Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. ஆறாவது நாளாகவும் தொடரும் கேப்பாபிலவு மக்களின் காணிவிடுவிப்புக்கான போராட்டம் முல்லைத்தீவு கேப்பாபுலவு பிலவுக்குடியிருப்பு மக்களின் காணிவிடுவிப்புக்கான போராட்டம் ஆறாவது நாளாக இன்றையதினமும் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டுள்ளது. 84 குடும்பங்களுக்கு சொந்தமான காணிகளை விடுவிக்குமாறு வலியுறுத்தியே இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் நேற்றையதினம் கேப்பாபுலவிற்கு விஜயம் மேற்கொண்ட முதலமைச்சர் விக்கி மக்களின் போராட்டம் நியாயமா னது எனவும் பூரண ஒத்துழைப்பு வழங்கப்படும் எனவும் தெரிவித்திருந்தார். இந்த நிலையில் இன்றும் பிலவுக்குடியிருப்பு மக்கள் போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர். …

  2. கிழக்கிலும் விரைவில் போராட்டம் நடைபெறும் வடக்கில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் மேற்கொண்ட தொடர் உண்ணாவிரத போராட்டத்தை கிழக்கிலும் வெகுவிரைவில் மேற்கொள்ள தீர்மானித்துள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாளேந்திரன் அறிவித்துள்ளார். மட்டக்களப்பு ஏறாவூர் பிரதேசத்தில் மாஞ்சோலை கலாசார மண்டப திறப்பு விழாவில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். அங்கு அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில், காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பில் பிரதமரின் கருத்து வேடிக்கைக்குரியது, தமிழர்களின் மத்தியில் பிரதமரின் கூற்றை ஒரு கேலிக் கூற்றாகவே பார்க்கின்றார்கள். வட, கிழக்கில் தங்களின் உறவுகளைத் தேடி நடாத்தும் போராட்டங்களை தென்னிலங்கையில் …

  3. மட்டக்களப்பில் காணி மற்றும் வீடு இல்லாதவர்களின் பிரச்சினைகளை தீர்ப்பதற்கான நடவடிக்கைகள் இடம்பெற்று வருவதாக கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் தெரிவித்தார். குறித்த விடயத்தை முதலமைச்சர் இன்று தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில், குறித்த பிரச்சினையை தீர்ப்பதற்கான ஒரு கட்டமாக கடந்த முதலாம் திகதி ஜனாதிபதியின் ஏறாவூர் விஜயத்தில் 1,762 பேருக்கு காணி உறுதிப்பத்திரங்கள் வழங்கப்பட்டுள்ளது. இதில் சிங்களம், முஸ்லிம் மற்றும் தமிழ் என மூவின மக்களுக்கு வழங்கி வைக்கப்பட்டதாகவும் கூறினார். மேலும், வீடுகள் இன்றி பல ஆண்டு காலமாக சிரமங்களை எதிர்நோக்கி வந்த 962 பேருக்கான புதிய வீடுகள் வழங்கி வைக்கப்பட்டதாகவும் ஹா…

  4. 2015ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் மஹிந்த ராஜபக்சவை தோல்வியடைய செய்தது குறித்து குற்றம் சுமத்தப்பட்டவர்களுக்குள் கோத்தபாய ராஜபக்ச முன்னணி வகிப்பதாக கூறப்படுகின்றது. பொதுபல சேனாவுடன் இணைந்து முஸ்லிம் எதிர்ப்பு நடவடிக்கை ஒன்றை மேற்கொண்ட மஹிந்த ராஜபக்சவுக்கு முஸ்லிம் மக்களின் ஆதரவு இல்லாமல் செய்ததாக கோத்தபாய மீது குற்றம் சுமத்தப்பட்டது. எனினும் கோத்தபாய ராஜபக்சவிடம் அவ்வாறான முஸ்லிம் எதிர்ப்பு ஒன்றை காண்பதற்கு இல்லை என தெரியவந்துள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று இன்று தகவல் வெளியிட்டுள்ளது. கோத்தபாய ராஜபக்ச, பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சராக செயற்பட்ட காலப்பகுதியில் முஸ்லிம் கோடீஸ்வரர்களுக்காக மேற்கொண்ட செயல்கள் தற்போது வெளியாகியுள்ளது.…

  5. காலிமுகத்திடலில்... இலங்கையில் 69ஆவது வருட சுதந்திரதின நிகழ்வு, ஜனாதிபதி மைத்திபால சிறிசேன தலைமையில் கொழும்பு, காலிமுகத்திடலில் இன்று (04) காலை இடம்பெற்றது. 'தேசிய ஒற்றுமை' எனும் தொனிப்பொருளில் நடைபெற்ற இந்நிகழ்வில், பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, சபாநாயகர் கரு ஜயசூரிய, பிரதம நீதியரசர் கனகசபாபதி ஸ்ரீபவன், பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ. சுமந்திரன், அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்கள், பிரதியமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாகாண ஆளுநர்கள், முதலமைச்சர்கள், உள்நாட்டு, வெளிநாட்டு தூதுவர்கள், இராஜதந்திரிகள் உட்பட முக்கியஸ்தர்கள் பலர் கலந்துகொண்டனர். (…

  6. நிலையான அபிவிருத்திச் சட்டமூலத்தை வடக்கு மாகாணசபை நிராகரித்தது ஏன்?அமைச்சர் ஐங்கரநேசன் விளக்கம் நிலையான அபிவிருத்திச் சட்டம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்படுவதற்கு காரணம் வடக்கு மாகாண சபையின் வேலைகளை மத்திய அரசாங்கம் தங்கள் வசப்படுத்தவே என வடக்கு மாகாண விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன் தெரிவிதுள்ளார். இன்றையதினம் யாழ் வீரசிங்கம் மண்டபத்தில் நடைபெற்ற யாழ் மாவட்ட பார ஊர்திகள் சங்கத்தின் சாதனையாளர் கௌரவிப்பு விழாவில் பிரதம விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றுகையில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.அவர் அங்கு மேலும் உரையாற்றுகையில் எமது அமைச்சுக்கு வரும் முறைப்பாடுகளில் அதிகமானவை கூட்டுறவு சம்பந்தமான முறைப்பாடு…

  7. புனர்வாழ்வு விடுதலை புலி உறுப்பினர்களுக்கு சுயதொழில் வாய்ப்பு : பத்தேகம சமித்த தேரர் புனர்வாழ்வு பெற்று விடுதலை செய்யப்பட்ட விடுதலை புலி உறுப்பினர்களுக்கு சுயதொழில் வாய்ப்புக்களை ஏற்படுத்திக்கொடுக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவேண்டும். இல்லாவிட்டால் அவர்கள் மீண்டும் பிரிவினைவாத குழுக்களுடன் இணைந்துகொள்வார்கள் என தென்மாகாண சபை உறுப்பினர் பத்தேகம சமித்த தேரர் தெரிவித்தார். கொழும்பில் நேற்று நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். http://www.virakesari.lk/article/16250

  8. வாள்வெட்டுடன் தொடர்புடைய மேலும் 11 பேர் கைது -செல்வநாயகம் கபிலன் யாழ்ப்பாணம், கோப்பாய் பகுதிகளில் இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவங்களுடன் தொடர்புடைய மேலும், 11 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக யாழ்ப்பாணம் பொலிஸார் தெரிவித்தனர். கல்வியங்காடு, கோப்பாய், அளவெட்டி, சுன்னாகம், உரும்பிராய் பகுதிகளில் இடம்பெற்ற திருட்டு மற்றும் வாள்வெட்டு சம்பவங்களுடன் தொடர்புடையவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் இருவர், வாள் மற்றும் கத்திகளை செய்து கொடுத்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வரும் பொலிஸார், வாக்குமூலத்தின் அடிப்படையில் ஏனைய சந்தேக நபர்களை கைது செய்ய நடவடிக்க…

  9. இந்த நாட்டை அந்நியரிடமிருந்து மீட்டெடுப்பதற்காக தமிழ், சிங்கள மற்றும் முஸ்லிம் என்ற பேதமின்றி தேசப்பற்றுள்ள நமது முன்னோர்கள் இணைந்து போராடிப்பெற்றுக் கொண்ட சுதந்திரம் இது என அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். முல்லைத்தீவில், அரசாங்க அதிபர் தலைமையில் இன்று நடைபெற்ற சுதந்திர தினக் கொண்டாட்டத்தில் பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டு, அங்கு உரையாற்றிய போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார். கடந்த கால யுத்தத்தின் பின்னர் 12,000 புலிகள் சமாதானத்தை நோக்கி வந்து சமூக வாழ்க்கையில் இணைந்து கொண்டனர். அவர்கள் புனர்வாழ்வளிக்கப்பட்டு, இப்போது சுமூகமாக வாழ்கின்ற போதும் வாழ்வாதாரங்கள் இல்லாதவர்களாக, வளங்கள் இல்லாதவர்களாக அத்தியாவசியமான விடயங்களை நிறைவே…

    • 2 replies
    • 352 views
  10. மாலம்பே தனியார் மருத்துவ கல்லுரி ஓர் சொத்தாகும் – ஞானசார தேரர் மாலம்பே தனியார் மருத்துவ கல்லூரி ஓர் சொத்தாகும் என பொதுபல சேனா இயக்கத்தின் பொதுச் செயலாளர் கலகொடத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார். இவ்வாறு தனியார் மருத்துவ கல்லூரிகள் அமைப்பதில் எவ்வித தவறும் கிடையாது என குறிப்பிட்டுள்ள அவர் தனியார் மருத்துவ கல்லூரிகளை அமைப்பதன் மூலம் இலங்கை மாணவர்கள் வெளிநாடுகளில் கல்விக்காக செலவிடும் பணம் சேமிக்கப்படுவதாகத் தெரிவித்துள்ளார். அனைவருக்கும் அரச பல்கலைக்கழகங்களில் கல்வி பயில முடிவதில்லை எனவும் ஞானசார தேரர் தெரிவித்துள்ளார். http://globaltamilnews.net/archives/16385

  11. சுமந்திரன் கொலை முயற்சி குறித்த விசாரணைகளுக்கு உதவத் தயார் – நோர்வே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் கொலை முயற்சி குறித்த விசாரணைகளுக்கு உதவத் தயார் என நோர்வே அரசாங்கம் அறிவித்துள்ளது. இலங்கைகான நோர்வே தூதரகம் இது பற்றிய தகவல்களை வெளியிட்டுள்ளது. தமிழ் புலம்பெயர் சக்திகள் சுமந்திரனை கொலை செய்ய முயற்சித்துள்ளதாக வெளியான தகவல்கள் தொடர்பில் இவ்வாறு கருத்து வெளியிட்டுள்ளது. நோர்வேவை மையமாகக் கொண்டு இயங்கி வரும் புலம்பெயர் தமிழ் தரப்பே சுமந்திரனை படுகொலை செய்ய முயற்சித்தது என அமைச்சர் சம்பிக்க ரணவக்க அண்மையில் கூறியிருந்தார். உத்தியோகபூர்வ அடிப்படையில் கோரிக்கை விடுக்கப்பட்டால் சுமந்திரன் கொல…

  12. மட்டக்களப்பில் ஊடகவியலாளர்கள் பாரிய ஆர்ப்பாட்டம் மட்டக்களப்பு நகரில் தமிழ் சங்கள முஸ்லிம் ஊடகவியலாளர்கள் இன்று காலை பாரிய ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தமிழ் தேசியக்கூட்டமைப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான யோகேஸ்வரன், எஸ்.வியாழேந்திரன், என்.சிறீநேசன் உட்பட கிழக்கு மாகாண சபை அமைச்சர்கள் உறுப்பினர்கள் பொது அமைப்புக்களின் பிரதிநிதிகளும் பங்கு கொண்டனர். ஊடகப்பணியில் ஈடுபட்டு படுகொலை செய்யப்பட்ட லசந்த விக்ரமசிங்க, நசேன், நிர்மலராஜன, சிவராம் உட்பட பலரின் உருவப்படங்களையும் இவர்கள் ஏந்தியிருந்தனர். 2006ஆம் ஆண்டு திருமலையில் ஜனவரி 24 ஆம் திகதி சுட்டுக் கொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் எஸ்.சுகிர்தராஜனின் படுகொலைக்கு இதுவரையில் தீர்…

  13. சம்பந்தன் சமூகமளிக்காமைக்கு இதுதான் காரணம் -ஏ.பி.மதன் கொழும்பு, காலிமுகத்திடலில் இன்று இடம்பெற்ற, 69ஆவது வருட சுதந்திரதின நிகழ்வில், எதிர்க்கட்சித் தலைவர் ஆர். சம்பந்தன் கலந்துகொள்ளவில்லை. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் கூட்டமைப்பின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ. சுமந்திரன் மட்டுமே கலந்து கொண்டார். 'திருகோணமலையில் உள்ள ஆலயமொன்றில் இடம்பெறும் கும்பாபிஷேக நிகழ்வில் கலந்துக்கொள்ளச் சென்றுள்ளமையால், எதிர்க்கட்சித் தலைவரால் சுதந்திர தின நிகழ்வில் கலந்துகொள்ள முடியவில்லை' என கூட்டமைப்பின் பேச்சாளரான சுமந்திரன் எம்.பி, தமிழ்மிரருக்கு தெரிவித்தார். இது தொடர்பில், விழா ஏற்பாட்டு குழுவுக்கு, எதிர்க்கட்ச…

  14. கொடும்பாவி எரிப்பு தவறு: அடைக்கலநாதன் க.அகரன் வட மாகாண போக்குவரத்து அமைச்சர் டெனிஸ்வரனின் கொடும்பாவி எரிக்கப்பட்டமை மனவருத்தத்தை தருகின்றது என்று தெரிவித்துள்ள வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் குழுக்களின் பிரதி தலைவருமான செல்வம் அடைக்கலநாதன், இதனை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் தெரிவித்துள்ளார். இலங்கை போக்குவரத்து சபை உத்தியோகத்தர்களால், வட மாகாணத்தின் பல இடங்களிலும் வட மாகாண அமைச்சர் டெனிஸ்வரனின் கொடும்பாவி எரிக்கப்பட்டமை தொடர்பாக விடுத்துள்ள அறிக்கையிலேயே, அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இவ் அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளதாவது, 'கருத்துக்களை கருத்துக்களால் பேசி தீர்த்துக்கொள்ள சந்தர்ப்பங்களை ஏ…

  15. வலிவடக்கு ஊறணியில் 500மீற்றர் நீளமான கரையோரப்பகுதி மக்களிடம் கையளிப்பு யாழ். வலிகாமம் வடக்கு உயர்பாதுகாப்பு வலயத்திற்குட்பட்டிருந்த ஊறணி பகுதியில் அண்மையில் மக்களிடம் வழங்கப்பட்ட கரையோரப் பகுதியில் மேலும் 500 மீற்றர் நீளமான கரையோரப்பகுதி நேற்று மக்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது. கடந்த தை மாதம் 14ம் திகதி ஊறணி பகுதியில் கரையோரமான 2 கிலோ மீற்றர் நீளமான பகுதியும், தரையில் 2 ஏக்கர் நிலமும் மக்களுடைய கோரிக்கைக்கு இணங்க மக்களிடம் மீள கையளிக்கப்பட்டிருந்தது. மேற்படி ஊறணி பகுதியில் கடந்த வருடம் இறுதியில் மக்கள் மீள்குடியேற்றப்பட்டபோதும், மக்களுடைய அடிப்படை வாழ்வாதா ரத்திற்கான கடற்றொழிலை செய்வதற்கான கடற்பகுதி வி…

  16. வடமாகாண சபையால் போர்க்குற்ற விசாரணைகளை நடாத்த முடியுமா? நிலாந்தன்:- ‘பன்னாட்டு சட்ட நிபுணர்களையும் நீதிபதிகளையும் வரவழைத்து வட மாகாண சபையே போர்க்குற்ற விசாரணையை நடாத்த முடியுமா? என்று ஆராயுங்கள். சட்ட ஏற்பாடுகள் அதற்கு இடம் கொடுக்குமா? என்பதைக் கண்டறியுங்கள். எமது மக்கள் நீதி பெற வேண்டுமானால் இதுவே ஒரே வழி’ இவ்வாறு கூறியிருக்கிறார் வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன். மன்னார் வட்டக்கண்டல் படுகொலை நினைவு நிகழ்வில் கடந்த திங்கட்கிழமை உரையாற்றிய பொழுது அவர் மேற்கண்டவாறு கூறி இருக்கிறார். 32 ஆண்டுகளுக்கு முன் மன்னாரில் வட்டக்கண்டலில் 76 பொதுமக்கள் கொத்தாகப் படுகொலை செய்யப்பட்டார்கள். வடமாகாண சபையானது இனப்படுகொலைத் தீர்மானத்தை நிறைவேற்றிய …

  17. யாழ்ப்பாணத்தில் மனித சங்கிலி போராட்டம் நடத்தப்பட உள்ளது யாழ்ப்பாணத்தில் மனித சங்கிலி போராட்டம் நடத்தப்பட உள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வட மாகாணசபை உறுப்பினர் எம்.கே. சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாண மாவட்டச் செயலகத்தை சுற்றி மனித சங்கிலிப் போராட்டமொன்று நடத்தப்படும் அவர் குறிப்பிட்டுள்ளார். இராணுவ நோக்கங்களுக்காக யாழ்ப்பாணத்தின் அதிகளவு காணிகள் மீட்கப்படுவதற்கு இவ்வாறு எதிர்ப்பு வெளியிடப்பட உள்ளதாகத் தெரிவித்துள்ளார். இந்தப் போராட்டத்தில் வட மாகாண சபை உறுப்பினர்கள், அரசியல் பிரமுகர்கள், பொதுமக்கள் மற்றும் சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் ஆகியோர் பங்கேற்க உள்ளதாகத் தெரிவித்துள்ளார். வடக்கில் காண…

  18. "புலிகள் மட்டுமே சுதந்திரமாக உள்ளனர்" : பந்துல எம்.பி (க.கமலநாதன்) நாட்டில் சுதந்திரம் நிலைக்க முன்னோடியாக இருந்த முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச மற்றும் முன்னாள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச ஆகியோர் விரட்டி அடிக்கபடுவதால் நாட்டில் சுதந்திரம் நிலைக்கின்றது என்று கூற முடியாது. எனவே இன்று நாட்டின் உண்மையான மற்றும் நிலையான சுதந்திரத்திற்காகவும் பாடுபட்டவர்களை விடுத்து புலிகளின் சுதந்திரத்திற்காக மாத்திரமே நல்லாட்சி அரசாங்கம் முக்கியத்துவம் கொடுக்கின்றதென கூட்டு எதிரணியின் பாராளுமன்ற உறுப்பினர் பத்துள குணவர்தன தெரிவித்தார். பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்சவை கைது செய்ய கொழும்பு வெலிகடை புதிய …

  19. மசாஜ் நிலையத்தை அகற்றுமாறு கோரி சுதந்திர தினத்தில் வவுனியாவில் கறுப்புக் கொடி மசாஜ் நிலையத்தை அகற்றுமாறு கோரி வவுனியா தேக்கவத்தை ஏ-9 வீதியின் இரு பகுதியிலும் சுதந்திரதினத்தில் கறுப்புக் கொடிகள் பறக்கவிடப்பட்டுள்ளன. வவுனியா தேக்கவத்தைப் பகுதியில் பெரும்பான்மையின மக்கள் அதிகமாக வாழும் பகுதியில் தேக்கவத்தை தெவட்ட செவன என்னும் பெயரில் மசாஜ் நிலையம் ஒன்று இயங்கி வருகிறது. இதனை அகற்றுமாறு பொலிசார் உள்ளிட்ட பல தரப்பிடமும் அப்பகுதி மக்கள் தெரிவித்த போதும் இதுவரை எந்த எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இந்நிலையிலேயே சுதந்திர தினம் இன்று நாடு பூராகவும் கொண்டாடப்பட்டுவரும் நிலையில் வவுனியாவில் கறுப்புக் கொடி கட்டி எதிர்ப்பு …

  20. தகவல் அறியும் சட்டம் அரசாங்கத்தினால் நடைமுறைக்கு கொண்டு வந்த சில மணித்தியாலங்களே கடந்த நிலையில் வவுனியா மாவட்ட செயலகத்தில் செய்தி சேகரிக்க வவுனியா பிராந்திய ஊடகவியலாளருக்கு வவுனியா அரச அதிபர் ரோஹண புஸ்பகுமார இன்று தடை விதித்துள்ளார். வவுனியா மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் அரச அதிபர் தலைமையின் கீழ் இ.போ.சபையினர், தனியார் பேருந்து உரிமையாளர் சங்கத்தினர், வவுனியா வர்த்தக சங்கத்தினர், மக்கள் பிரதிநிதிகளுக்கிடையிலான சந்திப்பு இடம்பெறுள்ளது. இ.போ.சபை ஊழியர்களால் மேற்கொள்ளப்பட்டு வந்த போராட்டம் மற்றும் வவுனியா புதிய பேருந்து நிலைய பிரச்சினை தொடர்பில் இதில் ஆராயப்பட்டன. இதன்போது கூட்டம் ஆரம்பிப்பதற்கு 5 நிமிடங்கள் முன்னதாக செய்தி சேகரிக்க அனும…

  21. இரணைமடுக் குளத்தில் இருந்து பெற்றுக்கொள்ளும் ஒரு திட்டம் முன்பு தயாரிக்கப்பட்ட போதும் பல்வேறு காரணங்களால் அத்திட்டம் முழுமை பெறவில்லை. அதன் காரணமாக பூநகரிப் பிரதேசத்திற்கான குடிநீர் விநியோகம் தற்காலிகமாக தடைப்பட்டிருந்ததாக வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார். பூநகரி பிரதேச வைத்தியசாலையில் இன்று குடிநீர் சுத்திகரிப்பு செயற்திட்டத்தை ஆரம்பித்து வைத்த பின் உரையாற்றுகையிலேயே அவர் அவ்வாறு தெரிவித்தார். அவர் தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில், பூநகரி பிரதேச வைத்தியசாலையின் குடிநீர் தட்டுப்பாட்டைப் போக்குவதற்காக குடிநீர் தினமும் தண்ணீர்பௌசர்கள் மூலமாக கொண்டு வந்து நிரப்பப்டுகின்ற போதும் பௌசர்கள் வரமுடியாத நாட்களில் இவ்வைத்தியசாலையில் குடிநீர…

  22. சுமந்­தி­ரனின் பாது­காப்பை உறு­திப்­ப­டுத்­தி­யுள்ளோம் அர­சாங்கம் கூறு­கி­றது (ரொபட் அன்­டனி) தமிழ் தேசி­யக்­கூட்­ட­மைப்பின் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் எம்.ஏ. சுமந்­தி­ரனின் பாது­காப்­பிற்கு அச்­சு­றுத்தல் ஏற்­பட்­டுள்­ள­தாக தெரி­விக்­கப்­பட்­டுள்ள நிலையில் அவ­ருக்குத் தேவை­யான மற்றும் போது­மான பாது­காப்பை அர­சாங்கம் உறு­திப்­ப­டுத்­தி­யுள்­ளது என்று அமைச்­ச­ர­வையின் பேச்­சா­ளரும் அமைச்­ச­ரு­மான ராஜித சேனா­ரட்ண தெரி­வித்தார். கூட்­ட­மைப்பின் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் எம்.ஏ.சுமந்திரனின் உயி­ருக்கு அச்­சு­றுத் தல் ஏற்­பட்­டுள்­ள­தாக கூறப்­படும் நிலைமை தொடர்பில் அர­சாங்­கத்தின் நிலைப்பாட்டை வின­வி­ய­போதே அமைச்சர் ராஜித சேனா­ரட்ண மேற…

  23. யாழில் 17 ஆயுதக்குழுக்களாம் யாழ், குடா நாட்டில் வாள் போன்ற கூரிய ஆயுதங்களை கொண்டுள்ள 17 குழுக்கள் இயங்கி வருவதாக பொலிஸ் புலனாய்வு பிரிவினர் கண்டறிந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த குழுக்களின் பெரும்பாலான குழுக்கள் வாள், கத்தி போன்ற கூரிய ஆயுதங்களை கொண்டிருப்பது முக்கிய அம்சம் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். யாழில் இயங்கும் இந்த குழுக்கள் கடந்த சில வருடங்களில் குடாநாட்டில் 127 வன்முறை சம்பவங்களில் ஈடுபட்டுள்ளன. கூலிப்படையாக செயற்படும் இந்த குழுக்கள் பணத்தை பெற்றுக்கொண்டு பலரை வெட்டி காயப்படுத்தியுள்ளனர். கொலை, வீடுகள் மற்றும் வர்த்தக நிலையங்களை தாக்…

  24. கேப்பாப்புலவு மக்களின் மண்மீட்பு போராட்டம் தொடர்கிறது ஒருவர் மயக்கமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதி (கே.குமணன்,கண்டாவளை நிருபர்) முல்­லைத்­தீவு கேப்­பா­ப்பு­லவு மக்கள் தமது சொந்த நிலத்தை கைய­கப்­ப­டுத்­தி­யுள்ள விமா­னப்­ப­டை­யினர் அதனை விடு­விக்­க­வேண்­டு­மெனக்கோரி விமா­னப்­படை முகாமின் முன்­பாக கொட்டும் பனி­யி­ர­வையும் சுட்­டெ­ரிக்கும் வெயி­லையும் பொருட்­ப­டுத்­தாது முன்­னெ­டுத்­துள்ள தொடர் கவ­ன­யீர்ப்புப் போராட்டம் நேற்று நான்காவது நாளாகவும் இடம்பெற்றது. கேப்­பாப்­பு­லவு பிலக்­கு­டி­யி­ருப்பு கிரா­மத்தில் 84 குடும்­பங்­க­ளுக்கு சொந்­த­மான 40 ஏக்­க­ருக்கு மேற்­பட்ட காணி­களை கைய­கப்­ப­டுத்தி விமா­னப்­ப­டைத்­தளம் அமை…

    • 5 replies
    • 803 views
  25. இலங்கையின் எந்தப் பகுதியிலும் இராணுவ முகாம்களை அமைக்க சீனாவிற்கு அனுமதியில்லை: இலங்கையின் எந்தவொரு பகுதியிலும் இராணுவ முகாம்களை அமைப்பதற்கு சீனாவிற்கு அனுமதி வழக்கப்பட மாட்டாது என சீனாவிற்கான இலங்கைத் தூதுவர் கருணாசேன கொடிதுவக்கு தெரிவித்துள்ளார். எந்தவொரு பகுதியும் இராணுவ நோக்கங்களுக்காக வழங்கப்படாது எனவும், அண்டை நாடுகள் பற்றி கவனம் செலுத்தியே தீர்மானங்கள் எடுக்கப்படும் எனவும் சீன முதலீட்டாளர்களுக்கு அறிவித்துள்ளார். அண்டை நாடுகள் சந்தேகத்திற்கோ பதற்றத்திற்கோ உள்ளாகும் வகையிலான சூழ்நிலையை உருவாக்கப் போவதில்லை எனத் தெரிவித்த அவர், இந்தியா, பாகிஸ்தான், சீனா, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளுடன் இணைந்து செயற்பட உள்ளதாகவும், ஹம்பாந்தோட்ட…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.