ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143414 topics in this forum
-
யாழ். விவகாரம் சூடுபிடிப்பு: செய்தியாளர் மாநாட்டிலிருந்து அமைச்சர் வெளியேறினார் அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த செய்தியாளர் மாநாடு, நாடாளுமன்றக் கட்டடத் தொகுதியில் தற்போது இடம்பெற்று வருகின்றது. இதில், கலந்துகொண்டிருந்த சட்டமும் ஒழுங்கும் மற்றும் தென் அபிவிருத்தி அமைச்சர் சாஹல ரத்னாரத்நாயக்விடம், யாழ். மாணவர்கள் இருவரின் மரணம் தொடர்பில், ஊடகவியலாளர்கள் சரமாரியான கேள்விகளை எழுப்பினர். இதன்போது அமைச்சர் ரத்நாயக்க, திடீரென அவ்விடத்தை விட்டு எழுந்துச் சென்றார். http://www.tamilmirror.lk/184788/ய-ழ-வ-வக-ரம-ச-ட-ப-ட-ப-ப-ச-ய-த-ய-ளர-ம-ந-ட-ட-ல-ர-ந-த-அம-ச-சர-வ-ள-ய-ற-ன-ர-
-
- 6 replies
- 513 views
-
-
மாணவர்கள் படுகொலைக்கு பின்னால் வெளிச்சக்திகள் உள்ளனவா? சுமந்திரன் எம்.பி கேள்வி யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் பொலிஸாரினால் சுட்டுக் கொலை செய்யப்பட்ட சம்பவத்திற்குப் பின்னால் வேறு ஏதாவது சக்திகள் இயங்கியிருந்தால், அதனை வெளிச்ச த்திற்கு கொண்டு வருவதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அனைத்து முயற்சிகளையும் எடு க்கும் என அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் குறிப்பிட்டார். மாணவர்கள் இருவர் பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டிற்கு இலக்காகி உயிரிழந்த சம்பவத்தை ஒரு வீதி விபத்து என வர்ணித்து, மூடி மறைக்க முயற்சித்த பொலிஸாரின் செயற்பாட்டி ற்கும் அவர் கண்டனம் வெளியிட்டுள்ளார். இந்தச் சம்பவத்தை …
-
- 0 replies
- 261 views
-
-
யாழ்ப்பாணத்தில் பாதாள உலகக் குழுக்களின் செயற்பாடுகள் உயர்வடைந்துள்ளதாக எச்சரிக்கை குளோபல் தமிழ்ச்செய்தியாளர் கொழும்பு யாழ்ப்பாணத்தில் பாதாள உலகக் குழுக்களின் செயற்பாடுகள் உயர்வடைந்துள்ளதாக புலனாய்வுப் பிரிவினரால் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நாளுக்கு நாள் யாழ்ப்பாணத்தில் பாதாள உலகக்குழுக்களின் செயற்பாடுகள் உயர்வடைந்து செல்வதாகவும், இதனை தடுத்து நிறுத்தாவிட்டால் பாதக விளைவுகள் ஏற்படும் எனவும் புலனாய்வுப் பிரிவினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர். மோட்டார் சைக்கிள்களில் பயணித்து வாள் மற்றும் கத்திகளைக் கொண்டு ஹாவா என்ற பாதாள உலகக்குழு, யாழ்ப்பாணம் முழுவதிலும் பீதியை பரப்பி வருவதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இதேவேளை, யாழ்ப்பா…
-
- 1 reply
- 279 views
-
-
சுன்னாகத்தில் உளவுத்துறை பொலிஸாரை தாக்கியோரை அடையாளம் கண்டது பொலிஸ் ; விரைவில் கைதுசெய்யப்படுவர் (எம்.எப்.எம்.பஸீர்) யாழ். சுன்னாகம் பகுதியில் சிவில் உடையில் கடமையில் இருந்த உளவுத் துறை பொலிஸ் உத்தியோகத்தர்கள் இருவர் மீது வாள் வெட்டுத் தாக்குதலை நடத்திய சந்தேக நபர்களை விஷேட விசாரணைக் குழுவினர் அடையாளம் கண்டுள்ளனர். தேசிய உளவுத் துறை பணிப்பாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் நலிந்த ஜயவர்தனவின் ஆலோசனைக்கு அமைய அமைக்கப்பட்ட தேசிய புலனாய்வுப் பிரிவின் உளவுத் துறை அதிகாரிகள் அடங்கிய விசாரணைக் குழுவின் உதவியுடன், விசாரணைகளை முன்னெடுத்த 5 சிறப்புக் குழுக்களே மேற்படி சந்தேக நபர்களை அடையாளம் கண்டுள்ளனர். வி…
-
- 6 replies
- 753 views
-
-
இலங்கைக்கான கனேடிய உயர்ஸ்தானிகர் கிழக்கு மாகாண முதலமைச்சரை சந்தித்துள்ளார். இலங்கைக்கான கனேடிய உயர்ஸ்தானிகர் ஷெல்லி விட்டிங் (shelley whiting)மற்றும் கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் ஆகியோருக்கிடையில் இன்று சந்திப்பொன்று இடம்பெற்றது. இன்று காலை 9.30 மணியளவில் முதலமைச்சர் அலுவலகத்தில் இடம்பெற்ற சந்திப்பில் சுகதார அமைச்சர் ஏ.எல்.எம் நசீர் ,கல்வியமைச்சர் எஸ் தண்டாயுதபானி மற்றும் மற்றும விவசாயத்துறை அமைச்சர் கே.துரைராஜசிங்கம் ஆகியோரும் கலந்து கொண்டனர் இதன் போது யுத்ததால் அதிகம் பாதிக்கப்பட்ட மாகாணங்களில் ஒன்றான கிழக்கு மாகாணத்தில் வசிப்பவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவது ,மீள்குடியேற்ற செயற்பாடுகள் மற்றும் அரசியல் யாப்பில் அதிகார ப…
-
- 0 replies
- 215 views
-
-
ஊடகங்கள் என்னை துரத்தி துரத்தி தாக்குகின்றன – ஜனாதிபதி குளோபல் தமிழ்ச் செய்தியாளர் கொழும்பு ஊடகங்கள் தம்மை துரத்தி துரத்தி தாக்குவதாகவும் ஊடகங்கள் தம்மை கடுமையாக தாக்கி வருவதாகவும், இவ்வளவு தாக்குவதற்கு எந்தவொரு ஜனாதிபதியும் இடமளிக்கவில்லை என சில ஊடகவியலாளர்கள் கருதக் கூடுமெனவும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். ‘மேலே பாய்ந்து பாயந்து அடிக்கின்றார்கள், திருப்பி திருப்பி அடிக்கின்றார்கள், கீழே வீழ்த்தி எழுப்பி தாக்குகின்றார்கள்’ என தெரிவித்துள்ளார். தம்மை தாக்குவதற்கு இடமளித்த ஓரேயொரு ஜனாதிபதி தாமே என அவர் குறிப்பிட்டுள்ளார். 2015ம் ஆண்டு ஜனவரி மாதம் 8ம் திகதிக்கு முன்னதாக ஊடகவியலாளர்களுக்கு இவ்வாறான ஓர் முத…
-
- 0 replies
- 242 views
-
-
“இராணுவ தேவைக்கு சத்தமில்லாமல் சவீகரிப்பு நடவடிக்கை” (ஆர்.வி.கே) வலிகாமம் வடக்கு பகுதியில் உள்ள பொதுமக்களுக்கு சொந்தமான காணிகளை இராணுவ தேவைக்கு சுவீகரிப்பதற்காக சத்தமில்லாமல் நில அளவை பணிகள் தற்பொழுது மேற்கொள்ளப்பட்டுவருவதாக வலிவடக்கு மீள் முடியேற்ற குழுவின் தலைவர் எஸ்.சஜீவன் தெரிவித்துள்ளார். வலிகாமம் வடக்கு பகுதியில் உள்ள மயிலிட்டி, பலாலி போன்ற பிரதேசங்களில் தற்பொழுது நில அளவை பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. யுhழ். நகரை அண்டிய பகுதிகளில் அசோகா கோட்டல் நிலப்பரப்பு, பண்ணையில் வைத்தியசாலைக்கு சொந்தமான நிலப்பரப்பு போன்றன இராணுவ தேவைகளுக்காக அபகரிக்கப்பட்டு கொண்டிருக்கின்றது. சத்தமில்லாமல் இந்த அபகரிப்புகள் ந…
-
- 0 replies
- 246 views
-
-
எதிர்க்கட்சித் தலைவரிடம் வேண்டுகோள் முன்வைப்பு.! மட்டக்களப்பு கரடியனாறு விவசாயப் பண்ணையில் இயங்கி வந்த பிராந்திய விவசாய ஆராய்ச்சிப் பிரிவை யுத்தத்தைக் காரணம் காட்டி படிப்படியாக இங்கிருந்து இடம்மாற்றி பொலனறுவை மாவட்டத்திலுள்ள அரலகங்வில பிரதேசத்திற்குக் கொண்டு சென்று விட்டார்கள். அதனை மீண்டும் கரடியனாறு விவசாயப் பண்ணைக்கே கொண்டு வர முயற்சி மேற்கொள்ளுமாறு இலங்கை பாராளுமன்ற எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இராஜவரோதயம் சம்பந்தனிடம் கிழக்கு மாகாண விவசாயிகள் சார்பாக வேண்டுகோள் ஒன்றை முன்வைத்துள்ளதாக மட்டக்களப்பு விவசாயத் திணைக்கள பிரதிப் பணிப்பாளர் ஆர்.கோகுலதாஸன் தெரிவித்தார். இது குறித்து மேலும் குறிப…
-
- 0 replies
- 297 views
-
-
5 பொலிஸாரும் சம்பவ இடத்துக்கு சென்று விளக்கமளித்தனர் - சொர்ணகுமார் சொரூபன் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்கள் சுடப்பட்ட கொக்குவில், குளப்பிட்டிப் பகுதிக்கு, துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்ட குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்டு தடுத்துவைக்கப்பட்டுள்ள, 5 பொலிஸாரும் இன்று புதன்கிழமை (26) காலை அழைத்துச் செல்லப்பட்டு, சம்பவம் பற்றிய விவரத்தை அங்கு வைத்து வழங்கியுள்ளனர். அவர்கள் நின்று சுட்ட இடமான குளப்பிட்டிச் சந்தையின் முன்பகுதி மற்றும் மாணவர்கள் வீழ்ந்து, சடலமாக மீட்கப்பட்ட கடையின் முன்பக்கம் வரையிலும் இவர்கள் சரியாக அடையாளங் காட்டினர். அவர்கள் காட்டிய அடையாளங்களின் அடிப்படையில், நின்று சுட்டதாகக் கூறப்பட்ட இடத்தில், சொஹோ பொலிஸார் மேற…
-
- 1 reply
- 545 views
-
-
காலிமுகத்திடலில் இருந்து மொரட்டுவைக்கான பாதயாத்திரை ஆரம்பமானது : மஹேலவுடன் சங்காவும் இணைவு புற்றுநோய் வைத்தியசாலை ஒன்றினை காலி, கராபிட்டியவில் அமைப்பதற்கான பாதயாத்திரை இன்று காலை 6 மணியளவில் கொழும்பு காலி முகத்திடலில் ஆரம்மானது. இந்த பாதயாத்திரை முரட்டுவை வரை சென்றடைய உள்ளது. இன்று மஹேலவுடன் குமார் சங்கக்காரவும் கைகோர்த்துள்ளார். http://www.virakesari.lk/article/12753
-
- 0 replies
- 229 views
-
-
கோப் குறித்து அவையில் வாதம்; ‘ஆவா’, ‘கியா’ எனக் கிண்டல் அழகன் கனகராஜ் அரசாங்க பொறுப்பு முயற்சிகள் பற்றி நாடாளுமன்றத் தெரிவுக்குழுவின் (கோப்) அறிக்கை தொடர்பில், நாடாளுமன்றத்தில் நேற்றுச் செவ்வாய்க்கிழமை (25), வாதப் பிரதிவாதங்கள் இடம்பெற்றன. நாடாளுமன்றம் பிரதிச் சபாநாயகர் திலங்க சுமதிபால தலைமையில், நேற்றுப் பிற்பகல் 1 மணிக்குக் கூடியது. சபையின் பிரதான நடவடிக்கைகள் நிறைவடைந்ததன் பின்னர் எழுந்த ஒன்றிணைந்த எதிரணியின் எம்.பியான தினேஷ் குணவர்தன, கோப் குழுவின் அறிக்கை, நாடாளுமன்றத்தில் இன்று (நேற்று) சமர்ப்பிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. நாடாளுமன்றத்தில் நாமும் வெளியில் மக்களும், எதிர்பார்த்து நிற்கின்றனர். எனினும், கோப் கு…
-
- 0 replies
- 222 views
-
-
மட்டக்குளி துப்பாக்கி சூடு 11 பேர் கைது கொழும்பு, மட்டக்குளி, சமித்புர பகுதியில், கடந்த ஞாயிற்றுக்கிழமை (23) இரவு இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டுச் சம்பவத்துடன் தொடர்புடையதாகக் கூறப்படும் 11 பேர், நேற்று (25) இரவு, இரத்தினபுரியில் வைத்துக் கைதுசெய்யப்பட்டுள்ளதாக கொழும்பு குற்றப் பிரிவினர் தெரிவித்துள்ளனர். குறித்த துப்பாக்கிப் பிரயோகச் சம்பவத்தில் படுகாயமடைந்த எழுவரில் நால்வர், கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்படுவதற்கு முன்னரே, உயிரிழந்திருந்திருந்ததுடன், ஏனைய மூவரும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர். இந்தச் சம்பவத்தில், சமித்புர பகுதியைச் சேர்ந்த பிரசாத் …
-
- 0 replies
- 198 views
-
-
‘ஆவா’ தொடர்பில் பொலிஸார் ஆவல் -தர்ஷன் சஞ்ஜீவ யாழ்ப்பாணம், சுன்னாகத்தில் இடம்பெற்ற வாள்வெட்டுச் சம்பவத்துக்கு நாமே காரணம் என்று தெரிவித்துள்ள “ஆவா” என்ற குழுவினர் பற்றிய விசாரணைகளை பொலிஸார் ஆரம்பித்துள்ளனர். இச்சம்பவம் தொடர்பில், பல்வேறான பொலிஸ் குழுவினர் விசாரணைகளை முன்னெடுத்து வருவதாகவும் இச்சம்பவத்தின் போது, தாக்கியவர்கள் தொடர்பான தகவல்கள் பெறப்பட்டு வருவதாகவும், யாழ்ப்பாண பிரதி பொலிஸ்மா அதிபர் சன்ஜீவ தர்மரத்ன நேற்றுச் செவ்வாய்க்கிழமை (25) தெரிவித்தார். அரச புலனாய்வு சேவைப்பிரவைச் சேர்ந்த பொலிஸார் இருவர், இனந்தெரியாத நபர்களால் வாள்வெட்டுக்கு இலக்காகி, தற்போது வைத்தியசால…
-
- 0 replies
- 191 views
-
-
யாழ் பாதுகாப்பில் விசேட அதிரடிப் படையினர் குவிப்பு யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் பொலிஸாரின் துப்பாக்கிப் பிரயோகத்தில் பலியான சம்பவத்தை கண்டித்து நேற்றைய தினம் வடக்கு மாகாணத்தில் நடத்தப்பட்ட ஹர்த்தாலை அடுத்து வன்முறைகள் இடம்பெறலாம் என்ற அச்சத்தில் விசேட அதிரடிப் படையினர் ஏராளம் பேர் களமிறக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக யாழ். மாவட்டத்தில் பொலிஸார் எவரும் வீதிக் கடமைகளில் ஈடுபடுவது தவிர்க்கப்பட்டு விசேட அதிரடிப்படையினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளதோடு, கலகம் தடுப்பு பொலிஸாரும் ஆங்காங்கே பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. யாழ். நகரப் பகுதி மற்றும் நகருக்கு வெளியேயும் …
-
- 0 replies
- 149 views
-
-
சுன்னாகம் சம்பவம்: உரிமை கோரியது 'ஆவா' குழு சுன்னாகம் சந்தைப் பகுதியில், முகமூடி அணிந்திருந்த நபர்களினால் கடந்த ஞாயிற்றுக்கிழமை (23) மதியம், இரு பொலிஸார் மீது மேற்கொள்ளப்பட்ட வாள்வெட்டு சம்பவத்துக்கு 'ஆவா' குழு உரிமை கோரியுள்ளது. மேற்குறிப்பிட்ட சம்பவம் தொடர்பில் 'ஆவா' குழுவினரால் யாழ்ப்பாணத்தில் ஒட்டப்பட்டுள்ள சுவரொட்டிகளிலேயே இவ்வாறு உரிமை கோரப்பட்டுள்ளது. குறித்த சுவரொட்டிகளில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, உயிர் நீத்த பல்கலைக்கழக மாணவர்களுக்கு ஆழ்ந்த கண்ணீர் அஞ்சலியை காணிக்கை ஆக்குகின்றோம். சுண்ணாகத்தில் பொலிஸார் மீது நடத்தப்பட்ட வாள்வெட்டு எம்மால் நடத்தப்பட்டதே. பல்கலைக்கழக மாணவர்களுக்கு எதிராக இழ…
-
- 10 replies
- 1.5k views
-
-
யாழில். இலக்கதகடற்ற ஜீப்பில் வந்தவர்கள் இளைஞர்கள் மீது தாக்குதல் குளோபல் தமிழ்ச் செய்தியாளர் யாழ்ப்பாணம் யாழ்.ஆனைக்கோட்டை ஆலடி வைரவர் கோயிலடியில் மோட்டார் சைக்கிளில் வந்த மூன்று இளைஞர்கள் மீது இலக்க தகடு அற்ற ஜீப்பில் வந்த குழுவினர் தாக்குதல் மேற்கொண்டதுடன் மோட்டார் சைக்கிள் எரிபொருள் தாங்கி மீது வாள் வெட்டினையும் மேற்கொண்டு உள்ளனர். ஆனைக்கோட்டை சந்தி வழியாக தமது வீட்டுக்கு இன்று செவ்வாய்க்கிழமை இரவு 8 மணியளவில் மூன்று இளைஞர்கள் மூன்று மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த வேளை ஜீப்பில் வந்த நான்கு பேர் அவர்களை மறித்து அவர்கள் மீது தாக்குதல் நடாத்தி உள்ளனர். அத்துடன் இளைஞர்களின் மோட்டார் சைக்கிளை வாளினால் வெட்டி சேத…
-
- 9 replies
- 569 views
- 1 follower
-
-
25 இலங்கை அகதிகள் இன்று தாயகம் திரும்புகிறார்கள்.! இலங்கையில் இருந்து இடம்பெயர்ந்து இந்தியாவில் அகதி வாழ்க்கை வாழ்ந்த 25 பேர் இன்று தாயகம் திரும்புகிறார்கள். சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு, புனர்வாழ்வு, மீள்குடியேற்ற அலுவல்கள் அமைச்சின் செயலாளர் வி.சிவஞானசோதி இதுதொடர்பாக தெரிவிக்கையில், ஐக்கிய நாடுகளின் அகதிகளுக்கான உயர்ஸ்தானிராயலத்தின் ஊடாக இவர்கள் இலங்கைக்கு அழைத்து வரப்படுகிறார்கள். இவர்கள் மன்னார், திருகோணமலை, வவுனியா, மாத்தறை, கிளிநொச்சி ஆகிய மாவட்டங்களில் மீள்குடியேற்றப்பட உள்ளதாக குறிப்பிட்டார். இது தவிர 6 மாத காலத்திற்கு உலர் உணவு வழங்கவும் அனுமதி கிடைத்திருப்பதாக அமைச்சின் செயலாளர் குறிப்பிட்டுள்ளார். …
-
- 4 replies
- 489 views
-
-
எந்தவொரு அரசியல் செயற்பாட்டிலும் முஸ்லிம்கள் பாதிக்கப்படக்கூடாது : ஐ.நா நிபுணரிடம் அமைச்சர் ரிஷாட் கோரிக்கை (ஆர்.ராம்) புதிய அரசியலமைப்பு, தேர்தல் முறைமை மாற்றம் உட்பட எந்தவொரு அரசியல் செயற்பாட்டிலும் முஸ்லிம் சமூகத்திற்கு பாதிப்பு ஏற்படாதவாறும் அவர்களின் அபிலாஷைகளும் கோரிக்கைகளும் உள்வாங்கப்படுவதை உறுதி செய்யுமாறு ஐக்கிய நாடுகள் சபையின் விசேட அறிக்கையாளர் ரீட்டா ஐசாக் நாடியாவிடம் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் கைத்தொழில் வணிக்கத்துறை அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் கோரிக்கை விடுத்துள்ளார். சிறுபான்மை இன விவகாரங்களை ஆராய்வதற்கான ஐக்கிய நாடுகள் சபையின் விசேட அறிக்கையாளர் ரீட்டா ஐசாக் நாடியாவுக்கும் அகில இலங்கை ம…
-
- 51 replies
- 2.5k views
-
-
இலங்கை கிழக்கு மாகாணத்தில் ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்ப பிரதமர் சிறப்பு அனுமதி இலங்கையில் கிழக்கு மாகாண பள்ளிக் கூடங்களில் இரு வருடங்களுக்கு மேலாக காணப்படும் கணிதம் , விஞ்ஞானம் மற்றும் ஆங்கிலம் ஆகிய பாடங்களுக்கான ஆசிரியர் பதவிக்கான வெற்றிடங்களை உடனடியாக நிரப்புவதற்கு பிரதமர் ரணில் விக்ரமசிங்க சிறப்பு அனுமதி வழங்கியுள்ளதாக மாகாண முதலமைச்சர் செயலகம் கூறுகின்றது. கிழக்கு மாகாண பள்ளிக்கூடங்களில் 5200 ஆசிரியர் வெற்றிடங்கள் காணப்படுகின்றது பிரதமர் ரணில் விக்ரமசிங்க மாகாண முதலமைச்சரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு இந்த அனுமதியை வழங்கியதாக முதலமைச்சர் செயலகம் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கிழக்கு மாகாண பள்ளி…
-
- 0 replies
- 310 views
-
-
அமைச்சர் றிசாத்தின் பார்வையில் கூட்டமைப்பின் எம்.பிக்கள் படிப்பறிவில்லாதவர்களாம் வவுனியா மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் இன்று (திங்கட்கிழமை) காலை இட ம்பெற்ற நிலையில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களை தரக்குறை வாக பேசியுள்ளார் அமைச்சர் றிசாத் இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, அரச கட்டடங்கள் சில மக்கள் பிரதிநிதிகளிடம் இருப்பது குறித்து மேலதிக அரசாங்க அதிபர் திரேஸ்குமார் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்ட கவனத்திற்கு கொண்டு வந்தார். இதன்போது அமைச்சர் றிசாட் பதியுதீன் தன்வசம் வைத்துள்ள அரச கட்டடத்தை (சேக்கிற் பங்களா) விடவேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் சாள்ஸ…
-
- 4 replies
- 486 views
-
-
சுலக்சனின் இறுதிக்கிரியைகளில் பெருமளவானோர் பங்கேற்பு யாழ்ப்பாணம் - கொக்குவில் பகுதியில் சுட்டுப்படுகொலை செய்யப்பட்ட இரண்டு மாணவர்களில் ஒருவரான யாழ்ப்பாணம் கந்த ரோடை பகுதியைச் சேர்ந்த விஜயகுமார் சுலக்சன் (24) என்ற மாணவனது இறுதிச் சடங்கு அவரது இல்லத்திலிருந்து ஆரம்பமாகி யுள்ளது. மாணவனது இல்லத்தில் வைக்கப்பட்ட பூதவுடலுக்கு, பல்கலைக்கழக மாணவர்கள், பொது மக்கள், அரசியல்வாதிகள் உட்பட ஆயிர க்கணக்கானோர் அஞ்சலி செலுத்தினர். இறுதிக்கிரியைகளின் பின்னர் தற்போது மாணவனது பூதவுடல், சுன்னாகம், மருதனார்மடம், உடுவில் பகுதியூடாக எடுத்துச் செல்ல ப்படுகிறது. இறுதியாக மல்வம் மயானத்தில் அடக்கம் செய்யப்படவுள்ளது. …
-
- 2 replies
- 356 views
-
-
புதிதாக உருவாக்கம் பெற்றுள்ள சிவசேனைக் குழு, தாக்குதலுக்குள்ளான அனுராதபுரம் பழைய நகரத்தில் உள்ள முத்துமாரி அம்மன் ஆலயத்தை நேற்று புதன்கிழமை சென்று பார்வையிட்டது. சுவாமி சாகிரத்தர் சைதன்யர் சின்மயானந்தர், மறவன் குலவு சச்சிதானந்தம், மனித உரிமை அலுவலராக இருந்த கலாநிதி மோகன், வடமாகாண சபை உறுப்பினர் சிவநேசன், சட்ட மாணவர் யசோதரன் உள்ளிட்ட குழுவினரே தாக்குதலுக்குள்ளான ஆலயத்தைப் பார்வையிட்டதுடன், தாக்குதலுக்கு இலக்கான நபர் மற்றும் குடும்பத்தினரையும் சந்தித்து கலந்துரையாடியுள்ளனர். இவ்விஜயத்தின் போது அப்பகுதிக்குப் பொறுப்பான அரச அதிகாரிகள், பொலிஸ் அதிகாரி ஆகியோரையும் இக்குழு சந்தித்து தாக்குதல் சம்பவம் தொடர்பில் கலந்துரையாடியிருந்தது. …
-
- 22 replies
- 1.8k views
-
-
கிளிநொச்சியில் பொலிஸார் இளைஞர்கள் இடையே மோதல் : பொலிஸ் மீது தாக்குதல் : வீதியில் டயர்கள் எரிப்பு : தொடருகிறது பதற்றம் கிளிநொச்சி ஏ9 வீதி வைத்தியசாலைப் பகுதியில் பொலிசார் மற்றும் இளைஞர் களுக்கு இடையில் முறுகல் நிலை ஏற்பட்டதையடுத்து பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளதுடன் பொலிஸ் ஒருவருக்கு காயம் ஏற்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார். வடக்கின் பல பகுதிகளிலும் ஹர்த்தால் அனுஷ்ட்டிக்கப்பட்டுவந்த நிலையில் கிளிநொச்சியிலும் அனுஷ்ட்டிக்கப்பட்டிருந்தது. இதன் போது, அங்கு ஒன்று கூடிய இளைஞர்கள் போத்தல்களை நடுவீதியில் உடைத்தும் வீதியின் நடுவில் இருந்தும் தமது எதிர்ப்பை வெளிக்காட்டியிருந்தனர். இதனையடுத்து, அங்கு கடமையில் இர…
-
- 5 replies
- 650 views
-
-
மாணவர்கள் படுகொலை : நீதி வழங்கக்கோரி லண்டனில் இலங்கை தூதரகத்திற்கு முன்பாக கவனயீர்ப்பு போராட்டம் பொலிஸாரின் துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்த யாழ்.பல்கலைக்கழகத்தின் ஊடகவியல் மற்றும் அரசறிவியல் துறை மாணவர்களான விஜயகுமார் சுலக் ஷன், நடராஜா கஜன் ஆகியோரின் படுகொலைகளைக் கண்டித்தும் உடனடியாக நீதி வழங்கக் கோரியும் இன்று லண்டனில்; அமைந்துள்ள இலங்கை தூதரகத்திற்கு முன்பாக இன்று காலை 11 மணியளவில் கவனயீர்ப்பு போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. புலம்பெயர் தமிழர்களால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த ஆர்ப்பாட்டத்தில் நூற்றுக் கணக்கானோர் கலந்துகொண்ட தமது எதிர்ப்பை வெளியிட்டதாக எமது செய்தியாளர் தெரிவித்தார். குற்றம் புரிந்தவர்க…
-
- 0 replies
- 366 views
-
-
கிளிநொச்சியில் பதற்றம்: அதிரடிப்படையினர் குவிப்பு யாழ்ப்பாண பல்கலைகழக மாணவர்களின் படுகொலைக்கு எதிர்ப்பு வெளியிடும் வகையில் வட மாகாண முழுவதும் பூரண ஹர்த்தால் அனுஷ்டிக்கப்பட்டுவருகின்றது. இந்த நிலையில், கிளிநொச்சி 55 ஆம் கட்டைப் பகுதி மற்றும் அறிவியல்நகர் பகுதியில் அதிகளவு பொலிஸார் குவிக்கப்பட்டு இருந்தமையால் அங்கு பதற்றநிலை ஏற்பட்டது. கிளிநொச்சி அறிவியல் நகர் பகுதியிலுள்ள ஆடைத்தொழிற்சாலையின் செயற்பாடுகள் வழமைபோன்று இடம்பெற்றுவந்த நிலையில், அந்த தொழிற்சாலை மீது தாக்குதல் நடத்தப் போவதாக தகவல் ஒன்று பரவியதை அடுத்து இந்த பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது. அத்துடன், கிளிநொச்சி அறிவியல் நகர் பகுதியில், பாதுகாப்பு பலப்படுத்தப்பட்ட…
-
- 0 replies
- 341 views
-