ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143407 topics in this forum
-
ஒற்றையாட்சிக்குள் தீர்வு ஏற்படமுடியாது ஆபத்தான விட்டுக்கொடுப்புக்கு இடமில்லை என்கிறார் எதிர்க்கட்சித்தலைவர் இரா.சம்பந்தன் (ஆர்.ராம்) எமது மக்களுக்கான தீர்வானது ஒற்றையாட்சிக்குள் ஏற்படமுடியாது என்று எதிர்க்கட்சித்தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப் பின் தலைவருமான இரா.சம்பந்தன் மீண்டும் வலியுறுத்தியுள்ளார். புதிய அரசியல் சாசனத்திற்கு பெருவாரியான மக்களின் அங்கீகாரத்தைப் பெற்றுக்கொள்வதற்காக எமது மக்களுக்கு ஆபத்து ஏற்படுத்தக்கூடிய விட்டுக்கொடுப்புக்கு இடமளிக்க முடியாது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். எதிர்க்கட்சித்தலைவரும் தமிழ்த் தேசியக…
-
- 1 reply
- 305 views
-
-
மயிலிட்டி உட்பட் விடுவிக்கப்படாத மக்களின் நிலங்கள் அனைத்தும் விடுவிக்கப்பட வேண்டும் – டக்ளஸ் தேவானந்தா! மயிலிட்டி மட்டுமல்லாது இன்னும் வடக்கு – கிழக்கு மாகாணங்களில் பல்வேறு தேவைகளுக்கென கையகப்படுத்தப்பட்டுள்ள எமது மக்களுக்குச் சொந்தமான அனைத்து குடியிருப்பு, விவசாய மற்றும் கடல்தொழில் சார்ந்த இடங்கள் யாவும் விரைவில் விடுவிக்கப்பட வேண்டும் என்பதே எமது நிலைப்பாடு என்று ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி(ஈ.பி.டி.பி.)யின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். மயிலிட்டி பகுதியை விடுவிக்கக் கூடாது என தேசிய போர் வீரர்கள் முன்னணி அமைப்பு அண்மையில் ஜனாதிபதியிடம் தெரிவித்துள்ளமை தொடர்பில் சிங்கள ஊடகங்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும்போதே…
-
- 1 reply
- 272 views
-
-
இராணுவ முகாம்களை பாதுகாத்த பின்னரே ஒட்டாவா உடன்படிக்கையில் கைச்சாத்து-பாதுகாப்பு அமைச்சு இராணுவ முகாம்களைப் பாதுகாப்பதற்கான மாற்று ஏற்பாடுகள் செய்யப்பட்ட பின்னரே, கண்ணிவெடிகளைத் தடை செய்யும் அனைத்துலகப் பிரகடனத்தில் அரசாங்கம் கையெழுத்திடும் என பாதுகாப்புச் செயலாளர் கருணாசேன ஹெட்டியாராச்சி தெரி வித்துள்ளார். ஒட்டாவா உடன்பாடு என்று அழைக்கப்படும், கண்ணிவெடிகளைத் தடை செய்யும் அனைத்துலகப் பிரகடனத்தில் 160 நாடுகள், அமைப்புகள் கையெழுத்திட்டுள்ளன. இந்தப் பிரகடனத்தில் கையெழுத்திடுவதற்கு அமைச்சரவை கடந்த மார்ச் மாதம் அனுமதி அளித்திருந்தது. எனினும், பாதுகாப்பு அமைச்சு இதற்கு இன்னமும் அனுமதியளிக்கவில்லை. …
-
- 0 replies
- 219 views
-
-
புதிய அரசியலமைப்பு ஏற்படுத்தப்பட்டால் அது தனித் தமிழீழத்துக்கே வழிவகுக்கும் சோபித தேரர் கூறுகிறார் (ப.பன்னீர்செல்வம்) ஒற்றையாட்சியை எதிர்க்கும் இரா.சம்பந்தன் எதிர்க்கட்சித் தலைவர் பதவியை இராஜினாமா செய்து வெளியேற வேண்டும் என வலியுறுத்தும் ஒமல்பே சோபித தேரர், நாட்டின் இன்றைய சூழ்நிலையில் புதிய அரசியலமைப்புத் தேவையில்லை. அவ்வாறு ஏற்படுத்தப்பட்டால் அது தனித் தமிழீழத்துக்கே வழிவகுக்கும் என்றும் தெரிவித்துள்ளார். அரசின் பிரதான பங்காளிக் கட்சியான ஜாதிக ஹெல உறுமயவின் முன்னாள் தலைவர் ஒமல்பே சோபித தேரர் எம்பிலி பிட்டியவில் நடத்திய ஊடகவியலாளர் மாநாட்டில் உரையாற்றும்போதே இவ்வாறு தெரிவித்…
-
- 0 replies
- 224 views
-
-
வாகன விபத்தில் பெண் வைத்தியர் உட்பட மூன்றுபேர் உயிரிழப்பு மதவாச்சி நாவற்குளம் பகுதியில் சம்பவம் (ஓமந்தை நிருபர்) மதவாச்சி நாவற்குளம் பகுதியில் நேற்று அதிகாலை இடம்பெற்ற வாகன விபத்தில் பெண் வைத்தியர் ஒருவர் உட்பட அவரது குடும்பத்தைச் சேர்ந்த மூவர் ஸ்தலத்திலேயே பலியாகியுள்ளனர். கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கிச் சென்ற கப் ரக வாகனமும் வவு னியா பகுதியில் இருந்து கொழும்பு நோக்கிச்சென்ற பார ஊர்தியும் நேருக்கு நேர் மோதிக் கொண்டதிலேயே இவ் விபத்து ஏற்பட்டுள்ளது. யாழ்ப்பாணத்தை பிறப்பிடமாகவும் கொழும்பு தெமட்டகொடையை வசிப்பிடமாகவும் கொண்ட கபூர் சப்ரின் (வயது 58) அவரது மனைவியான மலீனா காதர் ( வயது 53) மற…
-
- 0 replies
- 264 views
-
-
ஆந்திர முதல்வருக்கு ஜனாதிபதி அழைப்பு (நமது நிருபர்) ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, ஆந்திர பிரதேச முதல்வர் என்.சந்திரபாபு நாயுடுவிற்கு அழைப்பு விடுத்துள்ளார். தேசிய அரசாங்கத்தின் இரண்டாம் வருட பூர்த்தி நிகழ்வில் கலந்து கொள்வதற்காகவே ஜனாதிபதி இந்த அழைப்பை விடுத்துள்ளார். மேலும், 2017ஆம் ஆண்டு முதல் இலங்கையின் வளர்ச்சி, அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் கண்டுபிடிப்பு ஆகியவற்றிற்கு முன்னுரிமை வழங்கப்படும் என்றும் வறுமை ஒழிப்புத் திட்டம் ஒன்று தொடங்கப்பட உள்ளதாகவும் குறித்த அழைப்பு கடிதத்தில் ஜனாதிபதி குறிப்பிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. வறுமையை ஒழிப்பது தொட…
-
- 0 replies
- 246 views
-
-
ஒற்றையாட்சி தீர்வில் அரசாங்கம் உறுதி அமைச்சர் எஸ்.பி.கூறுகின்றார் (க.கமலநாதன்) அரசியலமைப்பில் மாற்றம் செய்வதற்கான செயற்பாடுகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அதில் தனி மாகாண ஆட்சி உருவாகவோ அல்லது ஒற்றை ஆட்சி சிதைவதற்கோ இடமளிக்கப்படமாட்டாது. எனவே ஒற்றையாட்சியின் கீழ் இந்நாட்டு சிறுபான்மை இனத்தவரும் ஏற்றுக்கொள் ளும் வகையிலான ஒரு தீர்வினை பெற வேண்டும் என்ற நிலைப்பாட்டில் அரசாங்கம் உறுதியாக உள்ளது என்று சமூக வலுவூட்டல் மற்றும் நலனோம்புகை அமைச்சர் எஸ்.பி.திஸாநாயக்க தெரிவித்தார். சமூக வலுவூட்டல் மற்றும் நலனோம்புகை அமைச்சில் நேற்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற …
-
- 0 replies
- 210 views
-
-
“நாட்டுக்காக போராடி சக்கர நாற்காலியே வாழ்க்கையாகிப் போன எம்முடன் ஒரு நிமிடம் கூட பேச முடியாதவா்களா எங்களின் பிரதிநிதிகள்” கேட்கிறார்கள் முள்ளம்தண்டு வடம் பாதிக்கப்பட்டவர்கள் – குளோபல் தமிழச் செய்தியாளர் கிளிநொச்சி:- கடந்த 24 ஆம் திகதி இடம்பெற்ற கிளிநொச்சி மாவட்டச் அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு கூட்டத்திற்கு உயிரிழை எனும் அமைப்பினா் கலந்துகொள்வதற்காக சென்றிருந்தனா். யுத்தத்தில் பங்குகொண்டு காயமடைந்து முள்ளம்தண்டு வடம் பாதிக்கப்பட்டு இடுப்பு கீழ் இயங்காதவா்களை உள்ளடக்கிய அமைப்பே உயிரிழை எனும் அமைப்பாகும். இவா்கள் கிளிநொச்சியில் முள்ளம் தண்டு வடம் பாதிக்கப்பட்டவா்கள் மருத்துவ வசதியுடன் தங்கியிருப்பதற்கான இல்லம் ஒன்றை அமைப்பதற்கு அனுமதி பெறும் நோக்கில் மாவட்ட …
-
- 1 reply
- 500 views
-
-
வடக்கு, கிழக்கு இணைப்புக்கு முஸ்லிம்கள் ஒத்துழைக்கவேண்டும் பகிரங்க அழைப்பு விடுக்கிறது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு (எருவில் நிருபர்) வடக்கு,கிழக்கு இணைப்புக்கு முஸ் லிம் மக்கள் உணர்வோடும் இணக்கத்தோடும் ஒன்று சேர்ந்து ஒத்துழைக்க வேண்டும் என்று பகிரங்கமாக அழைப்பு விடுக்கின்றேன் என்று தமிழரசுக்கட்சியின் தலைவரும் யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா கூறினார். வட்டுக்கோட்டை தீர்மானத்தினை நாங் கள் இப்பொழுது கோரவில்லை. மாறாக பூரண அதிகாரத்தை கொண்டிருக்கும் சமஷ்டி முறையிலான தீர்வினையே கேட்டு நிற்கின்றோம் எனவும் அவர் குறிப்பிட்டார். கல்முனை கார்மேல் பற்றிமா …
-
- 2 replies
- 475 views
-
-
புதிய அரசியலமைப்பில் வடகிழக்கு இணைப்பு, சமஷ்டி எதுவுமில்லை-அரசாங்கம் புதிய அரசியலமைப்பின் மூலம், வடக்கு, கிழக்கு மாகாணங்கள் மீண்டும் இணைக்கப்படவோ, ஒற்றையாட்சிக்கு பாதிப்பு ஏற்படு த்தப்படவோ மாட்டாது என ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பொதுச்செயலரும் அமைச்சருமான மகிந்த அமரவீர தெரிவி த்தார். மாத்தறை கோட்டேகொட பிரதேசத்தில் நேற்று அபிவிருத்திப் பணிகளை ஆரம்பித்து வைத்து உரையாற்றும்போதே அவர் இவ்வாறு கூறினார். அனைத்து தரப்பினரதும் கருத்துக்களை உள்வாங்கியே புதிய அரசியலமைப்பு உருவாக்கப்படுமே தவிர எவரும் நினைத்தபடி இதில் மாற்றங்களை செய்ய முடியாது. அரசாங்கத்தினால் முன்மொழியப்பட்டுள்ள புதிய அரசியலமைப்பின் மூலம் நாடு பல பகுதிகளாக பிரிக்…
-
- 0 replies
- 264 views
-
-
யாழ். பிரபல சினிமா அரங்கில் முற்பதிவு ஆசன விவகாரத்தல் ரசிகர்கள் - ஊழியர்கள் முரண்பாடு: பொலிஸில் முறைப்பாடு! திரையரங்கின் பாதுகாப்பு உத்தியோகத்தர் வீடியோ எடுத்து அச்சுறுத்தினாராம் 2016-12-27 21:16:35 (மயூரன்) யாழில் உள்ள பிரபல திரையரங்கு ஒன்றில் திரைப்படம் பார்க்க சென்றவருடன் திரையரங்க ஊழியர்கள் தகாத வார்த்தை பிரயோகம் பிரயோகித்து அநாகரிகமாக நடத்து கொண்டதாகவும் அச்சுறுத்தும் விதமாக செயற்பட்டதாகவும் யாழ். பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. இச்சம்பவம் தொடர்பில் முறைப்பாட்டாளர் தெரிவிக்கையில், யாழில் உள்ள குறித்த திரையரங்கில் நேற்றைய தினம் திரைப்படம…
-
- 1 reply
- 251 views
-
-
தென்னகத்தில் இருந்து இலங்கை வரும் பறவைகள் - காணொளி ======================================= இது இலங்கையின் தெற்கு மாவட்டமான அம்பலாந்தொட்டை தெஹிகஹலந்த பிரேதேசத்தின் மாலைக்காட்சி. கூட்டமாக வானில் வட்டமிடும் இந்த பறவைகளை, சில மாதங்கள மட்டுமே இப்பகுதியில் காணக் கூடியதாக இருக்கும். நவம்பர், டிசம்பர் மாதமளவில் தென் இந்தியாவிலிருந்து இடம்பெயர்ந்துவரும் இந்த பறவைகள், பெப்ரவரி வரை இலங்கையில் உலாவித்திரிந்து வானை அலங்கரிப்பதாக சுற்றுச்சூழல் நிபுணர்கள் கூறுகிறார்கள். இந்த கண்கவர் காட்சியை காண்பதற்காக சுற்றுலாப் பயணிகளும் இப்பகுதிக்கு வருவது வழக்கம் என்று அவர்கள் மேலும் கூறுகிறார்கள். அம்பலாந்தொட்டை மட்டுமல்லாது புந்தல தேசிய பூங்கா லுனுகம்வெஹெர கட்டுநாயக்க …
-
- 0 replies
- 279 views
-
-
முஸ்லிம்களுக்கு மீள்குடியேற்றத்திலும் காணி வழங்களிலும் பாரபட்சம் காட்டப்படுகின்றது என்ற குற்றச்சாட்டு அடிப்படையற்றது என வடமாகாண முதலமைச்சர் சிவி விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். http://globaltamilnews.net/archives/11857
-
- 1 reply
- 338 views
-
-
யாழ்.திருட்டுச் சம்பவங்களுடன் தொடர்புடைய “சிக்கியா” கைது: பணம், தங்க நகைகளும் மீட்பு! (ரி.விரூஷன்) யாழ்ப்பாணத்தின் பல்வேறு திருட்டு சம்பவங்களுடன் தொடர்புடைய சிக்கியா என அழைக்கப்படும் நபரொருவரை சந்தேகத்தில் கைது செய்துள்ளதாகவும் அவரிடமிருந்து பணம் மற்றும் நகைகளை கைப்பற்றியுள்ளதாகவும் மானிப்பாய் பொலிஸார் தெரிவித்தனர். இந்நிலையில் குறித்த இவ்விடயம் தொடர்பாக பொலிஸார் தெரிவித்திருப்பதாவது, குறித்த சிக்கியா என்றழைக்கப்படும் இவர் பல்வேறு திருட்டு சம்பவங்களுடன் தொடர்புபட்டவர். இவர் ஏற்கனவே திருட்டு குற்றச்சாட்டுகளின் பேரில் சிற…
-
- 0 replies
- 284 views
-
-
முன்னாள் பிரதமர் ரட்ணசிறி காலமானார் முன்னாள் பிரதமர் ரட்ணசிறி விக்ரமநாயக்க, கொழும்பில் உள்ள தனியார் வைத்தியசாலையில் காலமானார். இறக்கும் போது அவருக்கு வயது 83ஆகும். - See more at: http://www.tamilmirror.lk/188698/ம-ன-ன-ள-ப-ரதமர-ரட-ணச-ற-க-லம-ன-ர-#sthash.fxOi2uGS.dpuf
-
- 4 replies
- 396 views
-
-
யுத்தகாலத்தில் அழிக்கப்பட்ட தென்னை வளத்தை மீள உருவாக்கவேண்டும்-முதல்வர் விக்கி கோரிக்கை யுத்தகாலத்தில் அழிக்கப்பட்ட தென்னை வளங்களை மீள உருவாக்குவதற்கு நடவடிக்கை எடுக்கும்படி வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் கோரிக்கை விடுத்துள்ளார். யாழ் தென்னைப்பயிர் செய்கை சபையினால் தென்னைச்செய்கை பயனாளிகளுக்கு மானிய கொடுப்பனவு வழங்கும் நிகழ்வு இன்று நல்லூர் துர்க்கா மணி மண்டபத்தில் இடம்பெற்றது.இந்த நிகழ்வில் பிரதம விருந்திரனாகக் கலந்துகொண்ட வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் தனதுரையில் மேலும் தெரிவித்ததாவது பொதுவாக தென்மராட்சி மக்கள் விருந்தோம்பலில் சிறந்தவர்கள். இதற்கு மூலகாரண…
-
- 0 replies
- 215 views
-
-
வவுனியாவில் இடம்பெறும் ஊழல்களை உயரதிகாரிகள் கண்டுகொள்ளவில்லையா? மக்கள் விசனம் வவுனியா வடக்கில் பல வருடங்களாக சமூர்த்தியில் ஊழல் இடம்பெற்றுவருவதாக தெரிவிக்கப்படுகின்றது. கடந்த ஜூலை மாதமளவில் ஆதாரத்துடனும் பாதிக்கப்பட்ட மக்களின் குமுறல்களுடனும் இது சம்பந்தமான மகஜர் ஒன்றை வவுனியா மாவட்ட அரச அதிபருக்கும் ஜனாதிபதி ஆணைக்குழுவிற்கும், இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவிற்கும் வழங்கப்பட்டிருந்ததாக கூறப்படுகின்றது. இதேவேளை தொடர்ந்தும் இந்த பிரதேசங்களில் சமூர்த்தி போன்ற அரசின் மக்கள் நலன் திட்டங்களில் மோசடிகள் நடைபெறுவதாக அறியப்படுகின்றது. அத்துடன் ஏற்கனவே தவறிழைத்தவர்கள் மீது எதுவிதமான சட்ட நடவடிக்கையும் எடுக்கப்படாத காரணத்தினால் உத்திய…
-
- 1 reply
- 228 views
-
-
-
கிழக்கு மாகாணசபையின் பதில் முதலமைச்சராக சி.தண்டாயுதபாணி : கிழக்கு மாகாணசபையின் பதில் முதலமைச் கிழக்கு மாகாண கல்வி அமைச்சர் சி.தண்டாயுதபாணி நியமிக்கப்பட்டுள்ளார். ஈரான் மசான் டரான் மாநிலத்தின் ஆளுனரின் அழைப்பை ஏற்று ஐக்கிய அரப் அமீரகத்தில் இடம்பெறும் விவசாயம், மீன்பிடி, சுற்றுலா துறைசார்ந்த மாநாட்டில் கலந்து கொள்ள நேற்றையதினம் கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் தலைமையிலான குழுவினர் ஈரான் சென்றுள்ளதனைத் தொடர்ந்தே பதில முதலமைச்சராக சி.தண்டாயுதபாணி நியமிக்கப்பட்டுள்ளார் http://globaltamilnews.net/archives/11837
-
- 0 replies
- 292 views
-
-
பிரபாகரனைக் காப்பாற்ற பெரும் போராட்டமே நடத்திய யு.எஸ்... புதிய புத்தகத்தில் பரபர தகவல் பிரபாகரனைக் காப்பாற்ற அமெரிக்கா பெரும் முயற்சித்தது என்றும் இதற்காக இலங்கையை மிரட்டவும் செய்தது எனவும் புதிய புத்தகம் ஒன்றில் பரபரப்பு தகவல் வெளியாகி உள்ளது. டெல்லி: தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரன் மற்றும் தளபதிகளை யுத்த களத்தில் இருந்து பாதுகாப்பாக வெளியேற்ற கடைசிநேரங்களில் அமெரிக்கா போராட்டம் நடத்தியதாக புதிய புத்தகம் ஒன்றிலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரபாகரன் உள்ளிட்ட தளபதிகளை காப்பாற்ற அமெரிக்காவும், நார்வேயும் முயற்சித்தது; இதை இந்தியா எதிர்த்தது. இந்தியாவின் எதிர்ப்பை தமிழக தலைவர்களும் ஆதரித்தனர் என முன்னாள் தேசிய பாதுகாப்பு செயலர்…
-
- 17 replies
- 1.8k views
-
-
இலங்கையில் இடம்பெற்ற இறுதிக்கட்டப் போரின்போது சிறீலங்கா இராணுவத்தினால் நடாத்தப்பட்ட மனித உரிமை மீறல்கள் மற்றும் மனிதப் படுகொலைகள் தொடர்பான விசாரணைகளுக்கு சர்வதேச நீதிபதிகளின் உள்ளடக்கத்தை, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிராஜ் படுகொலைக்கு வழங்கப்பட்ட தீர்ப்பானது சுட்டி நிற்கின்றது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்திருந்தது. இந்நிலையில், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அமரர் ரவிராஜ் படுகொலை வழங்கின் தீர்ப்பை இதற்குப் பயன்படுத்தவேண்டாமென நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ கருத்து வெளியிட்டிருந்தார். இதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தனது கண்டனத்தைத் தெரிவித்துள்ளது. அத்துடன், ஜெனீவாவில் நடைபெற்ற ஐநா அமர்விலும் போர்க்குற்ற விசாரணைக்கு சர்வதேச நீதிபதிகளை இணைத்துக்…
-
- 2 replies
- 470 views
-
-
ஒற்றையாட்சிக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தர் சம்மதம் தெரிவித்து விட்டார். சமஷ்டியைக் கைவிட்டுவிட்டார் என மீன்பிடித்துறை அமைச்சர் மகிந்த அமரவீர தெரிவித்துள்ளார். இவ்வாறு தெரிவித்தது அமைச்சர் அமரவீர மட்டு மல்ல ஏற்கெனவே, இரண்டு அமைச்சர்கள் சம்பந்தர் சமஷ்டியைக் கைவிட்டு விட்டார் என வெளிப்படையாகக் கூறியுள்ளனர். கூடவே பெளத்த மதத்திற்கு முன்னுரிமை வழங்கு வதற்கும் சம்பந்தர் சம்மதம் தெரிவித்துள்ளதாகவும் அமைச்சர் அமரவீரவின் வாக்குமூலம் கூறுகிறது. யார் என்ன கூறினாலும் இரா.சம்பந்தன் அவர் கள் மெளனமாகவே இருப்பார் என்பதும் உண்மை. இது ஒரு புறம் இருக்க, விடுதலைப் புலிகளின் ஆசியுடன் ஆரம்பிக்கப்பட்ட தமிழ்த் தேசியக் கூட்ட மைப்பு எ…
-
- 2 replies
- 494 views
-
-
தபால் புகையிரதத்தில் குண்டுப் பீதி குளோபல் தமிழ்ச் செய்தியாளர் தபால் புகையிரதத்தில் குண்டு ஒன்று வைக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டு சோதனையிடப்பட்டுள்ளது. கொழும்பு கோட்டேயிலிருந்து பதுளை நோக்கிப் பயணிக்கவிருந்த இரவு நேர புகையிரதத்தில் இவ்வாறு குண்டு ஒன்று உள்ளதாக தகவல் கிடைத்ததனையடுத்து சோதனையிடப்பட்டுள்ளது. காவல்துறை விசேட அதிரடிப்படைப் பிரிவு, காவல்துறையினர் மற்றும் குண்டு செயலிழக்கச் செய்யும் பிரிவினர் ஆகியோர் நீண்ட நேரம் புகையிரதத்தினை சோதனையிட்டுள்ளனர். ஒரு மணித்தியாலத்திற்கு மேல் சோதனையிட்டும் எவ்வித குண்டையும் கண்டுபிடிக்க முடியவில்லை. அதன் பின்னர் புகையிரதம் மருதானை புகையிரத நிலையத்த…
-
- 1 reply
- 339 views
-
-
கண்காணிப்பாளர்களை மட்டுமே அனுமதிக்கலாம் சர்வதேச நீதிபதிகளை எக்காரணம் கொண்டும் அனுமதிக்க முடியாது என்கிறது அரசாங்கம் (ரொபட் அன்டனி) இலங்கையின் உள்ளகப் பொறிமுறை விசாரணையில் வெளிநாட்டு கண்காணிப்பாளர்கள் மற்றும் நிபுணர்கள் பங்கேற்கலாம். ஆனால், வெளிநாட்டு நீதிபதிகள் இலங்கையில் விசாரணைப் பொறிமுறையில் பங்கேற்க முடியாது என்று நீதி அமைச்சர் விஜேதாஸ ராஜபக் ஷ தெரிவித்தார். வெளிநாட்டு நீதிபதிகள் இலங்கையின் விசாரணைப் பொறிமுறையில் பங்கேற்பதற்கு அரசியலமைப்பில் இட மில்லை. அவ்வாறான தேவை ஏற்பட்டால் மூன்றிலிரண்டு பெரும்பான்மை பலத்துடன் அரசியலமைப்பில் திருத்தம் செய்யவேண்டும். அது சாத்தியமற்றது எ…
-
- 1 reply
- 282 views
-
-
நியமனம் வழங்கப்படாததை எதிர்த்து வடக்கில் புதிய அதிபர்கள் வழக்குத் தாக்கல் 2017 ஆம் ஆண்டு தை மாதம் பாடசாலைகள் தொடங்கும் போது தமக்கு பாடசாலை வழங்கப்படும் என்று நம்பியிருந்த புதிய அதி பர்கள் பாடசாலை நிலைப்படுத்தல் 4 ஆம் திகதிக்கு பின்னர் தான் தீர்மானிக்கப்படும் என்ற வட மாகாண கல்வியமைச்சரின் அறி விப்பைத் தொடர்ந்து பெரிதும் விரக்தி அடைந்தனர். நியாயமாக நடைபெறவிருந்த நியமனங்களை அமைச்சர் தலையிட்டு குழப்பியடித்து விட்டார் என ஆதங்கம் தெரிவித்தனர். நேற்றையதினம் யாழ்ப்பாணம் ஆனைப்பந்தியில் அமைந்துள்ள நாவலர் கல்வி நிலையத்தில் ஒன்று கூடிய நூற்றுக்கும் மேற்பட்ட அதிபர்கள் அடுத்து என்ன செய்வது என கூட…
-
- 0 replies
- 219 views
-