Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. சக்தி டிவி செய்திகள் 25th April 2017, 8PM

  2. முல்லைத் திவில் இரு கிராமங்கள் சோகத்தில் ; முகவர்களை நம்பி வெளிநாடு சென்ற இரு இளைஞர்கள் மரணம் வெளிநாடு செல்வதற்காக முகவரை நம்பி சென்ற முல்லைத்தீவைச் சேர்ந்த இரு இளைஞர்கள் ஈரான் நாட்டில் உயிரிழந்த துர்ப்பாக்கிய சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, முல்லைத்தீவு செம்மலை மற்றும் உடுப்புக்குளம் பிரதேசத்தை சேர்ந்த இளைஞர்கள் இருவர் கடந்த வருடம் டிசம்பர் மாதம் லண்டனில் உள்ள முகவர் ஒருவரின் ஊடாக ஐரோப்பியநாடு ஒன்றுக்கு செல்வதற்காக பணம்செலுத்தி 11-12-2016 அன்று உள்ளுர் முகவர் ஒருவர் ஊடாக லண்டன் நாட்டிற்கென உள்ளூர் முகவர் வெளிநாட்டில் அதாவது லண்டனில் உள்ள முகவர் ஊடாக அவர்கள் அனுப்பப்பட்டுள்ளார்கள். …

  3. "தமிழ் மக்களின் கோரிக்கை நியாயமானது" (ஆர்.யசி ) புதிய அரசியல் அமைப்பு மூலம் தீர்வுகளை பெற்றுக்கொள்ளவே தமிழ் மக்கள் விரும்புகின்றனர். தமது உரிமைகளை உறுதிப்படுத்த வேண்டிய தமிழ் மக்களின் கோரிக்கை நியாயமானது என புதிய அரசியல் அமைப்பு தொடர்பில் மக்கள் கருத்தறியும் ஆணைக்குழுவின் தலைவர் சட்டத்தரணி லால் விஜயநாயக தெரிவித்தார். ஆணைக்குழுவின் இடைக்கால அறிக்கையொன்று விரைவில் அரசாங்கத்திடம் கையளிக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டார். புதிய அரசியல் அமைப்பு உருவாக்கம் தொடர்பில் மக்கள் கருத்தறியும் ஆணைக்குழு தமது இரண்டாம் கட்ட வேலைத்திட்டத்தை முன்னெடுத்து நாடளாவிய ரீதியில் மக்களின் கருத்துக்களை ஆராய்ந்து வருகின்றது. இந்தவாரம் வடக்கில் தமது வேலைத்திட்டங்களை முன்னெடு…

  4. வடக்கு மாகாண அலுவலகங்களில் இனிமேல் பிளாஸ்ரிக் பைகள் இல்லை – உத்தியோகத்தர்கள் உறுதிமொழி ஏற்பு வடக்கு மாகாணசபைக்கு உட்பட்ட அமைச்சுகள் மற்றும் திணைக்களங்களின் அலுவலகங்கள் யாவற்றிலும் பிளாஸ்ரிக் பைகளை இனிமேல் பயன்படுத்துவதில்லை என்ற உறுதிமொழி இன்று திங்கட்கிழமை காலை 9 மணிக்கு எடுக்கப்பட்டுள்ளது. வடக்கு மாகாணசபையின் 82ஆவது அமர்வின்போது இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் 47ஆம் இலக்க இலங்கை தேசிய சுற்றாடல் சட்டத்தின் கீழ் 20 மைக்குரோன்கள் அல்லது அதற்குக் குறைவான தடிப்புக் கொண்ட பிளாஸ்ரிக் பைகளை உற்பத்தி செய்வதற்கும் விற்பனை செய்வதற்கும் பயன்படுத்துவதற்கும் விதிக்கப்பட்ட தடையை பூமி தினமான 22 ஆம் திகதியில் இருந்து வடக்கு மாகாணத்தி…

  5. நெடுந்தீவில், அமெரிக்காவின் 5 வது கப்பல் படையணி. தியாகோ கார்ஷியா தீவுகளில் நிலைக்கொண்டுள்ள அமெரிக்காவின் ஆசிய பசுபிக் பிராந்தியத்திற்கான 5வது கப்பல் படையணியை நெடுந்தீவுக்கு மாற்ற தயாராகி வருவதாக அரசியல் தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்கான ராஜதந்திர தலையீடுகளை அமெரிக்க விரைவில் மேற்கொள்ளும் என அந்த தகவல்கள் கூறுகின்றன. 2007 ஆம் ஆண்டு அமெரிக்கா இலங்கையுடன் செய்து கொண்ட (The Acquisition and Cross – Services Agreement) (ACSA) உடன்படிக்கைக்கு அமைய நெடுந்தீவை கோரவுள்ளதாக கூறப்படுகிறது. தியாகோ கார்ஷியா தீவுகளில் இருந்து அமெரிக்காவின் 5வது கப்பல் படையணியை திரும்ப பெற வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளதுடன், அமெரிக்காவுக்கு இந்து சமுத்திர பகுதியில் படையணியை நிலை ந…

  6. தகவல் அறியும் சட்டமூலத்தை அறிந்து கொள்வதற்காக மக்கள் பூர்த்தி செய்யும் விண்ணப்ப படிவங்கள் மொழிகளுக்கு ஏற்ப விற்பனை செய்யப்படுகின்றது. தேசிய பாதுகாப்பு தகவல்கள் மற்றும் தனிப்பட்ட நபர்களின் விபரங்கள், அரச இரகசியங்கள் தவிர்ந்த ஏனைய விடயங்களை தகவல் அறியும் சட்டமூலம் மூலம் பெற்றுக்கொள்ள முடியும். இவ்வாறு அமுலுக்கு வந்த தகவல் அறியும் சட்டமூலம் மூலம் பலர் தகவல்களை பெற்றுக்கொண்டதுடன், சில தகவல்கள் வழங்குவதற்கும் மறுக்கப்பட்டிருந்தது. அந்தவகையில், மக்கள் விண்ணப்பங்களை பூர்த்தி செய்து அனுப்பும் வகையில் வெளியிடப்பட்ட வர்த்தமானி அச்சுப்பிரதியானது வெவ்வேறு விலைகளில் விற்பனை செய்யப்படுகின்றது. குறிப்பாக சிங்கள மொழி என்றால்- 21 ரூபா என்றும், தமிழ் மொழி என்றால் -54 ரூ…

    • 2 replies
    • 604 views
  7. ஊடகவியலாளர்கள் தாக்கப்பட்டமை தொடர்பில் ஏனைய சந்தேகபர்களையும் கைது செய்யுமாறு உத்தரவு !! ஊடகவியாளர்கள் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக பொலிஸார் மந்தகதியில் செயற்படுகின்றனரா? என்று வாழைச்சேனை நீதவான் நீதிமன்றம் நீதிபதி ஏ.சி.றிஸ்வான் மன்றில் பொலிஸாரிடம் கேவியெழுப்பியுள்ளார். கல்குடாவில் ஊடகவியலாளர்கள் இருவர் தாக்கப்பட்டமை தொடர்பில் கைது செய்ய வேண்டிய ஏனைய சந்தேகபர்களையும் கைது செய்யுமாறு வாழைச்சேனை நீதவான் நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டுள்ளது. மதுபான உற்பத்தி தொழிற்சாலை தொடர்பில் செய்தி சேகரிக்கச் சென்ற சுதந்திர ஊடகவியலாளர் சசிகரன் மற்றும் நியூஸ் பெஸ்ட் ஊடகவியலாளர்கள் நித்தியானந்தன் ஆகியோர் மீதே கும்புறுமுலை வேம்பு பகுதியில் தாக்குதல் …

  8.  கிழக்கு மாகாண சபையின் முன்பாக பதற்றம் வடமலை ராஜ்குமார் கிழக்கு மாகாண சபைக்கு முன்பாக, முன்னெடுக்கப்பட்டு வரும் வேலையற்ற பட்டதாரிகளின் போராட்டம் காரணமாகவும், பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில், போராட்டத்தை முன்னெடுக்கவேண்டாமென, நீதிமன்றத்தினால் விடுக்கப்பட்ட உத்தரவை கிழித்தெறிந்ததன் காரணமாக, அங்கு பதற்றமான நிலைமையொன்று ஏற்பட்டுள்ளது. - See more at: http://www.tamilmirror.lk/195393/க-ழக-க-ம-க-ண-சப-ய-ன-ம-ன-ப-க-பதற-றம-#sthash.akcAPmeE.dpuf

  9. பாலியல் குற்றச்சாட்டின் கீழ் குற்றவாளியாக இனங்காணப்பட்ட ஜோதிடர் பாஸ்கர் முனியப்பா (32) கனடாவிலிருந்து நாடு கடத்தப்படவுள்ளார். 2014ஆம் ஆண்டு இரு பெண்களை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய குற்றச்சாட்டை நேற்றைய தினம் இடம்பெற்ற வழக்கு விசாரணையின் போது முனியப்பா ஒப்புக் கொண்டுள்ளார். இந்நிலையில், நாளையதினம் அவருக்கு தண்டனை வழங்கப்படவுள்ளதாகவும், அவர் சொந்த நாடான இலங்கைக்கு நாடு கடத்தப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பாலியல் சூதாட்டக்காரரான பாஸ்கர் முனியப்பா என்பவர் சக்தி வாய்ந்த ஆன்மீகவாதி மற்றும் மாய மந்திரத்தை அழித்து காதல் பிரச்சினைகளை சரி செய்ய கூடிய சர்வதேச புகழ்பெற்ற ஜோதிடராவார். முனியப்பாவிடம் வருகைத்தந்தவரின் உடல்களில் சுண்ணாம்பு துண்டுக…

    • 0 replies
    • 553 views
  10. குப்பை மலையை அகற்றுவதற்கு ‘3 ஆர்’ முறை மீதொட்டமுல்ல குப்பை மலையை அப்புறப்படுத்துவதற்கு, குறுகியகால, மத்தியகால மற்றும் நீண்டகால யோசனைகள் அடங்கிய பரிந்துரைகளை, ஜப்பானிய நிபுணர்குழு கையளித்துள்ளது. Reduce -குறைத்தல், Reuse -மறுபயன்பாடு மற்றும் Recycle - மீள்சுழற்சி ஆகிய, 3 ஆர் (R) பரிந்துரை மிகவும் முக்கியமானது என்றும் அந்த நிபுணர் குழு சுட்டிக்காட்டியுள்ளது. மீதொட்டமுல்ல, குப்பைமலை சரிந்து அனர்த்தம் ஏற்பட்டதையடுத்து, ஜப்பான் அரசாங்கத்தினால் அனுப்பிவைக்கப்பட்ட நிபுணர்குழு, அந்த குப்பைமலையில், பல்வேறான மட்டங்களில், சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டது. அந்தச் சோதனைகளின் பின்னர், அந்த நிபுணர் குழுவினால், தயாரிக்கப்பட்ட பரிந்துரைகள…

  11. அரசியல் தலையீடுகளால் யாழ். பல்கலைக்கழக துணைவேந்தர் நியமனத்தில் இழுபறி அரசியல் தலையீடுகளால் யாழ்.பல்கலைக்கழக துணைவேந்தர் பதவிக்கான நியமனத்தில் இழுபறிகள் ஏற்பட்டுள்ளதாக கொழும்பு ஆங்கில வாரஇதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் தற்போதைய துணைவேந்தர் பேராசிரியர் வசந்தி அரசரட்ணத்தின் பதவிக்காலம் முடிவடைந்துள்ள போதிலும், புதிய துணைவேந்தர் நியமிக்கப்படும் வரையில் தற்காலிகமாக அவரை சேவையில் நீடிக்குமாறு பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுத் தலைவர் கேட்டுக் கொண்டுள்ளார். பல்கலைக்கழக துணைவேந்தர் பதவிக்காக 2017 பெப்ரவரி 26ஆம் நாள் நடத்தப்பட்ட தேர்தலில், முதல் மூன்று இடங்களைப் பிடித்தவர்களான, பேராசிரியர் எஸ்.சிறீஸ்கந்தராஜா, பேராசிரியர் ஆர்.விக்னேஸ்வர…

    • 0 replies
    • 251 views
  12. கேப்­பா­ப்பு­லவு இரா­ணுவ முகாம் மாற்­றத்­திற்கு உரிய நிதி விரைவில் வழங்­கப்­படும் முள்­ளிக்­கு­ளத்­திற்கு இம்­மாத இறுதிக்குள் நேரில் செல்­லவுள்ளேன் என்­கிறார் அமைச்சர் சுவா­மி­நாதன் (ஆர்.ராம்) கேப்­பா­ப்பு­லவில் உள்ள இரா­ணுவ முகாமை மாற்­று­வதற்­கான நிதி­வ­ச­திகள் வழங்­கப்­பட்டு ஆறு வாரங்­களில் அப்­ப­குதி விடு­விக்­கப்­ப­டும்­ என சிறைச்­சா­லைகள் மறு­சீ­ர­மைப்பு, புனர்­வாழ்வு மற்றும் இந்­து­ச­மய விவ­கார அமைச்சர் டி.எம்.சுவா­மி­நாதன் தெரி­வித்தார். அத்­துடன் உள்ள மன்னார் முள்­ளிக்­கு­ளத்தில் விவ­சாய காணி­களை விடு­விப்­ப­தற்­கு­ரிய அடுத்த கட்ட நட­வ­டிக்­கை­களை எடுக்கும் முக­மாக இம்­மாத இறு­திக்குள் நேரில் செல்­ல­வுள்­ள­தாக தெரி­வித்­துள்ள அமை…

  13. சீனா, இந்தியா, ஜப்பானின் மிகப்பெரிய விளையாட்டுக் களமாகும் சிறிலங்காவின் துறைமுகங்கள் சிறிலங்காவில் இடம்பெற்ற பல பத்தாண்டு கால யுத்தம், 2009ல் நிறைவு பெற்ற பின்னர் நாடு தற்போது தன்னை அபிவிருத்தி செய்து வரும் தருணத்தில் இந்திய மாக்கடல் மீதான அனைத்துலக சமூகத்தின் அக்கறை அதிகரித்துள்ளது. இலங்கைத் தீவானது பல்வேறு பாரிய சக்தி வாய்ந்த நாடுகளின் கவனத்திற்கு உட்பட்டுள்ளது. மத்திய கிழக்கிற்கும் மலாக்கா நீரிணைக்கும் இடையில் கேந்திர முக்கியத்துவம் மிக்க அமைவிடத்தில் இலங்கைத் தீவு அமைந்துள்ளதன் காரணமாக உலக நாடுகளின் கவனமானது இதன் மீது குவிந்துள்ளது. இவ்வாறான பல்வேறு வாய்ப்புக்கள் சிறிலங்காவிற்கு வந்துள்ள போதிலும், இத்தீவானது சில பிரச்சினைகளுக்கும் முகங்கொடுக்க வேண்டிய நிலை ஏ…

    • 0 replies
    • 166 views
  14. ‘கஜபா’க்களின் அதிபதியாகிறார் போர்க்குற்றம்சாட்டப்பட்ட மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா சிறிலங்கா இராணுவத் தலைமையகத்தில் பொது உதவி அதிகாரியாக பணியாற்றும் சர்ச்சைக்குரிய அதிகாரியான மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா கஜபா காலாட்படைப் பிரிவின் தலைமை கட்டளை அதிகாரியாக நியமிக்கப்படவுள்ளார். கஜபா படைப்பிரிவின் தலைமை கட்டளை அதிகாரியாக பணியாற்றும் மேஜர் ஜெனரல் உதய பெரேரா இந்தவாரம் ஓய்வு பெறவுள்ளார். இதையடுத்தே, கஜபா படைப்பிரிவின் புதிய தலைமை கட்டளை அதிகாரி பதவிக்கு மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வாவின் பெயர் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இறுதிக்கட்டப் போரில் 58 ஆவது டிவிசனின் கட்டளை அதிகாரியாக பணியாற்றிய மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா போர்க்குற்றங்களில் ஈடுபட்டவர் என்று மனித உரிமை அ…

    • 0 replies
    • 222 views
  15. ‘ஒப்­பந்தம் குறித்து மோடி பேச­மாட்டார்’ (எம்.எம்.மின்ஹாஜ்) இந்­திய பிர­தமர் நரேந்­திர மோடியின் விஜ­யத்தின் போது திருகோண­மலை எண்ணெய்க் குதங்கள் தொடர்­பான எந்­த­வொரு பேச்­சு­வார்த்­தை­க­ளிலும் ஈடு­ப­ட­மாட்டார். அத்­துடன் எமது நாட் டின் எந்­த வொரு துறை­மு­கத்­தையும் நாம் விற்­க­மாட்டோம். தற்­போது திரு­கோ­ண­ம­லையின் 14 எண்ணெய் குதங்கள் இந்­திய நிறு­வ­னத்­திற்கு குத்­த­கைக்கு வழங்கப்படுகின்றன. ஏனைய 10 குதங்கள் இலங்­கைக்கும் உரித்­தா­கின்­றன. மீத­முள்ள 74 குதங்கள் பகிர்ந்து கொள்­வ­தற்­கான ஒப்­பந்­தமே கைச்­சாத்­தி­டப்­ப­ட­வுள்­ளது. மாறாக முழு உரித்­து­ரி­மை பெறவும் இந்­திய நிறு­வ­னத்­திற்கு வழங்க போவ­தில்லை என அரச தொழில் முயற்­சிகள் அம…

  16. ‘189 ஏக்கர் தனியார் காணி 6 வாரங்களில் விடுவிக்கப்படும்’ முல்லைத்தீவு, கேப்பாப்புலவில் 189 ஏக்கர் விஸ்தீரனமான தனியார் காணிகள் நிதிஒதுக்கீடுகள் கிடைத்ததன் பின்னர், 6 வாரங்களில் விடுவிக்கப்படும் என்று, இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் கிரிஷாந்த டி சில்வா உறுதி அளித்துள்ளார். அதேபோல், முள்ளிக்குளம் மக்களுக்குச் சொந்தமான விவசாயக் காணிகளை, தேசிய காணி விடுவிப்பதற்கான நடைமுறையின் கீழ் விடுவிக்க கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் ரவிந்திர குணதிலக்க இணக்கம் தெரிவித்துள்ளார். வடக்கு, கிழக்கு மாகாண காணிப் பிரச்சினை குறித்த கலந்துரையாடல், கொழும்பில் நேற்று (24) இடம்பெற்றது. இந்தக் கூட்டத்தின் போதே மேற்கண்ட முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இந்த வ…

  17. எரி­பொருள் விநி­யோ­கத்தில் நாடு முழு­வதும் கடும் நெருக்­கடி (எம்.எப்.எம்.பஸீர்) திரு­மலை துறை­மு­கத்தில் உள்ள 99 எண்ணெய்த் தாங்­கி­களை இந்­திய நிறு­வ­னத்­துக்கு வழங்­கக்­கூ­டாது என்­பது உள்­ளிட்ட 3 கோரிக்­கை­களை முன்­வைத்து கனிய எண்ணெய் தொழிற்­சங்­கங்­களின் ஒன்­றியம் நேற்று முன்­னெ­டுத்த வேலை நிறுத்தம் கார­ண­மாக எரி­பொருள் பெற்­றுக்­கொள்ளும் நட­வ­டிக்­கை­களில் நாட­ளா­விய ரீதியில் பாரிய நெருக்­கடி நில­வி­யது. குறித்த ஒன்­றி­யத்தின் கீழ் வரும் தொழிற்­சங்­கங்­களை பிரதிநிதித்துவம் செய்யும் தொழி­லா­ளர்கள் தொடர்ச்­சி­யாக நேற்று ஆரம்­பித்த வேலை நிறுத்தப் போராட்டம் கார­ண­மாக, நாட­ளா­விய ரீதியில் கடும் எரி­பொருள் நெருக்­கடி ஏற்­பட்­டது. …

  18. காணி விடுவிப்புக்கு கால அவகாசம் தொடர்ந்தும் கோரிய படைத்தரப்பு; நிலைமை தொடரக்கூடாதென விசனம் (ஆர்.ராம்) வடக்கு, கிழக்கில் காணி­களை விடு­விப்­ப­தற்கு படைத்­த­ரப்பு தொடர்ந்தும் கால அவ­கா­சத்­தினை கோரி­யுள்­ளது. தேசிய பாது­காப்­புக்கு அச்­சு­றுத்தல் இல்­லாத வகையில் பொது­மக்­களின் காணி­களை மீளக் கைய­ளிப்­ப­தற்கு தாம் தயா­ரா­க­வுள்­ள­தா­கவும் அத்­த­ரப்பு தெரி­வித்­துள்­ளது. இதே­வேளை வடக்கு, கிழக்கில் பொது­மக்­களின் காணி­களை படை­யினர் ஆக்­கி­ர­மித்­துள்­ளமை தொடர்­பாக பல்­வேறு சந்­தர்ப்­பங்­களில் தாம் விரி­வாக எடுத்­து­ரைத்­துள்­ள­தாகத் சுட்­டிக்­காட்­டிய வடக்கு கிழக்கு மக்கள் பிர­தி­நி­திகள் கடந்த காலங்­களில் பேச்­சு­வார்த்­தை­க…

  19. அக்கினி சிறகுகளிடம் ரி.ஐ.டி விசாரணை? அக்கினிச் சிறகுகள் அமைப்பைச் சேர்ந்த சிலரிடம், பயங்கரவாத புலனாய்வு பிரிவினர் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர் என்று தகவல் வெளியாகியுள்ளது. ”நொக் அவுட்” முறையிலான கால்பந்து சுற்றுப் போட்டியை, அக்கினிச் சிறகுகள் அமைப்பு, கிளிநொச்சியில் நடத்திவருகிறது. இதில், வடக்கு, கிழக்கிலுள்ள விளையாட்டு சங்கங்கள் பங்குபற்றுகின்றன. முள்ளிவாய்க்கால் ஞாபகார்த்த தினத்தை அடிப்படையாக கொண்டே, இந்தப் போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன. மே18 ஆம் திகதி, முள்ளிவாய்க்கால் ஞாபகார்த்த தினமாகும். அக்கினிச் சிறகுகள் அமைப்பின் தலைவர் செல்வநாயகம் ஆனந்தவர்மன், வவுனியா பயங்கரவ…

  20. இராணுவத்தினரது ஏற்பாட்டில் வடமாகாணக் கல்வி அமைச்சருக்கு எதிராக சிவில் பாதுகாப்புப் படையினரால் (சி.எஸ்.டி) நாளை கிளிநொச்சி டிப்போச் சந்தியில் போராட்டம் இடம்பெறவுள்ளதாகத் தகவல்கள் கசிந்துள்ளன. வடமாகாணத்திலுள்ள முன்பள்ளி ஆசிரியர்கள் அனைவரையும் வடமாகாணக் கல்வி அமைச்சின் கீழ் கொண்டு வருவதற்கான ஏற்பாடுகளை வடமாகாணக் கல்வி அமைச்சால் மேற்கொண்டு அதற்கான நியதிச் சட்டத்தையும் வடமாகாணக் கல்வி அமைச்சர் த.குருகுலராசா முன்னெடுத்துள்ள நிலையில், இராணுவக் கட்டமைப்பின் கீழ் இராணுவத்தால் நிர்வகிக்கப்படும் சிவில் பாதுகாப்புப் படை முன்பள்ளி ஆசிரியைகளை வடக்கு மாகாணக் கல்வி அமைச்சின் நிர்வாத்தின் கீழ் கொண்டுவருவதை எதிர்த்தும் அவர்களைத் தொடர்ந்தும் இராணுவக் கட்டமைப்பின் கீழ் வை…

    • 2 replies
    • 446 views
  21. நமச்சிவாயவுக்கும் சிவகொடிக்கும் தடை சிவகொடியை ஏந்தியவாறு “ஓம் நமச்சிவாய”, “ஓம் நமச்சிவாய” என்ற நாமத்தை உச்சரித்துகொண்டும் சிவனொளிபாதமலைக்கு யாத்திரைசென்ற, யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த யாத்திரிகள் சிலரை, இனந்தெரியாத சிலர் அச்சுறுத்தியுள்ளதாக, இலங்கை மலையக இந்து குருமார் ஒன்றியத்தின் பொதுச்செயலாளர் சிவஸ்ரீ வேலு சுரேஷ்வர தெரிவித்தார். “ஓம் நமச்சிவாய” என, உச்சரிக்ககூடாது என்றும், சிவகொடியை ஏந்திச்செல்லக் கூடாது என்றும் அந்த இனந்தெரிதோர், அச்சுறுத்தியதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இது குறித்து, ஹட்டன்-குடாஓயா சர்வோதய கேட்போர் கூடத்தில், ஊடகவியலாளர் சந்திப்பு, நேற்று (23) நடைபெற்றது. அங்கு அவர் தொடர்ந்து கருத்துதெ…

  22. ஊர்காவற்துறையில் முன்னாள் காவல்துறை உத்தியோகஸ்தர் மயக்க மருந்து விசிறி பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ய முயற்சி – ஊர்காவற்துறை பகுதியில் முன்னாள் காவல்துறை உத்தியோகஸ்தர் ஒருவர் , வீட்டில் தனித்திருந்த பெண்ணை மயக்க மருந்து விசிறி பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற வேளை ஊர் மக்களால் மடக்கி பிடிக்கப்பட்டு, நயப்புடைக்கப்பட்ட பின்னர் காவல்துறையினரிடம் ஒப்படைக்கபட்டார். குறித்த சந்தேக நபர் மட்டக்களப்பு களுவாஞ்சிகுடி பகுதியை சேர்ந்த 35 வயதான நபர் எனவும், தற்போது ஊர்காவற்துறை பகுதியில் தங்கி இருந்து கட்டட நிர்மான பணியில் ஈடுபட்டு வருபவர் எனவும் , குறித்த நபர் காவல்துறை சேவையில் இருந்து இடை நிறுத்தப்பட்டவர் எனவும் , ஊர்காவற்துறை …

  23. கடற்படை வசமுள்ள காணி : இராஜாங்க அமைச்சர் அதிரடி கருத்து (ஆர்.யசி) கடற்படை வசமுள்ள காணிகளை விடுவிப்பது சாத்தியமற்ற ஒன்றாகும். உயர் பாதுகாப்பு வலைய காணிகளை தொடந்தும் பாதுகாப்பு படைகள் விடுவிக்காது என்பது பாதுகாப்பு அமைச்சின் தீர்மானம் என பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜயவர்தன வடமாகாண ஐந்து மாவட்ட மக்கள் பிரதிநிதிகளுடனான சந்திப்பின் போது தெரிவித்துள்ளார். வடக்கு கிழக்கு பகுதிகளில் தனியார் நிலங்களில் உள்ள இராணுவ காணிகளை விரைவில் விடுவிக்க பாதுகாப்பு தரப்பு தீவிர நடவடிக்கை எடுக்கப்படும். அடுத்த இரண்டு வாரகாலத்தில இறுதிக்கட்ட பேச்சுவார்த்தைகளை முன்னெடுப்பதுடன் வடக்கு கிழக்கில் காணி கண்காணிப்பு நடவடிக்கைகளையும் முன்னெடுக்…

  24. சிரேஷ்ட ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்கவின் கொலை தொடர்பிலான விசாரணைகளுக்கு என்ன நடந்தது?? உண்மையான சந்தேகநபர்களை மறைத்து வேறு நபர்கள் மீது குற்றத்தை சுமத்தும் முயற்சி உள்ளதா? இந்த கொலை தொடர்பில் நியூஸ்பெஸ்ட் இன்று மேலும் பல தகவல்களை வெளிகொண்டுவருகிறது..

  25. சிவில் பாதுகாப்பு திணைக்களப் பண்ணைகளை வடமாகாண சபை கோருவதற்கு எதிர்ப்பு கிளிநொச்சியில் உள்ள சிவில் பாதுகாப்புத் திணைக்களத்தின் பண்ணைகளை, அந்தத் திணைக்களத்திடமிருந்து பறிக்க வேண்டாம் எனக் கோரி கிளிநொச்சியில் முன்னாள் போராளிகளை அதிகமாகக் கொண்ட சிவில் பாதுகாப்புப் படைப்பிரிவினர் ஆர்ப்பாட்டப் பேரணி ஒன்றை நடத்தியுள்ளனர். ராணுவ நிர்வாகத்தின் கீழ் உள்ள அரசு பண்ணைகளை வடமாகாண விவசாயத் திணைக்களத்திடம் கையளிக்க வேண்டும் என்றும், சிவில் பாதுகாப்புத் திணைக்களத்தின் கீழ் இயங்கி வருகின்ற முன்பள்ளிகளை வடமாகாண கல்வி அமைச்சுடன் இணைத்து நிர்வகிக்க வேண்டும் என்றும், ராணுவத்தின் வசமுள்ள பொதுமக்களின் காணிகளை விடுவிப்பது தொடர்பில், பாதுகாப்பு அமைச்சின்…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.