Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. வடக்கு, கிழக்கில் பொருத்து வீட்டை அமைப்பதற்கு அமைச்சரவைக் கூட்டத்தில் அனுமதி வடக்கு, கிழக்கில் முன்நிர்மாணிக்கப்பட்ட பொருத்து வீட்டை அமைப்பதற்கு அமைச்சரவைக் கூட்டத்தில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதன்படி, தலா 15 இலட்சம்ரூபா செலவில் 6 ஆயிரம் வீடுகள் அமைக்கப்படவுள்ளன. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நேற்றுமுன்தினம் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தின் போதே இவ் அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது. முன்நிர்மாணிக்கப்பட்ட பொருத்து வீட்டை, வடக்கு – கிழக்கில் அமைப்பதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எதிர்ப்பு வெளியிட்டிருந்ததுடன் வடக்கு மாகாண சபையும் இதற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றியிருந்தது. இவற்றை புறமொதுக்கி, முன் நிர்மாணிக்கப்…

  2. காங்கேசன்துறை கடலில் மிதந்த 9 கோடி ரூபா பெறுமதியான ஹெரோயின் மீட்பு (படங்கள்) காங்கேசன்துறை கடற்படை தலைமைப்பீடத்தில் இருந்து சுமார் 10 கடல் மைல் தொலைவில் கடலில் மிதந்தவாறு இருந்த 9.3 கிலோகிராம் ஹெரோயின் போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளதாக கடற்படையின் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. அதிகாலை ரோந்துப்பணியில் ஈடுபட்டிருந்த கடற்படையினர் சந்தேகத்திற்கிடமான முறையில் மிதந்துவந்த பொதி ஒன்றினை கைப்பற்றியிருந்தனர். அதனை பிரித்து சோதனையிட்ட போது ஹெரோயின் போதைப்பொருள் இருந்துள்ளமை தெரியவந்துள்ளது. குறித்த ஹெரோயினை கடற்படைதளத்திற்கு கொண்டு வந்து மேலதிக பரசோதனைகள் மேற்கொள்ளப்பட்ட போது 100 வீதம் ஹெரோயின் என கண்டறியப்பட்டுள்ளது. மீட…

  3. அங்குரார்ப்பண நிகழ்வில் மோடி உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கைக்கு வந்துள்ள இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில், இன்று காலை ஆரம்பமான சர்வதேச வெசாக் தின அங்குரார்ப்பண நிகழ்வுகளில் கலந்துகொண்டுள்ளார். - See more at: http://www.tamilmirror.lk/196476/அங-க-ர-ர-ப-பண-ந-கழ-வ-ல-ம-ட-#sthash.jigQTsvD.dpuf மோடியின் விசேட உரையானது ‘3 மொழிகளில் உரைபெயர்ப்பு’ 12-05-2017 09:37 AM Comments - 0 Views - 11 டி.ஷங்கீதன் நோர்வூட் மைதானத்தில், இன்று (12) இடம்பெறும் பிரதான வைபவத்தில் பங்கேற்கும், இந்தியப் பிரதமர் நரே…

    • 3 replies
    • 421 views
  4. பிரதமர் மோடி - மனோ தலைமையிலான தமிழ் முற்போக்குக் கூட்டணி உறுப்பினர்கள் சந்திப்பு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அமைச்சர் மனோ கணேசன் தலைமையிலான தமிழ் முற்போக்குக் கூட்டணி உறுப்பினர்களை சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். இச் சந்திப்பில் இந்தியாவுக்கான இலங்கை உயர்ஸ் தானிகர் தரண்ஜித் சிங் சத்துவும் கலந்துகொண்டிருந்தார். இச் சந்திப்பு டிக்கோயா மைதானத்தின் கோட்போர் கூடத்தில் இடம்பெற்றுள்ளது. கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெறும் ஐக்கிய நாடுகள் வெசாக் தின நிகழ்வை நிறைவுசெய்துவிட்டு மலையகத்திற்கான விஜயத்தை மேற்கொண்ட இந்தியப் பிரதமர் மோடி, டிக்கோயா கிளங்கன் வைத்தியசாலையை திறந்து வைத்தார்…

  5.  முரளியை பரிசளித்துள்ளீர்கள்: பிரதமர் மோடி இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் சுழல்பந்துவீச்சாளர் முத்தையா முரளிதரனை பரிசளித்துள்ளீர்கள் என இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார். நோர்வூட்டில் தற்போது நடைபெற்றுகொண்டிருக்கின்ற விசேட கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றிகொண்டிருக்கின்றார். அதன் போதே, அவர் மேற்கண்டவாறு இவ்வாறு தெரிவித்தார். - See more at: http://www.tamilmirror.lk/196508/ம-ரள-ய-பர-சள-த-த-ள-ள-ர-கள-ப-ரதமர-ம-ட-#sthash.IYayt9bw.dpuf

  6. மோடியுடன் எந்தவிதமான பொருளாதார உடன்படிக்கைகளும் கைச்சாத்திடப்பட மாட்டாது..! இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் இலங்கை விஜயத்தின் போது எந்தவிதமான பொருளாதார உடன்படிக்கைகளையும் மேற்கொள்ள போவதில்லை. இரு நாடுகளின் நட்புறவு பலமடையும் வகையிலேயே இந்த விஜயம் அமைந்துள்ளது என பிரதி வெளிவிவகார அமைச்சர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்தார். கடந்த ஆட்சியில் மேற்கொண்ட மோசமான உடன்படிக்கைகள் இந்த அரசாங்கத்தில் மேற்கொள்ளப்படாது எனவும் அவர் குறிப்பிட்டார். உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கை வருகைதரவுள்ள இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் விஜயத்தில் இரு நாடுகளுக்கு இடையிலான பொருளாதார உடன்படிக்கை எவையும் மேற்கொள்ள படுமா என வினவியபோதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார…

    • 7 replies
    • 491 views
  7. இலங்கையில் தமிழர்களுக்கு சுயாட்சி அதிகாரங்களை வழங்க பிரித்தானியா முயற்சிக்கும் – தொழிற்கட்சி இலங்கையில் தமிழர்களுக்கு சுயாட்சி அதிகாரங்களை வழங்குவதற்கு பிரித்தானியா முயற்சிக்கும் என பிரித்தானிய தொழிற்கட்சி தெரிவித்துள்ளது. கொழும்பு ஊடகமொன்று இந்த தகவலை வெளியிட்டுள்ளது. எதிர்வரும் ஜூன் மாதத்தில் பிரித்தானியாவில் பாராளுமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது. இலங்கைக்கு இராணுவ உதவிகள் வழங்குவதனை ரத்து செய்யப் போவதாக தொழிற் கட்சியின் தலைவர் ஜெரோம் கோர்பின் (Jeremy Corbyn) , புலம்பெயர் புலி ஆதரவாளர்களுக்கு உறுதியளித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரித்தானிய தொழிற் கட்சி தேர்தல் விஞ்ஞாபனத்தை வெளியிட்டுள்ள நிலையில் இ…

    • 2 replies
    • 291 views
  8. மோடியைக் கூட்டமைப்பு வரவேற்பது வெட்கக்கேடு சீறுகின்றார் நாமல் எம்.பி. முன்னாள் அரச தலைவர் மகிந்த ராஜபக்ச இறுதிப் போரில் தமிழ் மக்களைக் கொன்று குவித்ததாகப் பன்னாடு வரை சென்ற தமிழ்த் தேசியக் கூட்ட மைப்பு அரசியல் வாதிகளும், மனோ கணேசன் போன்றவர்களும் இரத்தக்கறை படிந்த மோடியுடன் கைகுலுக்க இன்று தயாராகிவிட்டார்கள். இது பெரும் வெட்கக்கேடான செயல். இவ்வாறு முன்னாள் அரச தலைவர் மகிந்த ராஜபக்சவின் மூத்த புதல்வரும் அம்பாந்தோட்டை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ச தெரிவித்தார். கொழும்பில் நேற்று நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார். அவர் மேலும் தெரிவிக்கையில், முன்னாள் அரச தலைவர் மகிந்…

    • 2 replies
    • 442 views
  9. விழாக்கோலமானது மலையகம் ; பாரத பிரதமரின் வருகையை எதிர்பார்த்து பல்லயிரக்கணக்கான மக்கள் காத்திருப்பு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் மலையகத்திற்கான விஜயத்தை எதிர்பார்த்து பல்லாயிரக்கணக்கான மக்கள் நோர்வூட் மைதானத்தில் ஒன்று திரண்டுள்ளதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவித்தார். கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெறும் ஐக்கிய நாடுகள் வெசாக் தின நிகழ்வை நிறைவுசெய்துவிட்டு மலையகத்திற்கான விஜயத்தை இந்தியப் பிரதமர் மோடி மேற்கொள்ளவுள்ளார். அங்கு விஜயம் மேற்கொள்ளும் இந்தியப் பிரதமர், டிக்கோயா கிளங்கன் வைத்தியசாலையை திறந்து வைக்கவுள்ளார். அதன் பின் அங்கு இடம்பெறும் பொதுக்கூட்டம் ஒன்றிலும் பிரதமர் உரையாற்றவ…

  10. கீதா விவகாரம்: தீர்ப்பு நிறுத்தம் கீதா குமாரசிங்க, நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் இருப்பதற்குத் தகுதியற்றவர் என்று, மேன்முறையீட்டு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை, 15ஆம் திகதிவரை, உயர்நீதிமன்றம் நிறுத்திவைத்துள்ளது. கீதா குமாரசிங்க, நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் இருப்பதற்குத் தகுதியற்றவர் என்று, மேன்முறையீட்டு நீதிமன்றம், கடந்த 3ஆம் திகதி தீர்ப்பளித்தது. இதற்கு எதிராக, ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் காலி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த கீதா குமாரசிங்கவால், உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனு தொடர்பில், விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே, மேற்கண்ட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளத…

  11. முள்ளிவாய்க்காலில் உயிர் நீத்த பொதுமக்களுக்கு நினைவுக் கல் : பெயர் பொறிக்கும் பணிகள் ஆரம்பம் இறு­திப்­போ­ரின்­போது முள்­ளி­வாய்க்­கால் மற்­றும் அதனை அண்­டிய பகு­தி­க­ளில் கொல்­லப்­பட்ட பொது­மக்­க­ளில் 500 பேரின் நினை­வாக நினை­வுக்­கல் நடப்­ப­ட­ வுள்­ளது. முள்ளிவாய்க்கால் கிழக்குப் பகுதியில் உள்ள கிறிஸ்தவ ஆலயத்தில் இந்த நினைவுக் கற்கள் நடப்படவுள்ளன. இதற்கான வேலைகள் தற்போது இடம்பெற்று வருகின்றன. நடப்படவுள்ள நினைவுக் கல்லில் முதல்கட்டமாகப் பொது மக்கள் சிலரின் பெயர் பொறிக்கும் நடவடிக்கைகள் இடபெறுகின்றன. வடக்கு மாகாண சபையின் ஏற்பாட்டில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு மே 18 ஆம் திகதி முள்ளிவாய்க்கா…

  12. நினைவேந்தல் இன்று ஆரம்பம் : ஒற்றுமையாகக் கடைப்பிடிக்குமாறு கூட்டமைப்பு அழைப்பு ஈழத்­தின் மானி­டப் பேர­வ­லம் நடந்­தே­றிய நாள்­களை நினைவு கூர்ந்து வரு­டந்­தோ­றும் கடைப்­பி­டிக்­கப்­ப­டும் முள்­ளி­வாய்க்­கால் நினை­வேந்­தல் வாரம் இன்று ஆரம்­ப­மா­கின்­றது. ஆறாத் துயர் நிறைந்த நினை­வேந்­தல் வாரத்தை, ஒற்­று­மை­யா­க­வும் - வன்­மு­றை­க­ளைத் தவிர்த்­தும் கடைப்­பி­டிக்­கு­மாறு தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்பு அறை­கூ­வல் விடுத்­துள்­ளது. இறு­திக் கட்­டப்­போ­ரின்­போது, மூன்று லட்­சம் மக்கள் மிகக் குறு­கிய வெளிக்­குள் முடக்கப்­பட்டு, உணவு மருந்து உத­வி­கள் எது­வு­மின்றி அந்­த­ரித்து, குண்டு வீச்­சுக்­க­ளால் சாவ­ட…

  13. வித்தியா வழக்கு: கவனவீர்ப்புப் பேரணி ஆரம்பம் புங்குடுதீவில் தொடங்கியது புங்குடுதீவு மாணவி வித்தியா படுகொலை வழக்கினை கொழும்புக்கு மாற்றம் செய்வதை கண்டித்தும், மீளவும் யாழ் மேல் நீதிமன்றத்திற்கே பாரப்படுத்தக்கோரியும் பொதுமக்களால் ஏற்பாடு செய்யப்பட்ட கவனவீர்ப்புப் போராட்டம் சற்று முன்னர் புங்குடுதீவு கந்தசுவாமி ஆலயத்திலிருந்து ஆரம்பமாகியுள்ளது. http://uthayandaily.com/story/2425.html

  14. மஹிந்­தவைச் சந்­திக்கவுள்ள பிர­தமர் மோடி; பொரு­ளா­தாரம் குறித்து மைத்­திரி, ரணி­லுடன் கலந்­து­ரை­யாடல் இந்து சமுத்­திர பிராந்­திய நாடுகளின் இணைச்­செ­ய­லாளர் சஞ்ஷே பாண்டா தெரி­விப்பு (பா.ருத்­ர­குமார்) இலங்­கைக்கு உத்­தி­யோ­க­பூர்வ விஜயம் மேற்­கொண்­டுள்ள இந்­தியப் பிர­தமர் நரேந்­திர மோடி முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­ப­க் ஷவை சந்­திக்கவுள்ளதா­க வும் அச்­சந்­திப்பில், இந்­தியா இலங்­கையின் அபி­வி­ருத்தி செயற்­பா­டு­கள்­மீது அக்­கறை கொண்­டுள்­ள­மைக்கு மஹிந்த ராஜ­பக் ஷ பாராட்டு தெரி­வித்­த­தா­­கவும் இந்­தியப் பிர­த­மரின் இந்து சமுத்­திர பிராந்­திய நாடு­களின் இணைச்­செ­ய­லாளர் சஞ்ஷே பாண்டா தெரி­வித்தார். மேலும் நேற்­ற…

  15. இலங்கைக்கு வந்ததில் மகிழ்ச்சி இந்திய பிரதமர் மோடி தெரிவிப்பு (ரொபட் அன்­டனி) இலங்­கைக்கு விஜயம் செய்ய கிடைத்­தமை மகிழ் ச்சி­ தரும் விட­ய­மாகும். நான் தற்­போது கொழும்பில் இருக்­கின்றேன். இலங்­கைக்கு வந்­ததும் வெசாக் தின மாநாட்டை ஆரம்­பித்து வைப்­பதும் மகிழ்ச்­சிக்­கு­ரிய விட­ய­மாகும் என்று இந்­திய பிர­தமர் நரேந்­திர மோடி தெரி­வித்தார். உத்­தி­யோ­க­பூர்வ விஜயம் ஒன்றை மேற்­கொண்டு நேற்று வியா­ழக்­கி­ழமை மாலை இலங்கை வந்­த­டைந்த இந்­திய பிர­தமர் நரேந்­திர மோடி இலங்கை வந்­தி­றங்­கி­ய­வுடன் மேற்­கண்­ட­வாறு சமூக வலை­த் த­ளத்தில் பதி­விட்­டி­ருந்தார். நேற்று மாலை 6.05 மணி­ய­ளவில் கட்­டு­நா­யக்க சர்­ வ­தேச விமான நிலை­யத்தை வந…

  16. ‘ட்ரயல் அட் பார்’ திங்களன்று உயர்மட்டப் பேச்சு புங்குடுதீவு மாணவி வித்தியா படுகொலை வழக்கை ‘ட்ரயல் அட் பார்’ முறையில் முன்னெடுப்பது தொடர்பில் உயர்மட்டப் பேச்சு கொழும்பில் எதிர்வரும் திங்கட்கிழமை இடம்பெறும் என்று அறிய முடிகின்றது. சட்டமா அதிபர் திணைக்களத்துக்கும் நீதித்துறை சார்ந்த உயர்மட்டத்துக்கும் இடையே இந்தப் பேச்சு இடம்பெறவுள்ளது. புங்குடுதீவு மாணவி வித்தியா 2015ஆம் ஆண்டு மே மாதம் 13ஆம் திகதி பாடசாலைக்கு சென்ற வேளை கடத்தப்பட்டு கூட்டு வன்புணர்வின் பின்பு படுகொலை செய்யப்பட்டார். மாணவியின் படுகொலையும் தொடர்புடையவர்கள் என்ற குற்றச்சாட்டில் 12 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களில் 10ஆம் மற்றும் 12ஆம் சந்தேகநபர்கள் வழக்கிலிருந்து அண்மையில் விடுவிக்…

  17. கடுமையான வரட்சி : நாடளாவிய ரீதியில் 10 இலட்சம் பாதிப்பு..! (ந.ஜெகதீஸ்) நாடளாவிய ரீதியில் 8 மாவட்டங்களை சேர்ந்த 28 ஆயிரத்து 53 குடும்பங்களில் வாழும் 10 இலட்சத்து 24 ஆயிரத்து 566 பேர் கடுமையான வரட்சியினால் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளது. நாட்டில் தற்போது கிடைக்கப்பெற்றுள்ள பருவ மழை வீழ்ச்சியினால் நாடளாவிய ரீதியில் தொடரும் வரட்சியான சூழல் குறித்து கேள்வி எழுப்பிய போதே அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் ஊடக பேச்சாளர் பிரதிப் கொடிப்புலி மேற்கண்டவாறு தெரிவித்தார். http://www.virakesari.lk/article/19914

  18. நேபாளத்தின் ஜனாதிபதி இன்று இலங்கை வருகின்றார்..! (லியோ நிரோஷ தர்ஷன்) ஐக்கிய நாடுகள் வெசாக் தினத்தின் இறுதி நாள் நிகழ்வுகளில் கலந்துக் கொள்வதற்காக நேபாளத்தின் ஜனாதிபதி பிந்தியா தேவி பண்டாரியும் இன்று மாலை இலங்கை வருகின்றார். ஐக்கிய நாடுகள் வெசக் தினம் இதற்கு முன்னர் 13 தடவைகள் இடம்பெற்றுள்ளன. தாய்லாந்தில் 11 தடவைகளும் வியட்னாமில் 2 தடவைகளுமாக இடம்பெற்றுள்ளது. ஆனால் இலங்கையில் இடம்பெறுவது இதுவே முதற்தடவையாகும். 1999 ஆம் ஆண்டில் அப்போதைய வெளிவிவகார அமைச்சரான லக்ஷமன் கதிர்காமர் பௌத்த மதத்தில் இலங்கைக்குள்ள சிறப்புகளை எடுத்துரைத்து ஐநாவில் வலியுறுத்தினார். இதற்கமைவாக 2001 ஆம் ஆண்டு பொதுச் சபையில் ஐக்கிய நாடுகள் வெசக் தினத்தை …

  19. இலங்­கை­யு­ட­னான சுதந்­திர வர்த்­தக உடன்­ப­டிக்­கைக்கு தீவிரம் காட்டும் சீனா (பா.ருத்­ர­குமார்) இலங்­கை­யுடன் புதிய சுதந்­திர வர்த்­தக ஒப்­பந்­தங்­களை மேற்­கொள்­வது தொடர்பில் கலந்­தா­லோ­சித்து வரு­வ­தாக சீனாவின் வர்த்­த­கத்­துக்­கான துணை அமைச்சர் கியான் கெமீங் தெரி­வித்­துள்ளார். மேலும் சீனா சுதந்­திர வர்த்­தக ஒப்­பந்­தங்கள் தொடர்­பாக 20க்கும் மேற்­பட்ட நாடு­க­ளுடன் பேச­்­சு­வார்த்தை நடத்த திட்­ட­மிட்­டுள்­ள­தா­கவும் குறிப்­பாக பட்­டுப்­பாதை மற்றும் வர்த்­தக மார்க்­கங்­களின் மத்­தியில் காணப்­படும் நாடு­க­ளு­ட­னேயே குறித்த ஒப்­பந்­தங்­க­ளுக்­கான பேச்­சு­வார்த்தை நடத்­தப்­படும் எனவும் அவர் மேலும் குறிப்­பிட்­டுள்ளார். இது தொடர்பில் அவர்…

  20. பிள்ளையானை நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்த தேவையில்லை ; மேல் நீதிமன்றம் உத்தரவு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கத்தின் படுகொலைச் சம்பவம் தொடர்பில் கைதுசெய்யப்பட்ட முன்னாள் கிழக்கு மாகாண முதலமைச்சர் பிள்ளையான் உட்பட நால்வரையும் எதிர்வரும் காலத்தில் நீதிவான் நிதிமன்றுக்கு அழைத்துவர தேவையில்லையென மேல் நீதிமன்றம் உத்தவிட்டுள்ளது. குறித்த வழக்கு மட்டக்களப்பு மேல் நீதிமன்றத்தில் நடைபெற்று வருவதனால் மேல் நீதிமன்ற வழக்கின் போதே அவர்களை அழைத்துவரும் படி மேல் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்தக் கொலைச் சம்பவம் தொடர்பில் சந்தேக நபரான சிவநேசதுரை சந்திரகாந்தன் உட்பட 4 பேர் கைதுசெய்யப்பட்டு…

  21. யாழ்ப்பாணத்தில் வெசாக் கொண்டாட்டங்கள் யாழ்ப்பாண நகரில், வெசாக் கொண்டாட்டத்திற்கான ஆயத்தங்களில் பாதுகாப்புத் தரப்பினர் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர். யாழ்ப்பாண பொதுநூலகச் சுற்றாடலில் வெசாக் தோரணங்கள் அமைக்கப்பட்டுள்ளது. நாளை புதன் கிழமை இவை திறந்து வைக்கப்படவுள்ளன. http://uthayandaily.com/story/1860.html

  22. சிவில் வானூர்தி நிலை­ய­மாக பலா­லியை மாற்­ற­வேண்­டும் - கூட்­ட­மைப்­பி­டம் கோரு­கின்­றது யாழ்ப்­பாண வணி­கர் கழ­கம் பலாலி வானூர்தி நிலை­யத்­தை­ யும் காங்­கே­சன்­துறை துறை­மு­கத்­தை­யும் மிக விரை­வில் சீர­மைத்­துப் பொது­மக்­க­ளின் பயன்­பாட்­டுக்கு ஏற்­ற­தாக மாற்­றி­ய­மை­யுங்­கள். இதற்­கான நட­வ­டிக்­கை­களை உடன் எடுங்­கள்.இவ்­வாறு எதிர்க்­கட்­சித் தலை­வ­ரும் தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பின் தலை­வ­ரு­மான இரா.சம்­பந்­த­னி­டம் யாழ்ப்­பாண வணி­கர் கழ­கம் கோரி­யுள்­ளது. இது தொடர்­பா­கக் கடி­தம் ஒன்றை வணி­கர் கழ­கம் எதிர்க்­கட்­சித் தலை­வ­ருக்கு அனுப்பி வைத்­துள்­ளது. கடந்த காலங்­க­ளில் உதா­சீ­னம் செய்­யப்­பட…

  23. இலங்கை வந்தடைந்தார் இந்திய பிரதமர் இந்­திய பிர­தமர் நரேந்­திர மோடி உத்­தி­யோ­க­பூர்வ விஜயம் ஒன்றை மேற்­கொண்டு சற்றுமுன் இலங்­கைக்கு வருகை வந்தடைந்தார். http://www.virakesari.lk/article/19910 நாட்டை வந்தடைந்தார் மோடி சர்வதேச பௌத்த மாநாட்டு வைபவத்தை ஆரம்பித்து வைப்பதற்கும், ஏனைய நிகழ்வுகளில் பங்கேற்பதற்காகவும், இந்தியப் பிரதமர் நரேந்திரமோடி நாட்டை வந்தடைந்துள்ளார். மோடி பயணித்த விசேட விமானம் கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை சற்றுமுன்னர் வந்தடைந்தது. இந்தியப் பிரதமர் நரேந்திரமோடியை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க வரவேற்றார். தற்போது கொழும்பு, கங்காராமை வி…

  24. மோடிக்கு ஜனாதிபதி விசேட இராப்போசன விருந்து சர்வதேச வெசாக் தின நிகழ்வின் அங்குரார்ப்பண விழாவில் பிரதம அதிதியாக கலந்துகொள்ள இலங்கை வந்துள்ள இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று (11) விசேட இராப்போசன விருந்து ஒன்று கொழும்பு கோட்டையில் உள்ள ஜனாதிபதி மாளிகையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஜனாதிபதி மாளிகைக்கு வருகைதந்த இந்திய பிரதமர் அவர்களை ஜனாதிபதி மகிழ்ச்சியுடன் வரவேற்றார். பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, சபாநாயகர் கரு ஜயசூரிய, எதிர்கட்சித் தலைவர் ஆர்.சம்பந்தன், வட மாகாண சபை முதலமைச்சர் சீ.வீ விக்னேஸ்வரன், அமைச்சர்களான மங்கள சமரவீர, விஜயதாச ராஜபக்ஷ, ரவி கருணாநாயக்க, மலிக் சமரவிக்ரம, நிமல் ச…

  25. சக்தி டிவி செய்திகள் 11th May 2017, 8PM

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.