ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143407 topics in this forum
-
ஜனாதிபதி, பிரதமராக வரக்கூடியவர் பொறுப்புடன் சரியாக பேசவேண்டும் நாமல் எம்.பி.யை எச்சரித்தார் அமைச்சர் திகாம்பரம் (ஆர்.ராம், எம்.எம்.மின்ஹாஜ்) எதிர்காலத்தில் ஜனாதிபதி பிரதமராக வரக்கூடியவரான நாமல் ராஜபக் ஷ எம்.பி பொறுப்புடன் சரியாக பேசவேண்டுமென அமைச்சர் பழனி திகாம்பரம் சபையில் எச்சரிக்கை விடுத்தார். பாராளுமன்றத்தில் நேற்று வெள்ளிக்கிழமை மலைநாட்டு புதிய கிராமங்கள், உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சின் மீதான குழுநிலை விவாதத்தில் பதிலளித்து உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு எச்சரிக்கை விடுத்தார். அவர் இதன்போது கூறியதாவது, 200வருடங்களாக லயன்களில…
-
- 0 replies
- 148 views
-
-
சாத்தியமில்லாது ஏன் போனது வடக்கின் பொருளாதார மத்திய நிலையங்கள் தொடர்பில் அமைச்சர் ஹரிசன் விளக்கம் (ஆர்.ராம், எம்.எம்.மின்ஹாஜ்) வடமாகாணத்தில் பொருளாதார மத்திய நிலையங்களை அமைப்பதற்கான அனைத்து ஏற் பாடுகளும் நிறைவுசெய்யப்பட்டபோதும் வடக்கு மாகாண சபையினருக்கும் பாராளுமன்ற பிரதிநிதிகளுக்கும் இடையில் நிலவும் பிரச்சினைகளால் அது சாத்தியமில்லாது போனதாக கிராமிய பொருளாதார அலுவல்கள் அமைச்சர் ஹரிசன் தெரிவித்தார். வடக்கு மாகாண சபைக்கும் வடமாகாணத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்ற பிரதிநிதிகளுக்கும் இடையில் நிலவும் இழுபறிகளே வடக்கின் அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கு தட…
-
- 0 replies
- 182 views
-
-
கொழும்பு துறைமுகத்தில் அதிரடி ; 800 கோடி பெறுமதியான கொக்கைன் சிக்கியது கொழும்பு துறைமுகத்துக்கு வருகைத்தந்த கப்பலொன்றிலிருந்து பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் சுமார் 800 கிலோகிராம் கொக்கைன் போதைப்பொருளை மீட்டுள்ளனர். குவாடோர் நாட்டிலிருந்து இந்தியாவுக்கு கொண்டு செல்லப்படவிருந்த குறித்த கொக்கைன் போதைப்பொருள் கொழும்பு துறைமுகத்தில் வைத்து கைப்பற்றப்பட்டுள்ளது. கைப்பற்றப்பட்ட கொக்கைன் சுமார் 800 கோடி பெறுமதியானது என போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் தெரிவித்துள்ளனர். http://www.virakesari.lk/article/14278
-
- 1 reply
- 290 views
-
-
புத்தர் சிலையை அமைக்கவேண்டாமென்ற வடக்கின் பிரேரணை குப்பைத் தொட்டியில் எறியப்படும் -நீதியமைச்சர் விஜேதாச வட பகுதியில் புத்தர் சிலைகளை நிறுவுவதை தடுப்பதற்காக மாகாண சபையில் தீர்மானம் நிறைவேற்றுவதற்கு வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கு அதிகாரம் வழங்கியது யார் என நீதியமைச்சர் விஜேதாஸ ராஜபக்ச கேள்வி எழுப்பியுள்ளார். பௌத்த சிலைகளை அமைக்க வேண்டாம் என்று பிரேரணை நிறைவேற்றுவதற்கு வடமாகா ணத்திற்கு எந்த அதிகாரமும் இல்லை என்று தெரிவித்த நீதியமைச்சர், தற்போது நிறை வேற்றப்பட்ட தீர்மானத்தை குப்பையில் எறிவதாகவும் கூறினார். 2017ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டத்தின் குழுநிலை விவாதம் நாடாளுமன்றத்தில் நடைபெற்…
-
- 3 replies
- 444 views
-
-
வவுனியாவில் நடு வீதியில் அமர்ந்த பெண் பொலிஸாரால் அதிரடியாக கைது (காணொளி இணைப்பு) வவுனியா தாண்டிக்குளம் விவசாயக்கல்லூரிக்கு அருகில் பிரதான கண்டி வீதியில் நடுவே அமர்ந்து பெண் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவத்தில் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இச்சம்பவம் குறித்த மேலும் தெரியவருகையில், கடந்த மூன்று ஆண்டுகளாக பழகிவந்த குறித்த பெண் பணம் கொடுக்கல் வாங்கல்கள் காரணமாகவும் இருவருக்கிடையே இடம்பெற்ற முரண்பாடுகளை அடுத்து பணம்கொடுத்த பெண் பணம் வாங்கிய பெண்ணிற்கும் இடையே வாக்குவாதங்கள் இடம்பெற்று இறுதியில் இவர்களது சண்டை தாண்டிக்குளம் பிரதான வீதியின் நடுவே குறித்த பெண் அமர்ந்து இருந்துள்ளார். பல மணி நேரங்கள் வீதியை மறி…
-
- 6 replies
- 597 views
-
-
இந்தியாவின் லக்னோ நகரில் நடைபெற்ற உலக கணித அறிவுப் போட்டியில் கிழக்கு மாகாணப் பாடசாலையான திருகோணமலை ஸ்ரீ கோணஸ்வரா இந்து கல்லூரி மாணவர்கள் 6 பதக்கங்களைப் பெற்று கிழக்கு மாகாணத்துக்குப் பெருமை சேர்த்துள்ளனர். இப்போட்டியில் எட்டு மாணவர்கள் கலந்துகொண்டு இரண்டு தங்கம், இரண்டு வெள்ளி, இரண்டு வெண்கலப் பதக்கங்களைப் பெற்றுக்கொண்டனர். இந்தியாவிலிருந்து நேற்றைய தினம் நாடு திரும்பிய மாணவர்களுக்கு திருகோணமலை வலயக் கல்விப் பணிப்பாளர் என் விஜேந்திரன் தலைமையில் பலத்த வரவேற்பளிக்கப்பட்டது. http://thuliyam.com/?p=50903
-
- 1 reply
- 354 views
-
-
யாழ்ப்பாண நூலகம் எரிக்கப்பட்டமைக்கு ரணில் மன்னிப்பு கோரினார் யாழ்ப்பாண பொது நூலகம் எரிக்கப்பட்டமைக்கு பிரதமர் ரணில் விக்ரமசிங்க மன்னிப்பு கோரியுள்ளார்.1981ம் ஆண்டில் யாழ்ப்பாண பொதுநூலகம் எரிக்கப்பட்டமைக்காக மன்னிப்பு கோருவதாகத் தெரிவித்துள்ளார். குறித்த காலத்தில் இடம்பெற்ற சம்பவங்களுக்காக மன்னிப்பு கோருமாறு கூட்டு எதிர்க்கட்சியினரிடமும் அவர் கோரியுள்ளார். 1981ம் ஆண்டில் ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சியில் இருந்த போது யாழ் பொது நூலகம் எரிக்கப்பட்டதாகவும் இது பிழையானது எனவும் அதற்காக மன்னிப்பு கோருவதாகவும் ரணில் தெரிவித்துள்ளார். உங்களது அரசாங்கங்களினால் மேற்கொள்ளப்பட்ட தவறுகளுக்காக நீங்களும் மன்னிப்பு கோர வேண்டுமென பிரதமர் கூட்ட…
-
- 15 replies
- 1.3k views
-
-
ரணிலுக்கும் மஹிந்தவிற்கும் இடையில் பேச்சுவார்த்தை பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவிற்கும் இடையில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது. இன்றைய தினம் பாராளுமன்றில் காணப்படும் பிரதமர் அலுவலகத்தில் இந்த சந்திப்பு நடத்தப்பட்டுள்ளது. அரசியல் சாசனத்தை உருவாக்கும் முறை மற்றும் பாராளுமன்றம் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்பன தொடர்பில் இந்தப் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது. இந்த சந்திப்பில் எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தனும் பங்கேற்றிருந்தார். இதற்கு மேலதிகமாக தினேஸ் குணவர்தன, பந்துல குணவர்தன, விதுர விக்ரமநாயக்க, லொஹான் ரத்வத்தே, செஹான் சேமசிங்க ஆகியோரும் பங்கேற்றிருந்தனர். http://g…
-
- 0 replies
- 250 views
-
-
இலங்கை உயர்தொழில்நுட்பக் கல்வி நிறுவகத்தினால் (SLIATE) உயர் தொழில்நுட்பக் கல்லூரிகளின் ஆங்கில துறை மாணவர்களுக்கிடையில் ஆண்டுதோறும் இடம்பெறும் ஆங்கில தினப் போட்டி இவ்வருடம் மிகச்சிறப்பாக இடம்பெற்றது. நடைபெற்ற மேற்படி போட்டியில் நாடகப் பிரிவில் “சிலம்பின் கதை” (The Story Of Jewel Anklet) எனும் தலைப்பிலான நாடகத்திற்கு முதலாம் இடத்தினையும், குழுப்பாடல் மற்றும் பண்பாட்டு ரீதியான நவநாகரீக உடைப் போட்டியில் மட்டக்களப்பு உயர் தொழில் நுட்ப கல்லூரி மாணவர்கள் மூன்றாம் இடத்தினையும் பெற்றுக்கொண்டனர். ஆங்கில துறை கற்கை நெறி மட்டக்களப்பு உயர் தொழில் நுட்பக்கல்லூரியில் கடந்தவருடம் ஒருமுழுநேரக் கற்கையாக ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன் செல்வி முருகதாஸ் விஜயங்கா துற…
-
- 9 replies
- 1.1k views
-
-
முல்லையில் நெல் களஞ்சியசாலை அமைக்க வந்த நிதி திரும்பிச் செல்லும் நிலையில் முல்லைத்தீவில் நெல் களஞ்சியப்படுத்தும் நிலைய நிர்மாணப் பணிக்கான பணம் திருப்பி அனுப்பப்படும் அபாயத்தில் உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. முல்லைத்தீவில் மீள்குடியேற்றத்தின் பின்னர் பொரும்பான்மையான மக்கள் விவசாயத்தை நம்பியே இங்கு வாழ்ந்து வருகின்றார்கள். தேவையான களஞ்சியப்படுத்தல் வசதிகள் இல்லாததால் அறுவடை காலங்களில் பயிர்ச் செய்கையாளர்களிடமிருந்து வாங்க ப்படும் நெல்லைக் களஞ்சியப்படுத்த போதுமான களஞ்சிய வசதி இங்கில்லை. ஒரு புதிய களஞ்சியசாலையை அமைக்க 35 மில்லி யன் ரூபா தொகை அனுமதிக்கப்பட்டிருந்தாலும், இதுவர…
-
- 0 replies
- 171 views
-
-
இராணுவ ஆக்கிரமிப்பு காணிகள் தொடர்பில் சிவமோகன் எம்.பி-அமைச்சர் பொன்சேகா சொற்போர் வடமாகாணத்தில் இராணுவத்தினரால் கபளீகரம் செய்யப்பட்டுள்ள காணிகள் தொடர்பாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவமோகனுக்கும், முன்னாள் இரா ணுவத் தளபதியும், தற்போது அமைச்சராக இருக்கின்ற பீல்ட் மார்சல் சரத் பொன்சேகாவு க்கும் இடையே பெரும் வாக்குவாதம் ஏற்பட்டது. பொது மக்களின் காணிகளில் இருந்து இராணுவம் வெளியேற வேண்டும் என்ற நாடாளு மன்ற சிவமோகனின் கோரிக்கையையும் நிராகரித்த அமைச்சர் சரத் பொன்சேகா, வடக்கி லிருந்து இராணுவத்தை வெளியேற்ற எவருக்கும் அதிகாரம் இல்லை என்றும் கூறினார். அடுத்த ஆண்டிற்கான வரவு செலவுத் திட்ட…
-
- 0 replies
- 279 views
-
-
தமிழர் அரசியல் நகர்வுகளில் அரசு மௌனம் காப்பது நல்லதல்ல கடுமையாக சாடுகிறது ஹெல உறுமய : வடக்கில் சிங்கள குடியேற்றத்துக்கு எவ்வளவு நிதி ஒதுக்கப்பட்டது? (ஆர்.யசி) வடக்கு, கிழக்கில் விடுவிக்கப்பட்டுள்ள காணிகளில் எத்தனை ஏக்கர் நிலப்பரப்பு சிங்கள குடியேற்றத்துக்காக ஒதுக்கப்பட்டுள்ளது என்றும் வடக்குக்கான நிதி ஒதுக்கீட்டில் சிங்கள மற்றும் முஸ்லிம் மக்களுக்கான பங்கு எவ்வளவு என்றும் அரசாங்கம் உடனடியாக தெரிவிக்க வேண்டும் என ஜாதிக ஹெல உறுமய கட்சி கேள்வி எழுப்பியது. தமிழ் அரசியல் தலைமைகளின் நகர்வுகளுக்கு அரசாங்கம் மௌனம் காப்பது நல்லதல்ல எனவும் அக்கட்சி சுட்டிக்காட்டியது. ஜாதிக ஹெல உறுமய கட்சியினால் நேற்று க…
-
- 0 replies
- 178 views
-
-
கிளிநொச்சியில் ஆளுநா் தலைமையில் காணிப்பிணக்குகள் ஆராய்வு : வட மாகாண ஆளுநா் றெஜினோல்ட் குரே தலைமையில் கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் மக்களின் காணிப் பிணக்குகள் ஆராயும் கூட்டம் இடம்பெற்றுள்ளது. இன்று 09-12-2016 கிளிநொச்சி மாவட்டச் செயலகத்தில் காலை ஒன்பது முப்பது மணிக்கு ஆரம்பமான இந்த நிகழ்வில் கரைச்சி, கண்டாவளை, பளை,பூநகரி பிரதேச செயலக பிாிவுகளில் இருந்து அழைக்கப்பட்டிருந்த மக்கள் தங்களின் காணிப் பிணக்குகளை ஆளுநரிடம் முறையிட்டுள்ளனா். நீண்ட காலமாக தீர்க்கப்படாது இருந்து வந்த காணிப் பிணக்குகள் தொடா்பில் இங்கு கவனம் செலுத்தப்பட்டது. மக்கள் தங்களின் காணிப் பிணக்குகள் தொடா்பில் ஆளுநரிடம் முறைபாடுகளை பதிவு செய்தனா். தற…
-
- 0 replies
- 213 views
-
-
உலகில் இணையத்தள வேக தரவரிசையில் இலங்கை 62 ஆவது இடம் (ஆர்.ராம், எம்.எம்.மின்ஹாஜ்) இலங்கையில் இணையத்தள பாவணையாளர்கள் 30 சதவீதமாகும். இதனை அதிகரிக்க வேண்டியுள்ளது. மேலும் உலகில் இணையத்தள வேக தரவரிசையில் சீனா, இந்தியாவை விடவும் முன்னிலை வகித்து 62 ஆவது இடத்தில் உள்ளோம் என தகவல் தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் துறை அமைச்சர் ஹரீன் பெர்ணான்டோ தெரிவித்தார். பாராளுமன்றத்தில் இன்று வரவு–செலவு திட்டத்தின் தகவல் தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் அமைச்சின் செலவின தலைப்பிலான விவாதத்தின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். http://www.virakesari.lk/article/14285
-
- 0 replies
- 148 views
-
-
அமைச்சர் கூற்றுக்கு வடமாகாண முதலமைச்சர் விளக்கம் நண்பர் கௌரவ விஜேதாச இராஜபக்ச அவர்கள் கூறியதாக ஒரு செய்தி 09.12.2016ந் திகதிய தினக்குரல் முதற் பக்கத்தில் ‘பௌத்த சிங்கள மக்களை விக்னேஸ்வரன் ஆத்திரமூட்டக் கூடாது’ என்றும் வீரகேசரியில் ‘வடமாகாணசபைக்கு அதிகாரம் இல்லை’ என்றும் காலைக்கதிரில் ‘புத்தர் சிலை அமைக்கக் கூடாது என கூறுவதற்கு விக்னேஸ்வரன் யார்’ என்ற தலையங்கங்களின் கீழும் வெளிவந்தன. வலம்புரியில் ‘வடக்கின் தீர்மானம் குப்பைத் தொட்டிக்குள்’ என்ற தலையங்கத்தின் கீழும் இவ்வாறான செய்திகள் வெளிவந்துள்ளன. அவற்றில் வடக்கில் புத்தர் சிலைகளை அமைக்க இடமளிக்கக்கூடாது என்று நாங்கள் தீர்மானம் கொண்டு வந்ததாகக் கூறப்பட்டது. இது முற்றிலுந் தவறு. எனக்…
-
- 1 reply
- 377 views
-
-
இராணுவ வீட்டுத்திட்டங்களை வடகிழக்கு மக்கள் ஏற்கும் நிலையிலேயே உள்ளனர்.! வடக்கு கிழக்கில் யுத்தப் பாதிப்பிற்குள்ளாகி வாழும் மக்களுக்கு குடியிருப்பதற்கு வீடுகள் இல்லாத நிலையிலேயே வாழுகின்றனர். தற்போது அரசியல் எதிர்ப்பிற்குள்ளாகியுள்ள இராணுவ வீட்டுத்திட்டங்களை மக்கள் ஏற்றுக் கொள்ளுவார்கள். அவர்களுக்கு வீட்டு வசதிகளை பெற்றுக்கொள்ளுவதற்கான தேவைகள் அதிகமாகவே காணப்படுகின்றது என பாதுகாப்பு செயலாளர் கருனாசேன ஹெட்டியாராச்சி தெரிவித்தார். யுத்ததினால் பாதிக்கப்பட்ட பூநகரி கிராமத்திற்கு அபிவிருத்தி திட்ட பணிகளை முன்னெடுத்திருக்கும் அபே லங்கா நிறுவனத்தின் இணையத்தள் அங்குரார்ப்பன நிகழ்வில் பங்குபற்றிய போதே அவர் இதனை தெரிவித்தார். http://www.vira…
-
- 0 replies
- 272 views
-
-
முஸ்லிம் எம்.பிக்களை சந்திக்கிறார் ஜனாதிபதி மைத்திரி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று மாலை 3 மணிக்கு முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களை பாராளுமன்றக் கட்டிடத் தொகுதியில் அமைந்துள்ள ஜனாதிபதி காரியாலயத்தில் சந்தித்து முஸ்லிம்களின் சமகால பிரச்சினைகள் தொடர்பில் தீர்க்கமாக கலந்துரையாடவுள்ளார். இக்கலந்துரையாடலில் நீதியமைச்சர், பொலிஸ்மா அதிபர் உள்ளிட்ட பலர் கலந்து கொள்ளவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் கூறினார். இனவாத செயற்பாடுகளை அரசாங்கம் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி பாராளுமன்றத்தில் இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் ஆற்றிய உரை, அரச உயர் மட்டத்தில் பாரிய அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது…
-
- 0 replies
- 226 views
-
-
மட்டக்களப்பு பகுதியில் வீடுகளை உடைத்து கொள்ளை மட்டக்களப்பு - திருமலை வீதியில் உள்ள இரண்டு வீடுகளின் கதவுகளை உடைத்து நேற்று (08) இரவு கொள்ளையடிக்கப்பட் டுள்ளது. இரண்டு வீட்டு கதவுகளும் உடைக்கப்பட்டு, தங்க நகைகள் கொள்ளையிடப்பட்டுள்ளதாக முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது. இந்நிலையில் குற்றவாளிகளை மோப்ப நாய்களின் உதவியுடன் மட்டக்களப்பு போலிஸார் தேடிவருவதுடன், மேலதிக விசாரணைகளையும் மேற்கொண்டு வருகின்றனர். http://www.virakesari.lk/article/14277
-
- 0 replies
- 332 views
-
-
அம்பாந்தோட்டை துறைமுகம் சீனாவிற்கு உன்னிப்பாக அவதானிக்கும் அமெரிக்கா அம்பாந்தோட்டை துறைமுகத்தின் 80 வீத உரிமை சீனாவுக்கு விற்கப்படவுள்ளமை குறித்து, உன்னிப்பாக கவனிக்கப் போவதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. அம்பாந்தோட்டை துறைமுகத்தின் 80 வீத உரிமையை சீன அரச நிறுவனம் ஒன்றுக்கு 99 ஆண்டு குத்தகை க்கு வழங்குவதற்கு அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. இதுகுறித்து வொசிங்டன் எச்சரிக்கையுடன் செயற்படும் என்று அமெரிக்க ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது. “நாம் மிகக் கவனமாக கண்காணிப்போம். இவை நீண்டகால நோக்கில் தாக்கங்களை ஏற்படுத்தக் கூடும்” என்று அமெரிக்க உயர் அதிகாரி ஒருவர், வோல் ஸ்ட்ரீட் ஜேர்னலுக்கு தெரி…
-
- 1 reply
- 384 views
-
-
வடமாகாண அமைச்சர்கள் மீதான முறைப்பாட்டு கால எல்லை ஒரு கிழமை நீடிப்பு. வடமாகாண அமைச்சர்களின் ஊழல் குற்ற சாட்டுக்கள் தொடர்பில் விசாரணை செய்ய அமைக்கப்பட்ட குழுவின் கால எல்லை நீடிக்கப்பட்டு உள்ளது. வடமாகாண சபையின் 67 ஆவது அமர்வு இன்றைய தினம் கைதடியில் உள்ள பேரவைக் கட்டடத்தில் நடைபெற்றது. அதன் போது முதலமைச்சரினால் , அமைச்சர்கள் மீதான ஊழல் மற்றும் முறைகேடுகள் தொடர்பிலான குற்ற சாட்டை விசாரணை செய்ய நியமிக்கப்பட்ட குழுவிடம் முறைப்பாடு செய்வதற்கான கால எல்லை நேற்றைய தினம் ஆறாம் திகதியுடன் முடிவடைந்தது. அதனை அடுத்து முறைப்பாடு செய்வதற்கான கால எல்லையை மேலும் ஒரு கிழமைக்கு நீடிப்பு செய்ய வேண்டும் என முதலமைச்சரிடம் ஆளும் கட்சி உறுப்பினர் ஜி.ரி.லிங்கநா…
-
- 1 reply
- 237 views
-
-
புதிய அரசியல் சாசனம் குறித்த மஹிந்த தரப்பு யோசனை இன்று பிரதமரிடம் ஒப்படைக்கப்பட உள்ளது புதிய அரசியல் சாசனம் குறித்த தமது தரப்பு யோசனைகள் இன்றைய தினம் பிரதமர் ரணில் விக்ரமசிங்க மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் ஆகியோரிடம் ஒப்படைக்கப்பட உள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ரஜபக்ஸ தெரிவித்துள்ளார். கூட்டு எதிர்க்கட்சியின் சார்பில் இந்த யோசனை முன்வைக்கப்பட உள்ளதாகத் தெரிவித்துள்ளார். தமது ஆட்சிக் காலத்தில் அமைச்சர்கள் வாகனங்களை பயன்படுத்துவதற்கு சந்தர்ப்பம் வழங்கப்பட்டதாகவும் தற்போதைய அரசாங்கம் அந்த விடயங்கள் தொடர்பில் விசாரணை நடத்தி வருவதாகவும் இது தேவையற்ற விடயம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். http://globaltamilnews.net/ar…
-
- 0 replies
- 251 views
-
-
குற்றச் செயல்களுக்கு பொறுப்பு கூறுதல் விவகாரத்தில் இலங்கை கூடுதல் முனைப்பு காட்ட வேண்டும் – சர்வதேச மன்னிப்புச் சபை குற்றச் செயல்களுக்கு பொறுப்பு கூறுதல் விவகாரத்தில் இலங்கை கூடுதல் முனைப்பு காட்ட வேண்டுமென சர்வதேச மன்னிப்புச் சபை கோரியுள்ளது. சித்திரவதைகளை தடுப்பதற்கும், சித்திரவதைகளில் ஈடுபடுவோர் குறித்து கிரமமான விசாரணை நடத்தி அவர்களுக்கு தண்டனை விதிக்கவும் அரசாங்கம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென சர்வதேச மன்னிப்புச் சபையின் தென் ஆசிய பணிப்பாளர் சம்பா படேல் தெரிவித்துள்ளார். இலங்கை அரசாங்கம் சில முக்கியமான ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை எடுத்துள்ளதாகத் தெரிவித்துள்ள தெரிவித்துள்ள அவர் எவ்வாறெனினும் சித்திரவதைகள் தொடர்பில் உரிய நடவடிக்கை…
-
- 0 replies
- 198 views
-
-
அம்பாந்தோட்டைத் துறைமுக உடன்பாடு கைச்சாத்து அம்பாந்தோட்டைத் துறைமுகம் தொடர்பாக சீன நிறுவனத்துக்கும், இலங்கை அரசாங்கத்துக்கும் இடை யில், கட்டமைப்பு உடன்பாடு ஒன்று நேற்றுமாலை கையெழுத்திடப்பட்டுள்ளது. சீன அரசுத்துறை நிறுவனமான சீன மேர்ச்சன்ட்ஸ் போர்ட் ஹோல்டிங்ஸ் நிறுவனத்துக்கும், இலங்கை அரசாங்கத்துக்கும் இடையிலேயே இந்த உடன்பாடு கையெழுத்திடப்பட்டுள்ளது. அம்பாந்தோட்டை துறைமுகத்தின் 80 வீத பங்குகளை சீன நிறுவனத்துக்கு 99 ஆண்டுகால குத்தகைக்கு வழங்கும் உடன்பாட்டுக்கு முன்னோடியாகவே இந்த உடன்பாடு நேற்று கையெழுத்திடப்பட்டுள்ளது. இதற்காக, சீன நிறுவனம், 1.2 பில்லியன் டொலரை இலங்கைக்கு வழங்கு…
-
- 0 replies
- 221 views
-
-
இலங்கையைப் பீடித்திருந்த தலைவலி தீர்ந்துவிட்டது ஜெயாவின் மறைவு குறித்து ஹெலஉறுமய (ஆர்.யசி) எதிரியாக இருந்தாலும் ஜெயலலிதாவின் ஆத்மா சாந்தியடைய பிரார்த்திக் கின்றோம். ஆனால் இலங்கையைப் பீடித்திருந்த தலைவலியும் தொல்லையும் ஜெயலலிதாவின் மரணத்தோடு விடுபட்டதை எண்ணி நாம் மகிழ்ச்சியடைகின்றோம் என ஜாதிக ஹெல உறுமய கட்சியின் ஊடகப்பேச்சாளரும் மேல்மாகாணசபை உறுப்பினருமான நிஷாந்த ஸ்ரீ வர்ணசிங்க தெரிவித்தார். அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் தோல்வியை சந்தித்த ஹிலாரி கிளிண்டனை எண்ணியும் சமந்தா பவர் மற்றும் நிஷா பிஸ்வால் ஆகியோரும் விடைபெற்றுள்ளமையை எண்ணியும் மகிழ்ச்சியடைவதாகவும் அவர் குறிப்…
-
- 2 replies
- 568 views
-
-
தற்போதைய ஜனாதிபதி முறைமை தொடரும் ஒற்றையாட்சிக்குள் அதியுச்ச அதிகாரப்பகிர்வு இதற்கமையவே புதிய அரசியலமைப்பு; ஐ.தே.க.செயற் குழுவில் தீர்மானம் (ரொபட் அன்டனி) அரசியலமைப்பில் தற்போதைய நிலைமையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கொண்டுள்ள அதிகாரங்களின் அடிப்படையில் ஜனாதிபதி முறைமையை தொட ர்ந்து பேணவும் ஒற்றையாட்சி முறைமையின் கீழ் உச்சபட்ச அதிகாரத்தை பகிரும் வகையில் புதிய அரசியலமைப்பினை உருவாக்கவும் ஆளும் ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழுக் கூட்டத்தில் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. அத்துடன் தேசிய அரசாங்கத்திற்கு தொடர்ச்சியாக ஆதரவு வழங்கவும் ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழு அங்கீகாரம் வழங்கி…
-
- 0 replies
- 343 views
-