ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143406 topics in this forum
-
மீண்டும் இலங்கைக்கு ஜீ.எஸ்.பி. பிளஸ் வரிச்சலுகை கிடைத்தது..! நீண்டகாலமாக ஐரோப்பிய ஒன்றியத்தினால் இலங்கை மீது விதிக்கப்பட்டிருந்த ஜீ.எஸ்.பி. பிளஸ் வரிச்சலுகை மீதான தடை இன்று நீக்கப்பட்டுள்ளது. இதன்படி இன்று முதல் இலங்கைக்கு மீண்டும் ஜீ.எஸ்.பி. பிளஸ் வரிச்சலுகை வழங்கப்பட்டுள்ளதாக ஐரோப்பிய ஒன்றியம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஐரோப்பிய ஒன்றியத்தினால் முன்மொழியப்பட்ட மனித உரிமைகள், தொழில் சட்டங்கள், சுற்றாடல் பாதுகாப்பு, நல்லாட்சி ஆகிய விடயங்களின் கீழ் 27 சர்வதேச இணக்கப்பாடுகளை செயற்படுத்தவும் அமுல்படுத்தவும் இலங்கை இணக்கம் வெளியிட்டுள்ளதை கவனத்தில் கொண்டே ஜீ.எஸ்.பி. பிளஸ் வரிச்சலுகையை மீண்டும் இலங்கைக்கு வ…
-
- 6 replies
- 964 views
-
-
விடைபெறுகிறார் நிஷாபிஸ்வால் அமெரிக்காவில் புதிய ஜனாதிபதியாக டொனால்ட் ட்ரம்ப் பதவியேற்கவுள்ள நிலையில், தெற்கு மத்திய ஆசிய விவகாரங்களுக்குப் பொறுப்பான உதவி இராஜாங்கச் செயலராகப் பதவி வகித்த நிஷா பிஸ்வால், இராஜாங்கத் திணைக்களத்தில் இருந்து விடைபெற வுள்ளார். வரும் 20ஆம் நாள், டொனால்ட் ட்ரம்ப் அமெரிக்க ஜனாதிபதியாக பதவியேற்றதும், அமெரிக்க இராஜாங்கச் செயலராக ரெக்ஸ் ரில்லர்சன் பதவியேற்கவுள்ளார். அத்துடன், இராஜாங்கத் திணைக்களத்தின் முக்கிய பதவிகளிலும் மாற்றங்கள் இடம்பெறவுள்ளன. இதற்கமைய, கடந்த மூன்றரை ஆண்டுகளாக தெற்கு மத்திய ஆசிய விவகாரங்களுக்கான உதவி இராஜாங்கச் செயலராகப் பணி யாற்றிய, நிஷா பிஸ்வாலுக்குப் பதிலாக பு…
-
- 0 replies
- 617 views
-
-
சீனக்குடா எண்ணெய்க் குதங்களை மீள பெறும் செயற்பாடு தற்காலிகமாக நிறுத்தம் இந்தியன் ஓயில் நிறுவனத்துக்கு குத்தகைக்கு வழங்கப்பட்ட சீனக்குடா எண்ணெய்க் குதங்களில் மூன்றை,இலங்கை பெற்றோ லியக் கூட்டுத்தாபனத்தின் பயன்பாட்டுக்கு எடுத்துக் கொள்ளும், முடிவை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தற்காலிகமாக இடை நிறுத்தியுள்ளார். இலங்கைக்கான புதிய இந்தியத் தூதுவர் பொறுப்பேற்கும் வரையில், இந்த நடவடிக்கைகளை நிறுத்தி வைக்குமாறு பிரதமர் அறிவு றுத்தியுள்ளார். பெற்றோலியத்துறை அமைச்சர் சந்திம வீரக்கொடி மற்றும் பெற்றோலியக் கூட்டுத்தாபன அதிகாரிகளுடனான சந்திப்பின் போதே அவர் இந்த அறிவுறுத்தலை விடுத்துள்ளார். …
-
- 0 replies
- 201 views
-
-
கடும் குளிரான காலநிலை எவ்வளவு காலம் தொடரும்..? : காலநிலை அவதான நிலையம் தகவல் நாட்டில் தற்போது அதிகாலை வேளையில் நிலவும் கடுமையான குளிருடன் கூடிய காலநிலை எதிர்வரும் 17 ஆம் திகதிக்குப் பினனர் குறைவடையும் சாத்தியமுள்ளதாக காலநிலை அவதான நிலையத்தின் பணிப்பாளர் கே.எச்.எம்.பிரேமலால் தெரிவித்தார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். அவர் மேலும் குறிப்பிடுகையில், தற்போது அதிகாலை வேளையில் நிலவும் குளிருடன் கூடிய காலநிலையினால் மக்கள் பெரும் அசெளகரியங்களுக்கு உட்பட்டுள்ளனர். ஏனெனில் தற்போது இந்தியாவூடாகச் செல்லும் காற்றே இலங்கைக்கும் கிடைக்கிறது. அக்காற்ற…
-
- 0 replies
- 181 views
-
-
குண்டு, துப்பாக்கியுடன் காட்டில் வசித்த கணவன் மனைவி கைது : வவுனியாவில் சம்பவம் வுனியாவில் நேற்று (13) இரவு 10.30 மணியளவில் கைக்குண்டு, இடியன் துப்பாக்கி என்பனவற்றுடன் காட்டில் வசித்து வந்த கணவன் மனைவி ஆகிய இருவரையும் ஓமந்தைப் பொலிஸார் கைது செய்துள்ளனர். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், ஓமந்தைப் பொலிசார் நேற்று மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையின் போது வவுனியா பாலமோட்டை, காட்டுப்பகுதியில் சந்தேகத்திற்கு இடமான முறையில் வசித்து வந்த கணவன் மனைவி ஆகியோரைக் கைது செய்துள்ளதாகவும் அவர்களிடம் மேற்கொண்ட விசாரணைகளின் போது இவர்களிடமிருந்து கைக்குண்டு இடியன் துப்பாக்கி என்பனவற்றைக் கைப்பற்றியுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர். இவர்கள் இரு…
-
- 0 replies
- 161 views
-
-
27 வருடங்களாக சொந்த நிலத்தில், சொந்த வீட்டில் வாழ முடியாமல் நலன்புரி நிலையங்களில் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். ஆனால் எங்களுடைய நிலத்தில், எங்களுடைய வீட்டில் சிங்கள மக்கள் தங்கியிருக்கின்றார்கள் எங்களுடைய கடலில் நீராடி மகிழ்கிறார்கள் என வலி.வடக்கு மக்கள் கவலையுடன் கூறியுள்ளனர். இன்றைய தினம் ஊறணி, மயிலிட்டி மற்றும் நல்லிணக்கபுரம் பகுதிகளை சேர்ந்த மக்கள் கடற்றொழில் செய்வதற்காக ஊறணி பகுதியில் 400 மீற்றர் கரையோர பகுதியும், 2 ஏக்கர் நிலமும் வழங்கப்பட்டது. இந்நிகழ்வுக்கு வ லிவடக்கில் இருந்து இடம்பெயர்ந்த மக்கள் பெருமளவில் வந்திருந்தனர். இதன்போது படையினரின் கட்டுப்பாட்டுக்குள் உள்ள மக்களுடைய வீடுகளில் சிங்கள மக்கள் தங்கியிருந்து குடும்பம் குடும்பமாக கடலில் நீர…
-
- 7 replies
- 849 views
-
-
மஹிந்தவை ஆட்சிக்கு கொண்டுவரவா சர்வஜன வாக்கெடுப்பு கோரப்படுகின்றது? டிலான் கேள்வி ; தமிழ்க் கூட்டமைப்புக்கு முக்கிய பொறுப்பு உள்ளது என்கிறார் (ரொபட் அன்டனி) நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதி பதி முறையை நீக்கும் நோக்கில் புதிய அரசியலமைப்பை சர்வஜன வாக்கெடுப்புக்கு உட்படுத்தினால் அரசியல் தீர்வை பெறுவதற்கான இறுதி சந்தர்ப்பத்தையும் இழந்துவிடுவோம். அத்துடன் மீண்டும் மஹிந்த ராஜபக்ஷ நிறைவேற்று அதிகாரம் கொண்ட பிரதமராக உருவெடுப்பதற்கான சந்தர்ப்பம் ஏற்படும் என்று சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் பேச்சாளரும் இராஜாங்க அமைச்சருமான டிலான் பெரெரா தெரிவித்தார். சர்வஜன வாக்கெ…
-
- 1 reply
- 264 views
-
-
ரட்ணசிறியின் வீடு சம்பந்தனுக்கு கையளிப்பு எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தனுக்கு உத்தியோகபூர்வ இல்லம் வழங்கப்பட்டுள்ளது. முன்னாள் பிரதமர் மறைந்த ரட்ணசிறி விக்ரமநாயக்கவுக்கு வழங்கப்பட்ட உத்தியோகபூர்வ இல்லமே, சம்பந்தனுக்கு வழங்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் சபாநாயகர் கரு ஜயசூரிய ஆகியோரின் தலையீட்டில், பொதுநிர்வாக உள்நாட்டலுவல்கள் அமைச்சின் ஊடாக இந்த வீடு, சம்பந்தனுக்கு வழங்கப்பட்டுள்ளது. சம்பந்தன், எதிர்க்கட்சித் தலைவராக தெரிவு செய்யப்பட்டு ஒன்றரை வருடங்களின் பின்னரே, அவருக்கு உத்தியோகபூர்வ இல்லமொன்று வழங்கப்பட…
-
- 13 replies
- 790 views
-
-
எம்.ஜீ. ஆரின் 100 ஆவது பிறந்த தின நிகழ்வுகள் கல்வியங்காட்டில் யாழ்ப்பாணம் எம். ஜீ. ஆர் நற்பணி மன்றத்தின் ஏற்பாட்டில் எம்.ஜீ.ஆரின் 100 ஆவது பிறந்த தின நிகழ்வுகள் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை காலை 8.30 மணியளவில் கல்வியங்காட்டுச் சந்தியில் அமைந்துள்ள எம்.ஜீ.ஆர் சிலையருகே நடைபெறவுள்ளது. ஈழத்து எம். ஜீ. ஆர் கோப்பாய் சுந்தரலிங்கம் தலைமையில் இடம்பெறவுள்ள இந்த நிகழ்வில் பிரதம விருந்தினராக இந்திய உயர் ஸ்தானிகர் ஆ.நடராஜன், சிறப்பு விருந்தினராக இந்திய உதவி உயர்ஸ்தானிகரக ஆலோசகர் ஆர் செல்வம், வடக்கு மாகாண சபை உறுப்பினர் கே.என்.சிவாஜிலிங்கம் ஆகியோர் கலந்து கொள்ளவுள்ளனர். எம். ஜீ. ஆர் பிறந்த தினத்தை முன்னிட்டு 100 பேருக்கு புத்தாடைகளும், அன்பளிப்புகளும் வழங்கப்…
-
- 0 replies
- 309 views
-
-
சம்பந்தனின் கோரிக்கைகள் என்றும் நிறைவேறாது (க.கமலநாதன்) புதிய பிரிவினைவாத அரசியலமைப்பு ஒருபோதும் நிறைவேற்றப்படாது என்பதை சகலரும் அறிவர். இருப்பினும் எதிர்க் கட்சி தலைவர் இரா.சம்பந்தன் மாத்திரம் அதனை அறியாதுள்ளார். அவர் முன்வைக்கின்ற கோரிக்கைகள் என்று நிறைவேறப்போவதில்லை என பாராளுமன்ற உறுப்பினரும் கூட்டு எதிரணியின் தலைவருமான தினேஸ் குணவர்தன தெரிவித்தார். எவ்வாறாயினும் மக்கள் விரும்பாத ஒரு அரசியலைமப்பினை எந்த சந்தர்ப்பத்திலும் நிறைவேற்ற முடியாது என்பதே எமது நிலைப்பாடாகும் எனவும் குறிப்பிட்டார். புதிய அரசியலமைப்பினை அடுத்த ஆட்சியிலேயே கொண்டுவர முடியும் என்று அரசாங்கம் அறிவித்துள்ளமை தொடர்பில் வினவியபோதே அவர் …
-
- 0 replies
- 263 views
-
-
எதிர்வரும் 21ஆம் திகதி கிழக்கில் இடம்பெறவுள்ள மாபெரும் எழுக தமிழ் நிகழ்வை வலுவிழக்கச்செய்யும்பொருட்டு மட்டக்களப்பு தமிழரசுக்கட்சி ஏற்பாட்டில் ஊர்வலம் ஒன்று செய்வதற்கு திட்டமிடப்பட்டிருப்பதாக அங்கிருந்துவரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால் உடனடியாகவே அங்குள்ள தமிழ் சிவில் அமைப்புக்கள் மற்றும் பொதுஅமைப்புக்கள் விழிப்புடன் செயற்படுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர். வடக்கில் ஏற்பட்ட மக்கள் எழிர்ச்சியால் சிங்களப் பேரினவாதம் மட்டுமல்ல சோரம்போன தமிழ் தலைமைகளுக்கும் பெரும் தலையிடி ஏற்பட்டிருந்தநிலையில் அது கிழக்கிலும் தொடரவிட்டால் தமது அரசியல் இருப்புக்கு பெரும் பாதிப்பு ஏற்படும் என்பதை புரிந்துகொண்டு அந்த நிகழ்வை குழப்புவதற்காகவும் அந்த நிகழ்வில் மக்கள்…
-
- 10 replies
- 1.7k views
-
-
தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டுள்ள ஈபிடிபி கட்சி உறுப்பினர்கள் இருவரையும் நாடுகடத்த நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதிக்கு யாழ் மேல் நீதிமன்றம் பரிந்துரை ஊர்காவற்றுறை தேர்தல் பரப்புரை இரட்டைக் கொலை வழக்கில் தமைறைவாகியுள்ள நிலையில் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டுள்ள ஈபிடிபி கட்சியைச் சேர்ந்த நபர்கள் இருவரையும் இங்கிலாந்தில் இருந்து இலங்கைக்கு நாடு கடத்த ஏற்பாடுகள் செய்யுமாறு யாழ் மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன் ஜனாதிபதிக்குப் பரிந்துரை செய்துள்ளார். தூக்குத் தண்டனை தீர்ப்புக்களில், தீர்ப்பளிக்கின்ற நீதிபதி ஜனாதிபதிக்குத் தமது தனிப்பட்ட அபிப்பிராயத்தை அனுப்பிவைக்க வேண்டும், என்ற நடைமுறையின்படி, இந்த வழக்கில் இவர்கள் இருவருக்கும் நீதிமன்ற…
-
- 6 replies
- 473 views
-
-
யாழில் 3000 மழைநீர் சேகரிப்பு தொட்டிகளை அமைக்க உதவி வழங்குகிறது இந்தியா யாழ். மாவட்டத்தில் 3000 மழைநீர் சேகரிப்புத் தாங்கிகளை அமைப்பதற்கான உடன்பாட்டில், இந்தியாவும் இலங்கையும் கையெழு த்திட்டுள்ளன. தேசிய ஒற்றுமை மற்றும் நல்லிணக்க இராஜாங்க அமைச்சர் ஏ.எச்.எம். பௌசி முன்னிலையில், பதில் இந்தியத் தூதுவர் அரிந்தம் பக்சி, தேசிய ஒற்றுமை மற்றும் நல்லிணக்க அமைச்சின் செயலர் சிவஞானசோதி ஆகியோர் இந்த உடன்பாட்டில் கையெழுத்திட்ட னர். இந்த திட்டத்துக்காக 300 மில்லியன் ரூபாவை இந்தியா வழங்கவுள்ளது. சந்திரிகா குமாரதுங்க தலைமையிலான தேசிய ஒற்றுமை மற்றும் நல்லிணக்கத்துக்கான செயலகத்தின் வேண்டுகோளுக்கு அமை யவே, இந்த உதவியை…
-
- 1 reply
- 357 views
-
-
இலங்கை சர்வதேசத்திற்கு வழங்கியிருந்த வாக்குறுதிகளில் இருந்து பின்வாங்கக்கூடாது – சர்வதேச மனித உரிமைகள் கண்காணிப்பகம் இலங்கையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் யுத்த குற்றம் மற்றும் மனித உரிமை மீறல் தொடர்பான நிலைமாறுகால நீதிப் பொறிமுறையில், சர்வதேச விசாரணையாளர்களை உள்ளடக்குவது குறித்து இலங்கை அரசாங்கம் சர்வதேசத்திற்கு வழங்கியிருந்த வாக்குறுதிகளில் இருந்து ஒருபோதும் பின்வாங்கக்கூடாதென சர்வதேச மனித உரிமைகள் கண்காணிப்பகம் வலியுறுத்தியுள்ளது. சர்வதேச மனித உரிமைகள் கண்காணிப்பகம் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. கடந்த 2015ஆம் ஆண்டு ஐ.நா. மனித உரிமை பேரவையில் நிறைவேற்றப்பட்ட இலங்கை தொடர்பான தீர்மானத்தில…
-
- 0 replies
- 287 views
-
-
சர்வதேச பங்களிப்பை உறுதி செய்ய வேண்டும் அரசாங்கத்தின் தார்மீக கடமை என்கிறார் சம்பந்தன் (ஆர்.ராம்) "நீதிக்காக எதிர்பார்த்திருக்கும் பாதிக்கப்பட்ட மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து விசாரணைப் பொறிமுறையில் சர்வதேசத்தின் பங்களிப்பை உறுதிசெய்யவேண்டியது அரசாங்கத்தின் தார்மீக கடமையாகும்" என்று எதிர்க்கட்சித்தலைவரும் தமிழ்த் தேசி யக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் வலியுறுத்தினார். ஜனாதிபதித் தேர்தலின் போது நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமை நீக்கப்படுமென்ற வாக்குறுதி அளிக்கப்பட்டே மக்கள் ஆணை பெறப்பட்டது. அரசியலமைப்பு சபையிலும் அம்முறைமை மாற்றத்துக்கு இணக…
-
- 1 reply
- 459 views
-
-
தமிழரின் எதிர்பார்ப்பாக முன்வைக்கப்படவுள்ள அரசியலமைப்பானது நீண்டகாலமாகத் தீர்க்கப்படாதுள்ள தேசிய இனப்பிரச்சினைக்கு நியாயமானதும் நீடித்து நிலைத்திருக்கக்கூடியதுமான தீர்வினைக் காண வழிகாட்ட வேண்டுமெனவும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவரும் எதிர்கட்சி தலைவருமான இரா.சம்பந்தன் தனது பொங்கல் வாழ்த்தில் தெரிவித்துள்ளார். இலங்கைத் திருநாட்டில் வாழும் தமிழ் மக்களுக்கு மட்டுமன்றி புலம்பெயர்ந்து வாழும் எம்மக்களுக்கும் தைப்பொங்கல் நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்வதில் பெருமகிழ்வெய்துகின்றேன். உழவர் திருநாள், தமிழர் பெருநாள் என்றெல்லாம் பெருமைப்படும் தைத்திருநாளான இன்று தமிழ் கூறும் நல்லுலகம் எங்கும் இத் தைப்பொங்கல் விழா மகிழ்வுடன் கொண்டாடப்படுகின்றது. …
-
- 5 replies
- 534 views
-
-
சனல்4 படத்தை இலங்கையில் திரையிட்டால் தமிழர்கள் அந்நியப்படுத்தப்படலாமாம்-கூறுகிறார் மங்கள சனல் 4 வின் ஆவணப்படத்தினைத் தற்போது இலங்கையில் திரையிட்டால் தமிழர்கள் அந்நியப்படுத்தப்படலாம் என வெளி விவகார அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார். பிரிட்டனிற்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றினை மேற்கொண்டுள்ள வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர, லண்டன் சத்தம் ஹவுசில் இடம்பெற்ற கலந்துரையாடல் ஒன்றிலேயே இவ்வாறு தெரிவித்தார். இந்தக் கலந்துரையாடலில் சர்வதேச இராஜதந்திரிகள், ஊடகவியலாளர்கள், மனித உரிமை செயற்பாட்டாளர்கள் போன்றோர் மத்தியில் உரையாற்றிய அவர் ஆட்சிமாற்றத்தின் பின்னர் நிலைமைகள் எதிர்பார்க்கப்படுவது போல், நூற்றுக்…
-
- 1 reply
- 259 views
-
-
தமிழகத்தில் அகதிகளாக தஞ்சமடைந்து மீண்டும் தாயகம் திரும்பியுள்ளவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் கலந்துரையாடலொன்று முல்லைத்தீவில் நேற்று(13) நடைபெற்றது. முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் அரசாங்க அதிபர் ரூபாவதி கேதீஸ்வரன் தலைமையில் இந்தக் கலந்துரையாடல் நடைபெற்றுள்ளது. இதன்போது வீட்டுத் திட்டங்கள் வழங்குவது மற்றும் வாழ்வாதர உதவிகளை வழங்குவது குறித்து கலந்துரையாடப்பட்டது. அத்துடன் இந்தியாவில் பிறந்தவர் பிள்ளைகளின் பிறப்பு சான்றிதழ்களை இலங்கைப் பிறப்புப் பதிவிற்கு மாற்றுவது தொடர்பாகவும் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. இதன் போது, “கடந்த 2009 ஆம் ஆண்டு முதல் 2016 ஆம் ஆண்டு டிசம்பர் வரையான காலப் பகுதிக்குள் சுமார் …
-
- 0 replies
- 276 views
-
-
எழுக தமிழ் போராட்டம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கோ வேறு கட்சிகளுக்கோ எதிரான போராட்டம் அல்ல அது தமிழ் பேசும் மக்களின் அரசியல் அபிலாசைகளை இலங்கையில் உள்ள அரசியல் தலைவர்களுக்கும் சர்வதேசத்திற்கு எடுத்துக்காட்டும் மக்கள் போராட்டம் என தமிழ் மக்கள் பேரவை தெரிவித்துள்ளது. தமிழ் மக்கள் பேரவை எதிர்வரும் 21ஆம் திகதி மட்டக்களப்பில் நடாத்தவுள்ள எழுக தமிழ் நிகழ்வு தொடர்பில் ஊடகவியலாளர்களை அறிவுறுத்தும் ஊடகவியலாளர் சந்திப்பு இன்று(05) மாலை மட்டக்களப்பு கூட்டுறவு நிலையகட்டிடத்தில் நடைபெற்றுள்ளது. இந்த ஊடகவியலாளர் சந்திப்பில் தமிழ் மக்கள் பேரவையின் இணைத்தலைவர் ரி.வசந்தராஜா,தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கிழக்கு மாகாணசபை உறுப்பினரும் ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்…
-
- 2 replies
- 447 views
-
-
தைத்திருநாள் சமத்துவம் மற்றும் நன்றியுணர்வு என்பவற்றின் பெறுமதியை எடுத்துக் கூறும் – பிரதமர் தைத்திருநாள் சமத்துவம் மற்றும் நன்றியுணர்வு என்பவற்றின் பெறுமதியை எடுத்துக் கூறும் வகையில் அமைந்துள்ளது என என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். தைப் பொங்கலை முன்னிட்டு வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார். இன, மத, கலாசார பேதங்களைத் தாண்டிய அமைதியான, சுதந்திரம்மிக்க நாடொன்றைக் கட்டியெழுப்புவதற்காக அர்ப்பணிப்புடன் செயற்படுவது நம் அனைவரினதும் பொறுப்பு என்பதை நினைவுபடுத்துவதாக பிரதமர் குறிப்பிட்டுள்ளார். தைத்திருநாள், கலாசார, சமய பல்வகைமையை மதித்து, மனித சமூகத்தின் மத்தியிலும், சுற்றுச் சூழலுட…
-
- 0 replies
- 207 views
-
-
கொழும்பிலிருந்து விசேட வைத்திய குழு கண்டி விரைகிறது கண்டி போதனா வைத்தியசாலையில் சிறுநீரக நோயாளர்களுக்கு சிகிச்சை வழங்கும் 69 ஆவது சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த நோயாளர்களில் 3 பேர் திடீரென உயிரிழந்தமை தொடர்பில் ஆராய விசேட வைத்திய குழுவொன்று இன்று கொழும்பிலிருந்து கண்டிக்கு செல்ல உள்ளதாக சுகாதார சேவையின் பணிப்பாளர் ஜயசுந்தர பண்டார தெரிவித்தார். சிறுநீரக நோய்களுக்கான சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்ட நோயாளர்கள் மூன்று பேர் கடந்த ஞாயிற்றுக் கிழமை(8) திடீரென உயிரிழந்துள்ளனர். இதனையடுத்து மேற்கொண்ட மருத்துவ சோதனையில் குறித்த நபர்கள் இன்ஃபுலுவென்சா ஏ எச்1என்1 என்ற நோயினாலேயே உயிரிழந்தாக தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் இது தொடர்பா…
-
- 0 replies
- 266 views
-
-
ஐ.தே.க வேண்டுமென்றே தேர்தலை ஒத்தி வைத்து வருகின்றது – கபே ஐக்கிய தேசியக் கட்சி வேண்டுமென்றே தேர்தலை ஒத்தி வைத்து வருவதாக கபே என்ற தேர்தல் கண்காணிப்பு அமைப்பு குற்றம் சுமத்தியுள்ளது. வேண்டுமென்றே தேர்தலை ஒத்தி வைத்து வருகின்றது என தெரிவித்துள்ள கபே அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரஞ்சித் கீர்த்தி தென்னக்கோன் தேர்தலை எதிர்நோக்க அச்சம் காரணமாகவோ அல்லது வேறு காரணிகளினாலோ இவ்வாறு ஐக்கிய தேசியக் கட்சி உள்ளுராட்சிமன்றத் தேர்தல்களை ஒத்தி வைத்து வருவதாகக் குறி;பிட்டுள்ளார். யுத்தம் இடம்பெற்ற காலத்திலும் ஏனைய பிரச்சினைகள் நாட்டில் நிலவிய காலத்திலும் தேர்தல் நடத்தப்பட்டுள்ளதாகவும் தந்திரோபய அடிப்படையில் தேர்தல்கள் ஒத்தி வைக்கப்பட்டு வருவதாகக் …
-
- 0 replies
- 216 views
-
-
பிக்குகள் மீது தாக்குதல் நடத்தியது கொழும்பிலிருந்து வந்த குண்டர்கள் குழுவே-றுகுனு பிக்குகள் முன்னணி குற்றச்சாட்டு கொழும்பிலிருந்து அழைத்து வந்த குண்டர்கள் குழுவினரால் பௌத்த பிக்குகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டபோது அதனை தடு க்காமல் வேடிக்கை பார்த்த பொலிஸ்மா அதிபர் உட்பட நல்லாட்சி அரசாங்கம் மீது தென்னிலங்கையில் செயற்படும் பிரபல பிக்கு கள் சங்கம் கடும் அதிருப்தி வெளியிட்டுள்ளது. பிக்குகள் மீது தாக்குதலை நடத்தியவர்கள் மற்றும் அதனைத் தடுக்க முயற்சிக்காத அரசாங்கம் மற்றும் அதிகாரிகள் மிக விரை வில் அதன் பிரதிபலனை அனுபவிப்பார்கள் என்றும் றுகுனு பிக்குகள் முன்னணி சாபமிட்டுள்ளது. ஹம்பாந்தோட்டை மஹிந்த ராஜபக்ச…
-
- 0 replies
- 153 views
-
-
நிதியமைச்சருடன் முரண்படும் நீதியமைச்சர் மூன்று லட்சம் அமெரிக்க டொலர் முதலீடு செய்யும் வெளிநாட்டுப் பிரஜைகளுக்கு வதிவிட வீசா வழங்கப்படும் என நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க கடந்த 12ம் திகதி அறிவித்திருந்த நிலையில், அவரது அறிவிப்பில் உண்மையில்லை என நீதி அமைச்சர் விஜ யதாச ராஜபக்ச தெரிவித்துள்ளார். கொழும்பு ஊடகமொன்று இது குறித்து கேள்வி எழுப்பிய போது அவர் இவ்வாறு குறிப்பிட்டு ள்ளார். அவர் தொடர்ந்தும் கூறுகையில், மூன்று லட்சம் அமெரிக்க டொலர் முதலீடு செய்யும் வெளிநாட்டுப் பிரஜைகளுக்கு வதிவிட வீசா வழங்குவது குறித்த அமைச்சரவை பத்திரமொன்று அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படவில்லை. அவ்வாறான ஓர் யோசனை அமைச்சரவையில் சமர்ப…
-
- 0 replies
- 190 views
-
-
புதிய அரசியலமைப்பு தொடர்பில் 7306 பேரே கருத்து தெரிவிப்பு புதிய அரசியலமைப்பு மற்றும் இராணுவத்துக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்களை விசாரணை செய்வதற்கான நீதிமன்றத்தை அமைத்தல் என்பன தொடர்பில் இலங்கையிலுள்ள கோடிக்கணக்கான மக்களில் 7306 பேர் மாத்திரமே கருத்துத் தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அரசாங்கம் மக்கள் கருத்துக் கணிப்புக்கென நியமித்த குழு வட்டாரங்கள் இந்த தகவலை வெளியிட்டுள்ளன. இது தொடர்பில் மேல் மாகாணத்திலும், வட மேல் மாகாணத்திலும் 250 பேருக்கும் குறைவானோரே கருத்துத் தெரிவித்துள்ளனர். இக்குழுவின் செயலாளரினால் நடாத்தப்படுகின்ற அரச சார்பற்ற அமைப்பு மேற்கொண்ட கருத்த…
-
- 0 replies
- 314 views
-