ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143373 topics in this forum
-
சக்தி டிவி செய்திகள் 24th April 2017, 8PM
-
- 0 replies
- 250 views
-
-
இலங்கை தேசிய விமான சேவைக்குப் பாராட்டு இலங்கையானது, அதிகரித்து வரும் சுற்றுலாப் பயணிகளிடமிருந்து கூடுதல் வருமானத்தை ஈட்டி வருகின்றது என்று சுட்டிக்காட்டியுள்ள சவூதி அரேபிய ஊடகமொன்று, இலங்கை தேசிய விமான சேவையானது, மத்திய கிழக்கிலிருந்து மேலும் ஊக்குவிப்பைப் பெற முயற்சிக்கின்றது என்றும் தெரிவித்துள்ளது. இன்று 24ஆம் திகதியிலிருந்து எதிர்வரும் 27ஆம் திகதி வரை, இந்த விமான சேவைக் கம்பனி, இந்தப் பிராந்தியத்தில் புதிதாக சேவைகளை நடத்தவுள்ளது. டுபாயிலுள்ள அரேபியன் ட்ரவல் மார்கெட்டில், ஏற்கெனவே ஸ்ரீ லங்கா எயார்லைன்ஸ் இருப்பது இதற்கு மிக வசதியாக இருக்கும் என்றும் சுட்டிக்காட்டப்பட்டு…
-
- 0 replies
- 328 views
-
-
‘சம்பந்தன் செல்லும் பாதையில் கண்களை மூடிக்கொண்டு செல்வோம்’ -எஸ்.நிதர்ஷன் “ஈழத் தமிழ் அரசியலில் எத்தகைய முரண்பாடுகள், மாற்றங்கள் ஏற்பட்டாலும் அரசியலமைப்பு முயற்சிகள் முடிவுறும் வரை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பையும் தலைவர் சம்பந்தனையும் விட்டு விலகமாட்டோம்.அதுவரை அவர் செல்லும் பாதையில் கண்களை முடிக்கொண்டு செல்வோம்” என்று, கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும் புளொட் அமைப்பின் தலைவருமான தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்துள்ளார். “தடுமாறும் தமிழ்த் தலைவர்களால் தளர்வடைகின்றார்களா தமிழ் மக்கள்? அடுத்து என்ன?” என்ற தலைப்பில், கருத்தாய்வு நிலை கருத்துப் பகிர்வு, மன்னார் மாவட்ட பொது அமைப்புக்களின் ஒன்றியத்தின் ஏற்பா…
-
- 2 replies
- 560 views
-
-
கிளிநொச்சியில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் உதைப்பந்தாட்டப் போட்டி -மாவை சேனாதிராஜா முதன்மை விருந்தினர். கிளிநொச்சி உதயதாரகை விளையாட்டு மைதானத்தில் பாராளுமன்ற உறுப்பினரும் இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவருமான மாவை சேனாதிராஜா முதன்மை விருந்தினராக கலந்துகொண்டு முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் உதைப்பந்தாட்ட போட்டியை நேற்று சனிக்கிழமை சம்பிரதாயபூர்வமாக ஆரம்பித்து வைத்துள்ளார். அக்கினிச் சிறகுகள் அமைப்பின் ஏற்பாட்டில் கிளிநொச்சி உதைப்பந்தாட்ட சம்மேளனத்தின் தலைமையில் வடக்கு கிழக்கு இணைந்த மாபெரும் உதைப்பந்தாட்டச் சுற்றுப்போட்டியாக வடக்கில் கிழக்கில் உள்ள பல மாவட்டங்களில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. …
-
- 3 replies
- 476 views
-
-
மக்களே அவதானம் : பாதுகாத்துக்கொள்ள தற்காப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளுங்கள் ! மே மாதம் வரை கடும் வெப்பத்துடன் கூடிய காலநிலை தொடரவுள்ளதால் பொதுமக்கள் உஷ்ணத்திலிருந்து தம்மை பாதுகாத்துக்கொள்ள அவசியமான தற்காப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் வானிலை அவதான நிலையம் கேட்டுக்கொண்டுள்ளது. சீரற்ற காலநிலை காரணமாக கொழும்பு உள்ளிட்ட நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும் கடும் வெப்பநிலை நிலவிவருவதாக வானிலை அவதான நிலையம் மேலும் தெரிவித்துள்ளது. வெப்பநிலை அதிகரிப்புடன் வைரஸ் தாக்கமும் அதிகரித்திருப்பதனால் சிறுவர்கள் மற்றும் கர்ப்பிணிகள் விரைவில் நோய்த்தாக்கங்களுக்கு உள்ளாக நேரிடுமென்றும் வைத்தியர்கள் அறிவுறுத்தியுள்ளனர். அதிக வெப்பநிலைக் காரணம…
-
- 0 replies
- 406 views
-
-
சர்வதேச நீதிமன்றில் தண்டிக்கும் உரிமையை வழங்கும் சட்டமூலமத்தை கொண்டுவருவதற்கு கடும் முயற்சி : மகிந்த குற்றச்சாட்டு (ஆர்.யசி) யுத்தத்தை முடிவுக்கு கொண்டுவந்த நபர்களை யுத்த குற்றவாளிகள் என்ற பெயரில் சர்வதேச நீதிமன்றத்தில் தண்டிக்கும் உரிமையை வழங்கும் சட்டமூலம் ஒன்றை பாராளுமன்றத்தில் கொண்டுவர அரசாங்கம் முயற்சித்து வருகின்றது. புலம்பெயர் அமைப்புகளினதும் சர்வதேச நாடுகளின் தேவைக்கு அமைய எம்மை தண்டிக்க முயற்சிக்கப்படுகின்றது என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். காணாமல்போனோர் தொடர்பிலான காரியாலையம் உருவாக்கப்பட்டமையும் எமக்கு பாரிய அச்சுறுத்தல் எனவும் அவர் சுட்டிக் காட்டினார். கம்பகா மாவட்டத்தில் இடம்பெற்…
-
- 1 reply
- 233 views
-
-
திருமலை எண்ணெய் குதங்களை இந்தியாவுக்கு வழங்குவது குறித்து இறுதி தீர்மானம் இல்லை பிரதமரின் இந்திய விஜயத்தின்போது ஒப்பந்தம் கைச்சாத்திடுவதில் சந்தேகம் என்கிறார் அமைச்சர் சந்திம (க.கமலநாதன்) திருகோணமலை எண்ணெய்க் குதங்கள் பற்றிய பேச்சுவார்த்தைகள் இன்னும் இறுதிக் கட்டத் தினை எட்டவில்லை. எனவே பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் இந்திய விஜயத்தின் போது மேற்படி விவகாரம் குறித்த ஒப்பந்தம் கைச்சாத்திடப்படுவது சந்தேகத்திற்கிடமானதாகும் என பெற்றோலிய வளத்துறை அமைச்சர் சந்திம வீரக்கொடி தெரிவித்தார். எவ்வாறாயினும் ஒப்பந்தம் கைசாத்திடப்படும்போது 10 எண்ணெய் குதங்களை முழுமையாக இலங்கை ப…
-
- 0 replies
- 551 views
-
-
‘காணாமல் போனோர் தொடர்பில் விசாரணை போதாது’ -பொன்ஆனந்தம், வடமலை ராஜ்குமார் “காணாமல் போனோர் தொடர்பாக அரசாங்கம் போதுமான விசாரணைகளை நடத்த வேண்டும்” எனத் தெரிவித்த வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், “இந்த விடயம் தொடர்பாக இதுவரையில் போதுமான விசாரணை நடத்தப்பட்டதாகத் தெரியவில்லை” எனவும் கூறினார். “காணாமல் போனோரின் பிரச்சினை இலகுவாகத் தீர்க்கமுடியாத பிரச்சினையாக இருந்து வருகின்றது இதற்கான நடவடிக்கையை அரசாங்கம் எடுக்கவேண்டும்” எனவும் அவர் கோரினார். தமிழ் மக்கள் பேரவையின் கூட்டம், திருகோணமலை விலா விடுதியில் நேற்று (23) நடைபெற்றது. இதில் முன்னாள் நாடாளுமன்ற உ…
-
- 1 reply
- 298 views
-
-
மட்டக்களப்பில் 57.331 ஏக்கர் காணி விடுவிக்கப்படவில்லை – சீ.யோகேஸ்வரன் மட்டக்களப்பு, மாவட்டத்தில் பாதுகாப்புத் தரப்பினரால் சுவீகரிக்கப்பட்ட 77 குடும்பங்களுக்குச் சொந்தமான 57.331 ஏக்கர் காணி இதுவரையில் விடுவிக்கப்படாது உள்ளதென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன் தெரிவித்துள்ளார். கிரான் பிரதேச மக்களுடனான சந்திப்பின் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். வாகரை, வாழைச்சேனை, கிரான், ஏறாவூர், ஆரையம்பதி, மட்டக்களப்பு உள்ளிட்ட பிரதேச செயலாளர் பிரிவுகளில் பாதுகாப்புத் தரப்பினரால் சுவீகரிக்கப்பட்ட பொதுமக்களுக்குச் சொந்தமான காணிகள் இன்னும் விடுவிக்கப்படவில்லை என அவர் தெரிவித்துள்ளார். …
-
- 0 replies
- 582 views
-
-
கொழும்பு துறைமுக நகரத்துக்கு மேலாக ஜனாதிபதி கூட உலங்கு வானூர்தியில் பறக்க முடியாத சூழ்நிலை தற்போது காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது. அந்தவகையில், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவினால், பாதகமான முறையில் கொழும்பு துறைமுக நகர உடன்பாடு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். இருப்பினும், இவ்வாறு எந்தவொரு சூழ்நிலையிலும் நாட்டுக்கு எதிரான உடன்பாட்டில் கையெழுத்திடமாட்டேன் என மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். கொழும்பில் நேற்றைய தினம் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். அவர் மேலும் தெரிவிக்கையில், “சீனா மற்றும் இந்தியாவுடன் செய்து கொள்ளத் திட்டமிடப்பட்…
-
- 5 replies
- 405 views
-
-
வவுனியா பெற்றோல் நிலையங்களில் பெற்றோலுக்கு தட்டுப்பாடு! : அலைமோதும் மக்கள் கூட்டம்! (படங்கள்) வவுனியாவில் அனைத்து எரிபொருள் நிரப்பு நிலையங்களிலும் மக்கள் கூட்டம் நிறைந்து காணப்படுகின்றது. நேற்று நள்ளிரவு முதல் பெற்றோலிய தொழிற்சங்க ஒன்றியம் பணிப்பகிஷ்கரிப்பு போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து வவுனியாவில் உள்ள அனைத்து எரிபொருள் நிரப்பு நிலையங்களிலும் மக்கள் கூட்டம் அதிகளவாக காணப்படுகின்றது. இந்நிலையில் பொரும்பாலான எரிபொருள் நிரப்பு நிலையங்களில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகவும் எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார். http://www.virakesari.lk/
-
- 0 replies
- 321 views
-
-
இலங்கைக்கு ஜீ.எஸ்.பி பிளஸ் வரிச் சலுகையை வழங்க ஜரோப்பிய பாராளுமன்றில் எதிர்ப்பு இலங்கைக்கு ஜீ.எஸ்.பி பிளஸ் வரிச் சலுகையை வழங்க எதிர்ப்புத் தெரிவித்து ஜரோப்பிய பாராளுமன்றத்தில் யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது. ஐரோப்பிய ஒன்றியத்தின் 50 பேரைக் கொண்ட குழு ஒன்றினால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள இந்த தீர்மானத்தில் இலங்கையின் நல்லிணக்க முனைப்புக்கள் போதியளவில் இல்லை என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. ஜீ.எஸ்.பி பிளஸ் வரிச் சலுகை வழங்குவதற்கான நிபந்தனைகளை இலங்கை அரசாங்கம் உரிய முறையில் பூர்த்தி செய்யவில்லை எனவும் இலங்கைக்கு இந்த சலுகைத் திட்டத்தை வழங்கக்கூடாது எனக் கோரியே குறித்த யோசனை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்காதிருத்தல், மனித உரிமை…
-
- 0 replies
- 218 views
-
-
அரசாங்கம் வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும் – ஜெர்மனி 2015ம் ஆண்டில் அளித்த வாக்குறுதிகளை அரசாங்கம் நிறைவேற்ற வேண்டுமென ஜெர்மனி வலியுறுத்தியுள்ளது . 2015ம் ஆண்டில் சிறிசேன – விக்ரமசிங்க அரசாங்கத்தினால் அளிக்கப்பட்ட வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட வேண்டுமென தெரிவித்துள்ளது. இலங்கைக்கான ஜெர்மன் தூதுவர் ஜோன் றோட் ( Jorn Rohde ) இதனைத் தெரிவித்துள்ளார். அளிக்கப்பட்ட வாக்குறுதிகளை நிறைவேற்றும் அரசியல் முனைப்பு மிகவும் இன்றியமையாதது என சுட்டிக்காட்டியுள்ள அவர் மாற்றங்களை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென வலிறுயுத்தியுள்ளார். மேலும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் அமர்வுகளில் நிறைவேற்றப்பட்ட தீர்மானப் பரிந்துரைகள் அமுல்பட…
-
- 0 replies
- 348 views
-
-
அமெரிக்க கடற்படை அதிகாரிகள் முள்ளிக்குளத்தில் உள்ள கடற்படையினருக்கு பயிற்சியை வழங்கியிருக்கின்றார்கள். ஐ.நாவிலே பாதிக்கப்பட்ட தரப்பிற்கு சார்பாக சில பிரேரணையை கொண்டு வருவதாக கூறிக்கொண்டு இந்த மண்ணிலே அந்த ஆக்கிரமிப்புக்கு ஆதரவான வேலைத்திட்டங்களை செய்கிறார்கள் என வடமாகாணசபை உறுப்பினர் அனந்தி சசிதரன் தெரிவித்தார். தடுமாறும் தமிழ்த் தலைமைகளால் தளர்வடைகின்றார்களா தமிழ் மக்கள், அடுத்தது என்ன..? எனும் தொனிப்பொருளில் வவுனியாவில் இடம்பெற்ற கருத்துப் பகிர்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். தொடர்ந்தும் தெரிவிக்கையில், வட மாகாண கல்வி அமைச்சர் பாடசாலைகளில் இராணுவ பிரசன்னம் இல்லை என்று சொல்கின்றார். ஆனால் இன்றும் பல பாடசாலை ந…
-
- 0 replies
- 364 views
-
-
இராணுவத்தின் கஜபா படைப்பிரிவின் தலைமை கட்டளை அதிகாரியாக மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா நியமிக்கப்படவுள்ளார். கொழும்பு ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ள செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த படைப்பிரிவின் தலைமை கட்டளை அதிகாரியாக மேஜர் ஜெனரல் உதய பெரேரா பணியாற்றி வரும் நிலையில், இந்தவாரம் அவர் ஓய்வு பெறவுள்ளார். இந்நிலையில், குறித்த பதவிக்கு மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வாவின் பெயர் பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, இராணுவத் தலைமையகத்தில் பொது உதவி அதிகாரியாக மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா அண்மையில் நியமிக்கப்பட்டார். இந்த நிலையில் அவருக்கு மீண்டும் உயர்பதவி வழங்கப்படவுள்ளதாக அந்த செய்தியில் மேலு…
-
- 0 replies
- 367 views
-
-
பொலிஸாரின் தாக்குதலுக்கு இலக்கான இளைஞன் வைத்தியசாலையில் : பொது மக்கள் பொலிஸாருடன் வாக்குவாதம் : வவுனியாவில் சம்பவம் வவுனியாவில் இளைஞர் ஒருவர் பொலிஸாரின் தாக்குதலுக்கு இலக்காகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதோடு பொதுமக்கள் பொலிஸாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் குறித்தப் பகுதியில் சிறிது நேரம் பற்றநிலை நிலவியது. நேற்றிரவு 10 மணியளவில் வவுனியாவில் இருந்து கோவில்குளம் நோக்கி மோட்டார் சைக்கிளில் இரு இளைஞர்கள் சென்றுக்கொண்டிருந்துள்ளனர். மோட்டார் சைக்கிளினை செலுத்தியவர் தலை கவசம் அணிந்திருந்த போது பின்னால் இருந்தவர் தலை கவசம் இல்லாது சென்றுள்ளார். ரோயல் விருந்தினர் விடுதிக்கு முன்பாக கடமையில் இருந…
-
- 5 replies
- 499 views
-
-
முல்லைத்தீவு தமிழீழ விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த காலத்தில் நாங்கள் எமது சொந்த நிலங்களில் மீள்குடியேறினோம். ஆனால் தற்போது மீள்குடியேற முடியாமல் தவிக்கின்றோம் என முல்லைத்தீவு முஸ்லிம் மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர். தமது பூர்வீக காணிகளுக்கு காணி அனுமதிப்பத்திரங்கள் இன்னமும் கிடைக்கவில்லை மற்றும் காணிப் பிரச்சினைகள் தீர்க்கப்பட வேண்டும். ஆகிய கோரிக்கைகளை முன்வைத்து முல்லைத்தீவில் முஸ்லிம் மக்களால் போராட்டமொன்று மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த நிலையில் இது தொடர்பில் முஸ்லிம் மக்கள் கருத்து தெரிவிக்கையிலேயே அவர்கள் இவ்வாறு தெரிவித்துள்ளனர். 2002ஆம் ஆண்டு தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இலங்கை இராணுவத்தினரும் இடையில் சமாதான சூழல் ஏற்பட…
-
- 0 replies
- 275 views
-
-
இராணுவ மய நீக்கமே நிலத்தையும் உளத்தையும் விடுவிக்கும்! குளோபல் தமிழ் செய்திகளுக்காக தீபச்செல்வன் இலங்கை அரச படைகளின் ஆக்கிரமிப்பில் உள்ள காணிகளை விடுவிக்கும் சந்திப்பு ஒன்று அண்மையில் இலங்கை பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் தலைமையிலான இராணுவப் படைதரப்புக்கும் எதிர்கட்சித் தலைவர் இரா சம்பந்தன் தலைமையிலான தமிழ் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையில் நடைபெற்றது. வடக்கு கிழக்கில் காணிகளை விடுவிக்க தமிழ் மக்கள் பல்வேறு போராட்டங்களை நடத்தி வரும் நிலையில் இந்த சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்பட்டது. எவ்வாறெனினும் காணிகளை விடுவிக்கும் அதிகாரம் தமக்கு இல்லை என்ற தொனியில் இலங்கை இராணுவம் தெரிவித்துள்ளது. இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆ…
-
- 1 reply
- 266 views
-
-
கிளிநொச்சியில் 1515 ஏக்கர் காணி படையினர் வசம் : எந்தெந்த பிரதேசங்கள் உள்ளடங்குகின்றன என தகவல் கிளிநொச்சி மாவட்டத்தில் நான்கு பிரதேச செயலக பிரிவுகளில் படையினரின் வசம் ஆயிரத்து 515.7 ஏக்கர் நிலம் காணப்படுவதாக மாவட்டச் செயலக புள்ளிவிபரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அண்மையில் மாவட்டச் செயலகத்தில் இடம்பெற்ற படையினரின் கட்டுப்பாட்டில் உள்ள மக்களின் காணிகளை விடுவிப்பது தொடர்பிலான கூட்டத்தின் போதே இத் தகவல்கள் வெளியிடப்பட்டன. அதனடிப்படையில் தனியார் காணி அனுமதி பத்திர காணிகள் 374 ஏக்கரும், தனியார் உறுதிக்காணிகள் 168. 2 ஏக்கரும், அரச திணைக்களங்களுக்குச் சொந்தமான காணிகள் 973. 5 ஏக்கர் காணியும் படையினரின் கட்டுப்பாட்டில் காணப்படுகின்றன. கரைச்ச…
-
- 1 reply
- 212 views
-
-
முல்லைத்தீவில் முறுகல் நிலை -எஸ்.நிதர்ஷன் முல்லைத்தீவு, கொக்கிளாய் பகுதியில் தமிழ் மீனவர்களுக்கும் சிங்கள மீனவர்களுக்கும் இடையில் முறுகல் நிலை ஏற்பட்டுள்ளது. - See more at: http://www.tamilmirror.lk/194949/ம-ல-ல-த-த-வ-ல-ம-ற-கல-ந-ல-#sthash.c5hy7KFj.dpuf
-
- 4 replies
- 696 views
-
-
இவ்வார மின்னல் நிகழ்ச்சியில் கஜேந்திரகுமார் பொன்னம்பலம்,வடமாகாண எதிர்க்கட்சி தலைவர் தவராசா மற்றும் வடமாகாணசபை உறுப்பினர் அனந்தி சசிதரன் ஆகியோர் கலந்துகொண்ட மின்னல் நிகழ்சி உங்களுக்காக http://www.tamilkingdom.com/2017/04/456_18.html
-
- 0 replies
- 550 views
-
-
காணிகள் விடுவிப்பு குறித்து நாளை கூட்டம் : வடக்கு மக்கள் பிரதிநிதிகள் அனைவருக்கும் அழைப்பு (ஆர்.ராம்) மன்னார் மாவட்டத்தில் கடற்படையினரிடத்தில் உள்ள முள்ளிக்குளம் உட்பட வடமாகாணத்தில் படைத்தரப்பினர் ஆக்கிரமித்துள்ள காணிகள் விடுவிப்பு குறித்து பாதுகாப்பு அமைச்சில் நாளை முக்கிய கூட்டம் இடம்பெறவுள்ளது. இக்கூட்டத்தில் கலந்து கொள்ளுமாறு சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு, மீள்குடியேற்றம், புனர்வாழ்வளிப்பு மற்றும் இந்து சமய அலுவல்கள் அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் வடக்கு மாகாணத்தின் 5 மாவட்டங்களையும் சேர்ந்த அனைத்து மக்கள் பிரதிநிதிகளுக்கும் அழைப்பு விடுத்துள்ளார். http://www.virakesari.lk/article/19308
-
- 0 replies
- 153 views
-
-
திருமலை துறைமுக அபிவிருத்தி குறித்து இந்தியாவுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம்? இந்தியப் பிரதமர் மோடிக்கு ரணில் உத்தியோகபூர்வமாக அழைப்பு விடுப்பார் லியோ நிரோஷ தர்ஷன் திருகோணமலை துறைமுக அபிவிருத்தி குறித்த புரிந்துணர்வு ஒப்பந்த மொன்றை இந்தியாவுடன் மேற்கொள்ளும் வகையில் பேச்சுக்களை நடத்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்க எதிர்வரும் செவ்வாய்க்கிழமை இந்தியா செல்லவுள்ளார். இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஊடாக திருமலை எண்ணெய்த்தாங்கிகளை செயற்படுத்தல், இயற்கை எரிவாயு மின் திட்டத்தை உருவாக் குதல், கைத்தொழில் வலயங்களை உருவாக்குதல், நெடுஞ்சாலைகள் அமைத்தல் போன்ற விடயங்கள் பேசப்படவுள்ளன. …
-
- 0 replies
- 245 views
-
-
ஆறுமுகம் ஆறு “வானிலிருந்து விழும் ஒரு துளி நீரையும் விவசாயத்திற்குப் பயன்படுத்தாது வீணே கடலைச் சென்றடைய விடமாட்டேன்” என்பது, பொலநறுவையை இராசதானியாக கொண்டு ஆட்சி செய்த சிங்கள மன்னன் மகா பராக்கிரமபாகுவின் புகழ் மிக்க கூற்றுக்களில் ஒன்றாகும். பேச்சோடு மட்டும் நின்றுவிடாது, வானிலிருந்து விழும் நன்னீர், கடலை சென்றடைவதைத் தடுக்க, பராக்கிரம சமுத்திரம் என்ற மாபெரும் நன்னீரேரியை பராக்கிரமபாகு கட்டுவித்தான். பராக்கிரமபாகுவின் காலத்தில் இலங்கைத்தீவு தெற்காசியாவின் தானியக் களஞ்சியமாக திகழ்ந்தது வரலாறு. பராக்கிரமபாகுவின் காலத்தில் இலங்கைத்தீவு தெற்காசியாவின் தானியக் களஞ்சியமாக திகழ்ந்தது வரலாறு. யாழ்ப்பாணத்திற்கு தண்ணீர்ப் பிரச்சினை, ஒரு பெரும் பிரச்சினை. …
-
- 0 replies
- 665 views
-
-
வவுனியாவில் சக்தி மிக்க கைக்குண்டு மீட்பு வவுனியா சாந்தசோலை பகுதியில் இன்று(23) சக்திமிக்க கைக்குண்டு ஒன்று பொலிஸாரினால் மீட்கப்பட்டுள்ளது. வவுனியா சாந்தசோலை 50ஆவது வீட்டுத்திட்டம் பகுதியிலுள்ளவர், தனது காணிக்கு அருகிலுள்ள காணியின் வேலியை துப்பரவு செய்து கொண்டிருந்தபோது பொலித்தீன் பையினால் பொதி செய்யப்பட்ட சக்தி கைக்குண்டு ஒன்று இருப்பதை அவதானித்துள்ளார். இதனையடுத்து பொலிசாருக்கு தகவல் வழங்கப்பட்டு சம்பவ இடத்திற்குச் சென்ற பொலிசார் கைக்குண்டினை பார்வையிட்டதுடன் நீதவானில் அனுமதி பெற்று விஷேட அதிரடிப்படையினரின் வெடிகுண்டு செயலிழக்கும் பிரிவினருக்கு தகவல் வழங்கப்பட்டு செயலிழக்கச் செய்யவுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர். http://w…
-
- 0 replies
- 224 views
-