ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143411 topics in this forum
-
சி.வியின் தீவிரவாதப் பேச்சுக்களே மஹிந்தவுக்கு உயிர்கொடுப்பு வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், மஹிந்தவின் சகோதரன். மஹிந்த, உயிர்வாழ்வதற்கே, விக்னேஸ்வரனின் தீவிரவாதப் பேச்சு ஒட்சிசனாகிறது. அப்பேச்சே அவருக்கு உயிர்கொடுக்கின்றது என்று, மக்கள் விடுதலை முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர், பிமல் ரத்நாயக்க தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் நேற்று வியாழக்கிழமை இடம்பெற்ற தேசிய கலந்துரையாடல்கள், தேசிய ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்கம், அனர்த்த முகாமைத்துவ அமைச்சுகள் மீதான குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில் கூறியதாவது, …
-
- 1 reply
- 150 views
-
-
முல்லைத்தீவில் மாங்குளம் – துணுக்காய் வீதியில் அமைந்துள்ள மாவீரர் குடியிருப்பு மக்களுக்கு வடக்கு கால்நடை அபிவிருத்தி அமைச்சால் நல்லின ஆடுகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன. நேற்று புதன்கிழமை (30.11.2016) நடைபெற்ற இதற்கான நிகழ்ச்சியில் வடக்கு கால்நடை அபிவிருத்தித்துறை அமைச்சர் பொ.ஐங்கரநேசன் பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டு நல்லின யமுனாபாரி ஆடுகளை வழங்கி வைத்துள்ளார். வடமாகாண கால்நடை அபிவிருத்தி அமைச்சு பின்தங்கிய ஒரு கிராமத்தைத் தெரிவு செய்து அங்குவாழும் பெண் தலைமைத்துவக் குடும்பங்கள் மற்றும் வறுமைக் கோட்டுக்குக்கீழ் வாழும் குடும்பங்களைத் தெரிவு செய்து அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கோடு நல்லின ஆடுகளை வழங்கும் தகர் என்ற திட்டத்தை முன்னெடுத்து வருகிறது. இத்திட்டத…
-
- 0 replies
- 306 views
-
-
‘எம்.ஆர்’க்கு இகழ்ச்சி; ‘ஐயா’வுக்கு புகழ்ச்சி நாடாளுமன்றத்தில், நேற்று உரையாற்றிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, முன்னாள் ஜனாதிபதியும் எம்.பி.யுமான மஹிந்த ராஜபக்ஷவை (எம்.ஆர்) இகழ்ந்தும், எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தனை (ஐயா) புகழ்ந்தும் பேசினார். அங்கு தொடர்ந்து உரையாற்றிய ஜனாதிபதி, மேலும் கூறியதாவது, “தேசிய பிரச்சினைக்கு நியாயபூர்வமான அரசியல் தீர்வொன்றைக் காண்பதற்கு, இரா. சம்பந்தனும் அவர் தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரும் சிறந்த ஒத்துழைப்பை வழங்குகின்றனர். 50 வருட அரசியல் அனுபவம் எனக்கு இருக்கிறது. இந்தப் பிரச்சினையைத் தீர்ப்பதில், வடக்கு, கிழக்கின் சிறந்த தலை…
-
- 0 replies
- 185 views
-
-
தமிழின் ‘கதி’யால் கலங்கினார் எம்.பி அழகன் கனகராஜ் அரச கரும மொழிகளில் ஒன்றான தமிழ் மொழிக்கு, இலங்கையில் அதுவும் கொழும்பில் நேர்ந்த கதியைக் கூறி, ஜே.வி.பியின் எம்.பியான பிமல் ரத்னாயக்க கவலைப்பட்டார். நாடாளுமன்றத்தில், நேற்று வியாழக்கிழமை இடம்பெற்ற தேசிய கலந்துரையாடல்கள், தேசிய ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்கம், அனர்த்த முகாமைத்துவ அமைச்சுகள் மீதான குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அங்கு அவர், மனவேதனையுடன் கூறியதாவது, “கொழும்பு நாரஹேன்பிட்டியவில் உள்ள பிரபல வைத்தியசாலைக்கு சென்றிருந்தேன். உள்ளே சென்று பல இடங்களில் பார்வையிட்டேன். 8 மொழிகளில் அறிவிப்…
-
- 0 replies
- 184 views
-
-
சந்தர்ப்பவாதிகளே! சற்று சிந்தியுங்கள்’ அழகன் கனகராஜ் தமிழீழ விடுதலைப் புலிகள், தன்னை படுகொலைச் செய்வதற்கு ஐந்து முறை முயன்றதாகவும், அந்த முயற்சிகள் எவையும் கைகூடவில்லை. அந்தக் காலம் மலையேறிவிட்டது என்று தெரிவித்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, இனங்களுக்கு இடையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கு, இதுதான் நல்லச் சந்தர்ப்பமாகும். அதனைப் பயன்படுத்தவேண்டும் என்பதுடன், இனவாதங்களைத் தூண்டி, தேசிய உரைவீரர்களாக முயற்சிப்போரும் அதிகாரத்துக்கு பேராசைப்படுவோரும் சிந்திக்கவேண்டும் என்றும் அறிவுரை கூறினார். ‘தேசிய பிரச்சினைக்குத் தீர்வொன்றை காணும் நிமித்தம், நாம் முன்னெடுக்கும் முயற்சிகள் பற்றி, சிலர் தவறான அர்த்தப்படுத்தல்களுடன் பேசி வருகின்றனர். புதி…
-
- 1 reply
- 299 views
-
-
பொலிஸ் அதிகாரி மர்மமான முறையில் உயிரிழப்பு ; மட்டக்களப்பில் பதற்றம் (சசி) மட்டக்களப்பு கல்லடி பாலத்தில் இருந்து குதித்து பொலிஸ் அதிகாரி ஒருவர் பலியாகியுள்ளார் தெரிவிக்கின்றனர். நோய்வாய்ப்பட்டு நேற்றைய தினம் இரவு 9 மணியளவில் வைத்தியசாலையில் இருந்த நிலையில் இவர் கல்லடி பாலத்தில் இருந்து குதித்ததாக தெரிவிக்கின்றனர். மாமாங்கத்தை சேர்ந்த தி.சிவதாஸ் என்ற பொலிஸ் அதிகாரியே இவ்வாறு பலியாகியுள்ளார். குறித்த பொலிஸ் அதிகாரியின் சடலம் சற்றுமுன் பொதுமக்கள் மீட்கபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. எனினும், குறித்த சம்பவம் கொலையா? தற்கொலை? என்று பொலிஸார் விசாரணைகள் முன்னெடுத்துள்ளனர். http://www…
-
- 0 replies
- 150 views
-
-
இலங்கை ஜனாதிபதியிற்கு அமெரிக்க உப ஜனாதிபதி தீடீர் தொலைபேசி அழைப்பு ஐக்கிய அமெரிக்காவின் உப ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ள மயிக் பென்ஸ் மற்றும் இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு இடையில் தொலைபேசி உரையாடல் ஒன்று நேற்று இடம்பெற்றுள்ளது. இதன்போது இரு நாடுகளுக்கும் இடையிலான உறவினை வலுப்படுத்துவது குறித்து பேசப்பட்டதாக தெரியவந்துள்ளது. மேலும், இலங்கையின் அபிவிருத்தி நடவடிக்கைகள் உள்ளிட்ட எதிர்கால பயணத்திற்கு ஒத்துழைப்பை வழங்கவும் அமெரிக்கா தயாராகவுள்ளதாக, அமெரிக்காவின் உப ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ள மயிக் பென்ஸ் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. http://www.virakesari.lk/article/14076
-
- 0 replies
- 133 views
-
-
‘சீ... வெட்கம்’ அழகன் கனகராஜ் 21 மில்லியன் எனும் மிகவும் குறைந்த மக்கள் வாழ்ந்து கொண்டிருக்கும் இந்நாட்டில், தமிழ் - சிங்கள மொழிகளில் பேசத்தெரியாதோர் இருப்பது, வெட்கக்கேடான ஒரு விடயமாகும் என்று, ஒன்றிணைந்த எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெரும தெரிவித்தார். நாடாளுமன்றில் தொடர்ந்து உரையாற்றிய அவர், “நாட்டில் இதுவரை ஆட்சிசெய்த அரசுகளிலேயே, இந்த அரசு தான் தேசிய நல்லிணக்கம் தொடர்பில் அதிகமாக பேசுகின்றது என்பதை நாம் நன்கு அறிவோம். ஆனால், இந்த அரசில், தேசிய கலந்துரையாடல் அமைச்சுக்கு வெறும் 191 மில்லியன் ரூபாய் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது. சகவாழ்வுக்காக 12 மில்லியன் ரூபாய் மட்டுமே வ…
-
- 0 replies
- 338 views
-
-
'நீலப்படங்களை வரியில் பார்த்தனர்' அழகன் கனகராஜ் இராஜதந்திர நடவடிக்கைகளுக்காக வெளிநாடுகளுக்கு சென்ற, வெளிவிவகார அமைச்சின் பெண் அதிகாரிகள், அங்கு ஐந்து நட்சத்திர ஹோட்டல்களில் தங்கியிருந்தது மட்டுமன்றி, அங்கு நீலப்படங்களை பார்த்துள்ளனர். அவற்றுக்கெல்லாம் மக்களின் வரிப்பணமே செலுத்தப்பட்டுள்ளது என்று ஜே.வி.பி குற்றஞ்சாட்டியுள்ளது. நாடாளுமன்றத்தில் நேற்றுப் புதன்கிழமை இடம்பெற்ற வெளிவிவகார அமைச்சு மீதான குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே, ஜே.வி.பியின் எம்.பியான பிமல் ரத்னாயக்க மேற்கண்ட குற்றச்சாட்டை முன்வைத்தார். அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்…
-
- 4 replies
- 505 views
-
-
தென்னாபிரிக்க உயர்ஸ்தானிகர்-சம்பந்தன் சந்திப்பு இலங்கைக்கான தென்னாபிரிக்க உயர்ஸ்தானிகர் ரொபினா மார்க்ஸிற்கும் எதிர்கட்சித் தலைவரும் தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தனுக்கும் இடையில் முக்கிய சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. அண்மைக்கால அரசியல் ரீதியான மேம்பாடு, புதிய அரசியலமைப்பு உருவாக்கத்தில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம், நீடித்த அமைதி மற்றும் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதன் முக்கியத்துவம், போன்ற விட யங்கள் குறித்து ஒரு மணிநேரம் இடம்பெற்ற இந்த சந்திப்பின்போது இரா.சம்பந்தன் எடுத்துரை த்துள்ளார். நாடாளுமன்ற வளாகத்தில் நடைபெற்ற இந்த சந்திப்பில் தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்தி…
-
- 4 replies
- 691 views
-
-
தமிழகத்தில் தமிழீழ விடுதலைப் புலிகள் பயிற்சி பெற்ற தமிழ்நாடு சேலம் மாவட்டம் மேட்டூரில் அமைந்துள்ள புலியூர் மண்ணிலே திரவிடர் விடுதலைக் கழகத்தின் ஏற்பாட்டிலே மாவீரர்களுக்கான வீரவணக்க நாள் இடம்பெற்றுள்ளது. நிகழ்வில் ஈழத் தமிழர் வாழ்வுரிமைக் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளரும் திராவிடர் விடுதலைக் கழகத்தின் தலைவருமான கொளத்தூர் தா.செ.மணி உள்ளிட்டவர்கள் கலந்துகொண்டனர். இந்நிகழ்வில் கருத்து தெரிவித்த தா.செ.மணி, நாங்கள் நின்று கொண்டிருக்கும் இந்தமண்ணில் தான் புலிகளின் முதலாவது பயிற்சியை மட்டுமன்றி விசேட பயிற்சிகளை மேற்கொண்டிருந்தார்கள். புலிகள் பயிற்சியை பெற்ற ஆரம்பகாலத்திலே நிதி நெருக்கடிகளை சந்தித்தபோது இங்குள்ள மக்கள் பல்வேறு உதவிகளை வழங்க…
-
- 0 replies
- 462 views
-
-
எனது குடும்பத்துக்கு பாதுகாப்புத் தேவை! உண்மையைக் கூறும் குழுமத்திடம் பெண் கோரிக்கை புலனாய்வுத்துறையினர் எமது வீட்டில் கஞ்சாவை வைத்துவிட்டு எனது கணவரை கைது செய்ய முற்படுகிறார்கள்.எனது குடும்பத்துக்கு பாதுகாப்புத் தேவை என குடும்பப் பெண் ஒருவர் உண்மையைக் கூறும் குழுமம் முன்னிலையில் கோரிக்கை விடுத்துள்ளார். வட மாகாண உண்மையைக் கூறும் குழுமத்தின் அமர்வு நேற்றைய தினம் யாழ்.சரஸ்வதி மண்டபத்தில் நேற்றைய தினம் நடைபெற்றது.அதில் கலந்து கொண்டு சாட்சியம் அளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் தொடர்ந்து சாட்சியம் அளிக்கையில் நான் அல்லாரை வடக்கு கொடிகாமம் பகுதியில் வசித்துவருகிறேன். தனது கணவன் தமிழீழ காவல் துறையில் கடமையாற்றி இருந்தார். கடந்த 2009 ஆ…
-
- 3 replies
- 363 views
-
-
யாழில் வெப்பநிலை குறைவு குளிருடனான காலநிலை நீடிக்கும் யாழ்.குடாநாட்டில்வெப்பநிலை 19.8 பாகை செல்சியஸ் ஆக உள்ளதாக யாழ். மாவட்ட வானிலை அவதான நிலைய பொறுப்பதிகாரி பிரதீபன் கூறியுள்ளார். நாட்டின் வடக்கு பகுதிகளில் காணப்படும் காலநிலை மாற்றம் தொடர்பில் இன்று (வியாழக்கிழமை) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், “தெற்மேற்கு வங்க கடலில் உருவான ‘நடா’ சூறாவளி தற்சமயம் காங்கேசன்துறையில் இருந்து வடக்கே 200 கிலோ மீற்றர் தூரத்தில் மையம் கொண்டுள்ளது. இது தமிழகத்தின் வடக் கு பக்கமாக நகர்ந்து செல்லும் என எதிர்பார்க்கப்படுகின்ற…
-
- 2 replies
- 746 views
-
-
உயிர் தியாகம் செய்து வெற்றியைத் தேடித்தந்த இராணுவத்தை ஒருபோதும் ஜனாதிபதியோ, பிரதமரோ காட்டிக் கொடுக்க மாட்டார்கள் என பாராளுமன்ற உறுப்பினர் சரத் அமுணுகம தெரிவித்தார். இன்று பாராளுமன்றத்தில் கருத்து வெளியிடும் போதே அவர் இதனைக் கூறினார். அவர் தொடர்ந்தும் அங்கு கருத்து தெரிவிக்கையில், மஹிந்த கடந்த காலத்தில் தேர்தலை நடத்தியது இலங்கையில் உள்ள ஜோதிடர்கள் கூறிய அறிவுரையின் அடிப்படையில் இல்லை. ஜெனிவாவை கருத்திற் கொண்டே அவர் தேர்தலை நடத்தினார். ஆனாலும் அவர் எதிர்பார்க்காத வகையில் தோல்வியடைந்தார். மேலும், எமது நாட்டில் இடம்பெற்ற போரினை வெற்றி கொள்ள இராணுவத்தினர் உயிர்தியாகங்களைச் செய்தனர். அவர்களுடைய சேவை என்பது அளப்பரிய…
-
- 0 replies
- 213 views
-
-
உத்தரதேவி தரண்புரண்டது கொழும்பிலிருந்து 11.50க்கு யாழ்ப்பாணத்தை நோக்கி புறப்பட்ட உத்தரதேவி கடுகதி புகையிரதம், அநுராதபுரம் தம்புத்தேகம என்னுமிடத்தில் வைத்து, தடம்புரண்டது. - See more at: http://www.tamilmirror.lk/187269/உத-தரத-வ-தரண-ப-ரண-டத-#sthash.lTCQPODn.dpuf
-
- 6 replies
- 734 views
-
-
வடக்கில் மதுபாவனை அதிகரிப்பு : தனி நபரின் நுகர்வு 5.7 லீற்றர் வடக்கில் மதுபாவனை 400 சதவீதம் அதிகரித்துள்ளதாக நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்தார். மேலும் 2015 ஆம் ஆண்டு தனி நபரின் மதுபான நுகர்வு 5.7 லீற்றர் பதிவாகியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். பாராளுமன்றம் இன்று காலை 9.30 மணிக்கு ஆரம்பமானது. இதன்போது வாய்மூல வினாவுக்கான நேரத்தின் போது ஜே.வி.பி எம்.பி. பிமல் ரத்நாயக்க எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். http://www.virakesari.lk/article/14065
-
- 3 replies
- 422 views
-
-
தமிழ் தேசிய கூட்டமைப்பினர் மீதான தாக்குதல் தொடர்பில் மேலும் மூன்று சாட்சியங்கள் பதிவு யாழ். தீவகத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பினர் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் தொடர்பாக மேலும் மூன்று சாட்சியங்கள் யாழ். மேல் நீதிமன்றத்தில் இன்று பதிவு செய்யப்பட்டுள்ளன. யாழ்ப்பாணம் தீவகத்தில் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டிருந்த தமிழ் தேசிய கூட்டமைப்பின் உறுப்பினர்கள் மீது, ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியினர் மேற்கொண்ட தாக்குதல் தொடர்பில் வடமாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கத்தின் சாரதி, முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜின் மெய்ப்பாதுகாவலர் மற்றும் ஆதரவாளர் ஆகியோர் இன்று சாட்சியமளித்துள்ளனர். 2001 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 28 ஆம் திகதி தீவகத்திற்கு …
-
- 0 replies
- 292 views
-
-
இந்திய கடற்படை தளபதி கிழக்கு கடற்படை தளத்திற்கு விஜயம் (படங்கள்) இந்திய கடற்படை தளபதி அட்மிரல் சுனில் லன்பா கிழக்கு கடற்படை தளத்திற்கு நேற்று (30) விஜயம் செய்துள்ளார். இவரை இலங்கை கடற்படை தளபதி வைஸ் எட்மிரல் ரவீந்திர விஜேகுணவர்தன மற்றும் கிழக்கு கடற்படை கட்டளை தளபதி டிராவிஷ் சின்ஹா ஆகியோர் வரவேற்றுள்ளனர். இந்நிலையில் வருகைத்தந்துள்ள இந்திய கடற்படை தளபதி இலங்கை கடற்படையைச் சேர்ந்த 123 கடற்படை அதிகாரிகள் மற்றும் 148 மாலுமிகளுக்கு இந்தியாவின் பல்வேறு கல்வி நிறுவனங்களில் கற்கைநெறிகளில் ஈடுபடும் வாய்ப்பினை பெற்றுத்தருவதாக தெரிவித்துள்ளார். இந்திய கடற்படை தளபதி திருகோணமலை துறைமுகம், கடற்படை அருங்காட்சியகம் மற்றும் கோணேஸ்வர…
-
- 0 replies
- 419 views
-
-
கருணாவை பிணையில் விடுவிப்பதற்கு முடியுமா.? முன்னாள் தேசிய நல்லிணக்க அமைச்சரும், முன்னாள் மீள் குடியேற்ற பிரதியமைச்சரும், முன்னாள் ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் உப தலைவர்களில் கருணா அம்மான் என அறியப்படும் விநாயகமூர்த்தி முரளிதரனை பிணையில் செல்ல அனுமதிப்பதா இல்லையா என எதிர்வரும் திங்கள் அன்று ஆராய்வதாக கொழும்பு பிரதான நீதிவான் நீதிமன்றம் அறிவித்தது. கருணா அம்மான் சார்பில் கொழும்பு பிரதான நீதிவான் கிஹான் பிலபிட்டிய முன்னிலையில் இன்று இடையீட்டு மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டு பிணை கோரப்பட்ட நிலையிலேயே நீதிவான் இதனைத் தெரிவித்தார். http://www.virakesari.lk/article/14066
-
- 1 reply
- 414 views
-
-
யாழ். பருத்திதுறையில் பாரிய புயல் : மரங்கள் முறிந்து விழுந்து குடியிருப்புகள் சேதம் (காணொளி இணைப்பு) வங்கக்கடலில் உருவாகியுள்ள "நாடா" எனும் புயலின் தாக்கத்தினால் யாழ்ப்பாணம் பருத்திதுறைப் சாரையடி பகுதியில் வீசிய புயலால் பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது. திருகோணமலையில் இருந்து 450 கிலோமீற்றர் தூரத்தில் நேற்று (30) இரவு நிலைகொண்டிருந்த நாடா புயல் முல்லைத்தீவு மற்றும் யாழ்குடா ஊடாக வடமேற்கு நோக்கி நகரத் தொடங்கியுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்திருந்தது. இந்நிலையில் வடக்கில் கடுமையான காற்றுடன் மழையும் பெய்து வருவதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக யாழ்ப்பாணம் பருத…
-
- 0 replies
- 491 views
-
-
கிளி.முருகானந்தா வகுப்பறை கட்டடம் சரிந்து வீழ்ந்தது நாட்டில் ஏற்படுள்ள சீரற்ற கால நிலை காரணமாக பல்வேறு பகுதிகளில் விபத்துக்கள்,உயிரிழப்புகள் நடந்த வண்ணம் உள்ளன. அந்த வகையில் சற்றுமுன் கிளிநொச்சி முரசுமோட்டை முருகானந்தா கல்லூரியின் தற்காலிக வகுப்பறைக் கட்டடம் கடும் காற்றினால் சரிந்து வீழ்ந்துள்ளது. இன்று வீசிய கடும் காற்று காரணமாக கிளிநொச்சி முருகானந்தா கல்லூரியின் 50 அடி நீளமான தகரக் கொட்டகையுடன் கூடிய வகுப்பறை சரிந்து வீழ்ந்துள்ளது. மைதானத்திற்கு அண்மையில் அமைந்துள்ள குறித்த வகுப்பறையை இன்றைய தினம் கற்றல் செயற்பாடுகளுக்காக ஆசிரியர்கள் பயன்படுத்தவில்லை,அதனால் குறித்த…
-
- 0 replies
- 232 views
-
-
கைதானார் கருணா அம்மான் அரசாங்க வாகனமொன்றை முறைகேடாகப் பயன்படுத்தியமை தொடர்பாக, கருணா அம்மான் என்றழைக்கப்படும் முன்னாள் அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் நிதிக் குற்றப் புலனாய்வு பொலிஸாரினால் சற்று முன்னர் கைது செய்யப்பட்டுள்ளார். - See more at: http://www.tamilmirror.lk/187107/க-த-ன-ர-கர-ண-அம-ம-ன-#sthash.kySBhsHN.dpuf கருணா கைதானார்..! கருணா அம்மான் என அழைக்கப்படும் முன்னாள் அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் சற்றுமுன்னர் கைதானார். நிதி முறைகேடு விடயமொன்று தொடர்பில் வாக்குமூலமளிப்பதற்காக இன்று காலை இவர் நிதிமோசடி விசாரணைப்பிரிவில் ஆஜராகியிருந்தமை குறிப்பிடத்தக்கது. http://www.virakesari.lk/article/13979…
-
- 27 replies
- 3.6k views
- 1 follower
-
-
கோத்தாபய ராஜபக்ஷ வெளிநாடு செல்வதற்கான தடையை நீக்க கொழும்பு நீதிமன்றம் உத்தரவு முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷ உட்பட ஏழு சந்தேக நபர்களுக்கு எதிராக பிறப்பிக்கப்பட்டிருந்த வெளிநாடு செல்வதற்கான தடை உத்தரவை நீக்குமாறு கொழும்பு மாஜிஸ்திரேட் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இலங்கை முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷ கடந்த ஆட்சியின் போது, அரசாங்கத்திற்கு சுமார் 11 பில்லியன் ரூபாய்க்கு அதிகமாக நஷ்டத்தை ஏற்படுத்தியதாக முன்னாள் பாதுகாப்பு செயலாளர் மற்றும் மூன்று முன்னாள் கடற்படை தளபதிகள் உட்பட ஏழு சந்தேக நபர்களுக்கு பிணை வழங்கியபோது அவர்களின் வெளிநாட்டு பயணங்களை முடக்க நீதிமன்றம் உத்தரவிட்டத…
-
- 0 replies
- 241 views
-
-
முல்லைத்தீவில் 'நாடா' புயலின் தாக்கம் : மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு (கே .குமணன்) வங்கக்கடலில் உருவாகியுள்ள "நாடா" எனும் புயலின் தாக்கத்தினால் வடக்கில் கடும் காற்றுடன் கூடி மழை பெய்துவரும் நிலையில் முல்லைத்தீவு மாவட்டத்தின் கரையோர பகுதிகளும் இதனால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன. திருகோணமலையில் இருந்து 450 கிலோமீற்றர் தூரத்தில் நேற்று (30) இரவு நிலைகொண்டிருந்த நாடா புயல் முல்லைத்தீவு மற்றும் யாழ்குடா ஊடாக வடமேற்கு நோக்கி நகரத் தொடங்கியுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்திருந்தது. முல்லைத்தீவு பகுதியில் கடும் காற்று வீசிவருவதனால் மக்களின் இயல்பு வாழ்வு பாதிப்புக்குள்ளாகியுள்ளது. முல்லைத்தீவு மாவட்டத்தின் கரையோரப்பகுதிகளில் …
-
- 0 replies
- 429 views
-
-
காங்கேசன்துறை கடற்பரப்பில் கடற்கொந்தளிப்பு -எம்.றொசாந்த் திருகோணமாலையில் இருந்து 400 கிலோமீற்றர் தூரத்திலும், காங்கேசன்துறையில் இருந்து 200 கிலோமீற்றர் தூரத்திலும் வீசிக்கொண்டிருக்கும் நாடா புயல், தற்போது வடகிழக்கு பகுதியில் மையம் கொண்டுள்ளது. அதனால் வடபகுதி எங்கும் கடும் மழை பெய்துவருவதுடன் கடும் காற்றும் வீசுகின்றது. காங்கேசன்துறை கடற்பரப்பை அண்மித்த பகுதிகளில் கடற்கொந்தளிப்பும் ஏற்பட்டுள்ளது. அனர்த்த முகாமைத்துவ பிரிவால் வடபகுதியில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. - See mo…
-
- 0 replies
- 276 views
-