ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143385 topics in this forum
-
‘கஜபா’க்களின் அதிபதியாகிறார் போர்க்குற்றம்சாட்டப்பட்ட மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா சிறிலங்கா இராணுவத் தலைமையகத்தில் பொது உதவி அதிகாரியாக பணியாற்றும் சர்ச்சைக்குரிய அதிகாரியான மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா கஜபா காலாட்படைப் பிரிவின் தலைமை கட்டளை அதிகாரியாக நியமிக்கப்படவுள்ளார். கஜபா படைப்பிரிவின் தலைமை கட்டளை அதிகாரியாக பணியாற்றும் மேஜர் ஜெனரல் உதய பெரேரா இந்தவாரம் ஓய்வு பெறவுள்ளார். இதையடுத்தே, கஜபா படைப்பிரிவின் புதிய தலைமை கட்டளை அதிகாரி பதவிக்கு மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வாவின் பெயர் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இறுதிக்கட்டப் போரில் 58 ஆவது டிவிசனின் கட்டளை அதிகாரியாக பணியாற்றிய மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா போர்க்குற்றங்களில் ஈடுபட்டவர் என்று மனித உரிமை அ…
-
- 0 replies
- 222 views
-
-
‘ஒப்பந்தம் குறித்து மோடி பேசமாட்டார்’ (எம்.எம்.மின்ஹாஜ்) இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் விஜயத்தின் போது திருகோணமலை எண்ணெய்க் குதங்கள் தொடர்பான எந்தவொரு பேச்சுவார்த்தைகளிலும் ஈடுபடமாட்டார். அத்துடன் எமது நாட் டின் எந்த வொரு துறைமுகத்தையும் நாம் விற்கமாட்டோம். தற்போது திருகோணமலையின் 14 எண்ணெய் குதங்கள் இந்திய நிறுவனத்திற்கு குத்தகைக்கு வழங்கப்படுகின்றன. ஏனைய 10 குதங்கள் இலங்கைக்கும் உரித்தாகின்றன. மீதமுள்ள 74 குதங்கள் பகிர்ந்து கொள்வதற்கான ஒப்பந்தமே கைச்சாத்திடப்படவுள்ளது. மாறாக முழு உரித்துரிமை பெறவும் இந்திய நிறுவனத்திற்கு வழங்க போவதில்லை என அரச தொழில் முயற்சிகள் அம…
-
- 0 replies
- 412 views
-
-
‘189 ஏக்கர் தனியார் காணி 6 வாரங்களில் விடுவிக்கப்படும்’ முல்லைத்தீவு, கேப்பாப்புலவில் 189 ஏக்கர் விஸ்தீரனமான தனியார் காணிகள் நிதிஒதுக்கீடுகள் கிடைத்ததன் பின்னர், 6 வாரங்களில் விடுவிக்கப்படும் என்று, இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் கிரிஷாந்த டி சில்வா உறுதி அளித்துள்ளார். அதேபோல், முள்ளிக்குளம் மக்களுக்குச் சொந்தமான விவசாயக் காணிகளை, தேசிய காணி விடுவிப்பதற்கான நடைமுறையின் கீழ் விடுவிக்க கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் ரவிந்திர குணதிலக்க இணக்கம் தெரிவித்துள்ளார். வடக்கு, கிழக்கு மாகாண காணிப் பிரச்சினை குறித்த கலந்துரையாடல், கொழும்பில் நேற்று (24) இடம்பெற்றது. இந்தக் கூட்டத்தின் போதே மேற்கண்ட முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இந்த வ…
-
- 0 replies
- 321 views
-
-
எரிபொருள் விநியோகத்தில் நாடு முழுவதும் கடும் நெருக்கடி (எம்.எப்.எம்.பஸீர்) திருமலை துறைமுகத்தில் உள்ள 99 எண்ணெய்த் தாங்கிகளை இந்திய நிறுவனத்துக்கு வழங்கக்கூடாது என்பது உள்ளிட்ட 3 கோரிக்கைகளை முன்வைத்து கனிய எண்ணெய் தொழிற்சங்கங்களின் ஒன்றியம் நேற்று முன்னெடுத்த வேலை நிறுத்தம் காரணமாக எரிபொருள் பெற்றுக்கொள்ளும் நடவடிக்கைகளில் நாடளாவிய ரீதியில் பாரிய நெருக்கடி நிலவியது. குறித்த ஒன்றியத்தின் கீழ் வரும் தொழிற்சங்கங்களை பிரதிநிதித்துவம் செய்யும் தொழிலாளர்கள் தொடர்ச்சியாக நேற்று ஆரம்பித்த வேலை நிறுத்தப் போராட்டம் காரணமாக, நாடளாவிய ரீதியில் கடும் எரிபொருள் நெருக்கடி ஏற்பட்டது. …
-
- 0 replies
- 482 views
-
-
காணி விடுவிப்புக்கு கால அவகாசம் தொடர்ந்தும் கோரிய படைத்தரப்பு; நிலைமை தொடரக்கூடாதென விசனம் (ஆர்.ராம்) வடக்கு, கிழக்கில் காணிகளை விடுவிப்பதற்கு படைத்தரப்பு தொடர்ந்தும் கால அவகாசத்தினை கோரியுள்ளது. தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் இல்லாத வகையில் பொதுமக்களின் காணிகளை மீளக் கையளிப்பதற்கு தாம் தயாராகவுள்ளதாகவும் அத்தரப்பு தெரிவித்துள்ளது. இதேவேளை வடக்கு, கிழக்கில் பொதுமக்களின் காணிகளை படையினர் ஆக்கிரமித்துள்ளமை தொடர்பாக பல்வேறு சந்தர்ப்பங்களில் தாம் விரிவாக எடுத்துரைத்துள்ளதாகத் சுட்டிக்காட்டிய வடக்கு கிழக்கு மக்கள் பிரதிநிதிகள் கடந்த காலங்களில் பேச்சுவார்த்தைக…
-
- 0 replies
- 376 views
-
-
அக்கினி சிறகுகளிடம் ரி.ஐ.டி விசாரணை? அக்கினிச் சிறகுகள் அமைப்பைச் சேர்ந்த சிலரிடம், பயங்கரவாத புலனாய்வு பிரிவினர் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர் என்று தகவல் வெளியாகியுள்ளது. ”நொக் அவுட்” முறையிலான கால்பந்து சுற்றுப் போட்டியை, அக்கினிச் சிறகுகள் அமைப்பு, கிளிநொச்சியில் நடத்திவருகிறது. இதில், வடக்கு, கிழக்கிலுள்ள விளையாட்டு சங்கங்கள் பங்குபற்றுகின்றன. முள்ளிவாய்க்கால் ஞாபகார்த்த தினத்தை அடிப்படையாக கொண்டே, இந்தப் போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன. மே18 ஆம் திகதி, முள்ளிவாய்க்கால் ஞாபகார்த்த தினமாகும். அக்கினிச் சிறகுகள் அமைப்பின் தலைவர் செல்வநாயகம் ஆனந்தவர்மன், வவுனியா பயங்கரவ…
-
- 0 replies
- 359 views
-
-
இராணுவத்தினரது ஏற்பாட்டில் வடமாகாணக் கல்வி அமைச்சருக்கு எதிராக சிவில் பாதுகாப்புப் படையினரால் (சி.எஸ்.டி) நாளை கிளிநொச்சி டிப்போச் சந்தியில் போராட்டம் இடம்பெறவுள்ளதாகத் தகவல்கள் கசிந்துள்ளன. வடமாகாணத்திலுள்ள முன்பள்ளி ஆசிரியர்கள் அனைவரையும் வடமாகாணக் கல்வி அமைச்சின் கீழ் கொண்டு வருவதற்கான ஏற்பாடுகளை வடமாகாணக் கல்வி அமைச்சால் மேற்கொண்டு அதற்கான நியதிச் சட்டத்தையும் வடமாகாணக் கல்வி அமைச்சர் த.குருகுலராசா முன்னெடுத்துள்ள நிலையில், இராணுவக் கட்டமைப்பின் கீழ் இராணுவத்தால் நிர்வகிக்கப்படும் சிவில் பாதுகாப்புப் படை முன்பள்ளி ஆசிரியைகளை வடக்கு மாகாணக் கல்வி அமைச்சின் நிர்வாத்தின் கீழ் கொண்டுவருவதை எதிர்த்தும் அவர்களைத் தொடர்ந்தும் இராணுவக் கட்டமைப்பின் கீழ் வை…
-
- 2 replies
- 446 views
-
-
நமச்சிவாயவுக்கும் சிவகொடிக்கும் தடை சிவகொடியை ஏந்தியவாறு “ஓம் நமச்சிவாய”, “ஓம் நமச்சிவாய” என்ற நாமத்தை உச்சரித்துகொண்டும் சிவனொளிபாதமலைக்கு யாத்திரைசென்ற, யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த யாத்திரிகள் சிலரை, இனந்தெரியாத சிலர் அச்சுறுத்தியுள்ளதாக, இலங்கை மலையக இந்து குருமார் ஒன்றியத்தின் பொதுச்செயலாளர் சிவஸ்ரீ வேலு சுரேஷ்வர தெரிவித்தார். “ஓம் நமச்சிவாய” என, உச்சரிக்ககூடாது என்றும், சிவகொடியை ஏந்திச்செல்லக் கூடாது என்றும் அந்த இனந்தெரிதோர், அச்சுறுத்தியதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இது குறித்து, ஹட்டன்-குடாஓயா சர்வோதய கேட்போர் கூடத்தில், ஊடகவியலாளர் சந்திப்பு, நேற்று (23) நடைபெற்றது. அங்கு அவர் தொடர்ந்து கருத்துதெ…
-
- 2 replies
- 480 views
-
-
ஊர்காவற்துறையில் முன்னாள் காவல்துறை உத்தியோகஸ்தர் மயக்க மருந்து விசிறி பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ய முயற்சி – ஊர்காவற்துறை பகுதியில் முன்னாள் காவல்துறை உத்தியோகஸ்தர் ஒருவர் , வீட்டில் தனித்திருந்த பெண்ணை மயக்க மருந்து விசிறி பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற வேளை ஊர் மக்களால் மடக்கி பிடிக்கப்பட்டு, நயப்புடைக்கப்பட்ட பின்னர் காவல்துறையினரிடம் ஒப்படைக்கபட்டார். குறித்த சந்தேக நபர் மட்டக்களப்பு களுவாஞ்சிகுடி பகுதியை சேர்ந்த 35 வயதான நபர் எனவும், தற்போது ஊர்காவற்துறை பகுதியில் தங்கி இருந்து கட்டட நிர்மான பணியில் ஈடுபட்டு வருபவர் எனவும் , குறித்த நபர் காவல்துறை சேவையில் இருந்து இடை நிறுத்தப்பட்டவர் எனவும் , ஊர்காவற்துறை …
-
- 1 reply
- 432 views
-
-
கடற்படை வசமுள்ள காணி : இராஜாங்க அமைச்சர் அதிரடி கருத்து (ஆர்.யசி) கடற்படை வசமுள்ள காணிகளை விடுவிப்பது சாத்தியமற்ற ஒன்றாகும். உயர் பாதுகாப்பு வலைய காணிகளை தொடந்தும் பாதுகாப்பு படைகள் விடுவிக்காது என்பது பாதுகாப்பு அமைச்சின் தீர்மானம் என பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜயவர்தன வடமாகாண ஐந்து மாவட்ட மக்கள் பிரதிநிதிகளுடனான சந்திப்பின் போது தெரிவித்துள்ளார். வடக்கு கிழக்கு பகுதிகளில் தனியார் நிலங்களில் உள்ள இராணுவ காணிகளை விரைவில் விடுவிக்க பாதுகாப்பு தரப்பு தீவிர நடவடிக்கை எடுக்கப்படும். அடுத்த இரண்டு வாரகாலத்தில இறுதிக்கட்ட பேச்சுவார்த்தைகளை முன்னெடுப்பதுடன் வடக்கு கிழக்கில் காணி கண்காணிப்பு நடவடிக்கைகளையும் முன்னெடுக்…
-
- 1 reply
- 433 views
-
-
சிரேஷ்ட ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்கவின் கொலை தொடர்பிலான விசாரணைகளுக்கு என்ன நடந்தது?? உண்மையான சந்தேகநபர்களை மறைத்து வேறு நபர்கள் மீது குற்றத்தை சுமத்தும் முயற்சி உள்ளதா? இந்த கொலை தொடர்பில் நியூஸ்பெஸ்ட் இன்று மேலும் பல தகவல்களை வெளிகொண்டுவருகிறது..
-
- 0 replies
- 179 views
-
-
சிவில் பாதுகாப்பு திணைக்களப் பண்ணைகளை வடமாகாண சபை கோருவதற்கு எதிர்ப்பு கிளிநொச்சியில் உள்ள சிவில் பாதுகாப்புத் திணைக்களத்தின் பண்ணைகளை, அந்தத் திணைக்களத்திடமிருந்து பறிக்க வேண்டாம் எனக் கோரி கிளிநொச்சியில் முன்னாள் போராளிகளை அதிகமாகக் கொண்ட சிவில் பாதுகாப்புப் படைப்பிரிவினர் ஆர்ப்பாட்டப் பேரணி ஒன்றை நடத்தியுள்ளனர். ராணுவ நிர்வாகத்தின் கீழ் உள்ள அரசு பண்ணைகளை வடமாகாண விவசாயத் திணைக்களத்திடம் கையளிக்க வேண்டும் என்றும், சிவில் பாதுகாப்புத் திணைக்களத்தின் கீழ் இயங்கி வருகின்ற முன்பள்ளிகளை வடமாகாண கல்வி அமைச்சுடன் இணைத்து நிர்வகிக்க வேண்டும் என்றும், ராணுவத்தின் வசமுள்ள பொதுமக்களின் காணிகளை விடுவிப்பது தொடர்பில், பாதுகாப்பு அமைச்சின்…
-
- 0 replies
- 262 views
-
-
சக்தி டிவி செய்திகள் 24th April 2017, 8PM
-
- 0 replies
- 251 views
-
-
இலங்கை தேசிய விமான சேவைக்குப் பாராட்டு இலங்கையானது, அதிகரித்து வரும் சுற்றுலாப் பயணிகளிடமிருந்து கூடுதல் வருமானத்தை ஈட்டி வருகின்றது என்று சுட்டிக்காட்டியுள்ள சவூதி அரேபிய ஊடகமொன்று, இலங்கை தேசிய விமான சேவையானது, மத்திய கிழக்கிலிருந்து மேலும் ஊக்குவிப்பைப் பெற முயற்சிக்கின்றது என்றும் தெரிவித்துள்ளது. இன்று 24ஆம் திகதியிலிருந்து எதிர்வரும் 27ஆம் திகதி வரை, இந்த விமான சேவைக் கம்பனி, இந்தப் பிராந்தியத்தில் புதிதாக சேவைகளை நடத்தவுள்ளது. டுபாயிலுள்ள அரேபியன் ட்ரவல் மார்கெட்டில், ஏற்கெனவே ஸ்ரீ லங்கா எயார்லைன்ஸ் இருப்பது இதற்கு மிக வசதியாக இருக்கும் என்றும் சுட்டிக்காட்டப்பட்டு…
-
- 0 replies
- 329 views
-
-
‘சம்பந்தன் செல்லும் பாதையில் கண்களை மூடிக்கொண்டு செல்வோம்’ -எஸ்.நிதர்ஷன் “ஈழத் தமிழ் அரசியலில் எத்தகைய முரண்பாடுகள், மாற்றங்கள் ஏற்பட்டாலும் அரசியலமைப்பு முயற்சிகள் முடிவுறும் வரை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பையும் தலைவர் சம்பந்தனையும் விட்டு விலகமாட்டோம்.அதுவரை அவர் செல்லும் பாதையில் கண்களை முடிக்கொண்டு செல்வோம்” என்று, கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும் புளொட் அமைப்பின் தலைவருமான தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்துள்ளார். “தடுமாறும் தமிழ்த் தலைவர்களால் தளர்வடைகின்றார்களா தமிழ் மக்கள்? அடுத்து என்ன?” என்ற தலைப்பில், கருத்தாய்வு நிலை கருத்துப் பகிர்வு, மன்னார் மாவட்ட பொது அமைப்புக்களின் ஒன்றியத்தின் ஏற்பா…
-
- 2 replies
- 560 views
-
-
கிளிநொச்சியில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் உதைப்பந்தாட்டப் போட்டி -மாவை சேனாதிராஜா முதன்மை விருந்தினர். கிளிநொச்சி உதயதாரகை விளையாட்டு மைதானத்தில் பாராளுமன்ற உறுப்பினரும் இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவருமான மாவை சேனாதிராஜா முதன்மை விருந்தினராக கலந்துகொண்டு முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் உதைப்பந்தாட்ட போட்டியை நேற்று சனிக்கிழமை சம்பிரதாயபூர்வமாக ஆரம்பித்து வைத்துள்ளார். அக்கினிச் சிறகுகள் அமைப்பின் ஏற்பாட்டில் கிளிநொச்சி உதைப்பந்தாட்ட சம்மேளனத்தின் தலைமையில் வடக்கு கிழக்கு இணைந்த மாபெரும் உதைப்பந்தாட்டச் சுற்றுப்போட்டியாக வடக்கில் கிழக்கில் உள்ள பல மாவட்டங்களில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. …
-
- 3 replies
- 477 views
-
-
மக்களே அவதானம் : பாதுகாத்துக்கொள்ள தற்காப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளுங்கள் ! மே மாதம் வரை கடும் வெப்பத்துடன் கூடிய காலநிலை தொடரவுள்ளதால் பொதுமக்கள் உஷ்ணத்திலிருந்து தம்மை பாதுகாத்துக்கொள்ள அவசியமான தற்காப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் வானிலை அவதான நிலையம் கேட்டுக்கொண்டுள்ளது. சீரற்ற காலநிலை காரணமாக கொழும்பு உள்ளிட்ட நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும் கடும் வெப்பநிலை நிலவிவருவதாக வானிலை அவதான நிலையம் மேலும் தெரிவித்துள்ளது. வெப்பநிலை அதிகரிப்புடன் வைரஸ் தாக்கமும் அதிகரித்திருப்பதனால் சிறுவர்கள் மற்றும் கர்ப்பிணிகள் விரைவில் நோய்த்தாக்கங்களுக்கு உள்ளாக நேரிடுமென்றும் வைத்தியர்கள் அறிவுறுத்தியுள்ளனர். அதிக வெப்பநிலைக் காரணம…
-
- 0 replies
- 407 views
-
-
சர்வதேச நீதிமன்றில் தண்டிக்கும் உரிமையை வழங்கும் சட்டமூலமத்தை கொண்டுவருவதற்கு கடும் முயற்சி : மகிந்த குற்றச்சாட்டு (ஆர்.யசி) யுத்தத்தை முடிவுக்கு கொண்டுவந்த நபர்களை யுத்த குற்றவாளிகள் என்ற பெயரில் சர்வதேச நீதிமன்றத்தில் தண்டிக்கும் உரிமையை வழங்கும் சட்டமூலம் ஒன்றை பாராளுமன்றத்தில் கொண்டுவர அரசாங்கம் முயற்சித்து வருகின்றது. புலம்பெயர் அமைப்புகளினதும் சர்வதேச நாடுகளின் தேவைக்கு அமைய எம்மை தண்டிக்க முயற்சிக்கப்படுகின்றது என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். காணாமல்போனோர் தொடர்பிலான காரியாலையம் உருவாக்கப்பட்டமையும் எமக்கு பாரிய அச்சுறுத்தல் எனவும் அவர் சுட்டிக் காட்டினார். கம்பகா மாவட்டத்தில் இடம்பெற்…
-
- 1 reply
- 234 views
-
-
திருமலை எண்ணெய் குதங்களை இந்தியாவுக்கு வழங்குவது குறித்து இறுதி தீர்மானம் இல்லை பிரதமரின் இந்திய விஜயத்தின்போது ஒப்பந்தம் கைச்சாத்திடுவதில் சந்தேகம் என்கிறார் அமைச்சர் சந்திம (க.கமலநாதன்) திருகோணமலை எண்ணெய்க் குதங்கள் பற்றிய பேச்சுவார்த்தைகள் இன்னும் இறுதிக் கட்டத் தினை எட்டவில்லை. எனவே பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் இந்திய விஜயத்தின் போது மேற்படி விவகாரம் குறித்த ஒப்பந்தம் கைச்சாத்திடப்படுவது சந்தேகத்திற்கிடமானதாகும் என பெற்றோலிய வளத்துறை அமைச்சர் சந்திம வீரக்கொடி தெரிவித்தார். எவ்வாறாயினும் ஒப்பந்தம் கைசாத்திடப்படும்போது 10 எண்ணெய் குதங்களை முழுமையாக இலங்கை ப…
-
- 0 replies
- 552 views
-
-
‘காணாமல் போனோர் தொடர்பில் விசாரணை போதாது’ -பொன்ஆனந்தம், வடமலை ராஜ்குமார் “காணாமல் போனோர் தொடர்பாக அரசாங்கம் போதுமான விசாரணைகளை நடத்த வேண்டும்” எனத் தெரிவித்த வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், “இந்த விடயம் தொடர்பாக இதுவரையில் போதுமான விசாரணை நடத்தப்பட்டதாகத் தெரியவில்லை” எனவும் கூறினார். “காணாமல் போனோரின் பிரச்சினை இலகுவாகத் தீர்க்கமுடியாத பிரச்சினையாக இருந்து வருகின்றது இதற்கான நடவடிக்கையை அரசாங்கம் எடுக்கவேண்டும்” எனவும் அவர் கோரினார். தமிழ் மக்கள் பேரவையின் கூட்டம், திருகோணமலை விலா விடுதியில் நேற்று (23) நடைபெற்றது. இதில் முன்னாள் நாடாளுமன்ற உ…
-
- 1 reply
- 298 views
-
-
மட்டக்களப்பில் 57.331 ஏக்கர் காணி விடுவிக்கப்படவில்லை – சீ.யோகேஸ்வரன் மட்டக்களப்பு, மாவட்டத்தில் பாதுகாப்புத் தரப்பினரால் சுவீகரிக்கப்பட்ட 77 குடும்பங்களுக்குச் சொந்தமான 57.331 ஏக்கர் காணி இதுவரையில் விடுவிக்கப்படாது உள்ளதென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன் தெரிவித்துள்ளார். கிரான் பிரதேச மக்களுடனான சந்திப்பின் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். வாகரை, வாழைச்சேனை, கிரான், ஏறாவூர், ஆரையம்பதி, மட்டக்களப்பு உள்ளிட்ட பிரதேச செயலாளர் பிரிவுகளில் பாதுகாப்புத் தரப்பினரால் சுவீகரிக்கப்பட்ட பொதுமக்களுக்குச் சொந்தமான காணிகள் இன்னும் விடுவிக்கப்படவில்லை என அவர் தெரிவித்துள்ளார். …
-
- 0 replies
- 583 views
-
-
கொழும்பு துறைமுக நகரத்துக்கு மேலாக ஜனாதிபதி கூட உலங்கு வானூர்தியில் பறக்க முடியாத சூழ்நிலை தற்போது காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது. அந்தவகையில், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவினால், பாதகமான முறையில் கொழும்பு துறைமுக நகர உடன்பாடு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். இருப்பினும், இவ்வாறு எந்தவொரு சூழ்நிலையிலும் நாட்டுக்கு எதிரான உடன்பாட்டில் கையெழுத்திடமாட்டேன் என மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். கொழும்பில் நேற்றைய தினம் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். அவர் மேலும் தெரிவிக்கையில், “சீனா மற்றும் இந்தியாவுடன் செய்து கொள்ளத் திட்டமிடப்பட்…
-
- 5 replies
- 406 views
-
-
வவுனியா பெற்றோல் நிலையங்களில் பெற்றோலுக்கு தட்டுப்பாடு! : அலைமோதும் மக்கள் கூட்டம்! (படங்கள்) வவுனியாவில் அனைத்து எரிபொருள் நிரப்பு நிலையங்களிலும் மக்கள் கூட்டம் நிறைந்து காணப்படுகின்றது. நேற்று நள்ளிரவு முதல் பெற்றோலிய தொழிற்சங்க ஒன்றியம் பணிப்பகிஷ்கரிப்பு போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து வவுனியாவில் உள்ள அனைத்து எரிபொருள் நிரப்பு நிலையங்களிலும் மக்கள் கூட்டம் அதிகளவாக காணப்படுகின்றது. இந்நிலையில் பொரும்பாலான எரிபொருள் நிரப்பு நிலையங்களில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகவும் எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார். http://www.virakesari.lk/
-
- 0 replies
- 322 views
-
-
இலங்கைக்கு ஜீ.எஸ்.பி பிளஸ் வரிச் சலுகையை வழங்க ஜரோப்பிய பாராளுமன்றில் எதிர்ப்பு இலங்கைக்கு ஜீ.எஸ்.பி பிளஸ் வரிச் சலுகையை வழங்க எதிர்ப்புத் தெரிவித்து ஜரோப்பிய பாராளுமன்றத்தில் யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது. ஐரோப்பிய ஒன்றியத்தின் 50 பேரைக் கொண்ட குழு ஒன்றினால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள இந்த தீர்மானத்தில் இலங்கையின் நல்லிணக்க முனைப்புக்கள் போதியளவில் இல்லை என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. ஜீ.எஸ்.பி பிளஸ் வரிச் சலுகை வழங்குவதற்கான நிபந்தனைகளை இலங்கை அரசாங்கம் உரிய முறையில் பூர்த்தி செய்யவில்லை எனவும் இலங்கைக்கு இந்த சலுகைத் திட்டத்தை வழங்கக்கூடாது எனக் கோரியே குறித்த யோசனை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்காதிருத்தல், மனித உரிமை…
-
- 0 replies
- 219 views
-
-
அரசாங்கம் வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும் – ஜெர்மனி 2015ம் ஆண்டில் அளித்த வாக்குறுதிகளை அரசாங்கம் நிறைவேற்ற வேண்டுமென ஜெர்மனி வலியுறுத்தியுள்ளது . 2015ம் ஆண்டில் சிறிசேன – விக்ரமசிங்க அரசாங்கத்தினால் அளிக்கப்பட்ட வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட வேண்டுமென தெரிவித்துள்ளது. இலங்கைக்கான ஜெர்மன் தூதுவர் ஜோன் றோட் ( Jorn Rohde ) இதனைத் தெரிவித்துள்ளார். அளிக்கப்பட்ட வாக்குறுதிகளை நிறைவேற்றும் அரசியல் முனைப்பு மிகவும் இன்றியமையாதது என சுட்டிக்காட்டியுள்ள அவர் மாற்றங்களை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென வலிறுயுத்தியுள்ளார். மேலும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் அமர்வுகளில் நிறைவேற்றப்பட்ட தீர்மானப் பரிந்துரைகள் அமுல்பட…
-
- 0 replies
- 349 views
-