ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143420 topics in this forum
-
நீதிமன்றத்திற்கு சமமான ஒன்றே பாராளுமன்றம். நீதிமன்றத்தில் முறைகேடாக நடந்து கொண்டால் தண்டனை. ஆனால் பாராளுமன்றம் என்பதற்கு சட்டதிட்டங்கள் இல்லையா..? இப்போதோ கோமாளிகள் தங்களை அரங்கேற்றம் செய்து கொள்ளும் இடமாக மாறி வருகின்றது பாராளுமன்றம். ஒழுக்கமற்ற வார்த்தைகள், முறைகேடான நடத்தைகள் இவை மூலம் இவர்கள் எதிர்காலத்திற்கு கற்பிக்க முயல்வது எதனை..? “நாட்டின் எதிர்கால தலைவர்களே நன்றாக பார்த்துக்கொள்ளுங்கள் நீங்களும் நாளை ஒரு தலைவனாகி பாராளுமன்றம் செல்வீர்களாயின் முறைகேடாக நடந்து கொள்ளுங்கள், தலைவர்களை பின்பற்றுங்கள் ஒழுக்கம் ஏட்டில் மட்டுமே இருக்கவேண்டும், தவறியும் கூட அதனை நடத்தையில் செயற்படுத்தாதீர்கள். இதுவா? இதனைத்தான் எதிர்காலத் தலைவர்களுக்கு தற்போதைய தலைவர்…
-
- 0 replies
- 285 views
-
-
யாழ்- சுன்னாகம் பொலிஸ் நிலையம் ; கைது செய்யப்பட்ட சந்தேக நபரை சித்திரவதை செய்து கொலை (எம்.எப்.எம்.பஸீர்) யாழ்- சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் தடுத்துவைக்கப்பட்டிருந்த சந்தேகநபர் ஒருவரை சித்திரவதை செய்து கொலை செய்ததாக கூறப்படும் விவகாரம் தொடர்பில் அப்போதைய சுன்னாகம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி உள்ளிட்ட நான்கு பொலிஸ் உத்தியோகத்தர்களை கைதுசெய்யுமாறு கிளிநொச்சி நீதவான் நீதிமன்றம் இன்று உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த கொலை சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த குற்றப் புலனாய்வுப் பிரிவினர் இன்றைய தினம் சந்தேக நபரான பொலிஸ் சார்ஜன் ஒருவரைக் கைது செய்து மன்றில் ஆஜர் செய்த போதே ஏனைய சந்தேக நபர்களான முன்னாள் சுன்னாகம் பொலிஸ் பொறுப்ப…
-
- 1 reply
- 380 views
-
-
பெற்றோர்களை இழந்தவர்களும் பிரிந்தவர்களுமாய் கிளிநொச்சி சிவபாதக் கலையகம்! பாடசாலைகளில் எத்தனை மாணவர்கள் சித்திபெறுகிறார்கள்? சித்தி விகிதம் எப்படி உள்ளது என்று ஆராய்கிறோம். சித்திய எய்திய மாணவர்கள்மீதும் பாடசாலைகள்மீதும் கவனங்கள் குவிக்கின்றன. ஆனால் குடும்ப நிலமை, வறுமை, சமூகச் சிக்கல்கள் காரணமாக பாடசாலைக்கு வருகை தராத மாணவர்கள் உள்ள பாடசாலைகளும் கிராமங்களும் உள்ளன என்பதனையும் சற்று திரும்பிப் பார்ப்போம். அவைகளின் பிரச்சினைகளில் கவனத்தை குவிப்போம். கிளிநொச்சி மாவட்டத்தின் பொன்னகரில் அமைந்துள்ளது சிவபாதக் கலையகம் அரசினர் தமிழ் கலவன் பாடசாலை. 1980ஆம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்ட இப் பாடசாலையில் சுமார் 500க்கும் மேற்பட்ட மாணவர்கள் …
-
- 0 replies
- 291 views
-
-
'அரசியல் கைதிகள், குமார் குணரட்ணத்தை விடுதலை செய்யுங்கள் ' : கொழும்பில் ஆர்ப்பாட்டம் குடிவரவு குடியகல்வு சட்டங்களை மீறி செயற்பட்டமைக்காக கைது செய்யப்பட்டு தடுத்துவைக்கப்பட்டுள்ள ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் குமார் குணரட்ணம் மற்றும் அரசியல் கைதிகள் உடனடியாக உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டுமெனவும், தொடர்ச்சியாக பிரயோகிக்கப்படுகின்ற அடக்கு முறைகள் உடன் இரத்து செய்யப்பட வேண்டும் எனக் கூறியும் இன்று ஜனநாயகத்துக்கான ஆர்ப்பாட்டக்காரர்கள் கொழும்பில் பாரிய பாதயாத்திரையொன்றை முன்னெடுத்தனர். கொழும்பு மருதானை டெக்னீகள் சந்தியில் இருந்து ஆரம்பமான குறித்த பாதயாத்திரை கொழும்பு ஒல்கொட் மாவத்தை வரைக்கும் சென்றதோடு கொழும்பின் கோட்டை புகை…
-
- 0 replies
- 295 views
-
-
காணிப்பிணக்கில் ரெலோ கிளிநொச்சி அமைப்பாளருக்கு கத்திக்குத்து ரெலோ அமைப்பின் கிளிநொச்சி மாவட்ட அமைப்பாளர் கவிஞர் பொன்காந்தன் கத்திக்குத்து க்கு இலக்காகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் இன்று மாலை 6 மணியளவில் இடம்பெற்றிருப்பதாக கிளிநொச்சி பொலிஸார் தெரிவித்தனர். அயல் வீட்டாருடன் நீண்டகாலமாக காணிப் பிணக்கு எற்பட்டுவந்துள்ளதோடு இன்றைய தினம் வாக்குவாதம் கைகலப்பாக மாறியுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர். இந்த கைகலப்பின்போது உடைக்கப்பட்ட கண்ணாடி போத்தலினால் கவிஞர் பொன்காந்தன் தாக்கப்பட்டுள்ளார். சம்பவத்தில் காயமடைந்த அவர் கிளிநொச்சி வைத்தியசாலைய…
-
- 0 replies
- 362 views
-
-
நற்பெயருக்கு களங்கமாம் நாமல் வழக்குத் தாக்கல் ஆதாரமற்ற முறைப்பாடு மற்றும் கைது செய்த குற்றங்களுக்காக நஸ்ட ஈடாக ரூபா 200 மில்லியன் கோரி நிதி மோசடி விசார ணைப் பிரிவில் உள்ள இரண்டு அதிகாரிகளுக்கு எதிராக கொழும்பு மாவட்ட நீதிமன்றில் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமை ப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸ வழக்கு தாக்கல் செய்துள்ளார். மக்கள் விடுதலை முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் வசந்த சமரசிங்க வழங்கிய கிரிஸ் ஒப்பந்த முறைப்பாட்டின் அடிப்ப டையில் தான் ஒருவாரம் கைது செய்யப்பட்டிருந்ததாக குறித்த மனுவில் நாமல் குறிப்பிட்டுள்ளார். எனவே தனது நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் நடந்து கொண்ட நிதி மோசடி …
-
- 1 reply
- 297 views
-
-
பிரபல அரசியல்வாதி மகனின் அட்டகாசம் இலங்கையின் பிரபல்யமான அரசியல்வாதியொருவரின் மகனால், கொழும்பில் உள்ள இரவு கேளிக்கை விடுதியொன்றில் அட்டகாசம் புரியப்பட்டுள்ளதாக சமூக வலைத்தளங்களில் படங்களுடன் செய்திகள் வெளியாகியுள்ளன. சம்பவத்தில், அந்த இரவு கேளிக்கை விடுதியின் யன்னல் மற்றும் கதவுகளின் கண்ணாடிகள் அடிந்து நொறுக்கப்பட்டுள்ளதாகவும் அறியமுடிகின்றது. சம்பவத்தில், அந்த விடுதியில் கடமையிலிருந்த ஊழியர் ஒருவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கொழும்பு தேசிய வைத்தியசாலையில் விபத்துச் சேவைகள் பிரிவிலேயே அவர் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்தச் சம்பவம் வெள்ளிக்கிழமை அதிகாலை 2 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக அறியமுடிகின்றது. …
-
- 10 replies
- 766 views
-
-
யாழில் இரு இளைஞர்கள் காணாமல் போன சம்பவம்: 16 இராணுவத்தினர் விளக்கமறியலில் இரு இளைஞர்கள் கைதுசெய்யப்பட்ட நிலையில், காணாமல் போனதாக கூறப்படும் சம்பவத்துடன் தொடர்புடைய 16 இராணுவ வீரர்களை விளக்கமறியலில் வைக்குமாறு யாழ். நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 1998ம் ஆண்டு அச்சுவேலிப் பகுதி இராணுவ முகாமில் கடமையாற்றிய குறித்த இராணுவத்தினர் அந்தப் பிரதேசத்தைச் சேர்ந்த இரு இளைஞர்களை கைதுசெய்துள்ளனர். இவ்வாறு கைதுசெய்யப்பட்டவர்கள் காணாமல் போய்விட்டதாக ஆதாரங்களுடன் நீதிமன்றில் வழக்கு தொடரப்பட்டது. குறித்த வழக்கு 1999ம் ஆண்டு வரை நடைபெற்று வந்த போதும், பின்னர் வழக்கு விசாரணைகள் இடம்பெறவில்லை. இந்தநிலையில், குறித்த வழக்கு தொடர்பான அறிக்கைகள் சட்டமா அதிபர் தி…
-
- 0 replies
- 351 views
-
-
புலிகள் தப்பிச் செல்ல உதவியவர் தாய்லாந்தில் கைது விடுதலைப் புலிகள் அமைப்பின் உறுப்பினர்கள் இலங்கையில் இருந்து தப்பிச் செல்ல பல வருடங்களாக உதவிய டொக்டர் என அழைக்கப்படும் ஒருவரை தாய்லாந்து பொலிஸார் கைது செய்துள்ளனர். தாய்லாந்து சிறையில் இருக்கும் குற்றச் செயல்களில் மூளையாக செயற்பட்டு வந்த இந்த நபர் ஆயிரக்கணக்கானவர்கள் ஐரோப்பிய நாடுகளுக்கு செல்ல போலி கடவுச்சீட்டுக்களை தயாரித்து கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது. பல வருடங்களாக மேற்கொள்ளப்பட்டு வந்த புலனாய்வு விசாரணைகளை அடுத்தே இந்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார். பாங்கொக் பாதாள உலக குற்றவாளியான இந்த நபர் 2 ஆயிரம் மற்றும் 3 ஆயிரம் அமெரிக்…
-
- 0 replies
- 317 views
-
-
வந்தார் றீட்டா ஐசக் ஐக்கிய நாடுகள் சபையின் சிறுபான்மை இன விவகாரங்களுக்கான விசேட அறிக்கையாளர் றீட்டா ஐசக் உள்ளிட்ட குழுவினர் இலங்கைக்கு இன்று வருகை தந்துள்ளார். இவர்கள் எதிர்வரும் 20ஆம் திகதி வரை இங்கு தங்கியிருந்து, சிறுபான்மையினரின் பிரச்சினைகள் குறித்து நேரடியாக தகவ ல்களை பெற்றுக் கொள்ளவுள்ளதாகவும், தெரியவந்துள்ளது. இதன்பொருட்டு இவர் கொழும்புக்கு மேலதிகமாக வடக்கு, வட மத்திய மற்றும் கிழக்கு ஆகிய மாகாணங்களுக்கும் செல்லவுள்ளதாக, ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணை க்குழு வௌியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் றீட்டா ஐசக் அரசாங்க அதிகாரிகள், தேசிய மனித உரிமைகள் ஆணைக்குழு மற்றும் சிவில் சமூக உறுப்பினர்கள் உள்ளி …
-
- 0 replies
- 341 views
-
-
அடுத்த சில வருடங்களில் உலகின் பொருளாதார மத்திய நிலையமாக ஆசியா வளர்ச்சியடையும் -ஜனாதிபதி ஆசிய புரிந்துணர்வு கலந்துரையாடல் மாநாட்டின் முக்கிய தொனிப்பொருளான, தெற்காசிய பிராந்தியத்தின் விஞ்ஞான தொழில்நுட்பத்திலும், நவீன உற்பத்தித் துறையிலும் இலங்கை முன்னிலை வகிக்க தயார் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். தாய்லாந்தின் பாங்கொங் நகரில் ஆரம்பமான ஆசிய புரிந்துணர்வு கலந்துரையாடல் அரச தலைவர்கள் மாநாட்டில் இன்று காலை உரையாற்றுகையிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். அத்துடன், விஞ்ஞான தொழில்நுட்பத்திலும், நவீன உற்பத்தித் துறையிலும் அபிவிருத்தியை நோக்கி, பிராந்திய நாடுகளுக்கிடையில் அறிவை மேம்படுத…
-
- 0 replies
- 237 views
-
-
இன்று திங்கட்கிழமை 10-10-2016 கிளிநொச்சி இலங்கை ஜேர்மன் தொழிற் பயிற்சி நிறுவனத்திற்கு விஜயம் செய்த இலங்கைக்கான ஜேர்மன் உயர்ஸ்தானிகர் மற்றும் ஜேர்மன் நாட்டு முதலீட்டு நிறுவனம் ஒன்றும் இணைந்து குறித்த தொழிற் பயிற்சி நிறுவனத்தின் செயற்பாடுகள் தொடர்பிலும், கிளிநொச்சியில் எவ்வாறான கல்வி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன இங்கு எவ்வாறான தொழில் முயற்சிகளுக்கு முதலீடுகள் மேற்கொள்ளலாம் என்பது பற்றியும் கலந்துரையாடலில் ஈடுப்பட்டுள்ளனர் அதனைத்தொடர்ந்து இலங்கை ஜேர்மன் தொழிற் பயிற்சி நிறுவனத்தின் கட்டட அமைவிடங்கள் கற்கை நிலையங்கள் , என்பவற்றை குறித்த குழுவினர் பார்வையிட்டதுடன் மாணவர்களிடமும் பயிற்சி நிறுவனத்தின் கல்வி நடவடிக்கைகள் மற்றும் இருப்பிட வசதிகள் ச…
-
- 0 replies
- 279 views
-
-
வடக்கில் பல்வேறு இடங்களில் 'எழுந்து நிற்போம்' விழிப்புணர்வு போராட்டம் அண்மைக்காலமாக அதிகரித்து வரும் விபத்துக்களை தடுப்பதற்கான நோக்குடன் இன்று யாழ்ப்பாணத்தில் பல்வேறு இடங்களில் எழுந்து நிற்போம் என்ற தொனிப்பொருளில் விழிப்புணர்வு போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன. யாழ்ப்பாணத்திலுள்ள சகல திணைக்களங்களும்,பாடசாலைகளிலும் இன்று முற்பகல் 10 மணி தொடக்கம் 11 மணிவரை எழுந்து நிற்போம் என்ற விழிப்புணர்வு போராட்டத்தில் ஈடுபட்டனர் அண்மைக்கால வீதி விபத்துக்களால் ஏற்படுத்தும் உயிரிழப்புக்களை தடுக்கும் வகையில் இந்த விழிப்புணர்வு நிகழ்வு யாழ், போதனா வைத்தியசாலை , அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் போன்றன முன்னெடுத்திருந்தன. இந்த விழிப்புணர்வு …
-
- 0 replies
- 552 views
-
-
மஹேலவை கட்டியணைக்க காரணமென்ன?விளக்குகிறார் அவரது ரசிகை புற்றுநோய் வைத்தியசாலைக்கு நிதிதிரட்டும் முகமாக வடமராட்சியில் இடம்பெற்ற நடைபவனியின் போது இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் நட்சத்திரவீரர்மஹேல ஜெயவர்த்தனவை கட்டியணைத்து பரபரப்பை கிளப்பிய பெண், மகிழ்ச்சியை அடக்க முடியாமல் அப்படி செய்து விட்டதாக விளக்கமளித்துள்ளதுடன் ஊடகங்கள் இதனை தவறான கண்ணோட்டத்துடன் அணுகு வதாகவும் வேதனை தெரிவித்துள்ளார். ‘எங்கள் குடும்பத்தில் அனைவரும் கிரிக்கெட் ரசிகர்கள். அதிலும் இலங்கை ரசிகர்கள். சங்ககார, மஹேல என்றால் அனைவருக்கும் உயிர். கடந்த தடவை சங்கா நடைபவனி வந்தபோது ஆயிரம் ரூபா கொடுத்தேன். மஹேலவை நேரில் பார்த்ததில்லை. தொலைக்காட்சியில்தான…
-
- 25 replies
- 1.8k views
-
-
சம்பந்தன்... அரசாங்க த்தால் நியமிக்கப்பட்ட, எதிர்க்கட்சித் தலைவர். அரசாங்கத்தால் நியமிக்கப்பட்ட எதிர்க்கட்சித் தலைவரே சம்பந்தன் என்றும் அவரது உதவி யாளர்களாக மக்கள் விடுதலை முன்னணியினர் உள்ளனர் எனவும் மஹிந்த தரப்பு நாடா ளுமன்ற உறுப்பினர் தினேஸ் குணவர்தன தெரிவித்துள்ளார். நேற்று (சனிக்கிழமை) இரத்தினபுரியில் நடைபெற்ற கூட்டு எதிர்க்கட்சியின் கூட்டத்தில் கல ந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்தார். இக் கூட்டத்தில் தொடர்ந்து அவர் உரையாற்றுகையில், “இன்று நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி என்று ஒன்று இல்லை. எல்லோரும் இந்த அரசின் கைப் பொம்மைகளாகவே இருக்கின்றனர். அரசாங்கத்தை எதிர்ப்பதற்கு நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி இல்லை. சம்பந்தன் அரசாங்க த்தால் நிய…
-
- 1 reply
- 275 views
-
-
மறைமுகமான அச்சுறுத்தலால் பீதியடைந்துள்ள மக்கள்.! (பா. ருத்ரகுமார்) செவ்வாய்க்கு சென்றும் நிலத்தை கூறுபோட்டு விட்டோம். மனிதனின் தேவையை மட்டுப்படுத்த நிலத்தால் மட்டுமே முடியும். எனினும் ஒரு அடி நிலத்தை தனதாக்கிக்கொள்ள அவன் படும் பாடு சாதாரண குடிமகனுக்கு கூட நன்கு விளங்கியிருக்கும். கொழும்பில் அதுவும் செல்வச்செழிப்பு மிக்க ஒரு இடத்தில் வாழ வேண்டும் என்ற கனவு அனைவருக்குள்ளும் உண்டு. அக்கனவை நனவாக்கிக் கொண்டவர்களே பம்பலப்பிட்டி தொடர்மாடி குடியிருப்பில் உள்ளவர்கள் எனக்கூட சொல்லலாம். 1952 ஆம் ஆண்டு தலைநகரில் தமிழ் மக்கள் செறிந்து வாழும் இடத்தில் குடியிருப்பு மனை தொகுதியொன்று நிர்மாணிக்கப்பட்டது. 10 ஏக்கர் நிலப்பரப்பில் …
-
- 1 reply
- 277 views
-
-
“நம்ம நடுவில இப்போது இல்லாமல் மேல் இருந்து எமக்கு ஆசி கொடுக்கும் அவங்கள் எல்லோரையும் வணங்குகின்றேன்" “புண்பட்ட இதயங்களுக்கு இசை மருந்து கொடுக்கவே யாழ்ப்பாணம் வந்தோம்” – குளோபல் தமிழ்ச் செய்தியாளர் யாழ்ப்பாணம்:- புண்பட்ட இதயங்களுக்கு இசை மருந்து கொடுக்கவே யாழ்ப்பாணம் வந்தோம் என பிரபல பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் தெரிவித்துள்ளார். யாழில் , ஞாயிற்றுக்கிழமை மாலை எஸ்.பி.பாலசுப்பிரமணியம் , கங்கை அமரன் உட்பட இந்திய கலைஞர்களின் இசை நிகழ்வு நடைபெற்றது. அந்நிகழ்வின் ஆரம்பத்தில் கருத்து தெரிவிக்கும் போதே எஸ்.பி.பாலசுப்பிரமணியம் அவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில் , நம்ம நடுவில இப்போது இல்லாமல் மேல் இருந்து எமக்கு ஆசி கொடு…
-
- 2 replies
- 489 views
-
-
பயங்கரவாத தடை சட்டத்திற்கான மாற்றீடு பழைய வைனை புது கோப்பையில் தரும் முயற்சியா? பயங்கரவாதத் தடைச் சட்டத்திற்கு மாற்றீடாக முன்வைக்கப்படவுள்ள புதிய சட்டம் பழைய வைனை புதிய கோப்பையில் இட்டு வழங்குவது போலாகிவிடக் கூடும் என தமிழ் தேசியக் கூட்டமைப்பு அச்சம் வௌியிட்டுள்ளது. சட்ட ஆணைக்குழு பயங்கரவாதத் தடைச் சட்டத்துக்கு மாற்றாக கொண்டுவரப்படும் புதிய சட்டம், சர்வதேச விதிகளுக்கு உட்பட்டு இருக்க வேண்டும் என அரசாங்கத்துக்கு பரிந்துரைத்துள்ளது என, கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் குறிப்பிட்டுள்ளார். எனினும், இது தொடர்பாக, பாதுகாப்புத் துறையிடம் ஆலோசனை நடத்திய அரசாங்கம், சட்ட ஆணையத்தின் ஆலோசனைகளை நிராகரித்துவிட்டது என தான் கேள்வியுற்றதாக அவர்…
-
- 0 replies
- 285 views
-
-
‘சி.வியின் உயிருக்கு அச்சுறுத்தல்’: மேலதிக பாதுகாப்பு வழங்குமாறு ஐ.ஜி.பிக்கு கடிதம் வடமாகாண முதலமைச்சர் சி.வி விக்னேஸ்வரனின் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டமையால், தற்போது வழங்கப்பட்டுள்ள பாதுகாப்புக்கு மேலதிகமான பொலிஸ் பாதுகாப்பை வழங்குவதற்கு ஆவன செய்யுமாறு கோரப்பட்டுள்ளது. வடமாகாண சபையின் தலைவர் சி.வி.கே சிவஞானமே மேற்கண்டவாறு கோரிக்கை விடுத்து, பொலிஸ்மா அதிபர் (ஐ.ஜி.பி) பூஜித் ஜயசுந்தரவுக்கு, கடிதமொன்றையும் அனுப்பிவைத்துள்ளார். இந்த விவகாரம் தொடர்பில், வடமாகாண சபையின் தலைவர் சி.வி.கே சிவஞானம் மேலும் தெரிவித்துள்ளதாவது: “வடமாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரனின் உயிருக்கு தென்னிலங்கையில் உள்ள இனவாதிகளினால் அச்சுறுத்தல் ஏற்பட்…
-
- 0 replies
- 186 views
-
-
யாழில் எஸ்.பி இசை நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்பதற்காக தென்னிந்திய பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியம் மற்றும் பாடகரும் இசையமைப்பாளருமான கங்கையமரன் ஆகியோர் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்துள்ளனர். இன்று காலை கொழும்பை வந்தடைந்த தென்னிந்திய பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியம் மற்றும் பாடகரும் இசையமைப்பாளருமான கங்கையமரன் ஆகியோர் விசேட ஹெலிகொ ப்ரர் மூலம் யாழ்ப்பாணம் புனித அந்தோனியார் கோயிலிற்கு முன்னாலுள்ள மைதானத்தில் தரையிறங்கினார்கள். இவர்களை அதிகளவான ரசிகர்கள் வரவேற்ற நிலையில் பொலிஸ் பாதுகாப்புடன் யாழ்ப்பாணத்தை சுற்றி பார்வையிட்டனர். இதனையடுத்து இந்திய துணைத் தூதுவர் எஸ். நடராஜன் பாடகர் எஸ்.பி. …
-
- 15 replies
- 1.1k views
-
-
வடக்கு முதல்வரை சந்தித்தார் ஜேர்மன் தூதுவர் இலங்கைக்கான ஜேர்மன் தூதுவர் ஜோன் டோடேம் (Jorn rohdem) யாழ் மாவட்டத்திற்கு உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்ட நிலையில் நேற்று மாலை 05.00 மணியளவில் யாழ் கோவில் வீதியில் அமைந்துள்ள வடமாகாண முதலமைச்சரின் வாசஸ்தலத்திற்கு சென்று முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரனைச் சந்தித்து கலந்துரையாடல் மேற்கொண்டுள்ளார்.இந்த சந்திப்பு குறித்து ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட முதல்வர் விக்னேஸ்வரன், வடமாகாணத்தில் ஜேர்மன் அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படுகின்ற அபிவிருத்தி திட்டங்கள், மாவட்ட ரீதியாக முன்னெடு க்கப்பட்டுள்ள செயற்றிட்டங்கள், மீள்குடியேற்றங்கள், சுகாதார, கல்வி, வீடமைப்புத் திட்டங்கள், சமூக …
-
- 0 replies
- 216 views
-
-
அனைத்து பிரச்சினைகளுக்கும் நிரந்தர தீர்வை தருவதாக புதிய அரசியல் யாப்பு அமையவேண்டும்-சுவிஸ் சபாநாயகர் அறிவுறுத்து இலங்கையில் தயாரிக்கப்பட்டுவரும் புதிய அரசியல் சாசனம் நாட்டின் அனைத்துப் பிரச்சனைகளுக்கும் நிரந்தரத் தீர்வை பெற்றுக்கொடுக்கக் கூடியதாக அமையும் என சுவிஸர்லாந்து சபாநாயகர் கிறிஸ்டா மார்க்வெல்டர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார். இலங்கைக்கு விஜயம்செய்துள்ள சுவிஸர்லாந்து சபாநாயகர் நேற்றைய தினம் கண்டிக்கு விஜயம்செய்து சிங்கள பௌத்த மக்களின் புனித ஸ்தலமான கண்டி ஸ்ரீ தலதா மாளிகைக்கு சென்று வழிபாடுகளில் ஈடுபட்டதுடன், மல்வது பீட மகாநாயக்கத் தேரரரையும் சந்தித்து கலந்துரையாடியுள்ளார். இதனையடுத்து ஊடகவியலாள…
-
- 0 replies
- 188 views
-
-
நல்லிணக்கம் தொடர்பாக தேசிய சகவாழ்வு அமைச்சர் மனோ கணேசனுக்கும் சிறீலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் சந்திரிக்கா குமாரதுங்கவுக்குமிடையில் மோதல் நிலை உருவாகியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. நாட்டின் தேசிய நல்லிணக்கம் தொடர்பான தன்னுடைய செயற்பாட்டில் முன்னாள் ஆட்சியாளர் சந்திரிக்கா குமாரதுங்க தலையிடுவதாக தேசிய சகவாழ்வு அமைச்சர் மனோகணேசன் சிறீலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவிடம் முறையிட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. தற்போதைய தேசிய அரசாங்கத்தின் முக்கிய ஆதரவாளர்களில் ஒருவரான முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க, தேசிய ஐக்கியம் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் தலைவராக உள்ளார். இந்நிலையில், தனது அமைச்சின் பணிகளில் சந்திரிக்கா தலையீடு செய்வதாகவும், இவ்வாற…
-
- 1 reply
- 1.2k views
-
-
புதிய அரசியலமைப்பு சுவிஸின் அரசியல் யாப்பின் அடிப்படையில் அமையவேண்டும்-சம்பந்தன் சுவிட்சர்லாந்தின் அரசியல்யாப்பை அடிப்படையாக கொண்டு புதிய அரசியலமைப்பு உருவாக்கப்பட, வேண்டும் என எதிர்க்கட்சி தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். சுவிட்சர்லாந்தின் சபாநாயகரை இன்று சந்தித்த பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போதே அவர் இதனை குறிப்பிட்டார் சுவிட்சர்லாந்தில் அமுலில் உள்ள அரசியல்யாப்பு அனைத்து சமூகத்திற்கும் சம உரிமையை வழங்கியிருக்கிறது.இதன் ஊடாக அந்த நாடு முன்னோக்கி பயணிக்கின்றது. அதற்கமைய இலங்கையின் அரசியல்யாப்பு தயாரிக்கப்பட வேண்டும் என எதிர்க்கட்சி தலைவர் இரா.சம்பந்தன் தெரிவ…
-
- 20 replies
- 800 views
-
-
“காட்டிக்கொடுப்பாளர்களை அடையாளம் காண தவறிவிட்டேன்” என்கிறார் மஹிந்த யுத்தம் நடைபெற்றுக் கொண்டிருந்தபோது யுத்தத்தை நிறுத்துமாறு சில மேற்கு நாடுகள் என்னிடம் வலியுறுத்தின. ஆனால் நான் அதனை நிராகரித்து விட்டேன். அதனால் தான் மேற்கு நாடுகள் என்னுடன் சிக்கலுக்குள்ளாகின. அந்த வலியுறுத்தலை கேட்டு நான் யுத்தத்தை நிறுத்தியிருந்தால் மேற்குலகம் என்னுடைய நண்பனாக இருந்திருக்கும் என்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்திருக்கிறார். ஆங்கில ஊடகமொன்றிற்கு விசேட செவ்வியிலேயே ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மேற்கண்டவாறு குறிப்பிட்டிருக்கிறார். http://www.virakesari.lk/article/12236
-
- 2 replies
- 622 views
-