ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143414 topics in this forum
-
யாழின் தற்போதைய நிலைமைகள் குறித்து ஆராய்ந்தார் அமெரிக்கப் பிரதித் தூதுவர் யாழ்ப்பாணத்துக்குப் பயணம் மேற்கொண்டிருந்த அமெரிக்கப் பிரதித் தூதுவர் ரொபேர்ட் ஹில்டன் நேற்று யாழ். ஆயர் கலாநிதி ஜஸ்ரின் ஞானப்பிரகாசம் ஆண்டகையைச் சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார். கடந்த வாரம் யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் கொக்குவிலில் காவல்துறையினரின் துப்பாக்கிச் சூட்டுக்குப் பலியா னதை அடுத்து வடக்கில் குழப்பமான நிலை உருவானது. காவல்துறையினரால் நிகழ்த்தப்பட்ட படுகொலைக்கு நீதி கோரி வடக்கில் முழு அடைப்பு போராட்டம் நடத்தப்பட்டது. இந்த நிலையிலேயே கொழும்பிலுள்ள அமெரிக்க பிரதித் தூதுவர் ரொபேர்ட் ஹில்டன் …
-
- 1 reply
- 229 views
-
-
கடந்த 21ஆம் திகதி பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் காவல்துறையினரால் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டிருந்தனர். இதனால் வடக்கே போராட்டங்கள், கர்தாலால் ஸ்தம்பித்துப் போயிருந்தது. இந்தச் சம்பவம் தொடர்பாக நீதியான விசாரணை நடாத்தப்படவேண்டுமென பல அமைப்புக்களும் கோரிக்கை விடுத்திருந்த நிலையில் விசாரணையின் பொருட்டு அனுராதபுரம் சிறையில் தடுத்துவைக்கப்பட்டுள்ள ஐந்து காவல்துறையினரும் சில நாட்களின் பின்னர் அழைத்துவரப்பட்டிருந்தனர். விசேட அதிரடிப் படையினர், சி.ஐ.டியினரின் பாதுகாப்பில் இவர்கள் அழைத்து வரப்பட்டு, ஐவரில் ஒருவர் மாத்திரம் வாகனத்தில் இருந்து இறக்கி வரப்பட்டு அவர் சுட்ட இடத்தை அடையாளம் காட்டினார். கொக்குவில் இந்துக் கல்லூரிக்கு அருகில் உள்ள சந்தை ஒன்றில் இருந்து தான் இ…
-
- 0 replies
- 346 views
-
-
ரணில் மீது எமக்கு சந்தேகம் : என்ன செய்யப்போகின்றார் என்பதனை பார்த்துக்கொண்டிருக்கின்றோம் இலங்கை மத்திய வங்கியின் பிணை முறி விவகார மோசடின் பிரதான சூத்திரதாரி பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவாக இருக்கலாம் என்கின்ற சந்தேகம் எமக்குள்ளது. ஏனெனில் கோப் குழுவின் அறிக்கையினை தவிர்ப்பதற்கு அவர் பல்வேறு அழுத்தங்களை பிரயோகித்தார் என்று மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க எம். பி. தெரிவித்தார். பலமிக்க பாராளுமன்றம் பற்றி அடிக்கடி குறிப்பிடும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கோப்குழுவின் அறிக்கைகளுக்கு இணங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆகவே அறிக்கையினை சட்டமா அதிபர் திணைக்களத்திற்கு அனுப்பி அத்திணைக்களத்தின் ஆலோசனைக…
-
- 0 replies
- 289 views
-
-
புலனாய்வாளர்களிடம் விசாரணை பொலிஸ்மா அதிபரிடம் விளக்கம் கேட்ட ஜனாதிபதி படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்க தொடர்பாக புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்த 280 பேரிடம் விசார ணை செய்யப்படவிருப்பது தொடர்பாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவிடம் விளக்கம் கேட்டுள்ளார். புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்த 20 பேரை தினமும் விசாரணைக்கு உட்படுத்துவதற்கும், இதற்கமைய 200 பேரை விசாரணை செய்ய எதிர்பார்ப்பதாகவும் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் தெரிவித்துள்ளது. எனினும் குறித்த அதிகாரிகளின் பணிகளுக்கு இடையூறு ஏற்படாத வகையில் விசாரணைகளை முன்னெடுக்குமாறு பொலிஸ்மா அதிபருக்கு ஜனாதிபதி ஆலோசனை வழங…
-
- 0 replies
- 208 views
-
-
தெல்லிப்பளை யூனியன் கல்லூரிக்கு கட்டடம் அமைக்க நிதியுதவி யாழ். தெல்லிப்பழை யூனியன் கல்லூரியில் மூன்றுமாடி கட்டடம் ஒன்றை நிர்மாணிக்கவென பிரதமர் ரணில் விக்கிரமசிங்க 55 மில்லியன் ரூபாவை வழங்கியுள்ளார். பாராளுமன்ற கட்டடத்தில் கடந்த புதன்கிழமை இதற்கான நிதி கல்லூரியின் அதிபர் வரதனிடம் வழங்கப்பட்டது. இந்த நிகழ்வில் எதிர்க்கட்சித் தலைவர் இரா. சம்பந்தன், அமைச்சர்கள் டி.எம்.சுவாமிநாதன், ரவி கருணாநாயக்க, இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன், பாரளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராஜா, ஈ.சரவணபவன் ஆகியோரும் கலந்து கொண்டனர். http://onlineuthayan.com/news/19500
-
- 0 replies
- 172 views
-
-
யுத்தம் இடம்பெற்ற பகுதிகளில் 65000 வீடுகளை நிர்மாணிப்போம் மலையக வீட்டுத் தேவையும் பூர்த்தி செய்யப்படும் என்கிறார் பிரதமர் * 2017 ஜனவரியில் ஜீ.எஸ்.பி. கிடைக்கும் * மத்திய தர குடும்பங்களுக்கு 5 இலட்சம் வீடுகள் * ஏற்றுமதி இறக்குமதிக்கு புதிய சட்டம் * 15 ஆயிரம் ஏக்கர் காணிகள் சீனாவுக்கு (ஆர்.ராம், எம்.எம்.மின்ஹாஜ்) இலங்கையின் ஏற்றுமதிகளுக்கு புதிய சந்தைகளை உருவாக்கிக் கொள்ளும் நிமித்தம் மேலும் 3 வர்த்தக ஒப்பந்தங்கள் தொடர்பில் நாம் பேச்சுக்களை நடத்தி வரு கிறோம். இந்தியாவுடனான ஒப்பந்தமொன்றும் சீனா மற்றும் சிங்கப்பூருடன் தலா ஒரு இருதரப்பு ஒப்பந்தங் களும் இவற்றில் அடங்கும். அத்துட…
-
- 1 reply
- 269 views
-
-
மட்டக்களப்பு மாவட்டத்தின் அனைத்து பொலிஸ் நிலையங்களிலும் உள்ள போக்குவரத்து பொலிஸாருக்கு எதிரான அதிகமான முறைப்பாடு பெண்களிடம் இருந்து மட்டக்களப்பு மாவட்ட நீதவான் நீதிமன்றுக்கு கிடைத்திருப்பதினால் போக்குவரத்து பொலிசாரின் நடவடிக்கை குறித்து, உரிய நடவடிக்கையெடுக்குமாறு மாவட்டத்தின் பிரதி பொலிஸ்மா அதிபருக்கு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதவான் எம்.கணேசராஜா உத்தரவு பிரப்பித்துள்ளார். கடந்த காலங்களில் இருந்து மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள பல பகுதிகளில் போக்குவரத்து பொலிஸார் கடமைகளில் வீதிகளில் நிற்கும்போது மோட்டார் சைக்கிள்களில் போக்குவரத்து செய்யும் இளம் பெண்களை நிறுத்தி அவர்களிடமிருந்து பல்வேறு போக்குவரத்து சட்டங்களை கூறி, பல மணி நேரம் வீதிகளில் நிறுத்தி கதைப்பது, அவர்களி…
-
- 0 replies
- 308 views
-
-
'யெஸ் யுவ ஹொனர்' சொன்னவருக்கு விளக்கமறியல் -செல்வநாயகம் கபிலன் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடைபெற்றுக்கொண்டிருந்த போது, வாய் புசத்தி 'யெஸ் யுவ ஹொனர்' என்று சொல்லிய சந்தேகநபரை எதிர்வரும் நவம்பர் மாதம் 10ஆம் திகதி வரையில், விளக்கமறியலில் வைக்குமாறு சாவகச்சேரி நீதிவான் திருமதி ஸ்ரீநிதி நந்தசேகரன், வியாழக்கிழமை (27) உத்தரவிட்டார். மதுபோதையில் வாகனம் செலுத்தி விபத்தினை ஏற்படுத்திய குற்றச்சாட்டு தொடர்பான வழக்கு ஒன்றில், 40 ஆயிரம் ரூபாய் நட்டஈட்டை செலுத்துவதற்காக மேற்படி நபர் நீதிமன்றத்துக்கு வருகை தந்திருந்தார். பார்வையாளர் அரங்கில் உட்கார்ந்திருந்த நபர், பிறிதொரு வழக்கு விசாரணை நடைபெற்றுக்கொண்டிருக்கை…
-
- 2 replies
- 387 views
-
-
சர்வஜன வாக்கெடுப்புக்கு செல்லாமல் அரசியலமைப்பை திருத்த முடிவு? (ரொபட் அன்டனி) சர்வஜன வாக்கெடுப்புக்கு செல்லாமல் தற்போதைய அரசியலமைப்பில் மாற்றத்தை செய்வது குறித்து தேசிய அரசாங்கம் ஆராய்ந்துவருவதாக தெரிவிக்கப்படுகின்றது. அதாவது பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலத்துடன் மட்டும் அரசியலமைப்பில் திருத்தங்களை செய்துகொள்வது தொடர்பில் ஆராயப்படுவததாக அரசதரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன. தேசிய அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் பிரதான இரண்டு கட்சிகளான ஐக்கிய தேசிய கட்சியும் சிறிலங்கா சுதந்திரக் கட்சியும் இவ்வாறு சர்வஜன வாக்கெடுப்புக்கு செல்லாமல் அரசியலமைப்பு விவகாரத்தை கையாள்வது குறித்து ஆராய்…
-
- 2 replies
- 345 views
-
-
ஆனையிறவு புகையிரத நிலையம் நாளை மக்கள் பாவனைக்கு கையளிப்பு.! ஆனையிறவு புகையிரத நிலையம் நாளை மக்கள் பாவனைக்கு கையளிக்கப்படவுள்ளது. நாடுபூராகவுமுள்ள பாடசாலை மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் பங்களிப்புடன் இந்தப் புகையிரத நிலையம் புனர்நிர்மானம் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. மாணவர்கள் மத்தியில் வடக்கிற்கும் தெற்கிற்குமிடையிலான தொடர்பினை வலுப்படுத்துவதனை அடிப்படையாகக் கொண்டே இப்புகையிரத நிலையம் பாடசாலைச் சமூகத்தின் ஒத்துழைப்புடன் புனர்நிர்மானிக்கப்பட்டுள்ளது. அதற்காக நாட்டிலுள்ள சகல பாடசாலைகளிலும் இரு வாரகாலம் நிதி சேகரிக்கும் வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டது. குறித்த தினங்களில் மாணவர்கள் தமது செலவுக்காக கொண்டு வந்த பணத்…
-
- 6 replies
- 1.4k views
-
-
வடக்கில் வேலையின்மையை தீர்க்க நடவடிக்கை ஏனைய மாகாணங்களுடன் ஒப்பிடுகையில் வடக்கில் வேலையற்றோர் எண்ணிக்கையானது அதிகரித்துள்ளது. எனவே வடக்கில் நிலவும் வேலையின்மை பிரச்சினையை தீர்க்க விரை ந்து நடவடிக்கை எடுக்கப்படும் என தொழித்துறை திணைக்களத்தின் பணிப்பாளர் எம்.ஆர். தர்மசேன தெரிவித்துள்ளார். வடமாகாணத்தில் வேலைவாய்ப்பின்றி இருக்கும் இளைஞர், யுவதிகளுக்கு வேலை வாய்ப்பை பெற்றுக் கொடுப்பது தொடர்பான விசேட கலந்துரையாடலொன்று வவுனியா மாவட்ட செயலகத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்றது. மத்திய அரசின் மனிதவள, தொழிற்துறை அமைச்சின் ஏற்பாட்டில் இடம்பெற்ற குறித்த சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வ…
-
- 0 replies
- 262 views
-
-
வடக்கு மாகாண சபையின் புதிய பிரதி அவைத்தலைவரை தெரிவு செய்யும் நேற்றைய சபை அமர்வு பெரும் குழப்பங்களுக்கும் கூச்சல்களுக்கு மத்தியிலும் நடைபெற்று முடிந்துள்ளது. முதலமைச்சரின் கோரிக்கையை மீறி அவைத்தலைவர் வாக்கெடுப்பை நடாத்தி பிரதி அவைத்தலைவரை தெரிவு செய்துள்ளார். வடக்கு மாகாண சபையின் இதுவரை நடைபெற்ற 63 அமர்வுகளில் நேற்றைய அமர்வே முதல் தடவையாக வாக்கெடுப்புக்கு விடப்பட்டுள்ளது. வடக்கு மாகாண சபையின் அறுபத்தி நான்காவது அமர்வு நேற்றைய தினம் கைதடியில் அமைந்துள்ள பேரவை செயலகத்தில் அவைத்தலைவர் சீ.வீ.கே சிவஞானம் தலைமையில் நடைபெற்றது. இதன் போதே என்றுமில்லாதவாறு ஆளுங்கட்சியினர் தமக்குள்ளே அடிபட்டு கொண்டனர். எதிர்க்கட்சியினர் சைலன்சாக இருந்து வேடிக்கை பார்த்துகொண்டு இருந்தனர். அவ்வப்…
-
- 1 reply
- 463 views
-
-
கோப் அறிக்கை உள்ளக அடிப்படையில் இரண்டாக பிளவுப்பட்டுள்ளது : சுனில் ஹந்துன்னெத்தி எம்.பி. (ஆர்.ராம், எம்.எம்.மின்ஹாஜ்) சர்ச்சைக்குரிய மத்திய வங்கி பிணை முறி தொடர்பான கோப் குழுவின் பரிந்துரைக்கு அனைவரும் இணக்கம் தெரிவித்தாலும் உள்ளக அடிப்படையில் இந்த அறிக்கை இரண்டாக பிளவுப்பட்டுள்ளதாக மக்கள் விடுதலை முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினரும், கோப் குழுவின் தலைவருமான சுனில் ஹந்துன் நெத்தி தெரிவித்தார். அரச நிறுவனங்களில், இவ்வாறான நிலைமை எதிர்காலத்தில் ஏற்படாமல் இருப்பதற்கு விசேட பொறிமுறை அவசியமாகும். பிணைமுறி விவகாரத்துடன் தொடர்புடையவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை அவசியம் என்றும் அவர் குறிப்பிட்டார். பாராளுமன்றத்தில் இன்று வெள்ளிக்கிழமை க…
-
- 0 replies
- 278 views
-
-
கொட்டாஞ்சேனையில் காணாமல்போன இரு தமிழர் தொடர்பில் அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகின (எம்.எப்.எம்.பஸீர்) கொட்டாஞ்ச்சேனையில் இருந்து வெல்லம்பிட்டி நோக்கி தமது வேனில் கடந்த 2008 ஆம் ஆண்டு பயணிக்கும் போது கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட இரு தமிழர்கள் தொடர்பிலான விசாரணையில் அதிர்ச்சித் தகவல்கள் பல வெளிப்படுத்தப்பட்டுள்ளன. இவ்வாறு கடத்தப்பட்டவர்களின் தொலைபேசியை மையப்படுத்தி முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளிலேயே இந்த அதிர்ச்சித் தகவல்கள் வெளிப்படுத்தப்பட்டுள்ளதாக விசாரணைகளுக்கு பொறுப்பான சிறப்பு விசாரணை அதிகாரி பொலிஸ் பரிசோதகர் நிஸாந்த சில்வா கொழும்பு மேலதிக நீதிவான் நிஸாந்த பீரிஸுக்கு அறிவித்துள்ளார். இது தொடர்பில் …
-
- 0 replies
- 303 views
-
-
முஸ்லிம்களின் பரம எதிரி இஸ்ரேல், மைத்திரி ரணில் மங்களவுக்கு நண்பர்கள்'': கொழும்பில் முஸ்லிம்கள் ஆர்ப்பாட்டம் (எம்.ஆர்.எம்.வஸீம்) ஜெருஸலேமில் அமைந்துள்ள அல் அக்ஸா பள்ளிவாசல் பலஸ்தீனுக்கு சொந்தமானது என தெரிவித்து யுனெஸ்கோ மாநாட்டில் பலஸ்தீ்ன் கொண்டுவந்த பிரேரணைக்கு அரசாங்கம் ஆதரவாக வாக்களிக்காமைக்கு எதிர்ப்பு வெளியிட்டு இன்று வெள்ளிக்கிழமை ஜுமாஆ தொழுகைக்கு பின்னர் இருவேறு இடங்களில் ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்றன. முஸ்லிம் முற்போக்கு முன்னணி ஏற்பாடுசெய்திருந்த ஆர்ப்பாட்டம் கொள்ளுப்பிட்டி பள்ளிவாசலுக்கு முன்னால் இடம்பெற்றது. இதில் முஸ்லிம் முற்போக்கு முன்னணியின் செயலதிபரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பின…
-
- 0 replies
- 382 views
-
-
யாழில் ஆவா உட்பட 5 க்கும் மேற்பட்ட பாதாள உலகக் குழு; அதிரடி நடவடிக்கைக்கு தயாராகிறது அதிரடிப்படை (எம்.எப்.எம்.பஸீர்) யாழ். குடா எங்கும் ஆவா குரூப் எனும் பாதாள உலகக் குழுவுக்கு மேலதிகமாக மேலும் 5 பாதாள உலகக் குழுக்கள் செயற்பட்டு வருவதாக பாதுகாப்பு தரப்பினர் கண்டறிந்துள்ளனர். குறித்த குழுக்கள் தொடர்பிலான அனைத்து விடயங்களையும் சேகரித்துள்ள தேசிய உளவுப் பிரிவு அது தொடர்பில் பாதுகாப்பு தரப்பை தெளிவுபடுத்தியுள்ள நிலையில் மூன்று சிறப்பு பொலிஸ் குழுக்களை அமைத்து இந்த குழுவினரின் செயற்பாடுகள் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. ஆவா குரூப்புக்கு மேலதிகமாக குடா நாட்டில் நிமலன், டில்லு, ஜூட், பஹீல் மற்…
-
- 0 replies
- 311 views
-
-
சர்ச்சைக்குரிய மத்திய வங்கி பிணை முறி விவகாரம் அர்ஜுன மகேந்திரனுக்கு எதிராக சட்ட நடவடிக்கை : பாராளுமன்ற கோப் குழு பரிந்துரை : 55 பக்கங்களில் அறிக்கை வெளியீடு ; 15 பரிந்துரைகள் முன்வைப்பு (ஆர்.ராம், எம்.எம்.மின்ஹாஜ்) இலங்கை மத்திய வங்கியின் சர்ச்சைக்குரிய பிணை முறி விவகாரம் தொடர்பாக மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜுன மகேந்திரன் நேரடியாக பொறுப்புக் கூற வேண்டும். அவருக்கும் மத்திய வங்கியின் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கும் எதிராக சட்டநடவடிக்கை எடுக்க வேண்டும் என அரச பொறுப்பு முயற்சிகள் பற்றிய பாராளுமன்றக் குழு (கோப்குழு) பரிந்துரை செய்துள்ளது. இலங்கை மத்திய வங்கியின் சர்ச்சைக்குரிய பிணை முறிகள் தொடர்பாக விசாரணைக…
-
- 0 replies
- 222 views
-
-
முஸ்லிம் நாடுகளின் ஆதரவை இலங்கை இழக்கும் : மங்களவை பதவி நீக்குங்கள் : அஸ்வர் தெரிவிப்பு (எம்.ஆர்.எம்.வஸீம்) அரசாங்கம் முஸ்லிம்களுக்கு எதிரான நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்கொண்டால் உலக முஸ்லிம் நாடுகளின் உதவிகளை இழந்துவிடும். பலஸ்தீனுக்கு ஆதரவான பிரேரணைக்கு வாக்களிக்காத மங்கள சமரவீரவை வெளிவிவகார அமைச்சுப்பதவியில் இருந்து ஜனாதிபதி நீக்கவேண்டும் என முஸ்லிம் முற்போக்கு முன்னணியின் செயலதிபர் ஏ.எச்.எம். அஸ்வர் தெரிவித்தார். பைத்துல் முகத்தஸ் அல் அக்ஸா விவகாரம் தொடர்பாக அரசாங்கத்தின் நிலைப்பாட்டை எதிர்த்து இன்று கொள்ளுப்பிட்டி பள்ளிவாசலுக்கு முன்னால் ஜும்ஆ தொழுகைக்குப்பின்னர் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டு உர…
-
- 0 replies
- 278 views
-
-
அரசியல் கைதிகளை விடுதலை செய்யுங்கள் சண்முகம் தவசீலன் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டு நீண்டகாலமாக தடுத்துவைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகளைஇ விடுதலை செய்யுமாறு வலியுறுத்திஇ முல்லைத்தீவு மாவட்டத்தில் கையெழுத்து திரட்டும் நடவடிக்கைகள் முல்லைத்தீவு மாவட்ட செயலகத்துக்கு முன்பாகஇ இன்று வெள்ளிக்கிழமை முன்னெடுக்கப்பட்டது. 'நல்லாட்சியின் சிறைகளில் நமது பிள்ளைகள் கையெழுத்திடுகிறோம் கருணை காட்டுங்கள்' என்ற தொனிப்பொருளில்இ முல்லைத்தீவு மாவட்ட சிவில் சமூக அமைப்புக்களும் சமூக ஆர்வலர்களும் இணைந்துஇ இதனை ஒழுங்கு செய்திருந்தனர். வடமாகாண சபை உறுப்பினர் துரைரைாசா ரவிகரன் கலந்துகொண்டுஇ கையெழுத்திட்டு திரட்டலை உத்தியோகப்பூர்வமாக…
-
- 0 replies
- 200 views
-
-
அரச தொழிற் பயிற்சி நிலையங்களில் தமிழ் மொழி மூலமான பயிற்சிகளும் மேற்கொள்ளப்பட வேண்டும் – டக்ளஸ் தேவானந்தா வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களைத் தவிர்ந்து, தமிழ் மொழி மூல மாணவர்கள் அதிகமாக வசித்துவரும் நாட்டின் ஏனைய பகுதிகளிலுள்ள அரச தொழிற் பயிற்சி நிலையங்களில் தமிழ் மொழி மூலமான பாட நெறிகளும் மேற்கொள்ளப்பட வேண்டுமென ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி(ஈ.பி.டி.பி.)யின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா இன்றைய தினம் நாடாளுமன்றத்தில் தொழிற் பயிற்சி மற்றும் திறன் அபிவிருத்தி அமைச்சர் மகிந்த சமரசிங்ஹவிடம் வலியுறுத்தியுள்ளார். இவ்விடயம் தொடர்பில் மேலும் தெரிவித்துள்ள டக்ளஸ் தேவானந்தா , எமது நாட்டில், உயர் கல்வியை மேற்கொள்ள இயலாது பாடசாலைக் கல்வியை இடைநட…
-
- 0 replies
- 255 views
-
-
திருகோணமலையில் 9 மீனவர்கள் கைது -அப்துல்சலாம் யாசீம் தடைசெய்யப்பட்ட மீன்பிடி வலைகளைப் பயன்படுத்தி மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்டுவந்த ஒன்பது மீனவர்களை இன்று வெள்ளிக்கிழமை அதிகாலை திருகோணமலை, குச்சவெளிப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கடற்பரப்பில் கைதுசெய்துள்ளதுடன், அவர்களிடமிருந்து இரண்டு படகுகளையும் கைப்பற்றியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். புல்மோட்டை பிரதேசத்தைச் சேர்ந்த மீனவர்களே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் கூறினர். http://www.tamilmirror.lk/184943/த-ர-க-ணமல-ய-ல-ம-னவர-கள-க-த-
-
- 0 replies
- 173 views
-
-
அடம்பிடித்த பிள்ளையான் -அப்துல்சலாம் யாசீம் கிழக்கு மாகாண சபையின் 65ஆவது அமர்வுக்கு வருகை தந்திருந்த, கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரும் கிழக்கு மாகாண சபை உறுப்பினருமான சிவனேசத்துரை சந்திரகாந்தன் (பிள்ளையான்), மாகாண சபை அமர்வு முடிந்த பின்னர், தான் வெளியில் வரும்வரை தன்னை அழைக்க வேண்டாம் எனக் கூறி, மாகாண சபைக்குள்ளேயே அமர்ந்து கொண்டார். இன்று வியாழக்கிழமை (27) பிற்பகல் 3.15 மணியளவில் சபை அமர்வு முடிவடைந்த நிலையில், பிற்பகல் 4 மணிவரை சபையின் அறைக்குள் இருந்து கொண்டு அவசரமாக செல்ல முடியாது என பொலிஸாரிடம் தெரிவித்த அவர், அங்கேயே இருந்துவிட்டார். http://www.tamilmirror.lk/184905/அடம-ப-ட-த-த-ப-ள-ள-ய-ன-
-
- 4 replies
- 612 views
-
-
ஐரோப்பிய ஒன்றியத்தின் குழுவொன்று இலங்கை வரவுள்ளது இலங்கைக்கு ஜீ.எஸ்.பி.வரிச்சலுகையை வழங்குவது ரொடர்பில் ஆராய்வதற்காக ஐரோப்பிய ஒன்றியத்தின் குழுவொன்று இலங்கை வரவுள்ளது. இந்த குழு எதிர்வரும் 31 ஆம் திகதி இலங்கை வரவுள்ளதுடன், நவம்பர் 3 ஆம் திகதிவரை இலங்கையில் தங்கியிருந்து ஜீ.எஸ்.பி.வரிச்சலுகையை வழங்குவத தொடர்பில் ஆராய்ச்சியை மேற்கொள்ளவுள்ளது. இலங்கையின் அரசியல் மற்றும் பொருளாதாரத்துறை என்பவற்றை ஆராய்வதுடன், இலங்கைக்கு ஜீ.எஸ்.பி.வரிச்சலுகையை வழங்குவதற்கான சூழ்நிலை நாட்டில் காணப்படுகின்றதா என்பதையும் இக்குழு ஆராயவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. http://www.virakesari.lk/article/12852
-
- 0 replies
- 183 views
-
-
விமல் வீரவன்ச வீட்டில் இளைஞன் மரணம்: காதல்தான்காரணமா? கடந்த சில தினங்களுக்கு முன்னர் நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்சவின் வீட்டில் மர்மமான முறையில் இளைஞன் ஒருவர் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்ட சம்பவமானது விமலின் மகளுடனான காதலே காரணமென தெரிவிக்கப்படுகிறது. 24 வயதான திஸாநயக்க முதியஸ்செலாகே லஹிரு ஜனித் திஸாநாயக்க என்பவரே இவ்வாறு உயிரிழந்திருந்தார். அவரின் பிரேத பரிசோதனை நேற்று நடைபெற்றது. அந்த அறிக்கையின் படி இளைஞரின் மரணம் இயற்கையான மரணம் அல்ல எனவும் சந்தேகத்திற்குரிய மரணம் என கொழும்பு சட்ட வைத்திய அதிகாரி தெரிவித்துள்ளார். அதற்கமைய மேலதிக விசாரணைக்காக சடலத்தின் பாகங்களை அரசா…
-
- 1 reply
- 354 views
-
-
வடக்கில் மூன்று நவீன பனங்கட்டி தொழிற்சாலைகள் (ஆர்.ராம், எம்.எம்.மின்ஹாஜ்) வடக்கில் மூன்று நவீன பனங்கட்டி தொழிற்சாலைகள் அமைக்கப்படவுள்ளதோடு 200 பனைத்தொழில் வல்லுநர்களுக்கு உபகரணங்கள் விரைவில் வழங்கப்படவிருக்கின்றன என சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு புனர்வாழ்வு மீள்குடியேற்றம் மற்றும் இந்துசமய விவகார அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் இன்று வாய்மூல விடைக்கான கேள்வி நேரத்தின் போது ஐக்கிய தேசியக் கட்சியின் மாத்தறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் புத்திக பத்திரண, எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அமைச்சர் சுவாமிநாதன் மேலும் தெரிவிக்கையில், வடக்கில…
-
- 4 replies
- 525 views
-