நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் இருப்பதற்குத் தகுதியற்றவர் என்று, மேன்முறையீட்டு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை, 15ஆம் திகதிவரை, உயர்நீதிமன்றம் நிறுத்திவைத்துள்ளது. கீதா குமாரசிங்க, நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் இருப்பதற்குத் தகுதியற்றவர் என்று, மேன்முறையீட்டு நீதிமன்றம், கடந்த 3ஆம் திகதி தீர்ப்பளித்தது. இதற்கு எதிராக, ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் காலி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த கீதா குமாரசிங்கவால், உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனு தொடர்பில், விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே, மேற்கண்ட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளத…

  24. முள்ளிவாய்க்காலில் உயிர் நீத்த பொதுமக்களுக்கு நினைவுக் கல் : பெயர் பொறிக்கும் பணிகள் ஆரம்பம் இறு­திப்­போ­ரின்­போது முள்­ளி­வாய்க்­கால் மற்­றும் அதனை அண்­டிய பகு­தி­க­ளில் கொல்­லப்­பட்ட பொது­மக்­க­ளில் 500 பேரின் நினை­வாக நினை­வுக்­கல் நடப்­ப­ட­ வுள்­ளது. முள்ளிவாய்க்கால் கிழக்குப் பகுதியில் உள்ள கிறிஸ்தவ ஆலயத்தில் இந்த நினைவுக் கற்கள் நடப்படவுள்ளன. இதற்கான வேலைகள் தற்போது இடம்பெற்று வருகின்றன. நடப்படவுள்ள நினைவுக் கல்லில் முதல்கட்டமாகப் பொது மக்கள் சிலரின் பெயர் பொறிக்கும் நடவடிக்கைகள் இடபெறுகின்றன. வடக்கு மாகாண சபையின் ஏற்பாட்டில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு மே 18 ஆம் திகதி முள்ளிவாய்க்கா…

  25. நினைவேந்தல் இன்று ஆரம்பம் : ஒற்றுமையாகக் கடைப்பிடிக்குமாறு கூட்டமைப்பு அழைப்பு ஈழத்­தின் மானி­டப் பேர­வ­லம் நடந்­தே­றிய நாள்­களை நினைவு கூர்ந்து வரு­டந்­தோ­றும் கடைப்­பி­டிக்­கப்­ப­டும் முள்­ளி­வாய்க்­கால் நினை­வேந்­தல் வாரம் இன்று ஆரம்­ப­மா­கின்­றது. ஆறாத் துயர் நிறைந்த நினை­வேந்­தல் வாரத்தை, ஒற்­று­மை­யா­க­வும் - வன்­மு­றை­க­ளைத் தவிர்த்­தும் கடைப்­பி­டிக்­கு­மாறு தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்பு அறை­கூ­வல் விடுத்­துள்­ளது. இறு­திக் கட்­டப்­போ­ரின்­போது, மூன்று லட்­சம் மக்கள் மிகக் குறு­கிய வெளிக்­குள் முடக்கப்­பட்டு, உணவு மருந்து உத­வி­கள் எது­வு­மின்றி அந்­த­ரித்து, குண்டு வீச்­சுக்­க­ளால் சாவ­ட…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.