Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. யுத்தத்தால் கணவனை இழந்த பெண்களுக்கு விசேட வேலைத்திட்டம் சபையில் பிரதமர்; சகல கட்சிகளின் ஆதரவையும் கோரினார்! எம்.நேச­மணி, எம்.எம்.மின்ஹாஜ் வடக்கில் யுத்­தத்­தினால் கண­வன்­மாரை இழந்த பெண்கள் உட்­பட பாதிப்­ப­டைந்த மக்­க­ளுக்கு விசேட வேலைத்­திட்­ட­மொன்றை அர­சாங்கம் ஆரம்­பிக்­க­வுள்­ளது. மேலும் வரவு – செலவுத் திட்­டத்தின் மூல­மாக வடக்கில்முன்­ னெ­டுக்­கப்­படும் முத­லீ­டுக­ளுக்கு விசேட சலுகை வழங்­க­வுள்ளோம். இதன்படி நிலை­யான அபி­வி­ருத்­தியை நோக்கித் தயா­ரிக்­கப்­பட்ட 2017 ஆம் ஆண்டு வரவு – செலவுத் திட்டத்­ திற்கு அனைத்துக் கட்­சி­களும் ஆத­ரவு வழங்க வேண்­டு­மென பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க தெரி­வித்தார். வரவு – செல­…

  2. நல்லாட்சியில் தமிழர் வைத்த நம்பிக்கை வீழ்ச்சியடைகிறது-கூட்டமைப்பு எச்சரிக்கை புதிய அரசாங்கத்தின் மீது தமிழ் பேசும் மக்கள் பாரிய எதிர்பார்ப்புக்களை வைத்திருந்தனர் எனினும் அவர்கள் வைத்திருந்த ஆழமான நம்பிக்கை வீழ்ச்சிகண்டு வருவதாக அரசாங்க த்தை எச்சரித்தார் நாடாளுமன்றத்தின் குழுக்களின் பிரதித் தலைவரும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன் தெரி வித்து ள்ளார். வடக்கு, கிழக்கில் படையினரால் கையகப்படுத்தப்பட்டுள்ள பொது மக்களின் காணிகள் விடு விக்கப்படவேண்டும் என்ற நிலைப்பாட்டில் அரசாங்கம் இருக்கின்றபோதும் இராணுவம் உட்பட அரச படைகள் அதற்கு எதிரான நிலைப்பாட்டில் இருப்பதாகவும் செல்வம் அடைக்கல …

    • 4 replies
    • 414 views
  3. மத்தள விமான நிலையத்தின் சேவையை 45 சர்வதேச விமான நிறுவனங்கள் நிராகரிப்பு குளோபல் தமிழ்ச் செய்தியாளர் கொழும்பு மத்தள விமான நிலையத்தின் சேவையை 45 சர்வதேச விமான சேவை நிறுவனங்கள் நிராகரித்துள்ளன. கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் திருத்தப் பணிகள் நடைபெறும் காலத்தில் மாற்றீடாக மத்தள விமான நிலையத்தினை பயன்படுத்துமாறு 45 வெளிநாட்டு விமான சேவை நிறுவனங்களிடம அரசாங்கம் விடுத்த கோரிக்கையை குறித்த சர்வதேச விமான சேவை நிறுவனங்கள் நிராகரித்துள்ளன. கடந்த 20 ஆண்டுகள் புனரமைக்கப்படாத நிலையில் காணப்படுகின்ற கட்டுநாயக்க விமான நிலையத்தின் ஓடு பாதை 50 மில்லியன் அமெரிக் டொலர் செலவில் புனரமைக்கப்பட உள்ளது. தற்போது …

  4.  அரசியல் கைதிகளை விடுவிக்குமாறு கோரி கையெழுத்து போராட்டம் பல வருடங்களாக விசாரணையின்றி தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகளை விடுதலை செய்யுமாறு கோரி, நேற்றுச் சனிக்கிழமை (12) வடமராட்சி பகுதியில் கையெழுத்து போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. அரசியல் கைதிகளை விடுவிக்குமாறு கோரி, நாடு தழுவிய ரீதியில் கையெழுத்து போராட்டத்தினை அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பு மேற்கொண்டு வருகின்றது. மேற்படி கையொழுத்துத் திரட்டும் பணி, வடமராட்சியின் வல்வெட்டித்துறை, நெல்லியடி, மருதங்கேணி, பருத்தித்துறை, குடத்தனைப் பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டது. இதில் ஏராளமான மக்கள் ஆர்வ…

  5. ஐ.எஸ்.ஐ.எஸ். போன்ற பயங்­க­ர­வாத அமைப்­புக்­களில் இலங்­கை­யர்­களின் இணைவு சிரியா உள்­ளிட்ட நாடு­களில் ஐ.எஸ்.ஐ.எஸ். உள்­ளிட்ட பல்­வேறு பயங்­க­ர­வாத அமைப்­புக்­க­ளுடன் இணைந்து இலங்­கை­யர்கள் செயற்­ப­டு­வது குறித்து தற்­போது தீவி­ர­மாக அவ­தானம் செலுத்­தப்­பட்டு வரு­வ­தாக பொலிஸ் மா அதிபர் பூஜித ஜய­சுந்­தர தெரி­வித்தார். செயற்­பாட்டு ரீதி­யா­கவோ வேறு வகை­க­ளிலோ பயங்­க­ர­வாத அமைப்­புக்­க­ளுடன் இணைந்து செயற்­படும் இலங்­கை­யர்கள் தொடர்பில் உள­வுத்­துறை ஊடாக தக­வல்கள் சேக­ரிக்­கப்­பட்டு வரு­வ­தாக அவர் சுட்­டிக்­காட்­டினார். 85 ஆவது சர்­வ­தேச பொலிஸ் மாநாட்டில் இலங்கை சார்­பாக உரை­யாற்றும் போதே அவர் இதனைத் தெரி­வித்தார். 2015…

  6. ஆவாகுழுவுடன் தொடர்பு முல்லை இளைஞன் கைது? முல்லைத்தீவு மாந்தைகிழக்கு விநாயகபுரம் பகுதியில் இளைஞர்ஒருவர் பயங்கரவாதத்தடுப்பு பிரிவு பொலிசாரால் நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டுள்ளார். முல்லைத்தீவு மாந்தைகிழக்கு பிரதேச செயலர் பிரிவின் கீழ் உள்ள விநாயகபுரம் பகுதியைச் சேர்ந்த யோகராஜா விதுசன் (வயது 20) என்ற இளைஞரே கைது செய்யப்பட்டுள்ளார். நேற்று முன்தினம் பிற்பகல் பயங்கரவாத குற்றத்தடுப்புப் பிரிவு பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். நேற்று முன்தினம் பிற்பகல் அவரது வீட்டிற்குச் சென்ற பயங்கரவாதத்தடுப்பு பிரிவு பொலிசார் அவரை கைது செய்து சென்றதற்கான கடிதத்தினை அவரது குடும்பத்தினரிடம் கையளித்துள்ளனர். …

  7. ட்ரம்பின் வெற்றியை முன்னுதாரணமாக வைத்து அரசியலில் இறங்கவுள்ள கோத்தா! [Sunday 2016-11-13 08:00] முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச அடுத்த ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட தயாராகி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் டொனால்ட் ட்ரம்ப்பின் சமீபத்திய வெற்றியின் அடிப்படையில் கோத்தபாய ராஜபக்ச இந்த முடிவை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது. கோத்தபாய ராஜபக்ச தனது ட்விட்டர் கணக்கில்,டொனால்ட் ட்ரம்பின் வெற்றியை இலங்கையர்கள் கருத்தில் கொள்ள வேண்டிய ஒரு பாடம் என குறிப்பிட்டுள்ளார். மக்களுக்கு வெற்று வாக்குறுதி வழங்கும் அரசியல்வாதிகள் வேண்டாம் என்ற எண்ணம் ஏற்பட்டமையாலேயே டொனால்ட் டரம்ப் வெற்றி பெற்றார…

    • 0 replies
    • 264 views
  8. பெரும்பான்மையின மக்கள் நினைத்தால் எதுவும் நடக்கும் : கோத்தா அமெ­ரிக்காவின் பெரும்­பான்மை மக்கள் குழு­வினர் ஒன்­றி­ணைந்து டொனால்ட் டிரம்பின் வெற்­றியை உறு­தி செய்­துள்­ளனர். எனவே இலங்­கையின் பெரும்­பான்மை மக்­களும் இதனை பாட­மாகக் கொள்ள வேண்டும் என முன்னாள் பாது­காப்பு அமைச்சின் செய­லாளர் கோத்­த­பாய ராஜ­பக் ஷ தெரி­வித்தார். அதே­நேரம், ஒபா­மாவின் காலத்தில் ஐக்­கிய நாடுகள் மனித உரிமை பேர­வை­யினால் இலங்கை மீது விடுக்­கப்­பட்ட அழுத்­தங்கள் குறை­வ­தற்கும் டிரம்பின் வெற்றி பங்­க­ளிப்புச் செய்யும் என்றும் அவர் சுட்­டிக்­காட்­டினார். பேரா­சி­ரியர் நவீன் டி சில்­வாவின் எனது உல­கத்தில் 30 வரு­டங்கள் என்று நூல் வெளியீட்டு விழா நேற்று க…

  9. ஈழத்தமிழர்கள் ஒவ்வொருவரின் நெஞ்சங்களில் குடிகொண்டிருப்பவர்களை நினைவுகூரும் மாதமான கார்த்திகை மாதம் மிகவும் சிறப்புடையது அந்த மாதத்தில் விடுதலைக்காக வித்தாகிபோன மாவீரர்களை ஒவ்வொருவரும் நினைவுகூருவது மிகநீண்டகாலமாக நிலவிவருவது அனைவரும் அறிந்ததே. அந்த நிகழ்வை குழப்புவதற்கும் ஈழத்தமிழர்களிடையே இன விடுதலை என்ற எண்ணமோ நினைவுகளோ இருக்ககூடாது என்பதில் சிங்கள பேரினவாதிகளுக்கு எவ்வளவு அக்கறை உள்ளதோ அதேயளவு பணிகளை யாழிலுள்ள இந்திய துணைதூதரகமும் செய்துவருவது கடந்த காலங்களிலும் இடம்பெற்று வந்துள்ளது. அந்த வகையிலேயே இம்முறை அதன் கோரமுகத்தின் உச்சத்தை தொடும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள வடஇந்தியர்களின் கோலி பண்டிகை நிகழ்வானது யாழ்ப்பாணத்தில் நடாத்துவதற்கு ஒழுங்கு …

  10. அதிக வட்டிக்கு கடன் இலங்கை அரசு நிரூபிக்குமா? சீனத்தூதுவர் சவால் கடந்த ஆட்சிக்காலத்தில் சீனாவிடம் அதிக வட்டிக்கு கடன் பெறப்பட்டது என்பதை இலங்கை அரசாங்கத்தினால் நிரூபிக்க முடியுமா? என்று சவால் விடுத்துள்ளார் சீனத் தூதுவர் யி ஷியாங்லியாங் தெரிவித்துள்ளார். இலங்கையில் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று கருத்து வெளியிட்ட போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். “இலங்கையில் சீனா மறைமுகமான எந்த அரசியல் நிகழ்ச்சி நிரல்களையும் கொண்டிருக்க வில்லை. அத்தகைய குற்றச்சாட்டுகளை முற்றாக நிராகரிக்கிறேன். முன்மொழியப்பட்ட அம்பாந்தோட்டை பொருளாதார வலயத்தில் நாம் பிரதான கவனத்தைச் செலுத்துவோம். …

  11. யாழ். மாணவர்கள் மோதல் சம்பவம் தொடர்பான வழக்கு ஒத்திவைப்பு யாழ். பல்கலைக்கழகத்தில் இடம்பெற்ற தமிழ், சிங்கள மாணவர்களுக்கு இடையிலான மோதல் சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணை எதிர்வரும் டிசம்பர் மாதம் 08 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. குறித்த உத்தரவினை யாழ். நீதிமன்ற நீதிபதி எஸ்.சதீஸ்வரன் நேற்று பிறப்பித்துள்ளார். கடந்த ஜூலை மாதம் 16ம் திகதி யாழ். பல்கலைக்கழகத்தின் விஞ்ஞானப்பீட புதுமுக மாணவர்களின் வரவேற்பு நிகழ்வின் போது மாணவர்களுக்கு இடையிலான மோதல் ஏற்பட்டதுடன், சிங்கள மாணவர் ஒருவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. குறிப்பிடத்தக்கது. http://www.virakesari.lk/article/13425

  12. யாழ் மாநகர சபை பணியாளர்களுக்கான நிரந்தர நியமனத்தை வழங்க நடவடிக்கை எடுக்குமாறு டக்ளஸ் தேவானந்தா வலியுறுத்து : வடக்கு மாகாணத்திற்கு உட்பட்ட யாழ்ப்பாணம் மாவட்டத்தில் செயற்பட்டு வருகின்ற ஒரேயொரு மாநகர சபையான யாழ்ப்பாணம் மாநகர சபையின் சுகாதார மற்றும் வேலைப் பகுதிகளில் தற்காலிமாக பணியாற்றி வருகின்ற சுமார் 197 தொழிலாளர்கள் தங்களுக்கான நிரந்தர நியமனம் கோரி கடந்த 07ம் திகதி முதல் பணிப் புறக்கணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்களுடன் இணைந்து ஏனைய நிரந்தரப் பணியாளர்களும் இப் பணிப் புறக்கணிப்பில் ஈடுபட்டு வருவதன் காரணமாக, யாழ் மாநகரம் குப்பைகளால் நிரம்பி வழிகின்ற நிலையில், பல்வேறு சுகாதார சீர்கேடுகளுக்கும் அது வழி வகுத்துள்ளதுடன, மாநகர சபையின் அனைத்து உட்கட்டுமா…

  13. உரிய தீர்வு கிடைக்கும் வரை போராட்டம் தொடரும் யாழ் மாநகரசபை சுத்திகரிப்பு தொழிலாளர்கள் இன்று ஆறாம் நாளாகவும் பணிப்புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டுளனர். இவர்கள் கடந்த 10 வருடங்களாக தொழிலில் ஈடுபடும் தம்மை நிரந்தரமாக்க கோரி கடந்த திங்கட்கிழமை முதல் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது. தமக்கு உரிய தீர்வு கிடைக்கும் வரை தொடர்ச்சியாக போராட்டம் நடைபெறும் எனவும் எச்சரித்துள்ளனர். தற்காலிக பணியாளர்கள் 127 பேருக்கும் நியமனம் கிடைக்கும் வரை இப் போராட்டம் தொடர்சியாக நடைபெறும் எனவும் குறித்த பணியாளர்கள் தெரிவித்தனர். http://www.onlineuthayan.com/news/20072

  14. இலங்கையில் காணி வாங்குவதற்கான தடை நீக்கம் இலங்கையில் வெளிநாட்டவர்கள் காணி வாங்குவதற்காக போடப்பட்டிருந்த தடையை நீக்கியுள்ளதாக இலங்கை அரசு அறிவித்துள்ளது. இலங்கையை பொறுத்த வரையில் வெளிநாட்டு முதலீடுகள் மற்றும் பணத் தேவை அதிகம் தேவைப்படுவதாக நிதி அமைச்சர் ரவி கருணநாயக்க நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். 2014இல் வெளிநாட்டவர்கள் இலங்கையில் காணி, வீடுகள் வாங்குவதைத் தடைசெய்யும் சட்டம் அமுலுக்கு வந்ததமை குறிப்பிடத்தக்கது. http://www.onlineuthayan.com/news/20022

    • 10 replies
    • 831 views
  15. வரவு செலவுத் திட்டத்தால் பாதிக்கப்படும் தனியார் தொலைக்காட்சி நிறுவனங்கள் 2017ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் குறித்து இலங்கை தனியார் தொலைக்காட்சி சேவைகள் கவலை வெளியிட்டுள்ளது. தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மற்றும் திரைப்படங்கள் ஆகியவற்றிற்கு பின்னணி குரல் கொடுத்து ஒளிப்பரப்பு செய்யப்படுமாயின் ஒவ்வொரு 30 நிமிடத்திற்கும் வரியானது 90 ஆயிரம் ரூபாவில் இருந்து 3 இலட்சத்துக்கு அதிகரிக்கப்பட்டுள்ளமையே இதற்கு காரணமென இலங்கை தனியார் தொலைக்காட்சி நிறுவனங்கள் கவலை வெளியிட்டுள்ளன. 2017ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்ட வாசிப்பின் போதே இவ்வாறு வரி அதிகரிக்கப்பட்டுள்ளதாக நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளா…

  16. இடம்பெயர் மக்களுக்கு பொருத்து வீடுகள் வழங்கப்படுவதனை ஏற்க முடியாது – TNA குளோபல் தமிழ்ச் செய்தியாளர் கொழும்பு இடம்பெயர் மக்களுக்கு பொருத்து வீடுகள் வழங்கப்படுவுதனை ஏற்றுக்கொள்ள முடியாது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. பொருத்து வீட்டுத் திட்டத்தை முன்னெடுக்க புனர்வாழ்வு புனரமைப்பு மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சு முயற்சிப்பதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் குற்றம் சுமத்தியுள்ளார். சீமெந்து கற்களிலான வீடுகள் அமைக்கப்பட வேண்டுமென அவர் கோரியுள்ளார். பாராளுமன்றில் உரையாற்றிய போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். அரசாங்கத்தின் 65000 வீட்டுத் திட்டமானது கூடுதலான செலவில் மே…

  17. இராணுவ நிறப்பூச்சு பூசப்பட்ட மோட்டார் சைக்கிள் பறிமுதல் வவு­னி­யாவில் நபரொருவரால் பயன்­ப­டுத்தி வந்த மோட்டார் சைக்கிள் ஒன்றை வவுனியா பொலிஸார் கைப்பற்றியுள்­ளனர். குறித்த மோட்டார் சைக்கிள் இரா­ணு­வத்­தி­னரின் நிறத்தில் நிறப்­பூச்சு பூசப்­பட்ட காரணத்தினாலேயே அதனை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். குறித்த மோட்டார் சைக்­கிளை வுவ­னியா நீதி­மன்­றத்தில் வவுனியா குற்­றத்­த­டுப்பு பொலிஸார் முன்னிலைப்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது. http://www.virakesari.lk/article/13411

  18. பட்ஜெட் தமிழருக்கு ஏமாற்றம்-சுமந்திரன் 2017ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்டம் வடக்கு- கிழக்கு தமிழ் மக்களுக்கு பெரும் ஏமாற்றமாகவே அமைந்துள்ளது என தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்து ள்ளார். வரவு-செலவு திட்டம் தொடர்பில் நாடாளுமன்ற வளாகத்தில் வைத்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கை யிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அங்கு தொடர்ந்து தெரிவித்த அவர், ‘இந்த வரவு செலவு திட்டத்தில் வருவாயை அதிகரிப்பதற்கான முய ற்சிகள் தொடர்பில் தெளிவாக குறிப்பிடப்படவில்லை. எனினும், மக்களின் வாழ்வாதாரத்தை கட்டியெழுப்ப க்கூடிய பல வேலைத்திட்டங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.ஆனால் அவை நடை…

  19. வுனியாவில் கடந்த 10மாதங்களில் 13 இலட்சம் மதுபானம் விற்பனை வவுனியா மாவட்டத்தில் கடந்த 10 மாதங்களில் 13 இலட்சத்து இருபத்தெட்டாயிரத்து ஐநூற்று ஐந்து லீற்றர் மதுபானங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக வவுனியா மாவட்ட மதுவரித் திணைக்களம் தெரிவித்து ள்ளது. இந்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் ஒக்ரோபர் மாதம் வரையிலான காலப்பகுதியில் 13 இலட்சத்து இருபத்தொட்டாயிரத்து ஐநூற்று ஐந்து லீற்றர் மதுபான வகைகள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. அதன்படி பியர் வகைகள் ஆறு லட்சத்து அறுபத்தேழாயிரத்து முப்பத்து நான்கு லீற்றரும், உள்நாட்டு சாராய வகைகள் ஆறு லட்சத்து நாற்பத்து இரண்டாயிரத்து நூற்று இருபத்தைந்து லீற்றரு…

  20. பாராளுமன்றில் இலத்திரனியல் வாக்கெடுப்பு முறை அறிமுகம் செய்யப்பட உள்ளது குளோபல் தமிழ்ச்செய்தியாளர் கொழும்பு பாராளுமன்றில் இலத்திரனியல் வாக்கெடுப்பு முறை அறிமுகம் செய்யப்பட உள்ளது. இந்த நோக்கத்திற்காக கைவிரல் அடையாளங்கள் திரட்டப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. விரைவில் இலத்திரனியல் வாக்கெடுப்பு முறையை பாராளுமன்றில் அறிமுகம் செய்ய முடியும் என எதிர்பார்ப்பதாக பிரதி சபாநாயகர் திலங்க சுமதிபால தெரிவித்துள்ளார். கைவிரல் அடையாளம் திரட்டும் பணிகளுக்கு அனைத்து உறுப்பினர்களதும் ஒத்துழைப்பு வழங்கப்படும் என எதிர்பார்ப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். http://globaltamilnews.net/archives/6777

  21. கிளிநொச்சியில் இடம்பெறும் தொடா் கைதுகள் குளோபல் தமிழ்ச்செய்தியாளர் கிளிநொச்சி யாழ் பல்கலைகழக மாணவா்களின் கொலையை கண்டித்து கடந்த மாதம் 25 ஆம் திகதி வடக்கில் மேற்கொள்ளப்பட்ட ஒரு நாள் கதவடைப்பு போராட்டத்தின் போது கிளிநொச்சியில் அமைதியின்மையை தோற்றுவித்தவா்கள் தற்போது கைது செய்யப்பட்டு வருகின்றாா்கள். இதுவரை மூன்று போ் கைது செய்யப்பட்டுள்ளனா். எனையவா்களையும் கைது செய்யும் வகையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது எனவும் தெரிவிக்கப்படுகிறது. ஊடகங்களில் வெளியான புகைப்படங்களை ஆதரமாக கொண்டு சந்தேக நபா்கள் கைது செய்யப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது. குறித்த கதவடைப்பு நாளன்று ஏ9 வீதி மற்றும் கிளிநொச்சி புறநகா…

  22. பாரதிபுரம் பாடசாலை மாணவா்களுக்கு சப்பாத்துகளும்,புத்தக பைகளும் வழங்கப்பட்டுள்ளன. குளோபல் தமிழ்ச்செய்தியாளர் கிளிநாச்சி கிளிநொச்சி பாரதிபுரம் பாடசலையில் கடந்த மாதம் பதினைந்தாம் திகதி பாடசாலைக்கு சப்பாத்து அணிந்த வராத மாணவா்களின் செருப்புக்கள் ,சாண்ரில்ஸ்கள் கழற்றப்பட்டு வீதியில் குவித்த சம்பவம் பல்வேறு தரப்புக்கள் மத்தியில் பெரும் விசனத்தை ஏற்படுத்திய நிலையில் குறித்த செய்தியினை ஊடகங்களில் பார்வையிட்ட சுவிஸ் நலம் காப்போம் அமைப்பினா் முன் வந்து குறித்த பாடசாலையில் சப்பாத்து வாங்க முடியாத மாணவா்களின் பெயா் விபரங்களை வலயக் கல்வித்திணைக்களம் ஊடாக பாடசாலை அதிபரிடம் பெற்று அவா்ளுக்கு இன்று 11-11-2016 வெள்ளிக்கிழமை சப்பாத்துக்கள் மற்றும் புத்…

    • 4 replies
    • 630 views
  23. வடக்கு மக்கள் ஐக்கிய இலங்கை என்ற சொல்லுக்கும் தெற்கு மக்கள் சமஸ்டி என்ற சொல்லுக்கும் அஞ்சுகின்றனர்- ஜனாதிபதி குளோபல் தமிழ்ச்செய்தியாளர் கொழும்பு நாட்டு மக்களுக்கு ஆற்றி வரும் சேவை குறித்து திருப்தி அடைவதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.இந்திய ஊடகமொன்றுக்கு வழங்கிய செவ்வியில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார். 19ம் திருத்தச் சட்டம் அமுல்படுத்தப்பட்டதாகவும் சுயாதீன ஆணைக்குழுக்கள் நிறுவப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ள அவர் மனித உரிமைகள், ஜனநாயக உரிமைகள், அடிப்படை உரிமைகளை உறுதி செய்துள்ளதுடன், ஊடக சுதந்திரத்தையும் உறுதிப்படுத்தியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். தம்மை ஜனாதிபதியாக நியமித்த போது மக்கள் உணவும் குடிநீ…

  24. அரசியல் சதுரங்கக் காய் நகர்த்தலில் சிக்கி திணறும் சிறீலங்கன் எயார்லைன்ஸ் முன்னொரு காலத்திலே என்றுதான் எழுதுவதை ஆரம்பிக்க வேண்டியுள்ளது. அப்படியொரு காலத்தில் தனிக்காட்டு ராஜாவாக இலங்கையின் தேசிய விமானச் சேவையான எயர்லங்கா இலாபம் மேல் இலாபம் ஈட்டி தன் நாட்டிற்கு புகழ் சேர்த்துக் கொண்டிருந்தது. ஆனால் யார் கண்பட்டதோ தெரியவில்லை.கடந்த காலங்களில் கோடிக்கணக்கான பணத்தை முழுங்கிய எயர்லங்கா, இப்பொழுது அரசுக்கே ஒரு சுமையாக நிற்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. 2008இல் ஐக்கிய அரபுக் குடியரசின் எமிரேட் விமான நிறுவனம், விழுந்தவரை கைபிடித்து தூக்கலாமென நினைத்து முயற்சித்தது. ஆனால் அதல பாதாளத்தில் விழுந்துவிட்ட அதனைத் தூக்கும் திறன் எமிரேட்டிடம் இருக்கவில்லைய…

  25. இலங்கைக்கு எதிரான குற்றச்சாட்டுக்களில் கலப்பு நீதிமன்றம் அத்தியாவசியமாகும் இறுதிக்கட்ட போரின் போது இலங்கைக்கு எதிரான போர் குற்றச்சாட்டுக்கள் மற்றும் பாரதூரமான மனித உரிமை மீறல்கள் தொடர்பான விசாரணைக்கு சர்வதேச பங்களிப்புடனான கலப்பு நீதிமன்றம் உருவாக்கப்பட வேண்டும் என சர்வதேச மன்னிப்பு சபை வலியுறுத்தியுள்ளது. மேலும் உண்மைகளை கண்டறிதல், பாதிக்கப்பட்டவர்களுக்க நீதியை வழங்குதல் நட்ட ஈட்டை பெற்றுக் கொடுத்தல் மற்றும் இவ்வாறான சம்பவங்கள் மீண்டும் இடம்பெறாமல் இருப்பதற்கு நடவடிக்கை எடுத்தல் ஆகிய நான்கு விடயங்களை உறுதிப்படுத்தும் வகையில் நிரந்தரமான பொறிமுறை ஒன்றை உருவாக்கப்பட வேண்டும் எனவும் சர்வதேச மன்னிப்பு சபை வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்ப…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.