ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143420 topics in this forum
-
கொலை குற்றவாளிக்கு சட்ட ஆலோசனை வழங்கினாரா நீதியமைச்சர்? இலங்கை கடற்படையின் குழு ஒன்றினால் 10 மாணவர்கள் கடத்திச் செல்லப்பட்டு கொலை செய்யப்பட்டதாக கூறப்படும் சம்ப வத்துடன் தொடர்புடைய குற்றவாளிகளுக்கு நல்லாட்சி அரசாங்கத்தின் நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ச சட்ட ஆலோசனை வழங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச ஆட்சிக்காலத்தில் கடற்படையினரால் கடத்தப்பட்ட 10 மாணவர்கள் திருகோணமலை கட ற்படை முகாமில் வைத்து கொலை செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. விஜயதாச ராஜபக்சவின் செயற்பாடானது, நல்லாட்சி அரசாங்கத்தில் இருந்து கொண்டு அதனை அழிக்கும் பயங்கரமான சதி த்திட்டம் என அரசியல் அவதானிகள் கூறியுள…
-
- 1 reply
- 304 views
-
-
புற்றுநோய் வைத்தியசாலைக்கு நிதி சேர்க்கும் நடைபவனி இயக்கச்சியை சென்றடைந்தது யாழ்ப்பாணம் - பருத்தித்துறை முதல் ஹம்பாந்தோட்டையின் தேவேந்திரமுனை வரையிலான நடைபவனி, நான்காம் நாளாக இன்று 09-10-2016 கிளிநொச்சி – இயக்கச்சி பகுதியை வந்தடைந்துள்ளது. காராப்பிட்டியவில் அமையவுள்ள புற்றுநோய் வைத்தியசாலைக்கான நிதியை சேகரிக்கும் நோக்கில் விசேட நடைபவனியொன்று கடந்த வியாழக்கிழமை யாழ்ப்பாணத்தின் பருத்தித்துறை புனித சேவியர் விளையாட்டு மைதானத்தில் ஆரம்பமாகியது தேவேந்திரமுனை வரை 28 நாட்கள் நடைபெறவுள்ள இந்த நடைபவனி யாழ்ப்பாணம் - கொடிகாமம் பகுதியில் ஆரம்பமாகி, மிருசுவில், எழுதுமட்டுவாள், முகமாலை, புதுக்காடு, கரந்தாய் ஊடாக இயக்கச்சியை வந்தடைந்து…
-
- 0 replies
- 275 views
-
-
தமிழகத்திலுள்ள அகதிகளில் 30 பேர் நாடு திரும்புகின்றனர்.! உள்நாட்டில் ஏற்பட்டிருந்த அசாதாரண சூழல் காரணமாக இந்தியாவின் தமிழகத்தில் அகதிகளாக தஞ்சமடைந்தவர்களின் 30 பேர் எதிர்வரும் 18 ஆம் திகதி நாடு திரும்பவுள்ளதாக சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு, புனர்வாழ்வளிப்பு, மீள்குடியேற்றம் மற்றும் இந்த சமய அலுவல்கள் அமைச்சு தெரிவித்துள்ளது. இதுகுறித்து அமைச்சின் செயலாளர் வேலாயுதன் சிவஞானசோதி தெரிவித்துள்ளதாவது, இலங்கையிலிருந்து சென்று அகதிகளாக தமிழகத்தில் தங்கியுள்ளவர்களை படிப்படியாக மீண்டும் அழைத்து வரப்படுகின்றனர். அதன் பிரகாரம் மதுரையிலுள்ள இலங்கை அகதி முகாம்களில் தங்கியுள்ளவர்களில் 30பேர் எதிர்வரும் 18ஆம் திகதி மீண்டும் த…
-
- 0 replies
- 206 views
-
-
ரெலோவின் காரியாலயம் விசுவமடுவில் திறப்பு தமிழீழ விடுதலை இயக்கத்தின் பிராந்தியக் காரியாலயம் முல்லைத்தீவு விசுவமடு பகுதி யில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) திறந்துவைக்கப்பட்டுள்ளது. தமிழீழ விடுதலை இயக்கத்தின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதனால் இந்த பிராந்திய காரியாலயம் திறந்துவைக்கப்பட்டது. நிகழ்வில், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் வினோநோகராதலிங்கம் மற்றும் கட்சியின் செயற்பா ட்டாளர்கள் பலர் கலந்துகொண்டிருந்தனர். இவ் அலுவலகத்தின் மூலம் அரசியல் செயற்பாடுகளுடன், பல சமூகப்பணிகளும் முன்னெடு க்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. http://onlineuthayan.com/news/18740
-
- 0 replies
- 293 views
-
-
விக்கினேஸ்வரன் போட்ட குண்டு! 'தனது உயிருக்கு உலை வைக்கவும் தென்னிலங்கையில் முயற்சிகள் முன்னெடுக்கப்படுகின்றன' என்ற அவரது குற்றச்சாட்டு பாரதூரமானது. இலகுவாக ஒதுக்கித் தள்ளி விடமுடியாதது.அதனால் தான், பல்வேறு தரப்புகளில் இருந்தும் அவருக்கு உரிய பாதுகாப்பு அளிக்கப்பட வேண்டும் என்ற கருத்து வலுப் பெற்றிருக்கிறது. தனது உயிருக்கு உலை வைத்து விட்டு அந்தப் பழியை விடுதலைப் புலிகள் மீது போடுவதற்கு தென்னிலங்கையில் சதித்திட்டங்கள் தீட்டப்படுவதாக தமக்குத் தகவல் கிடைத்திருப்பதாக, வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், கடந்த முதலாம் திகதி புதியதொரு குண்டைத் தூக்கிப் போட்டிருக்கிறார். …
-
- 2 replies
- 976 views
-
-
புதிய அரசியல் யாப்பு உருவாக்கத்தில் ஒரே இலங்கையராக இருப்போம் எனக் கூறிவிட்டு கபடத்தனமாக பெரும்பான்மையின மதத்தை சிறுபான்மையின மக்கள் மீது திணிக்கும் செயற்பாடொன்றை நல்லாட்சி எனப்படும் அரசாங்கம் மறைமுகமாகத் திட்டமிட்டு வருவதாக தேசிய சகவாழ்வு மற்றும் அரச கரும மொழிகள் அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். நல்லாட்சி அரசு எனப்படுவது தமிழ், முஸ்லீம், சிங்கள மக்களுக்கு உரிய நாடாளுமன்ற மற்றும் மாகாண சபை பிரதிநிதித்துவத்தை உறுதிப்படுத்த வேண்டும் எனவும் அதுவே நல்லாட்சிக்கான சிறந்த எடுத்துக்காட்டு எனவும் தெரிவித்துள்ளார். இதனைவிடுத்து இனம், மதம் இல்லாமல் ஒரே இலங்கையராக செயற்படுவோம் என கூறுவது கபடத்தனமானது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். புதிய தேர்தல் முறைமைக்கு அமைய தொக…
-
- 0 replies
- 430 views
-
-
வவுனியாவில் குண்டுகள் மீட்பு -க.அகரன் வவுனியா அலகல்ல அலுத்கம காட்டுப்பகுதியில் இருந்து ஞாயிற்றுக்கிழமை (09) காலை ஆர்.பி.ஜி ரக குண்டுகள் இரண்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக ஈரப்பெரியகுளம் பொலிஸார் தெரிவித்தனர். அலகல்ல, அலுக்கம காட்டுப்பகுதிக்கு இனந்தெரியாதோரால் சனிக்கிழமை (08) தீ வைக்கப்பட்டுள்ளதுடன் இரவு வேளை பாரிய குண்டுச்சத்தம் கேட்டுள்ளது. அதனையடுத்து, குறித்த பகுதிக்கு ஞாயிற்றுக்கிழமை (09) காலை பிரதேச மக்கள் சென்று பார்வையிட்டதுடன், பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளனர். சம்பவ இடத்துக்கு விரைந்த பொலிஸார் மற்றும் விசேட அதிரடிப்படையினர் மேற்கொண்ட தேடுதலின்போது இரண்டுக் குண்டுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. கண்டெட…
-
- 0 replies
- 327 views
-
-
நாட்டை பிளவுப்படுத்த சூழ்ச்சி : இரவில் சதிசெய்பவன் நானல்ல : இரத்தினப்புரியில் மஹிந்த (லியோ நிரோஷ தர்ஷன்) பொது மக்கள் கேட்பதை கொடுப்பதற்கு நான் தயாராக உள்ளேன். ஆளால் மாற்றத்திற்கான நேரம் வந்துள்ளது. நாட்டை பிளவுப்படுத்தும் ரணில் - மைத்திரி கூட்டு ஆட்சியை வீட்டிற்கு அனுப்புவதே மக்களின் எதிர்பார்ப்பு. அதனை நிறைவேற்றுவதற்கு நான் தயாராக உள்ளேன் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். அப்பம் சாப்பிட்டு இரவில் சதி செய்பவன் நானல்ல. எதனையும் வெள்ளிப்டையாகவே செய்வேன். அரசியலமைப்பு ஊடாக நாட்டை பிளவுப்படுத்தும் தற்போதைய நல்லாட்சியின் சதியை வேடிக்கை பாரக்க முடியாது. ஆகவே மக்கள் ஒன்றிணைந்து வெ…
-
- 7 replies
- 669 views
-
-
தற்கொலைக்கான காரணம் வெளியானது : ரயில் வரும் போது தண்டவாளத்தில் தலை வைத்த மாத்தறை இளைஞர் (காணொளி இணைப்பு) மாத்தறை ரயில் நிலையத்திற்கு அருகில் நேற்று காலை இளைஞர் ஒருவர் ரயில் வரும் போது தண்டவாளத்தில் தலைவைத்து தற்கொலை செய்து கொண்டமைக்கான காரணம் வெளியாகியுள்ளது. மாத்தறை - காலிதாச பகுதியில் நேற்று காலை மாத்தறை பிரதேசத்தைச் சேர்ந்த 21 வயதுடைய இளைஞர் ஒருவர், தண்டவாளத்திற்கு அருகில் கையடக்க தொலைபேசியில் உரையாடியவாறு திடீரென தண்டவாளத்தில் தலை வைத்து தற்கொலை செய்துகொண்டார். இந்த சம்பவம் தொடர்பான சி.சி.டி.வி. காணொளி சமூக வலைத்தளத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. இந்நிலையில் குறித்த இளைஞனி தற்கொலை …
-
- 0 replies
- 318 views
-
-
மனித உரிமை செயற்பாட்டாளர்கள் கண்காணிக்கப்படுகின்றனர்? குளோபல் தமிழ்ச் செய்தியாளர் கொழும்பு இலங்கையில் மனித உரிமை செயற்பாட்டாளர்கள் பட்டியலிடப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. பயங்கரவாதத் தடைப் பிரிவினால் இந்தப் பட்டியல் பேணப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. அண்மையில் மனித உரிமை செயற்பாட்டாளர் ரூகி பெர்னாண்டோ கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டிருந்தமை இந்தக் கண்காணிப்புப் பட்டியலின் அடிப்படையிலேயே எனவும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. கடந்த அரசாங்க ஆட்சிக் காலத்தில் மனித உரிமை செயற்பாட்டாளர்கள் நெருக்குதல்களை எதிர்நோ…
-
- 0 replies
- 183 views
-
-
பூரண அதிகாரப் பகிர்வுக்கு சுவிஸ் ஒத்துழைக்கும் சம்பந்தனிடம் உறுதியளித்தது அந்நாட்டு தூதுக்குழு (ஆர்.ராம், எம்.எம்.மின்ஹாஜ்) புதிய அரசியலமைப்பில் முழுமையான அதிகாரப் பகி ர்வை பெற்றுக் கொள்வதற்கு பூரணமான பங்களிப்பை வழங்குவோமென பிரதான எதிர்க்கட்சியான தமிழ்த் தேசி யக் கூட்டமைப்பிடம் சுவிட்சர்லாந்து சபாநாயகர் தலை மையிலான தூதுக்குழு நேற்று உறுதியளித்துள்ளது. இலங்கைக்கு விஜயம் செய்துள்ள சுவிட்சர்லாந்து சபாநாயகர் பிரிஸ்டா மார்க்வோல்டர் தலைமை யிலான தூதுக்குழுவினருக்கும் பிரதான எதிர்க்கட்சியான தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குமிடையிலான முக்கிய சந்திப்பொன்று நேற்று வெள்ளிக்கிழமை பாராளுமன்…
-
- 2 replies
- 423 views
-
-
யார் என்ன கூறினாலும் எமது விருப்பப்படியே அரசியல்யாப்பு உருவாக்கப்படும் என சிறீலங்காவின் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். அத்துடன் புதிய அரசியல் யாப்பு எவ்வாறு உருவாக்கப்படவேண்டும் என்பதையும் நாமே தீர்மானிப்போம் எனவும் தெரிவித்துள்ளார். இன்று நடைபெற்ற நாடாளுமன்ற அமர்வில் எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் தினேஸ் குணவர்த்தன கடந்த 24ஆம் திகதி வடக்கு முதல்வர் சி.வி.விக்னேஸ்வரின் எழுக தமிழ் பேரணி உரை தொடர்பாக கேள்வியெழுப்பியபோதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். இதற்குப் பதிலளித்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, நான் வடக்கு மாகாண முதலமைச்சரின் கருத்தை முற்றுமுழுதாக மறுக்கின்றேன். அவர் என்னத்தைக் கூறினாலும் நாட்டில் அரசியலமைப்பொன்று உள்ளது எனவும், அதற்குமப்பால்…
-
- 4 replies
- 675 views
-
-
ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்கான அனைத்து தகுதிகளும் என்னிடம்-கோத்தா அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்கான அனைத்து தகுதிகளும் தனக்கு இருப்பதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் சகோதரரும், முன்னாள் பாதுகாப்புச் செயலாளருமான கோத்தாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார். மஹிந்த ராஜபக்சவின் முழுமையானஆசிர்வாதம் கிடைக்கப்பெற்றால்தான் அடுத்த ஜனாதிபதி தேர்தலுக்கு தாம் களமிறங்குவதாகவும் அவர் கூறியுள்ளார். சிங்கள பத்திரிகை ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலின்போதே கோத்தாபய ராஜபக்ச இந்த கருத்துக்களை வெளியிட்டுள்ளார். முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுக்கு அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட…
-
- 4 replies
- 480 views
-
-
ஆறாவது தடவையாகவும் தேசியவிருது பெறும் சுன்னாகம் பொது நூலகம் இலங்கை தேசிய நூலக ஆவணமாக்கல் சேவைகள் அமைப்பினால் கடந்த 2015ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் தேசிய வாசிப்பு மாதத்தில் நூலகங்களால் மேற்கொள்ளப்பட்ட தேசிய நிலை செயற்திறன் செயற்பாட்டுப் போட்டியில் வலி. தெற்குப் பிரதேச சபைக்குட்பட்ட யாழ்.சுன்னாகம் பொதுநூலகத்திற்குத் தேசிய விருது கிடைத்துள்ளது. ஆறாவது தடவையாக இந்த விருது சுன்னாகம் பொதுநூலகத்திக்குக் கிடைத்துள்ளது. இன்று காலை வவுனியா நகர சபையின் கலாசார மண்டபத்தில் கல்வி இராஜாங்க அமைச்சர் வே. இராதாகிருஷ்ணன் தலைமையில் இடம்பெற்ற விருது வழங்கும் வைபவத்தில் சுன்னாகம் பொதுநூலகத்தின் பிரதம நூலகர் இ.கருணாநிதி, வலி. தெற்குப் பிரதேச சபை…
-
- 2 replies
- 536 views
-
-
காவல்துறை மா அதிபர் தனது பிரத்தியேக செல்லிடப்பேசி இலக்கத்தை மக்களுக்கு வழங்கியுள்ளார் காவல்துறை மா அதிபர் பூஜித் ஜயசுந்தர தனது பிரத்தியேக செல்லிடப்பேசி இலக்கத்தை மக்களுக்கு வழங்கியுள்ளார். பாரிய குற்றச் செயல்கள் தொடர்பில் செய்யப்படும் முறைப்பாடுகள் தொடர்பில் காவல்துறையினர் நடவடிக்கை எடுக்கத் தவறியிருந்தால் அது குறித்து நேரடியாக தமக்கு அறிவிக்க முடியும் என காவல்துறை மா அதிபர் அறிவித்துள்ளார். பொதுமக்கள், 0718592020 என்ற இலக்கத்துடன் தொடர்பு கொண்டு தமக்கு இது பற்றிய முறைப்பாடுகளை செய்ய முடியும் என காவல்துறை மா அதிபர் தெரிவித்துள்ளார். ஏதேனும் மிகவும் அவசரமான நிலைமைகள் இருந்தால் தம்மை தொடர்பு கொண்டு அவற்றை அறி…
-
- 0 replies
- 235 views
-
-
பிரிவினைக்கு இடமில்லை சமஷ்டிக்கு வாய்ப்பு- அமெரிக்காவில் மங்கள இலங்கைக்குள் பிரிவினைவாதத்திற்கு இடமில்லை என்ற போதிலும் சமஷ்டி முறைக்கு கதவு திறக்கப்பட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார். அமெரிக்காவின் லொஸ் ஏஞ்சல்ஸ் நகரில் இலங்கை சமூகத்தினர் மத்தியில் பேசும் போது அவர் இதனை கூறியுள்ளார். வெளிவிவகார அமைச்சரின் இலங்கை சமூகத்தினருடனான இந்த சந்திப்பில் லொஸ் ஏஞ்சல்ஸ் நகரில் உள்ள பௌத்த விகாரைகளில் தேரர்கள் எவரும் கலந்து கொள்ளவில்லை. இந்த சந்திப்பில் கருத்து வெளியிட்டுள்ள ரோமா டி சொய்சா என்ற பெண், கேட்கும் அனை த்தையும் கொடுக்க அரசாங்கம் தயாராக இருக்கின்றதா என அம…
-
- 0 replies
- 327 views
-
-
இரத்தினபுரியில் ஆரம்பமானது கூட்டு எதிர்க் கட்சியின் மாபெரும் கூட்டம் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் ஆயிரம் தாமரைகள் மலரும் கூட்டு எதிர்க் கட்சியின் மாபெரும் கூட்டம் இன்று இரத்தினபுரியில் நடைபெற்றுவருகின்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர் பவித்ரா வன்னியாராச்சி, விமல் வீரவன்ச, கூட்டு எதிர்கட்சிக்கு ஆதரவான மாகாண சபை உறுப்பினர்கள் ஆகியோர் கலந்துக்கொண்டுள்ளனர். இந்நிலையில் குறித்த கூட்டத்திற்கு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தற்போதுவரை சமுகமளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. http://www.virakesari.lk/article/12210
-
- 1 reply
- 415 views
-
-
முதியார் இல்லங்களில் நகரத்து முதியோர்களே அதிகம் - கிளிநொச்சி மேலதிக அரச அதிபர் சத்தியசீலன் எங்களுடைய சமூகத்தில் கிராமத்தைச் சேர்ந்த முதியோர்களை விட நகரத்தைச் சேர்ந்த முதியோர்களே அதிகம் முதியோர் இல்லங்களில் காணப்படுகின்றனர் என கிளிநொச்சி மாவட்ட மேலதிக அரச அதிபர் சி. சத்தியசீலன் தெரிவித்துள்ளார். இன்று 08-10-2016 கிளிநொச்சி செல்வாநகா கிராமத்தில் இடம்பெற்ற முதியோர் சிறுவர் தின கௌரவிப்பு நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அங்கு அவர் மேலும் குறிப்பிடுகையில் இந்த மாவட்டத்தில் இதுவரை காலமும் முதியோர்களை கௌரவிக்கும் பல நிகழ்வுகள் இடம்பெற்றுள்ளது. ஆனால் அவை அனைத்தும் அரச மற்ற…
-
- 0 replies
- 254 views
-
-
புதிய அரசியலமைப்பில் சமஷ்டிக்கு இடமில்லை விக்கினேஸ்வரன் அரசியல் முதிர்ச்சியற்றவர் : எஸ்.பி. தெற்கில் இனவாதிகளும் கோத்திரவாதிகளும் இணைந்து வடக்கில் சமஷ்டி உதயமாக போகின்றதாகவும் அதற்கு நல்லாட்சி அரசாங்கம் துணை போகின்றது என்றும் பொய்யான விடயங்களை சிங்கள பௌத்த மக்களிடத்தில் பரப்பி இனவாத தூண்டுதல்களை ஏற்படுத்துகின்றனர். அத்துடன் வடக்கு முதல்வரின் செயற்பாடுகளும் அவர்களை வலுப்படுத்துவதாகவே அமைந்துள்ளன என்று சமூக வலுவூட்டல் மற்றும நலனோம்புகை அமைச்சர் எஸ்.பி.திஸாநாயக்க தெரிவித்தார். எவ்வாறாயினும் புதிய அரசியலமைப்பு ஒற்றையாட்சி முறைமையிலான இலங்கைக்குள் சகலருக்கும் நீதியான வகையில் அமையும். எனவே அரசின் பலமான பங்காளியான சுதந்திர …
-
- 2 replies
- 364 views
-
-
தமிழர்களின் காணிகளை மீள்வழங்குவதை எந்த இனவாதியும் தடுக்க முடியாது :பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் யுத்தத்தில் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களின் காணிகளை பெற்றுக்கொடுப்பதில் அரசாங்கம் பின்னிற்கப்போவதில்லை. யார் இனவாதம் பேசினாலும் , புலிக்கதைகளை கூறினாலும் நாட்டில் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதில் நாம் பின்னிற்கப்போவதில்லை. தமிழ் மக்களின் காணிகளை மீளவும் அவர்களுக்கு வழங்குவதை எந்த இனவாதிகளினாலும், பிரிவினைவாதிகளினாலும் தடுக்க இயலாது என பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜயவர்தன தெரிவித்தார். புலிகளுக்கு மீளவும் உயிர் கொடுக்கும் செயற்பாடுகளை அனுமதிக்க அரசாங்கம் தயாராக இல்லை எனவும் அவர் குறிப்பிட்டார். பாதுகாப்பு அமை…
-
- 3 replies
- 332 views
-
-
புலனாய்வாளர்கள் பின் தொடர்வதாக கோத்தா கவலை நாட்டின் பாதுகாப்பு நடவடிக்கைகள் மிகவும் கீழ்த்தரமான செயற்பாடுகளில் ஈடுபடுத்தப்படுமாயின் எதிர்காலம் அச்சுறுத்தல் மிக்கதாக மாறும் என முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்தார். தான் எங்கு செல்வதென்பதை கண்டறிய பாதுகாப்பு அதிகாரிகள் ஒத்துப் பார்க்க ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இவர்கள் இவ்வாறு வரவேண்டியதில்லை. என்னுடைய நிகழ்ச்சி நிரலை கேட்டால் நான் வழங்குவேன். இதற்கு பாதுகாப்பு அதிகாரிகள் நேரம் செலவிட வேண்டியதில்ல. கடந்த காலத்தில் புலனாய்வுத் துறை பாதுகாப்பு அதிகாரிகளுக்கு, பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாகவுள்ளவர்களைப் பற்றியே தகவல் திரட்ட உத்தரவு பி…
-
- 4 replies
- 411 views
-
-
சுதந்திரக்கட்சி குறித்த அமெரிக்காவின் குற்றச்சாட்டை முற்றாக மறுத்தார் ஜனாதிபதி ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தொடர்பாக அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் ஜோன் கெரி முன்வைத்திருந்த குற்றச்சாட்டை அக்கட்சி யின் தலைவரும் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேன முற்றாக நிராகரித்துள்ளார். இலங்கையின் நல்லிணக்கச் செயன்முறைகள் தாமதமடைவதற்கு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் நிலவிவரும் இனவாதக் கொள்கையே காரணம் என்று அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் ஜோன் கெரி அண்மையில் குற்றம் சுமத்தியிருந்தார். ஐக்கிய நாடுகளின் பொதுச் சபைக் கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அமெரிக்காவிற்கு சென்றிருந்தார்.இந்த விஜயத்தின் ஓரங…
-
- 1 reply
- 367 views
-
-
சீனாவின் பாதுகாப்பு மாநாட்டில் பிரதமவிருந்தினராக கோத்தா சீனாவின் அழைப்பின் பேரில் அங்கு நடைபெறும் 7ஆவது சியான்ங்சென் பாதுகாப்பு மாநாட்டில் பிரதம விருந்தினராக இலங்கை யின் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தாபாய ராஜபக்ச பங்கேற்கவுள்ளார் இந்த மாநாடு எதிர்வரும் 10ஆம் திகதி முதல் 12ஆம் திகதிவரை சீனாவில் நடைபெறவுள்ளது .குறித்த மாநாடு , பாதுகாப்பு பலப்படுத்தலும் ஒத்துழைப்பும் என்ற தலைப்பில் நடைபெறவுள்ளது. இதேவேளை மாநாட்டுக்காக செல்லும் கோத்தாபாய , எதிர்வரும் 25 நாட்களுக்கு சீனாவில் தங்கியிருப்பார் என்று எதிர்பா ர்க்கப்படுகிறது. இந்த மாநாட்டில் பாதுகாப்பு செயலாளர் கருணாசேன ஹெட்ட…
-
- 0 replies
- 314 views
-
-
நீர்ப்பாசன கால்வாய் சுத்தபடுத்தும் பணிகள் -சுப்பிரமணியம் பாஸ்கரன் வடமாகாணத்தின் இரண்டாவது பெரிய நீர்ப்பாசன குளமான 2,350 வருடங்கள் பழமையானதும் எல்லாள மன்னனால் கட்டப்பட்டதுமான வவுனிக்குளத்தின் 20 கிலோமீற்றர் தூரம் கொண்ட வலதுகரை நீர்ப்பாசன கால்வாயை முதன்முறையாக நேற்று வெள்ளிக்கிழமை (07) முதல் சுத்தப்படுத்துகின்றனர். இலங்கை இராணுவத்தின் 65ஆவது படைப்பிரிவின் 1,000 வீரர்கள், எட்டு கமக்கார அமைப்பின் கீழுள்ள 600 விவசாயிகள், பொது அமைப்புகளின் பிரதிநிதிகள் உட்பட பலர் கனரக இயந்திரங்களின் உதவியுடன் இணைந்து சுத்தப்படுத்தும் மாபெரும் சிரமதானப் பணி ஆரம்பிக்கப்பட்டுள்ளது. வவுனிக்குள நீர்ப்பாசன குளத்தின் வலது கரை பிரதான நீர்ப்பாசன கா…
-
- 0 replies
- 377 views
-
-
யாழில் 13 மாடி இருதய சத்திர சிகிச்சைப் பிரிவு : சீனாவுடன் ஒப்பந்தம் யாழ்ப்பாணத்தில் 13 மாடி கட்டட இருதய சத்திர சிகிச்சைப் பிரிவொன்றை நிர்மாணிப்பதற்கு சீனாவுடன் ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார். பாராளுமன்றில் இன்று வெள்ளிக்கிழமை ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தா நிலையின் கட்டளை 23 இன் கீழ் 2 இல் எழுப்பிய வினாவுக்கு பதிலளிக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார். மேலும் அவர் தனது பதிலில் தெரிவித்ததாவது: யாழ்ப்பாணத்தில் 13 மாடியைக் கொண்ட இருதய சத்திர சிகிச்சைப் பிரிவொன்றை நிர்மாணிப்பதற்கு சீனாவுடன் ஒப்…
-
- 4 replies
- 542 views
-