Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. நிர்மாணிக்கப்பட்ட கிளிநொச்சி பொதுச்சந்தை முதலமைச்சரால் திறந்து வைப்பு கடந்த செப்டம்பர் மாதம் 16 ஆம் திகதி தீ எரிந்த கிளிநொச்சிப் பொதுச் சந்தை தொகுதியினை வடமாகாண முதமைச்சர் சி. வி. விக்கினேஸ்வரன் நேற்று மாலை சம்பிரதாய பூர்வமாக திறந்து வைத்துள்ளார். கடந்த செப்டம்பர் மாதம் 16 ஆம் திகதி தீ விபத்தினால் எரிந்த கிளிநொச்சிப் பொதுச் சந்தையினை மறுநாள் பதினேழாம் திகதி வந்து பார்வையிட்ட வட மாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் மிகவிரைவில் குறித்த சந்தையினை மீண்டும் இயங்க வைப்பதற்கு தற்காலிகக் கடைகளை அமைப்பதற்கு ஆவன செய்வதாகக் கூறிச்சென்றதன் பிரகாரமும் கரைச்சிப் பிரதேச சபையினரால் வழங்கப்பட்டுள்ள மதிப்பீட்டு அறிக்கையின் அடிப…

  2. சிறீலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ஷ காலத்தில் வடக்கு மாகாணத்தில் சட்டவிரோ கருத்தடை செய்யப்பட்டதுபோல் நல்லாட்சி அரசாங்கத்திலும் நடைபெற்றுவருவதாக வடக்கு மாகாண சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம் குற்றம் சுமத்தியுள்ளார். தகுந்த ஆதாரங்களுடன் இவ்வாறான சாட்சியங்களை வெளிக்கொண்டுவந்தால் தான் கடுமையான தண்டனை வழங்குவதற்கு நடவடிக்கை எடுப்பதாகவும் தெரிவித்துள்ளார். வடக்கு மாகாண சபையின் 65ஆவது அமர்வு கைதடியில் அமைந்துள்ள மாகாணசபைக் கட்டடத்தில் நேற்று (செவ்வாய்க்கிழமை) நடைபெற்றது. இந்த அமர்வில் உரையாற்றிய வடக்கு மாகாண சுகாதார அமைச்சர் குறித்த விடயம் தொடர்பாக உரையாற்றினார். மேலும் அவர் அங்கு உரையாற்றுகையில், 2013ம் ஆண்டு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின்…

  3. அலெக்ஸ் கைது : ஆவாக் குழுவை முன் வைத்து நகரும் அரசியலின் பின்புலம்? 11/08/2016 இனியொரு... ஆவா குழு என்ற யாழ்ப்பாணத்தில் இயங்குவதாகக் கருதப்படும் குழுவுடன் தொடர்புடையவர் என்ற சந்தேகத்தில் இலங்கை அரச பாதுகாப்புப் படை அலெக்ஸ் அரவிந் என்பவரைக் கைது செய்து அழைத்துச் சென்றுள்ளது. இது தொடர்பாக முன்னுக்குப் பின் முரணாக வெளிவரும் செய்திகள் பலத்த சந்தேகங்களை இலங்கை அரசியல் மட்டங்களில் ஏற்படுத்தியுள்ளது. தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி என்ற பதாகையின் கீழ் வட மாகாணத்தில் செயற்படும் அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரசின் அலுவலகத்தில் பணியாற்றும் அலெக்சின் கைது தொடர்பாக அக்கட்சியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவிக்கையில் இக் கைது அரசியல் நோக்கமுள்ளது என்ற வகையில் கூறியுள…

    • 4 replies
    • 523 views
  4. செங்கோலை தூக்க முயன்ற சிவாஜி. மன்னிப்புக் கோரிய சி.வி.கே வடமாகாண சபை அமர்வில் செங்கோலை தூக்க முற்பட்ட ஆளும் கட்சி உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கத்தால் சபையில் சில நிமிடங்கள் அமைதியின்மை ஏற்பட்டது. வடமாகாண சபையின் 65 ஆவது அமர்வு செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. அதன் போது கடந்த அமர்வில் தான் கூறிய கருத்து தொடர்பில் ஊடகத்தில் வெளியான செய்தியில் தனது சிறப்புரிமை மீறப்பட்டு உள்ளதாக கூறி தனக்கு அது தொடர்பில் கருத்து கூற அனுமதிக்க வேண்டும் என அவைத்தலைவரிடம் கோரிக்கை விடுத்தார். அதற்கு அவைத்தலைவர் சி.வி.கே. சிவஞானம் தான் அதற்கு அனுமதிக்க மாட்டேன் என கூறினார். அதனை அடுத்து கோபமடைந்த சிவாஜிலிங்கம் சபையின் நடுவே சென்று செங்கோலை தூக்க முயன்றார். அத…

    • 2 replies
    • 449 views
  5. பாலியல் வன்கொடுமைகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் – பிரித்தானியா குளோபல் தமிழ்ச் செய்தியாளர் கொழும்பு இலங்கையில் பாலியல் வன்கொடுமைகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென பிரித்தானியா கோரிக்கை விடுத்துள்ளது. பாலியல் வன்கொடுமைகள் தொடர்பிலான குற்றச் செயல்களுக்கு பொறுப்பு கூறுதல் உறுதி செய்யப்பட வேண்டியது இன்றியமையாதது என பிரித்தானிய வெளிவிவகார ராஜாங்க அமைச்சர் baroness joyce anelay தெரிவித்துள்ளார். இலங்கை வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீரவுடன் நடத்திய சந்திப்பின் போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். பாலியல் வன்கொடுமைகள் மற்றும் நிரந்தர சமாதானத்தை ஏற்படுத்துவதற்கு நீண்ட கால நடவடிக்கை எடுக்கப்பட…

  6. சீனத்தூதுவரின் கருத்து சரியானதே – சீன அரசாங்கம் குளோபல் தமிழ்ச் செய்தியாளர் கொழும்பு இலங்கைக்கான சீனத் தூதுவர் யீ ஸியான்லிங் அண்மையில் வெளியிட்ட கருத்து சரியானதே என சீன அரசாங்கம் தெரிவித்துள்ளது. தெளிவற்ற விடயங்கள் மற்றும் சில புரிந்துணர்வின்மை குறித்து சீனத் தூதுவர் விளக்கம் அளித்துள்ளதாகவும் சீன இலங்கை உறவுகள் குறித்து தெளிவுபடுத்தப்பட்டுள்ளதாகவும் சீன வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் லூ காங் தெரிவித்துள்ளார். நட்பு நாடான இலங்கையுடன் கூட்டுறவையும் நம்பிக்கையையும் மேலும் வலுப்படுத்திக் கொள்ளும் நோக்கில் இவ்வாறு தெளிவுபடுத்தப்பட்டதாகவும் ஏதேனும் சர்ச்சைகள் குழப்பங்கள் காணப்பட்டால் அது குறித்து நேரடியாக பேச்சுவார்த்தை நடத்த …

  7. யாழில். தொடரும் கைதுகள். நான்கு நாட்களில் 13 பேர் கைது. மூவருக்கு விளக்கமறியல் குளோபல் தமிழ்ச் செய்தியாளர் யாழ்ப்பாணம் யாழில் பயங்கரவாத தடுப்பு பிரிவின் கைது வேட்டையில் நான்கு நாட்களில் 13 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். யாழில் இடம்பெற்று வரும் வாள் வெட்டு சம்பவங்கள் மற்றும் ஆவா குழு தொடர்பில் கடந்த சில தினங்களாக கொழும்பில் இருந்து வந்த பயங்கரவாத தடுப்பு பிரிவினர் விசாரணைகளை முன்னெடுத்து வந்தனர். அதன் அடிப்படையில் ஆவா குழுவுடன் தொடர்புடையவர்கள் மற்றும் வாள் வெட்டு சம்பவங்களுடன் தொடர்புடையவர்கள் எனும் சந்தேகத்தில் சனிக்கிழமை முதல் பயங்கரவாத தடுப்பு பிரிவினர் கைது வேட்டையை தொடர்ந்தனர் http://globaltamilnew…

  8. யாழ். வன்முறை மூவருக்கு விளக்கமறியல் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற வன்முறை சம்பவங்களுடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்ட மூவரையும் இம்மாதம் 16ஆம் திகதி வரையிலும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவை கொழும்பு மேலதிக நீதவான் நிஷாந்த பீரிஸ், இன்று செவ்வாய்க்கிழமை பிறப்பித்தார். - See more at: http://www.tamilmirror.lk/185613/ய-ழ-வன-ம-ற-ம-வர-க-க-வ-ளக-கமற-யல-#sthash.xraGBeVi.dpuf

  9. கடந்த செம்ரெம்பா் மாதம் 16 ஆம் திகதி கிளிநொச்சி பொதுச் சந்தையில் ஏற்பட்ட பாரிய தீ காரணமாக 125 கடைகள் முற்றாக எரிந்து அழிந்திருந்தது. இதில் முழுமையாக 66 கடைகள் முழுமையாகவும், 59 கடைகள் பகுதியளவிலும் எரிந்து அழிந்திருந்தன. உடனடியாக எரிந்து அழிந்த 22 பழ வியாபார கடைகள் ஒரிரு வாரங்களுக்காக தற்காலிகமாக அமைத்து கொடுக்கப்பட்ட நிலையில் ஏனைய புடவை, அழகுசாதன வியாபாரம்,காலணி வியாபார கடைகளை அமைப்பதற்கு வடக்கு மாகாண முதலமைச்சா் வட மாகாண உள்ளுராட்சி நிதியில் இருந்து 11.3 மில்லியன் ரூபாக்களை ஒதுக்கீடு செய்திருந்தாா். இந்த நிதியைக் கொண்டு அரைநிரந்த கடைகளாக புடவை, அழகுசாதன வியாபாரம்,காலணி வியாபார கடைகள் 45 அமைக்கும் பணி மிக வேக…

  10. வடமாகாணத்தில் எமது தொழிலைப் பாதிக்கும் வகையில் இராணுவத்தினரால் நடத்தப்படும் சிகை அலங்கரிப்பு நிலையங்களை மூடுவதற்கு ஒரு மாத காலக்கெடு வழங்கவுள்ளோம்.அதற்குள் மூடப்படாவிட்டால் வடமாகாணத்தின் அனைத்து சிகை அலங்கரிப்பு நிலையங்களையும் கால வரையறை இன்றி மூடி இராணுவ முகாம்களுக்கு முன்னாள் போராட்டம் நடத்தப்படும் என வடமாகாண அழகக சங்கத்தலைவர் க.நாகராசா தெரிவித்துள்ளார். வவுனியா, புகையிரத வீதியில் உள்ள முத்தையா மண்டபத்தில் இன்று(08) இடம்பெற்ற வவுனியா மாவட்ட அழகக சங்க பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு கூறியுள்ளார். தொடர்ந்தும் அவர் தெரிவிக்கையில், வடமாகாணத்தில் எமது சிகை அலங்கரிப்பு தொழிலாளர்கள் பல்வேறு இடர்பாடுகளுக்கு மத்தியில்…

  11. மட்டக்களப்பு மாவட்டத்தின் மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் இந்த ஆண்டு 228 அபிவிருத்தி திட்டங்களுக்கு 379 மில்லியன் ரூபா நிதியொதுக்கீடுகள் செய்யப்பட்டுள்ளதாக மண்முனை வடக்கு பிரதேச செயலாளா வி.தவராஜா தெரிவித்தார். மண்முனை வடக்கு பிரதேச செயலகத்தின் பிரதேச அபிவிருத்தி மீளாய்வுக்கூட்டம் மாவட்ட அபிவிருத்திக்குழுவின் இணைத்தலைவரும் மண்முனை வடக்கு பிரதேச செயலக அபிவிருத்திக்குழுவின் இணைத்தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ஞா.சிறிநேசன் தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கிழக்கு மாகாண பிரதிதவிசாளர் பிரசன்னா இந்திரகுமார்,கிழக்கு மாகாணசபை உறுப்பினர்களான சிப்லி பாரூக், இரா.துரைரெட்னம் ஆகியோர் கலந்துகொண்டனர். இதன்போது மண்…

  12. கடந்த மாதம் 20 ஆம் திகதி யாழ்.பல்கலைக்கழக தமிழ் மாணவர்கள் இருவர் பொலிஸாரினால் சுட்டுக் கொலை செய்யப்பட்டனர்.யாழ்.பல்கலைக்கழக தமிழ் மாணவர்கள் வாகன விபத்திலேயே உயிரிழந்தார்கள் என பொலிஸார் அறிக்கை வெளியிட்டிருந்தனர்.ஆனால்,பிரேத பரிசோதனை அறிக்கைகளின் படி குறித்த மாணவர்கள் இருவரும் சுட்டே கொலை செய்யப்பட்டனர் என தெரியவந்துள்ளது.எனவே இந்த சம்பவத்தை சில அதிகாரிகள் மூடி மறைக்கவே திட்டமிட்டிருந்தனர். எவ்வாறாயினும் இந்த கொலை சம்பவத்தின் விளைவு, ஐந்து பொலிஸ் அதிகாரிகளின் சேவை இடைநீக்கப்பட்டு தற்போது தடுப்பு காவலில் வைக்கப்பட்டிருப்பது மாத்திரமே என மனித உரிமைகள் கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது. மேலும், ஜெனீவாவில் நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகள் சபையின் சித்திரவதைகளுக்கு …

  13. சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் லலித் ஜயசிங்கவுக்கு அவுஸ்திரேலியாவுக்கு விசா வழங்குவதனை இலங்கையின் அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் அலுவலகம் நிராகரித்துள்ளது. கடந்த ஒன்றரை வருடத்திற்கு முன்னர் யாழ்ப்பாணம் புங்குடுதீவில் மாணவி சிவலோகநாதன் வித்யா படுகொலை செய்யப்பட்ட குற்றச்சாட்டின் பிரதான சந்தேகநபரை விடுவிக்குமாறு பொலிஸாருக்கு ஆலாசனை வழங்கிய குற்றச்சாட்டின் அடிப்படையில் விசா கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளது. அவுஸ்திரேலியாவில் கல்வி கற்கும் தனது மகளின் பட்டமளிப்பு விழாவில் கலந்துக் கொள்வதற்கு என கூறி சிரேஷ் பிரதி பொலிஸ்மா அதிபர் விசா விண்ணப்பித்துள்ளார். எனினும் அவருக்கு எதிராக உள்ள குற்றச்சாட்டு மற்றும் விரைவில் அவர் கைது செய்யப்படவுள்ளதாக ஊடகங்கள…

  14. வலிகாமம் வடக்கில் காணிகள் விடுவிக்கப்பட்டுள்ள போதும் தமது வாழ்வாதாரத்துக்குரிய 4 படகு அணைக்கும் துறைகள் விடுவிக்கப்படவில்லை என்று மக்கள் தெரிவித்துள்ளனர்.அந்தத் துறைகளை விடுவித்துத் தருமாறு யாழ். மாவட்டச் செயலரிடம் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தற்போது விடுவிக்கப்பட்ட பிரதேசங்களுக்கு சில மீற்றர்கள் தொலைவில் அமைந்துள்ள அந்தத் துறைகள் உடனடியாக விடுவிக்கப்படவேண்டும் என்றும் மக்கள் தெரிவித்துள்ளனர். வலி.வடக்கில் 454 ஏக்கர் நிலப் பரப்பு கடந்த வெள்ளிக்கிழமை மக்கள் பாவனைக்குக் கையளிக்கப்பட்டது. விடுவிக்கப்பட்ட பிரதேசங்களில் மீளக் குடியமர்வதற்கு 300 குடும்பங்கள் இதுவரை பதிவுகளை மேற்கொண்டுள்ளன. காணிகள் விடுவிக்கப்பட்டாலும் தமது வாழ்வாதர…

  15. மட்டக்களப்பு மாவட்டத்தில் கட்டாக்காலி மாடுகளினால் ஏற்படும் வீதி விபத்துக்களை தடுக்கும் வகையில் விசேட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. தற்போது மழைகாலம் ஆரம்பத்துள்ள நிலையில் கடந்த காலத்தில் அதிகளவு வீதி விபத்துகளை ஏற்படுத்தியுள்ள கட்டாக்காலி மாடுகளை கட்டுப்படுத்தும் வகையில் மட்டக்களப்பு – கல்முனை வீதியில் மட்டக்களப்பு மாநகரசபையினால் விசேட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. கடந்த காலத்தில் கட்டாக்காலி மாடுகளை கட்டுப்படுத்தும் வகையில் மாடு உரிமையாளர்களுக்கு பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன. அதனைத்தொடர்ந்து மாடுகளை வீதிகளில் விடுவோருக்கு எதிராக நடவடிக்கையெடுக்கப்படும் எனவும் அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டிருந்த நிலைய…

  16. சங்கரத்தையில் வாள் வெட்டு. இருவர் படுகாயம். குளோபல் தமிழ்ச் செய்தியாளர் யாழ்ப்பாணம் யாழ்.சங்கரத்தை பகுதியில் இடம்பெற்ற வாள் வெட்டு சம்பவத்திற்கு இலக்காகி இரு இளைஞர்கள் காயமடைந்துள்ளனர். சங்கரத்தை பகுதியில் செவ்வாய்க்கிழமை இரவு 8 மணியளவில் குறித்த வாள் வெட்டு சம்பவம் இடம்பெற்றது. சம்பவம் குறித்து தெரிய வருவதாவது, வேலைக்கு சென்ற இரு இளைஞர்களும் துவிச்சக்கர வண்டியில் வீடு திரும்பிக்கொண்டு இருந்த வேளை சங்கரத்தை பகுதியில்…

  17. பரோன்ஸ் அனிலேவை சந்தித்தார் இரா.சம்பந்தன் ஐக்கிய நாடுகள் மற்றும் பொதுநலவாய நாடுகளுக்கான பிரித்தானியாவின் இராஜாங்க அமைச்சர் பரோன்ஸ் அனிலே அவர்களுக்கும் தமிழ்தேசிய கூட்டமைப்பின் தலைவரும் இலங்கைப் பாராளுமன்றத்தின் எதிர்க்கட்சி தலைவருமான இரா.சம்பந்தனுக்கும் இடையிலான சந்திப்பொன்றுஇன்று கொழும்பிலுள்ள பிரித்தானிய உயரிஸ்தானிகரின் இல்லத்தில் இடம்பெற்றது. இலங்கையில் தற்போது இடம்பெற்றுவரும் அரசியலமைப்பு உருவாக்கம் தொடர்பில் அமைச்சரை தெளிவுபடுத்திய கூட்டமைப்பின் தலைவர், தேசிய பிரச்சினைக்கான நிரந்தர தீர்வினை அரசியல் யாப்பினூடாக அடைவதன் முக்கியத்துவத்தையும் எடுத்துரைத்தார். இச்சந்திப்பின் போது வடக்கிலே காணப்படும் அதீத இராணுவ பிரசன்ன…

  18. யாழ்ப்பாண மாநகர சபை மண்டபத்தில் எதிர்வரும் 20ஆம் திகதி காலை 9.00 மணிமுதல் மாலை 5.00 மணிவரை ஹோலிப் பண்டிகை கொண்டாடப்படவுள்ளது. தமிழ் மக்களின் விடுதலைக்காக போராடி உயிர்நீத்த மாவீரர்கள் மற்றும் மக்களை நினைவுகூரும் முகமாக கார்த்திகை மாதம் தமிழ்மக்களின் உணர்வுபூர்வமான மாதமாகவும், இம்மாதத்தில் களியாட்ட நிகழ்வுகள் எதனையும் தமிழ் மக்கள் கொண்டாடாது தவிர்த்து வந்தனர். இந்நிலையில், எதிர்வரும் 20ஆம் திகதி ஹோலிப் பண்டிகை நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டமை தமிழ் மக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதுடன், பலர் தமது கவலையையும் ஆத்திரத்தையும் வெளிப்படுத்தத்தொடங்கினர். இதனால், யாழ்ப்பாணத்திலுள்ள இந்தியத் துணைத்தூதரகம் அவசர ஊடகவியலாளர் சந்திப்பொன்றை ஒழுங்குசெய்து, ஹோலி களி…

  19. இலங்கையை ஆளுகின்ற இன்றைய கூட்டரசாங்கத்தின் பிரசவிப்பிற்குத் தான் ஆற்றிய பங்களிப்பினை வெறுமனே ஒரு மருத்துவிச்சியின் சேவை என்ற அளவோடு சுருக்கிவிட நிகழும் எத்தனிப்புகளைத் தமிழ் தேசம் அனுமதிக்க முடியாது. மருத்துவிச்சி என்றால், அவரின் தொழிலே, யாரோ பெறுகின்ற குழந்தையின் பிரசவத்திற்குப் பணியாற்றுவதுதான். ஒரு குழந்தையின் பிறப்பிற்குப் பணியாற்றிய பின்பு, அடுத்த குழந்தையின் பிரசவத்திற்குப் பணியாற்ற அவர் போய்விடுவார் – போய்விட வேண்டும். அது மட்டுமே அவரது கடமை. ஒரு “மருத்துவிச்சி” என்ற பரிமாணத்தில் வேறு அர்த்தங்கள் அவருக்குக் கிடையாது. குழந்தைப் பிரசவத்திற்குப் பணியாற்ற ஒரு மருத்துவிச்சி மறுத்துவிட்டால், வேறு மருத்துவிச்சியை நாடி பிரசவத்திற்கான பணிவிடைகளைப் பெற்றுவிடலாம். இ…

  20. இலங்கைக்கான உல்லாசப் பயணிகளின் தொகை கடந்த ஒக்டோபர் மாதத்தில் 13.7 வீதத்தால் அதிகரி த்திருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது. கடந்த வருடம் இதே காலகட்டத்தோடு ஒப்பீடு செய்யப்ப்பட்ட பின்னரே இந்தப் புள்ளிவிபரம் எடுக்கப்பட்டுள்ளது. இலங்கை உல்லாசப் பயணத்துறை அபிவிருத்தி சபை வெளியிட்ட இந்த அறிக்கையின் பிரகாரம் ஒக்டோ பர் 2015இல் 132,280 உல்லாசப் பயணிகளும், 2016இல் 150,419 உல்லாசப் பயணிகளும் .இலங்கை வந்துள்ளனர். இந்த வருடத்தின் முதல் பத்து மாதங்களில் 1658824 உல்லாசப் பயணிகள் வருகை தந்துள்ளார்கள். கடந்த மாதம் 1448119 பேர் விஜயம் செய்திருந்தார்கள். 14.6 வீத அதிகரிப்பு இதுவென்று சொல்ல…

  21. கொழும்பு, வெள்ளவத்தை பொலிஸ் நிலையத்தினால் பொலிஸ் பதிவுக்கான படிவங்கள் விநியோகிக்கப்ப ட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.எனினும் பொலிஸ் பதிவு எதனையும் மேற்கொள்ளவேண்டாமென அமை ச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். வெள்ளவத்தை பொலிஸ் நிலைய எல்லைக்குள் வசிக்கும் அனைத்துக் குடும்பங்களும் தங்கள் வீட்டிலு ள்ளவர்களின் சகல விபரங்களையும் பொலிஸாருக்கு அறியத்தருமாறு குறித்த படிவத்தில் கோரப்ப ட்டுள்ளது. இது குறித்து விபரம் அறிந்தவுடன் தேசிய சகவாழ்வு, அரச கரும மொழிகள் அமைச்சர் மனோ கணேசன் சம்பவம் குறித்து தனது கண்டனத்தை வன்மையாக பதிவு செய்துள்ளார். …

  22. யாழில் இடம்பெறும் வாள்வெட்டு சம்பவங்களுடன் தொடர்புடைய ஆவா குழுவின் முக்கிய ஸ்தர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கொக்குவில் பகுதியைச் சேர்ந்த இவரை பயங்கரவாத குற்றத்தடுப்புப் பொலிஸார் காங்கே சன்துறையில் வைத்து இன்று பிற்பகல் வேளையில் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட ஆவா குழுவின் முக்கியஸ்தரை கொழும்பிற்கு அழைத்துச் சென்றுள்ள தாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை அண்மையில் ஆவா குழுவுடன் தொடர்புடைய பலர் கைது செய்யப்பட்டு வருகி ன்றனர். கொழும்பில் இர…

  23. குளோபல் தமிழ்ச் செய்தியாளர் கொழும்பு நல்லாட்சியில் புத்தர் சிலை உடைக்கப்படுவதனை ஏற்றுக்கொள்ள முடியாது அமைச்சர் தயா கமகே தெரிவித்துள்ளார். அம்பாறையில் நடைபெற்ற ஊடக சந்திப்பு ஒன்றில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார். புத்தர் சிலைகள் உடைக்கப்பட்டு வருவதனை எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் இந்த நிலைமை தொடர்ந்தும் நீடித்தால் அமைச்சுப் பதவியை ராஜினாமா செய்ய நேரிடும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். பௌத்த மதத்திற்கு உரிய இடம் வழங்குவதற்கு ஏனைய மதத் தலைவர்களும் இணங்கியுள்ளதாகவும் பௌத்த சிலைகளை வைத்திருப்பதனால் நல்லாட்சிக்கு பாதிப்பு வராது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். http://globaltamilnew…

  24. குளோபல் தமிழ்ச் செய்தியாளர் கொழும்பு தாம் இருந்திருந்தால் படைவீரர்கள் மீது தாக்குதல் நடத்த அனுமதித்திருக்க மாட்டேன் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். அரசாங்கத்தை முன்னெடுத்துச் செல்வதில் பல்வேறு நெருக்கடிகள் காணப்படுவதாகவும் இவை அனைத்தையும் வெளிப்படையாக கூற முடியாது எனவும் குறிப்பிட்டுள்ளார். தாம் கொழும்பில் இருந்திருந்தால் ஓய்வு பெற்ற படைவீரர்கள் மீது நீர்த்தாரை தாக்குதல் நடத்தியிருக்க அனுமதித்திருக்க மாட்டேன் என அவர் தெரிவித்துள்ளார். ஊனமுற்றபடைவீரர்களின் பிரச்சினை கடந்த எட்டு ஆண்டுகளாக நீடித்து வருவதாகவும், இந்தப் பிரச்சினைக்கு தீர்வு காண்பது குறித்து நான்கு மாதங்களுக்கு முன்னதாக பேசப்பட்டதாகவும்…

  25. குளோபல் தமிழ்ச் செய்தியாளர் கொழும்பு ஊனமுற்ற படைவீரர்கள் மீது கண்ணீர்ப் புகைக் குண்டு மற்றும் நீர்த் தாரை பிரயோகத் தாக்குதல்கள் குறித்து விசாரணை நடத்த குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. சட்டம் ஒழுங்கு அமைச்சர் சாகல ரட்நாயக்கவினால் இந்தக்குழு இன்றைய தினம் நியமிக்கப்பட்டுள்ளது. இந்தக் குழுவில் மூன்று பேர் அங்கம் வகிக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. சிரேஸ்ட பிரதிக் காவல்துறை மா அதிபர் சீ.டி. வி;க்ரமரட்ன, சிரேஸ்ட துணைச் செயலாளர் நிசாந்த வீரசிங்க மற்றும் மேஜர் ஜெனரல் சுதந்த ரணசிங்க ஆகியோர் இந்தக் குழுவில் அங்கம் வகிக்கின்றனர். இந்த தாக்குதல் குறித்து எதிர்வரும் 10ம் திகதி அறிக்கை சமர்ப்பிக்கப்பட உள்ளது. …

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.