ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143414 topics in this forum
-
கடந்த சில நாட்களுக்கு முன்னர் தனக்கு விடுக்கப்பட்ட கொலை அச்சுறுத்தல் தொடர்பில் பொலிஸாரிடம் விசாரணைகளை நடத்த கோரியுள்ள நிலையில் அதற்கான பதிலை எதிர்பார்த்திருப்பதாக சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். பிரித்தானியாவில் உள்ள ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியின் போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார். தனக்கு அனுப்பி வைக்கப்பட்ட மின்னஞ்சலில் 25 மில்லியன் ரூபாய் கொடுத்து கொலை செய்ய உள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. அதன் காரணமாக பிரதியை பொலிஸ்மா அதிபருக்கும் ஜனாதிபதிக்கு அனுப்பியதாக தெரிவித்திருந்தார். மேலும் அதற்கான உரிய பதிலை தாம் எதிர்பார்ப்பதாக முதலமைச்சர் கோரிக்கை விடுத்துள்ளதாக ஆங்கில ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. என…
-
- 0 replies
- 285 views
-
-
யாழ்.கொக்குவில் விபத்தில் யாழ் .பல்கலை மாணவர்கள் இருவர் பலி யாழ்.கொக்குவில் குளப்பிட்டி சந்திக்கருகில் நேற்று வியாழக்கிழமை நள்ளிரவு 11.30மணியளவில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் யாழ். பல்கலைக்கழக கலைப்பீட மூன்றாம்வருட மாணவர்கள் இருவர் பலியாகியுள்ளனர். இந்த விபத்துச் சம்பவத்தில் அளவெட்டி கந்தரோடை பகுதியைச் சேர்ந்த சுகந்தராசாசுலக்சன் (வயது 24) மற்றும் 155 ஆம் கட்டை கிளிநொச்சிப் பகுதியைச் சேர்ந்த நடராசாகஜன் (வயது 23) ஆகிய இருவருமே உயிரிழந்துள்ளனர். குறித்த இருவரும் யாழ்.பல்கலைக்கழக கலைப்பீடத்தில் கல்வி கற்று வருகின்றார்கள். உயிரிழந்த இருவ…
-
- 7 replies
- 1.1k views
-
-
ஆக்கிரமிப்புப்படை போன்று காட்சியளிக்கும் இராணுவம் வடக்கு மக்களை அவதூறுப்படுத்தும் செயல்; ஐ.நா. அறிக்கையாளர் ரீட்டா பௌத்தத்துக்கு முதலிடம் குறித்து சிறுபான்மையினர் அச்சம் காணிகளை மீள கையளியுங்கள மலையக தமிழர்களின் நிலைமை கவலைக்குரியது தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களை விடுவியுங்கள் (ரொபட் அன்டனி) முழுமையான சிங்கள மக்களைக் கொண்ட இராணுவத்தின் விகிதாசாரத்திற்கு அப்பாற்பட்ட மிக அதிகளவான பிரசன்னமானது வடக்கு மாகாணத்தில் இரா ணுவத்தை ஒரு ஆக்கிரமிப்புப் படையாக காட்டுகின்றது. அதாவது இது தமிழர் களை ஒரு போர்க்குணமுள்ள மக்களாக அவதூறுப்படுத்…
-
- 2 replies
- 1.5k views
-
-
நல்லாட்சி அரசாங்கத்தின் வேலைத்திட்டம் தொடர்பில் ஐரோப்பிய தமிழருக்கு தெளிவில்லை தெளிவுபடுத்த வேண்டும்; ரணிலிடம் ஐரோப்பிய எம்.பி.க்கள் வலியுறுத்தல் நல்லாட்சி அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படும் வேலைத்திட்டத்தின் உண்மை தன்மை தொடர்பில் ஐரோப்பிய புலம்பெயர் தமிழர்களுக்கு பூரண தெளிவின்மை காணப்படுகின்றது. இதனை எண்ணி நாம் கவலை கொள்கின்றோம். மேலும் புலம் பெயர் தமிழர்களுக்கு உண்மை தன்மையை தெளிவுப்படுத்துவதற்கு புதிய வழிமுறையை இலங்கை அரசு கையாளவேண்டும் என ஐரோப்பிய பாராளுமன்ற உறுப்பினர்கள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம் கோரியுள்ளனர். நல்லாட்சி அரசாங்கம் முன்னெடுத்து வரும் சமூக நீதித்து…
-
- 0 replies
- 283 views
-
-
மல்லாகம் வாள்வெட்டு வழக்கு மேன்முறையீட்டு மனு தள்ளுபடியானது நீதவான் நீதிமன்றத் தீர்ப்பு சரியானதென யாழ் மேல் நீதிமன்றம் தீர்ப்பு மல்லாகம் நீதிமன்ற வீதியில் ஒருவரை வாளினால் வெட்டி காயப்படுத்தியதுடன், மோட்டார் சைக்கிளைக் கொள்ளையடித்த வழக்கில் மல்லாகம் நீதிமன்றத்தினால் வழங்கப்பட்ட தீர்ப்பை எதிர்த்து செய்யப்பட்ட மேன்முறையீட்டு மனுவைத் தள்ளுபடி செய்த யாழ் மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன் மல்லாகம் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு சரியானது என 19 ஆம் திகதி புதன்கிழமை தீர்ப்பளித்துள்ளார். …
-
- 0 replies
- 233 views
-
-
இலங்கையில் தேரவாத பௌத்த மதத்தை அழிக்க அமெரிக்கா சதி-மல்வத்துபீட துணை மகாநாயக்கர் திம்பு ல்கும்புரே விமலதம்ம தேரர் குற்றச்சாட்டு இலங்கையில் தேரவாத பௌத்த மதத்தையும், பௌத்த புனிதத் தலங்களையும் அழித்துவிட்டு வேற்றுமதத் தலங்களை நிர்மாணி ப்பதற்கான சதியில் அமெரிக்காவின் உளவுத்துறையான சி.ஐ.ஏ ஈடுபட்டுவருவதாக மல்வத்துபீட துணை மகாநாயக்கர் திம்பு ல்கும்புரே விமலதம்ம தேரர் புதிய தகவலொன்றை வெளியிட்டுள்ளார். கொரியாவில் மஹாயான பௌத்த மதத்தை அழிப்பதற்கு அமெரிக்க உளவுத்துறை மேற்கொண்ட அதே முயற்சிகளை தற்போது இலங்கையிலும் நடைமுறைப்படுத்தியுள்ளதாக சுட்டிக்காட்டிய மல்வத்துபீட துணை மகாநாயக்கர், இந்த விவகாரம் தொடர்பாக கூர்மையான புலனாய்வு வ…
-
- 1 reply
- 211 views
-
-
யாழ்ப்பாணத் தலைமைப் பொலிஸ் நிலையத்துக்கு பாதுகாப்பு சொர்ணகுமார் சொரூபன் யாழ்ப்பாணத் தலைமைப் பொலிஸ் நிலையத்துக்கு கலகம் அடக்கு பொலிஸாரின் பலத்த பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. கொக்குவில் பகுதியில் இரண்டு பல்கலைக்கழக மாணவர்கள் துப்பாக்கியால் சுடப்பட்டு உயிரிழந்ததாக வெளிவந்த தகவலையடுத்து, இந்தப் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. விபத்தில் உயிரிழந்ததாக முன்னர் கூறப்பட்டு, பின்னர் அவர்கள் துப்பாக்கியால் சுடப்பட்டு உயிரிழந்ததாக தகவல் வெளிவந்துள்ளது. இதனால் ஏற்பட்ட பதற்றத்தால் பொலிஸ் நிலையத்துக்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. http://www.tamilmirror.lk/184467/ய-ழ-ப-ப-ணத-தல-ம-ப-ப-ல-ஸ-ந-ல-யத-த-க…
-
- 0 replies
- 235 views
-
-
ஜனாதிபதியின் கருத்தால் திசை திருப்பப்படும் எக்னொலிகொடவின் வழக்கு-மனைவி சந்தியா குற்றச்சாட்டு ஜனாதிபதியின் கருத்தை காரணம் காட்டி பிரகீத் எக்னலிகொடவின் வழக்கு திசை திருப்பப்படுவதாக சந்தியா எக்னலிகொட குற்றம் சுமத்தினார்.கொழும்பில் இன்று இடம் பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார். 81 மாதகாலமாக தீர்வுக்காக போராடுகின்றோம் ஆனால் அண்மையில் ஜனாதிபதி இராணுவ தளபதிகள் பற்றி கூறிய கருத்தை அடிப்படையாக கொண்டு எக்னலிகொட வழக்கு திசை திருப்பப்படுகின்றது. மேலும் நாட்டில் உள்ள ஒவ்வொருவராலும் இழைக்கப்படும் குற்றம் நாட்டுக்கே இழைக்கப்படும் குற்றமாகும் இவ்வாறானவர்கள் தண்டிக்கப்படுவார்கள் என்பதே நியதி. …
-
- 1 reply
- 216 views
-
-
வடமாகாணப் பாடசாலைகள் காலை 7.30 மணிக்கு ஆரம்பம் குணசேகரன் சுரேன் வடமாகாணத்திலுள்ள பாடசாலைகள் எதிர்வரும் 2017ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல், காலை 7.30 மணிக்கு ஆரம்பமாகி பிற்பகல் 1.30 மணிக்கு முடிவடைவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக வடமாகாண கல்வி அமைச்சின் செயலாளர் ஆர்.இரவீந்திரன் தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில், 'வடமாகாண கல்வி அமைச்சர் த.குருகுலராஜாவுடன் கலந்துரையாடி, இதற்கான தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான அறிவித்தல் அனைத்துப் பாடசாலைகளுக்கும் எதிர்வரும் வாரத்தில் சுற்றுநிரூபத்தின் வழியாக அறிவிக்கப்படும். காலையில் மாணவர்கள் மிகவும் உகந்த சூழ்நிலையில் கல்விச் செயற்பாடுகளை ஆரம்பிப்பதைய…
-
- 0 replies
- 303 views
-
-
தமிழ் மக்களது நீண்ட கால விடுதலைப் போராட்டத்தில் தமிழ் தலைமைகள் என அறியபட்டவர்கள், நண்பர்கள் எதிரிகளை இனங்காண்பதில் தொடர்ந்து தவறிழைத்து வருகிறார்கள். இதன் தொடர்ச்சியாவே இலங்கையில் ஏனைய மதத்தினரிடமிருந்து இந்துக்களைக் காப்பாற்றுவோம் என்ற கோசத்துடன் மறவன்புலவு சச்சிதானந்தம் அவர்கள் இந்து தீவிரவாதிகளுக்குச் செங்கம்பள வரவேற்பு கொடுக்கும் நிகழ்வும் பார்க்கப்பட வேண்டும். வடக்கிலும், கிழக்கிலும் சில பாராளுமன்ற உறுப்பினர்களும் விஷ்வ இந்து பரிஷத் போன்ற அமைப்புகளுடன் நெருங்கிய தொடர்புகளை ஏற்படுத்திக் கொண்டுள்ளனர். இதனை விட சில தமிழ் தலைவர்கள் பொது பல சேன போன்ற தீவிர பௌத்த அமைப்புகளுடன் இரகசிய வேலைத் திட்டங்களையும் ஆரம்பிக்கத் தலைப்பட்டுள்ளனர். இந்துத்துவ வெறியை மராட்டியர்…
-
- 7 replies
- 762 views
-
-
இலங்கையில் பெண்களி்ன் ஆயுள்காலம் அதிகரிப்பு இலங்கையில் ஆண்களை விட பெண்களின் சராசரி ஆயுள்காலம், 6.6 ஆண்டுகள் அதிகமாக இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளதாக சனத்தொகை மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக நேற்று கொழும்பில் செய்தியாளர்களிடம் கருத்து வெளியிட்ட சனத்தொகை மற்றும் புள்ளிவிபரத் திணைக்கள பணிப்பாளர் நாயகம், இந்து பண்டார, “இலங்கையில் பெண்களின் சராசரி ஆயுள்காலம் 78.6 ஆண்டுகளாக இருக்கும் அதேவேளை, ஆண்களின் சராசரி ஆயுள்காலம் 72 ஆண்டுகளாகவே இருப்பது அண்மைய ஆயு்வுகளில் கண்டறியப்பட்டுள்ளது. 1962-64 காலப்பகுதி வரையில் இலங்கையில் பெண்களின் சராசரி ஆயுள்காலம் ஆண்களை வி…
-
- 0 replies
- 336 views
-
-
உடற்பாகங்கள் எடுத்து செல்லப்பட்டமைக்கு பொறுப்புச் சொல்ல மாட்டோம்-மாலபே மருத்துவ கல்லூரி அறிவிப்பு மாலபே சைட்டம் நிறுவனத்திலிருந்து எடுத்துச் செல்லப்பட்ட உடற்பாகங்கள் தொடர்பிலான தீர்மானங்களுக்கு தாம் பொறுப்புச் சொல்ல மாட்டோம் என அந்நிறுவனத்தின் பிரதம அதிகாரி டாக்டர் நெவில் பிரணாந்து தெரிவித்துள்ளார். மாலபே சைட்டம் வைத்திய கல்லூரியில் வைக்கப்பட்டிருந்த உடற்பாகங்கள், சில நாட்களுக்கு முன்னர் குற்றப்புலனாய்வுத் திணை க்களத்தினால் எடுத்துச் செல்லப்பட்டது. நீதிமன்ற உத்தரவின் பேரில் எடுத்துச் செல்லப்பட்ட அந்த உடற்பாகங்கள் அடங்கிய பெட்டியில் சைட்டம் நிறுவனத்தின் முத்திரைகள் காணப்படவில்லை. சி.ஐ.டி. யினரின் முத்திரைகள் மாத்திரமே அத…
-
- 0 replies
- 137 views
-
-
மண் அகழ்தல் மற்றும் காடழித்தல் தொடர்பில் தனது அங்கீகாரமும் பெறவேண்டுமெனும் சட்டம் கொண்டுவரப்படும் – ஜனாதிபதி மண் அகழ்தல் மற்றும் காடழித்தல் தொடர்பில் தற்போதிருக்கும் நிறுவனக் கட்டமைப்புடன் தொடர்புடைய அனைத்து நிறுவனங்களினதும் அங்கீகாரம் பெறப்பட்டாலும் இறுதியில் சுற்றாடல் அமைச்சர் என்ற வகையில் தன்னுடைய அங்கீகாரத்தையும் பெறுவதற்கான சுற்றறிக்கை வெளியிடப்படுமென ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன தெரிவித்தார். நாடுமுழுவதும் முறையற்ற வகையில் மண் அகழ்தல், காடழிப்பு, மணல் கொண்டு செல்லப்படுதல் பற்றிய தகவல்கள் கிடைத்து வருகின்றன. சுற்றாடலுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்திவரும் இத்தகைய செயற்பாடுகளை நிறுத்த நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்த ஜனாதிபதி, விசாரணை நடத்தி …
-
- 0 replies
- 222 views
-
-
அமெரிக்கத் தூதுவர்-சம்பந்தன் சந்தித்து பேச்சு அமெரிக்கத் தூதுவர் அதுல் கெசாப், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தனை சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார். எதிர்க்கட்சித் தலைவரின் செயலகத்தில் நேற்று இந்தச் சந்திப்பு இடம்பெற்றதாகத் தெரியவருகிறது. இந்தச் சந்திப்பின் போது பேசப்பட்ட விடயங்கள் தொடர்பான தகவல்கள் ஏதும் வெளியாகவில்லை. எனினும், இரா.சம்பந்தனை சந்திப்பதும், அவரது கருத்துக்களைச் செவிமடுப்பதும் எப்போதும் தமக்கு மகிழ்ச்சியைத் தருவதாக, அமெரிக்கத் தூதுவர் அதுல் கெசாப், தமது ருவிட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார். http://onlineuthayan.co…
-
- 1 reply
- 305 views
-
-
ரவிராஜ் கொலைவழக்கை அறங்கூறுனர் சபையில் நடத்துவதா?27இல் முடிவு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜ் கொலை வழக்கை அறங்கூறுநர் சபை முன் நடத்துவதா, இல்லையா என்ற முடிவை எதிர்வ ரும் 27 ஆம் திகதி அறிவிப்பதாக கொழும்பு மேல் நீதிமன்றம் நீதிபதி மணிலால் விஜேதிலக்க தெரிவித்துள்ளார். ரவிராஜ் கொலை வழக்கில் குற்றம் சுமத்தப்பட்டுள்ள 6 பேர் மீதான வழக்கு விசாரணைகளை அறங்கூறுநர் சபை முன் நடத்துமாறு கடந்த மாதம் ஆரம்பத்தில் கோரிக்கை விடுத்திருந்த னர். இந்த கொலை வழக்கில் இரண்டு கடற்படையினர், ஒரு பொலிஸ் உத்தியோகஸ்தர், கருணா தரப்பை சேர்ந்த மூன்று பேர் என ஆறு பேருக்கு எதிராக குற்றம் சு…
-
- 6 replies
- 454 views
-
-
முன்னாள் இராணுவத் தளபதி தயா ரட்நாயக்கவிடம் ஐந்து மணித்தியாலங்கள் விசாரணை நடத்தப்பட்டுள்ளது. பாரிய நிதி மோசடிகள் மற்றும் அதிகார துஸ்பிரயோகம் தொடர்பிலான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் எதிரில் முன்னிலையாகிய தயா ரட்நாயக்க ஐந்து மணித்தியாலஙகள் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். 50 மில்லியன் ரூபா பணம் துஸ்பிரயோகம் செய்யப்பட்டமை குறித்து விசாரணை நடத்தப்பட்டுள்ளது. 2014ம் ஆண்டில் வடக்கு கிழக்கு உள்ளிட்ட மாகாணங்களில் வெள்ள அனர்த்தம் ஏற்பட்ட போது வழங்கப்பட்ட நிதி உதவிகள் இவ்வாறு துஸ்பிரயோகம் செய்யப்பட்டதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இந்தப் பணம் ஜனாதிபதி தேர்தலுக்காக பயன்படுத்தப்பட்டதாகக் கூறி முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. …
-
- 0 replies
- 252 views
-
-
மட்டக்களப்பு புணானை மீள் குடியேற்ற கிராமத்தில் தமிழ் மக்களினால் வழிபட்டு வந்த ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலயத்திற்கான, நீண்டகாலமாக நிலவி வந்த எல்லைக் கல் இடும் பணி தொடர்பான கலந்துரையாடல் நிகழ்வு இன்று ஆலய முன்றலில் நடைபெற்றது. குறித்த கிராமத்திற்கான கிராம சேவகர் க.சுபோஸ் தலைமையில் நடைபெற்ற மேற்படி கலந்துரையாடலில் மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன், கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஞா.கிருஸ்ணப்பிள்ளை, புணானை பஞ்சமா விகாரை விகராதிபதி அல்லேவேவ விஜித்தலங்கார தேரர், வாகரை பிரதேச செயலக காணி உத்தியோகத்தர்களான ஆர்.ஸ்ரீராம், க.சந்திகாந்தன் மற்றும் பிரதேசத்தின் தமிழ் மற்றும் சிங்கள மக்களும் கலந்து கொண்டனர். …
-
- 1 reply
- 584 views
-
-
திருகோணமலை சம்பூரில் சூரியக்கதிர் மின்சார மையம் ஒன்றை அமைக்கும் இந்திய பிரதமரின் திட்டத்தை இலங்கை நிராகரித்துள்ளது.இலங்கையின் அரசாங்க ஊடகத்தை கோடிட்டு இந்திய ஊடகம் ஒன்று இதனை தெரிவித்துள்ளது. அண்மையில் இந்தியாவுக்கு சென்றிருந்த இலங்கை ஜனாதிபதி மைத்திரிபாலவிடம் இந்திய பிரதமர் நரேந்திரமோடி இதற்கான ஆலோசனையை தெரிவித்திருந்தார். எனினும் சூரியக்கதிர் மின்சாரதிட்டத்தை தாம் மேற்கொள்ளவுள்ளதாக தெரிவித்துள்ள இலங்கை மின்சாரசபையின் பொறியியலாளர்கள், சம்பூர் அனல் மின்சாரமைய திட்டத்துக்கு பதிலாக இந்தியா மேற்குகரை இயற்யை வாயுவை பயன்படுத்தி 500 மெகாவோட்ஸ் மின்சாரத்தை உற்பத்தி செய்யக்கூடிய மையத்தில் கெரவலப்பிட்டியவில் அமைக்கவேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.…
-
- 0 replies
- 349 views
-
-
இனங்களுக்கு இடையில் நம்பிக்கையற்ற தன்மை நீடித்து வருகின்றது – ரீடா இசாக் குளோபல் தமிழ்ச் செய்தியாளர் கொழும்பு இனங்களுக்கு இடையில் நம்பிக்கையற்ற தன்மை நீடித்து வருவதாக ஐக்கிய நாடுகள் அமைப்பின் சிறுபான்மை விவகார விசேடப் பிரதிநிதி ரீடா இசாக் நாடியா தெரிவித்துள்ளார். இலங்கைக்கு மேற்கொண்டிருந்த விஜயத்தை முடித்துக்கொண்ட போது ஊடகவியலாளர்களை சந்தித்து உரையாற்றிய போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இன சமூகங்களுக்கு இடையில் நம்பிக்கைத்தன்மை தொடர்பில் ஓர் இடைவெளி காணப்படுவதாகவும் எனினும் இலங்கையில் பாரியளவிலான மாற்றங்கள் ஏற்பட்டு வருவதாகத் தெரிவித்துள்ளார். மேலும் யுத்தம் காரணமாக ஏற்பட்ட உள ரீதியான பாதிப்புக்கள் உள்ளிட்டனவற்றை உதாச…
-
- 1 reply
- 287 views
-
-
இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் பணிப்பாளர் டில்ருக்ஷி டயஸ் விக்ரமசிங்க தனது இராஜினாமா கடிதத்தை இன்று சமர்ப்பித்துள்ளார். கோத்தபாய ராஜபக்ச மற்றும் முப்படை தளபதிகள் ஆகியோரை நீதிமன்றிற்கு அழைத்தமை தொடர்பில், கடந்த வாரம் ஜனாதிபதியினால் தெரிவிக்கப்பட்ட கருத்துகள் தொடர்பில் ஊடகங்களில் பல்வேறு கருத்துகள் வெளியாகியிருந்தது. குற்றப்புலனாய்வு பிரிவினர், நிதிமோசடி விசாரணைப்பிரிவினர், மற்றும் இலஞ்ச ஊழல் ஆணைக்குழு போன்றவை அரசியல் நிகழ்ச்சி நிரலுக்கு ஏற்றவாறு செயற்படுமானால் அவற்றுக்கு எதிராக தீர்மானங்களை எடுக்க நேரிடும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கடந்த வாரம் கூறியிருந்தார். மேலும் ஜனாதிபதியின் இந்த கருத்து காரணமாகவே இலஞ்சம் மற்…
-
- 3 replies
- 584 views
-
-
வலி. வடக்கு இராணுவ உயர் பாதுகாப்பிற்குள் கையகப்படுத்தப்பட்டுள்ள எமது காணிகளை விடுவிக்குமாறு கோரும் வாழ்வுரிமை போராட்டத்தினை நடத்த முடியாத அளவிற்கு நாங்கள் அச்சுறுத்தப்படுவதாகவும் கடந்த காலங்களில் இருந்த அச்சுறுத்தலையும் விட நல்லாட்சி அரசாங்கத்தின் ஆட்சியில் மிக மோசமான அச்சுறுத்தல்களுக்கு முகம் கொடுக்க வேண்டியுள்ளதாக பொது மக்கள் கூறியுள்ளனர். தேசிய மீனவர் ஒத்துழைப்பு இயக்கத்தினால் இடம்பெயர்ந்த மக்களின் வாழ்க்கை ஆய்வு செய்யப்பட்டு இராணுவத்தின் நிழலின் கீழ் என்ற தலைப்பில் வெளியிடப்பட்ட ஆய்வு நூல் வெளியீட்டு விழா நேற்று (19) யாழ். நாவலர் கலாச்சார மண்டபத்தில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட வலி.வடக்கு முகாம் மக்கள் தமது தமது மீள்குடியேற்றம் தொடர்பில்…
-
- 0 replies
- 233 views
-
-
இலங்கை அரசாங்கத்தினால் தயாரிக்கப்பட்டுள்ள புதிய பயங்கரவாதத் தடைச் சட்டமூலத்தின் பிரதி ஒன்று லண்டனில் செயற்படும் இணையத்தளம் ஒன்றில் வெளியாகியுள்ளதாக சிங்கள ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. 58 பக்கங்களைக் கொண்ட இந்த பயங்கரவாதத் தடைச்சட்ட மூலத்தின் பிரதி நேற்று குறித்த இணையத்தளத்தில் வெளியிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த புதிய சட்டமூலம் மக்கள் தெரிந்து கொள்வதற்காக இதுவரையில் வெளியிடப்படவில்லை. எனினும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரபல நபர் ஒருவருக்கு இந்த சட்ட மூலம் கிடைத்துள்ளதாக லண்டன் தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. மிகவும், இரகசியத் தன்மையுடையது என கருதப்படும் அம்சங்களும் இந்த சட்டமூலத்தில் குறிப்பிடப்பட்டுள்…
-
- 2 replies
- 363 views
-
-
கொழும்பில் கடத்தப்பட்ட 5மாணவர்களுக்கும் புலிகளுடன் தொடர்பில்லை-கடற்படை சிப்பாய் நீதிமன்றில் சாட்சியம் கொழும்பு மற்றும் அதன் புறநகரப் பகுதிகளில் வைத்து வெள்ளை வானில் கடத்தப்பட்ட காணாமல் போகச்செய்யப்பட்ட 5 மாண வர்களும் தமிழீழ விடுதலைப் புலிகளுடன் எவ்வித தொடர்புகளையும் கொண்டிருக்கவில்லை என கடற்படைப் புலனாய்வு பிரி வின் சிப்பாய் அளுத் கெதர உப்புல் பண்டார நீதிமன்றில் சாட்சியமளித்துள்ளார். 2008ஆம் ஆண்டு கடத்தப்பட்டு காணாமல் போகச்செய்யப்பட்டுள்ள 5 மாணவர்களில் மூவர் சார்பில் மேன்முறையீட்டு நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட ஆட்கொணர்வு மனு மீதான விசாரணை நேற்று கொழும்பு பிரதான நீதவான் கிஹான் பிலப்பிட்டிய முன்னி லையில் இடம்பெற்றது. …
-
- 1 reply
- 251 views
-
-
புகையிலை உற்பத்தியை விவசாயிகள் கைவிட வேண்டும்.- தெல்லிப்பளை சுகாதார வைத்திய அதிகாரி கோரிக்கை குளோபல் தமிழ்ச் செய்தியாளர் யாழ்ப்பாணம் புகைத்தல் பொருட்களின் விற்பனை தெல்லிப்பளை சுகாதார பணிமனைக்கு உட்பட்ட பகுதிகளில் வெகுவாக குறைவடைந்துள்ளதாக அப்பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி பா.நந்தகுமார் தெரிவித்துள்ளார்.யாழ்.ஊடக அமையத்தில் இன்றைய தினம் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில் , யாழில்.புகையிலை உற்பத்தியினை விவசாயிகள் கைவிட வேண்டும். தற்போது யாழ்.மாவட்டத்தில் பல பிரதேசங்களில் பல விவசாயிகள் புகையிலை உற்பத்தியின…
-
- 0 replies
- 222 views
-
-
யாழின் பல்வேறு பகுதிகளில் சந்தேகத்திற்கிடமாக நடமாடிய 12 இளைஞர்கள் கைது யாழின் பல்வேறு பகுதிகளில் சந்தேகத்திற்கு இடமாக நடமாடிய 12 இளைஞர்கள் யாழ் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். அண்மைக்காலங்களாக யாழில் அதிகரித்து வருகின்ற வாள் வெட்டு , ரவுடிகள் அட்டகாசம் போன்றனவற்றினால் பொலிஸார் தமது ரோந்து நடவடிக்கைகளை அதிகரித்துள்ளனர். இதனடிப்படையில் யாழ்ப்பாணம் , குருநகர், பொம்மை வெளி, கொக்குவில் பகுதிகளில் சந்தேகத்திற்கிடமாக நடமாடிய 12 இளைஞர்களை யாழ் பொலிஸார் சந்தேகத்தின் பேரில் நேற்று இரவு கைது செய்துள்ளனர். இரவு வேளைகளில் வீதிகளில் தேவையற்ற முறைகளில் நடமாட வேண்டாம் என்று நீதிமன்றம…
-
- 2 replies
- 456 views
-