ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143410 topics in this forum
-
கிளிநொச்சி கல்வி வலயத்திற்குட்பட்ட பாடசாலை ஒன்றில் தரம் 11 கல்வி கற்கும் 24 மாணவா்களின் காலணிகள் பாடசாலையின் ஒழுக்கத்திற்கு பொறுப்பான ஆசிரியரால் தீ வைத்து எரிக்கப்பட்டுள்ளது. இச் சம்பவம் கடந்த 03-11-2016 வியாழக்கிழமை பிற்பகல் 2 மணிக்கு பின்பு இடம்பெற்றுள்ளது. கிளிநொச்சி கண்டாவளை கல்விக் கேட்டத்திற்குட்பட்ட பிரமந்தனாறு பகுதியில் அமைந்துள்ள பாடசாலை ஒன்றில் தரம் 11 இல் 84 மாணவா்கள் கல்வி கற்று வருகின்றாா்கள்,இதில் 24 மாணவா்கள் குறித்த தினத்தன்று பாடசாலைக்கு சப்பாத்து அணியாது செருப்பு, சாண்டில்ஸ், உள்ளிட்ட காலணிகளை அணிந்து சென்றுள்ளனா். இதனை அவதானித்த பாடசாலையின் ஒழுக்கத்திற்கு பொறுப்பான ஆசிரியரால் குறிப்பிட்ட 24 மாணவா்களினதும் காலணிகளும் கழற்றப்பட்டு ஒரு பைய…
-
- 10 replies
- 1k views
-
-
தமிழ் மக்கள் தம்வாழ்வை நெறிப்படுத்துவதற்கு யாரிடமும் செல்ல வேண்டியதில்லை. வாழ்க்கையை எப்படித் திட்டமிட வேண்டும் என்பது முதல் எப்படி வாழ வேண்டும் என்பது வரை நம் வள்ளுவப் பெருமகனார் நமக்கு திருக்குறள் மூலம் உரைத்துள்ளார். திருக்குறளைக் கற்று அதன் வழி நடப்போமாக இருந்தால் இந்த உலகம் நம்மைப் போற்றும். எனினும் திருக்குறள் பற்றி நாம் கவனம் கொள்வதில்லை. இன்று வடக்கு மாகாண சபையில் ஊழல் தொடர்பான விவகாரங்களே பேசுபடுபொருளாகியுள்ளன. வடக்கு மாகாண அரசு அமையப்பெற்று ஒரு சில வருடங்கள் நிறைவடைவதற்குள் அந்தச் சபையின் விவாதம் வட மாகாணத்தின் அதிகார எல்லைக்குள் நடந்த ஊழல் தொடர்பானதாக இருப்பது வேதனைக்குரியது. இன விடுதலைப்போராட்டத்தில் ஈடுபட்டு ஆயிரக் கணக்கான தமிழ் இளைஞர்கள் தம்…
-
- 0 replies
- 300 views
-
-
போர்க்குற்றச்சாட்டு சுமத்தப்பட்ட மற்றொரு இராணுவ அதிகாரியும் ஓய்வு இலங்கையில் இடம்பெற்ற இறுதிக்கட்டப் போரில் போர்க்குற்றம் இழைத்தவர்கள் என்று குற்றம்சாட்ட ப்பட்டவர்களில் ஒருவரான இராணுவ அதிகாரி மேஜர் ஜெனரல் நந்தன உடவத்த நேற்றுடன் ஓய்வு பெற்று ள்ளார். இறுதிக்கட்டப் போரில், மணலாறில் இருந்து முல்லைத்தீவு நோக்கி நகர்ந்த இராணுவத்தின் 59 ஆவது டிவி சனின் கட்டளை அதிகாரியாக பணியாற்றியவர் மேஜர் ஜெனரல் நந்தன உடவத்த. இறுதிக்கட்டப் போரில் வன்னியில் இடம்பெற்ற போர்க்குற்றங்களுக்குப் பொறுப்பான இராணுவ அதிகா ரிகளில் ஒருவர் என்ற குற்றச்சாட்டுக்கு உள்ளானவர் இவர். 55 வயதை எட்டிய மேஜர் ஜெனரல் நந்தன உடவ…
-
- 0 replies
- 315 views
-
-
‘வடமாகாண அரசியல்வாதிகள் இனவாதிகள்’ வடமாகாண அரசியல்வாதிகள், இனவாதக் கொள்கைகளில் இருந்து இன்னமும் மாறவில்லை என, சுற்றுலாத்துறை அபிவிருத்தி மற்றும் கிறிஸ்தவ மத அலுவல்கள் பிரதியமைச்சர் அருந்திக பெர்ணான்டோ தெரிவித்தார். கொழும்பில், நேற்று வியாழக்கிழமை (10) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு கூறினார். அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர், “சிவாஜிலிங்கம் போன்ற அரசியல்வாதிகளே இவ்வாறு இனவாதத்தை கையாண்டு வருகிறார்கள்” எனச் சுட்டிக்காட்டினார். “அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில், ஹிலாரி கிளிண்டன் வெற்றியீட்ட வேண்டும் என்பதற்காக, சிவாஜிலிங்கம், தேங்காய் உடைத்து வழிபாடுகளை மேற்கொண்டிருந்தார். அதனால் தான் அவர், தே…
-
- 0 replies
- 260 views
-
-
‘தோல்வியுற்ற முதலமைச்சர் சி.வி’ வட மாகாணசபை, ஒரு குழப்பகரமான நிறுவனமாக காணப்படுமாயின், அதன் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், அந்தப் பதவியிலிருந்து இராஜினாமா செய்ய வேண்டும் என்று வலியுறுத்திய மக்கள் விடுதலை முன்னணி, இலங்கை வரலாற்றில், மிகவும் தோல்வியுற்ற நிலையில் காணப்படும் ஒரேயொரு முதலமைச்சர் என்றால், அது சி.வி.யே ஆவார் என்றும் குறிப்பிட்டது. இது தொடர்பில், மக்கள் விடுதலை முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் பிமல் ரத்நாயக்க, தொடர்ந்து கூறியதாவது, “சில தினங்களுக்கு முன்னர் இலங்கைக்கு விஜயம் செய்திருந்த பிரித்தானிய அமைச்சருடன் கலந்துரையாடியுள்ள முதலமைச்சர், இலங்கையில் இனவாதத்த…
-
- 1 reply
- 323 views
-
-
நடராஜா ரவிராஜ் அவர்களின் 10ஆம் ஆண்டு நினைவு வணக்க நிகழ்வு இடம்பெற்றது. 2006 ஆம் ஆண்டு படுகொலை செய்யப்பட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜ் அவர்களது 10ஆம் ஆண்டு நினைவு வணக்க நிகழ்வு இன்று தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் யாழ் கந்தர்மடம் மணல்தரை வீதியில் உள்ள அலுவலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது. மேற்படி நிகழ்வில் கட்சியின் பொருளாளர் ஸ்ரீகிருஸ்ணகுமார் மற்றும் ஆங்கில ஆசிரிய பயிற்றுவிப்பாளர் கோபாலகிருஸ்ணன் ஆசிரியர், யாழ் பல்கலைக்கழக விரிவுரையாளர் ரவீந்திரன் ஆகியோர் நினைவுச் சுடர்களை ஏற்றினர். கட்சியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மலர்மாலை அணிவித்ததுடன் கட்சியின் ஆதரவாளர்கள் பொது மக்களும் …
-
- 3 replies
- 376 views
-
-
38 பிடியாணைகள் பிறப்பிக்கப்பட்டபெண் யாழில் கைது! பல்வேறுமோசடிகளில்ஈடுபட்டு நீதிமன்றத்தால் பிடியாணை பிறப்பிக்கப்பட்டபெண் நேற்றுக்காலை யாழ்ப்பாணப் பொலிஸாரால் யாழ் புகையிரதநிலையத்தில் வைத்துமடக்கிப் பிடிக்கப்பட்டுள்ளார். வவுனியாப் பிரதேசத்தைச் சேர்ந்த 32 வயதுடையசசிகலாஎன்றகுடும்பப் பெண் இலங்கைபூராகவும் பல தரப்பட்டபணமோசடிகளில் ஈடுபட்டுவந்துள்ளார். இவர் குறித்து பொலிஸ் நிலையங்பளில் முறைப்பாடு கள்மேற்கொள்ளப்பட்டுள்ளது. இவரை பிடிக்க 38 பிடியாணைகள் நீதிமன்றங்கள் பிறப்பித்த போதிலும் நீண்டகாலமாகபொலிஸாருக்கு தண்ணி காட்டி தப்பித்து வந்துள்ளார். இதேவேளையாழ்ப்பாணத்திலும் வெளிநாட்டு…
-
- 1 reply
- 368 views
-
-
கஞ்சா வர்த்தகத்தின் மையமாக வடக்கு -முதல்வர் கவலை கடலோரப் பாதுகாப்புக்கள் மிகவும் இறுக்கப்பட்டுள்ள நிலையில், கடல்வழியாக கஞ்சா வடபகுதிக்கு எவ்வாறு எடுத்து வரப்படுகின்றது என வடமாகாண முதலமைச்சர் சீ.வி. விக்னேஸ்வரன் கேள்வியெழு ப்பியுள்ளார். போராட்ட காலங்களில் மிக அமைதியாகக் காணப்பட்ட வட பகுதி இன்று கேரள கஞ்சா வர்த்தகத்தின் வர்த்தக மையமாக உருவாகியிருப்பது கவலையைத் தருவதாகவும் தெரிவித்துள்ளார். வடக்கில் 1 இலட்சத்து 50 ஆயிரம் இராணுவ வீரர்கள் கடமையிலும் அதற்கு மேலதிகமாக கடற்படை, பொலிஸ், ஆகாயப்படை என மேலதிகப் படைகள் எம்மைச் சுற்றி வலம் வருவதாகவும் வட மாகாண முதலமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார். …
-
- 0 replies
- 242 views
-
-
குப்பைக்காடாக மாறியுள்ள யாழ் நகரம் கடந்த மூன்றுநாட்களாக யாழ்.மாநகர சுத்திகரிப்புத் தொழிலாளிகள் மேற்கொண்டுவரும் போராட்டத்தி னால் யாழ் நகரம் குப்பைக்காடாகமாறிவருவதைஅவதானிக்கக் கூடியதாகஉள்ளது. தமக்கு நிரந்தர நியமனம் கோரி யாழ். மாநாகரசபை சுத்திகரிப்புத் தொழிலாளிகள் கடந்த மூன்று நாட்க ளாக தொடர்போராட்டத்தைநடத்திவருகின்றனர். இதனால் யாழ். நகரத்தில் சுத்திகரிப்புப் பணிகள் முற்றாக ஸ்தம்பிதம் அடைந்துள்ளநிலையில் வீதியோரங்களில் அதிகளவானகுப்பைகள் தேங்கி வரு வதை அவதானிக்க முடிகிறது. தொழிலாளிகளின் நியாயமானகோரிக்கைகள் நிறைவேற்றப்படாமல் இருக்கும்நிலையில் குறித்த கழிவு களினால் யாழ் .நகரம் பாரிய சுகாதார சீர்கேட்டை எதிர்…
-
- 0 replies
- 368 views
-
-
யாழ்ப்பாண மாவட்டம் வட்டுக்கோட்டைப் பிரதேசத்தில், சினிமாப் பாணியில் வாகனத்தில் வந்தவர்களால் 20 வயதுடைய இளம்பெண் கடத்திச் செல்லப்பட்டுள்ளார். தந்தையுடன் தனியே வீட்டிலிருந்தபோது கயஸ் வாகனத்தில் வந்த ஐந்துபேர் குறித்த பெண்ணின் தந்தையை மிரட்டி, பெண்ணைப் பலவந்தமாகத் தூக்கிச் சென்றுள்ளனர். இதுபற்றி குறித்த பெண்ணின் குடும்பத்தினர் வட்டுக்கோட்டை காவல் நிலையத்தில் முறைப்பாடொன்றைப் பதிவு செய்துள்ளனர். ஒரு வார காலத்திற்கு முன்னர் குறித்த பெண்ணை திருமணம் செய்து தருமாறு கடத்திச் சென்ற இளைஞர் நேரடியாக வீட்டிற்கு வந்து கேட்டதாகவும், எனினும் தாங்கள் மறுத்துவிட்ட நிலையிலேயே குறித்த இளைஞன் நான்குபேரை அழைத்துவந்து பெண்ணைக் கடத்திச் சென்றதாக பெண்ணின் தந்தை காவல்துறையினரிடம் தெரிவித்…
-
- 0 replies
- 510 views
-
-
அண்மைக்காலகமாக யாழ்ப்பாணத்தைக் கலக்கிவரும் ஆவா குழுவினருக்குப் பின்னணியில் முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தபாய ராஜபக்ஷவே உள்ளார் என பீல்ட் மார்ஷல் சரத்பொன்சேகா தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று (புதன்கிழமை) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். மேலும் அவர் தெரிவிக்கையில், ஆவா குழுவினருடன் இராணுவத்துக்கு எந்தவிதத் தொடர்புமில்லையென்பதுடன், தான் போர்க்களத்தில் கடமையாற்றியபோது முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தபாய ராஜபக்ஷ வடக்குக், கிழக்கில் துணை இராணுவக் குழுக்களை உருவாக்கி செயற்படுத்தியதாகவும் தெரிவித்துள்ளார். அத்துடன், கோத்தபாய ராஜபக்ஷவே கருணா, பிள்ளையான் போன்றோருடனும் இணைந்து செயற்பட்டதாகவும், ஆவாக் குழுவுடன் ஏதேனும் கொ…
-
- 1 reply
- 401 views
-
-
கைதான முன்னாள் போராளிக்கு விளக்கமறியல் பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்ட முன்னாள் போராளியான நடராஜா சபேஷ்வரனுக்கு விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது. இதன்படி,குறித்த சந்தேகநபரை எதிர்வரும் டிசம்பர் மாதம் 23ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கு மாறு கொழும்பு புதுக்கடை நீதவான் உத்தரவு பிறப்பித்துள்ளார். கடந்த மாதம் 23ஆம் திகதி கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்ட நடராஜா சபேஷ்வரன் நேற்று நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டார். தமிழீழ விடுதலைப் புலிகளை மீள உருவாக்க முயற்சிப்பதாகவும், கிளிநொச்சியில் வைத்து முன்னாள் போராளிகளுக்கு பயிற்சி வழங்கினார் என சந்தேகநப…
-
- 0 replies
- 300 views
-
-
'ஆவா' குழுவினருடன் இணைந்து செயற்பட்ட படைவிட்டோடி உட்பட மூவர் விளக்கமறியலில் - தனி அறையில் தடுத்து வைக்கவும் உத்தரவு 2016-11-10 08:50:54 (எம்.எப்.எம்.பஸீர்) யாழில் ஆவா குழுவுடன் இணைந்து செயற்பட்டதாக சந்தேகிக்கப்படும் இராணுவத்திலிருந்து தப்பியோடிய வீரர் ஒருவர் உட்பட மூவரையும் எதிர்வரும் 16 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டது. காங்கேசன்துறை 5 ஆம் பொறியியல் படைப் பிரிவின் இராணுவ சிப்பாயாக கடமையாற்றிய நிலையில் 3 மாதங்களுக்கு முன்னர் இராணுவத்திலிருந்து தலைமறைவானதாக கூறப்படும் இந்திரகுமார் கபிலோஷன் உள்ளிட்ட …
-
- 0 replies
- 271 views
-
-
நாட்டைக் கட்டியெழுப்புவதற்கு ஒழுக்கமும் ஒற்றுமையும் இன்றியமையாதது : ஜனாதிபதி தேசிய நல்லிணக்கத்தை ஏற்படுத்தி, நாட்டைக் கட்டியெழுப்புவதற்கு இரண்டு பிரதான கட்சிகளும் இணைந்து மேற்கொள்ளும் செயற்பாடுகளை சிலர் புரிந்து கொண்டிருந்தாலும் அதனைப் புரிந்துகொள்ள முடியாத சிலர் நாட்டினுள் பழியுணர்வையும் குரோதத்தையும் விதைத்து நாட்டை சீரழிக்கும் வகையில் செயற்பட்டு வருவதாக ஜனாதிபதி தெரிவித்தார். நாட்டின் புகழ்பூத்த சமூக சேவையாளரான சர்வோதய இயக்கத்தின் நிறுவுனர் கலாநிதி ஏ.ரி. ஆரியரத்ன அவர்களது 85 ஆவது பிறந்தநாளை முன்னிட்டு நேற்று ராவத்தாவத்த, மொரட்டுவ சர்வோதய நிலையத்தில் நடைபெற்ற நிகழ்வில் உரையாற்றும்போது ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன மேற்கண்டவாறு தெரிவித்தா…
-
- 0 replies
- 150 views
-
-
வடக்கில் செயற்பட்டு வரும் ஆவா குழுவுக்கும் இராணுவத்துக்கும் ஒரு போதும் தொடர்பு கிடையாது என அமைச்சர் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். ஊடகங்களுக்கு இன்று கருத்து தெரிவித்த போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், தாம் போர்க்களத்தில் இருந்த போது கோட்டாபய ராஜபக்ஸ, துணை இராணுவக் குழுக்களை அமைத்து வடக்கு, கிழக்கில் செயற்பட்டதாக அவர் கூறியுள்ளார். மேலும், இது தொடர்பிலான முறைப்பாடுகள் தமக்கு கிடைக்கப்பெற்றுள்ளதாக தெரிவித்துள்ள அவர், கோட்டாபய ராஜபக்ஸவே பிள்ளையான் மற்றும் கருணா ஆகியோருடன் இணைந்து செயற்பட்டதாகவும் கூறியுள்ளார். அத்துடன், ஆவா குழுவுடன் ஏதேனும் கொடுக்கல் வாங்கல் இருந்தால் அதன் பின்னணியில் முன்னாள் பாதுகாப்பு செய…
-
- 1 reply
- 396 views
-
-
குளோபல் தமிழ்ச் செய்தியாளர் கொழும்பு அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்ட் ட்ராம்ப் தெரிவானமை புதிய உலக மரபு ஒன்றை உருவாக்கும் என நம்புவதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் வெற்றிக்காக ட்ராமப்பிற்கு வாழ்த்து கூறி வெளியிட்ட கருத்து தொடர்பில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். ட்ராம்;ப்பின் தெரிவானது அனைத்து நாடுகளினதும் இறைமைக்கு முக்கியத்துவம் அளித்து நாடுகளின் உள்விவகாரங்களில் தலையீடு செய்யாத ஓர் உலக மரபினை உருவாக்க வேண்டும் என்பதே எதிர்பார்ப்பாக அமைந்துள்ளது என அவர் தெரிவித்துள்ளார். மேலும் இலங்கையில் பயங்கரவாதத்தை இல்லாதொழிக்க குடியரசுக் கட்சி அரசாங்கம் ஆதரவு வழங்கியதாகவும் அதற்கு நன்றி பராட்டுவதாக…
-
- 3 replies
- 365 views
-
-
யாழில் இன்றும் ஒருவர் கைது யாழ்ப்பாணம் - பண்டத்தரிப்பு பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் ரி.ஐ.டி என அழைக்கப்ப டும் பயங்கரவாதத் தடுப்புப் பிரிவு பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். பண்டத்தரிப்பு – செட்டிகுறிச்சி பிரதேசத்தைச் சேர்ந்த ரவிச்சந்திரன் நிதுஷன் என்ற இளை ஞன் இன்று அதிகாலை கைது செய்யப்பட்டுள்ளதை அவர்களது உறவினர்கள் உறுதிப்படுத்தி யுள்ளனர். பயங்கரவாதத் தடுப்பு பிரிவு அவரை கைது செய்தமைக்கான ஆவணத்தை கையளித்து ள்ளதாகவும் உறவினர்கள் தெரிவித்தனர் யாழ்ப்பாணத்தில் இயங்கும் ஆயுதக் குழுக்களில் ஒன்றான ஆவா குழுவுடன் தொட ர்புடை யவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் ரீ.ஐ.டி என அழைக்கப்படு…
-
- 1 reply
- 393 views
-
-
தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ஒரு இனவாதி என பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜேவர்தன் தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். யாழ்ப்பாணம் உள்ளிட்ட வட மாகாணத்தில் ஆவா எனும் அடையாளப்படுத்தப்பட்டுள்ள குழு ஒன்று சமூக விரோத செயற்பாடுகளில் ஈடுபட்டுள்ளது. இதன் காரணமாக யாழ்ப்பாணம் உள்ளிட்ட பகுதிகளில் ஒருவித பதற்ற நிலை ஏற்பட்டுள்ளதோடு, மக்கள் தொடர்ந்தும் அச்சத்தின் மத்தியிலேயே வாழ்ந்து வருகின்றனர். இந்நிலையில், ஆவா குழுவுடன் தொடர்புடையவர்கள் என சந்தேகத்தின் பேரில் அண்மைய நாட்களில் யாழ்ப்பாணம் உள்ளிட…
-
- 0 replies
- 381 views
-
-
குளோபல் தமிழ்ச் செய்தியாளர் யாழ்ப்பாணம் ஊழல் செய்யும் அதிகாரிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு அவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என வடமாகான சபையின் எதிர்க்கட்சி தலைவர் சி.தவராசா தெரிவித்து உள்ளார்.வடமாகாண சபையின் 65 ஆவது அமர்வு செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. அதன் போது வவுனியா நகர சபை செயலாளர் ஐந்து இலட்சம் ரூபாய் பணம் மோசடி செய்து ஊழல் செய்துள்ளதாக சபையில் விவாதிக்கப்பட்டது. அதன் போதே எதிர்க்கட்சி தலைவர் அவ்வாறு கூறினார். மேலும் கூறுகையில், அதிகாரிகளின் ஊழல் நடவடிக்கை தொடர்பில் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும். அவர்களை இடமாற்றம் செய்வ…
-
- 1 reply
- 372 views
-
-
பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்ட முன்னாள் போராளியான நடராஜா சபேஷ்வரனுக்கு விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது. இதன்படி, குறித்த சந்தேகநபரை எதிர்வரும் டிசம்பர் மாதம் 23ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு புதுக்கடை நீதவான் உத்தரவு பிறப்பித்துள்ளார். கடந்த மாதம் 23ஆம் திகதி கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்ட நடராஜா சபேஷ்வரன் இன்று நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டார். தமிழீழ விடுதலைப் புலிகளை மீள உருவாக்க முயற்சிப்பதாகவும், கிளிநொச்சியில் வைத்து முன்னாள் போராளிகளுக்கு பயிற்சி வழங்கினார் என சந்தேகநபர் மீது பயங்கரவாத குற்றத்தடுப்பு பிரிவினர் குற்றம் சுமத்தியுள்ளனர். அவரிடம், பயிற்சி…
-
- 0 replies
- 369 views
-
-
குளோபல் தமிழ்ச் செய்தியாளர் கொழும்பு வட மாகாண முதலமைச்சரின் நடவடிக்கைகள் குறித்து ஆளுனர் அதிருப்தி வெளியிட்டுள்ளார். வடக்கின் நிர்வாக விவகாரங்களில் சர்வதேச தலையீடு அவசியம் என வட மாகாண முதலமைச்சர் சீ.வீ.விக்னேஸ்வரன் அண்மையில் வெளியிட்ட கருத்து அடிப்படையற்றதும், அரசியல் நோக்கத்திலானதுமாகும் என மாகாண ஆளுனர் ரெஜினோல்ட் குரே தெரிவித்துள்ளார். இந்த கூற்று மக்களின் தேவைக்காக கூறப்படவில்லை எனவும் இது அரசியல் நோக்கத்தின் அடிப்படையில் கூறப்பட்டது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். வடக்கின் ஒரு சில அரசியல்வாதிகள் தங்களது கருத்துக்களை பெரும்பான்மையானோரின் கருத்தாக கருதி தகவல் வெளியிட்டு வருவதாகத் தெரிவித்துள்ளார். வடக்கில் தற்போ…
-
- 1 reply
- 372 views
-
-
குளோபல் தமிழ்ச் செய்தியாளர் கொழும்பு தமிழ்ப் பிரிவினைவாதிகளின் தேவைக்கு அமைய புதிய அரசியல் சாசனம் உருவாக்கப்படுவதாக ஜே.என்.பி. கட்சியின் தலைவர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார். முழு வரலாற்றுக் காலத்திலும் தமிழ்ப் பிரிவிணைவாதிகள் விடுத்த பிரிவினைவாத கோரிக்கைகள் அனைத்தையும் நிறைவேற்றும் வகையில் இந்த அரசாங்கம் அரசியல் சாசனத்தை உருவாக்க உள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். மிகவும் இரகசியமான முறையில் இந்த கோரிக்கைகள் அரசியல் சாசனத்தில் உள்ளடக்கப்பட உள்ளதாகத் தெரிவித்துள்ளார். புதிய அரசியல் சாசனத்தை உருவாக்குவதற்கு இடமளித்தால் எமது எதிர்கால சந்ததியினருக்கு நாடே இல்லாமல் போய்விடும் என குறிப்பிட்டுள்ள …
-
- 2 replies
- 313 views
-
-
பிரதான வழி நடத்தல் குழுவின் அறிக்கை வந்ததும் எவ்வாறான தீர்வு என்பதனை அறிந்துகொள்ள முடியும் மிக விரைவில் உபகுழுக்கள் மற்றும் வழிநடத்தல் குழு ஆகியவற்றின் இடைக்கால அறிக்கைகள் பாராளுமன்றில் சமர்ப்பிக்கப்படவிருக்கின்றன. அவ்வறிக்கையில் உள்ள விடயங்கள் பகிரங்கப்படுத்தப்படுகின்றபோது தமிழ் மக்களுக்கு எத்தகைய அதிகாரப்பகிர்வு வழங்கப்பட விருக்கின்றதென்று தமிழ் மக்களும் தென்னிலங்கையரும் அறிந்துகொள்ள முடியும் என்று யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்தார். இலங்கை இந்திய மீனவர் விவகாரம் தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு புதுடில்லி சென்று திரும்பிய அவரி…
-
- 0 replies
- 437 views
-
-
கச்சதீவை அடுத்துள்ள இலங்கை கடற்பரப்பில் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய மீனவர்களை இலங்கைக் கடற்படையினர் விரட்டியதோடு அவர்களது வலைகளையும் பறிமுதல் செய்துள்ளதாக தெரி விக்கப்படுகிறது. நேற்று மாலை 3000இற்கும் மேற்பட்ட மீனவர்கள் இந்தியக் கரையோரப் பட்டணத்திலிருந்து 641 இயந்திரப் படகுகளில் கச்சதீவையொட்டிய இலங்கை கடற்ப்பரப்பில் மீன்பிடிக்க முயன்றபோதே குறித்த மீனவர்கள் விரட்டப்பட்டுள்ளனர். இதேவேளை 30 படகுகளை மட்டும் சுற்றி வளைத்த கடற்படையினர் வலைகளைத் திருப்பித் தருமாறு தெரிவிக்கும் முன்னர் அவற்றை வெட்டியுள்ளனர் என புதுச்சேரி மீனவர் சங்கத்தின் பொதுச் செயலாளர் என்.போஸ் தெரிவித்துள்ளார். …
-
- 4 replies
- 332 views
- 1 follower
-
-
அதிகார பரவலாக்கம் குறித்த விடயத்தில் அனைவரும் இணக்கத்திற்கு வந்துள்ளோம் பௌத்தமத உரிமை தொடர்பில் அச்சம் கொள்ளத் தேவையில்லை என்கிறார் பிரதமர் (எம்.எம்.மின்ஹாஜ்) புதிய அரசியலமைப்பில் அதிகாரபரவலாக்கம் குறித்தான விடயதானத்தில் அனைவரும் இணக்கத்திற்கு வந்துள்ளோம். அத்துடன் மேலும் பல்வேறு அடிப்படை அம்சங்கள் தொடர்பிலும் இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது. இதன்பிரகாரம் ஜனாதிபதியின் 2 வருட பதவிக்கால பூர்த்தியான ஜனவரி 8 ஆம் திகதிக்கு முன்பு புதிய அரசியலமைப்பு எது என்பதனையும், அரசாங்கத்தின் புதிய அபிவிருத்தித் திட்டம் எது என்பதனையும் நாட்டு மக்கள் அறிந்து கொள்ள முடியும் என்று பிரதமர் ரணில் விக்கி…
-
- 0 replies
- 498 views
-